கவிதையியல் 11th Advanced Tamil Unit 1 Questions
11th Advanced Tamil Unit 1 Questions
1] கவிதையியல்
1) கூற்று: ஒரு மொழியின் மாண்பும் செறிவும் அழகும் அம்மொழியின் கவிதையைக் கொண்டே மதிப்பிடப்படுகின்றன.
காரணம்: கவிதை ஒரு மொழியின் மேன்மையான வெளிப்பாடு.
A) கூற்று சரி, காரணம் தவறு
B) கூற்று தவறு, காரணம் சரி
C) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது
D) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை
விளக்கம்: கவிதை ஒரு மொழியின் மேன்மையான வெளிப்பாடு. மொழியின் அனைத்துக்கூறுகளையும் கொண்டு உருவாகும் கலை கவிதையைப்போல் வேறேதுமில்லை. அதனால்தான் ஒரு மொழியின் மாண்பும் செறிவும் அழகும் அம்மொழியின் கவிதையைக் கொண்டே மதிப்பிடப்படுகின்றன.
2) தவறான கூற்றை தெரிவு செய்க
A) அகம், புறம் சார்ந்த சங்ககாலக் கவிதைகள் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை என நூல்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
B) பாண்டியன் நெடுஞ்செழியனுக்குக் குடபுலவியனார் அறிவுரை கூறியது – புறநானூறு
C) தலைவி மீதான தலைவனின் அன்பும், சிறகிழந்த நாரையாய்த் தலைவிக்காக அவன் வருந்துவது – குறுந்தொகை
D) சங்ககாலத்தில் எழுந்த பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் வாழ்வியல் அறங்களைக் கற்பிப்பவை
விளக்கம்: சங்கம் மருவிய காலத்தில் எழுந்த பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் வாழ்வியல் அறங்களைக் கற்பிப்பவை. இவை வெண்பா என்னும் யாப்பு வகைமையில் அமைந்தவை. உலகளாவிய அறிஞர்களால் ஒப்பற்ற நூலென ஏற்றுக்கொள்ளப்பட்ட திருக்குறள், கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும்.
3) “இளமையும் நில்லா யாக்கையும் நில்லா
வளவிய வான்பெரும் செல்வமும் நில்லா” என்ற வரிகள் இடம்பெற்ற நூலின் பெயர் என்ன?
A) சீவகசிந்தாமணி
B) மணிமேகலை
C) சிலப்பதிகாரம்
D) கம்பராமாயணம்
விளக்கம்: “இளமையும் நில்லா யாக்கையும் நில்லா
வளவிய வான்பெரும் செல்வமும் நில்லா
புத்தேள் உலகம் புதல்வரும் தாரார்
மிக்க அறமே விழுத்துணை ஆவது”- மணிமேகலை
மாந்தருக்கு அறமே நிலையானது என்பது மேற்காணும் செய்யுள் மூலம் உணர்த்தப்படுகிறது.
மனிதருக்கு இளமை, உடல், செல்வம், புதல்வர் இவையெல்லாம் நிலையில்லை. ஆனால் அறம் நிலையானது என்று மேற்காணும் மணிமேகலை காப்பியத்தில் சிறைசெய்காதையின் வரிகள் உணர்த்துகிறது.
4) பொருந்தாத ஒன்றை தெரிவு செய்க.
A) பள்ளு
B) கோவை
C) உலா
D) அந்தாதி
விளக்கம்: பக்திவழியே பயணித்துக்கொண்டிருந்த தமிழ்க்கவிதைகள் பின்னர், சிற்றிலக்கியங்கள் என்னும் விமர்சனப்பாங்கு கொண்ட புதிய வடிவில் மக்களிடம் பேசத்தொடங்கின.
1. கோவை, உலா, அந்தாதி போன்றவை கடவுள், அரசன், சிற்றரசர்கள், வள்ளல்களைப் புகழ்ந்தன.
2. பள்ளி, குறவஞ்சி போன்றவை எளிய மக்களின் வாழ்வியலை எடுத்தியம்பின.
5) கூற்றுகளை ஆராய்க.
1. உரையோடு கலந்த கவிதைகளை அறிமுகம் செய்தவை காப்பியக் கவிதைகள்.
2. மாந்தருக்கு அறமே நிலையானது என்பதைக் குறிக்கும் காப்பியம் சிலப்பதிகாரம் ஆகும்
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: மன்னர்களைப் பாடிய காலம் மாறிக் குடிமக்களைக் கவிதையின் பாடுபொருளாய்க் கொண்டெழுந்தவை தமிழ்க்காப்பியங்கள். காப்பியக்கவிதைகள் காதல், வீரம், அறம் என அனைத்தையும் பாடிச் செல்கின்றன. உரையோடு கலந்த கவிதைகளை அறிமுகம் செய்தவை இவை. பிறப்பின் வேற்றுமையொழிப்பு, பசியின்றி வாழ்தல், வாழ்வின் நிலையாமை எனக் காப்பியக் கவிதையின் தளம் பரந்துபட்டது. மாந்தருக்கு அறமே நிலையானது என்பதைக் குறிக்கும் காப்பியம் மணிமேகலை ஆகும்.
6) தமிழ்ச்சமூகத்தின் பாரம்பரியம் மிக்கப் பண்பாட்டின் வேர்கள், கீழ்க்காணும் எதன் வழியாகவே கிளை விரிக்கின்றன?
A) கதை
B) கவிதை
C) நாட்டுப்புறப்பாடல்
D) இலக்கியம்
விளக்கம்: கவிதை ஒரு மொழியின் மேன்மையான வெளிப்பாடு. மொழியின் அனைத்துக்கூறுகளையும் கொண்டு உருவாகும் கலை கவிதையைப்போல் வேறேதுமில்லை. அதனால்தான் ஒரு மொழியின் மாண்பும் செறிவும் அழகும் அம்மொழியின் கவிதையைக் கொண்டே மதிப்பிடப்படுகின்றன. தமிழ்ச்சமூகத்தின் பாரம்பரியம் மிக்கப் பண்பாட்டின் வேர்கள், தமிழ்க் கவிதைகளின் வழியாகவே கிளை விரிக்கின்றன.
7) புலவர் பெருமக்கள் தம் கவிப்புலமையைக் காட்ட நல்லதொரு களமாகத் திகழ்ந்தது எது?
A) நாட்டுப்புறப்பாடல்கள்
B) பக்திப்பாடல்கள்
C) தனிப்பாடல்கள்
D) மரபுக்கவிதைகள்
விளக்கம்: புவலர் பெருமக்கள் தம் கவிப்புலமையைக் காட்ட நல்லதொரு களமாகத் தனிப்பாடல்கள் பயன்பட்டன. சிலேடை, விடுகதை, சொற்புதிர் போன்ற சிந்தைக்கு விருந்தாகும் வகையில் புலவர் பெருமக்கள் பாடிச்சென்ற பாடல்கள் தனிப்பாடற் திரட்டுகளாக நமக்குக் கிடைக்கின்றன.
8) கூற்றுகளை ஆராய்க.
1. தமிழ் யாப்பிலக்கணத்தின்படி எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை ஆகிய கூறுகளுடன் அமைந்த பாவினங்களை மரபுப்பாடல் என்கிறோம்.
2. பாரதியார்தாம் முதன்முதலில் தமிழ்க்கவிதைகளில் புதிய முயற்சிகளை மேற்கொண்டார்.
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: 1. தமிழ் யாப்பிலக்கணத்தின்படி எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை ஆகிய கூறுகளுடன் அமைந்த பாவினங்களை மரபுப்பாடல் என்கிறோம்.
2. பாரதியார்தாம் முதன்முதலில் தமிழ்க்கவிதைகளில் புதிய முயற்சிகளை மேற்கொண்டார்.
9) காலத்திற்குக் காலம் செய்யுள் வடிவில் மாற்றங்கள் நேரலாம். தமிழ்மொழிவளர்ச்சிக்கு இத்தகைய மாற்றங்கள் பயன்படுமானால் அவற்றை ஏற்றுக்கொள்வதில் தவறில்லை என்று கருதியவர் யார்?
A) பாரதியார்
B) பாரதிதாசன்
C) கண்ணதாசன்
D) தொல்காப்பியர்
விளக்கம்: காலத்திற்கு காலம் செய்யுள் வடிவில் மாறறங்கள் நேரலாம். தமிழ்மொழிவளர்ச்சிக்கு இத்தகைய மாற்ற்ஙகள் பயன்படுமானால் அவற்றை ஏற்றுக் கொள்வதில் தவறில்லை என்று கருதிய தொல்காப்பியர்,
“விருந்தே தானும் புதுவது புனைந்த
யாப்பின் மேற்றே”
என்று ‘விருந்து’ என்பதைப் ‘புதுமை’ என்னும் பொருளில் கூறியுள்ளார்.
10) மக்களாட்சித் தத்துவங்களை தமது பாடல்களில் வலியுறுத்தியவர் யார்?
A) பாரதியார்
B) ந.பிச்சமூர்த்தி
C) பாரதிதாசன்
D) கவிமணி
விளக்கம்: எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும். புவியை நடத்து, பொதுவில் நடத்து போன்ற பொதுவுடைமைக் கருத்துகளையும் மக்களாட்சித் தத்துவங்களையும் தமது பாடல்களில் வலியுறுத்தியவர் பாரதிதாசன் ஆவார்.
11) தமிழில் புதுக்கவிதைத் தொகுப்பாகப் ‘புதுக்குரல்கள்’ என்னும் நூல் வெளிவந்தது. இக்கவிதைத் தொகுப்பு உருவத்திலும் உள்ளடகத்திலும் கீழ்க்காணும் யாரைப் பின்பற்றியது?
A) பாரதிதாசன்
B) பாரதியார்
C) ந.பிச்சமூர்த்தி
D) வாணிதாசன்
விளக்கம்: தமிழில் புதுக்கவிதைத் தொகுப்பாகப் ‘புதுக்குரல்கள்’ என்னும் நூல் வெளிவந்தது. இக்கவிதைத் தொகுப்பு உருவத்திலும் உள்ளடகத்திலும் பாரதியைப் பின்பற்றியது. 24 கவிஞர்களால் எழுதப்பட்ட 63 கவிதைகளைக் கொண்டது.
12)“நீர்இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே” – என்ற பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
A) குறுந்தொகை
B) புறநானூறு
C) நற்றிணை
D) அகநானூறு
விளக்கம்: எட்டுத்தொகையில் ஒன்றான புறநானூற்றில் பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனுக்குக் குடபுலவியனார் அறிவுரை கூறுவதாக அமைந்த ஒரு புறப்பாடல்,
“……………………………….
நீர்இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே
உண்டி முதற்றே உணவின் பிண்டம்
உணவெனப் படுவது நிலத்தொடு நீரே
நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு
உடம்பும் உயிரும் படைத்திசி னோரோ” – புறநானூறு.
13) பொருந்தாதவரை தேர்வு செய்க.
A) வல்லிக்கண்ணன்
B) வேணுகோபாலன்
C) சி.மணி
D) புதுமைப்பித்தன்
விளக்கம்: மயன், சிட்டி, வல்லிக்கண்ணன், வேணுகோபாலன், டி.கே.துரைசாமி(நகுலன்), தருமுசிவராமு(பிரமிள்), சி.மணி, சுந்தரராமசாமி(பசுவய்யா), எஸ்.வைத்தீஸ்வரன் போன்றோர் எழுத்து இதழில் எழுதியவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள்.
ந.பிச்சமூர்த்தி, கு.ப.ராசகோபலன், க.நா.சுப்பிரமணின், புதுமைப்பித்தன் – மணிக்கொடி இதழ்
14) கூற்றுகளை ஆராய்க.
1. தெரிந்த பொருளைக் கொண்டு தெரியாத பொருளை உணர்த்துவது உவமை ஆகும்.
2. உவமையும் பொருளும் வேறுவேறல்ல, ஒன்றே எனக்கருதுமாறு செறிவுற அமைவது உருவகமாகும்.
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: 1. தெரிந்த பொருளைக் கொண்டு தெரியாத பொருளை உணர்த்துவது உவமை ஆகும்.
2. உவமையும் பொருளும் வேறுவேறல்ல, ஒன்றே எனக்கருதுமாறு செறிவுற அமைவது உருவகமாகும்.
15) கூற்று: ஒரு மொழியின் மாண்பும் செறிவும் அழகும் அம்மொழியின் கவிதையைக் கொண்டே மதிப்பிடப்படுகின்றன.
காரணம்: மொழியின் அனைத்துக்கூறுகளையும் கொண்டு உருவாகும் கலை கவிதையைப்போல் வேறேதுமில்லை.
A) கூற்று சரி, காரணம் தவறு
B) கூற்று தவறு, காரணம் சரி
C) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது
D) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை
விளக்கம்: கவிதை ஒரு மொழியின் மேன்மையான வெளிப்பாடு. மொழியின் அனைத்துக்கூறுகளையும் கொண்டு உருவாகும் கலை கவிதையைப்போல் வேறேதுமில்லை. அதனால்தான் ஒரு மொழியின் மாண்பும் செறிவும் அழகும் அம்மொழியின் கவிதையைக் கொண்டே மதிப்பிடப்படுகின்றன.
16) கூற்றுகளை ஆராய்க.
1. உவமை, உருவகம் என்பன மேன்மேலும் இறுகிய நிலையில்தான் படிமம் தோன்றுகிறது.
2. பொருள் உணர்த்தும் முறைகளில் படிமம் முதலிடம் பெறுகிறது.
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: 1. உவமை, உருவகம் என்பன மேன்மேலும் இறுகிய நிலையில்தான் படிமம் தோன்றுகிறது.
2. பொருள் உணர்த்தும் முறைகளில் உவமை முதலிடம் பெறுகிறது.
17) புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் என்ற கவிதைக்காக எப்போது சாகித்திய அகாதெமி பரிசு வழங்கப்பட்டது?
A) 1976
B) 1978
C) 1988
D) 1986
விளக்கம்: புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் – வல்லிக்கண்ணன் – 1978.
18) கூற்றுகளை ஆராய்க.
1. தனித்தனிப் புலவர்களால் பல்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்ட பாடல்களைத் தனிப்பாடல் என்கிறோம்.
2. சமுதாயத்தின் நாகரிகம், பண்பாடு, கலை ஆகியவற்றை வெளிப்படுத்தும் காலக்கண்ணாடியே நாட்டுப்புறப் பாடல்கள்.
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: 1. தனித்தனிப் புலவர்களால் பல்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்ட பாடல்களைத் தனிப்பாடல் என்கிறோம்.
2. சமுதாயத்தின் நாகரிகம், பண்பாடு, கலை ஆகியவற்றை வெளிப்படுத்தும் காலக்கண்ணாடியே நாட்டுப்புறப் பாடல்கள்.
19) ஈழத்துக் கவிஞர் மகாகவி எழுதிய லிமெரிக் கவிதைகளினால் பெரிதும் கவரப்பட்ட கவிஞர் யார்?
A) புதுமைப்பித்தன்
B) மீரா
C) ஞானக்கூத்தன்
D) அப்துல்ரகுமான்
விளக்கம்: ஈழத்துக் கவிஞர் மகாகவி எழுதிய லிமெரிக் கவிதைகளினால் பெரிதும் கவரப்பட்ட கவிஞர் மீரா, அதன் தாக்கத்தில் குறும்பாக்களை எழுதினார். லிமெரிக்கின் ஓசை இயைபுகளை மாதிரியாகக் கொண்டு எழுதப்பட்ட அக்கவிதைகள், ‘குக்கூ’ எனும் தலைப்பில் தொகுப்பாக வெளிவந்துள்ளன.
20) “மதில்மேல் பூனை
இரண்டு பக்கமும்
நாய்கள்” என்ற கவிதையை எழுதியவர் யார்?
A) தமிழன்பன்
B) மீரா
C) ஞானக்கூத்தன்
D) அமுதபாரதி
விளக்கம்: “மதில்மேல் பூனை
இரண்டு பக்கமும்
நாய்கள்” – அமுதபாரதி
21) கூற்றுகளை ஆராய்க.
1. கண்ணி, சிந்து, தெம்மாங்கு, கும்மி போன்ற வடிவங்கள் மரபுக்கவிதையுடன் தொடர்புடையது.
2. பதினெண் மேல்கணக்கு நூல்கள் பெரும்பாலும் ஆசிரியப்பா, வஞ்சிப்பா, கலிப்பா ஆகிய பா வகைமைகளில் அமைந்தவை ஆகும்.
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: 1. கண்ணி, சிந்து, தெம்மாங்கு, கும்மி போன்ற வடிவங்கள் மரபுக்கவிதையுடன் தொடர்புடையது.
2. பதினெண் மேல்கணக்கு நூல்கள் பெரும்பாலும் ஆசிரியப்பா, வஞ்சிப்பா, கலிப்பா ஆகிய பா வகைமைகளில் அமைந்தவை ஆகும்.
22) தவறாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க
A) டி.கே.துரைஸ்வாமி- நகுலன்
B) தருமுசிவராமு- பிரமிள்
C) சுந்தரராமசாமி- பசுவய்யா
D) மேற்காணும் யாருமில்லை
விளக்கம்: டி.கே.துரைஸ்வாமி – நகுலன்
தருமுசிவராமு- பிரமிள்
சுந்தரராமசாமி- பசுவய்யா
23) வானம்பாடி இதழ் எப்போது எங்கிருந்து வெளிவந்தது?
A) 1970, சென்னை
B) 1970, கோவை
C) 1971, சென்னை
D) 1971, கோவை
விளக்கம்: 1971-இல் கோவையிலிருந்து ‘வானம்பாடி’ இதழ் வெளிவந்தது. இதில் எழுதிய கவிஞர்கள் ‘மானுடம் பாடவந்த வானம்பாடிகள்’ என்று தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டனர். அவர்கள் சமூக நலனில் அக்கறை கொண்டு தம்கவிதைகளை உருவாக்கினர். சிற்பி, மீரா, நா.காமராசன், மு.மேத்தா, புவியரசு, இன்குலாப், தமிழன்பன், கங்கைகொண்டான், அக்னிபுத்திரன், சக்திகனல், சிதம்பரநாதன் போன்றோர் இக்காலத்தில் குறிப்பிடத்தக்க கவிஞர்களாவர்.
24) தவறான கூற்றை தெரிவு செய்க.
A) கவிதை ஒரு மொழியின் மேன்மையான வெளிப்பாடு
B) மொழியின் அனைத்துக்கூறுகளையும் கொண்டு உருவாகும் கலை கவிதையைப்போல் வேறேதுமில்லை.
C) ஒரு மொழியின் மாண்பும் செறிவும் அழகும் அம்மொழியின் கவிதைகளைக் கொண்டே மதிப்பிடப்படுகின்றன.
D) தமிழ்ச்சமூகத்தின் பாரம்பரியம் மிக்க வேர்கள் தமிழ் இலக்கியங்களின் வழியாகவே கிளை விரிக்கின்றன.
விளக்கம்: கவிதை ஒரு மொழியின் மேன்மையான வெளிப்பாடு
மொழியின் அனைத்துக்கூறுகளையும் கொண்டு உருவாகும் கலை கவிதையைப்போல் வேறேதுமில்லை.
