Book Back QuestionsTnpsc

உடல் நலம் மற்றும் நோய்கள் Book Back Questions 10th Science Lesson 21

10th Science Lesson 21

21] உடல் நலம் மற்றும் நோய்கள்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களிலிருந்து அவர்களைப் பாதுகாப்பதற்காக 2012-இல் போக்சோ (POCSO – Protection of Children from Sexual Offences). சட்டத்தை அறிமுகப்படுத்தியது பாலியல் நோக்கத்திற்காக குழந்தைகளை கடத்திச் செல்லும் நபர்களும் இச்சட்த்தின் கீழ் தண்டனைக்கு உள்ளாகின்றனர்.

போக்சோ சட்டத்தின் குறிக்கோள்கள் – 2012: பாலியல் தாக்குதல், பாலியல் துன்புறுத்தல் மற்றும் ஆபாசம் போன்ற குற்றங்களிலிருந்து பாதுகாத்தல். இத்தகைய குற்றங்களை விரைந்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்களை அமைத்தல்.

குழந்தை உரிமைகள் பாதுகாப்பிற்கான தேசிய ஆணையம் (NCPCR) மார்ச் 2007-இல் குழந்தை உரிமைகள் சட்டம் (CPCR) 2005-ன் கீழ் அமைக்கப்பட்டது. இந்தச் சட்டம் பொதுவுடைமைக் கொள்கை, குழந்தை சட்டங்களை மீறு முடியாமை மற்றும் நாட்டில் காணப்படும் குழந்தைகள் தொடர்பான கொள்கைகளின் அவசரத்தை வலியுறுத்துகிறது. 18 வயது வரையிலான அனைத்து குழந்தைகளின் பாதுகாப்புக்கும் சமமான முக்கியத்துவம் உள்ளது. பாதிக்கப்படக்கூடிய வாய்ப்புகள் அதிகமுள்ள குழந்தைகளுக்கு முன்னுரிமை நடவடிக்கை கொள்கைகளை வரையறுக்கிறது.

மருந்துகளின் தவறான பயன்பாடு மற்றும் சட்ட விரோத கடத்தல் மீதான சர்வதேச நாள் ஜீன் 26. 1985ஆம் ஆண்டில் போதையூட்டும் மருந்துகள் மற்றும் மனோவியல் மருந்துகள் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

உலக சுகாதார நிறுவனம் (WHO) 1984 மருந்துகளின் போதை (அடிமையாதல்) அல்லது மருந்துகளின் தவறான பயன்பாடு என்ற வார்த்தைக்குப் பதிலாக மருந்துகளை சார்ந்திருத்தல் என்ற வார்த்தையைப் பயன்படுத்த ஆலோசனை வழங்கியுள்ளது.

உலக சுகாதார நிறுவனம் (WHO) 1984 போதை (drug) என்ற வார்த்தையைப் பயன்படுத்த ஆலோசனை வழங்கியது. WHO வெளியிட்ட உத்தரவின்படி அனைத்து சிகரெட் விளம்பரங்களிலும் மற்றும் அட்டைப் பெட்டிகளிலும் “புகை பிடித்தல் உடல்நலத்திற்குத் தீங்கானது” என்ற சட்ட ரீதியான எச்சரிக்கை இடம் பெற்றிருக்க வேண்டும்.

புகையிலை எதிர்ப்புச் சட்டம் மே-1 2004-இல் கொண்டு வரப்பட்டது. 2030ஆம் ஆண்டில் உலகளவில் ஆண்டுக்கு 10 மில்லியன் அளவில் இறப்பினை ஏற்படுத்துவதற்கான மிகப்பெரிய ஒற்றைக் காரணியாக புகையிலை திகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மே 31 புகையிலை எதிர்ப்பு நாளாகக் கருதப்படுகிறது. (உலக புகையிலை எதிர்ப்பு நாள்)

இந்தியாவில் எட்டு பேரில் ஒருவர் நீரிழிவு நோயாளி ஆவார். WHO-வின் திருத்தம் செய்யப்பட்ட புள்ளி விவரப்படி 2025-இல் இந்தியாவில் 57.2 மில்லியன் நீரிழிவு நோயாளிகள் இருக்கலாம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான சராசரி வயது 40 ஆகும். பிற நாடுகளில் 55 வயதாகும். 2030-இல் இறப்பை ஏற்படுத்துகின்ற காரணிகளில் நீரிழிவு நோய் 7-வதாகத் திகழுமென உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது.

