MCQ Questions

நிலக்கோளம் – II புவி புறச்செயல்பாடுகள் 9th Social Science Lesson 20 Questions in Tamil

9th Social Science Lesson 20 Questions in Tamil

20] நிலக்கோளம் – II புவி புறச்செயல்பாடுகள்

1) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. புற செயல்முறைகள் சூரிய சக்தி மற்றும் புவி ஈர்ப்பு விசையால் இயக்கப்படுகின்றன.

II. அக செயல்முறைகள் புவியின் உட்புற வெப்பத்தால் இயக்கப்படுகின்றன.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – புவியின் அக மற்றும் புற செயல்முறைகள் புவி பல்வேறு மாறுதல்களுக்கு உள்ளாகிறது. இவ்விரு தொடர்ச்சியான செயல்பாடுகள் புவியின் நில தோற்றத்தை வடிவமைக்கின்றன. புறசெயல்முறைகள் சூரிய சக்தி மற்றும் புவி ஈர்ப்பு விசையாலும், அகச்செயல்முறைகள் புவியின் உட்புற வெப்பத்தாலும் இயக்கப்படுகின்றன)

2) கீழ்க்காணும் புற செயல்முறைகளுள் எது வானிலை சிதைவு மற்றும் பருப்பொருள் அசைவினால் உண்டாவதில்லை?

A) இயற்பியல் சிதைவு

B) ரசாயன சிதைவு

C) அரிப்பினால் சிதைவுறுதல்

D) உயிரின சிதைவு

(குறிப்பு – புற செயல்முறைகள் வானிலை சிதைவு மற்றும் பருப்பொருள் அசைவு எனவும் சமன்படுத்துதல் எனவும் இரு காரணங்களைக் கொண்டுள்ளது. இயற்பியல் சிதைவு, ரசாயன சிதைவு, உயிரின சிதைவு போன்றவைகள் வானிலை சிதைவு மற்றும் பருப்பொருள் அசைவினால் உண்டாவதாகும்.)

3) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. வளிமண்டல நிகழ்வுகளோடு புவியின் மேற்பரப்பு நேரடியாகத் தொடர்பு கொள்வதால் பாறைகள் சிதைவடைவதையும், அழிவதையும் வானிலை சிதைவு எனலாம்.

II. வானிலை சிதைவுக்கு உட்பட்ட பாறை துகள்கள் மிக அதிக அளவில் புவி ஈர்ப்பு விசையினால் கீழ்நோக்கி சரிகின்ற செயல் பருப்பொருள் அசைவு ஆகும்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – வளிமண்டல நிகழ்வுகளோடு புவியின் மேற்பரப்பு நேரடியாகத் தொடர்பு கொள்வதால் பாறைகள் சிதைவடைவதையும் (Disintegration), அழிவதையும் (Decomposition) வானிலை சிதைவு எனலாம். பருப்பொருள் அசைவு அல்லது பருப்பொருள் சிதைவு என்பது வானிலை சிதைவுக்கு உட்பட்ட பாறை துகள்கள் மிக அதிக அளவில் புவியீர்ப்பு விசையினால் கீழ்நோக்கி செய்கின்ற செயல் ஆகும்.)

4) கீழ்கண்டவற்றுள் எது பருப்பொருள் சிதைவுக்கு எடுத்துக்காட்டு ஆகும்?

I. பாறை வீழ்ச்சி

II. நிலச்சரிவு

III. கற்குவியல் வீழ்ச்சி

A) I, II மட்டும்

B) II மட்டும்

C) I, II மட்டும்

D) இவை அனைத்தும்

(குறிப்பு – பாறை வீழ்ச்சி (Rock slide), கற்குவியல் வீழ்ச்சி (Debris fall), சேறு வழிதல் (Mud flow), நிலச்சரிவு (Land slide) போன்றவை பருப்பொருள் அசைவு அல்லது பருப்பொருள் சிதைவுக்கான எடுத்துக்காட்டு ஆகும்.)

5) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. வானிலை சிதைவின் தன்மை மற்றும் சிதைவின் அளவானது இடத்திற்கு இடம், பிரதேசத்திற்குப் பிரதேசம் மாறுபடும்.

II. இயற்பியல் சிதைவு, ரசாயன சிதைவு, உயிரின சிதைவு போன்றவை வானிலைச் சிதைவுக்கான எடுத்துக்காட்டாகும்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – வளிமண்டல நிகழ்வுகளோடு புவியின் மேற்பரப்பு நேரடியாக தொடர்பு கொள்வதால் பாறைகள் சிதைவடைவதும், அழிவதும் வானிலை சிதைவு ஆகும். வானிலை சிதைவின் தன்மை மற்றும் சிதைவின் அளவு இடத்திற்கு இடம், பிரதேசத்திற்குப் பிரதேசம் வேறுபடும். வானிலை சிதைவு மூன்று வகைப்படும்.)

6) பாறைகள் சிதைவடைவதை கட்டுப்படுத்தும் காரணி கீழ்க்கண்டவற்றுள் எது?

I. வெப்பம்

II. பாறையின் அமைப்பு

III. தாவரங்கள்

A) I, II மட்டும்

B) II மட்டும்

C) I, II மட்டும்

D) இவை அனைத்தும்

(குறிப்பு – வெப்பம், பாறையின் அமைப்பு, நிலச்சரிவு மற்றும் தாவரங்கள் போன்றவை பாறைகள் சிதைவடைவதை கட்டுப்படுத்தும் காரணிகள் ஆகும். வானிலை சிதைவு மூன்று வகைப்படும்.)

7) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. பாறைகள் பகலில் விரிவடைகிறது , இரவில் சுருங்குகிறது.

II. பாறைகள் உடைதல் இயற்பியல் சிதைவின் வகையாகும்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – இயற்பியல் சக்திகளால் பாறைகள் ரசாயன மாற்றம் ஏதும் அடையாமல் இயற்பியல் சிதைவு எனப்படுகிறது. பாறைகள் அதிக வெப்பம் காரணமாக பகலில் விரிவடைவது இரவில் சுருங்குகிறது. இதன் காரணமாக பாறைகள் விரிசல் அடைந்து உடைகின்றன.)

8) கீழ்கண்டவற்றுள் எது இயற்பியல் சிதைவின் வகை அல்ல?

A) பாறை உரிதல்

B) பாறை பிரிந்துடைதல்

C) நீர்க்கொள்ளல்

D) சிறு துகள்களாக சிதைவுறுதல்

(குறிப்பு – பாறைகள் வெப்பத்தின் காரணமாக பகலில் விரிவடைவது இரவில் சுருங்குவது நிகழ்கிறது. காரணமாக பாறைகளில் விரிசல்கள் உண்டாகி, அவை உடைந்து சிதறுகின்றன. பாறை உரிதல் பாறை பிரிந்துடைதல் மற்றும் சிறுதுகள்களாக சிதைவுறுதல் ஆகியன இயற்பியல் சிதைவின் வகைகளாகும்.)

9) பாறை நொறுங்குதல் என்பதை கீழ்க்காணும் எதன் வகையாகும்?

A) பாறை உரிதல்

B) பாறை பிரிந்துடைதல்

C) சிறு துகள்களாக சிதைவுறுதல்

D) இது எதுவும் அல்ல

(குறிப்பு – வெப்பம் மற்றும் குளிர்ச்சியின் மாறுபாடு காரணமாக உருண்டையான பாறைகளின் மேற்பரப்பு வெங்காய தோல் உரிவது போன்று அடுக்கடுக்காக உரித்து எடுக்கப்படுகின்றன. இவ்வாறு பாறை சிதைவுறும் நிகழ்வு பாறை உரிதல் (Exfolitation) எனப்படுகிறது. பாறைமேல் தகடு உரிதல் (Sheeting) மற்றும் பாறை நொறுங்குதல் (Shattering) போன்றவை பாறைஉரிதலின் வகைகள் ஆகும்.)

10) அதிக வெப்பம் மற்றும் உறைபனி கீழ்காணும் எதை நிகழ்த்துகிறது?

A) பாறை உரிதல்

B) பாறை பிரிந்துடைதல்

C) சிறு துகள்களாக சிதைவுறுதல்

D) இது எதுவும் அல்ல

(குறிப்பு – படிவுப் பாறைகள் (Sedimentary rocks) காணப்படும் இடங்களில் பாறைகள் சிறு துகள்களாக சிதைவுறுதல் (Granular disintegeration) அதிகம் நடைபெறுகிறது. இந்த நிகழ்விற்கு அதிக வெப்பம் மற்றும் உறைபனியே முக்கிய காரணமாகும்.)

11) ரசாயன சிதைவுறுதல் கீழ்க்காணும் எந்த பகுதிகளில் அதிகமாக நடைபெறுகிறது?

I. நிலநடுக்கோட்டு பகுதிகள்

II. வெப்பமண்டல பகுதிகள்

III. மிதவெப்ப மண்டலப் பகுதிகள்

A) I, II மட்டும்

B) I, III மட்டும்

C) II, III மட்டும்

D) இவை அனைத்திலும்

(குறிப்பு – பாறைகளில் ரசாயன மாற்றங்கள் ஏற்படுவதால் அவை உடைந்து சிதறுகின்றன. இவை ரசாயன சிதைவு எனப்படுகிறது. அதிக வெப்பமும் ஈரப்பதமும் கொண்ட நிலநடுக்கோட்டு பகுதிகள், வெப்பமண்டல பகுதிகள் மிதவெப்ப மண்டலப் பகுதிகளில் இரசாயனச் சிதைவு அதிகமாக நடைபெறுகிறது.)

12) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. சிதைவடைந்த நுண்ணிய பாறை துகள்கள் மற்றும் சிதைந்த உயிரினங்களின் கலவையே மண்ணாகும்.

