பொருளியல் – ஓர் அறிமுகம் 6th Social Science Lesson 15 Questions in Tamil
6th Social Science Lesson 15 Questions in Tamil
15. பொருளியல் – ஓர் அறிமுகம்
1. உணவு தேவைக்கும் தொழில் உற்பத்திக்கும் தேவையான மூலப்பொருள்களை உற்பத்தி செய்வது
A) முதல் நிலைத் தொழில்கள்
B) இரண்டாம் நிலைத் தொழில்கள்
C) மூன்றாம் நிலைத் தொழில்கள்
D) மேற்கண்ட எதுவுமில்லை
விடை மற்றும் விளக்கம்
A) முதல் நிலைத் தொழில்கள்
(குறிப்பு: வேளாண்மை, கால்நடைகள் வளர்த்தல், மீன்பிடித்தல், கனிமங்கள், தாதுப் பொருட்கள் போன்ற மூலப்பொருள்கள் சேகரித்தல், கனிகள், கொட்டைகள், தேன், மூலிகைகள், ரப்பர், பிசின் போன்றவை சேகரித்தல், மரம் வெட்டுதல் ஆகியவை முதல் நிலைத் தொழில்கள்.)
2. தொழில்கள் கீழ்க்கண்ட எவற்றின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன?
1. மூலப்பொருள்கள் 2. மூலதனம்
3. உடமை 4. நிலத்தின் அளவு
A) 1, 3, 4
B) 1, 4
C) 1, 2, 4
D) 1, 2, 3
விடை மற்றும் விளக்கம்
விடை: D) 1, 2, 3
3. கூற்று 1: முதல் நிலைத் தொழில்கள் மூலம் சேகரிக்கப்படும் மூலப்பொருள்களில் இருந்து இயந்திரங்கள் மூலம் அன்றாடத் தேவைக்கான பொருட்கள் வரை பெருமளவில் உற்பத்தி செய்தல் இரண்டாம் நிலைத் தொழில்கள் எனப்படும்.
கூற்று 2: இரண்டாம் நிலைத் தொழில்கள் தொழில் துறை என்றும் அழைக்கப்படுகின்றன.
A) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
விடை மற்றும் விளக்கம்
விடை: C) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
4. கீழ்க்கண்டவற்றுள் வேளாண் அடிப்படைத் தொழிற்சாலைகளில் தவறானது எது?
A) பருத்தி
B) சர்க்கரை
C) உணவு பதப்படுத்துதல்
D) காகிதத்தொழில்
விடை மற்றும் விளக்கம்
விடை: D) காகிதத்தொழில்
5. கீழ்க்கண்டவற்றுள் காடு சார்ந்த தொழிற்சாலை எது?
A) இரும்பு
B) ரப்பர்
C) மரச்சாமான்கள்
D) சிமெண்ட்
விடை மற்றும் விளக்கம்
C) மரச்சாமான்கள்
(குறிப்பு: காகிதத்தொழில், மரச்சாமான்கள், கட்டுமானப்பொருள்கள் ஆகியவை காடு சார்ந்த தொழிற்சாலைகள் ஆகும்.)
6. கூற்று 1: சேமிப்பு என்பது கையில் கிடைக்கும் வருமானத்தில் நுகர்வுக்குச் செலவு செய்ததுபோக எதிர்காலத் தேவைக்காக ஒதுக்கப்படும் ஒரு தொகையாகும்.
கூற்று 2: சிமெண்ட், இரும்பு, அலுமினியம் போன்ற தொழிற்சாலைகள் கனிமத்தொழிற்சாலைகள் ஆகும்.
A) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
விடை மற்றும் விளக்கம்
C) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
(குறிப்பு: கடல் உணவு பதப்படுத்துதல் கடல்சார் தொழிற்சாலைகளில் வகைப்படுத்தப்படுகிறது.)
7. “கிராமங்கள் நம் நாட்டின் முதுகெலும்பு” என்று கூறியவர்
A) பாரதியார்
B) நேரு
C) அம்பேத்கர்
D) காந்தி
விடை மற்றும் விளக்கம்
D) காந்தி
(குறிப்பு: கிராமங்களில் விவசாயம் தான் முதன்மையான வேலையாக இருக்கும். விவசாயம், தொழிற்சாலைகள் எல்லாம் நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவியாக உள்ளன.)
