மக்கள்தொகையும் குடியிருப்புகளும் 7th Social Science Lesson 5 Questions in Tamil
7th Social Science Lesson 5 Questions in Tamil
5. மக்கள்தொகையும் குடியிருப்புகளும்
- ___________ என்பது மக்களின் விகிதம் அதன் பிறப்பு, இறப்பு மற்றும் காரணிகளை சார்ந்த இடம், காலம் கொண்டு தெரிந்துகொள்ளுதல் ஆகும்.
A) மக்கள் புலம்பெயர்வு
B) மக்கள்தொகை அறிவியல்
C) மக்கள்தொகை புவியியல்
D) மக்கள்தொகை அதிகரிப்பு
விடை மற்றும் விளக்கம்
C) மக்கள்தொகை புவியியல்
(குறிப்பு: மக்கள்தொகை அதிகரித்தல் அல்லது குறைதல் என்பது மக்கள் பரவல் மற்றும் வளர்ச்சியைக் குறிப்பதாகும்.)
2. ஒரே பண்புகள் மற்றும் பழக்கவழக்கங்களை காலங்காலமாக பின்பற்றக்கூடிய மக்கள் குழுக்கள் _________ என்று அழைக்கப்படுகிறது.
A) மனித சக்தி
B) மனித இனம்
C) மனித குழுக்கள்
D) மக்கள் கூட்டம்
விடை மற்றும் விளக்கம்
B) மனித இனம்
(குறிப்பு: மனித இனத்தை மனித உயிர்களுக்குள்ளே பல்வேறு உயிரியல் குழுக்களாகப் பிரித்துள்ளார்கள்.)
3. மனித இனத்தின் வகைகளை கீழ்க்கண்ட எந்த காரணிகளை அடிப்படையாகக் கொண்டு பிரிக்கலாம்?
1. தலையின் வடிவம் 2. தோலின் நிறம்
3. முடியின் வகை 4. இரத்தத்தின் வகை
A) அனைத்தும்
B) 1, 2
C) 2, 4
D) 2, 3, 4
விடை மற்றும் விளக்கம்
A) அனைத்தும்
(குறிப்பு: பெருமளவில் பரந்து காணப்படும் மனித இனத்தின் வகைகளை தலையின் வடிவம், முகம், மூக்கு, கண், முடியின் வகை, தோலின் நிறம் மற்றும் இரத்தத்தின் வகை போன்ற காரணிகளை அடிப்படையாகக் கொண்டு பிரிக்கப்பட்டுள்ளது.)
4. தவறான இணையைத் தேர்ந்தெடு.
A) காக்கசாய்டு – ஐரோப்பியர்கள்
B) நீக்ராய்டு – ஆப்பிரிக்கர்கள்
C) மங்கோலாய்டு – அமெரிக்கர்கள்
D) ஆஸ்ட்ரலாய்டு – ஆஸ்திரேலியர்கள்
விடை மற்றும் விளக்கம்
C) மங்கோலாய்டு – அமெரிக்கர்கள்
(குறிப்பு: மங்கோலாய்டு – ஆசியர்கள்)
5. கூற்று 1: காக்கசாய்டு இன மக்கள் வெள்ளை நிறத்தோலும், அடர் பழுப்பு நிறக்கண்களும், அலை போன்ற முடியும், நீளமான மூக்கும் உடையவர்களாவர்.
கூற்று 2: காக்கசாய்டு இன மக்கள் யூரேசியாவிலும் காணப்படுகிறார்கள்.
A) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
B) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
C) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
விடை மற்றும் விளக்கம்
விடை: A) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
6. மனிதன் மற்றும் அவனின் சுற்றுப்புறத்தை இயற்கைச் சூழலோடு படிப்பது _________ எனப்படும்.
A) மனித அறிவியல்
B) மக்கள்தொகை அறிவியல்
C) மக்கள்தொகை புவியியல்
D) மனிதப் புவியியல்
விடை மற்றும் விளக்கம்
விடை: D) மனிதப் புவியியல்
7. கருமை நிறக் கண்கள், கருப்புநிறத்தோல், கருமையான முடி, அகலமான மூக்கு, நீளமான தலை, மற்றும் தடித்த உதடுகளைக் கொண்டவர்கள் _________.
A) காக்கசாய்டு
B) நீக்ராய்டு
C) மங்கோலாய்டு
D) ஆஸ்ட்ரலாய்டு
விடை மற்றும் விளக்கம்
B) நீக்ராய்டு
(குறிப்பு: நீக்ராய்டு இன மக்கள் ஆப்பிரிக்காவில் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்து வருகிறார்கள்.)
8. வெளிர் மஞ்சள் முதல் பழுப்பு நிறத்தோல், நீளமான முடி, தட்டையான முக அமைப்பு, பெரிய தலை மற்றும் மத்தியமான மூக்கு உடையவர்கள்__________.
