TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil – 3rd and 4th June 2024

1. ஒவ்வோர் ஆண்டும் உலக பால் நாள் கடைப்பிடிக்கப்படுகிற தேதி எது?

அ. ஜூன்.01

ஆ. ஜூன்.02

இ. ஜூன்.03

ஈ. ஜூன்.04

  • உலகளாவிய ஊட்டச்சத்தில் பாலின் பங்கை வலியுறுத்தும் நோக்கோடு ஆண்டுதோறும் ஜூன்.01 அன்று உலக பால் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. FAOஆல் கடந்த 2001ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த நாள், பாலை ஒரு முக்கிய உணவாதாரமாக கொண்டாடுகிறது. பால் நுகர்வு என்பது மனிதர்களிடையே புதிய கற்கால யுகத்திற்கு முன்பில் இருந்தே தொடர்ந்து வருகிறது; பல கலாச்சாரங்கள் மற்றும் மத மரபுகளின் குறிப்பிடத்தக்க பகுதியாக பால் உள்ளது.

2. அண்மையில், எந்த இந்திய அமைதி காக்கும் வீரர் / வீராங்கனை அவரது மரணத்திற்குப்பின் ஐநாஇன் டாக் ஹம்மர்ஸ்க்ஜோல்ட் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்?

அ. விக்ரம் சிங்

ஆ. நாயக் தனஞ்சய் குமார் சிங்

இ. ராம் விஷ்ணோய்

ஈ. ஜீத் சின்ஹா

  • காங்கோவில் பணியாற்றிய ஐநாஇன் அமைதி காக்கும் வீரரான நாயக் தனஞ்சய் குமார் சிங், ஐநாஇன் சர்வதேச அமைதிப்படை நாளின்போது அவரது மரணத்திற்குப்பின் டாக் ஹம்மர்ஸ்க்ஜோல்ட் பதக்கம் வழங்கி கௌரவிப்பு செய்யப்பட்டார். 1997இல் நிறுவப்பட்ட இப்பதக்கம், ஐநாஇன் அதிகாரத்தின்கீழ் தங்கள் இன்னுயிரை தியாகஞ்செய்த அமைதிகாக்கும் வீரர்களை கௌரவிக்கிறது. டாக் ஹம்மர்ஸ்க்ஜோல்டின் பெயரால் வழங்கப்படும் இந்தப் பதக்கம், அமைதி காக்கும் படைகளை இழக்கும் நாடுகளுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.

3. எந்த ஆற்றின் கரையில் புராண கிலா கட்டப்பட்டுள்ளது?

அ. கங்கை

ஆ. யமுனை

இ. சிந்து

ஈ. சரஸ்வதி

  • அண்மையில், மத்திய சுற்றுலா அமைச்சகத்தால், ‘Adopt a Heritage’ என்ற திட்டத்தின்கீழ் டால்மியா குழுமத்தின் சப்யதா அறக்கட்டளையிடம் புராண கிலா ஒப்படைக்கப்பட்டது. புது தில்லியில் அமைந்துள்ள இது யமுனை ஆற்றின் கரையில் கட்டப்பட்ட பழமையான கோட்டைகளுள் ஒன்றாகும்; இது ‘கிலா-இ-கோனா’ என்றும் அழைக்கப்படுகிறது. ஹுமாயூன் மற்றும் ஷெர்ஷா சூரியின் ஆட்சியின்கீழ் கட்டப்பட்ட இது இசுலாமிய மற்றும் இந்து கட்டிடக்கலையின் கலவையை பிரதிபலிக்கிறது. செவ்வக வடிவிலான இக்கோட்டை மூன்று வாயில்களைக் கொண்டுள்ளது, குறிப்பாக பாரா தர்வாசா, இசுலாமிய மற்றும் இந்து கூறுகளை இணைக்கும் விதத்தில் உள்ளது.

4. அண்மையில், தொற்றுநோய்கள் சட்டம், 1897இன்கீழ் மனிதர்களுக்குப் பரவும் ரேபிஸை அறிவிக்கத்தகு நோயாக அறிவித்துள்ள மாநிலம்/யூனியன் பிரதேசம் எது?