ஒரு மொழியின் மாண்பும் செறிவும் அழகும் அம்மொழியின் கவிதைகளைக் கொண்டே மதிப்பிடப்படுகின்றன.
தமிழ்ச்சமூகத்தின் பாரம்பரியம் மிக்க வேர்கள் தமிழ்க் கவிதைகளின் வழியாகவே கிளை விரிக்கின்றன.
25) எந்த காலகட்டத்தில் அப்துல்ரகுமான், அபி போன்ற கவிஞர்கள் இயக்க அடையாளங்கள் இல்லாமல் தனித்துவத்தோடு கவிதைகள் எழுதினர்?
A) எழுத்து
B) மணிக்கொடி
C) வானம்பாடி
D) கசடதபற
விளக்கம்: வானம்பாடி காலகட்டத்தில் அப்துல்ரகுமான், அபி போன்ற கவிஞர்கள் இயக்க அடையாளங்கள் இல்லாமல் தனித்துவத்தோடு கவிதைகள் எழுதினர்
26) “பாட்டென்னும் கூண்டொன்று அமைத்தேன்
அழகென்னும் கிளியை அழைத்தேன்
ஆறெங்கும் கிளிக்கூண்டு கட்டுவேன்
அழகினை அழைப்பேன் நான் எந்நாளும்” – என்ற வரிகளை எழுதியவர் யார்?
A) அப்துல் ரகுமான்
B) பாரதியார்
C) ந.பிச்சமூர்த்தி
D) பாரதிதாசன்
விளக்கம்: “வாழ்க்கையும் காவிரி
அதிலெங்கும் கிளிக்கூண்டு
வார்த்தையே மணல்
ஓசையே ஜலம்
என் தீராத வேட்கையே
குவிக்கும் விரல்கள்
பாட்டென்னும் கூண்டொன்று அமைத்தேன்
அழகென்னும் கிளியை அழைத்தேன்
ஆறெங்கும் கிளிக்கூண்டு கட்டுவேன்
அழகினை அழைப்பேன் நான் எந்நாளும்” – ந.பிச்சமூர்த்தி
27) கூற்றுகளை ஆராய்க.
1. ‘கசடதபற’ இதழ் வெளிவந்த காலகட்டத்தின் கவிதைகள் பெரும்பாலும் நடுத்தரவர்க்கத்தைச் சேர்ந்த நகர வாசகர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தின.
2. மணிக்கொடி இதழ் புதிய கவிஞர்களின் கவிதைகளுக்குக் களம் அமைத்துக் கொடுத்தது.
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: 1. ‘கசடதபற’ இதழ் வெளிவந்த காலகட்டத்தின் கவிதைகள் பெரும்பாலும் நடுத்தரவரக்கத்தைச் சேர்ந்த நகர வாசகர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தின.
2. எழுத்து இதழ் புதிய கவிஞர்களின் கவிதைகளுக்குக் களம் அமைத்துக் கொடுத்தது.
28) கீழ்க்கண்டவர்களில் பொருந்தாதவர் யார்?
A) முடியரசன்
B) வாணிதாசன்
C) சுரதா
D) பாரதிதாசன்
விளக்கம்: பாரதிதாசனைப் பின்பற்றி எழுதிய வாணிதாசன், முடியரசன், சுரதா போன்றோர் பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.
29) பொருந்தாதவரை தேர்வு செய்க.
A) வல்லிக்கண்ணன்
B) நா.பிச்சமூர்த்தி
C) கு.ப.ராசகோபலன்
D) புதுமைப்பித்தன்
விளக்கம்: மயன், சிட்டி, வல்லிக்கண்ணன், வேணுகோபாலன், டி.கே.துரைசாமி(நகுலன்), தருமுசிவராமு(பிரமிள்), சி.மணி, சுந்தரராமசாமி(பசுவய்யா), எஸ்.வைத்தீஸ்வரன் போன்றோர் எழுத்து இதழில் எழுதியவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள்.
ந.பிச்சமூர்த்தி, கு.ப.ராசகோபலன், க.நா.சுப்பிரமணின், புதுமைப்பித்தன் – மணிக்கொடி இதழ்
30) “இளமையும் நில்லா யாக்கையும் நில்லா
வளவிய வான்பெரும் செல்வமும் நிலலா” என்ற வரியில் யாக்கை என்ற சொல்லின் பொருள் என்ன?
A) மனம்
B) பொருள்
C) உடல்
D) உயிர்
விளக்கம்: “இளமையும் நில்லா யாக்கையும் நில்லா
வளவிய வான்பெரும் செல்வமும் நில்லா
புத்தேள் உலகம் புதல்வரும் தாரார்
மிக்க அறமே விழுத்துணை ஆவது”- மணிமேகலை
மாந்தருக்கு அறமே நிலையானது என்பது மேற்காணும் செய்யுள் மூலம் உணர்த்தப்படுகிறது.
மனிதருக்கு இளமை, உடல், செல்வம், புதல்வர் இவையெல்லாம் நிலையில்லை. ஆனால் அறம் நிலையானது என்று மேற்காணும் மணிமேகலை காப்பியத்தில் சிறைசெய்காதையின் வரிகள் உணர்த்துகிறது.
இவ்வரியில் யாக்கை என்ற சொல்லின் பொருள் உடல்.
31) எட்டுத்தொகையின் எந்த நூலில் தலைவி மீதான தலைவனின் அன்பும், சிறகிழந்த நாரையாய்த் தலைவிக்காக அவன் வருந்துவதையும் காட்டும் பரணரின் ஓர் அகத்திணைப் பாடல் உள்ளது?
A) நற்றிணை
B) குறுந்தொகை
C) பதிற்றுப்பத்து
D) பரிபாடல்
விளக்கம்: எட்டுத்தொகையின் குறுந்தொகை நூலில் தலைவி மீதான தலைவனின் அன்பும், சிறகிழந்த நாரையாய்த் தலைவிக்காக அவன் வருந்துவதையும் காட்டும் பரணரின் ஓர் அகத்திணைப் பாடல் உள்ளது.
32) “உண்டி முதற்றே உணவின் பிண்டம்
உணவெனப் படுவது நிலத்தொடு நீரே” – என்ற பாடல் வரிகள் இடம்பெற்றுள் நூல் எது?
A) குறுந்தொகை
B) புறநானூறு
C) நற்றிணை
D) அகநானூறு
விளக்கம்: எட்டுத்தொகையில் ஒன்றான புறநானூற்றில் பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனுக்குக் குடபுலவியனார் அறிவுரை கூறுவதாக அமைந்த ஒரு புறப்பாடல்,
“……………………………….
நீர்இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே
உண்டி முதற்றே உணவின் பிண்டம்
உணவெனப் படுவது நிலத்தொடு நீரே
நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு
உடம்பும் உயிரும் படைத்திசி னோரோ” – புறநானூறு.
33) கூற்று: தமிழ் மொழியானது உலகச் செவ்வியல் மொழிகளின் வரிசையில் வைத்து போற்றப்படுகிறது.
காரணம்: தமிழ் மொழியின் கவிதை இலக்கியம்.
A) கூற்று சரி, காரணம் தவறு
B) கூற்று தவறு, காரணம் சரி
C) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது
D) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை
விளக்கம்: தனது கவிதை இலக்கியத்தால்தான், உலகச் செவ்வியல் மொழிகளின் வரிசையில் வைத்து, தமிழ் போற்றப்படுகிறது. பிற மொழிகளோடு ஒப்பிடுகையில் தமிழ்க்கவிதைகளின் தொன்மை, மரபு, பிறமொழிச்சார்பின்மை, இடையறாத தொடர்ச்சி ஆகியன தனிச்சிறப்பு வாய்ந்தவை.
34) பாரதிதாசன் பற்றிய கூற்றுகளில் பொருந்தாதது எது?
A) சமூகத்தில் ஏழை, பணக்காரன் என்ற ஏற்றத்தாழ்வு இருக்கக் கூடாது என்று தனது பாடல் மூலம் வலியுறுத்தியவர்
B) பழைய யாப்பு வடிவில் வெண்பாவை பாடியவர்
C) மக்கள் இலக்கிய வடிவங்களான கும்மி, தெம்மாங்கு, ஏற்றப்பாட்டு போன்ற வடிவங்களிலும் கவிதை பாடியவர்.
D) சந்த அமைப்புகளிலும் பாரதியைப் போலவே நல்ல தேர்ச்சி பெற்றவர்.
விளக்கம்: சமூகத்தில் ஏழை, பணக்காரன் என்ற ஏற்றத்தாழ்வு இருக்கக் கூடாது என்று தனது பாடல் மூலம் வலியுறுத்தியவர்
பழைய யாப்பு வடிவில் ஆசிரியப்பாவையும் ஆசிரிய விருத்தங்களையும் பாடியவர்
மக்கள் இலக்கிய வடிவங்களான கும்மி, தெம்மாங்கு, ஏற்றப்பாட்டு போன்ற வடிவங்களிலும் கவிதை பாடியவர்.
சந்த அமைப்புகளிலும் பாரதியைப் போலவே நல்ல தேர்ச்சி பெற்றவர்.
35) கூற்று: பாரதிதாசன் இரஷ்யக் கவிஞரான ‘இரசூல் கம்சதோவ்’ என்பவரோடு ஒப்பிடப்படுகிறார்.
காரணம்: தன்மொழி, தன்னாடு, தன்மக்கள் என்று பாடினார்
A) கூற்று சரி, காரணம் தவறு
B) கூற்று தவறு, காரணம் சரி
C) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது
D) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை
விளக்கம்: பாரதிதாசன் தன்மொழி, தன்னாடு, தன்மக்கள் எனப் பாடியதால் இரஷ்யக் கவிஞரான ‘இரசூல் கம்சதோவ்’ என்பவரோடு ஒப்பிடப்படுகிறார்.
36) “புவியை நடத்து, பொதுவில் நடத்து” என்று கூறியவர் யார்?
A) பாரதியார்
B) ந.பிச்சமூர்த்தி
C) பாரதிதாசன்
D) கவிமணி
விளக்கம்: எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும். புவியை நடத்து, பொதுவில் நடத்து போன்ற பொதுவுடைமைக் கருத்துகளையும் மக்களாட்சித் தத்துவங்களையும் தமது பாடல்களில் வலியுறுத்தியவர் பாரதிதாசன் ஆவார்.
37) கூற்றுகளை ஆராய்க.
1. அகம், புறம் சார்ந்த சங்ககாலக் கவிதைகள் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை என நூல்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
2. சங்ககாலக் கவிதைகள் தமிழரின் உயர்ந்த நாகரிகச் செழுமைக்கு அடிப்படையாக அமைந்தவை. இவை அகம், புறம் சார்ந்த வாழ்வியல் நெறிகள், கலைகள், கல்வி, அரசியல், பொருளாதாரம், வணிகம், வேளாண்மை குறித்த பதிவுகளை வெளிப்படுத்துகின்றன.
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: 1. அகம், புறம் சார்ந்த சங்ககாலக் கவிதைகள் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை என நூல்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
2. சங்ககாலக் கவிதைகள் தமிழரின் உயர்ந்த நாகரிகச் செழுமைக்கு அடிப்படையாக அமைந்தவை. இவை அகம், புறம் சார்ந்த வாழ்வியல் நெறிகள், கலைகள், கல்வி, அரசியல், பொருளாதாரம், வணிகம், வேளாண்மை குறித்த பதிவுகளை வெளிப்படுத்துகின்றன.
38) சரியான வரிசையை தேர்வு செய்க.
A) பதினெண்மேற்கணக்கு நூல்கள், பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், பக்தி இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள்.
B) பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், பதினெண்மேற்க்கணக்கு நூல்கள், பக்தி இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள்
C) பதினெண்மேற்கணக்கு நூல்கள், பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், சிற்றிலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள்
D) பக்தி இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள், பதினெண்மேற்கணக்கு நூல்கள், பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்
விளக்கம்: 1.பதினெண்மேற்கணக்கு நூல்கள்
2.பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்
3.பக்தி இலக்கியங்கள்,
4.சிற்றிலக்கியங்கள்.
39) உலகின் பிறமொழிகளோடு ஒப்பிடுகையில் தமிழ்க்கவிதைகளின் தனிச்சிறப்பு வாய்ந்தவைகளில் பொருந்தாதது எது?
A) தொன்மை
B) மரபு
C) பிறமொழிச்சார்பு
D) இடையறாத தொடர்ச்சி
விளக்கம்: தனது கவிதை இலக்கியத்தால்தான், உலகச் செவ்வியல் மொழிகளின் வரிசையில் வைத்து, தமிழ் போற்றப்படுகிறது. உலகின் பிற மொழிகளோடு ஒப்பிடுகையில் தமிழ்க்கவிதைகளின் தொன்மை, மரபு, பிறமொழிச்சார்பின்மை, இடையறாத தொடர்ச்சி ஆகியன தனிச்சிறப்பு வாய்ந்தவை.
40) மாந்தருக்கு அறமே நிலையானது என்பதைக் குறிக்கும் காப்பியம் எது?
A) சிலப்பதிகாரம்
B) மணிமேகலை
C) இரட்டைக்காப்பியங்கள்
D) சீவகசிந்தாமணி
விளக்கம்: மன்னர்களைப் பாடிய காலம் மாறிக் குடிமக்களைக் கவிதையின் பாடுபொருளாய்க் கொண்டெழுந்தவை தமிழ்க்காப்பியங்கள். மாந்தருக்கு அறமே நிலையானது என்பதைக் குறிக்கும் காப்பியம் மணிமேகலை ஆகும்.
41) கூற்றுகளை ஆராய்க.
1. யாப்பிலக்கண வரையறைக்கு உட்படாமல் சுதந்திரமான வெளிப்பாட்டோடும் கட்டற்ற தன்மையோடும் இன்றைய புதுக்கவிதை எழுதப்படுகிறது.
2. புதுக்கவிதை மறுமலர்ச்சியும் வலிமையும் பெற்றதில் மணிக்கொடி இதழின் பங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: 1. யாப்பிலக்கண வரையறைக்கு உட்படாமல் சுதந்திரமான வெளிப்பாட்டோடும் கட்டற்ற தன்மையோடும் இன்றைய புதுக்கவிதை எழுதப்படுகிறது. இவை உவமை, உருவகம், படிமம், குறியீடு, அங்கதம், சிலேடை, முரண், இருண்மை முதலான பல்வேறு உத்திகளைத் தன்னகத்தே கொண்டு, கவிஞனின் விரிசிந்தனைக்கேற்பப் புதுப்புது வடிவமெடுக்கிறது.
2. புதுக்கவிதை மறுமலர்ச்சியும் வலிமையும் பெற்றதில் எழுத்து இதழின் பங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
42) பாரதிதாசன் கீழ்க்காணும் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை?
A) சமுதாய விடுதலை
B) சாதி ஒழிப்பு
C) பெண் விடுதலை
D) தமிழ் வளர்ச்சி
விளக்கம்: பாரதிதாசன், சாதி ஒழிப்பு, பெண் விடுதலை, தமிழ் வளர்ச்சி, மூடப்பழக்க வழக்கங்களை ஒழித்தல் முதலான கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தவர்.
43) “ஓடப்ப ராயிருக்கும் ஏழையப்பர்
உதையப்ப ராகிவிட்டால் ஓர்நொடிக்குள்
ஓடப்பர் உயரப்பர் எல்லாம்மாறி
ஒப்பப்பர் ஆகிவிடுவார் உணரப்பாநீ” – என்ற வரியில் உணர்த்தப்படும் கருத்து என்ன?
A) செல்வம் ஈட்டுதல் வேண்டும்
B) ஏழை, பணக்காரன் என்ற ஏற்றத்தாழ்வு இருக்கக் கூடாது
C) ஏழையாயினும் அறம் செய்தல் வேண்டும்
D) சமூகத்தில் ஆண், பெண் ஏற்றத்தாழ்வு கூடாது
விளக்கம்: மேற்காணும் பாடல்வரிகள் பாரதிதாசன் எழுதிய வரிகள் ஆகும். இவ்வரியில் சமூகத்தில் ஏழை, பணக்காரன் என்ற ஏற்றத்தாழ்வு இருக்கக்கூடாது என்று பாரதிதாசன் தமது பாடல் மூலம் வலியுறுத்தி கூறுகிறார்.
44) கூற்றுகளை ஆராய்க.
1. ‘பாரதியின் கவிதாமண்டலத்தைச் சேர்ந்தவர்’ என்று பாரதியாரால் முன்மொழியப்பட்டவர் பாரதிதாசன் ஆவார்.
2. எழுத்து இதழ் புதிய கவிஞர்களின் கவிதைகளுக்குக் களம் அமைத்துக்கொடுத்தது. புதுக்கவிதை குறித்த பல திறனாய்வுக் கட்டுரைகளும் அதில் வெளியாகின.
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: 1. ‘பாரதியின் கவிதாமண்டலத்தைச் சேர்ந்தவர்’ என்று பாரதியாரால் முன்மொழியப்பட்டவர் பாரதிதாசன் ஆவார்.
2. எழுத்து இதழ் புதிய கவிஞர்களின் கவிதைகளுக்குக் களம் அமைத்துக்கொடுத்தது. புதுக்கவிதை குறித்த பல திறனாய்வுக் கட்டுரைகளும் அதில் வெளியாகின.
45) கூற்றுகளை ஆராய்க.
1. கோவை, உலா, அந்தாதி போன்றவை கடவுள், அரசன், சிற்றரசர்கள், வள்ளல்களைப் புகழ்ந்தன.
2. பள்ளி, குறவஞ்சி போன்றவை எளிய மக்களின் வாழ்வியலை எடுத்தியம்பின.
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: பக்திவழியே பயணித்துக்கொண்டிருந்த தமிழ்க்கவிதைகள் பின்னர், சிற்றிலக்கியங்கள் என்னும் விமர்சனப்பாங்கு கொண்ட புதிய வடிவில் மக்களிடம் பேசத்தொடங்கின.
1. கோவை, உலா, அந்தாதி போன்றவை கடவுள், அரசன், சிற்றரசர்கள், வள்ளல்களைப் புகழ்ந்தன.
2. பள்ளி, குறவஞ்சி போன்றவை எளிய மக்களின் வாழ்வியலை எடுத்தியம்பின.
46) கூற்றுகளை ஆராய்க
1. இயற்கை சார்ந்த மக்கள் வாழ்வியலைக் கொண்ட கவிதைகள் தமிழில் தான் முதலில் எழுதப்பட்டன.
2. ஒரு மொழியின் மாண்பும் செறிவும் அழகும் அம்மொழியின் கவிதைகளைக் கொண்டே மதிப்பிடப்படுகின்றன.
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: 1. இயற்கை சார்ந்த மக்கள் வாழ்வியலைக் கொண்ட கவிதைகள் தமிழில் தான் முதலில் எழுதப்பட்டன.
2. ஒரு மொழியின் மாண்பும் செறிவும் அழகும் அம்மொழியின் கவிதைகளைக் கொண்டே மதிப்பிடப்படுகின்றன.
47) பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்கள் பெரும்பாலும் கீழ்க்காணும் எந்த பா வகைமைகளில் அமையவில்லை?