II. ஆக்ஸிகரணம், கார்பன் ஆக்கம், கரைதல், நீர்க்கொள்ளல் ஆகிய காரணிகளால் ரசாயன சிதைவு நடைபெறுகிறது.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – ஆக்ஸிகரணம் (oxidation), கார்பன் ஆக்கம் (carbonation), கரைதல் (solution), நீர்க்கொள்ளல் (Hydration) ஆகிய காரணிகளால் ரசாயன சிதைவு நடைபெறுகிறது. ஆக்சிஜன், கார்பன் டை ஆக்சைடு மற்றும் ஹைட்ரஜன் ரசாயன சிதைவுறுதலின் முக்கிய காரணியாக அமைகின்றன.)

13) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. பாறைகளில் உள்ள இரும்புத்தாது வளிமண்டலத்தில் உள்ள ஆக்ஸிஜனுடன் வினை புரிந்து இரும்பு ஆக்சைடாக மாறுகிறது. இது ஆக்சிகரணம் என்று அழைக்கப்படுகிறது.

II. வளிமண்டலத்தில் உள்ள கார்பன்டை ஆக்சைடு நீரில் கரைந்து கார்பானிக் அமிலமாக மாறுகிறது. இது கார்பன் ஆக்கம் என அழைக்கப்படுகிறது.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – பாறைகளில் உள்ள இரும்புத்தாது வளிமண்டலத்தில் உள்ள ஆக்ஸிஜனுடன் வினை புரிந்து இரும்பு ஆக்சைடாக மாறுகிறது இச்செயலே ஆக்ஸிகரணம் என அழைக்கப்படுகிறது. வளிமண்டலத்தில் உள்ள கார்பன்டை ஆக்சைடு நீரில் கரைந்து கார்பானிக் அமிலமாக மாறுகிறது. கார்பானிக் அமிலம் கலந்த நீர் சுண்ணாம்பு பாறைகளின் மீது விழுவதால் கார்பனாக்கம் நடைபெற்று பாறைகள் சிதைவடைகின்றன)

14) குகைகள் உருவாக காரணமானவை எது?

A) ஆக்சிகாரணம்

B) கார்பனாக்கம்

C) நீர்கொளல்

D) இவை எதுவும் அல்ல

(குறிப்பு – வளிமண்டலத்தில் உள்ள கார்பன்டை ஆக்சைடு நீரில் கரைந்து கார்பானிக் அமிலமாக மாறுகிறது. கார்பானிக் அமிலம் கலந்த நீர் சுண்ணாம்பு பாறைகளின் மீது விழுவதால் கார்பனாக்கம் நடைபெற்று பாறைகள் சிதைவடைகின்றன. கார்பனாக்கம் காரணமாக குகைகள் (caves) உருவாகின்றன)

15) தாவரங்களின் வேர்கள் பாறைகளின் விரிசல்கள் வழியே ஊடுருவிச் சென்று பாறைகளை விரிவடையச் செய்வது எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A) ஆக்சிகாரணம்

B) கார்பனாக்கம்

C) நீர்கொளல்

D) உயிரின சிதைவு

(குறிப்பு – தாவரங்களின் வேர்கள் பாறைகளின் விரிசல்கள் வழியே ஊடுருவிச் சென்று பாறைகளை விரிவடைய செய்கிறது. மண்புழுக்களாலும், விலங்கினங்களாலும் (எலி மற்றும் முயல்) மற்றும் மனிதச் செயல்பாடுகளினாலும் பாறைகள் சிதைவுறுதல் உயிரின சிதைவு (Biological Weathering) என அழைக்கப்படுகிறது.)

16) பூமியை சமன் படுத்தும் காரணிகள் கீழ்க்கண்டவற்றுள் எது?

I. ஆறுகள்

II. நிலத்தடி நீர்

III. காற்று.

IV. பனியாறுகள்

A) I, II, III மட்டும்

B) II, III, IV மட்டும்

C) I, III, IV மட்டும்

D) இவை அனைத்தும்

(குறிப்பு – இயற்கை காரணிகளான ஆறுகள், நிலத்தடி நீர், காற்று, பனியாறுகள் மற்றும் கடலலைகள் புவியின் மேற்பரப்பை பயன்படுத்துகின்றன. இந்த செயல் சமன்படுத்துதல் செயல்முறை (Gradation) எனப்படும்)

17) நில வாட்டம் அமைக்கும் செயல் முறைகீழ்க்கண்டவற்றுள் எது?

I. அரிப்பினால் சிதைவுறுதல்

II. படிவுகளினால் நிரப்பப்படுதல்

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – நிலா வட்டம் அமைக்கும் செயல்முறைகள் இரண்டு செயல்பாடுகளை கொண்டது. அவை அரிப்பினால் சிதைவுறுதல் (Degradation) மற்றும் படிவுகளினால் நிரப்பப்படுதல்(Aggradation) ஆகும்.)

18) சமன்படுத்துதல் அமைக்கும் செயல்முறைக்கான சரியான விளக்கம் எது?

A) அரித்தல் + கடத்துதல்

B) அரித்தல் + கடத்துதல் + படியவைத்தல்

C) கடத்துதல் + படியவைத்தல்

D) அரித்தல் + படியவைத்தல்

(குறிப்பு – நிலத்தின் மேற்பரப்பை தேய்வுற செய்தல் அரிப்பினால் சமன்படுத்துதல் (Degradation) எனப்படும். இயற்கைக் காரணிகளால் நிலத்தோற்றங்களை உருவாக்குதல் படிவுகளினால் நிரப்பப்படுத்தல் (Aggradation) எனப்படும். சமன்படுத்துதல் அமைக்கும் செயல்முறைகள் = அரித்தல் + கடத்துதல் + படியவைத்தல்)

19) ஆறுகள் கடலுடன் கலக்கும் இடம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A) சங்கமம்

B) முகத்துவாரம்

C) நுழைவாயில்

D) எல்லாமே தவறு

(குறிப்பு – ஆறுகளே மிக அதிக அளவில் சமன்படுத்துதல் அமைக்கும் செயல்முறைகளை ஏற்படுத்தும் முக்கிய காரணி ஆகும். பெரும்பாலும் ஆறுகள், உயரமான மலைகள், குன்றுகள் அல்லது பீடபூமிகளிலிருந்து உருவாகின்றன. ஆறுகள் தோன்றும் இடம் ஆற்றின் பிறப்பிடம் எனவும் கடலுடன் கலக்கும் இடம் முகத்துவாரம் எனவும் அழைக்கப்படுகிறது.)

20) ஆற்றின் முதன்மை செயல் கீழ்கண்டவற்றுள் எது?

A) அரித்தல்

B) கடத்துதல்

C) படியவைத்தல்

D) இவை அனைத்தும்

(குறிப்பு – பெரும்பாலும் ஆறுகள், உயரமான மலைகள், குன்றுகள் அல்லது பீடபூமிகளிலிருந்து உருவாகின்றன. ஆறுகள் தோன்றும் இடம் ஆற்றின் பிறப்பிடம் எனவும் கடலுடன் கலக்கும் இடம் முகத்துவாரம் எனவும் அழைக்கப்படுகிறது.அரித்தல், கடத்துதல் மற்றும் படியவைத்தல் ஆற்றின் முதன்மை செயல்களாகும்.)

21) ஆற்றின் செயல்பாட்டினை தீர்மானிக்கும் காரணிகள் கீழ்க்கண்டவற்றுள் எது?

I. நீரின் அளவு

II. நீரோட்டத்தின் வேகம்

III. நிலத்தின் சரிவு

IV. பாறைகளின் அமைப்பு

A) I, II, III மட்டும்

B) II, III, IV மட்டும்

C) I, III, IV மட்டும்

D) இவை அனைத்தும்

(குறிப்பு – நீரின் அளவு, நீரோட்டத்தின் வேகம், நிலத்தின் சரிவு, பாறைகளின் அமைப்பு மற்றும் கடத்திவரப்பட்ட பொருட்களின் சுமை ஆகிய காரணிகளை சார்ந்து ஆற்றின் செயல்பாடுகள் அமையும்.)

22) கீழ்க்கண்டவற்றுள் எது உயிரின சிதைவுக்கான காரணியாகும் ?

A) கரைதல்

B) விலங்குகள் குழி தோண்டுதல்

C) சிறுதுகள்களாக சிதைவுறுதல்

D) பாறை வீழ்ச்சி

(குறிப்பு – தாவர வேர்கள் மற்றும் மண்புழுக்கள் ஊடுருவுதல், தாவர வேர்களால் விரிவடைதல், விலங்குகள் குழி தோண்டுதல் மற்றும் மனித செயல்பாடுகளால் ஏற்படும் பாறை சிதைவுகள், உயிரின சிதைவு என அழைக்கப்படுகிறது.)

23) ஆற்றின் போக்கு எத்தனை நிலைகளாக பிரிக்கப்படுகிறது?

A) இரண்டு

B) மூன்று

C) நான்கு

D) ஐந்து

(குறிப்பு – ஆறு பாய்ந்து செல்லும் அதன் பாதை ஆற்றின் போக்கு (Course) என அழைக்கப்படுகிறது. ஆற்றின் போக்கு மூன்று நிலைகளாக பிரிக்கப்படுகிறது.)

24) கீழ்க்கண்டவற்றுள் எது ஆற்றின் போக்கு நிலை அல்ல?

A) இளநிலை

B) முதிர்நிலை

C) இடைநிலை

D) மூப்புநிலை

(குறிப்பு – ஆற்றின் போக்கு மூன்று நிலைகளாக பிரிக்கப்படுகிறது. இளநிலை (Upper course), முதிர்நிலை (middle course) மற்றும் மூப்பு நிலை (lower course) என்பதாகும்)

25) ஆற்றின் இளநிலையில் கீழ்க்காணும் எது முதன்மை செயலாக உள்ளது?

A) அரித்தல்

B) கடத்துதல்

C) சமன்படுத்துதல்

D) இது எதுவும் அல்ல

(குறிப்பு – ஆற்றின் இளநிலையில் அரித்தலே முதன்மையான செயலாக உள்ளது. இந்நிலையில் ஆறுகள் செங்குத்தான மலை சரிவுகளில் உருண்டோடுகின்றன. சரிவுகளில் ஆற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் அவை பாய்ந்து ஓடும் பொழுது பள்ளத்தாக்கை அகலமாகவும் ஆழமாகவும் அரித்துச் செல்கின்றன.)