A) காக்கசாய்டு
B) நீக்ராய்டு
C) மங்கோலாய்டு
D) ஆஸ்ட்ரலாய்டு
விடை மற்றும் விளக்கம்
C) மங்கோலாய்டு
(குறிப்பு: மங்கோலியர்கள் பொதுவாக ஆசிய-ஆப்பிரிக்க இனத்தவர்களாவர். இவர்கள் ஆசியா மற்றும் ஆர்டிக் பிரதேசத்தில் காணப்படுகிறார்கள்.)
9. __________ அகலமான மூக்கு, சுருள்முடி, கருப்பு நிறத்தோல் மற்றும் குறைவான உயரம் உடையவர்களாக குட்டையானவர்களாகக் காணப்படுகிறார்கள்.
A) காக்கசாய்டு
B) நீக்ராய்டு
C) மங்கோலாய்டு
D) ஆஸ்ட்ரலாய்டு
விடை மற்றும் விளக்கம்
D) ஆஸ்ட்ரலாய்டு
(குறிப்பு: ஆஸ்ட்ரலாய்டுகள் ஆஸ்திரேலியா மற்றும் ஆசியாவில் வாழ்ந்து வருகிறார்கள்.)
10. கூற்று 1: இந்தியாவை மனித நாகரிகத்தின் தொட்டில் எனக் கூறுவர்.
கூற்று 2: வட இந்தியாவில் திராவிடர்களின் முதல்நிலைத் தோற்றத்தையே, சிந்து சமவெளி நாகரிகம் என்கிறோம்.
A) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
B) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
C) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
விடை மற்றும் விளக்கம்
A) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
(குறிப்பு: பிற்காலத்தில் இந்தோ – ஆரியர்களின் வருகைக்குப் பிறகு திராவிட மக்கள் இந்தியாவின் தென்பகுதிக்குத் தள்ளப்பட்டார்கள்.)
11. கீழ்க்கண்டவற்றுள் திராவிட மொழிகள் எவை?
1. தமிழ் 2. தெலுங்கு 3. கன்னடம்
4. துளு 5. மலையாளம்
A) 1, 2, 3
B) 1, 3, 5
C) 1, 2, 3, 4
D) அனைத்தும்
விடை மற்றும் விளக்கம்
D) அனைத்தும்
(குறிப்பு: இந்தியாவின் தென்பகுதி மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டிய மன்னர்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்டது. பெரும்பாலும் இவர்கள் இந்தியாவின் தென்பகுதியில் வாழ்ந்து வந்தார்கள்.)
12. ஒரு குழுவின் அடையாளமாகவும், கலாச்சார புத்துணர்வுப் புள்ளியின் அடையாளமாகவும் திகழ்வது __________.
A) மொழி
B) மதம்
C) இனம்
D) நாடு
விடை மற்றும் விளக்கம்
B) மதம்
(குறிப்பு: மதம் என்பது ஒரு குறிப்பிட்ட நம்பிக்கையும், வழிபாட்டு முறையும் கொண்டதாகும். இது மனிதனை ஒரு மனித சமுதாயத்திற்குள் கொண்டு வரும்.)
13. கீழ்க்கண்டவற்றுள் உலகளாவிய மதம் அல்லாதது எது?
A) கிறிஸ்துவம்
B) இஸ்லாம்
C) புத்த மதம்
D) இந்து மதம்
விடை மற்றும் விளக்கம்
விடை: D) இந்து மதம்
14. கீழ்க்கண்டவற்றுள் மனித இனப்பிரிவு மதங்கள் எவை?
1. ஜூடோயிசம் 2. இந்துமதம்
3. ஷாமானிஸம் 4. ஜப்பானிய ஷிண்டோயிசம்
A) 1, 2, 3
B) 2, 3, 4
C) 1, 2, 4
D) அனைத்தும்
விடை மற்றும் விளக்கம்
விடை: C) 1, 2, 4
15. கீழ்க்கண்டவற்றுள் பாரம்பரிய மதங்கள் அல்லாதது எது?
A) அனிமிஸம்
B) ஷாமானிஸம்
C) சமண மதம்
D) ஷாமன்
விடை மற்றும் விளக்கம்
C) சமண மதம்
(குறிப்பு: பாரம்பரிய மதங்கள், நாடோடிகள் மதங்கள் எனவும் அழைக்கப்படுகின்றன.)
16. தவறான இணையைத் தேர்ந்தெடு. (மதம் – வழிபாட்டுத் தலம்)
A) கிறிஸ்துவ மதம் – தேவாலயம்
B) இந்து மதம் – கோவில்
C) இஸ்லாம் – மசூதி
D) புத்த மதம் – பசாதி
விடை மற்றும் விளக்கம்
D) புத்த மதம் – பசாதி
(குறிப்பு: புத்தமதம் – விஹாரா)
17. சரியான இணையைத் தேர்ந்தெடு. (மதம் – வழிபாட்டுத் தலம்)
1. சமணம் – பசாதி
2. ஜூடாய்சம் – அகியாரி
3. ஜொராஸ்டிரியம் – சினகாக்
A) அனைத்தும் சரி
B) 1, 2 சரி
C) 3 மட்டும் சரி
D) 1 மட்டும் சரி
விடை மற்றும் விளக்கம்
D) 1 மட்டும் சரி
(குறிப்பு: ஜூடாய்சம் – சினகாக், ஜொராஸ்டிரியம் – அகியாரி)
18. சமுதாய அமைப்பிற்கு ___________ கலாச்சாரத்தை பரப்பும் ஒரு பிரதான கருவியாகும்.