8. கூற்று 1: சேவைத் துறை தொழில்கள், தொழில் துறையில் பொருட்களை உற்பத்தி செய்வதற்கும் உற்பத்தி பொருள்களை தேவையான மக்களுக்கு கொண்டு சேர்ப்பதற்கும் தேவையான சேவைகளை வழங்குகிறது.
கூற்று 2: மக்களின் அன்றாடத் தேவைகளையும் சேவைத் துறை வழங்குகிறது.
A) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
விடை மற்றும் விளக்கம்
C) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
(குறிப்பு: மூன்றாம் நிலைத் தொழில்கள் சேவை துறை தொழில்கள் என அழைக்கப்படுகின்றன.)
9. தமிழ்நாட்டில் _________ சதவீத மக்கள் நகரங்களில் வாழ்கின்றனர்.
A) 45
B) 47
C) 49
D) 51
விடை மற்றும் விளக்கம்
B) 47
(குறிப்பு: உலக மக்கள் தொகையில் 50 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் நகரங்களில் வாழ்கிறார்கள்.)
10. பொருத்துக.
1. சிறிய அளவிலான தொழிற்சாலை – i) பண பரிவர்த்தனை
2. காடு சார்ந்த தொழிற்சாலைகள் – ii) தகவல் தொழில் நுட்பம்
3. சேவைகள் – iii) காகித தொழிற்சாலைகள்
4. வங்கி – iv) கால்நடைகள் வளர்ப்பு
A) ii i iii iv
B) iv iii ii i
C) iv ii i iii
D) i iv iii ii
விடை மற்றும் விளக்கம்
விடை: B) iv iii ii i
11. பொருளாதார நடவடிக்கைகள் ________ அடிப்படையில் பிரிக்கப்படுகின்றன.
A) மூலப்பொருள்கள்
B) உடமை
C) பயன்பாடு
D) மூலதனம்
விடை மற்றும் விளக்கம்
C) பயன்பாடு
(குறிப்பு: பால்பண்ணை ஒரு கூட்டுறவு துறை ஆகும்.)
12. கூற்று 1: அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்ய மக்கள் அங்காடியிலிருந்து வாங்கிப் பயன்படுத்தும் பொருட்கள் நுகர்வோர் பொருட்கள் என்று அழைக்கப்படுகின்றன.
கூற்று 2: தமிழ்நாடு உற்பத்தி தொழிலிலும் சேவைத் தொழிலிலும் சிறந்து விளங்கும் மாநிலம்.
A) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
விடை மற்றும் விளக்கம்
C) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
(குறிப்பு: அரிசி, துணிகள், மிதிவண்டிகள் போன்றவை நுகர்வோர் பொருட்களுக்கு எடுத்துக்காட்டுகள்.)
13. அளவறிந்து வாழாதான் வாழ்க்கை _________
_________ தோன்றாக் கெடும்.
A) செல்வம் இல்லாகி
B) பாடறிந்து வாழாமல்
C) உளபோல இல்லாகி
D) செல்வம் செறிந்து
விடை மற்றும் விளக்கம்
C) உளபோல இல்லாகி
(குறிப்பு: தன் செல்வத்தின் அளவு அறிந்து அதற்கு ஏற்ப வாழாதவனுடைய வாழ்க்கை பல வளங்களும் இருப்பது போலத் தோன்றி உண்மையில் இல்லாதவனாய்ப் பின்பு அப்பொய்த் தோற்றமும் இல்லாமல் அழியும்.)
14. பொருத்துக.
1. போக்குவரத்து – i) தகவல் தொழில்நுட்பம்
2. தொலைத் தொடர்பு – ii) ரயில்
3. வர்த்தகம் – iii) பணப்பரிமாற்றம்
4. வங்கி – iv) பொருள்களை கொள்முதல் செய்தல்
A) ii i iii iv
B) iv iii ii i
C) iv ii i iii
D) ii i iv iii
விடை மற்றும் விளக்கம்
D) ii i iv iii
(குறிப்பு: போக்குவரத்து – சாலை, ரயில், கடல், ஆகாயப் போக்குவரத்துகள்.
தொலைத் தொடர்பு – அஞ்சல், தொலைபேசி, தகவல் தொழில்நுட்பம்.
வர்த்தகம் – பொருள்களைக் கொள்முதல் செய்தல், விற்பனை செய்தல்.
வங்கி – பணப்பரிமாற்றம், வங்கி சேவைகள்)