26) கீழ்க்கண்டவற்றுள் எது இள நிலையில் ஆறுகளால் தோற்றுவிக்கப்படும் நிலத்தோற்றம் ஆகும்?

I. V- வடிவ பள்ளத்தாக்குகள்

II. மலை இடுக்குகள்

III. குறுகிய பள்ளத்தாக்குகள்

IV. இணைந்த கிளை குன்றுகள்

A) I, II, III மட்டும்

B) II, III, IV மட்டும்

C) I, III, IV மட்டும்

D) இவை அனைத்தும்

(குறிப்பு – இளநிலையில் ஆறுகளால் தோற்றுவிக்கப்படும் நிலத்தோற்றங்கள் ஆவன, V வடிவ பள்ளத்தாக்குகள், மலை இடுக்குகள், குறுகிய பள்ளத்தாக்குகள், இணைந்த கிளை குன்றுகள், துள்ளல் குடகுழிகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் போன்றவை ஆகும்.)

27) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. முதிர் நிலையில் ஆறுகள் சமவெளியை அடைகின்றன.

II. முதிர் நிலையில் கிளை ஆறுகள் முதன்மை ஆற்றுடன் ஒன்றிணைகிறது.இதனால் ஆற்று நீரின் கன அளவும், அது கடத்தி வரும் பொருட்களின் சுமையும் அதிகரிக்கிறது.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – முதிர்நிலையில் ஆறுகள் சமவெளியை அடைகின்றன. கையில் கிளை ஆறுகள் முதன்மை ஆற்றுடன் ஒன்றிணைக்கிறது. ஆற்று நீரின் கன அளவும் அது கடத்தி வரும் பொருட்களின் சுமையும் அதிகரிக்கின்றது. முதிர் நிலையில் கடத்துதல் முதன்மையான செயலாகும்.)

28) கீழ்கண்டவற்றுள் எது முதிர் நிலையில் உருவாகும் நிலத்தோற்றம் அல்ல?

A) வண்டல் விசிறிகள்

B) வெள்ள சமவெளிகள்

C) ஆற்று வளைவுகள்

D) குறுகிய பள்ளத்தாக்குகள்

(குறிப்பு – முதிர் நிலையில் உருவாகும் நிலத்தோற்றங்கள் ஆவன, வண்டல் விசிறிகள் (Alluvial fans), வெள்ள சமவெளிகள் (Flood plains), ஆற்று வளைவுகள் (Meanders), குருட்டு ஆறுகள் (Ox bow lakes) போன்றவை ஆகும்.)

29) மூப்பு நிலையின் முதன்மை செயல் கீழ்கண்டவற்றுள் எது?

A) அரித்தல்

B) கடத்துதல்

C) சமன்படுத்துதல்

D) படிய வைத்தல்

(குறிப்பு – ஆற்றின் மூப்புநிலையில் இளநிலை மற்றும் முதிர் நிலையில் கடத்தி வரப்பட்ட பொருள்கள் தாழ்நில சமவெளிகளில் படிய வைக்கப்படுகின்றன. தாழ்நில சமவெளிகள் படிவுகளால் நிரப்பப்படுவதால் முதன்மை ஆறுபல கிளைகளாக பிரிகின்றன.)

30) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. முதன்மை ஆற்றுடன் இணையும் அனைத்து சிற்றாறுகளும் துணை ஆறுகள் ஆகும்.

II. முதன்மை ஆற்றில் இருந்து பிரிந்து செல்லும் ஆறு, கிளை ஆறு எனப்படும்

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – துணை ஆறு (Tributary) என்பது முதன்மை ஆற்றுடன் இணையும் அனைத்து சிற்றாறுகள் ஆகும். எடுத்துக்காட்டு பவானி ஆறு. முதன்மை ஆற்றில் இருந்து பிரிந்து செல்லும் ஆறுகள் கிளை ஆறு (Distributary) எனப்படும். எடுத்துக்காட்டு கொள்ளிடம் ஆறு.)

31) ஆற்றின் மூப்பு நிலையில் கீழ்காணும் எது உருவாகிறது?

I. டெல்டாக்கள் (Deltas)

II. பொங்கு முகங்கள் (Estuaries)

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – ஆற்றின் மூப்புநிலையில் இளநிலை மற்றும் முதிர் நிலையில் கடத்தி வரப்பட்ட பொருள்கள் தாழ்நில சமவெளிகளில் படிய வைக்கப்படுகின்றன. தாழ்நில சமவெளிகள் படிவுகளால் நிரப்பப்படுவதால் முதன்மை ஆறுபல கிளைகளாக பிரிகின்றன. இதனால் டெல்டாக்கள் (Deltas) மற்றும் பொங்கு முகங்கள் (Estuaries) உருவாகின்றன)

32) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. கடினமான பாறைகள் உள்ள மலைப் பகுதிகள் வழியாக ஆறுகள் பாய்ந்து செல்லும் போது பள்ளத்தாக்குகளை உருவாக்குகின்றன.

II. சிந்து மற்றும் பிரம்மபுத்திரா ஆறுகள் இமயமலையில் பள்ளத்தாக்குகளை உண்டாக்குகின்றன.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – கடினமான பாறைகள் உள்ள மலைப் பகுதிகள் வழியாக ஆறுகள் பாய்ந்து செல்லும் போது பள்ளத்தாக்குகளை உருவாக்குகின்றன.சிந்து மற்றும் பிரம்மபுத்திரா ஆறுகள் இமயமலையில் பள்ளத்தாக்குகளை உண்டாக்குகின்றன. செங்குத்து சரிவை கொண்ட மலை இடுக்குகளில் பல நூறு கிலோமீட்டருக்கு நீண்டு காணப்பட்டால் அவை குறுகிய பள்ளத்தாக்கு (Canyons) எனப்படுகிறது.)

33) கிராண்ட் கேன்யான் (Grand Canyon) எங்கு அமைந்துள்ளது?

A) ரஷ்யா

B) அமெரிக்கா

C) கனடா

D) பிரேசில்

(குறிப்பு – செங்குத்து சரிவை கொண்ட மலை இடுக்குகளில் பல நூறு கிலோமீட்டருக்கு நீண்டு காணப்பட்டால் அவை குறுகிய பள்ளத்தாக்கு (Canyons) எனப்படுகிறது. அமேரிக்காவில் கொலராடோ (Colarado river) ஆற்றினால் உருவாக்கப்பட்ட கிராண்ட் கேன்யான் (Grand Canyon) இதற்கு உதாரணம் ஆகும்.)

34) அருவிகள் விழும் இடத்தில் உள்ள பாறைகளை அரித்து பள்ளம் போன்ற அமைப்பினை ஏற்படுத்துவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A) வீழ்ச்சிக்குடைவு

B) ஆற்று நீர் துள்ளல்

C) நீர் குகைகள்

D) எல்லாமே தவறு

(குறிப்பு – கடினப் பாறைகள் மேல் அடுக்கிலும் மின் பாறைகள் கீழ் அடுக்கிலும் கிடையாக அமைந்திருந்தால், கீழ் அடுக்கில் உள்ள மென் பாறைகள் நீரினால் விரைவில் அரிக்கப்படுகிறது. இதனால் மேல் அடுக்கில் உள்ள அரிக்கப்படாத கடினப் பாறைகள் நீண்டு ஆற்றின் போக்கில் நீர்வீழ்ச்சியை ஏற்படுத்துகிறது. நீர் விழும் இடத்தில் உள்ள பாறைகளை அரித்து பள்ளம் போன்ற அமைப்பினை ஏற்படுத்துவது வீழ்ச்சிக்குடைவு (Plunge pool) என அழைக்கப்படுகிறது.)

35) ஆற்றின் படுகையில் செங்குத்தாக குடையப்பட்ட உருளை வடிவப் பள்ளங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A) குடகுடைவு

B) வீழ்ச்சிகுடைவு

C) அரிப்பு குடைவு

D) எல்லாமே தவறு

(குறிப்பு – ஆற்றின் படுகையில் செங்குத்தாக குடையப்பட்ட உருளை வடிவ பள்ளங்கள் குடகுடைவு (Parthole) என அழைக்கப்படுகிறது. இவற்றின் விட்டமும், ஆழமும் ஒன்றுக்கொன்று வேறுபட்டு காணப்படும்.)

36) உலகின் மிக உயரமான நீர்வீழ்ச்சியான ஏஞ்சல் நீர்வீழ்ச்சி எந்த நாட்டில் அமைந்துள்ளது?

A) அமெரிக்கா

B) கனடா

C) வெனிசுலா

D) பிரேசில்

(குறிப்பு – உலகின் மிக உயரமான நீர்வீழ்ச்சி ஏஞ்சல் நீர்வீழ்ச்சி ஆகும். இது வெனிசுலா நாட்டில் அமைந்துள்ளது. இந்த நீர்வீழ்ச்சியின் உயரம் 979 மீட்டர் ஆகும்.)

37) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. ஆறுகளில் படிவுகள் அதிகரிப்பதால் அதன் வேகம் குறைகிறது. இதனால் ஆறுகள் வளைந்து செல்கின்றன. இது ஆற்று வளைவுகள் என அழைக்கப்படுகின்றன.