A) மொழி
B) மதம்
C) இனம்
D) நாடு
விடை மற்றும் விளக்கம்
A) மொழி
(குறிப்பு: ஒருவர் மற்றொருவருடன் தொடர்பு கொள்வதற்கு எழுத்து வடிவிலோ அல்லது ஒலி வடிவிலோ மொழி பயன்படுத்தப்படுகிறது. அரசியல், பொருளாதார சமூக மற்றும் மத செயல்பாடுகளின் கருத்துக்களை பரிமாறிக் கொள்ள மொழி வழி வகுக்கிறது.)
19. பல்வேறு வகையான மரபுவழிக் கடத்தல் மூலம் மனித உயிரினம், உயிரியல் குழுக்களாக பிரிக்கப்படுவதே _________ ஆகும்.
A) மொழி
B) மதம்
C) இனம்
D) நாடு
விடை மற்றும் விளக்கம்
விடை: C) இனம்
20. இந்திய அரசால் __________மொழிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
A) 18
B) 20
C) 22
D) 24
விடை மற்றும் விளக்கம்
C) 22
(குறிப்பு: இந்தி மொழி இந்தியாவின் ஆட்சி மொழியாக உள்ளது. இந்திய மாநிலங்கள் மொழிகளின் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளன.)
21. கூற்று 1: வடஇந்தியாவில் காஷ்மீர், உருது, பஞ்சாபி, இந்தி, ராஜஸ்தானி, குஜராத்தி, பெங்காலி, அஸ்ஸாமி மற்றும் பல மொழிகள் பயன்படுத்துகின்றனர்.
கூற்று 2: தென்னிந்தியாவில் முக்கியமான மொழிகள் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகும்.
A) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
B) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
C) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
விடை மற்றும் விளக்கம்
A) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
(குறிப்பு: தென்னிந்திய மொழிகள், திராவிட மொழிகள் என்றழைக்கப்படுகின்றன.)
22. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரியில் வரும் 3வது ஞாயிற்றுக்கிழமை _________ நாளாக அனுசரிக்கப்படுகிறது.
A) உலக மக்கள் தொகை நாள்
B) பன்னாட்டு தாய்மொழி தினம்
C) உலக மத நல்லிணக்க நாள்
D) உலக கலாச்சார பல்வகை நாள்
விடை மற்றும் விளக்கம்
விடை: C) உலக மத நல்லிணக்க நாள்
23. தவறான இணையைத் தேர்ந்தெடு.
1. ஜூலை 1 – உலக மக்கள்தொகை நாள்
2. பிப்ரவரி 21 – பன்னாட்டு தாய்மொழி தினம்
3. மே 21 – உலக கலாச்சார பல்வகை நாள்
A) 2, 3 தவறு
B) 1 மட்டும் தவறு
C) 3 மட்டும் தவறு
D) எதுவுமில்லை
விடை மற்றும் விளக்கம்
B) 1 மட்டும் தவறு
(குறிப்பு: ஜூலை 11 – உலக மக்கள்தொகை நாள்.)
24. __________ குடியிருப்பு என்பது ஒரு சமுதாய மக்கள், அவர்கள் தங்களின் முதன்மைத் தொழிலான வேளாண்மை, மரம் அறுத்தல், மீன்பிடித்தல் மற்றும் சுரங்கத் தொழிலில் ஈடுபடுத்திக் கொள்வதைக் குறிக்கும்.
A) முதன்மை குடியிருப்பு
B) இரண்டாம்நிலை குடியிருப்பு
C) கிராமக் குடியிருப்பு
D) நகர்ப்புற குடியிருப்பு
விடை மற்றும் விளக்கம்
C) கிராமக் குடியிருப்பு
(குறிப்பு: குடியிருப்பு என்பது மனித வாழ்விடமாகும். அங்கு விவசாயம், வாணிபம் மற்றும் பொழுதுபோக்கு ஆகிய செயல்களின் மூலம் ஒருவருக்கொருவர் கருத்து பரிமாற்றம் செய்து கொள்கின்றனர்.)
25. கூற்று 1: மக்கள்தொகையின் அளவு மற்றும் அடர்த்தி ஆகிய இவை இரண்டிற்கும் தொடர்பு இல்லை.
கூற்று 2: கிராமப்புற குடியிருப்பில் மக்கள்தொகையின் அளவு மற்றும் அடர்த்தி குறைவாகவும், நகர்ப்புற குடியிருப்பில் அதிகமாகவும் காணப்படுகிறது.
A) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
B) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
C) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
விடை மற்றும் விளக்கம்
C) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
(குறிப்பு: மக்கள்தொகையின் அளவு மற்றும் அடர்த்தி ஆகிய இவை இரண்டிற்கும் தொடர்பு உண்டு.)