A) வஞ்சிப்பா
B) கலிப்பா
C) ஆசிரியப்பா
D) வெண்பா
விளக்கம்: அகம், புறம் சார்ந்த சங்ககாலக் கவிதைகள் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை என நூல்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவை பெரும்பாலும், ஆசிரியப்பா, வஞ்சிப்பா, கலிப்பா ஆகிய பா வகைமைகளில் அமைந்தவை.
48) “நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு
உடம்பும் உயிரும் படைத்திசி னோரோ” – என்ற பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
A) குறுந்தொகை
B) புறநானூறு
C) நற்றிணை
D) அகநானூறு
விளக்கம்: எட்டுத்தொகையில் ஒன்றான புறநானூற்றில் பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனுக்குக் குடபுலவியனார் அறிவுரை கூறுவதாக அமைந்த ஒரு புறப்பாடல்,
“……………………………….
நீர்இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே
உண்டி முதற்றே உணவின் பிண்டம்
உணவெனப் படுவது நிலத்தொடு நீரே
நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு
உடம்பும் உயிரும் படைத்திசி னோரோ” – புறநானூறு
49) கூற்றுகளை ஆராய்க.
1. காப்பியக் கவிதைகளுக்குப் பின் இயற்றப்பட்ட தமிழ்க்கவிதைகளின் பாடுபொருள், கடவுளை நோக்கியதாக அமைந்திருந்தது.
2. நீரின்றி அமையாது உடல் – இளங்கோவடிகள்
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: 1. காப்பியக் கவிதைகளுக்குப் பின் இயற்றப்பட்ட தமிழ்க்கவிதைகளின் பாடுபொருள், கடவுளை நோக்கியதாக அமைந்திருந்தது. இறையுணர்வோடு அன்பையும் அறத்தையும் இக்காலக்கவிதைகள் வெளிப்படுத்தின. இறைவன்மீது காதல் கொண்டு எழுதப்பட்ட இக்கவிதைகள் இன்றும் மாறாத்தன்மையோடு பக்திமை மணம் வீசிக்கொண்டிருக்கின்றன.
2. உணவு கொடுத்தவரே உயிர்கொடுத்தவர். இந்த உடலானது, உணவினாலானது, உணவு என்பது யாது? நிலத்தொடு நீர் சேர்வதுதான். அப்படி இணைத்து வேளாண்மைக்கு உதவுக. அவ்வாறு உதவியவரே உலகத்தில் உயிரையும் உடலையும் நிலைநிறுத்தி வாழ்வித்தவராவர் என்று நீரின்றி அமையாத உடல்குறித்துக் கூறி நீர்வளம் பெருக்க பாண்டியன் தலையங்கானத்துச் செறுவென்ற நெடுஞ்செழியனுக்குக் குடபுலவியனார் அறிவுரை கூறியதாக புறநானூற்றுப் பாடல் அமைந்துள்ளது.
50) “புத்தேள் உலகம் புதல்வரும் தாரார்
மிக்க அறமே விழுத்துணை ஆவது” என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூலின் பெயர் என்ன?
A) சிலப்பதிகாரம்
B) மணிமேகலை
C) சீவகசிந்தாமணி
D) வளையாபதி
விளக்கம்: “இளமையும் நில்லா யாக்கையும் நில்லா
வளவிய வான்பெரும் செல்வமும் நில்லா
புத்தேள் உலகம் புதல்வரும் தாரார்
மிக்க அறமே விழுத்துணை ஆவது”- மணிமேகலை
மாந்தருக்கு அறமே நிலையானது என்பது மேற்காணும் செய்யுள் மூலம் உணர்த்தப்படுகிறது.
மனிதருக்கு இளமை, உடல், செல்வம், புதல்வர் இவையெல்லாம் நிலையில்லை. ஆனால் அறம் நிலையானது என்று மேற்காணும் மணிமேகலை காப்பியத்தில் சிறைசெய்காதையின் வரிகள் உணர்த்துகிறது.
51) கூற்று: 19-ஆம் நூற்றாண்டின் இறுதியிலும், 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் தமிழ்கவிதையின் வடிவத்தில் மாற்றம் ஏற்பட்டது
காரணம்: 19-ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் உலகளவில் தோன்றிய இலக்கிய மறுமலர்ச்சி
A) கூற்று சரி, காரணம் தவறு
B) கூற்று தவறு, காரணம் சரி
C) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது
D) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை
விளக்கம்: 19-ஆம் நூற்றாண்டின் இறுதியிலும், 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் உலகளவில் தோன்றிய இலக்கிய மறுமலர்ச்சியின் காரணமாகக் கவிதையின் வடிவத்திலும் பாடுபொருளிலும் மாற்றம் ஏற்பட்டது. தனிமனித வாழ்வியல், சமூக வாழ்வியல் போன்றவை நவீனக் கவிதைகளின் பாடுபொருள்களாயின. புதுக்கவிதை. ஹைக்கூ, லிமெரிக், லிமெரைக்கூ, சென்ரியூ, குக்கூ என நவீன வடிவங்களிலும் தமிழ்க்கவிதைகள் பயணிக்கத் தொடங்கின.
52) பாரதிக்கு பொருந்தாத ஒன்றை தெரிவு செய்க.
A) சிந்து இசையின் அடிப்படையில் அமைந்த கவிதைகளைப் பாடியதனால் ‘சிந்துக்குத் தந்தை’ என்று அழைக்கப்பட்டார்.
B) மக்களோடு நேரடியாக பேசும் முறையில் கவிதைகளைப் படைத்தார்
C) இவர் ஷெல்லியின் கவிதைகளால் கவரப்பட்டு, தமது பெயரை ‘ஷெல்லிதாசன்’ என மாற்றிக்கொண்டார்.
D) மேற்காணும் எதுவுமில்லை
விளக்கம்: சிந்து இசையின் அடிப்படையில் அமைந்த கவிதைகளைப் பாடியதனால் ‘சிந்துக்குத் தந்தை’ என்று அழைக்கப்பட்டார்.
மக்களோடு நேரடியாக பேசும் முறையில் கவிதைகளைப் படைத்தார்
இவர் ஷெல்லியின் கவிதைகளால் கவரப்பட்டு, தமது பெயரை ‘ஷெல்லிதாசன்’ என மாற்றிக்கொண்டார்.
53) கீழ்க்கடலில் எழுந்த அலைக்கு அருகில்நின்ற, முதுமையால் சிறகிழந்த நாரையொன்று, சேரனது மேல்கடற்கரையிலமைந்த தொண்டியென்னும் நகரில் உள்ள பெறற்கரிய உணவாகிய அயிரை மீனைப்பெற வருந்தியிருந்தது – என்ற வரி கீழ்க்காணும் எதனுடன் தொடர்புடையது?
A) தலைவிக்காக தலைவன் காத்திருத்தல்
B) தலைவனுக்காக தலைவி காத்திருத்தல்
C) அமைச்சருக்காக மன்னன் காத்திருத்தல்
D) மன்னனுக்காக அமைச்சர் காத்திருத்தல்
விளக்கம்: கீழ்க்கடலில் எழுந்த அலைக்கு அருகில்நின்ற, முதுமையால் சிறகிழந்த நாரையொன்று, சேரனது மேல்கடற்கரையிலமைந்த தொண்டியென்னும் நகரில் உள்ள பெறற்கரிய உணவாகிய அயிரை மீனைப்பெற வருந்தியிருந்தது. அதுபோல, பெறற்கரியவளாகிய தலைவியைப் பெறும்பொருட்டுத் தலைவனின் நெஞ்சமும் வருந்தியிருந்ததாம்.
54) பழைய யாப்பு வடிவில் ஆசிரியப்பாவையும் ஆசிரியவிருத்தங்களையும் பாடியவர் யார்?
A) பாரதியார்
B) பாரதிதாசன்
C) புதுமைப்பித்தன்
D) கு.ப.ராசகோபாலன்
விளக்கம்: மக்கள் இலக்கிய வடிவங்களான கும்மி, தெம்மாங்கு, ஏற்றப்பாட்டு போன்ற வடிவங்களில் கவிதை பாடியவர். பழைய யாப்பு வடிவில் ஆசிரியப்பாவையும் ஆசிரியவிருத்தங்களையும் பாடியவர் பாரதிதாசன் ஆவார்.
55) ‘மானுடம் பாடவந்த வானம்பாடிகள்’ என்ற தொடருக்கு தொடர்பில்லாதவர் யார்?
A) அக்னிபுத்திரன்
B) புதுமைப்பித்தன்
C) மீரா
D) நா.காமராசன்
விளக்கம்: 1971-இல் கோவையிலிருந்து ‘வானம்பாடி’ இதழ் வெளிவந்தது. இதில் எழுதிய கவிஞர்கள் ‘மானுடம் பாடவந்த வானம்பாடிகள்’ என்று தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டனர். அவர்கள் சமூக நலனில் அக்கறை கொண்டு தம்கவிதைகளை உருவாக்கினர். சிற்பி, மீரா, நா.காமராசன், மு.மேத்தா, புவியரசு, இன்குலாப், தமிழன்பன், கங்கைகொண்டான், அக்னிபுத்திரன், சக்திகனல், சிதம்பரநாதன் போன்றோர் இக்காலத்தில் குறிப்பிடத்தக்க கவிஞர்களாவர்.
56) “வார்த்தையே மணல்
ஓசையே ஜலம்
என் தீராத வேட்கையே
குவிக்கும் விரல்கள்” என்ற வரிகளை எழுதியவர் யார்?
A) பாரதியார்
B) பாரதிதாசன்
C) அப்துல் ரகுமான்
D) ந.பிச்சமூர்த்தி
விளக்கம்: “வாழ்க்கையும் காவிரி
அதிலெங்கும் கிளிக்கூண்டு
வார்த்தையே மணல்
ஓசையே ஜலம்
என் தீராத வேட்கையே
குவிக்கும் விரல்கள்
பாட்டென்னும் கூண்டொன்று அமைத்தேன்
அழகென்னும் கிளியை அழைத்தேன்
ஆறெங்கும் கிளிக்கூண்டு கட்டுவேன்
அழகினை அழைப்பேன் நான் எந்நாளும்” – ந.பிச்சமூர்த்தி
57) பொருந்தாதவர்களை தேர்வு செய்க
A) ஞானக்கூத்தன்
B) கலாப்பிரியா
C) கல்யாண்ஜி
D) புதுமைப்பித்தன்
விளக்கம்: 1970இல் வெளிவந்த ‘கசடதபற’ என்னும் இதழ் ஞானக்கூத்தன், கலாப்பிரியா, கல்யாண்ஜி போன்ற புதிய கவிஞர்களை அறிமுகப்படுத்தியது. இக்காலகட்டத்தின் கவிதைகள் பெரும்பாலும் நடுத்தரவர்க்கத்தைச் சேர்ந்த நகர வாசகர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தின.
58) கூற்று: பாரதியின் கவிதைகள் விடுதலைக்கான குரலாக ஓங்கி ஒலித்தன.
காரணம்: பாரதி மொழியை மக்களுக்கான குரலாகப் பயன்படுத்தினார்
A) கூற்று சரி, காரணம் தவறு
B) கூற்று தவறு, காரணம் சரி
C) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது
D) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை
விளக்கம்: பாரதி வாழ்ந்த காலம் இநதிய வரலாற்றில் திருப்பங்கள் நிறைந்தது. மக்கள், அந்நியர் ஆட்சிக்கு எதிராக விடுதலை வேட்கையோடு போராடிய காலம். பாரதி அச்சூழலில் மொழியை மக்களுக்கான குரலாப் பயன்படுத்தத் துணிந்தவர். இதனால், பாரதியின் கவிதைகள் விடுதலைக்கான குரலாக ஓங்கி ஒலித்தன.
59) “விடிவு
பூமித்தோலில்
அழகுத்தேமல்” என்று விடியலைப் பற்றி படிமக் கவிதை எழுதியவர் யார்?
A) ந.பிச்சமூர்த்தி
B) அப்துல் ரகுமான்
C) பாரதிதாசன்
D) பிரமிள்
விளக்கம்: “விடிவு
பூமித் தோலில்
அழகுத் தேமல்
கதிர்கள் கமழ்ந்து
விரியும், பூ
இருளின் சிறகைத்
தின்னும் கிருமி
வெளிச்சச் சிறகில்
மிதக்கும் குருவி” – பிரமிள்
60) “நான் ஒரு உடும்பு
ஒரு கொக்கு
ஒரு ஒன்றுமேயில்லை” என்ற வரிகளை எழுதியவர் யார்?
A) அப்துல்ரகுமான்
B) மு.மேத்தா
C) மீரா
D) நகுலன்
விளக்கம்: “நான் ஒரு உடும்பு
ஒரு கொக்கு
ஒரு ஒன்றுமேயில்லை” – நகுலன்
61) “அடடே
இந்தப்பழம் இனிக்கும்
ஏணியுடன் அதே நரி” என்ற கவிதையை எழுதியவர் யார்?
A) தமிழன்பன்
B) அமுதபாரதி
C) மீரா
D) சுரதா
விளக்கம்: “அடடே
இந்தப்பழம் இனிக்கும்
ஏணியுடன் அதே நரி” – தமிழன்பன்
62) லிமெரிக்கின் ஓசை இயைபுகளை மாதிரியாகக் கொண்டு எழுதப்பட்ட கவிதைகள் ‘குக்கூ’ எனும் தலைப்பில் தொகுப்பாக வெளிவந்துள்ளன. இதனை எழுதியவர் யார்?
A) மகாகவி
B) மீரா
C) தமிழன்பன்
D) அமுதபாரதி
விளக்கம்: ஈழத்துக் கவிஞர் மகாகவி எழுதிய லிமெரிக் கவிதைகளினால் பெரிதும் கவரப்பட்ட மீரா, அதன் தாக்கத்தில் குறும்பாக்களை எழுதினார். லிமெரிக்கின் ஓசை இயைபுகளை மாதியாகக் கொண்டு எழுதப்பட்ட அக்கவிதைகள், ‘குக்கூ’ எனும் தலைப்பில் தொகுப்பாக வெளிவந்துள்ளன.
63) வெற்றிக்கு அடித்தளமாக அமைவது தன்னம்பிக்கையே. ஒவ்வோர் இலையுதிர்கால வீழ்ச்சிக்குப் பிறகும் புதியதளிர்களோடு வரும் வசந்தகாலம் போல ஒவ்வொரு தோல்விக்குப் பிறகும் வெற்றியின் தளிர்கள் தழைக்கும் என்ற நம்பிக்கையைப் பேசும் கவிதையை எழுதியவர் யார்?
A) சல்மா
B) இளம்பிறை
C) கல்யாண்ஜி
D) இன்குலாப்
விளக்கம்: “புதுத் தளிர்களால்
கொண்டாடக் காத்திருக்கிறது தரு
ஒரு பாடலுடன் வரவிருக்கிறது குயில்
உடன் தளர்ந்து விழும் சருகுகளைத் தொடர்ந்து
ஒரு பழுப்பாடை தரித்து
என் பயணமும்
இலையுதிர் காலம் எனினும்
சருகாவதில்லை வேர்கள்” – இன்குலாப்.
வெற்றிக்கு அடித்தளமாக அமைவது தன்னம்பிக்கையே. ஒவ்வோர் இலையுதிர்கால வீழ்ச்சிக்குப் பிறகும் புதியதளிர்களோடு வரும் வசந்தகாலம் போல ஒவ்வொரு தோல்விக்குப் பிறகும் வெற்றியின் தளிர்கள் தழைக்கும் என்ற நம்பிக்கையை மேற்காணும் செய்யுள் உணர்த்துகிறது.
64) ‘விருந்தே தானும் புதுவது புனைந்த
யாப்பின மேற்றே’ என்ற வரியில் உணர்த்தப்படும் கருத்து என்ன?
A) மொழி வளர்ச்சிக்காக மாற்றங்களை ஏற்றுக்கொள்ளலாம்
B) விருந்தின் சுவைக்கு மாற்றங்களை ஏற்றுக்கொள்ளலாம்
C) விருந்து அளித்தல் என்பது அறத்தின் நோக்கம்
D) A மற்றும் B
விளக்கம்: காலத்திற்கு காலம் செய்யுள் வடிவில் மாற்றங்கள் நேரலாம். தமிழ்மொழிவளர்ச்சிக்கு இத்தகைய மாற்றங்கள் பயன்படுமானால் அவற்றை ஏற்றுக் கொள்வதில் தவறில்லை என்று கருதிய தொல்காப்பியர்,
“விருந்தே தானும் புதுவது புனைந்த
யாப்பின் மேற்றே”
என்று ‘விருந்து’ என்பதைப் ‘புதுமை’ என்னும் பொருளில் கூறியுள்ளார்.
65) பாரதியாருக்கு பொருந்தாத கூற்றை தெரிவு செய்க
A) மொழியை மக்களுக்கான குரலாகப் பயன்படுத்தத் துணிந்தவர்.
B) இவர்தம் கவிதைகளில் தேசவிடுதலை, பெண்விடுதலை, சமுதாயவிடுதலை இம்மூன்றும் பாடுபொருள்களாயின.
C) பாரதியார் கவிதையை சமுதாய மாற்றத்திற்கான கருவியாகப் பயன்படுத்தினார்.
D) பாரதியின் கவிதைகள் விடுதலைக்கான குரலாக ஓங்கி ஒலித்தன.
விளக்கம்: மொழியை மக்களுக்கான குரலாகப் பயன்படுத்தத் துணிந்தவர்.
இவர்தம் கவிதைகளில் தேசவிடுதலை, பெண்விடுதலை, சமுதாயவிடுதலை இம்மூன்றும் பாடுபொருள்களாயின.
பாரதியார் கவிதையை சமூக மாற்றத்திற்கான கருவியாகப் பயன்படுத்தினார்.
பாரதியின் கவிதைகள் விடுதலைக்கான குரலாக ஓங்கி ஒலித்தன.
66) “நாளும் கிழமையும்
நலிந்தோர்க்கு இல்லை
ஞாயிற்றுக்கிழமையும்
பெண்களுக்கில்லை” என்ற வரிகளை எழுதியவர் யார்?
A) கந்தவர்வன்
B) மாலதி மைத்ரி
C) சல்மா
D) அப்துல் ரகுமான்
விளக்கம்: “நாளும் கிழமையும்
நலிந்தோர்க்கு இல்லை
ஞாயிற்றுக்கிழமையும்
பெண்களுக்கில்லை” – கந்தர்வன்
67) எப்போது ‘கசடதபற’ என்னும் இதழ் வெளிவந்தது?
A) 1970
B) 1980
C) 1990
D) 1960
விளக்கம்: 1970இல் வெளிவந்த ‘கசடதபற’ என்னும் இதழ் ஞானக்கூத்தன், கலாப்பிரியா, கல்யாண்ஜி போன்ற புதிய கவிஞர்களை அறிமுகப்படுத்தியது. இக்காலகட்டத்தின் கவிதைகள் பெரும்பாலும் நடுத்தரவர்கத்தைச் சேர்ந்த நகர வாசகர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தின.
68) “சித்து” என்ற சொல்லின் பொருள் என்ன?
