காந்தவியல் Book Back Questions 6th Science Lesson 15
6th Science Lesson 15
15] காந்தவியல்
Book Back Questions with Answer and Do You Know Box Content
உங்களுக்குத் தெரியுமா?
காந்தத்தின் திசை காட்டும் பண்பு பல ஆண்டுகளாக திசையை அறியப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஏறத்தாழ 800 ஆண்டுகளுக்கு முன்பு சீனர்கள் காந்த கற்களைக் கட்டி தொங்கவிட்டால், அவை வடக்கு-தெற்கு திசையிலேயே ஓய்வு நிலைக்கு வருவதைக் கண்டறிந்தனர். காந்தத் தன்மையுடைய கற்களைக் கொண்டு திசை காட்டும் கருவிகள் செய்து பயன்படுத்தினர். சீன மாலுமிகள் தங்கள் படகுகளிலும் கப்பல்களிலும் இத்தகைய கற்களைக் கொண்டு, புயல் காலங்களிலும், மூடுபனி காலங்களிலும் திசையையறிந்து பாதுகாப்பான கடல் பயணங்களை மேற்கொண்டனர்.
கைபேசி, குறுந்தகடு, கணினி போன்றவற்றிற்கு அருகில் காந்தங்களை வைத்தால், காந்தங்கள் அதன் காந்தத் தன்மையை இழந்துவிடும். அந்த பொருள்களும் பாதிப்புக்கு உள்ளாகும்.
I. பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:
1. காந்தத்தால் ஈர்க்கப்படும் பொருள்.
(அ) மரக்கட்டை
(ஆ) ஊசி
(இ) அழிப்பான்
(ஈ) காகிதத்துண்டு
2. மாலுமி திசைகாட்டும் கருவிகளை முதன்முதலில் செய்து பயன்படுத்தியவர்கள்.
(அ) இந்தியர்கள்
(ஆ) ஐரோப்பியர்கள்
(இ) சீனர்கள்
(ஈ) எகிப்தியர்கள்
3. தங்கு தடையின்றி தொங்க விடப்பட்ட காந்தம் எப்பொழுதுமே ____________ திசையில் தான் நிற்கும்.
(அ) வடக்கு–கிழக்கு
(ஆ) தெற்கு–மேற்கு
(இ) கிழக்கு–மேற்கு
(ஈ) வடக்கு–தெற்கு
4. காந்தங்கள் தன் காந்தத் தன்மையை இழக்கக் காரணம்
(அ) பயன்படுத்தப்படுவதால்
(ஆ) பாதுகாப்பாக வைத்திருப்பதால்
(இ) சுத்தியால் தட்டுவதால்
(ஈ) சுத்தப்படுத்துவதால்
5. காந்த ஊசிப் பெட்டியைப் பயன்படுத்தி __________ அறிந்து கொள்ள முடியும்.
(அ) வேகத்தை
(ஆ) கடந்த தொலைவை
(இ) திசையை
(ஈ) இயக்கத்தை
II. கோடிட்ட இடங்களைநிரப்புக:
1. செயற்கைக் காந்தங்கள் ____________, ________ , __________ ஆகிய வடிவங்களில் தயாரிக்கப்படுகின்றன.
2. காந்தத்தால் ஈர்க்கப்படும் பொருள்கள் _____________ எனப்படுகின்றன.
3. காகிதம் __________ பொருளல்ல.
4. பழங்கால மாலுமிகள், திசையைக் கண்டறிய தங்கள் கப்பல்களில் ஒரு சிறிய __________ கட்டித் தொங்க விட்டிருந்தனர்.
5. ஒரு காந்தத்திற்கு எப்பொழுதும் ___________ துருவங்கள் இருக்கும்.
III. சரியா? தவறா? தவறெனில் சரி செய்து எழுதுக:
1. உருளை வடிவ காந்தத்திற்கு ஒரே ஒரு துருவம் மட்டுமே உண்டு.
2. காந்தத்தின் ஒத்த துருவங்கள் ஒன்றையொன்று விலக்கும்.
3. காந்தத்தினை இரும்புத் தூள்களுக்கு அருகே கொண்டு செல்லும் போது அதிக அளவிலான துகள்கள் காந்தத்தின் மையப்பகுதியில் ஒட்டிக்கொள்கின்றன.
4. காந்த ஊசியினைப் பயன்படுத்தி கிழக்கு மற்றும் மேற்கு திசைகளைக் கண்டறிய முடியும்.
5. இரப்பர் ஒரு காந்தப் பொருள்.
IV. பொருத்துக:
1. காந்த திசைகாட்டி – அ. அதிக காந்த வலிமை
2. ஈர்ப்பு – ஆ. ஒத்த துருவங்கள்
3. விலக்குதல் – இ. எதிரெதிர் துருவங்கள்
4. காந்த துருவங்கள் – ஈ. காந்த ஊசி
விடைகள்:
I. பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:
1. ஊசி, 2. சீனர்கள், 3. வடக்கு–தெற்கு, 4. சுத்தியால் தட்டுவதால், 5. திசையை
II. கோடிட்ட இடங்களைநிரப்புக:
1. சட்டம், லாடம், வளையம், 2. காந்த தன்மை உடைய பொருள்கள், 3. காந்த பொருள் அல்ல, 4. காந்த கற்களை, 5. இரண்டு
III. சரியா? தவறா? தவறெனில் சரி செய்து எழுதுக:
1. இரன்டு துருவங்கள், 2. சரி, 3. துருவங்களில் ஒட்டிக்கொள்கின்றன, 4. சரி, 5. காந்த தன்மையற்ற பொருள்
IV. பொருத்துக:
1. ஈ, 2. இ, 3. ஆ, 4. அ