II. ஆற்று வளைவுகள் காலப்போக்கில் பெரிதாகி இறுதியில் ஒரு முழு வளையமாக மாறுகிறது. இது முதன்மை ஆற்றில் இருந்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு ஒரு ஏரியை போல காட்சியளிக்கும். இது குருட்டு ஆறு என அழைக்கப்படுகிறது.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – ஆறுகளில் படிவுகள் அதிகரிப்பதால் அதன் வேகம் குறைகிறது. இதனால் ஆறுகள் வளைந்து செல்கின்றன. இது ஆற்று வளைவுகள் (Meanders) என அழைக்கப்படுகின்றன.ஆற்று வளைவுகள் காலப்போக்கில் பெரிதாகி இறுதியில் ஒரு முழு வளையமாக மாறுகிறது. இது முதன்மை ஆற்றில் இருந்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு ஒரு ஏரியை போல காட்சியளிக்கும். இது குருட்டு ஆறு அல்லது குதிரை குளம்பு ஏரி (Ox bow lake) என அழைக்கப்படுகிறது.)

38) ஆசியாவின் மிகப்பெரிய நன்னீர் குருட்டாறு எந்த நாட்டில் அமைந்துள்ளது?

A) இந்தியா

B) சீனா

C) இலங்கை

D) வங்கதேசம்

(குறிப்பு – ஆசியாவின் மிகப்பெரிய குருட்டு ஆறு இந்தியாவில் அமைந்துள்ளது. இது பிஹாரில் உள்ள கன்வர் ஏரி ஆகும். இது ஆசியாவில் உள்ள மிகப் பெரிய நன்னீர் குருட்டு ஆறு ஆகும்)

39) உலகின் மிகப்பெரிய குருட்டு ஆறு எந்த நாட்டில் அமைந்துள்ளது?

A) இந்தியா

B) சீனா

C) அமெரிக்கா

D) கனடா

(குறிப்பு – உலகின் மிகப்பெரிய குருட்டு ஆறு அமெரிக்காவில் அமைந்துள்ளது. இது அமெரிக்காவின் அர்க்கன்சாஸ் பகுதியில் அமைந்துள்ள சிக்காட் ஏரி ஆகும்.)

40) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. ஆறுகளால் கடத்தி வரப்பட்ட பொருள்கள் மலையடிவாரத்தில் விசிறி போன்ற வடிவத்தில் அமைக்கப்படுவது, வண்டல் விசிறி என அழைக்கப்படுகிறது.

II. ஆறுகளில் ஏற்படும் வெள்ளப்பெருக்கின் காரணமாக ஆற்றின் கரைகளில் படிய வைக்கப்படும் மென்மையான படிவுகள் வெள்ளச்சமவெளியை உருவாக்குகின்றன.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – ஆறுகளால் கடத்தி வரப்பட்ட பொருள்கள் மலையடிவாரத்தில் விசிறி போன்ற வடிவத்தில் அமைக்கப்படுவது, வண்டல் விசிறி (Alluvial Fans) என அழைக்கப்படுகிறது. ஆறுகளில் ஏற்படும் வெள்ளப்பெருக்கின் காரணமாக ஆற்றின் கரைகளில் படிய வைக்கப்படும் மென்மையான படிவுகள் வெள்ளச்சமவெளியை (Flood Plains) உருவாக்குகின்றன. இந்த படிவுகள் அப்பகுதியை வளம் உள்ளதாக மாற்றுகின்றன.)

41) ஆறு கடலில் சேரும் இடங்களில் உருவாகுவது கீழ்கண்டவற்றுள் எது?

A) வெள்ள சமவெளி

B) ஓத பொங்குமுகம்

C) டெல்டா

D) வண்டல் விசிறி

(குறிப்பு – ஓதபொங்கு முகமானது ஆறு கடலில் சேரும் இடங்களில் உருவாகிறது. இவ்வகை நிலத்தோற்றங்களில் படிய வைத்தல் செயல் கிடையாது. அலைகளின் அரித்தல் காரணமாக இங்கு டெல்டாக்கள் போல் படிய வைத்தல் நடைபெறாது. உதாரணமாக இந்தியாவின் நர்மதா மற்றும் தபதி.)

42) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. டெல்டாக்கள் வட்ட வடிவமானது.உதாரணம் காவிரி டெல்டா.

II. டெல்டா பகுதிகளில் உள்ள வண்டல் படிவுகள் மென்மையானதாகவும், தாதுக்கள் நிறைந்ததாகவும் இருக்கும்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – ஆற்றின் முகத்துவாரத்தில் படிவுகள் முக்கோண வடிவில் படிய வைக்கப்படுகின்றன. இவ்வாறு முக்கோண வடிவில் படிவுகளால் உருவாக்கப்பட்ட நிலத்தோற்றம் டெல்டா என அழைக்கப்படுகிறது. உதாரணம் காவிரி டெல்டா. அப்பகுதிகளில் உள்ள வண்டல் படிவுகள் மென்மையானதாகவும், தாதுக்கள் நிறைந்ததாகவும் காணப்படுகிறது.)

43) உலகின் மிகப்பெரிய டெல்டா இது?

A) காவிரி டெல்டா

B) கங்கை பிரம்மபுத்திரா டெல்டா

C) யமுனா டெல்டா

D) நர்மதா டெல்டா

(குறிப்பு – டெல்டா என்ற கிரேக்க எழுத்து போன்று நைல் நதியின் முகத்துவாரத்தில் காணப்படும் படிவுகள் இருப்பதால், இந்தவகை படிவுகளுக்கு டெல்டா என பெயர் வழக்கத்தில் வந்தது. உலகின் மிகப்பெரிய டெல்டா, கங்கை பிரம்மபுத்திரா டெல்டா ஆகும்.)

44) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. புவியின் மேற்பரப்பில் உள்ள பாறைகளின் துவாரங்கள் மற்றும் விரிசல்கள் வழியாக நீர் உட்புகுந்து நிலத்தடியில் சேகரிக்கப்படுகிறது. இது நிலத்தடி நீர் என அழைக்கப்படுகிறது.

II. நிலத்தடி நீரின் அளவு அந்த இடத்தில் உள்ள பாறைகளின் உறிஞ்சும் தன்மைக்கேற்ப நிர்ணயிக்கப்படுகிறது.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – புவியின் மேற்பரப்பில் உள்ள பாறைகளின் துவாரங்கள் மற்றும் விரிசல்கள் வழியாக நீர் உட்புகுந்து நிலத்தடியில் சேகரிக்கப்படுகிறது. இது நிலத்தடி நீர் என அழைக்கப்படுகிறது.நிலத்தடி நீரின் அளவு அந்த இடத்தில் உள்ள பாறைகளின் உறிஞ்சும் தன்மைக்கேற்ப நிர்ணயிக்கப்படுகிறது. நீரை உறிஞ்சும் பாறைகள் அல்லது நீர் உட்புகும் பாறைகள், நீரை உறிஞ்சாத பாறைகள் அல்லது நீர் உட்புகாத பாறைகள் என்பன பாறைகளின் வகைகளாகும்.)

45) நிலத்தடி நீரானது எவ்வாறு புவியின் மேற்பரப்பை வந்தடைகிறது?

I. ஊற்று

II. கிணறு

III. குளம்

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) I, III மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – நிலத்தடி நீரானது ஊற்று, கொதிநீர் ஊற்று, வெப்ப நீரூற்று, கிணறு, குளம், ஆர்டிசியன் கிணறு போன்றவற்றின் மூலம் புவியின் மேற்பரப்பை மீண்டும் வந்தடைகிறது இவ்வாறு புவி மேற்பரப்பை வந்தடையும் நிலத்தடிநீர் மனித செயல்பாடுகளுக்கு பல்வேறு வகைகளில் பயன்படுகிறது)

46) உலகின் சிறந்த வெப்ப நீரூற்று எந்த நாட்டில் அமைந்துள்ளது?

A) அமெரிக்கா

B) வெனிசுலா

C) கனடா

D) பிரேசில்

(குறிப்பு – அமெரிக்காவிலுள்ள வியாம்சிங்கின் எல்லோ ஸ்டோன் தேசிய பூங்காவில் காணப்படும் (Yellow stone national park) ஓல்டு பெயத்புல் (Old Faithful) வெப்ப நீரூற்று, உலகின் சிறந்த வெப்ப நீரூற்று ஆகும்.)

47) உலகின் மிகப்பெரிய சுண்ணாம்பு பிரதேச நிலத்தோற்றம் எந்த நாட்டில் அமைந்துள்ளது?

A) அமெரிக்கா

B) வெனிசுலா

C) ஆஸ்திரேலியா

D) பிரேசில்

(குறிப்பு – ஆஸ்திரேலியாவின் கடற்கரையில் அமைந்துள்ள நல்லர்பார் (Nullarbar), உலகின் மிகப்பெரிய சுண்ணாம்பு பிரதேச நிலத்தோற்றம் ஆகும்.)

48) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. சுண்ணாம்பு நிலப் பிரதேசங்களில் நிலத்தடி நீர், நிலவாட்டம் அமைக்கும் செயல்களினால் பல்வேறு விதமான நிலத்தோற்றங்களை ஏற்படுத்துகின்றன.

II. சுண்ணாம்பு பிரதேச நிலத்தோற்றங்கள், நீரில் எளிதில் கரையும் தன்மையுடைய சுண்ணாம்புக்கல், ஜிப்சம் உள்ள பிரதேசங்களில் காணப்படுகின்றன

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – சுண்ணாம்பு நிலப் பிரதேசங்களில் நிலத்தடி நீர், நிலவாட்டம் அமைக்கும் செயல்களினால் பல்வேறு விதமான நிலத்தோற்றங்களை ஏற்படுத்துகின்றன. இவையே சுண்ணாம்பு பிரதேச நிலத்தோற்றங்கள் எனப்படுகின்றன. இவை நீரில் எளிதில் கரையும் தன்மையுடைய சுண்ணாம்புக்கல், டாலமைட், ஜிப்சம் போன்ற பாறை பிரதேசங்களில் காணப்படுகின்றன.)