26. அமைப்பை பொருத்து குடியிருப்புகள் எவ்வாறு வகைப்படுத்தப்படுகின்றன?
1. கிராமக் குடியிருப்பு 2. நகர்ப்புறக் குடியிருப்பு
3. குழுமிய குடியிருப்பு 4. சிதறிய குடியிருப்பு
A) 1, 2
B) 1, 4
C) 1, 2, 3, 4
D) 3, 4
விடை மற்றும் விளக்கம்
விடை: D) 3, 4
27. __________ குடியிருப்பில் உள்ளவர்கள் இரண்டாம் மற்றும் மூன்றாம்நிலை தொழில்களான, தொழிற்சாலை, வாணிபம் மற்றும் வங்கிப் பணிகளில் ஈடுபடுகிறார்கள்.
A) முதன்மை குடியிருப்பு
B) இரண்டாம்நிலை குடியிருப்பு
C) கிராமக் குடியிருப்பு
D) நகர்ப்புற குடியிருப்பு
விடை மற்றும் விளக்கம்
D) நகர்ப்புற குடியிருப்பு
(குறிப்பு: தலம் மற்றும் சூழலமைவு இடம் மற்றும் அமைவிடம் என்பது ஒரு குடியிருப்பின் உண்மையான அமைவிடத்தைக் குறிப்பதாகும்.)
28. ஒரு குடியிருப்பின் அமைவிடமானது கீழ்க்கண்ட எந்த காரணங்களை கருத்தில் கொண்டு உருவாகும்?
1. கட்டுமானப் பொருட்கள் 2. எரிபொருள்
3. விவசாய நிலம் 4. நீர் அளிப்பு
5. அன்றாடத் தேவைகளுக்கான நீர்
A) அனைத்தும்
B) 1, 3, 4
C) 1, 3, 5
D) 1, 2, 4, 5
விடை மற்றும் விளக்கம்
விடை: A) அனைத்தும்
29. குழுமியக் குடியிருப்பு __________ எனவும் அழைக்கப்படுகிறது.
A) கூட்டுக் குடியிருப்பு
B) விவசாயக் குடியிருப்பு
C) மையக் குடியிருப்பு
D) சமவெளி குடியிருப்பு
விடை மற்றும் விளக்கம்
C) மையக் குடியிருப்பு
(குறிப்பு: குழுமிய குடியிருப்பில் வீடுகள் ஒன்றுக்கொன்று அருகருகே அமைந்துள்ளன.)
30. கூற்று 1: குழுமியக் குடியிருப்புகள் ஆற்றுப் பள்ளத்தாக்கின் ஓரங்களிலும், வளமான சமவெளியை ஒட்டியும் அமைந்திருக்கும்.
கூற்று 2: இந்தியாவில் குழுமியக் குடியிருப்புகள், வடக்குச் சமவெளி மற்றும் தீபகற்ப கடற்கரைச் சமவெளிகளிலும் உள்ளன.
A) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
B) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
C) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
விடை மற்றும் விளக்கம்
A) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
31. சிதறிய குடியிருப்புகளை கீழ்க்கண்ட எந்த பகுதிகளில் காணமுடியும்?
1. அதிக வெப்பப்பகுதி 2. மலைப்பாதைகள்
3. புல்வெளிகள் 4. அடர்ந்த காட்டுப்பகுதிகள்
5. தீவிர சாகுபடி பிரதேசங்கள்
A) அனைத்தும்
B) 2, 4, 5
C) 3, 5
D) 1, 3, 5
விடை மற்றும் விளக்கம்
A) அனைத்தும்
(குறிப்பு: சிதறிய குடியிருப்புகளில் வீடுகள் இடைவெளி விட்டுக் காணப்படுவதுடன் வயல்வெளிகளோடு கலந்திருக்கும்.)
32. சிதறிய குடியிருப்புகளை கீழ்க்கண்ட எந்த இந்திய பகுதிகளில் காணமுடியும்?
A) காவேரி சமவெளி
B) பிரம்மபுத்திரா சமவெளி
C) கங்கைச் சமவெளி
D) கோசி மலைப்பாதையின் தெற்குப் பகுதி
விடை மற்றும் விளக்கம்
C) கங்கைச் சமவெளி
(குறிப்பு: 1. கோசி மலைப்பாதையின் வடக்குப் பகுதி
2. கங்கைச் சமவெளி
3. ராஜஸ்தானின் பாலைவனப் பகுதி
4. இமயமலை மற்றும் நீலகிரியின் மலையடிவாரத்திலும் சிதறிய குடியிருப்புகளை காணலாம்.)
33. கூற்று 1: நீர் நிலையை ஒட்டிய இடங்களாகிய ஆறுகள், ஏரிகள் மற்றும் ஊற்றுக்கள் அருகிலேயே பெரும்பாலும் கிராமப்புற குடியிருப்புகள் அமைந்திருக்கும்.
கூற்று 2: விவசாயத் தொழிலுக்கு ஏற்ப ஆற்றுப் பள்ளத்தாக்குகளையும், கடற்கரைச் சமவெளிகளையும் வாழ்வதற்கு ஏற்ற இடமாக கிராமப்புறக் குடியிருப்பு மக்கள் கருதுகிறார்கள்.
A) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
B) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
C) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
விடை மற்றும் விளக்கம்
A) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
(குறிப்பு: வேளாண் தொழிலுக்கு ஏற்ற நிலங்களுடன் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய இடங்களையே மக்கள் குடியேறத் தேர்ந்தெடுக்கிறார்கள்.)
34. கீழ்க்காண்பனவற்றுள் கிராமப்புறக் குடியிருப்புக்கு ஏற்ற காரணிகள் எவை?
1. இயற்கையான நிலத்தோற்றம்
2. உள்ளூர் தட்பவெப்பநிலை
3. மண் வளம் மற்றும் நீர் வளங்கள்
4. சமூக நிறுவனங்கள்
5. பொருளாதார நிலை
A) அனைத்தும்
B) 1, 3
C) 1, 2, 5
D) 2, 3, 4
விடை மற்றும் விளக்கம்
விடை: A) அனைத்தும்
35. கிராமப்புற குடியிருப்பின் அமைப்புகள் என்பது _____________க்கு இடையேயான தொடர்பை குறிப்பதாகும்.
A) வீடுகள் மற்றும் தட்பவெப்பம்
B) வீடுகள் மற்றும் இயற்கை
C) வீடுகள் மற்றும் நிலத்தோற்றம்
D) வீடுகள் மற்றும் கட்டடங்கள்
விடை மற்றும் விளக்கம்
D) வீடுகள் மற்றும் கட்டடங்கள்
(குறிப்பு: கிராமப்புறக் குடியிருப்பின் அமைப்பு அதன் நிலத்தோற்றம், தட்பவெப்பம், நீர்நிலைகள் மற்றும் சமூகப் பொருளாதாரக் காரணிகளின் செயல்பாடுகளைப் பொறுத்து அமையும்.)
36. கிராமப்புறக் குடியிருப்புகள் அவற்றின் அமைப்பின் அடிப்படையில் எத்தனை வகைப்படும்?
A) 3
B) 4
C) 5
D) 6
விடை மற்றும் விளக்கம்
B) 4
(குறிப்பு: வகைகள்- நேர்க்கோட்டு, செவ்வகமான, வட்டமான, நட்சத்திர வடிவமான கிராமம்.)
37. சாலைகள், இருப்புப்பாதைகள், ஆறு அல்லது கால்வாய், பள்ளத்தாக்கின் சரிவு ஆகியவற்றிற்கு அருகில் கட்டப்பட்ட வீடுகளின் தொகுப்பு __________ எனப்படும்.
A) செவ்வக வடிவக் குடியிருப்புகள்
B) நேர்க்கோட்டு குடியிருப்புகள்
C) நட்சத்திர வடிவக் குடியிருப்புகள்
D) வட்ட வடிவக் குடியிருப்புகள்
விடை மற்றும் விளக்கம்
B) நேர்க்கோட்டு குடியிருப்புகள்
(குறிப்பு: இமயமலை, ஆல்ப்ஸ் மற்றும் ராக்கி மலைத்தொடர் ஆகியவை நேர்க்கோட்டு குடியிருப்புக்கு எடுத்துக்காட்டுகளாகும்.)
38. சமவெளிப் பகுதிகள் மற்றும் மலைகளுக்கிடையே உள்ள பள்ளத்தாக்குகளில் காணப்படும் குடியிருப்புகள் ____________ ஆகும்.
A) செவ்வக வடிவக் குடியிருப்புகள்
B) நேர்க்கோட்டு குடியிருப்புகள்
C) நட்சத்திர வடிவக் குடியிருப்புகள்
D) வட்ட வடிவக் குடியிருப்புகள்
விடை மற்றும் விளக்கம்
A) செவ்வக வடிவக் குடியிருப்புகள்
(குறிப்பு: செவ்வக வடிவக் குடியிருப்புகள் பெரும்பாலும் செவ்வக வடிவில் நீளமானதாகவும் ஒன்றையொன்று நேர் கோணத்திலும் சந்தித்துக் கொள்ளும். (எ.கா) சட்லஜ்.)
39. கூற்று 1: யாத்திரைக் குடியிருப்பு வழிபாட்டுத்தலங்களைச் சுற்றியும் அல்லது மத முக்கியத்துவம் வாய்ந்த இடங்களிலும் அமையும்.
கூற்று 2: தமிழ்நாட்டில் உள்ள பழனி – முருகன் கோவில் யாத்திரைக் குடியிருப்புக்கு எடுத்துக்காட்டாகும்.
A) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
B) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
C) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
விடை மற்றும் விளக்கம்
விடை: A) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
40. இந்தியாவில் கேரளா கரையோரத்திலும் மற்றும் டெல்டா கரையோரப் பகுதிகளிலும் ___________ வகை குடியிருப்புகள் காணப்படுகின்றன.
