நிலக்கோளம் – I புவி அகச்செயல்பாடுகள் Book Back Questions 9th Social Science Lesson 12
9th Social Science Lesson 12
12] நிலக்கோளம் – I புவி அகச்செயல்பாடுகள்
Book Back Questions with Answer and Do You Know Box Content
உங்களுக்குத் தெரியுமா?
புவியானது பாறையினால் ஆன பந்து போன்ற அமைப்புடையது. இதனை நிலக்கோளம் (Lithosphere) எனவும் நீரினால் சூழப்பட்ட பகுதியை நீர்க்கோளம் (hydrosphere) எனவும், காற்றால் சூழப்பட்ட பகுதி வளிக்கோளம் (Atmosphere) எனவும் அழைக்கப்படுகின்றன. இம்மூன்றும் கோளங்களும் சந்திக்கும் இடத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலை உள்ளதால் இப்பகுதி உயிர்க்கோளம் (Biosphere) எனப்படுகிறது.
புவியின் திடமான மேற்பரப்பு நிலக்கோளம் ஆகும். புவியைச் சூழ்ந்துள்ள வாயுக்களால் ஆன மெல்லிய அடுக்கு வாயுக்கோளம் ஆகும். புவியின் மேற்பரப்பிலுள்ள பெருங்கடல்கள், ஆறுகள், ஏரிகள் மற்றும் துருவப்பணி பாலங்களால் ஆன நீர்ப்பகுதி நீர்க் கோளம் ஆகும். இம்மூன்று கோளங்களும் ஒன்று சேர்வதால் உயிர் உருவாகும் என்பதால் உயிர் கோளம். இதன் படி பூமி, உயிர் கோளமாகும். உயிரினங்கள் வாழும் அடுக்கு உயிர்க்கோளம் ஆகும்.
“நிலக்கோளம்” மற்றும் “புவிமேலோடு” ஆகிய இரண்டும் வெவ்வேறானவை ஆகும். புவி மேலோட்டினையும், கவசத்தின் மேற்பகுதியையும் உள்ளடக்கியதே பறைக் கோளமாகும். புவிநிகர் கோள்கள் (Terrestial Planets) அனைத்தும் பாறைக்கோளத்தைக் கொண்டுள்ளன. புதன், வெள்ளி மற்றும் செவ்வாய்க் கோள்களின் நிலக்கோளம், புவியின் பாறைக் கோளத்தை விட தடிமனாகவும், கடினமாகவும் உள்ளது.
ஜோர்டானில் உள்ள மிகப்பழமையான நகரமான “பெட்ரா” நகரம் முழுவதும் பாறைகளைக் குடைந்து முழுவதும் பாறைகளைக் குடைந்து உருவாக்கப்பட்டதாகும். பாறைகளைக் குடைந்து உருவாக்கப்பட்ட கட்டிடக் கலைச்சான்றுகள் இந்தியாவில் ஏராளமாக உள்ளன. மகாராஷ்டிராவில் உள்ள அஜந்தா மற்றும் எல்லோரா குகைகள், கர்நாடகாவில் உள்ள ஜஹோல், பதாமி கோவில்கள், ஒடிசாவில் உள்ள கோனார்க் கோவில், தமிழ்நாட்டில் உள்ள மாமல்லபுரம் கோவில் இதற்குச் சான்றுகளாகும்.
2011 வரை உலகிலேயே மிக ஆழமான பகுதி இரஷ்யாவின் மார்மான்ஸ்க் (Murmansk) இல் உள்ள கோலா சூப்பர் ஹோல் (Kola Super Hole) (12, 262 மீ ஆழம்) ஆகும். 2012ல் Z – 44 சாவ்யோ கிணறு (இரஷ்யா) (12, 376 மீ ஆழம்) மிக ஆழமான பகுதி என்ற அந்தஸ்தை பெற்றிருக்கிறது. இது துபாயில் உள்ள புரூஸ் காலிஃபாவை விட 15 மடங்குப் பெரியது. புவியின் உட்புறத்தை பற்றிய ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன.
C. F. ரிக்டர் என்பவர் புவி அதிர்வு அளவையைக் கண்டுபிடித்தார். இந்த அளவை புவி மேல் மையத்திலிருந்து வெளிப்படும் சக்தியையும், புவி அதிர்வின் தீவிரத்தையும் அறிந்து கொள்ள உதவுகிறது. இந்த அளவைக்கு எல்லை வரையறை இல்லை. சிலி நாட்டில் 1960 ஆம் ஆண்டு பயோ-பயோ என்ற இடத்தில் ரிக்டர் அலகில் 9. 5 ஆகப் பதிவான புவி அதிர்ச்சியே மிக உயர்ந்த பதிவாக கருதப்படுகிறது.
புவி அதிர்வுகளை பதிவு செய்யும் கருவிக்கு ‘நில அதிர்வு அளவைப் படம்’ (Seismometer) அல்லது ‘நில அதிர்வுமானி’ என்று பெயர். நில அதிர்வு பற்றிய படிப்பிற்கு ‘நில அதிர்வியல்’ (Seismology) என்று பெயர்.
‘வல்கனோ’ (Volcano) என்ற சொல் இலத்தீன் மொழியிலுள்ள ‘வல்கேன்’ (Vulcan) என்ற சொல்லாகும். இது ‘ரோமானிய நெருப்புக் கடவுளின்’ பெயராகும்.
2004, டிசம்பர் 26-ல் இந்தியப் பெருங்கடலில் ஆழிப்பேரலை உண்டானது. இந்தோ-ஆஸ்திரேலியத் தட்டு யுரேசியத்தட்டின் கீழே அமிழ்ந்ததே இதற்குக் காரணமாகும். இது ரிக்டர் அளவையில் 9-ஆகப் பதிவானது. இந்தப் புவி அதிர்வால் கடல் தரைத்தளம் உயர்த்தப்பட்டு கடல் நீர் மட்டத்தை உயர்த்தியது.