49) சுண்ணாம்பு நிலத்தோற்றம் ஸ்லாவிக் மொழியில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A) கார்ஸ்ட்

B) கேஸ்ட்

C) கஸ்ட்

D) எல்லாமே தவறு

(குறிப்பு – மேற்கு ஸ்லோவேனியாவில் உள்ள சுண்ணாம்பு பிரதேச நிலத்தோற்றம் சுமார் 480 கிலோ மீட்டர் நீளத்திற்கும், 80 கிலோ மீட்டர் அகலத்திற்கும் பரவி காணப்படுகிறது. இந்த நிலத்தோற்றம் ஸ்லாவிக் மொழியில் கார்ஸ்ட் (Carst) என அழைக்கப்படுகிறது.)

50) கீழ்க்காணும் எந்த இடத்தில் சுண்ணாம்பு நிலப்பிரதேசம் இல்லை?

A) மெக்சிகோ

B) ஸ்பெய்ன்

C) கனடா

D) இலங்கை

(குறிப்பு – உலகில் சுண்ணாம்பு நில பிரதேசங்கள் காணப்படும் இடங்கள் தெற்கு பிரான்சு, ஸ்பெயின், மெக்சிகோ, ஜமைக்கா, மேற்கு கியூபா, மத்திய நியூகினியா, இலங்கை மற்றும் மியான்மர் ஆகிய இடங்கள் ஆகும்.)

51) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. நல்லர்பார், உலகின் மிகப்பெரிய சுண்ணாம்பு பிரதேச நிலத்தோற்றம் ஆகும்.

II. நிலத்தடி நீரின் அரித்தல் மற்றும் படிய வைத்தல் செயல்களால் உருவாக்கப்படும் நிலத்தோற்றங்களை சுண்ணாம்பு நிலப்பிரதேசங்களில் காணமுடியும்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – ண்ணாம்பு நிலப் பிரதேசங்களில் நிலத்தடி நீர், நிலவாட்டம் அமைக்கும் செயல்களினால் பல்வேறு விதமான நிலத்தோற்றங்களை ஏற்படுத்துகின்றன. இவையே சுண்ணாம்பு பிரதேச நிலத்தோற்றங்கள் எனப்படுகின்றன. நிலத்தடி நீரின் அரித்தல் மற்றும் படிய வைத்தல் செயல்களால் உருவாக்கப்படும் நிலத்தோற்றங்களை சுண்ணாம்பு நிலப்பிரதேசங்களில் காணமுடியும்)

52) இந்தியாவில் உள்ள சுண்ணாம்பு பிரதேச நிலத்தோற்றங்களை பொருத்துக.

I. மேற்கு பீஹார் – a) போரா குகைகள்

II. உத்தரகாண்ட் – b) குடும்சர் குகை

III. சட்டிஸ்கர் – c) ராபர்ட் குகை

IV. ஆந்திர பிரதேசம் – d) குப்ததாம் குகை

A) I-d, II-c, III-b, IV-a

B) I-b, II-a, III-d, IV-c

C) I-c, II-a, III-d, IV-b

D) I-b, II-a, III-d, IV-c

(குறிப்பு – இந்தியாவில் உள்ள சுண்ணாம்பு பிரதேச நிலத்தோற்றங்கள் ஆவன, மேற்கு பீஹாரில் குப்ததாம் குகைகள், உத்தராகண்டில் ராபர்ட் குகை, மத்தியபிரதேசத்தில் பச்மாதிரி மலைகள் மற்றும் பாண்டவர் குகைகள், சத்தீஸ்கர் மாநிலத்தில் குடும்சர் குகைகள் மற்றும் ஆந்திரப் பிரதேசம் விசாகப்பட்டினத்தில் போரா குகைகள் என்பனவாகும்.)

53) கீழ்க்கண்டவற்றுள் எது நிலத்தடி நீர் அரித்தலால் உருவாக்கப்படும் நிலத்தோற்றம் ஆகும்?

I. டெர்ரா ரோசா

II. லேப்பீஸ்

III. உறிஞ்சித்துளை

IV. டோலின்

V. யுவாலா

A) I, II, III, IV மட்டும்

B) II, III, IV, V மட்டும்

C) I, III, IV, V மட்டும்

D) இவை அனைத்தும்

(குறிப்பு – அரித்தல் செயலுக்கு பெரும்பாலும் கரைதலே முக்கிய காரணம் ஆகும். சுண்ணாம்பு நிலப் பிரதேசங்களில் கார்பன்டைஆக்சைடு கலந்த மழை நீர் விழும் பொழுது அப்பிரதேசங்களில் உள்ள சுண்ணாம்புடன் வேதிவினை புரிந்து அதனை கரைத்து சிதைத்து விடுகிறது. இதனால் மேற்கண்ட நிலத்தோற்றங்கள் உருவாகிறது.)

54) டெர்ரா ரோசா என்பதற்கு இத்தாலிய மொழியில் ___________ என்பதாகும்.

A) உறுதியான

B) மென்மையான

C) செம்மண்

D) துகள்துகளான

(குறிப்பு – சுண்ணாம்பு நிலப் பிரதேசங்களில் உள்ள சுண்ணாம்பு மண் கரைந்து சிதைவுற்ற பின்னர் அதில் உள்ள எஞ்சிய செம்மண் படிய வைக்கப்படுவதால் டெர்ரா ரோசா (Terra Rosa) நில தோற்றம் உருவாக்கப்படுகிறது. இதற்கு இத்தாலிய மொழியில் செம்மண் என்ற பொருளாகும்.)

55) கரடுமுரடாக உள்ள சுண்ணாம்பு பாறைகள் இடையிலே நிலத்தடி நீர் நெளிந்து ஓடும் பொழுது ஏற்படும் நீண்ட அரிப்புக்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A) லேப்பீஸ்

B) உறிஞ்சு துளைகள்

C) டெர்ரா ரோசா

D) டோலின்

(குறிப்பு – கரடுமுரடாக உள்ள சுண்ணாம்பு பாறைகள் இடையிலே நிலத்தடி நீர் நெளிந்து ஓடும் பொழுது நீண்ட அரிப்பு குடைவுகள் (Furrows) ஏற்படுகின்றன.இக்குடைவுகளே லேப்பீஸ் என்று அழைக்கப்படுகின்றன.)

56) உறிஞ்சி துளைகளின் சராசரி ஆழம்?

A) 2 முதல் 7 மீட்டர் வரை

B) 3 முதல் 9 மீட்டர் வரை

C) 5 முதல் 11 மீட்டர் வரை

D) 5 முதல் 15 மீட்டர் வரை

(குறிப்பு – சுண்ணாம்பு பாறைகள் கரைவதால் ஏற்படும் புனல் வடிவ பள்ளங்கள் உறிஞ்சிதுளைகள் என அழைக்கப்படுகின்றது. இதன் சராசரி ஆழம் 3 முதல் 9 மீட்டர் வரை காணப்படும்.)

57) உலகின் மிக ஆழமான உறிஞ்சு துளை எந்த நாட்டில் அமைந்துள்ளது?

A) சீனா

B) அமெரிக்கா

C) ஜப்பான்

D) கனடா

(குறிப்பு – உலகின் மிக ஆழமான உறிஞ்சுதுளை சீனாவில் அமைந்துள்ளது. சீனாவின் சைனோசை ஜியான்காங் என்பது இதன் பெயராகும். இது சுமார் 2172 அடி ஆழத்தில் காணப்படுகிறது. அமெரிக்காவிலுள்ள இலினாய்ஸில் 15000 மேற்பட்ட உறிஞ்சுத்துளைகள் உள்ளன)

58) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. குகைகளும், அடிநில குகைகளும் உண்ணாம பிரதேசங்களில் நிலத்தடியில் காணப்படும் நிலத்தோற்றங்கள் ஆகும்.

II. கரியமில அமிலம் சுண்ணாம்பு பாறைகளில் வினை புரிவதால் ஏற்படும் வெற்றிடம் குகை எனப்படுகிறது.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – கரியமில அமிலம் சுண்ணாம்பு பாறைகளில் வினை புரிவதால் ஏற்படும் வெற்றிடம் குகை எனப்படுகிறது. இவையும் உருவத்திலும் அளவிலும் வேறுபட்டு காணப்படும். அடி நீள குகைகளின் தரைப்பகுதி சமமற்று காணப்படும்.)

59) குகைகளிலும், அடிநில குகைகளிலும் படியவைத்தலால் உருவாக்கப்படும் நிலத்தோற்றங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?

A) ஸ்பீலியோதெர்மலஸ்

B) ஸ்பீலியோதெம்ஸ்

C) ஸ்பீலியோசைஸ்

D) ஸ்பீலியோபைட்ஸ்

(குறிப்பு – குகைகளிலும், அடிநில குகைகளிலும் படியவைத்தலால் உருவாக்கப்படும் நிலத்தோற்றங்கள் ஸ்பீலியோதெம்ஸ் (Speleothems) என்று அழைக்கப்படுகின்றன.)

60) கீழ்க்கண்டவற்றுள் எது ஸ்பீலியோதெம்ஸ் என்பதில் அடங்கும்?

A) ட்ரேவர்டைன் (Travertine)

B) டூஃபா (Tufa)

C) சொட்டுபடிவுகள் (Drip stone)

D) இவை அனைத்தும்

(குறிப்பு – குகைகளிலும், அடிநில குகைகளிலும் படியவைத்தலால் உருவாக்கப்படும் நிலத்தோற்றங்கள் ஸ்பீலியோதெம்ஸ் (Speleothems) என்று அழைக்கப்படுகின்றன.ட்ரேவர்டைன் (Travertine), டூஃபா (Tufa), சொட்டுபடிவுகள் (Drip stone) ஆகியவை ஸ்பீலியோதெம்ஸில் அடங்கும்.)

61) குகைகளின் கூரைகளில் இருந்து ஒழுகும் ___________ கலந்த நீர் நீர் ஆவியாகும் போது கல் விழுதுகள் போன்று காட்சி அளிக்கிறது.