WHO-வின் அளவீட்டின்படி உணவுண்ணா நிலையில் இரத்த குளுக்கோஸின் அளவு 140 மிகி/டெசிலி ஐ விட அதிகமாகவும் அல்லது சீரற்ற இரத்த குளுக்கோஸ் அளவு 200 மிகி/டெசிலி-ஐ விட அதிகமாகவும் இரண்டு சந்தர்ப்பங்களுக்கு மேல் காணப்பட்டால் டயாபடீஸைக் கண்டறிந்து உறுதிப்படுத்துதல் அவசியமானதாகும்.

கரையாத நார்ச்சத்து கொண்ட ஆளி விதைகள், கொய்யா, தக்காளி மற்றும் கீரைகள் இரத்த சர்க்கரை அளவை குறைப்பதில் உதவுகின்றன.

அளவுக்கதிகமாக உண்ணுகின்ற ஒவ்வொரு 7 கலோரி உணுவிலும் 1 கி கொழுப்பு உடலில் சேகரமாகி, உடல் பருமன் அதிகரிக்க வழிவகுக்கிறது. அடிப்போஸ் திசுக்களில் அதிகமாக சேரும் கொழுப்பு உடல் எடையை 20%-25% அளவுக்கு கூட்டுகிறது. சராசரி உடல் எடையை விட 10%க்கும் அதிகமான எடை கொண்டவர் அதிக எடை உடையோர் மற்றும் 20% க்கும் அதிகமான எடை கொண்டவர் உடல் பருமன் உடையோர் எனப்படுவர்.

இந்தியர்களின் இரத்தத்தில் இருக்க வேண்டிய விரும்பத்தக்க கொழுப்பின் அளவானது 200 மிகி/டெசிலி ஆகும். இரத்தத்தில் கொழுப்பின் அளவு 200லிருந்து 300 மிகி/டெசிலி ஆக அதிகரிக்கும் போது இதயக் குழல் (கரோனரி இதய நோய்) நோய்க்கான ஆபத்தும் அதிகரிக்கிறது.

HDL (அதிக அடர்த்தி கொண்ட லிப்போபுரதம்) அல்லது நல்ல கொலஸ்ட்ரால் இதய நோய்க்கான ஆபத்தை குறைக்கிறது. மாறாக LDL (குறை அடர்த்தி கொண்ட லிப்போபுரதம்) இதய நோய்க்கான ஆபத்தை அதிகரிக்கிறது.

கட்டிகளின் வகைகள்: தீங்கற்ற அல்லது மேலிக்னன்ட் வகை அல்லாத கட்டிகள். உறுப்புகளுக்குள்ளாகவே பாதிப்பை ஏற்படுத்தும். உடலின் மற்ற பாகங்களுக்கு பரவாது.

மேலிக்னன்ட் கட்டிகள்: பெருக்கமடைந்த செல் குழுக்கள் வேகமாக வளர்ச்சியடைந்து சுற்றியுள்ள இயல்பான திசுக்களில் ஊடுருவி பாதிப்பை ஏற்படுத்தும்.

உலக புற்றுநோய் நாள்-பிப்ரவரி 4. தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு நாள்-நவம்பர் 7.