A) நீர் நிலைக் குடியிருப்புகள்
B) வறண்ட குடியிருப்புகள்
C) நகர்ப்புறக் குடியிருப்புகள்
D) வட்டவடிவக் குடியிருப்புகள்
விடை மற்றும் விளக்கம்
B) வறண்ட குடியிருப்புகள்
(குறிப்பு: வறண்ட இடம் என்பது சுற்றியுள்ள நிலத்தைக் காட்டிலும் சற்று உயரத்தில் அமைந்துள்ள இடமாகும். நீர் ஆதாரங்களாலும், நிலத்தோற்ற அமைப்பாலும், உலர் நிலைக் குடியிருப்புகள் வெள்ளத்தால் பாதிக்கப்படுவதில்லை.)
41. பஞ்சாப் மற்றும் ஹரியானவில் உள்ள சிந்து, கங்கை சமவெளிகளில் __________ குடியிருப்புகள் காணப்படுகின்றன.
A) செவ்வக வடிவக் குடியிருப்புகள்
B) நேர்க்கோட்டு குடியிருப்புகள்
C) நட்சத்திர வடிவக் குடியிருப்புகள்
D) வட்ட வடிவக் குடியிருப்புகள்
விடை மற்றும் விளக்கம்
C) நட்சத்திர வடிவக் குடியிருப்புகள்
(குறிப்பு: நட்சத்திர வடிவக் குடியிருப்புகள் சாலைகள் ஒன்று சேரும் இடங்களிலிருந்து, சாலைகளின் இருபக்கங்களிலும் எல்லா திசைகளிலும் பரவி நட்சத்திர வடிவில் காணப்படும்.)
42. ஏரிகள் மற்றும் குளங்களை சுற்றி ___________ வகை குடியிருப்புகள் காணப்படும்.
A) செவ்வக வடிவக் குடியிருப்புகள்
B) நேர்க்கோட்டு குடியிருப்புகள்
C) நட்சத்திர வடிவக் குடியிருப்புகள்
D) வட்ட வடிவக் குடியிருப்புகள்
விடை மற்றும் விளக்கம்
D) வட்ட வடிவக் குடியிருப்புகள்
(குறிப்பு: ஒரு மையப்பகுதியைச் சுற்றி வட்ட வடிவமாக காணப்படும் குடியிருப்புகள் வட்டவடிவக் குடியிருப்புகள் ஆகும்.)
43. தவறானக் கூற்றைத் தேர்ந்தெடு.
1. நீர் நிலையை ஒட்டிய இடங்களான கிணறுகள், ஏரி, குளம், ஆறு, குட்டைகள் உள்ள இடங்களில் அமைந்திருப்பதே நீர்நிலைக்குடியிருப்புகள் ஆகும்.
2. நகர்ப்புறம் என்ற வார்த்தை பெரும்பாலும், நகரம், மாநகரம் மற்றும் நகர்ப்புறப் பகுதிகளைக் குறிக்கும்.
3. நகர்ப்புறத்திற்கான கூற்று அல்லது வரையறை ஒரு நாட்டிற்கும் மற்றொரு நாட்டிற்கும் வேறுபடும்.
A) 1 மட்டும் தவறு
B) 1, 3 தவறு
C) 3 மட்டும் தவறு
D) எதுவுமில்லை
விடை மற்றும் விளக்கம்
D) எதுவுமில்லை
(குறிப்பு:நகர்ப்புறக் குடியிருப்புகளில் மக்கள் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலைத் தொழில்களில் ஈடுபடுகின்றனர்.)
44. ஒரு நாட்டிற்கும் மற்றொரு நாட்டிற்கும் நகர்புறத்திற்கான வரையறை கீழ்க்கண்ட எவற்றின் மூலம் வேறுபடுத்தப்படுகின்றன?
1. மக்கள்தொகையின் அளவு 2. தொழில் அமைப்பு
3. நிர்வாகம் 4. நிலப்பரப்பு
A) 1, 2, 3
B) 2, 3, 4
C) 1, 2, 4
D) 1, 3, 4
விடை மற்றும் விளக்கம்
விடை: A) 1, 2, 3
45. நகர்ப்புறக் குடியிருப்பின் மக்கள் தொகையில், குறைந்தபட்ச மக்கள் தொகையான ____________க்கும் மேலான மக்கள் இருக்கும் இடத்தையே நகரம் என்கிறோம்.
A) 1000
B) 2000
C) 5000
D) 10000
விடை மற்றும் விளக்கம்
C) 5000
(குறிப்பு: நகரங்கள் செயல்படும் நிகழ்வுகளின் அடிப்படையில் நிர்வாகம், இராணுவம் மற்றும் கல்வி என பல நகரங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.)
46. நன்கு வளர்ச்சி அடைந்த மத்திய தொழில் மாவட்டத்தைக் கொண்ட, பல்வேறு தொழில்களை உள்ளடக்கிய ஒரு தனித்த குடியிருப்பே __________ ஆகும்.