A) கால்சியம் பை கார்பனேட்

B) கால்சியம் கார்பனேட்

C) சோடியம் கார்பனேட்

D) சோடியம் பை கார்பனேட்

(குறிப்பு – குகைகளின் கூரைகளில் இருந்து ஒழுகும் கால்சியம் கார்பனேட் கலந்த நீர் நீர் ஆவியாகும் போது அது கால்சைட் விழுதுகள் போன்று காட்சி அளிக்கிறது. இதில் கல் விழுது (Stalacite) என்று அழைக்கப்படுகிறது.)

62) கால்சியம் கார்பனேட் கலந்த நீர் தரையில் படிந்து மேல்நோக்கி வளர்வது எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A) கல்வளர்ச்சி

B) கல்முனை

C) கல்முளை

D) கல் எழுச்சி

(குறிப்பு – கால்சியம் கார்பனேட் கலந்த நீர் தரையில் படிந்து மேல்நோக்கி வளர்வது கல்முளை (Stalagmite) எனப்படுகிறது. கீழ் நோக்கி வளரும் கல்விழுதும், மேல் நோக்கி வளரும் கல்முளையும் ஒன்று சேர்ந்து செங்குத்து கல்தூணாக உருவாகிறது )

63) உயரமான பகுதிகளிலும், உயர் அட்சங்களிலும் நிரந்தரமாக பனி மூடி இருக்கும் பகுதியின் எல்லைக்கோடு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A) உறைபனிக்கோடு

B) பனிக்கோடு

C) பனிவயல்

D) இவை எதுவும் அல்ல

(குறிப்பு – உயரமான பகுதிகளிலும், உயர் அட்சங்களிலும் நிரந்தரமாக பனி மூடி இருக்கும் பகுதியின் எல்லைக்கோடு, உறைபனிக்கோடு (Snow Line) என்று அழைக்கப்படுகிறது. உயர் அச்சங்களுக்குச் செல்ல செல்ல உறைபனி கோட்டின் எல்லைக்கோடு கடல் மட்டத்திற்கு அருகில் காணப்படும்.)

64) பனி குவிந்து காணப்படும் இடம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A) பனிமலை

B) பனிக்குவியல்

C) பனிவயல்

D) பனிப்படலம்

(குறிப்பு – பனி குவியல் மண்டலத்திலிருந்து பெரிய அளவிலான பனிக்கட்டிகள் மெதுவாக நகர்வதே பனியாறு என்று அழைக்கப்படுகிறது. பனி குவிந்து காணப்படும் இடம் பனிவயல் (Snowfield) என்று அழைக்கப்படுகிறது.)

65) ஆல்ப்ஸ் பனிமலையில் உள்ள உறைபனி கோடு?

A) 2300 மீட்டர்

B) 2500 மீட்டர்

C) 2700 மீட்டர்

D) 2900 மீட்டர்

(குறிப்பு – பனிக்கட்டிகள் பனித்துகள்களாக உருமாறுவதை இறுகிய பனிமணிகள் (Firn/nerve) என்று அழைக்கின்றோம். இது மேலும் இறுகி திடமான பனிக்கட்டிகளாய் (Solid Glacial ice) உருவாகின்றன. ஆல்ப்ஸ்மலைகளில் உறைபனி கோடு 2700 மீட்டராகும்.)

66) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. பெரும் பரப்பளவில் உள்ள பனிக்கட்டிகள் அதன் அடிபாகத்தில் அழுத்தத்தை ஏற்படுத்துவதால் வெப்பம் உருவாகி பனிக்கட்டியின் அடியில் உருகி மெல்ல நகர தொடங்குகிறது.

II. இந்த நகர்வின் வேகம் சராசரியாக சில சென்டிமீட்டர் முதல் பல நூறு மீட்டர் வரை வேறுபடும்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – பெரும் பரப்பளவில் உள்ள பனிக்கட்டிகள் அதன் அடிபாகத்தில் அழுத்தத்தை ஏற்படுத்துவதால் வெப்பம் உருவாகி பனிக்கட்டியின் அடியில் உருகி மெல்ல நகர தொடங்குகிறது. இந்த நகர்விற்கான காரணங்கள் சரிவு, பனிக்கட்டியின் கன அளவு, அடர்த்தி, இன்னிக்கும் நிலத்தின் உராயும் தன்மை மற்றும் வெப்பம் போன்றவை ஆகும்.)

67) பனி ஆறுகள் உற்பத்தியாகும் இடங்களை அடிப்படையாகக் கொண்டு எத்தனை வகைப்படுத்தப்பட்டுள்ளது?

A) இரண்டு வகை

B) மூன்று வகை

C) நான்கு வகை

D) ஐந்து வகை

(குறிப்பு – பனி ஆறுகள் அவை உற்பத்தியாகும் இடங்களை அடிப்படையாகக் கொண்டு இரண்டு வகைப்படுத்தப்பட்டுள்ளது.அவை கண்டப்பனியாறு மற்றும் பள்ளத்தாக்கு பனியாறு என்பதாகும்.)

68) கீழ்கண்டவற்றுள் எந்த நிலத்தோற்றம் அரித்தல் மூலம் உருவாகிறது?

A) தொங்கும் பள்ளத்தாக்கு

B) பனியாறுகுடா

C) U-வடிவ பள்ளத்தாக்கு

D) இவை அனைத்தும்

(குறிப்பு – பனி ஆறுகள் ஒரு சிறந்த அரித்தல் காரணி ஆகும்.அரித்தலால் உருவாகும் நிலத்தோற்றங்கள் சர்க்கு, அரெட்டு, மேட்டர்ஹார்ன், U-வடிவ பள்ளத்தாக்கு, தொங்கு பள்ளத்தாக்கு, பனியாறுகுடா போன்றவையாகும். வகையான நிலத்தோற்றங்கள் பெரும்பாலும் சுவிட்சர்லாந்து, நார்வே போன்ற நாடுகளில் அதிகம் காணப்படுகின்றன.)

69) நாற்காலி போன்ற வடிவமுடைய பள்ளங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?

A) அரெட்டு

B) சர்க்கு

C) மேட்டர்ஹார்ன்

D) இவை எதுவும் அல்ல

(குறிப்பு – பனி ஆறுகள் மலைகளின் செங்குத்தான பக்க சுவர்களை அரிப்பதால் பள்ளங்கள் தோன்றுகின்றன. நாற்காலி போன்ற வடிவம் உடைய இந்த வகை பள்ளங்கள் சர்க்குகள் (Cirques) என்று அழைக்கப்படுகின்றன.)

70) மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட சர்க்குகள் இணைந்து உருவாகும் பிரமிடு போன்ற வடிவத்தை எவ்வாறு அழைப்பர்?

A) அரெட்டு

B) சர்க்கு

C) மேட்டர்ஹார்ன்

D) கூம்புகள்

(குறிப்பு – மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட சர்க்குகள் (Cirques) இணையும் போது கூர்மையான பக்கங்களை உடைய சிகரம் போன்ற பிரமிடு வடிவத்தை பெறுகிறது. இந்த வகை நிலத்தோற்றம் மேட்டர்ஹார்ன் (Matterhorn) என்று அழைக்கப்படுகிறது.)

71) கீழ்க்கண்டவற்றுள் எது கத்தி முனை போன்ற கூரிய வடிவத்துடன் காட்சியளிக்கும்?

A) அரெட்டு

B) சர்க்கு

C) மேட்டர்ஹார்ன்

D) கூம்புகள்

(குறிப்பு – இரு சர்க்குகள் எதிர் பக்கங்களில் அமையும் போது அதன் பின் மற்றும் பக்கச்சுவர்கள் அரிக்கப்படுகின்றன. இவ்வாறு அரிக்கப்பட்ட சர்க்குகள் கத்தி முனை போன்ற கூர்மையான வடிவத்துடன் காட்சியளிக்கும். இது அரெட்டு (Arete) என்று அழைக்கப்படுகிறது.)

72) கடலில் பகுதியாக அமிழ்ந்திருக்கும் பனியாறு பள்ளத்தாக்குகள் எவ்வாறு அழைக்கப்படும்?

A) எஸ்கர்

B) பனியாறு குடா

C) ட்ரம்ப்ளின்

D) எல்லாமே தவறு

(குறிப்பு – கடலில் பகுதியாக அமிழ்ந்திருக்கும் பனியாறு பள்ளத்தாக்குகள், பனியாறு குடாக்கள் (Fjord) என்று அழைக்கப்படும். முதன்மை பனி ஆற்றினால் உருவாக்கப்பட்ட பள்ளத்தாக்கின் மீது அமைந்திருக்கும் துணை பனியாற்றின் பள்ளத்தாக்கு தொங்கும் பள்ளத்தாக்கு ஆகும்.)

73) பனியாற்று படிவுகள் கீழ்க்கண்டவற்றுள் எவற்றை கொண்டிருக்கும்?

I. கூலாங்கற்கள்

II. நுண்ணிய படிவுகள்

III. பாறை துகள்கள்

A) I, II மட்டும்

B) II, III மட்டும்

C) I, III மட்டும்

D) இவை அனைத்தும்

(குறிப்பு – பனி ஆறுகளால் அடித்துக் கொண்டுவரப்பட்ட நுண்ணிய படிவுகள், பாறை துகள்கள், கூலாங்கற்கள் போன்ற கலவையால் ஆன படிவுகள்,பனியாற்று படிவுகள் என்று அழைக்கப்படுகின்றன.)

74) பனியாற்று படிவுகளால் கீழ்க்கண்டவற்றுள் எது உருவாகிறது?

I. மொரைன்கள்

II. ட்ரம்ப்ளின்கள்

III. எஸ்கர்கள்

A) I, II மட்டும்

B) II, III மட்டும்

C) I, III மட்டும்

D) இவை அனைத்தும்

(குறிப்பு – பனி ஆறுகளால் அடித்து வரப்பட்ட படிவுகள் தாழ்நிலப் பகுதிகளில் படிய வைக்கப்படுவதால் மொரைன்கள் (Moraines), ட்ரம்ப்ளின்கள் (Drumplins), எஸ்கர்கள் (Eskers), கேம்ஸ் (Kames) மற்றும் பனி ஆற்று வண்டல் சமவெளிகள் தோற்றுவிக்கப்படுகின்றன.)