இந்தியாவின் டாக்டர் சுனிதி சால்மோன் HIV ஆராய்ச்சி மற்றும் சிகிச்சையின் முன்னோடி ஆவார். இவர் சென்னையில் 1980-களில் எய்ட்ஸ் ஆராய்ச்சிக்கான முதல் தன்னார்வ சோதனை மற்றும் ஆலோசனை மையங்களை ஏற்படுத்தினார். இவரது குழுவினர் 1985-இல் இந்தியாவில் முதன் முதலில் HIV தொற்றுக்கான ஆதாரத்தினை ஆவணப்படுத்தினார்கள் (இந்தியாவின் முதல் எய்ட்ஸ் நோயாளி சென்னையைச் சேர்ந்தவர் ஆவார்).

மக்களில் பலர் எய்ட்ஸ் பற்றிய அறியாமையில் உள்ளனர். இதன் மூலம் நாம் கூறுவது “அறியாமையினால் இறக்கக் கூடாது”. நம் நாட்டில் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு (NACO) மற்றும் பிற அரசு சாராத தொண்டு அமைப்புகள் (NGO’S) மக்களுக்கு எய்ட்ஸ் பற்றிய கல்வியைப் புகட்டுகின்றன. ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 1ஆம் நாள் “உலக எய்ட்ஸ் தினம்” ஆக அனுசரிக்கப்படுகிறது.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. புகையிலைப் பழக்கம், அட்ரினலின் சுரப்பைத் தூண்டுகிறது. இதற்குக் காரணமான காரணி.

(அ) நிக்கோட்டின்

(ஆ) டானிக் அமிலம்

(இ) குர்குமின்

(ஈ) லெப்டின்

2. உலக புகையிலை எதிர்ப்பு தினம்

(அ) மே 31

(ஆ) ஜீன் 6

(இ) ஏப்ரல் 22

(ஈ) அக்டோபர் 2

3. சாதாரண செல்களை விட புற்றுநோய் செல்கள் கதிர்வீச்சினால் சுலபமாக அழிக்கப்படுகின்றன. ஏனெனில் அவை.

(அ) வேறுபட்ட உருவ அமைப்பு கொண்டவை

(ஆ) பிளவுக்கு உட்படுவதில்லை

(இ) தீடீர்மாற்றமடைந்த செல்கள்

(ஈ) துரித செல்பிரிதல் தன்மை கொண்டவை.

4. நிணநீர் முடிச்சுகள் மற்றும் மண்ணீரலைத் தாக்கும் புற்றுநோய் வகை.

(அ) கார்சினோமா

(ஆ) சார்க்கோமா

(இ) லுயூக்கேமியா

(ஈ) லிம்போமா

5. அளவுக்கு மிஞ்சிய மதுப்பழகத்ததினால் உருவாவது

(அ) ஞாபக மறதி

(ஆ) கல்லீரல் சிதைவு

(இ) மாயத் தோற்றம்

(ஈ) மூளைச் செயல்பாடு குறைதல்

6. இதயக்குழல் இதயநோய் ஏற்படக் காரணம்

(அ) ஸ்ட்ரெப்டோகாக்கை பாக்டீரியா தொற்று

(ஆ) பெரிகார்டியத்தின் வீக்கம்

(இ) இதய வால்வுகள் வலுவிழப்பு

(ஈ) இதயத் தசைகளுக்கு போதிய இரத்தம் செல்லாமை

7. எபிதீலியல் செல்லில் புற்றுநோய் உருவாவதற்கு ____________ என்று பெயர்.

(அ) லுயூக்கேமியா

(ஆ) சார்க்கோமா

(இ) கார்சினோமா

(ஈ) லிம்போமா

8. மெட்டாஸ்டாசிஸ் இதனுடன் தொடர்புடையது

(அ) வீரியமிக்க கட்டி (மாலிக்னன்ட்)

(ஆ) தீங்கற்ற கட்டி

(இ) அ மற்றும் ஆ

(ஈ) மகுடக் கழலை நோய்

9. பாலிபேஜியா என்ற நிலை __________ ல் காணப்படுகிறது.