A) சிறந்த
B) அறிவு
C) அறிவுடையோர்
D) மருத்துவத்தில் தேர்ந்தோர்
விளக்கம்: “சித்து” என்ற சொல் அறிவு என்னும் பொருளைக் குறிக்கும். சித்தர் என்னும் சொல் அறிவுடையோர் என்ற பொருளைத் தரும்.
69) “என்னை
எவரெஸ்டாகப் பார்க்கும்
எந்த ஊரின் பார்வையில்
என் வீழ்ச்சி
மிகப்பெரிய வீழ்ச்சியே
எனினும் இது இயல்பானது
தடுக்க முடியாதது
….என் வீழ்ச்சி
நீர்வீழ்ச்சியே” என்ற பாடல் வரியை எழுதியவர் யார்?
A) மு.மேத்தா
B) மீரா
C) சுரதா
D) அப்துல் ரகுமான்
விளக்கம்: “என்னை
எவரெஸ்டாகப் பார்க்கும்
எந்த ஊரின் பார்வையில்
என் வீழ்ச்சி
மிகப்பெரிய வீழ்ச்சியே
எனினும் இது இயல்பானது
தடுக்க முடியாதது
….என் வீழ்ச்சி
நீர்வீழ்ச்சியே”- மீரா
70) “……………………………….
நீர்இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே
உண்டி முதற்றே உணவின் பிண்டம்
உணவெனப் படுவது நிலத்தொடு நீரே
நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு
உடம்பும் உயிரும் படைத்திசி னோரோ” – என்ற வரிகள் யார் யாரிடம் கூறியது?
A) ஒளவையார், அதியமான்
B) குடபுலியனார், பாண்டியன் நெடுஞ்செழியன்
C) கோவூர்கிழார், நலங்கிள்ளி
D) நப்பசலையார், நெடுங்கிள்ளி
விளக்கம்: எட்டுத்தொகையில் ஒன்றான புறநானூற்றில் பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனுக்குக் குடபுலவியனார் அறிவுரை கூறுவதாக அமைந்த ஒரு புறப்பாடல்,
“……………………………….
நீர்இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே
உண்டி முதற்றே உணவின் பிண்டம்
உணவெனப் படுவது நிலத்தொடு நீரே
நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு
உடம்பும் உயிரும் படைத்திசி னோரோ” – புறநானூறு
71) கூற்றுகளை ஆராய்க.
1. பொதுவாகப் புதுக்கவிதை சொல்லலங்காரத்தை விரும்புவதில்லை.
2. மாறுபட்ட இருபொருள்களை அடுத்தடுத்து இணைத்துப் பார்ப்பதில் சுவையும் கூடும், நினைவிலும் நிற்கும்.
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: 1. பொதுவாகப் புதுக்கவிதை சொல்லலங்காரத்தை விரும்புவதில்லை.
2. மாறுபட்ட இருபொருள்களை அடுத்தடுத்து இணைத்துப் பார்ப்பதில் சுவையும் கூடும், நினைவிலும் நிற்கும்.
72) “என் கவிதை
கை குலுக்கும்
காலில் விழாது
உடுத்திக்கொள்ளும்
போர்த்திக்கொள்ளாது” – என்ற வரிகளை எழுதியவர் யார்?
A) நகுலன்
B) மு.மேத்தா
C) ஞானக்கூத்தன்
D) பிரமிள்
விளக்கம்: “என் கவிதை
கை குலுக்கும்
காலில் விழாது
உடுத்திக்கொள்ளும்
போர்த்திக்கொள்ளாது” – மு.மேத்தா
73) கூற்று: பாரதியார் தன் பெயரை ‘ஷெல்லிதாசன்’ என்று மாற்றிக்கொண்டார்.
காரணம்: ஷெல்லியின் கவிதைகளால் கவரப்பட்டார்.
A) கூற்று சரி, காரணம் தவறு
B) கூற்று தவறு, காரணம் சரி
C) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது
D) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை
விளக்கம்: பாரதியார் ஷெல்லியின் கவிதைகளால் கவரப்பட்டு, தமது பெயரை ‘ஷெல்லிதாசன்’ என்று மாற்றிக் கொண்டார்.
74) பாரதியாரின் கவிதைகளில் கீழ்க்காணும் எது பாடுபொருளாக இல்லை?
A) தேசவிடுதலை
B) மொழிவிடுதலை
C) சமுதாய விடுதலை
D) பெண் விடுதலை
விளக்கம்: பாரதியார் வாழ்ந்த காலம் இந்திய வரலாற்றில் திருப்பங்கள் நிறைந்தது. மக்கள், அந்நியர் ஆட்சிக்கு எதிராக விடுதலை வேட்கையோடு போராடிய காலம். பாரதி அச்சூழலில் மொழியை மக்களுக்கான குரலாகப் பயன்படுத்தத் துணிந்தவர். இதனால், பாரதியின் கவிதைகள் விடுதலைக்கான குரலாக ஓங்கி ஒலித்தன. இவர்தம் கவிதைகளில் தேசவிடுதலை, பெண்விடுதலை, சமுதாய விடுதலை இம்மூன்றும் பாடுபொருள்களாயின.
75) நகைப்புடன் கூடிய எள்ளல் – என்ற தொடருக்கு பொருத்தமானது எது?
A) அங்கதம்
B) குறியீடு
C) படிமம்
D) முரண்
விளக்கம்: அங்கதம் என்பது நகைப்புடன் கூடிய எள்ளலாகும். இது தீங்கையும் அறிவின்மையையும் கண்டனம் செய்வதாகவும், சமகால நிகழ்வுகளில் எதிரிடைப் பதிவுகளாகவும் அமையும். குற்றங்களைக் கடிந்துரைக்காமல் நகைச்சுவையுடன் சுட்டித் திருத்தவல்ல திறனுடையது அங்கதம்.
76) ஒரு குறிப்பிட்ட கருத்தைச் சொல்வதற்குப் பதிலாக அக்கருத்தைத் தன்னகத்தே மறைமுகமாகக் கொண்ட சொற்களையோ, காட்சிகளையோ குறியீடாகப் பயன்படுத்தி எழுதப்படும் கவிதை ________ஆகும்?
A) உவமை
B) உருவகம்
C) படிமம்
D) குறியீடு
விளக்கம்: ஒரு குறிப்பிட்ட கருத்தைச் சொல்வதற்குப் பதிலாக அக்கருத்தைத் தன்னகத்தே மறைமுகமாகக் கொண்ட சொற்களையோ, காட்சிகளையோ குறியீடாகப் பயன்படுத்தி எழுதப்படும் கவிதை குறியீடு ஆகும்.
77) கூற்றுகளை ஆராய்க.
1. பதினென்மேல்கணக்கு நூல்கள் ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்னும் பா வகையினால் அமைந்தவை.
2. சங்கம் மருவிய காலத்தில் எழுந்த பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் வெண்பா என்னும் யாப்பு வகைமையினால் அமைந்தவை.
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: 1. பதினெண்மேல்கணக்கு நூல்கள் (அறம், புறம் சார்ந்த சங்ககாலக் கவிதைகள் எட்டுத்தொகை மற்றும் பத்துப்பாட்டு) ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்னும் பா வகையினால் அமைந்தவை.
2. சங்கம் மருவிய காலத்தில் எழுந்த பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் வெண்பா என்னும் யாப்பு வகைமையினால் அமைந்தவை.
78) “தீ இனிது, நீர் இனிது, நிலம் இனிது
ஞாயிறு நன்று, திங்களும் நன்று” என்ற வரிகளை எழுதியவர் யார்?
A) பாரதியார்
B) பாரதிதாசன்
C) நா.பிச்சமூர்த்தி
D) கவிமணி
விளக்கம்: “தீ இனிது, நீர் இனிது, நிலம் இனிது,
ஞாயிறு நன்று, திங்களும் நன்று
வானத்துச் சுடர்களெல்லாம் மிக இனியன.
மழை இனிது, மின்னல் இனிது, இடி இனிது
கடல் இனிது, மலை இனிது, காடு நன்று” பாரதியார் – காட்சி என்னும் தலைப்பில் எழுதிய கவிதை.
79) “வாழ்க்கையும் காவிரி
அதிலெங்கும் கிளிக்கூண்டு” என்ற வரியை எழுதியவர் யார்?
A) பாரதியார்
B) பாரதிதாசன்
C) அப்துல் ரகுமான்
D) ந.பிச்சமூர்த்தி
விளக்கம்: “வாழ்க்கையும் காவிரி
அதிலெங்கும் கிளிக்கூண்டு
வார்த்தையே மணல்
ஓசையே ஜலம்
என் தீராத வேட்கையே
குவிக்கும் விரல்கள்
பாட்டென்னும் கூண்டொன்று அமைத்தேன்
அழகென்னும் கிளியை அழைத்தேன்
ஆறெங்கும் கிளிக்கூண்டு கட்டுவேன்
அழகினை அழைப்பேன் நான் எந்நாளும்” – ந.பிச்சமூர்த்தி
80) கூற்று: பாரதியார் ‘சிந்துக்குத் தந்தை’ என்று அழைக்கப்பட்டார்.
காரணம்: பாரதியார் சிந்து என்னும் கவிதை தொகுப்பை இயற்றினார்
A) கூற்று சரி, காரணம் தவறு
B) கூற்று தவறு, காரணம் சரி
C) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது
D) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை
விளக்கம்: பாரதியார் நாட்டுப்புறச் சிந்து இசையின் அடிப்படையில் அமைந்த கவிதைகளைப் பாடியதனால் ‘சிந்துக்குத் தந்தை’ என அழைக்கப்பட்டார்.
81) தமிழின் புதுமையான வடிவத்தில் அமைந்த முதல் வசன கவிதை எது?
A) சிந்து
B) காட்சி
C) விஞ்ஞானி
D) பெட்டிக்கடை நாரணன்
விளக்கம்: பாரதியார்தாம் முதன்முதலில் தமிழ்க்கவிதைகளின் புதிய முயற்சிகளை மேற்கொண்டார். அவரின் கவிதை வடிவம் தமிழின் மரபான செய்யுள் வடிவமும் நாட்டார் பாடல்களின் ஓசை வடிவமும் கலந்தது. இவர் ‘காட்சி’ என்ற தலைப்பில் எழுதிய கவிதை, தமிழில் புதுமையான வடிவத்தில் அமைந்த முதல் வசன கவிதையாகும்.
82) “கதிர்கள் கமழ்ந்து
விரியும், பூ
இருளின் சிறகைத்
தின்னும் கிருமி
வெளிச்சச் சிறகில்
மிதக்கும் குருவி” என்ற வரியை எழுதியவர் யார்?
A) ந.பிச்சமூர்த்தி
B) அப்துல் ரகுமான்
C) பாரதிதாசன்
D) பிரமிள்
விளக்கம்: “விடிவு
பூமித் தோலில்
அழகுத் தேமல்
கதிர்கள் கமழ்ந்து
விரியும், பூ
இருளின் சிறகைத்
தின்னும் கிருமி
வெளிச்சச் சிறகில்
மிதக்கும் குருவி” – பிரமிள்
83) சொல்லுக்கும் அஃது உணர்த்தும் பொருளுக்கும் இடையிலான தொடர்பு தெளிவற்றிருக்கும். படிப்பவர்தம் அறிவுக்கும் உணர்வுக்கும் அனுபத்திற்கும் ஏற்ப அது வெவ்வேறு பொருளைத் தரும் – என்ற தொடருக்குப் பொருத்தமான ஒன்றை தெரிவு செய்க.
A) சிலேடை
B) இருண்மை
C) அங்கதம்
D) படிமம்
விளக்கம்: சொல்லுக்கும் அஃது உணர்த்தும் பொருளுக்கும் இடையிலான தொடர்பு தெளிவற்றிருக்கும். படிப்பவர்தம் அறிவுக்கும் உணர்வுக்கும் அனுபத்திற்கும் ஏற்ப அது வெவ்வேறு பொருளைத் தரும் -இருண்மை.
84) கீழ்க்காணும் எந்த இதழ் வெளிவந்த காலகட்டத்தின் கவிதைகள் பெரும்பாலும் நடுத்தரவர்கத்தைச் சேர்ந்த நகர வாசகர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தின?
A) எழுத்து
B) மணிக்கொடி
C) காலமேகினி
D) கசடதபற
விளக்கம்: 1970இல் வெளிவந்த ‘கசடதபற’ என்னும் இதழ் ஞானக்கூத்தன், கலாப்பிரியா, கல்யாண்ஜி போன்ற புதிய கவிஞர்களை அறிமுகப்படுத்தியது. இக்காலகட்டத்தின் கவிதைகள் பெரும்பாலும் நடுத்தரவர்கத்தைச் சேர்ந்த நகர வாசகர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தின.
85) ஒன்றுக்கு ஒன்று எதிரானவந்றைக் கொண்டு அமைப்பது முரண் என்னும் உத்தியாகும். மரபுக் கவிதைகளில் இது_________________என்று கூறப்படும்?
A) கூழை முரண்
B) எதுகை முரண்
C) மோனை முரண்
D) தொடை முரண்
விளக்கம்: ஒன்றுக்கு ஒன்று எதிரானவற்றைக் கொண்டு அமைப்பது முரண் என்னும் உத்தியாகும். இது மரபுக் கவிதைகளில் முரண்தொடை எனக் கூறப்படும். மாறுப்பட்ட இருபொருள்களை அடுத்தடுத்து இணைத்துப் பார்ப்பதில் சுவையும் கூடும். நினைவிலும் நிற்கும்.
86) கூற்றுகளை ஆராய்க.
1. பாரதியார் உலகளவில் தோன்றிய நவீன கவிதைப் போக்கினை உள்வாங்கிக்கொண்டு, உள்ளடக்கம், வடிவம் இரண்டிலும் மரபுக்கும் புதுக்கவிதைகக்கும் பாலமாகத் திகழ்ந்தார்.
2. ‘பெட்டிக்கடை நாரணன்’, ‘விஞ்ஞானி’ போன்ற கவிதைகளை ந.பிச்சமூர்த்தி எழுதினார்.
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: 1. பாரதியார் உலகளவில் தோன்றிய நவீன கவிதைப் போக்கினை உள்வாங்கிக்கொண்டு, உள்ளடக்கம், வடிவம் இரண்டிலும் மரபுக்கும் புதுக்கவிதைகக்கும் பாலமாகத் திகழ்ந்தார்.
2. ‘பெட்டிக்கடை நாரணன்’, ‘விஞ்ஞானி’ போன்ற கவிதைகளை ந.பிச்சமூர்த்தி எழுதினார்.
87) “திண்ணை இருட்டில்
எவரோ கேட்டார்
தலையை
எங்கே வைப்பதாம்
என்று
எவனோ ஒருவன்
சொன்னான்
களவு போகாமல்
கையருகே வை” என்ற பாடல் வரியை எழுதியவர் யார்?
A) ஞானக்கூத்தன்
B) மு.மேத்தா
C) நகுலன்
D) அப்துல்ரகுமான்
விளக்கம்: “திண்ணை இருட்டில்
எவரோ கேட்டார்
தலையை
எங்கே வைப்பதாம்
என்று
எவனோ ஒருவன்
சொன்னான்
களவு போகாமல்
கையருகே வை” – ஞானக்கூத்தன்
88) “சமரச வேசமிட்ட குரங்கினிடம்
அப்பத்தைப் பறிகொடுத்த
பூனைகள் நாம்” என்ற வரிகளை எழுதியவர் யார்?
A) அப்துல் ரகுமான்
B) பிரமிள்
C) ந.பிச்சமூர்த்தி
D) ஞானக்கூத்தன்
விளக்கம்: “சமரச வேசமிட்ட குரங்கினிடம்
அப்பத்தைப் பறிகொடுத்த
பூனைகள் நாம்” – அப்துல் ரகுமான்
89) முற்றுருவகப் பாங்கில் அமைந்து, தெளிவானதோர் அகக் காட்சியை வழங்கும் ஆற்றலுடையது எது?
A) உவமை
B) உருவகம்
C) படிமம்
D) குறியீடு
விளக்கம்: உவமை, உருவகம் என்பன மேன்மேலும் இறுகிய நிலையில்தான் படிமம் தோன்றுகிறது. முற்றுருவகப் பாங்கில் அமைந்து, தெளிவானதோர் அகக் காட்சியை வழங்கும் ஆற்றலுடையதே படிமம் ஆகின்றது.
90) மணிக்கொடி இதழ் வெளிவந்த காலகட்டத்தில் கீழ்க்காணும் எந்த இதழ் வசன கவிதைகளை வெளியிட்டன?
A) எழுத்து
B) கிராம ஊழியன்
C) குயில்
D) மேற்காணும் அனைத்தும்
விளக்கம்: மணிக்கொடி இதழ் வெளிவந்த காலகட்டத்தில் கிராம ஊழியன், கலாமோகினி ஆகிய இதழ்களும் வசன கவிதைகளை வெளியிட்டன.
91) கூற்றுகளை ஆராய்க.
1. பாரதியாரின் கவிதை வடிவம் தமிழின் மரபான செய்யுள் வடிவமும் நாட்டார் பாடல்களின் ஓசை வடிவமும் கலந்தது.
2. சி.சு.செல்லப்பா தொடங்கிய ‘எழுத்து’ இதழ் புதுக்கவிதையின் சோதனை முயற்சிகளை வெளியிட்டது.
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: 1. பாரதியாரின் கவிதை வடிவம் தமிழின் மரபான செய்யுள் வடிவமும் நாட்டார் பாடல்களின் ஓசை வடிவமும் கலந்தது.
2. சி.சு.செல்லப்பா தொடங்கிய ‘எழுத்து’ இதழ் புதுக்கவிதையின் சோதனை முயற்சிகளை வெளியிட்டது.
92) ஒரு நதியை கோரைப் பாயாகவும் கண்ணாடியாகவும் வீணையாகவும் வெள்ளித்தாளாகவும் உருவகப்படுத்தி பாடியவர் யார்?
A) மு.மேத்தா
B) இளம்பிறை
C) சல்மா
D) கவிஞர் சிற்பி
விளக்கம்: “இது
நான் தவழ்ந்த கோரைப்பாய்
முகம் பார்த்த கண்ணாடி
என் காதலின் வீணை
நினைவுகளைப் பொதிந்து வைத்த
வெள்ளித்தாள்” – கவிஞர் சிற்பி.
ஒரு நதியை கோரைப் பாயாகவும் கண்ணாடியாகவும் வீணையாகவும் வெள்ளித்தாளாகவும் உருவகப்படுத்தி கவிஞர் சிற்பி பாடியுள்ளார்.
93) குற்றங்களைக் கடிந்துரைக்காமல் நகைச்சுவையுடன் சுட்டித் திருத்தவல்ல திறனுடையது எது?
A) அங்கதம்
B) குறியீடு
C) படிமம்
D) முரண்
விளக்கம்: அங்கதம் என்பது நகைப்புடன் கூடிய எள்ளலாகும். இது தீங்கையும் அறிவின்மையையும் கண்டனம் செய்வதாகவும், சமகால நிகழ்வுகளில் எதிரிடைப் பதிவுகளாகவும் அமையும். குற்றங்களைக் கடிந்துரைக்காமல் நகைச்சுவையுடன் சுட்டித் திருத்தவல்ல திறனுடையது அங்கதம்.