I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:
1. புவியின் திடமான தன்மைக்கொண்ட மேல்புற அடுக்கை ————– என்று அழைக்கின்றோம்.
(அ) கருவம்
(ஆ) கவசம்
(இ) புவிமேலோடு
(ஈ) உட்கரு
2. புவியினுள் உருகிய இரும்பைக் கொண்ட அடுக்கை ———- என்று அழைக்கின்றோம்.
(அ) கருவம்
(ஆ) வெளிக்கரு
(இ) கவசம்
(ஈ) மேலோடு
3. பாறைக்குழம்பு காணப்படும் அடுக்கு —————-
(அ) புவிமேலோடு
(ஆ) கவசம்
(இ) கருவம்
(ஈ) மேற்கண்ட எதுவுமில்லை
4. டையஸ்ட்ரோபிசம்—————- உடன் தொடர்புடையது
(அ) எரிமலைகள்
(ஆ) புவி அதிர்ச்சி
(இ) புவி தட்டு நகர்வு
(ஈ) மடிப்புகள் மற்றும் பிளவுகள்
5. புவித்தட்டுகளின் நகர்வு —————— ஆற்றலை வெளிப்படுத்துகிறது.
(அ) நீர் ஆற்றல்
(ஆ) வெப்ப ஆற்றல்
(இ) அலையாற்றல்
(ஆ) ஓத ஆற்றல்
6. ஆதியில் கோண்டுவானா நிலப்பகுதி ————– நோக்கி நகர்ந்தது.
(அ) வடக்கு
(ஆ) தெற்கு
(இ) கிழக்கு
(ஈ) மேற்கு
7. பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன், இந்தியா ————– கண்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது.
(அ) கோண்டுவானா
(ஆ) லொரேசியா
(இ) பாந்தலாசா
(ஈ) பாஞ்சியா
8. பவித்தட்டுகள் நகர்வதால் ஏற்படும் அழுத்தம் மற்றும் இறுக்கத்தின் காரணமாக ஏற்படும் விரிசல் ———– எனப்படும்.
(அ) மடிப்பு
(ஆ) பிளவு
(இ) மலை
(ஈ) புவி அதிர்வு
9. எரிமலை மேல்பகுதியில் கிண்ணம் போன்ற பள்ளமான அமைப்பினை —————- என்று அழைக்கின்றோம்.
(அ) எரிமலை வாய்
(ஆ) துவாரம்
(இ) பாறைக்குழம்புத் தேக்கம்
(ஈ) எரிமலைக்கூம்பு
10. புவி அதிர்வு உருவாகும் புள்ளி —————– என்று அழைக்கப்படுகிறது.
(அ) மேல்மையம்
(ஆ) கீழ்மையம்
(இ) புவி அதிர்வு அலைகள்
(ஈ) புவி அதிர்வின் தீவிரம்
II. பொருத்துக:
அ) உட்புறச்செயல்கள் – அ] நில அதிர்வு அளவைப்படம்
ஆ) கவசம் – ஆ] புவித்தட்டு அமிழ்தல்
இ) இணையும் எல்லை – இ] எரிமலை வெடிப்பு
ஈ) புவிஅதிர்ச்சி – ஈ] பசிபிக் பெருங்கடல்
உ) கூட்டு எரிமலை – உ] சிமா
III. பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:
1. (i) ஃபியூஜி மலை ஒரு உறங்கும் எரிமலையாகும்
(ii) கிளிமஞ்சாரோ மலை ஒரு உறங்கும் எரிமலையாகும்
(iii) தான்சானியா ஒரு உறங்கும் எரிமலையாகும்
(அ) (i) உண்மையானது
(ஆ) (ii) உண்மையானது
(இ)(iii) உண்மையானது
(ஈ) (i), (ii) மற்றும் (iii) உண்மையானது
2. கூற்று: பாறைக்குழம்பு துவாரம் வழியாக வெளியேறும்.
காரணம்: புவியின் உட்பகுதி அழுத்தப்பட்ட பாறைக் குழம்பினைக் கொண்டிருக்கும்.
(அ) கூற்று, காரணம் இரண்டும் சரி
(ஆ) கூற்று சரி, காரணம் தவறு
(இ) கூற்று தவறு, காரணம் சரி
(ஈ) கூற்று, காரணம் இரண்டும் தவறு
3. கூற்று I: புவித்தட்டுகள் ஒன்றோடொன்று மோதுவதால் மலைத் தொடர்கள் தோற்றுவிக்கப்படுகின்றன.
கூற்று II: கவசத்தின் வெப்பத்தின் காரணமாக புவித்தட்டுகள் நகருகின்றன.
(அ) கூற்று I தவறு II சரி
(ஆ) கூற்று I மற்றும் II தவறு
(இ) கூற்று I சரி II தவறு
(ஈ) கூற்று I மற்றும் II சரி
விடைகள்:
I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:
1. புவிமேலோடு, 2. வெளிக்கரு, 3. கவசம், 4. மடிப்புகள் மற்றும் பிளவுகள் 5. வெப்ப ஆற்றல், 6. வடக்கு, 7. கோண்டுவானா, 8. பிளவு, 9. எரிமலை வாய், 10. கீழ்மையம்
II. பொருத்துக:
1. இ, 2. உ, 3. ஆ, 4. அ, 5. ஈ
III. பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:
1. (i) உண்மையானது, 2. கூற்று, காரணம் இரண்டும் சரி, 3. கூற்று I மற்றும் II சரி