A) நகரம்
B) மாநகரம்
C) மிகப்பெரிய நகரம்
D) மீப்பெருநகரம்
விடை மற்றும் விளக்கம்
B) மாநகரம்
(குறிப்பு: பொதுவாக ஒரு குறிப்பிட்ட சிறிய நகரத்திலிருந்து தனித்த நகர்ப்புறங்களுக்கு பெருநகரம் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. பெருநகரங்களுக்கென்று தனியே ஒரு வரைமுறை கிடையாது.)
47. இந்தியாவில் ___________ மக்கள்தொகைக்கு மேல் அதிகமானோர் உள்ள இடங்களையே மாநகரம் என அழைக்கின்றோம்.
A) 10,000
B) 1,00,000
C)10,00,000
D) 20,00,000
விடை மற்றும் விளக்கம்
B) 1,00,000
(குறிப்பு: மாநகரம் என்பது சிறுநகரங்களிலிருந்து தனித்த ஒரு நகர்ப்புறமாகும்.)
48. கேன்டன், டோக்கியோ, டெல்லி, மும்பை முதலியவை ___________நகரத்திற்கு எடுத்துக்காட்டுகளாகும்.
A) இணைந்த நகரம்
B) மாநகரம்
C) மிகப்பெரிய நகரம்
D) மீப்பெருநகரம்
விடை மற்றும் விளக்கம்
C) மிகப்பெரிய நகரம்
(குறிப்பு: 10 மில்லியனுக்கு மேல் மக்கள்தொகை கொண்ட பெரிய நகரமே மிகப்பெரிய நகரங்களாகும். இது ஒரு தனித்த தலைநகரமாகவும் செயல்படும்.)
49. ஒரு ஆரோக்கியமான நகரத்திற்கு அவசியம் இருக்க வேண்டியவை என உலக சுகாதார நிறுவனம் எவற்றை குறிப்பிடுகிறது?
1. தூய்மையான பாதுகாப்பான சுற்றுச்சூழல்
2. அனைத்து மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற வேண்டும்.
3. உள்ளாட்சியில் உள்ளூர் மக்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.
4. எளிதாக கிடைக்கக்கூடிய ஆரோக்கிய சேவைகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.
A) அனைத்தும்
B) 1, 2, 4
C) 1, 3, 4
D) 2, 3, 4
விடை மற்றும் விளக்கம்
விடை: A) அனைத்தும்
50. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மிகப்பெரிய நகரங்களின் மக்கள்தொகை பத்து லட்சத்திற்கு மேலாகவும், பெரிய நகராக்கப் பரப்பையும் கொண்ட இடத்தைக் குறிப்பது _____________.
A) இணைந்த நகரம்
B) மாநகரம்
C) மிகப்பெரிய நகரம்
D) மீப்பெருநகரம்
விடை மற்றும் விளக்கம்
D) மீப்பெருநகரம்
(குறிப்பு: இந்தியாவில் கல்கத்தாவின் மிகப்பெரிய நகர்ப்புறப் பகுதியே மீப்பெரு நகரமாகும். குஜராத்தின் காந்திநகர், சூரத், வதோதரா, இராஜபுதனம் ஆகியவையே முக்கியமான மீப்பெரு நகரங்களாகும்.)
51. மக்கள்தொகை வளர்ச்சியின் காரணமாக நில விரிவாக்கம் அடைந்து, தொழில் வளர்ச்சி அடைந்து சில நகரங்களையும் பெருநகரங்களையும், நகர்ப்புறங்களையும் கொண்ட பிரதேசம் ___________ எனப்படும்.
A) இணைந்த நகரம்
B) சிறப்பு பொருளாதார நகரம்
C) செயற்கைக் கோள் நகரம்
D) மீப்பெருநகரம்
விடை மற்றும் விளக்கம்
A) இணைந்த நகரம்
(குறிப்பு: இங்கிலாந்தில் உள்ள மேற்கு மத்தியப் பகுதி, ஜெர்மனியில் உள்ள ரூர், நெதர்லாந்தில் உள்ள ரேன்ஸ்டார்டு ஆகியவை இணைந்த நகரத்திற்கு எடுத்துக்காட்டுகளாகும்.)
52. இந்தியாவில் மஹாராஷ்ட்ராவில் உள்ள மும்பை, ஹரியானாவின் குர்ஹான், பரிதாபாத், உத்திரப்பிரதேசத்தில் உள்ள நொய்டா ஆகியவை _____________நகரத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டுகள் ஆகும்.
A) இணைந்த நகரம்
B) சிறப்பு பொருளாதார நகரம்
C) மாநகரம்
D) மீப்பெருநகரம்
விடை மற்றும் விளக்கம்
விடை: A) இணைந்த நகரம்
53. தவறான கூற்றைத் தேர்ந்தெடு.
1. அதிக அளவு மக்கள் தொகையைக் கொண்ட முக்கியமான பெருநகரங்களில், நகர்ப்புறங்களுக்கு வெளியே வடிவமைக்கப்படும் வீடுகளே செயற்கைக்கோள் நகரமாகும்.
2. பொதுவாக செயற்கைக்கோள் நகரங்கள், நகர்ப்புற எல்லைக்கு உள்ளே அமைந்திருக்கும்.