94) லிமெரிக் கவிதைகளினால் பெரிதும் கவரப்பட்ட மீரா, அதன் தாக்கத்தில் குறும்பாக்களை எழுதினார். மீரா யார் எழுதிய லிமெரிக் கவிதைகளினால் பெரிதும் கவரப்பட்டார்?
A) மகாகவி
B) ஷெல்லிதாசன்
C) தமிழன்பன்
D) இரசூல் கம்சதோவ்
விளக்கம்: ஈழத்துக் கவிஞர் மகாகவி எழுதிய லிமெரிக் கவிதைகளினால் பெரிதும் கவரப்பட்ட மீரா, அதன் தாக்கத்தில் குறும்பாக்களை எழுதினார். லிமெரிக்கின் ஓசை இயைபுகளை மாதியாகக் கொண்டு எழுதப்பட்டஅக்கவிதைகள், ‘குக்கூ’ எனும் தலைப்பில் தொகுப்பாக வெளிவந்துள்ளன.
95) பாரதியைத் தொடர்ந்து தமிழில் பல்வேறு கவிஞர்கள் புதுக்கவிதை எழுத முற்பட்டனர். புதுக்கவிதைகளின் முன்னோடிகள் என்று குறிப்பிடப்படுபவர்களில் பொருந்தாதவர் யார்?
A) புதுமைப்பித்தன்
B) க.நா.சுப்பிரமணியன்
C) கு.ப.ராசகோபாலன்
D) வல்லிக்கண்ணன்
விளக்கம்: பாரதியைத் தொடர்ந்து தமிழில் பல்வேறு கவிஞர்கள் புதுக்கவிதை எழுத முற்பட்டனர். புதுக்கவிதை முன்னோடிகளான ந.பிச்சமூர்த்தி, கு.ப.ராசகோபாலன், க.நா.சுப்பிரமணியன், புதுமைப்பித்தன் போன்றோர் மணிக்கொடி இதழில் புதுக்கவிதைகளை எழுதினர்.
96) கீழ்க்காணும் எதில் கவிஞர் எவ்விதக் கட்டுபாடுகளுமின்றித் தன் மனத்தில் தோன்றியதை, அதே உணர்வுடன் வெளிப்படுத் முடிகிறது?
A) மரபுக்கவிதை
B) புதுக்கவிதை
C) நாட்டுப்புறப்பாடல்
D) மேற்காணும் அனைத்தும்
விளக்கம்: புதுக்கவிதையில் கவிஞன் எவ்விதக் கட்டுபாடுகளுமின்றித் தன் மனத்தில் தோன்றியதை, அதே உணர்வுடன் வெளிப்படுத்த முடிகிறது. இதில் சமூக அவலங்கள், சமகால நிகழ்வுகள், எதிர்ப்பார்ப்புகள், இலக்குகள் என அனைத்தும் பாடுபொருள்களாகின்றன.
97) லிமெரைக்கூ என்பது கீழ்க்காணும் எந்த பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும்?
A) ஹைக்கூ கவிதையின் மூவடி எல்லையையும், லிமெரிக் கவிதையின் இயைபையும் கொண்டது
B) லிமெரிக் கவிதையின் மூவடி எல்லையையும், ஹைக்கூ கவிதையின் இயைபையும் கொண்டது
C) ஹைக்கூ கவிதையின் ஐந்தடி எல்லையையும், லிமெரிக் கவிதையின் இயைபையும் கொண்டது
D) லிமெரிக் கவிதையின் ஐந்தடி எல்லையையும், ஹைக்கூ கவிதையின் இயைபையும் கொண்டது
விளக்கம்: ‘ஹைக்கூ’ கவிதையின் மூவடி எல்லையையும், லிமெரிக் கவிதையின் இயைபையும் கொண்டது லிமெரைக்கூ. இது வாழ்வியலை நகைச்சுவையோடு வெளிப்படுத்துவது. தமிழில் முதலில் லிமெரைக்கூ எழுதியவர் ஈரோடு தமிழன்பன்.
98) பாரதிதாசன் பற்றிய கூற்றுகளை ஆராய்க.
1. வாணிதாசன், முடியரசன், சுரதா போன்றோர் பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.
2. தன்மொழி, தன்னாடு, தன்மக்கள் எனப் பாடியதால் இரஷ்யக் கவிஞரான ‘இரசூல் கம்சதோவ்’ என்பவரோடு ஒப்பிடப்படுகிறார்.
3.சாதி ஒழிப்பு, பெண் விடுதலை, தமிழ் வளர்ச்சி, மூடப்பழக்க வழக்கங்களை ஒழித்தல் முதலான கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை
4. சமூகத்தில் ஏழை, பணக்காரன் என்ற ஏற்றத்தாழ்வு இருக்கக் கூடாது என்று வலியுறுத்தியவர்.
A) 1, 4 சரி
B) 2, 3 சரி
C) 1, 2, 4 சரி
D) அனைத்தும் சரி
விளக்கம்: 1. வாணிதாசன், முடியரசன், சுரதா போன்றோர் பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.
2. தன்மொழி, தன்னாடு, தன்மக்கள் எனப் பாடியதால் இரஷ்யக் கவிஞரான ‘இரசூல் கம்சதோவ்’ என்பவரோடு ஒப்பிடப்படுகிறார்.
3.சாதி ஒழிப்பு, பெண் விடுதலை, தமிழ் வளர்ச்சி, மூடப்பழக்க வழக்கங்களை ஒழித்தல் முதலான கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.
4. சமூகத்தில் ஏழை, பணக்காரன் என்ற ஏற்றத்தாழ்வு இருக்கக் கூடாது என்று வலியுறுத்தியவர்.
99) ஒரு மொழியின் வெளிப்பாட்டுத் தரத்தினை மதிப்பிட கீழ்க்காணும் எது அடிப்படையாகும்?
A) நம்பிக்கைத் தளிர்கள்
B) இயற்கை மரபு
C) மனிதநேயம்
D) அழகியல்
விளக்கம்: கவிதையின் உள்ளடக்கத்தைப் புரிந்து கொள்வதற்கும் சுவைப்பதற்கும் அழகியல் உணர்வு தேவை. ஒரு மொழியின் வெளிப்பாட்டுத் தரத்தினை மதிப்பிட அதன் அழகியல் பதிவுகளே அடிப்படையாகும்.
100) “வானத்துச் சுடர்களெல்லாம் மிக இனியன.
மழை இனிது, மின்னல் இனிது, இடி இனிது
கடல் இனிது, மலை இனிது, காடு நன்று” என்ற வரிகளை எழுதியவர் யார்?
A) பாரதியார்
B) பாரதிதாசன்
C) நா.பிச்சமூர்த்தி
D) கவிமணி
விளக்கம்: “தீ இனிது, நீர் இனிது, நிலம் இனிது,
ஞாயிறு நன்று, திங்களும் நன்று
வானத்துச் சுடர்களெல்லாம் மிக இனியன.
மழை இனிது, மின்னல் இனிது, இடி இனிது
கடல் இனிது, மலை இனிது, காடு நன்று” பாரதியார் – காட்சி என்னும் தலைப்பில் எழுதிய கவிதை
101) “கண்கள் பூக்கள் மீதிருக்க
மனம் தேடிப் போகிறது
வரைபட வீட்டின் தனிமையை” என்ற கவிதை வரியை எழுதியவர் யார்?
A) சல்மா
B) இளம்பிறை
C) கல்யாண்ஜி
D) இன்குலாம்
விளக்கம்: “கண்கள் பூக்கள் மீதிருக்க
மனம் தேடிப் போகிறது
வரைபட வீட்டின் தனிமையை” – சல்மா
102) “ஏடுகளில்
முன்பக்கத்தில்
அட்டையில்
பின்பக்கத்தில்
அடுப்பங்கரையில்” என்ற கவிதையை எழுதியவர் யார்?
A) கந்தர்வன்
B) காசி ஆனந்தன்
C) சுகிர்தராணி
D) சல்மா
விளக்கம்: “ஏடுகளில்
முன்பக்கத்தில்
அட்டையில்
பின்பக்கத்தில்
அடுப்பங்கரையில்”- காசி ஆனந்தன்
103) “எட்டாத தொலைவில் நின்று
பனையோலைகளில் தேநீர் அருந்துகையில்
உதட்டிலிருந்து வழியும் சாதியின் வலி” என்ற கவிதை வரியை எழுதியவர் யார்?
A) கந்தர்வன்
B) காசி ஆனந்தன்
C) சுகிர்தராணி
D) சல்மா
விளக்கம்: “எட்டாத தொலைவில் நின்று
பனையோலைகளில் தேநீர் அருந்துகையில்
உதட்டிலிருந்து வழியும் சாதியின் வலி
காலணிகளற்ற பாதங்களை நனைக்க
என் கிராமத்தின் ஓவியம்
தன்னைச் சட்டமிட்டுக் கொள்கிறது
ஒருபோதும் உறங்காத ரெட்டை வாழிடத்தில்” – சுகிர்தராணி
104) ‘புதுக்கவிதையின் தந்தை’ என அறியப்படுபவர் யார்?
A) புதுமைப்பித்தன்
B) க.நா.சுப்பிரமணியன்
C) ந.பிச்சமூர்த்தி
D) வல்லிக்கண்ணன்
விளக்கம்: ந.பிச்சமூர்த்தி ‘புதுக்கவிதையின் தந்தை’ என் அறியப்படுகிறார். மணிக்கொடி இதழ் வெளிவந்த காலகட்டத்தில் கிராம ஊழியன், கலாமோகினி ஆகிய இதழ்களும் வசன கவிதைகளை வெளியிட்டன.
105) “இது
நான் தவழ்ந்த கோரைப்பாய்
முகம் பார்த்த கண்ணாடி
என் காதலின் வீணை
நினைவுகளைப் பொதிந்து வைத்த
வெள்ளித்தாள்” என்ற வரியை எழுதியவர் யார்?
A) மு.மேத்தா
B) இளம்பிறை
C) சல்மா
D) கவிஞர் சிற்பி
விளக்கம்: “இது
நான் தவழ்ந்த கோரைப்பாய்
முகம் பார்த்த கண்ணாடி
என் காதலின் வீணை
நினைவுகளைப் பொதிந்து வைத்த
வெள்ளித்தாள்” – கவிஞர் சிற்பி.
ஒரு நதியை கோரைப் பாயாகவும் கண்ணாடியாகவும் வீணையாகவும் வெள்ளித்தாளாகவும் உருவகப்படுத்தி கவிஞர் சிற்பி பாடியுள்ளார்.
106) 18-ஆம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்த சுந்தரகவிராயரை ஆதரித்தவர் யார்?
A) அருணாச்சலத்துரை
B) முத்துசாமி
C) அழகிய சொக்கநாதர்
D) மேற்காணும் யாருமில்லை
விளக்கம்: 18-ஆம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்தவர் சுந்தரகவிராயர். உழவுத்தொழிலின் உயர்வை நன்குணர்ந்தவர். எட்டையபுரம் அருணாசலத்துரை, தையூர் முத்து முதலானோர் இப்புலவரை ஆதரித்துள்ளனர்.
107) கீழ்க்காணும் எது பனிமலர் என்னும் கவிதை தொகுப்பில் இடம்பெறாத கவிதை?
A) “ஆயிரம் முட்கள் இருந்தும்
ஒரு தூண்டில் முள்ளிடம்
தோற்றுவிடுகிறது மீன்”
B) “மிதித்து விடாதே
அழகாயிருக்கிறது
குழந்தையின் நிழல்”
C) “குட்டிமீன்
கடித்துச் சென்றது
தூண்டில்காரன் காலை”
D) “நிழலில் கொஞ்சம் இளைப்பாறலாம்
விழித்ததும் வெட்ட வேண்டும்
இதே மரத்தை”
விளக்கம்: “ஆயிரம் முட்கள் இருந்தும்
ஒரு தூண்டில் முள்ளிடம்
தோற்றுவிடுகிறது மீன்”
“குட்டிமீன்
கடித்துச் சென்றது
தூண்டில்காரன் காலை”
“நிழலில் கொஞ்சம் இளைப்பாறலாம்
விழித்ததும் வெட்ட வேண்டும்
இதே மரத்தை”- பனிமலர் என்னும் கவிதை தொகுப்பில் இடம்பெற்ற கவிதைகள்
“மிதித்து விடாதே
அழகாயிருக்கிறது
குழந்தையின் நிழல்” – வைகறை
108) அழகிய சொக்கநாதர் பற்றிய தவறான கூற்றை தெரிவு செய்க.
A) திருநெல்வேலி மாவட்டத்தைச் சார்ந்தவர்
B) இவர் பாடிய தனிப்பாடல்கள் இருபத்தைந்திற்கும் மேற்பட்டவை.
C) இவர் 17-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவர்.
D) முத்துசாமி என்பவரால் ஆதரிக்கப்பட்ட இவர், காந்திமதி அம்மை மீது பிள்ளைத்தமிழ் மாலை, அந்தாதி போன்றவற்றை பாடியுள்ளார்.
விளக்கம்: திருநெல்வேலி மாவட்டத்தைச் சார்ந்த அழகிய சொக்கநாதர் சிலேடை பாடுவதில் வல்லவர். இவர் பாடிய தனிப்பாடல்கள் இருபத்தைந்திற்கும் மேற்பட்டவை. முத்துசாமி என்பவர் இவரை ஆதரித்தவர் ஆவார். இவர் 18-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியல் வாழ்ந்தவர். காந்திமதி அம்மை மீது பிள்ளைத்தமிழ் மாலை, அந்தாதி போன்றவற்றை பாடியுள்ளார்.
109) “சந்திப்பிழை போன்ற
சந்ததிப்பிழை நாங்கள்
காலத்தின் பேரேட்டைக்
கடவுள் திருத்தட்டும்” என்ற வரிகளை எழுதியவர் யார்?
A) சல்மா
B) நா.காமரான்
C) அறிவுமதி
D) மித்ரா
விளக்கம்: “காலமழைத் தூறலிலே
களையாய்ப் பிறப்பெடுத்தோம்
தாயப்பாலின் சரித்திரத்தில்
சதிராடும் புதிரானோம்
விதை வளர்த்த முள்ளானோம்
விளக்கின் இருளானோம்
சந்திப்பிழை போன்ற
சந்ததிப்பிழை நாங்கள்
காலத்தின் பேரேட்டைக்
கடவுள் திருத்தட்டும்” – நா.காமராசன்
110) தீங்கையும் அறிவின்மையையும் கண்டனம் செய்வதாகவும், சமகால நிகழ்வுகளில் எதிரிடைப் பதிவுகளாகவும் அமைவது எது?
A) அங்கதம்
B) குறியீடு
C) படிமம்
D) முரண்
விளக்கம்: அங்கதம் என்பது நகைப்புடன் கூடிய எள்ளலாகும். இது தீங்கையும் அறிவின்மையையும் கண்டனம் செய்வதாகவும், சமகால நிகழ்வுகளில் எதிரிடைப் பதிவுகளாகவும் அமையும். குற்றங்களைக் கடிந்துரைக்காமல் நகைச்சுவையுடன் சுட்டித் திருத்தவல்ல திறனுடையது அங்கதம்.
111) “இளமைப் பருவத்தில் என்னால்வருந் துன்பம்
எல்லாம் பொறுத்தீரே
தளர்ந்த பருவத்தில் உம்மால்வருந் துன்பம்
சகிப்பது பெருஞ்சீரே” – என்ற வரிகளை எழுதியவர் யார்?
A) அப்துல் ரகுமான்
B) தமிழன்பன்
C) ஞானக்கூத்தன்
D) மாயூரம் வேதநாயகர்
விளக்கம்: “இளமைப் பருவத்தில் என்னால்வருந் துன்பம்
எல்லாம் பொறுத்தீரே
தளர்ந்த பருவத்தில் உம்மால்வருந் துன்பம்
சகிப்பது பெருஞ்சீரே”- மாயூரம் வேதநாயகர்.
112) “கோடை மரம்
கொஞ்சம் இலை
நிறைய வானம்” என்ற ஹைக்கூ கவிதையை எழுதியவர் யார்?
A) அறிவுமதி
B) மித்ரா
C) வைகறை
D) ஞானக்கூத்தன்
விளக்கம்: “கோடை மரம்
கொஞ்சம் இலை
நிறைய வானம்” – வைகறை
113) “ஒரு உலோபி
பஞ்சத்தில் காக்கும்
பணப்பையைப் போல்
கோடை மேகம்” என்ற வரியை எழுதியவர் யார்?
A) பிரமிள்
B) வைரமுத்து
C) அப்துல் ரகுமான்
D) ந.பிச்சமூர்த்தி
விளக்கம்: “ஒரு உலோபி
பஞ்சத்தில் காக்கும்
பணப்பையைப் போல்
கோடை மேகம்” – வைரமுத்து.
கோடையின் வறட்சியில் வானமெங்கும் கருத்காத மேகங்கள் இருந்து பயனில்லை. கருணை இல்லாத கருமியின் பணப்பை போல என்று அழகாய்ப் பேசுகிறது மேற்காணும் பாடல்.
114) “ஆட்டுக்குட்டியை
மடியில் போட்டு
ஈத்திக் கொண்டிருக்கும்
அம்மாவும்
பசுவிற்கு
உண்ணி பிடுங்கி நிற்கும்
அப்பாவும்
படித்ததில்லை……….
உயிர்களிடத்தில் அன்பு வேணும்” என்ற வரிகளை எழுதியவர் யார்?
A) மு.மேத்தா
B) இளம்பிறை
C) சல்மா
D) கவிஞர் சிற்பி
விளக்கம்: “ஆட்டுக்குட்டியை
மடியில் போட்டு
ஈத்திக் கொண்டிருக்கும்
அம்மாவும்
பசுவிற்கு
உண்ணி பிடுங்கி நிற்கும்
அப்பாவும்
படித்ததில்லை……….
உயிர்களிடத்தில் அன்பு வேணும்” – இளம்பிறை
115) கூற்றுகளை ஆராய்க.
1. கவிதையின் உள்ளடக்கதைப் புரிந்து கொள்வதற்கும் சுவைப்பதற்கும் அழகியல் உணர்வு தேவை.
2. எண்பதுகளின் பிற்பகுதியில் தமிழில் விளிம்புநிலை மாந்தருக்கான கவிதைகள் எழுதப்பட்டன.
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: 1. கவிதையின் உள்ளடக்கதைப் புரிந்து கொள்வதற்கும் சுவைப்பதற்கும் அழகியல் உணர்வு தேவை.
2. எண்பதுகளின் பிற்பகுதியில் தமிழில் விளிம்புநிலை மாந்தருக்கான கவிதைகள் எழுதப்பட்டன.
116) தவறாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க.
A) வெள்ளைப் பறவை – 1968
B) காந்தள் நாட்கள் – 2017
C) ஆகாயத்துக்கு அடுத்த வீடு – 2006
D) ஆலாபனை – 2002
விளக்கம்: வெள்ளைப் பறவை- 1968
காந்தள் நாட்கள்- 2017
ஆகாயத்துக்கு அடுத்த வீடு-2006
ஆலாபனை- 1999
117) பொருட்செல்வம், சொற்செல்வம், தொடை விகற்பம் செறிய, உருவகம் முதலிய அலங்காரத்தோடு இனிய ஓசையுடன் அமுதமுறப் பாடுவோர்___________கவி?