75) கீழ்காணும் மொரைன் வகைகளில் எது சரியானது?

A) படுகை மொரைன்

B) விளிம்பு மொரைன்

C) பக்க மொரைன்

D) எல்லாமே சரி

(குறிப்பு – பள்ளத்தாக்கு அல்லது கண்ட பனியாறுகளால் படிய வைக்கப்பட்டு உருவாக்கப்படும் நிலத்தோற்றங்கள் மொரைன்கள் (Moraines) என்று அழைக்கப்படுகின்றன. இவை பல்வேறு வடிவங்களிலும், அளவிலும் காணப்படும். இவை படுகை மொரைன், விளிம்பு மொரைன், பக்க மொரைன் என பல வகையாக பிரிக்கப்பட்டுள்ளன.)

76) கவிழ்த்து வைக்கப்பட்ட மிகப்பெரிய கரண்டியை போல காட்சியளிப்பது எது?

A) மொரைன்

B) எஸ்கர்

C) டிரம்ப்ளின்

D) பனியாற்று வண்டல் சமவெளி

(குறிப்பு – கவிழ்த்து வைக்கப்பட்ட மிகப்பெரிய கரண்டியை போன்றோ அல்லது பாதியாக வெட்டப்பட்ட முட்டையைப் போன்று காட்சியளிக்கும் மொரைன்கள் ட்ரம்ப்ளின்கள் (Drumlin) என்று அழைக்கப்படுகின்றன.)

77) பனியாறுகள் கொண்டுவரும் கூழாங்கற்கள், சரளைக் கற்கள் போன்றவை குன்று போல பனியாற்றுக்கு இணையாக படிய வைக்கப்படுவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A) மொரைன்

B) எஸ்கர்

C) டிரம்ப்ளின்

D) பனியாற்று வண்டல் சமவெளி

(குறிப்பு – பனி ஆறுகள் உருகுவதால் அவை கொண்டுவரும் கூழாங்கற்கள், சரளைக்கற்கள் மற்றும் மணல் ஒரு நீண்ட குறுகிய தொடர் குன்று போன்று பனியாற்றுக்கு இணையாக படியவைக்கப்படுகிறது. இவ்வாறு படியவைக்கப்படும் குறுகிய தொடர் குன்றுகளே எஸ்கர்கள் என்று அழைக்கப்படுகின்றன.)

78) காற்றின் முக்கிய செயல் கீழ்க்கண்டவற்றுள் எது?

A) அரித்தல்

B) கடத்துதல்

C) படியவைத்தல்

D) இம்மூன்றும்

(குறிப்பு – பூமியின் மேற்பரப்பில் கிடைமட்டமாக நகரும் வாயுவே காற்று எனப்படுகிறது. புவி மேற்பரப்பில் வறண்ட பிரதேசங்களில் காற்றின் செயல்பாடு அதிகமாக காணப்படும். அரித்தல், கடத்துதல் மற்றும் படிய வைத்தல் காற்றின் முக்கிய செயல்களாகும்.)

79) காற்றின் அரித்தல், கடத்தல் மற்றும் படியவைத்தல் செயல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A) ஏரோலியன் செயல்பாடு

B) ஏயோலியன் செயல்பாடு

C) ஏர் செயல்பாடு

D) எல்லாமே தவறு

(குறிப்பு – புவி மேற்பரப்பில் வறண்ட பிரதேசங்களில் காற்றின் செயல்பாடு அதிகமாக காணப்படும். அரித்தல், கடத்துதல் மற்றும் படிய வைத்தல் காற்றின் முக்கிய செயல்களாகும். காற்றின் இந்த செயல்பாடு, ஏயோலியன் செயல்பாடு எனவும் அழைக்கப்படுகிறது.)

80) கீழ்க்கண்டவற்றுள் எது காற்று அரிப்பதால் உருவாகும் நிலத்தோற்றம் ஆகும்?

A) இன்சல்பர்க்

B) காளான்பாறை

C) யார்டங்

D) இது அனைத்தும்

(குறிப்பு – காற்று அடிப்பதால் உருவாக்கப்படும் நிலத்தோற்றங்கள் காளான் பாறை (Mushroom rock), இன்சல்பர்க் (Inselberg) மற்றும் யார்டங் (Yardang) போன்றவையாகும்)

81) காளான் பாறைகளின் வேறு பெயர் என்ன?

A) கூம்பு பாறை

B) பீடப்பாறை

C) செங்குத்து பாறை

D) எல்லாமே தவறு

(குறிப்பு – மென் மற்றும் கடின பாறைகளைக் கொண்ட பாறை அடுக்குகளின் அடிப் குதியில் காணப்படும் மென்பாறைகள் காற்றினால் தொடர்ந்து அரிக்கப்படும்போது அப்பாறைகள், காளான் போன்ற வடிவத்தைப் பெறுகின்றன. இவ்வாறு அரிக்கப்பட்டு உருவான பாறைகள் காளான் பாறைகள் அல்லது பீட பாறைகள் என அழைக்கப்படுகின்றன.)

82) இந்தியாவில் காளான் பாறைகள் எந்த மாநிலத்தில் காணப்படுகின்றன?

A) ராஜஸ்தான்

B) மத்திய பிரதேசம்

C) மகாராஷ்டிரா

D) பீகார்

(குறிப்பு – மென் மற்றும் கடின பாறைகளைக் கொண்ட பாறை அடுக்குகளின் அடிப் குதியில் காணப்படும் மென்பாறைகள் காற்றினால் தொடர்ந்து அரிக்கப்படும்போது அப்பாறைகள், காளான் போன்ற வடிவத்தைப் பெறுகின்றன. இவ்வாறு அரிக்கப்பட்டு உருவான பாறைகள் காளான் பாறைகள் அல்லது பீட பாறைகள் என அழைக்கப்படுகின்றன. இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் காளான்பாறைகள் அதிகளவில் காணப்படுகின்றன)

83) இன்சல்பர்க் என்பது எந்த மொழி வார்த்தை ஆகும்?

A) பிரெஞ்சு

B) ஜெர்மன்

C) ஆங்கிலம்

D) ஸ்பானிஷ்

(குறிப்பு – இன்சல்பர்க் (Inselberg) என்பது ஒரு ஜெர்மானிய வார்த்தையாகும். இதன் பொருள் தீவு மலை என்பதாகும். வறண்ட பிரதேசங்களில் காணப்படும் தீப்பாறைகள் காற்றின் அரிப்புக்கு உட்படாமல் சுற்றி இருக்கும் பகுதியை விட தனித்து, உயர்ந்து காணப்படும் நிலத்தோற்றம் இன்சல்பர்க் என்று அழைக்கப்படுகிறது.)

84) ஆஸ்திரேலியாவில் உள்ள எய்ர்ஸ் பாறை கீழ்காணும் எந்தவகையான பாறைக்கு எடுத்துக்காட்டாகும்?

A) இன்சல்பர்க்

B) காளான்பாறை

C) யார்டங்

D) இது எதுவும் அல்ல

(குறிப்பு – வறண்ட பிரதேசங்களில் காணப்படும் தீப்பாறைகள் காற்றின் அரிப்புக்கு உட்படாமல் சுற்றி இருக்கும் பகுதியை விட தனித்து, உயர்ந்து காணப்படும் நிலத்தோற்றம் இன்சல்பர்க் என்று அழைக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் உள்ள உலுரு அல்லது எய்ர்ஸ் பாறை இதற்கான எடுத்துக்காட்டாகும்.)

85) காற்றினால் அரிக்கப்படாமல் கடினப்பாறைகள் ஒழுங்கற்ற முகடுகள் போல காட்சியளிப்பது எவ்வாறு?

A) இன்சல்பர்க்

B) காளான்பாறை

C) யார்டங்

D) இது எதுவும் அல்ல

(குறிப்பு – வறண்ட பிரதேசங்களில் செங்குத்தாக அமைந்து இருக்கும் சில பாறைகள் கடின மற்றும் மென் பாறை என மாறி மாறி அமைந்திருக்கும். இந்த வரிசையில் மென் பாறைகள் காற்றினால் எளிதில் அரிக்கப்படுகிறது. காற்றினால் அர்க்கப்படாத கடினப் பாறைகள் ஒழுங்கற்ற முகடுகள் (Crests) போன்று காட்சியளிக்கும். இந்தவகை நிலத்தோற்றங்கள் யார்டங்குகள் என்று அழைக்கப்படும்.)

86) கீழ்க்கண்டவற்றுள் எது காற்றின் படியவைத்தலால் உருவாக்கப்படும் நிலத்தோற்றம் ஆகும்?

A) மணல் மேடு

B) குறுக்கு மணல்மேடு

C) நீண்ட மணல்மேடு

D) இவை அனைத்தும்

(குறிப்பு – புதர்கள், காடுகள் மற்றும் பாறைகள் காற்று வீசும் திசைக்கு குறுக்கே அமைந்தால் அதன் வேகத்தை தடை செய்கிறது. இத்தடைகள் காற்றினால் கடத்தப்பட்ட படிவுகளை காற்று வீசும் பக்கத்திலும் அதன் மறு பக்கத்திலும் படிய வைக்கிறது. அதனால் மணல் குன்று, பர்கான் மற்றும் காற்றடி வண்டல் போன்றவை உருவாகின்றன.)

87) கீழ்கண்டவற்றுள் எது மணல்மேடு வகைகளுள் அல்லாதது ஆகும்?

A) பர்கான்

B) நீண்ட மணல் மேடுகள்

C) குறுக்கு மணல் மேடுகள்

D) இவை அனைத்தும்

(குறிப்பு – புதர்கள், காடுகள் மற்றும் பாறைகள் காற்று வீசும் திசைக்கு குறுக்கே அமைந்தால் அதன் வேகத்தை தடை செய்கிறது. இத்தடைகள் காற்றினால் கடத்தப்பட்ட படிவுகளை காற்று வீசும் பக்கத்திலும் அதன் மறு பக்கத்திலும் படிய வைக்கிறது. இவ்வாறு குன்று அல்லது மேடாக காணப்படும் நிலத்தோற்றம் மணல் மேடு என்று அழைக்கப்படுகிறது. பர்கான், குறுக்கு மணல்மேடு மற்றும் நீண்ட மணல்மேடுகள் ஆகியவை அதன் வகைகள் ஆகும்.)