3. இந்தியாவில் உள்ள அநேக செயற்கைக்கோள் நகரங்கள் குடியிருப்பும் பகுதிகளைக் கொண்டதாகவே உள்ளது.
A) 1 மட்டும் தவறு
B) 2 மட்டும் தவறு
C) 1, 3 தவறு
D) எதுவுமில்லை
விடை மற்றும் விளக்கம்
B) 2 மட்டும் தவறு
(குறிப்பு: பொதுவாக செயற்கைக்கோள் நகரங்கள் கிராம, நகர்ப்புற எல்லைக்கு வெளியே அமைந்திருக்கும்.)
54. பாட்னா, பரோவ்னி, வாரணாசி மற்றும் ஹஜிப்பூர் ஆகியவை _____________நகரத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டுகள் ஆகும்.
A) இணைந்த நகரம்
B) சிறப்பு பொருளாதார நகரம்
C) செயற்கைக் கோள் நகரம்
D) மீப்பெருநகரம்
விடை மற்றும் விளக்கம்
C) செயற்கைக் கோள் நகரம்
(குறிப்பு: செயற்கைக்கோள் நகரங்கள் சில நேரங்களில் பீகாரில் ரோஹ்டாஸ் மாவட்டத்தில் உள்ள டெஹ்ரி மற்றும் டால்மியா நகர் இரண்டு நகரங்களை போல் காணப்படும். இவை சாலைகளோடு இணைக்கப்பட்டிருக்கும்.)
55. நகர்ப்புறப் பகுதிகளில் உள்கட்டமைப்பு வசதி, வீட்டுமனை விற்பனை, தொலைத்தொடர்பு, எளிதாக கிடைக்கக்கூடிய சந்தை உள்ள இடங்கள் ___________ எனப்படும்.
A) இணைந்த நகரம்
B) சிறப்பு பொருளாதார நகரம்
C) செய்ற்கைக்கோள் நகரம்
D) மீப்பெருநகரம்
விடை மற்றும் விளக்கம்
B) சிறப்பு பொருளாதார நகரம்
(குறிப்பு: இந்தியாவில் உள்ள முதல் பத்து சிறப்பு பொருளாதார நகரங்களாவன புவனேஷ்வர், புனே, ஜெய்ப்பூர், சூரத், லூதியானா, கொச்சி, அகமதாபாத், சோலாப்பூர், டெல்லி மற்றும் உதய்ப்பூர் ஆகும்.)
56. அளவின் அடிப்படையில் கீழ்க்காணும் நகர்ப்புற குடியிருப்புகளை வரிசைப்படுத்துக.
1. நகரம் 2. மீப்பெருநகரம்
3. தலைநகரம் 4. இணைந்த நகரம்
A) 4,1, 3, 2
B) 1, 3, 4, 2
C) 2, 1, 3, 4
D) 3, 1, 2, 4
விடை மற்றும் விளக்கம்
விடை: B) 1, 3, 4, 2
57. தமிழ்நாட்டில் __________முக்கிய நகரங்கள் சிறப்புப் பொருளாதார நகரங்களாக மாற்றப்பட உள்ளன.
A) 10
B) 12
C) 14
D) 18
விடை மற்றும் விளக்கம்
B) 12
(குறிப்பு: சென்னை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி, தஞ்சாவூர், திருப்பூர், சேலம், வேலூர், கோயம்புத்தூர், தூத்துக்குடி, திண்டுக்கல் மற்றும் ஈரோடு ஆகியவை 12 முக்கிய நகரங்களாகும்.)
58. பொருத்துக.
1. சட்லஜ் கங்கைச் சமவெளி – i) சிதறிய குடியிருப்பு
2. நீலகிரி – ii) நட்சத்திர வடிவக் குடியிருப்பு
3. தென் இந்தியா – iii) செவ்வக வடிவ அமைப்பு
4. கடற்கரை – iv) குழுமிய குடியிருப்பு
5. ஹரியானா – v) வட்டக்குடியிருப்பு
A) ii v i iv iii
B) iii iv i ii v
C) iii i ii v iv
D) iii i v iv ii
விடை மற்றும் விளக்கம்
விடை: D) iii i v iv ii
59. கூற்று: உலகில் அநேக மொழிகள் பேசப்படுகின்றன.
காரணம்: மொழி வேற்றுமை உலகில் அதிக அளவில் காணப்படுகிறது.
A) கூற்றும் காரணமும் சரி கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது.
B) கூற்றும் காரணமும் சரி ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை.
C) கூற்று தவறு காரணம் சரி
D) கூற்றும் காரணமும் தவறு
விடை மற்றும் விளக்கம்
விடை: A) கூற்றும் காரணமும் சரி கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது.
60. தென் ஆப்பிரிக்காவின் __________பாலைவனத்தில் முக்கியமாக புஷ்மென்கள் காணப்படுகிறது.
A) ஜோஹான்ஸ்பேர்க்
B) கலஹாரி
C) எட்வர்ட் தீவு
D) சதர்லாந்து
விடை மற்றும் விளக்கம்
விடை: B) கலஹாரி