A) ஆசுகவி
B) மதுரகவி
C) சித்திரகவி
D) வித்தாரகவி
விளக்கம்: கவிபாடும் புலவர்களை கவிபாடும் திறனுக்கேற்ப ஆசுகவி, மதுரகவி. சித்திரகவி, வித்தாரகவி என நான்கு வகையாகப் பகுத்துக்கூறுவர். பொருட்செல்வம், சொற்செல்வம், தொடை விகற்பம் செறிய, உருவகம் முதலிய அலங்காரத்தோடு இனிய ஓசையுடன் அமுதமுறப் பாடுவோர் மதுரகவி
118) கூற்று: இடைக்காட்டுச் சித்தர் ‘போகர்’என்ற சித்தரின் சீடர்.
காரணம்: இடைக்காடு என்னும் ஊரில் பிறந்ததனால் இவர் இடைக்காட்டுச் சித்தர் என்று அழைக்கப்பட்டார்.
A) கூற்று சரி, காரணம் தவறு
B) கூற்று தவறு, காரணம் சரி
C) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது
D) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை
விளக்கம்: இடைக்காடு என்ற ஊரில் பிறந்ததனால் இவர் இடைக்காட்டுச் சித்தர் என்று அழைக்கப்பட்டார். இவர் போகர் என்ற சித்தரின் சீடர். ‘இடைக்காடர் ஞான சூத்திரம் எழுபது’ என்பது இவருடைய நூல். மெய்ப்பொருளின் தன்மையினையும் பிறவியற்ற பேரின்ப நிலையை எய்தும் வழியினையும் இவர் பாடியுள்ளார்.
119) கூற்றுகளை ஆராய்க.
1. “பிராணாயாமம்” என்னும் மூச்சுப்பயிற்சி சித்தர்களின் கொடையாகும்.
2. சித்து என்றால் அறிவு. சித்தர் என்றால் அறிவுடையோர் என்று பொருள்
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: 1. “பிராணாயாமம்” என்னும் மூச்சுப்பயிற்சி சித்தர்களின் கொடையாகும்.
2. சித்து என்றால் அறிவு. சித்தர் என்றால் அறிவுடையோர் என்று பொருள்
120) கையொப்பம் என்னும் கவிதை நூலுக்கு எப்போது சாகித்திய அகாதெமி பரிசு கிடைத்தது?
A) 2002
B) 2004
C) 2009
D) 2017
விளக்கம்: கையொப்பம் என்னும் கவிதை நூல் புவியரசு என்பவரால் எழுதப்பட்டது. இக்கவிதை நூலுக்கு 2009-ஆம் ஆண்டு சாகித்திய அகாதெமி விருது கிடைத்தது.
121) மாலைமாற்று, சுழிகுளம், நாகபந்தம், சக்கரம், எழுகூற்றிருக்கை முதலியன மிளிர கவிபாடுவோன்__________________என்பர்?
A) ஆசுகவி
B) மதுரகவி
C) சித்திரகவி
D) வித்தாரகவி
விளக்கம்: கவிபாடும் புலவர்களை கவிபாடும் திறனுக்கேற்ப ஆசுகவி, மதுரகவி. சித்திரகவி, வித்தாரகவி என நான்கு வகையாகப் பகுத்துக்கூறுவர். மாலைமாற்று, சுழிகுளம், நாகபந்தம், சக்கரம், எழுகூற்றிருக்கை முதலியன மிளிர கவிபாடுவோன் சித்திரகவி என்பர்.
122) “குட்டிமீன்
கடித்துச் சென்றது
தூண்டில்காரன் காலை” – என்ற ஹைக்கூ கவிதையை எழுதியவர் யார்?
A) அறிவுமதி
B) மித்ரா
C) வைகறை
D) ஞானக்கூத்தன்
விளக்கம்: “குட்டிமீன்
கடித்துச் சென்றது
தூண்டில்காரன் காலை” – வைகறை
123) “சுவரில் தொங்கும்
வரைபட மர நிழலும்
ஒற்றைக் குடிசையும்
கொஞ்சும் பூக்களும்
ஒரு வானமும்” என்ற வரியை எழுதியவர் யார்?
A) சல்மா
B) இளம்பிறை
C) கல்யாண்ஜி
D) இன்குலாப்
விளக்கம்: “சுவரில் தொங்கும்
வரைபட மர நிழலும்
ஒற்றைக் குடிசையும்
கொஞ்சும் பூக்களும்
ஒரு வானமும்” – சல்மா
124) தவறாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க.
A) புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் – 1978
B) மணிக்கொடி காலம் – 1984
C) ஒரு கிராமத்து நதி- 2002
D) வணக்கம் வள்ளுவ- 2004
விளக்கம்: புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் – 1978
மணிக்கொடி காலம்- 1982
ஒரு கிராமத்து நதி- 2002
வணக்கம் வள்ளுவ- 2004
125) “லிமெரிக்” பற்றிய கூற்றுகளில் தவறான ஒன்றை தெரிவு செய்க.
A) லிமெரிக் கவிதை மூன்று அடிகளைக் கொண்டிருக்கும்
B) முதல், இரண்டாம் மற்றும் கடைசி அடிகளில் உள்ள கடைசிச் சொற்கள் தம்முள் ஒலி ஒற்றுமை கொண்டு, மழலையர் பாடல்கள் போல் இருக்கும்
C) நகைச்சுவை, எள்ளல் ஆகிய கூறுகளைக் கொண்டமைபவை.
D) மேற்காணும் எதுவுமில்லை
விளக்கம்: லிமெரிக் கவிதை ஐந்து அடிகளைக் கொண்டிருக்கும்
முதல், இரண்டாம் மற்றும் கடைசி அடிகளில் உள்ள கடைசிச் சொற்கள் தம்முள் ஒலி ஒற்றுமை கொண்டு, மழலையர் பாடல்கள் போல் இருக்கும்
நகைச்சுவை, எள்ளல் ஆகிய கூறுகளைக் கொண்டமைபவை.
126) “சென்ரியூ” கவிதை என்பது கீழ்க்காணும் எதன் பரிணாமமாகும்?
A) லிமரைக்கூ
B) ஹைக்கூ
C) லிமெரிக்
D) மேற்காணும் எதுவுமில்லை
விளக்கம்: ‘சென்ரியூ’ கவிதை என்பது ஹைக்கூ கவிதையின் பரிணாமமாகும். ஹைக்கூவின் கட்டுப்பாடுகளை உதறிவிட்டு, அது சுதந்திரமாக இயங்குகிறது. ஹைக்கூவின் தத்துவமும் கருத்தாழமும் அதில் குறைவு. அன்றாட வாழ்வியல் நிகழ்வுகளில் குறும்புத்தனமும் நகைச்சுவையும் கலந்து சென்ரியூ எழுதப்படுகிறது.
127) “அடிவிழ அடிவிழ
அதிரும் பறை
தலைமுறைக் கோபம்” என்ற ஹைக்கூ கவிதையை எழுதியவர் யார்?
A) அறிவுமதி
B)மித்ரா
C) வைகறை
D) ஞானக்கூத்தன்
விளக்கம்: “அடிவிழ அடிவிழ
அதிரும் பறை
தலைமுறைக் கோபம்” – மித்ரா
128) “காலமழைத் தூறலிலே
களையாய்ப் பிறப்பெடுத்தோம்
தாயப்பாலின் சரித்திரத்தில்
சதிராடும் புதிரானோம்” என்ற வரியை எழுதியவர் யார்?
A) சல்மா
B) நா.காமராசன்
C) அறிவுமதி
D) மித்ரா
விளக்கம்: “காலமழைத் தூறலிலே
களையாய்ப் பிறப்பெடுத்தோம்
தாயப்பாலின் சரித்திரத்தில்
சதிராடும் புதிரானோம்
விதை வளர்த்த முள்ளானோம்
விளக்கின் இருளானோம்
சந்திப்பிழை போன்ற
சந்ததிப்பிழை நாங்கள்
காலத்தின் பேரேட்டைக்
கடவுள் திருத்தட்டும்” – நா.காமராசன்
129) “யார் எவர் என்று தெரியாமல்
தொடர்ந்து மிதபட்டே வருகிறோம்
நானும் இருண்ட என் எதிர்காலமும்” என்றவ வரியில் குறிப்பிடப்படுபவர்கள் யார்?
A) பெண்கள்
B) கண்பார்வையற்றவர்கள்
C) உடல்ஊனமுற்றவர்கள்
D) திருநங்கைகள்
விளக்கம்: “சில சமயங்களில் உனக்குத் தெரிவதில்லை
சிறிய எறும்புகளை மிதித்தபடி நீ நடந்து போவதை
சில சமயங்களில் நீ உணர்வதில்லை
பசும்புல்லை நசுக்கியபடி கடந்து போவதை
தெரிந்தும் உணர்ந்தும்
கடந்து போகிறாய்
என் அந்தரங்கத்தை மிதித்தபடி….
யார் எவர் என்று தெரியாமல்
தொடர்ந்து மிதபட்டே வருகிறோம்
நானும் இருண்ட என் எதிர்காலமும்” – லிவிங் ஸ்மைல் வித்யா
திருநங்கையரின் கோணத்திலிருந்து பேசும் இக்கவிதைகள் அழகான படிமங்களோடு வெளிப்படுகின்றன. அவர்களை ஏற்றுக்கொண்டு, அரவணைத்துச் செல்லவேண்டுமென்கிற உணர்வை நமக்குள் ஏற்படுத்துகின்றன.
130) 16ஆம் நூற்றாண்டில் எந்த நாட்டில் தோன்றிய பழைமையான ‘ரென்கா’ பாடல் மரபிலிருந்து ‘ஹைக்கூ’ கவிதை உருவானது?
A) ரஷ்யா
B) ஜப்பான்
C) இத்தாலி
D) இங்கிலாந்து
விளக்கம்: உலகளாவிய கவிதை வடிவங்களைப் பின்பற்றித் தமிழ்ச்சூழலுக்கேற்ற உள்ளடக்கங்களுடன் ஹைக்கூ, லிமெரிக், லிமெரைக்கூ, சென்ரியூ ஆகிய வடிவங்களில் கவிதைகள் எழுதப்படுகின்றன. 16ஆம் நூற்றாண்டில் ஜப்பானில் தோன்றிய பழைமையான ‘ரென்கா’ பாடல் மரபிலிருந்து ‘ஹைக்கூ’ கவிதை உருவானது. இக்கவிதை வடிவத்தினைத் தமிழுக்கு அறிமுகம் செய்தவர் பாரதியார்.
131) “காலணிகளற்ற பாதங்களை நனைக்க
என் கிராமத்தின் ஓவியம்
தன்னைச் சட்டமிட்டுக் கொள்கிறது
ஒருபோதும் உறங்காத ரெட்டை வாழிடத்தில்” – என்ற வரியை எழுதியவர் யார்?
A) கந்தர்வன்
B) காசி ஆனந்தன்
C) சுகிர்தராணி
D) சல்மா
விளக்கம்: “எட்டாத தொலைவில் நின்று
பனையோலைகளில் தேநீர் அருந்துகையில்
உதட்டிலிருந்து வழியும் சாதியின் வலி
காலணிகளற்ற பாதங்களை நனைக்க
என் கிராமத்தின் ஓவியம்
தன்னைச் சட்டமிட்டுக் கொள்கிறது
ஒருபோதும் உறங்காத ரெட்டை வாழிடத்தில்” – சுகிர்தராணி
132) மெய்ப்பொருளின் தன்மையினையும் பிறவியற்ற பேரின்ப நிலையை எய்தும் வழியினையும் பாடிய சித்தர் யார்?
A) குதம்பைச் சித்தர்
B) இடைக்காட்டுச் சித்தர்
C) கடுவெளிச்சித்தர்
D) அகத்தியர்
விளக்கம்: இடைக்காடு என்ற ஊரில் பிறந்ததனால் இவர் இடைக்காட்டுச் சித்தர் என்று அழைக்கப்பட்டார். இவர் போகர் என்ற சித்தரின் சீடர். ‘இடைக்காடர் ஞான சூத்திரம் எழுபது’ என்பது இவருடைய நூல். மெய்ப்பொருளின் தன்மையினையும் பிறவியற்ற பேரின்ப நிலையை எய்தும் வழியினையும் இவர் பாடியுள்ளார்.
133) சிற்றிலக்கியங்களின் காலத்தை தேர்வு செய்க.
A) கி.பி3ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 6ஆம் நூற்றாண்டு வரை
B) கி.பி12ஆம் நூற்றாண்டு முதல் கி.பி17ஆம் நூற்றாண்டு வரை
C) கி.பி7ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 15ஆம் நூற்றாண்டு வரை
D) வரையறை செய்ய இயலாது
விளக்கம்: சிற்றிலங்கியங்களின் காலத்தைக் குறிப்பிட்ட வரையறைக்குள் அடக்கிவிட இயலாது. சங்கம் முதல் இன்றுவரை பெரிதும் சிறிதுமாக இவ்வகை இலக்கியம் தொடர்ந்து எழுதப்பட்டு வருகிறது.
134) யமகம், மாலை, கலம்பகம், தசாங்கம், புராணம் முதலியன விரித்துப் பாடுவோன்_______________கவி?
A) ஆசுகவி
B) மதுரகவி
C) சித்திரகவி
D) வித்தாரகவி
விளக்கம்: கவிபாடும் புலவர்களை கவிபாடும் திறனுக்கேற்ப ஆசுகவி, மதுரகவி. சித்திரகவி, வித்தாரகவி என நான்கு வகையாகப் பகுத்துக்கூறுவர். யமகம், மாலை, கலம்பகம், தசாங்கம், புராணம் முதலியன விரித்துப் பாடுவோர் வித்தாரகவி. இத்தகைய கவிகளைப் பாடுவோர் பனுவர் எனப்பட்டனர்.
135) “பள்ளிக்குப் போகாத சிறுமி
செல்லமாய்க் குட்டும்
ஆலங்கட்டி மழை” என்ற வரியை எழுதியவர் யார்?
A) அறிவுமதி
B) மித்ரா
C) வைகறை
D) ஞானக்கூத்தன்
விளக்கம்: “பள்ளிக்குப் போகாத சிறுமி
செல்லமாயக் குட்டும்
ஆலங்கட்டி மழை” – அறிவுமதி.
136) பொருளடி, பாவணி முதலியன தந்து, மற்றொருவன் பாடுக என்ற உடனே பாடுவோன் யார்?
A) ஆசுகவி
B) மதுரகவி
C) சித்திரகவி
D) வித்தாரகவி
விளக்கம்: கவிபாடும் புலவர்களை கவிபாடும் திறனுக்கேற்ப ஆசுகவி, மதுரகவி. சித்திரகவி, வித்தாரகவி என நான்கு வகையாகப் பகுத்துக்கூறுவர். பொருளடி, பாவணி முதலியன தந்து, மற்றொருவன் பாடுக என்ற உடனே பாடுவோர் ஆசுகவி.
137) திருமங்கையாழ்வாரை தொடர்ந்து சித்திரக்கவியைப் பாடியவர் யார்?
A) அருணகிரிநாதர்
B) பாம்பன் சுவாமிகள்
C) தொண்டரடிப்பொடியாழ்வார்
D) திருபாணாழ்வார்
விளக்கம்: திருமங்கையாழ்வாரால் பாடப்பட்ட ‘திருவெழுக்கூற்றிருக்கை’ ஓவியப் பாங்குடன் அமைந்த சித்திரக்கவி. இவரைப் பின்பற்றி அருணகிரிநாதரும் சித்திரக்கவிகளைப் பாடியுள்ளார். இவர்களின் வரிசையில் பாம்பன் சுவாமிகளும் சித்திரகவிகள் படைத்துள்ளார்.
138) இரட்டை நாகபந்தம் என்பது கீழ்க்காணும் எதற்கு பொருத்தமானது?
A) பாம்பின் தலைப்பகுதியிலிருந்து தொடங்கி வால்பகுதி வரைசென்று பொருள்காண வேண்டும்
B) பாம்பின் வால்பகுதி தொடங்கி தலைப்பகுதிவரை சென்று பொருள்காண வேண்டும்
C) பாம்பின் தலை அல்லது வால்பகுதி தொடங்கி அதன் மறுபகுதிவரை சென்று பொருள்காண வேண்டும்
D) மேற்காணும் எதுவுமில்லை
விளக்கம்: இரண்டு பாம்புகள் ஒன்றோடு ஒன்று பின்னிப்புணர்ந்து விளையாடுவன போலச் சித்திரம் வரைந்து, அப்பாம்பின் உருவங்களில் கணக்கிட்ட அறைகள் வகுத்துச் சந்திகளில் நின்ற அறைகளில் பொதுவான எழுத்துகளமையப் பாடப்படுவது இரட்டை நாகபந்தம் ஆகும். இப்பாடலைப் பாம்பின் தலைப்பகுதியிலிருந்து தொடங்கி வால்பகுதி வரைசென்று பொருள் காண வேண்டும்.
139) கீழ்க்காணும் எதனை ‘ஓவியப்பா’ என்றும் கூறுவர்?
A) ஆசுகவி
B) மதுரகவி
C) சித்திரகவி
D) வித்தாரகவி
விளக்கம்: சித்திரகவியை ‘ஓவியப்பா’ என்றும் கூறுவர். சித்திரகவி என்பது தமிழில் காணப்படும் இலக்கிய வகைமைகளுள் ஒன்று.
140) பல்லவர்கள் காலத்தில் பக்தி இலக்கியங்கள் செழித்தோங்கியதைப் போல, யாருடைய காலத்தில் சிற்றிலக்கியங்கள் செழித்தோங்கின?
A) சோழர்கள்
B) சேரர்கள்
C) பாண்டியர்கள்
D) நாயக்கர்கள்
விளக்கம்: சிற்றிலக்கியங்கள் வட்டார சார்புடையவை. பல்லவர்கள் காலத்தில் பக்தி இலக்கியங்கள் செழித்தோங்கியதைப் போல, நாயக்கர் காலத்தில் சிற்றிலக்கியங்கள் செழித்தன.
141) அறம், பொருள், இன்பம் ஆகியவற்றை உணர்த்தும் இலக்கியங்கள் எது?
A) பேரிலக்கியங்கள்
B) சிற்றிலக்கியங்கள்
C) நாட்டுப்புற பாடல்கள்
D) சித்தர் பாடல்கள்
விளக்கம்: பேரிலக்கியங்கள் அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கையும் உணர்த்துவதற்காக எழுந்தன. இவற்றுள் ஒன்றோ பலவோ குறைந்து வரும் தன்மையில் அமைந்த இலக்கியங்கள் சிற்றிலக்கியங்கள் ஆகும்.
142) கூற்றுகளை ஆராய்க. (குதம்பைச் சித்தர்)
1. பாடல்களில் ‘குதம்பாய்’ என்று மகடூஉ முன்னிலை வருவதால், குதம்பைச் சித்தர் என்று பெயர் பெற்றார்.
2. இவர் பாடல்களில் சித்தர்களின் இயல்புகள் பேசப்படுகின்றன.