(அ) உடற்பருமன்

(ஆ) டயாபடீஸ் மெல்லிடஸ்

(இ) டயாபடீஸ் இன்சிபிடஸ்

(ஈ) எய்ட்ஸ்

10. மது அருந்தியவுடன், உடலில் முதலில் பாதிக்கப்படும் பகுதி

(அ) கண்கள்

(ஆ) செவி உணர்வுப்பகுதி

(இ) கல்லீரல்

(ஈ) மைய நரம்பு மண்டலம்

பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

1. எய்ட்ஸ் என்பது ஒரு கொள்ளை நோய் (எபிடமிக்)

2. புற்றுநோய் உருவாக்கும் ஜீன்களுக்கு ஆன்கோஜீன்கள் என்று பெயர்.

3. உடல் பருமனின் பண்பு கட்டிகள் உருவாக்கம் ஆகும்.

4. வெள்ளையணுக்கள் மற்றும் இரத்த சிவப்பணுக்கள் எண்ணிக்கையில் அதிகரிப்பது லுயூக்கேமியா எனப்படுகிறது.

5. நோயின் காரணங்கள் பற்றி அறிய உதவும் அறிவியல் பிரிவு நோய்க்காரண ஆய்வு (ஏட்டியாலஜி) எனப்படுகிறது.

6. நோயாளிகளின் ஆடைகளை பயன்படுத்துவதனால் எய்ட்ஸ் நோய் பரவாது.

7. இன்சுலின் பற்றாக்குறையினால் டயாபடீஸ் மெல்லிடஸ் வகை-2 உருவாகிறது.

8. கார்சினோஜன் என்பவை புற்றுநோயை உருவாக்கும் காரணிகளாகும்.

9. நிக்கோட்டின் என்பது மயக்கமூட்டி வகை மருந்து.

10. சிர்ரோசிஸ் (கல்லீரல் வீக்கம்) என்பது மூளைக் கோளாறு நோயுடன் தொடர்புடையது.

கீழ்க்கண்டவற்றின் விரிவாக்கத்தைத் தருக:

1. IDDM 2. HIV 3. BMI 4. AIDS 5. CHD 6. NIDDM.

பொருத்துக:

1. சார்க்கோமா – வயிற்று புற்றுநோய்

2. கார்சினோமா – அதிகப்படியான தாகம்

3. பாலிடிப்சியா – அதிகப்படியான பசி

4. பாலிபேஜியா – இதயத்தசைகளுக்கு இரத்த ஓட்டமின்மை

5. இதயத்தசை நசிவுறல் நோய் – இணைப்புத்திசு புற்றுநோய்

கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. ______________ அதிகப்படியாக பயன்படுத்துவதினால் கல்லீரலில் சிர்ரோஸிஸ் நோய் ஏற்படுகிறது.

2. புகையிலையிலிருந்து பிரித்தெடுக்கப்படும் அதிக நச்சு உள்ள வேதிப்பொருள் ____________

3. இரத்தப் புற்றுநோய்க்கு ____________ என்று பெயர்.

4. சிலவகையான மருந்துகளை தொடர்ந்து பயன்படுத்துவதினால் உண்டாகும் அதன் குறைவன பதில் விளைவு _____________ எனப்படும்.

5. இன்சுலின் ஏற்றுக் கொள்ளாமை என்பது _____________ நீரிழிவு நோயின் நிலை.

ஒப்புமை வகை வினாக்கள். முதல் சொல்லை அடையாளம் கண்டு, அதனோடு தொடர்புடைய சொல்லை நான்காவது கோடிட்ட இடத்தில் எழுதுக

(அ) தொற்று நோய் : எய்ட்ஸ் : தொற்றா நோய் : _____________

(ஆ) கீமோதெரபி : வேதிப்பொருள்கள் : கதிர்வீச்சு : _______________

(இ) உயர் இரத்த அழுத்தம் : ஹைபர் கொலஸ்டீரோலோமியா : கிளைகோசூரியா ______________

பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

1. கீழ்க்காணும் ஒவ்வொரு வினாக்களிலும் ஒரு கூற்றும் அதன் கீழே அதற்கான காரணமும் கொடுக்கப்பட்டுள்ளன. கீழே கொடுக்கப்பட்டுள்ள நான்கு வாக்கியங்களில் ஒன்றை சரியான பதிலாகக் குறிக்கவும்.

(அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.

(ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.

(இ) கூற்று சரி. ஆனால் காரணம் தவறு.

(ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு

1. கூற்று: அனைத்து மருந்துகளும் மூளையின் மீது செயல்படுகின்றன.

காரணம்: மருந்துகள் உடல் மற்றும் மனதின் செயல்பாடுகளைக் குலைக்கின்றன.

2. கூற்று : டயாபடீஸ் மெல்லிடஸ் நோயாளிகளின் சிறுநீரில் அதிகளவு குளுக்கோஸ் வெளியேறுவதைக் காணலாம்.

காரணம்: கணையம் போதுமான அளவு இன்சுலினை சுரப்பதில்லை.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்: (விடைகள்)

1. நிக்கோட்டின் , 2. மே 31 3. துரித செல்பிரிதல் தன்மை கொண்டவை, 4. லிம்போமா, 5. கல்லீரல் சிதைவு,
6. இதயத் தசைகளுக்கு போதிய இரத்தம் செல்லாமை, 7. கார்சினோமா 8. வீரியமிக்க கட்டி (மாலிக்னன்ட்), 9. டயாபடீஸ் மெல்லிடஸ், 10. மைய நரம்பு மண்டலம்

பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றைத் தேர்ந்தெடுக்கவும்: (விடைகள்)

1. தவறு

சரியான விடை: எய்ட்ஸ் என்பது ஒரு பெறப்பட்ட தொற்றுநோய்.

2. சரி

3. தவறு

சரியான விடை: உடல் பருமனின் பண்பு கொழுப்பு உருவாக்கம் ஆகும்.

4. தவறு

சரியான விடை: வெள்ளையணுக்கள் மட்டும் எண்ணிக்கையில் அதிகரிப்பது லுயூக்கேமியா எனப்படுகிறது.

5. சரி

6. சரி

7. தவறு

சரியான விடை: இன்சுலின் பற்றாக்குறையினால் டயாபடீஸ் மெல்லிடஸ் வகை-1 உருவாகிறது.

8. சரி

9. சரி

10. தவறு

சரியான விடை: சிர்ரோசிஸ் (கல்லீரல் வீக்கம்) என்பது கல்லீரல் கோளாறு நோயுடன் தொடர்புடையது.

கீழ்க்கண்டவற்றின் விரிவாக்கத்தைத் தருக:

IDDM – Insulin Dependent Diabetes mellitus

HIV – Human Innuno deficiency Virus

BMI – Body Mass Index

AIDS – Aquired Immuno Difieciency Syndrome

CHD – Coronary Heart Disease

NIDDM – Non – Insulin Dependent Diabetes mellitus

பொருத்துக: (விடைகள்)

1. சார்க்கோமா – இணைப்புத் திசு புற்றுநோய்

2. கார்சினோமா – வயிற்றுப் புற்றுநோய்

3. பாலிடிப்சியா – அதிகப்படியான தாகம்

4. பாலிபேஜியா – அதிகப்படியான பசி

5. இதயத்தசை நசிவுறல் நோய் – இதயத் தசைகளுக்கு இரத்த ஓட்டமின்மை

கோடிட்ட இடங்களை நிரப்புக: (விடைகள்)

1. ஆல்கஹால், 2. நிக்கோடின், 3. லுயூக்கேமியா, 4. மருந்து சகிப்புத் தன்மை, 5. வகை 2

ஒப்புமை வகை வினாக்கள். முதல் சொல்லை அடையாளம் கண்டு, அதனோடு தொடர்புடைய சொல்லை நான்காவது கோடிட்ட இடத்தில் எழுதுக:

1. புற்றுநோய், 2. கதிரியக்க சிகிச்சை, 3. ஹைப்பர்கிளைசீமியா

பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றைத் தேர்வு செய்க:

1. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.

2. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!