88) கீழ்க்கண்டவற்றுள் எது பிறை வடிவத்தில் தடித்துக் காணப்படும் மணல் மேடு ஆகும்?

A) பர்கான்

B) குறுக்கு மணல்மேடு

C) நீண்ட மணல்மேடு

D) இது எதுவும் அல்ல

(குறிப்பு – பிறை வடிவத்தில் தனித்துக் காணப்படும் மணல் மேடுகள் பர்கான்கள் என அழைக்கப்படுகின்றன. அவை காற்று வீசும் பக்கத்தில் மென் சரிவையும், காற்று வீசும் திசைக்கு எதிர் பக்கத்தில் வன்சரிவையும் கொண்டிருக்கும்.)

89) கீழ்கண்டவற்றுள் எது சமச்சீரற்ற வடிவத்தில் காணப்படும்?

A) பர்கான்

B) குறுக்கு மணல்மேடு

C) நீண்ட மணல்மேடு

D) இது எதுவும் அல்ல

(குறிப்பு – குறுக்கு மணல்மேடுகள் சமச்சீரற்ற வடிவத்தில் காணப்படும். காற்று வேகமாகவும், மிதமாகவும் மாறி மாறி ஒரே திசையில் வீசும் போது குறுக்கு மணல்மேடுகள் (Transverse dune) உருவாகின்றன.)

90) கீழ்க்கண்டவற்றுள் எது சகாராவில் செய்ப்ஸ் (Seifs) என்று அழைக்கப்படுகிறது?

A) பர்கான்

B) குறுக்கு மணல்மேடு

C) நீண்ட மணல்மேடு

D) இது எதுவும் அல்ல

(குறிப்பு – நீண்ட மணல்மேடுகள் குறுகிய மணல் தொடர்களாக நீண்டு காணப்படும். இம்மணர் தொடர்கள் காற்று வீசும் திசைக்கு இணையாக காணப்படும்.இவை சகாராவில் செய்ப்ஸ் (Seifs) என்று அழைக்கப்படுகிறது.)

91) கீழ்க்காணும் எந்த இடங்களில் காற்றடி வண்டல் காணப்படுகிறது?

I. வடக்கு மற்றும் மேற்கு சீனா

II. அர்ஜென்டைனாவின் பாம்பாஸ்

III. உக்ரைன்

A) I, II மட்டும்

B) II, III மட்டும்

C) I, III மட்டும்

D) இவை அனைத்தும்

(குறிப்பு – பரந்த பிரதேசத்தில் படிய வைக்கப்படும் மென்மையான மற்றும் நுண்ணிய படிவுகளே காற்றடி வண்டல் எனப்படும்.காற்றடி வண்டல் காணப்படும் இடங்கள், வடக்கு மற்றும் மேற்கு சீனா, அர்ஜென்டைனாவின் பாம்பாஸ், உக்ரைன் மற்றும் வட அமெரிக்காவில் மிஸிஸிபி பள்ளத்தாக்கு.)

92) மிக கனமான காற்றடி வண்டல் பீடபூமி எந்த நாட்டில் அமைந்துள்ளது?

A) சீனா

B) தென் ஆப்பிரிக்கா

C) அமெரிக்கா

D) ரஷ்யா

(குறிப்பு – சீனாவில் உள்ள காற்றடி வண்டல் பீடபூமிதான் மிக கனமான காற்றடி வண்டல் வடிவாகும்.இதன் உயரம் சுமார் 335 மீட்டராகும்.)

93) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. கடல் நீர் மேல் எழும்பி சரிவதே கடலலை என அழைக்கப்படுகிறது. இது மேல் வளைவையும், கீழ் வளைவையும் கொண்டிருக்கும்.

II. அரித்தல் கடத்தல் மற்றும் படிய வைத்தல் கடலலைகளின் முக்கிய செயலாகும்,

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – கடல் நீர் மேல் எழும்பி சரிவது கடல் அலை என அழைக்கப்படுகிறது. இது மேல் வளைவையும் கீழ் விளைவையும் கொண்டிருக்கும். கடல் அலை, நில வாட்டம் அமைக்கும் முக்கிய காரணியாகும். அரித்தல், கடத்தல் மற்றும் படிய வைத்தல் கடலலைகளின் முக்கிய செயலாகும்.)

94) கடல் அலை அரிப்பால் உருவாக்கப்படும் நிலத்தோற்றங்கள் கீழ்க்கண்டவற்றுள் எது?

I. கடல் ஓங்கல்

II. கடல் வளைவு

III. கடற்கரை மணல்

IV. கடற்கரை மணல் திட்டு

A) I, II, III மட்டும்

B) II, III, IV மட்டும்

C) I, III, IV மட்டும்

D) இவை அனைத்தும்

(குறிப்பு – கடல் ஓங்கல், அலை அரிமேடை, கடல் குகை, கடல் வளைவு, கடல் தூண், கடற்கரை மணற்திட்டு மற்றும் நீண்ட மணல்திட்டு போன்றவை கடல் அரிப்பால் உருவாக்கப்படும் நிலத்தோற்றங்கள் ஆகும்.)

95) கடல் அலைகள் தொடர்ந்து கடல் ஓங்கல்களின் மீது மோதி தோன்றும் துவாரம் போன்ற அமைப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A) கடல் தூண்

B) கடல் அரிமேடை

C) கடல் குகை

D) கடற்கரை மணல் திட்டு

(குறிப்பு – கடல் அலைகள் தொடர்ந்து கடல் ஓங்கல்களின் மீது மோதுவதால் அடிப்பகுதி அரிக்கப்பட்டு துவாரம் போன்ற அமைப்பை ஏற்ப்படுத்துகின்றன. இவை கடல் குகைகள்(sea Caves) என அழைக்கப்படுகின்றன)

96) கடல் வளைவு கீழ்காணும் எந்த இடத்தில் காணப்படுகிறது?

A) ராமேஸ்வரம்

B) அந்தமான்

C) கன்னியாகுமாரி

D) விசாகப்பட்டினம்

(குறிப்பு – அருகருகிலுள்ள இரு கடல் குகைகளின் நீட்டு நிலங்கள் மேலும் அரிக்கப்பட்டு அவை இணைந்து ஒரு வளைவு போன்ற அமைப்பை ஏற்படுத்துகின்றன. இவ்வகையான வளைவுகள் கடல் வளைவுகள் என அழைக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக அந்தமான் நிக்கோபார் தீவில் உள்ள, நீல் தீவின் கடல் வளைவு.)

97) கீழ்க்கண்டவற்றுள் எது அலை அரிமேடை என்பதன் வேறு பெயராகும்?

A) பென்ச்

B) சமவெளி

C) திடல் / திட்டு

D) இவை அனைத்தும்

(குறிப்பு – கடல் ஓங்கல்களின் மீது அலைகள் மோதுவதால் சற்று உயரத்தில் அரித்தல் ஏற்பட்டு அலை அரிமேடை தோன்றுகிறது. அலை அரிமேடை பென்ச், திட்டு (Shelf), திடல் (Terrace), சமவெளி (Plain) எனவும் அழைக்கப்படுகின்றன.)

98) இந்தியாவில் காணப்படும் கடற்கரைகளில் சரியானது எது?

A) ஜூஹு கடற்கரை

B) மெரினா கடற்கரை

C) பூரி கடற்கரை

D) எல்லாமே சரி

(குறிப்பு – கடல் அலைகளால் அரிக்கப்பட்ட மணல் மற்றும் சரளைக்கற்கள் கடலோரத்தில் படிய வைக்கப்படுவதே கடற்கரையாகும். இது கடல் அலைகளின் மிக முக்கியமான ஆக்கச்செயலாகும். மும்பையில் உள்ள ஜூஹூ கடற்கரை, சென்னையின் மெரினா கடற்கரை மற்றும் ஒடிசாவின் பூரி கடற்கரை ஆகியவை இவற்றுக்கு எடுத்துக்காட்டாகும்.)

99) நீண்ட மணல் திட்டை (Spit) கீழ்காணும் எந்த இடத்தில் காண முடியும்?

A) காக்கிநாடா

B) தூத்துக்குடி

C) விசாகப்பட்டினம்

D) மங்களூர்

(குறிப்பு – மணல் திட்டின் ஒரு முனை நிலத்தோடு இணைந்தும், மறுமுனை கடலை நோக்கி நீண்டும் காணப்படுவது நீண்ட மணல் திட்டு (Spit) என அழைக்கப்படும். நீண்ட மணல் திட்டுக்கள் பொதுவாக ஓத பொங்கு முகங்களில் காணப்படும். இவ்வகை நிலத்தோற்றம் ஆந்திராவில் உள்ள காக்கிநாடாவில் காணமுடியும்.)

100) கடற்கரை ஓரத்தில் கடலை நோக்கி நீண்டு இருக்கும் நிலத்தோற்றம் எவ்வாறு அழைக்கப்படும்?

A) நீட்டு நிலம்

B) நீட்டு கடற்கரை

C) நீட்டு மண்

D) எல்லாமே தவறு

(குறிப்பு – கடற்கரை ஓரத்தில் கடலை நோக்கி நீண்டு இருக்கும் நிலத்தோற்றம் நீட்டு நிலம் என அழைக்கப்படும். கடற்கரையில் மணல் படிவுகளால் ஆன நீண்ட நிலத்தோற்றம் மணல்திட்டு என அழைக்கப்படும். இந்த மணல் திட்டுகள் பெரும்பாலும் கடற்கரைக்கு இணையாக காணப்படும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!