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: 1. பாடல்களில் ‘குதம்பாய்’ என்று மகடூஉ முன்னிலை வருவதால், குதம்பைச் சித்தர் என்று பெயர் பெற்றார்.
2. இவர் பாடல்களில் சித்தர்களின் இயல்புகள் பேசப்படுகின்றன.
143) காந்திமதி அம்மை மீது பிள்ளைத்தமிழ் மாலை, அந்தாதி போன்றவற்றை பாடியவர் யார்?
A) சுந்தர கவிராயர்
B) அருணாச்சலத்துரை
C) தையூர் முத்து
D) அழகிய சொக்கநாதர்
விளக்கம்: திருநெல்வேலி மாவட்டத்தைச் சார்ந்த அழகிய சொக்கநாதர் சிலேடை பாடுவதில் வல்லவர். இவர் பாடிய தனிப்பாடல்கள் இருபத்தைந்திற்கும் மேற்பட்டவை. முத்துசாமி என்பவர் இவரை ஆதரித்தவர் ஆவார். இவர் 18-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவர். காந்திமதி அம்மை மீது பிள்ளைத்தமிழ் மாலை, அந்தாதி போன்றவற்றை பாடியுள்ளார்.
144) “அகதி முகாம்
மழையில் வருகிறது
மண்வாசனை” என்ற ஹைக்கூ கவிதையை எழுதியவர் யார்?
A) அறிவுமதி
B) மித்ரா
C) வைகறை
D) ஞானக்கூத்தன்
விளக்கம்: “அகதி முகாம்
மழையில் வருகிறது
மண்வாசனை” – அறிவுமதி
145) “சில சமயங்களில் உனக்குத் தெரிவதில்லை
சிறிய எறும்புகளை மிதித்தபடி நீ நடந்து போவதை” – என்ற வரியை எழுதியவர் யார்?
A) மித்ரா
B) வைகறை
C) லிவிங் ஸ்மைல் வித்யா
D) பனிமலர்
விளக்கம்: “சில சமயங்களில் உனக்குத் தெரிவதில்லை
சிறிய எறும்புகளை மிதித்தபடி நீ நடந்து போவதை
சில சமயங்களில் நீ உணர்வதில்லை
பசும்புல்லை நசுக்கியபடி கடந்து போவதை
தெரிந்தும் உணர்ந்தும்
கடந்து போகிறாய்
என் அந்தரங்கத்தை மிதித்தபடி….
யார் எவர் என்று தெரியாமல்
தொடர்ந்து மிதபட்டே வருகிறோம்
நானும் இருண்ட என் எதிர்காலமும்” – லிவிங் ஸ்மைல் வித்யா
146) 16ஆம் நூற்றாண்டில் ஜப்பானில் தோன்றிய பழைமையான ‘ரென்கா’ பாடல் மரபிலிருந்து ‘ஹைக்கூ’ கவிதை உருவானது. இக்கவிதை வடிவத்தினைத் தமிழுக்கு அறிமுகம் செய்தவர் யார்?
A) பாரதியார்
B) பாரதிதாசன்
C) ந.பிச்சமூர்த்தி
D) பாரதிதாசன்
விளக்கம்: உலகளாவிய கவிதை வடிவங்களைப் பின்பற்றித் தமிழ்ச்சூழலுக்கேற்ற உள்ளடங்களுடன் ஹைக்கூ, லிமெரிக், லிமெரைக்கூ, சென்ரியூ ஆகிய வடிவங்களில் கவிதைகள் எழுதப்படுகின்றன. 16ஆம் நூற்றாண்டில் ஜப்பானில் தோன்றிய பழைமையான ‘ரென்கா’ பாடல் மரபிலிருந்து ‘ஹைக்கூ’ கவிதை உருவானது. இக்கவிதை வடிவத்தினைத் தமிழுக்கு அறிமுகம் செய்தவர் பாரதியார்.
147) கூற்றுகளை ஆராய்க.
1. சிற்றிலக்கியங்கள் அகத்தியம் கூறும் ‘விருந்து’ என்னும் வனப்பினுள் அடங்கும்.
2. சிற்றிலக்கியங்கள் வட்டாரச் சார்பற்றவை
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: 1. சிற்றிலக்கியங்கள் தொல்காப்பியர் கூறும் ‘விருந்து’ என்னும் வனப்பினுள் அடங்கும்.
2. சிற்றிலக்கியங்கள் வட்டாரச் சார்புடையவை
148) கவிபாடும் புலவர்களை அவர்கள் கவிபாடும் திறனுக்கேற்ப எத்தனை வகையாக பிரிப்பர்?
A) 2
B) 3
C) 4
D) 5
விளக்கம்: கவிபாடும் புலர்வகளை, அவர்களின் கவிபாடும் திறனுக்கேற்ப ஆசுகவி, மதுரகவி, சித்திரகவி, வித்தாரகவி என நான்கு வகையாகப் பகுத்துக்கூறுவர்.
149) ‘திருவெழுக்கூற்றிருக்கை’ என்பது ஓவியப் பாங்குடன் அமைந்த சித்திரகவி. இதனை எழுதியவர் யார்?
A) திருமழிசையாழ்வார்
B) திருமங்கையாழ்வார்
C) திருப்பாணாழ்வார்
D) தொண்டரடிப்பொடியாழ்வார்
விளக்கம்: திருமங்கையாழ்வாரால் பாடப்பட்ட ‘திருவெழுக்கூற்றிருக்கை’ ஓவியப் பாங்குடன் அமைந்த சித்திரக்கவி. இவரைப் பின்பற்றி அருணகிரிநாதரும் சித்திரக்கவிகளைப் பாடியுள்ளார். இவர்களின் வரிசையில் பாம்பன் சுவாமிகளும் சித்திரகவிகள் படைத்துள்ளார்
150) “தந்தை தந்த
தாய்ப்பால்
முப்பால்” என்ற ஹைக்கூ கவிதையை எழுதியவர் யார்?
A) அறிவுமதி
B) மித்ரா
C) வைகறை
D) ஞானக்கூத்தன்
விளக்கம்: “தந்தை தந்த
தாய்ப்பால்
முப்பால்” – அறிவுமதி
151) இரட்டை நாகபந்தம் என்பது இரண்டு பாம்புகள் ஒன்றோடு ஒன்று பின்னிப்புணர்ந்து விளையாடுவன. இதில் எழுத்துகள் அமைக்கும் முறையில் தவறான ஒன்றை தெரிவு செய்க.
A) வால்பகுதி- மூன்று எழுத்து
B) தலைப்பகுதி- இரண்டு எழுத்து
C) மூலைப் பகுதி- ஐந்து எழுத்து
D) வயிற்றுப் பகுதி – நான்கு எழுத்து
விளக்கம்: வால்பகுதி – மூன்று எழுத்து
தலைப்பகுதி- இரண்டு எழுத்து
மூலைப் பகுதி- ஐந்து எழுத்து
வயிற்றுப் பகுதி- ஐந்து எழுத்து
152) “சந்திப்பிழை போன்ற
சந்ததிப்பிழை நாங்கள்
காலத்தின் பேரேட்டைக்
கடவுள் திருத்தட்டும்” என்ற வரிகளில் குறிப்பிடப்படுபவர் யார்?
A) பெண்கள்
B) உடல் ஊனமுற்றவர்கள்
C) கண்பார்வையற்றவர்கள்
D) திருநங்கைகள்
விளக்கம்: “காலமழைத் தூறலிலே
களையாய்ப் பிறப்பெடுத்தோம்
தாயப்பாலின் சரித்திரத்தில்
சதிராடும் புதிரானோம்
விதை வளர்த்த முள்ளானோம்
விளக்கின் இருளானோம்
சந்திப்பிழை போன்ற
சந்ததிப்பிழை நாங்கள்
காலத்தின் பேரேட்டைக்
கடவுள் திருத்தட்டும்” – நா.காமராசன்
திருநங்கையரின் கோணத்திலிருந்து பேசும் இக்கவிதைகள் அழகான படிமங்களோடு வெளிப்படுகின்றன. அவர்களை ஏற்றுக்கொண்டு, அரவணைத்துச் செல்லவேண்டுமென்கிற உணர்வை நமக்குள் ஏற்படுத்துகின்றன.
153) கூற்றுகளை ஆராய்க
1. ஓவியப்பாவின் வகைகளுள் ‘நாகபந்தம்’ என்பதும் ஒன்று.
2. இரண்டு, நான்கு, எட்டு என நாகப்பாம்புகள் ஒன்றோடொன்று பின்னிக்கொண்டிருப்பது போலப்படம் வரையப்படும்
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: 1. ஓவியப்பாவின் வகைகளுள் ‘நாகபந்தம்’ என்பதும் ஒன்று.
2. இரண்டு, நான்கு, எட்டு என நாகப்பாம்புகள் ஒன்றோடொன்று பின்னிக்கொண்டிருப்பது போலப்படம் வரையப்படும்
154) “முத்தெடுக்க மூழ்குகின்றான் சீலன்
முன்னாலே வந்து நின்றான் காலன்
சத்தமின்றி, வந்தவனின்
கைத் தலத்திற் பத்து முத்தைப்
பொத்தி வைத்தான் போனான் முச்சூலன்” என்ற கவிதை வரியை எழுதியவர் யார்?
A) அறிவுமதி
B) வைகறை
C) மகாகவி
D) அமுதபாரதி
விளக்கம்: “முத்தெடுக்க மூழ்குகின்றான் சீலன்
முன்னாலே வந்து நின்றான் காலன்
சத்தமின்றி, வந்தவனின்
கைத் தலத்திற் பத்து முத்தைப்
பொத்தி வைத்தான் போனான் முச்சூலன்” – மகாகவி
155) கூற்று: கீர்த்தனை என்பது இசைப்பாடல் என்பர்.
காரணம்: இசைக்கூறுகள் மிகுந்து காணப்படுகிறது.
A) கூற்று சரி, காரணம் தவறு
B) கூற்று தவறு, காரணம் சரி
C) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது
D) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை
விளக்கம்: சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று கீர்த்தனை. கீர்த்தி என்னும் சொல்லுக்குப் புகழ், இசை எனப் பல பொருளுண்டு. கீர்த்தனை என்பதை இசைப்பாடல் என்பர். இசைக்கூறுகள் மிகுந்து காணப்படுவதால் இது கீர்த்தனை எனப் பெயர்பெற்றது.
156) ‘ஹைக்கூ’ பற்றிய தவறான கூற்றை தேர்வு செய்க
A) 16ஆம் நூற்றாண்டில் ஜப்பானில் தோன்றிய பழைமையான ‘ரென்கா’ பாடல் மரபிலிருந்து ‘ஹைக்கூ’ கவிதை உருவானது. இக்கவிதை வடிவத்தினைத் தமிழுக்கு அறிமுகம் செய்தவர் பாரதியார்.
B) ஹைக்கூ கவிதை நான்கு வரிகளால் ஆனது.
C) ஹைக்கூ கவிதையின் முதல் இரண்டு வரிகளில் கூறப்படும் கருத்தை மூன்றாவது வரி விடுவிக்கும்.
D) மிக நுணுக்கமான ஒரு காட்சி அல்லது ஓர் அனுபவப் பதிவைக் கொண்டிருக்கும் ஹைக்கூ, கடைசி வரியில் படிப்பவரின் மனத்தில் வெளிச்சமான ஓர் உணர்வை ஏற்படுத்திவிடும்.
விளக்கம்: 16ஆம் நூற்றாண்டில் ஜப்பானில் தோன்றிய பழைமையான ‘ரென்கா’ பாடல் மரபிலிருந்து ‘ஹைக்கூ’ கவிதை உருவானது. இக்கவிதை வடிவத்தினைத் தமிழுக்கு அறிமுகம் செய்தவர் பாரதியார்.
ஹைக்கூ கவிதை மூன்று வரிகளால் ஆனது.
ஹைக்கூ கவிதையின் முதல் இரண்டு வரிகளில் கூறப்படும் கருத்தை மூன்றாவது வரி விடுவிக்கும்.
மிக நுணுக்கமான ஒரு காட்சி அல்லது ஓர் அனுபவப் பதிவைக் கொண்டிருக்கும் ஹைக்கூ, கடைசி வரியில் படிப்பவரின் மனத்தில் வெளிச்சமான ஓர் உணர்வை ஏற்படுத்திவிடும்.
157) கீழ்க்காண்பனவற்றில் எது கீர்த்தனையாக வளர்ச்சி பெற்றுள்ளது?
A) பிள்ளைத்தமிழ்
B) சிந்து
C) பள்ளு
D) கலம்பகம்
விளக்கம்: ‘சிந்து’ என்ற பாடல் வகையே கீர்த்தனைகளாக வளர்ச்சி பெற்றுள்ளது. கீர்த்தனைகளில் சுரத்தைவிடச் சொற்களுக்குத்தான் முதன்மை அளிக்கப்படுகிறது.
158) திருநெல்வேலி மாவட்டத்தைச் சார்ந்த அழகிய சொக்கநாதர் சிலேடை பாடுவதில் வல்லவர். இவரை ஆதரித்தவர் யார்?
A) சுந்தர கவிராயர்
B) அருணாச்சலத்துரை
C) தையூர் முத்து
D) முத்துசாமி
விளக்கம்: திருநெல்வேலி மாவட்டத்தைச் சார்ந்த அழகிய சொக்கநாதர் சிலேடை பாடுவதில் வல்லவர். இவர் பாடிய தனிப்பாடல்கள் இருபத்தைந்திற்கும் மேற்பட்டவை. முத்துசாமி என்பவர் இவரை ஆதரித்தவர் ஆவார். இவர் 18-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவர். காந்திமதி அம்மை மீது பிள்ளைத்தமிழ் மாலை, அந்தாதி போன்றவற்றை பாடியுள்ளார்.
159) கீழ்க்காணும் கூற்றுகளில் செய்யிது ஆசியா உம்மா கூறியவற்றில் பொருந்தாதது எது?
A) எத்தனை வேதங்களை எம்முறையில் கற்றாலும் அறிவில் தெளிவு அடையாதவர் தெளிவு அடைவதே பேரின்ப நிலையாகும்.
B) சேர்ந்த பொருட்செல்வங்களும் இந்த உலகில் சேர்ந்த உறவினர்களும் நேர்மையாகச் சேர்த்த சொத்துக்களும் இறுதி நாளில் இவ்வுலகை விட்டுப் பிரிகையில் நிலைத்து நம்மோடு வருவதில்லை. பேரானந்த நிலையே இறுதியில் நிலையானது.
C) ஆண் என்பதும் பெண் என்பதும் அன்றிலிருந்து இன்றுவரை இருக்கின்றன பழைமைதானே தவிர, வேறில்லை. ‘தான்’ என்பதை அறியும் நிலையே பேரானந்தமாகும்.
D) என் உடல் உயிராகிய அனைத்தும் நீங்கள் தந்ததேயன்றி வேறில்லை. இதற்கு இப்பரந்த உலகம் முழுவதையும் கைம்மாறாகக் கொடுத்தாலும் ஈடாகாது.
விளக்கம்: என் உடல் உயிராகிய அனைத்தும் நீங்கள் தந்ததேயன்றி வேறில்லை. இதற்கு இப்பரந்த உலகம் முழுவதையும் கைம்மாறகக் கொடுத்தாலும் ஈடாகாது – மாயூர் வேதநாயகர்.
160) கீர்த்தனைகள் எத்தனை நிலைகளில் அமையப்பெறும்?
A) 2
B) 3
C) 4
D) 5
விளக்கம்: ‘சிந்து’ என்ற பாடல் வகையே கீர்த்தனைகளாக வளர்ச்சி பெற்றுள்ளது. கீர்த்தனைகளில் சுரத்தைவிடச் சொற்களுக்குத்தான் முதன்மை அளிக்கப்படுகிறது. இப்பாடல்கள் பல்லவி, அநுபல்லவி, சரணம் என்ற மூன்று நிலைகளில் அமையப்பெறும்.
161) கூற்றுகளை ஆராய்க.
1. செய்யிது ஆசியா உம்மா என்பவர் கல்வத்து நாயகத்தின் சீடர் ஆவார்.
2. மெய்ஞ்ஞான தீப இரத்தினம், மாலிக இரத்தினம் ஆகிய பால்களை அரபுத்தமிழ் வடிவத்தில் இயற்றினார்.
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: 1. செய்யிது ஆசியா உம்மா என்பவர் கல்வத்து நாயகத்தின் சீடர் ஆவார்.
2. மெய்ஞ்ஞான தீப இரத்தினம், மாலிக இரத்தினம் ஆகிய பால்களை அரபுத்தமிழ் வடிவத்தில் இயற்றினார்.
162) “சில சமயங்களில் நீ உணர்வதில்லை
பசும்புல்லை நசுக்கியபடி கடந்து போவதை” என்ற வரியை எழுதியவர் யார்?
A) மித்ரா
B) வைகறை
C) லிவிங் ஸ்மைல் வித்யா
D) பனிமலர்
விளக்கம்: “சில சமயங்களில் உனக்குத் தெரிவதில்லை
சிறிய எறும்புகளை மிதித்தபடி நீ நடந்து போவதை
சில சமயங்களில் நீ உணர்வதில்லை
பசும்புல்லை நசுக்கியபடி கடந்து போவதை
தெரிந்தும் உணர்ந்தும்
கடந்து போகிறாய்
என் அந்தரங்கத்தை மிதித்தபடி….
யார் எவர் என்று தெரியாமல்
தொடர்ந்து மிதபட்டே வருகிறோம்
நானும் இருண்ட என் எதிர்காலமும்” – லிவிங் ஸ்மைல் வித்யா
163) ____________நூற்றாண்டில் தோன்றி, வளர்ந்த சிற்றிலக்கிய வடிவம் பிற்காலத்தில் மக்களின் சிக்கல்களையும் பேசத் தொடங்கியது?
A) 15
B) 17
C) 18
D) 20
விளக்கம்: 17-ஆம் நூற்றாண்டில் தோன்றி, வளர்ந்த சிற்றிலக்கிய வடிவம் பிற்காலத்தில் மக்களின் சிக்கல்களையும் பேசத் தொடங்கியது.
164) மாயூரம் வேதநாயகர் பாடிய கீர்த்தனை எது?
A) சர்வ சமயக் கீர்த்தனைகள்
B) சர்வ சமரசக் கீர்த்தனைகள்
C) சர்வ சமய சமரசக் கீர்த்தனைகள்
D) சர்வ மதக் கீர்த்தனைகள்
விளக்கம்: கீரத்தனைப் பாடல்களை சமரச நோக்கத்தோடு பாடியவர் மாயூரம் வேதநாயகர் ஆவார். இவர் பாடிய இசைப்பாடல் நூல் ‘சர்வ சமய சமரசக் கீர்த்தனைகள்’ ஆகும். இந்நூலில் 192 கீர்த்தனை பாடல்கள் இடம் பெற்றுள்ளன.
165) அழகிய சொக்கநாதர் இப்பாடல்களைப் பாடுவதில் வல்லவர்?
A) சித்திரகவி
B) சிலேடைப்பாடல்
C) அந்தாதிப்பாடல்
D) நாட்டுப்புறப்பாடல்
விளக்கம்: திருநெல்வேலி மாவட்டத்தைச் சார்ந்த அழகிய சொக்கநாதர் சிலேடை பாடுவதில் வல்லவர் ஆவார். இவர் பாடிய தனிபாடல்கள் 25க்கும் மேற்பட்டவை ஆகும்.
166) “கீர்த்தனை” என்பது கீழ்க்காணும் எதனோடு தொடர்புடையது?
A) நாட்டுப்புறப்பாடல்
B) சித்தர்பாடல்கள்
C) சிற்றிலக்கியங்கள்
D) தனிப்பாடல்
விளக்கம்: சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று கீர்த்தனை. கீர்த்தி என்னும் சொல்லுக்குப் புகழ், இசை எனப் பல பொருளுண்டு. கீர்த்தனை என்பதை இசைப்பாடல் என்பர். இசைக்கூறுகள் மிகுந்து காணப்படுவதால் இது கீர்த்தனை எனப் பெயர் பெற்றது.
167) “ஆயிரம் ஈக்கள்
மொய்க்கும் ஆசையில்
வானத் தட்டில்
இராத்திரிக் கிழவி
சுட்டு வைத்த
ஒற்றைத் தோசையில்” என்ற குக்கூ கவிதையை எழுதியவர் யார்?
A) மீரா
B) பாரதியார்
C) சுரதா
D) ஈரோடு தமிழன்பன்
விளக்கம்: “ஆயிரம் ஈக்கள்
மொய்க்கும் ஆசையில்
வானத் தட்டில்
இராத்திரிக் கிழவி
சுட்டு வைத்த
ஒற்றைத் தோசையில்” – மீரா
168) மராத்தியில் கவிதா மகாஜன் எழுதிய கவிதையை என்பசி என்னும் தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்தவர் யார்?
A) சல்மா
B) புதியமாதவி
C) அமுதபாரதி
D) தமிழன்பன்
விளக்கம்: மராத்தியில் கவிதா மகாஜன் எழுதிய கவிதையை என்பசி என்னும் தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்தவர் புதிய மாதவி ஆவார்
169) கூற்றுகளை ஆராய்க.
1. நாடோடிப்பாடல், பாமரப்பாடல், மரபுவழிப்பாடல், ஏட்டிலெழுதாக் கவிதை, மக்கள்பாடல், பரம்பரைப்பாடல், நாட்டார்பாடல் என்று பல்வேறு பெயர்களில் நாட்டுப்புறப் பாடல் அழைக்கப்படுகிறது.
2. தனித்தனிப் புலவர்களால் பல்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்ட பாடல்களைத் தனிப்பாடல்கள் என்கிறோம்.
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: 1. நாடோடிப்பாடல், பாமரப்பாடல், மரபுவழிப்பாடல், ஏட்டிலெழுதாக் கவிதை, மக்கள்பாடல், பரம்பரைப்பாடல், நாட்டார்பாடல் என்று பல்வேறு பெயர்களில் நாட்டுப்புறப் பாடல் அழைக்கப்படுகிறது.
2. தனித்தனிப் புலவர்களால் பல்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்ட பாடல்களைத் தனிப்பாடல்கள் என்கிறோம்.
170) சிலேடை பாடுவதில் வல்லவரான அழகிய சொக்கநாதர் எந்த மாவட்டத்தைச் சார்ந்தவர்?
A) தூத்துக்குடி
B) திருநெல்வேலி
C) சிவகங்கை
D) கடலூர்
விளக்கம்: திருநெல்வேலி மாவட்டத்தைச் சார்ந்த அழகிய சொக்கநாதர் சிலேடை பாடுவதில் வல்லவர். இவர் பாடிய தனிப்பாடல்கள் இருபத்தைந்திற்கும் மேற்பட்டவை. முத்துசாமி என்பவர் இவரை ஆதரித்தவர் ஆவார். இவர் 18-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவர். காந்திமதி அம்மை மீது பிள்ளைத்தமிழ் மாலை, அந்தாதி போன்றவற்றை பாடியுள்ளார்.
171) மாயூரம் வேரநாயகர் தாம் பாடிய “சர்வ சமய சமரசக் கீர்த்தனைகள்”- யை எத்தனை வகையாக வகைப்படுத்தியுள்ளார்?
A) 2
B) 3
C) 4
D) 5
விளக்கம்: வேதநாயகர் தாம் எழுதிய சர்வ சமய சமரசக் கீர்த்தனையை ஐந்தாக வகைப்படுத்தியுள்ளார் . அவை,
1.தேவதோத்திரக் கீர்த்தனைகள்
2.ஈசுவர வருடத்துப் பஞ்சத்தைப் பற்றிய கீர்த்தனைகள்
3. ஹிதோபதேசக் கீர்த்தனைகள்
4. உத்தியோக சம்பந்தக் கீர்த்தனைகள்
5.குடும்ப சம்பந்தக் கீர்த்தனைகள்
172) உலகில் மூலப்பொருளை, மௌனமாய் உணர்ந்து அறிந்தால், என்றும் இளமையாய் இருக்கும் நிலை உண்டாகும். அதுவே அமைதி நிலையாகும் என்று கூறியவர் யார்?
A) மாயூரம் வேதநாயகர்
B) செய்யிது ஆசியா உம்மா
C) ஈரோடு தமிழன்பன்
D) பாரதிதாசன்
விளக்கம்: உலகில் மூலப்பொருளை, மௌனமாய் உணர்ந்து அறிந்தால், என்றும் இளமையாய் இருக்கும் நிலை உண்டாகும். அதுவே அமைதி நிலையாகும் – செய்யிது ஆசியா உம்மா.
173) வேதநாயகர் எந்த மாவட்டத்தில் பிறந்தார்?
A) தஞ்சாவூர்
B) நாகப்பட்டினம்
C) திருச்சிராப்பள்ளி
D) சிவகங்கை
விளக்கம்: வேதநாயகர் திருச்சிராப்பள்ளி அருகில் உள்ள குளத்தூரில் பிறந்தவர். இவர் எழுதிய நூல் சர்வ சமய சமரசக் கீர்த்தனை ஆகும்.
174) கூற்று: மாயூரம் வேதநாயகர் எழுதிய நூல் “சர்வ சமய சமரசக் கீர்த்தனை” ஆகும்.
காரணம்: இவர் எல்லாச் சமயங்களுக்கும் பொதுவான இசைப் பாடல்களைப் பாடியுள்ளார்.
A) கூற்று சரி, காரணம் தவறு
B) கூற்று தவறு, காரணம் சரி
C) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது
D) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை
விளக்கம்: மாயூரம் வேதநாயகர் இயற்றிய நூல் – சர்வ சமய சமரக் கீர்த்தனை ஆகும். இந்நூலின் பெயருக்கு ஏற்ப, எல்லாச் சமயங்களுக்கும் பொதுவான இசைப்பாடல்களைப் பாடியுள்ளார். சமுதாயக் கருத்து, அறநெறிக்கருத்து, தாம் வாழ்ந்த காலச்சூழல் ஆகியவற்றின் அடிப்படையில் கீர்த்தனைகளைப் பாடியுள்ளார். இந்நூலில் 192 கீர்த்தனைப் பாடல்கள் இடம் பெற்றுள்ளன. மாயூரம் வேதநாயகர் இதனை ஐந்தாக வகைப்படுத்தியுள்ளார்.
175) கீழ்க்காணும் கூற்றுகளில் தவறான ஒன்றை தெரிவு செய்க.
A) தூய்மையான ஆன்மீகத் தேடலில் மானுட இருப்பினை மீட்பதே சூஃபிக்களின் நோக்கமாகும்.
B) சீதக்காதி மரபு வந்த ஹபீபு முகம்மது மரைக்காயருக்கும் ஹபீபு உம்மாவுக்கும் மகளாகப் பிறந்தவர் செய்யிது ஆசியா உம்மா ஆவார்.
C) ‘மெய்ஞ்ஞானப் பாடல்’ தொகுப்புநூல் – அலி இபின் அலி தாலிஃப்
D) சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று கீர்த்தனை ஆகும்.
விளக்கம்: தூய்மையான ஆன்மீகத் தேடலில் மானுட இருப்பினை மீட்பதே சூஃபிக்களின் நோக்கமாகும்.
சீதக்காதி மரபு வந்த ஹபீபு முகம்மது மரைக்காயருக்கும் ஹபீபு உம்மாவுக்கும் மகளாகப் பிறந்தவர் செய்யிது ஆசியா உம்மா ஆவார்.
‘மெய்ஞ்ஞானப் பாடல்’ தொகுப்புநூல் – செய்யிது ஆசியா உம்மா.
சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று கீர்த்தனை ஆகும்.
176) கூற்று: மாயூரம் வேதநாயகத்தை ஆங்கில அரசு நீதிமன்றத்தில் மொழிபெயர்ப்பாளராக பணியமர்த்தியது.
காரணம்: இவர் சிறுவயதிலேயே ஆங்கிலப் பயிற்சி பெற்றுள்ளார்.
A) கூற்று சரி, காரணம் தவறு
B) கூற்று தவறு, காரணம் சரி
C) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது
D) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை
விளக்கம்: மாயூரம் வேதநாயகர் திருச்சிராப்பள்ளி அருகில் உள்ள குளத்தூரில் பிறந்தவர். சிறுவயதிலேயே ஆங்கிலப் பயிற்சி பெற்றமையால், ஆங்கில அரசாங்கம் இவரை மாவட்ட நீதிமன்றத்தில் மொழிபெயர்ப்பாளராக பணியமர்த்தியது.
177) இரவு என்பதனைக் குறிக்கும் இருசொல் இணையைத் தேர்ந்தெடுக்க
A) கங்குல், பகல்
B) நிசி, பகல்
C) கங்குல், அல்
D) அல், பகல்
விளக்கம்: கங்குல், அல் – இரவு
178) “குழந்தை வளர்ந்த தொட்டில்
கிழிந்து கந்தல் ஆன பின்னம்
பாடும் தாய்மை மெட்டில்” என்ற லிமெரைக்கூ கவிதையை எழுதியவர் யார்?
A) மீரா
B) பாரதியார்
C) சுரதா
D) ஈரோடு தமிழன்பன்
விளக்கம்: “குழந்தை வளர்ந்த தொட்டில்
கிழிந்து கந்தல் ஆன பின்னும்
பாடும் தாய்மை மெட்டில்” – ஈரோடு தமிழன்பன்
179) “தெரிந்தும் உணர்ந்தும்
கடந்து போகிறாய்
என் அந்தரங்கத்தை மிதித்தபடி….” என்ற வரிகளை எழுதியவர் யார்?
A) மித்ரா
B) வைகறை
C) லிவிங் ஸ்மைல் வித்யா
D) பனிமலர்
விளக்கம்: “சில சமயங்களில் உனக்குத் தெரிவதில்லை
சிறிய எறும்புகளை மிதித்தபடி நீ நடந்து போவதை
சில சமயங்களில் நீ உணர்வதில்லை
பசும்புல்லை நசுக்கியபடி கடந்து போவதை
தெரிந்தும் உணர்ந்தும்
கடந்து போகிறாய்
என் அந்தரங்கத்தை மிதித்தபடி….
யார் எவர் என்று தெரியாமல்
தொடர்ந்து மிதபட்டே வருகிறோம்
நானும் இருண்ட என் எதிர்காலமும்” – லிவிங் ஸ்மைல் வித்யா
180) கூற்று: மெய்ஞ்ஞானத் தேடலையும் மறைபொருள் சார்ந்த ஆன்மீக உட்பரிமாணத்தையும் குறிப்பதே சூஃபித்துவம் ஆகும்.
காரணம்: தூய்மையான ஆன்மீகத் தேடலில் மானுட இருப்பினை மீட்பதே சூஃபிக்களின் நோக்கமாகும்.
A) கூற்று, காரணம் இரண்டும் தவறு
B) கூற்று, காரணம் இரண்டும் சரி
C) கூற்று சரி காரணம் தவறு
D) கூற்று தவறு, காரணம் சரி
விளக்கம்: மெய்ஞ்ஞானத் தேடலையும் மறைபொருள் சார்ந்த ஆன்மீக உட்பரிமாணத்தையும் குறிப்பதே சூஃபித்துவம் ஆகும். தூய்மையான ஆன்மீகத் தேடலில் மானுட இருப்பினை மீட்பதே சூஃபிக்களின் நோக்கமாகும்.
181) கூற்றுகளை ஆராய்க.
1. ஓவியப்பாவின் வகைகளுள் ஒன்றான நாகபந்தம் என்பதனை ‘நாகப்பிணை’ என்றும் குறிப்பிடலாம்.
2. பாடல் ஒன்றின் எழுத்துக்கள் நாகங்களின் தலையிலிருந்து வால் வரையில் உள்ள கட்டங்களில் எழுதப்பட்டிருக்கும்.
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: 1. ஓவியப்பாவின் வகைகளுள் ஒன்றான நாகபந்தம் என்பதனை ‘நாகப்பிணை’ என்றும் குறிப்பிடலாம்.
2. பாடல் ஒன்றின் எழுத்துக்கள் நாகங்களின் தலையிலிருந்து வால் வரையில் உள்ள கட்டங்களில் எழுதப்பட்டிருக்கும்.
182) “எனக்கொரு சுகம்வரில் உமக்குவந் ததுபோல்
எக்களிப் படைந்தீரே
எனக்கொரு துயர்வரில் உமக்குவந் ததுபோல்
ஏங்கிஉள் ளுடைந்தீரே” என்ற வரிகளை எழுதியவர் யார்?
A) அப்துல் ரகுமான்
B) தமிழன்பன்
C) ஞானக்கூத்தன்
D) மாயூரம் வேதநாயகர்
விளக்கம்: “எனக்கொரு சுகம்வரில் உமக்குவந் ததுபோல்
எக்களிப் படைந்தீரே
எனக்கொரு துயர்வரில் உமக்குவந் ததுபோல்
ஏங்கிஉள் ளுடைந்தீரே” – மாயூர் வேதநாயகர்.
183) சூஃபித்துவம் பற்றிய கூற்றுகளில் தவறான கூற்றை ஆராய்க.
A) மெய்ஞ்ஞானத் தேடலையும் மறைபொருள் சார்ந்த ஆன்மீக உட்பரிமாணத்தையும் குறிப்பதே சூஃபித்துவம் ஆகும்.
B) சூஃபித்துவத்தின் ஆணிவேர், இசுலாத்தின் அடிப்படையான மனிதநேயத்திலும் ஆன்மீகத்திலும் வேரூன்றியுள்ளது.
C) சூஃபித்துவத்தின் தொடக்கப் புள்ளியாக ஆசிய உம்மா கருதப்படுகிறார்
D) தத்துவக்கோட்பாடுகளையும் அறிவு சார்ந்த தருக்கங்களையும் தாண்டி, ஆழ்ந்த அன்பையும் பக்தியையும் வலியுறுத்தும் அகத்தரிசனமே சூஃபித்துவத்தின் அடிப்படை.
விளக்கம்: மெய்ஞ்ஞானத் தேடலையும் மறைபொருள் சார்ந்த ஆன்மீக உட்பரிமாணத்தையும் குறிப்பதே சூஃபித்துவம் ஆகும்.
சூஃபித்துவத்தின் ஆணிவேர், இசுலாத்தின் அடிப்படையான மனிதநேயத்திலும் ஆன்மீகத்திலும் வேரூன்றியுள்ளது.
சூஃபித்துவத்தின் தொடக்கப் புள்ளியாக அலி இபின் அபி தாலிஃப் கருதப்படுகிறார்
தத்துவக்கோட்பாடுகளையும் அறிவு சார்ந்த தருக்கங்களையும் தாண்டி, ஆழ்ந்த அன்பையும் பக்தியையும் வலியுறுத்தும் அகத்தரிசனமே சூஃபித்துவத்தின் அடிப்படை.
184) தமிழில் முதன்முதலில் புதினத்தை எழுதியவர் யார்?
A) மாயூரம் வேதநாயகர்
B) வீரமாமுனிவர்
C) பரிதிமாற்கலைஞர்
D) பாரதியார்
விளக்கம்: பொ.ஆ.1876 ஆம் ஆண்டு வெளியான ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ என்னும் புதினம் தமிழில் வெளியான முதல் புதினம் ஆகும். இப்புதினத்தை எழுதியவர் மாயூரம் வேதநாயகர் ஆவார். இவர் திருச்சிராப்பள்ளியிலுள்ள குளத்தூரில் பிறந்தவர் ஆவார்.
185) ஏட்டிலெழுதாக்கவிதை என அழைக்கப்படுவது எது?
A) நாட்டார் பாடல்கள்
B) சங்கப்பாடல்கள்
C) கீர்த்தனைகள்
D) காப்பியப்பாடல்கள்
விளக்கம்: நாட்டார் பாடல்கள் ஏட்டில் எழுதக் கவிதைகள் என்று அழைக்கப்படுகின்றன. இதன் வேறுபெயர்கள். நாடோடிப்பாடல்கள், நாட்டுப்புறப்பாடல்கள், பாமரப்பாடல், மரபுவழிப்பாடல், மக்கள்பாடல், பரம்பரைப்பாடல் ஆகும்
186) “வானம் கூட்டுள் வருமா?
பறக்க மறந்து ஒடுங்கி இருந்தால்
சிறகு பெருமை தருமா?” என்ற லிமெரைக்கூ கவிதையை எழுதியவர் யார்?
A) மீரா
B) பாரதியார்
C) சுரதா
D) ஈரோடு தமிழன்பன்
விளக்கம்: “வானம் கூட்டுள் வருமா?
பறக்க மறந்து ஒடுங்கி இருந்தால்
சிறகு பெருமை தருமா?” – ஈரோடு தமிழன்பன்
187) தமிழில் முதலில் லிமெரைக்கூ எழுதியவர் யார்?
A) பாரதியார்
B) அப்துல் ரகுமான்
C) மீரா
D) ஈரோடு தமிழன்பன்
விளக்கம்: ‘ஹைக்கூ’ கவிதையின் மூவடி எல்லையையும், லிமெரிக் கவிதையின் இயைபையும் கொண்டது லிமெரைக்கூ. இது வாழ்வியலை நகைச்சுவையோடு வெளிப்படுத்துவது. தமிழில் முதலில் லிமெரைக்கூ எழுதியவர் ஈரோடு தமிழன்பன்.
188) “யார் எவர் என்று தெரியாமல்
தொடர்ந்து மிதபட்டே வருகிறோம்
நானும் இருண்ட என் எதிர்காலமும்” என்ற வரிகளை எழுதியவர் யார்?
A) மித்ரா
B) வைகறை
C) லிவிங் ஸ்மைல் வித்யா
D) பனிமலர்
விளக்கம்: “சில சமயங்களில் உனக்குத் தெரிவதில்லை
சிறிய எறும்புகளை மிதித்தபடி நீ நடந்து போவதை
சில சமயங்களில் நீ உணர்வதில்லை
பசும்புலல்லை நசுக்கியபடி கடந்து போவதை
தெரிந்தும் உணர்ந்தும்
கடந்து போகிறாய்
என் அந்தரங்கத்தை மிதித்தபடி….
யார் எவர் என்று தெரியாமல்
தொடர்ந்து மிதபட்டே வருகிறோம்
நானும் இருண்ட என் எதிர்காலமும்” – லிவிங் ஸ்மைல் வித்யா