அ. இலட்சத்தீவுகள்

ஆ. ஜம்மு காஷ்மீர்

இ. சிக்கிம்

ஈ. நாகாலாந்து

  • ஜம்மு மற்றும் காஷ்மீர் அரசாங்கம் 1897ஆம் ஆண்டு தொற்றுநோய்கள் சட்டத்தின்கீழ் மனிதர்களிடையே பரவும் வெறிநாய்க்கடி நோயை அறிவிக்கத்தகு நோயாக அறிவித்துள்ளது. RABV வைரஸால் ஏற்படும் வெறிநாய்க்கடி நோய், மத்திய நரம்பு மண்டலத்தை பாதிக்கும் ஒரு கொடிய வைரஸ் நோயாகும். இது முதன்மையாக பாதிக்கப்பட்ட விலங்குகளின் உமிழ்நீர்மூலம் பரவுகிறது; வீட்டில் வளர்க்கப்படும் நாய்கள்மூலமாக இது முதன்மையாகப்பரவுகிறது. குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வெறிநாய்க்கடி நோய், குறிப்பாக ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில், விளிம்பு நிலை சமூகங்களை பெருமளவு பாதிக்கிறது. இது ஒரு புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோயாகவே உள்ளது.

5. அண்மையில், ‘ஔட்லுக் பிளானட் சஸ்டைனபிலிட்டி உச்சிமாநாடு & விருதுகள் – 2024’ நிகழ்வை நடத்திய மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. கர்நாடகா

இ. கோவா

ஈ. மகாராஷ்டிரா

  • மத்திய பொதுத்துறை நிறுவனங்களுக்கான, ‘ஔட்லுக் பிளானட் சஸ்டைனபிலிட்டி உச்சிமாநாடு மற்றும் விருதுகள் – 2024’ நிகழ்வை அண்மையில் கோவா மாநிலம் நடத்தியது. ஔட்லுக் மீடியா குழுமத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு, BDO இந்தியா விருதுகள் செயல்முறை ஆலோசகராகவும், IIT கோவா அறிவுப்பங்காளராகவும், நிலைத்தன்மை முயற்சிகள்பற்றி விவாதிக்க கொள்கை வகுப்பாளர்களையும் இது ஒன்றுதிரட்டியது. REC லிமிடெட், “Sustainability Champion—Editor’s Choice Award” வழங்கி கௌரவிக்கப்பட்டது; மேலும் Power Finance Corporation (PFC) Limited ஆனது புதைபடிவமற்ற எரிபொருள் பிரிவில் கார்ப்பரேட் சமூகப்பொறுப்பு விருதைப்பெற்றது.

6. அண்மையில், 2024 – உலக புகையிலை ஒழிப்பு நாளன்று புகையிலை இல்லா கல்வி நிறுவனங்களை (ToFEI) செயல்படுத்துதல் குறித்த கையேட்டை வெளியிட்ட அமைச்சகம் எது?

அ. கல்வி அமைச்சகம்

ஆ. சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம்

இ. சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம்

ஈ. வேளாண்மை அமைச்சகம்

  • கல்வியமைச்சகத்தின் பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவுத்துறையானது, புகையிலை இலா கல்வி நிறுவனங்களின் செயலாக்கக் கையேட்டை, 2024ஆம் ஆண்டு உலக புகையிலை ஒழிப்பு நாளில் புது தில்லியில், SEEDSஉடன் இணைந்து வெளியிட்டது. “Protecting Children from Tobacco Industry Interference” என்ற நடப்பு ஆண்டுக்கானக் கருப்பொருளுடன் ஒத்திசைந்த இக்கையேடு, சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட ToFEI வழிகாட்டுதல்களைச் செயல்படுத்த பள்ளிகளுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

7. பம்பை ஏரி அமைந்துள்ள மாநிலம் எது?

அ. கேரளா

ஆ. கர்நாடகா

இ. ஒடிசா

ஈ. குஜராத்

  • கர்நாடக மாநில தொல்பொருள் அருங்காட்சியகங்கள் மற்றும் பாரம்பரியத் துறையைச் சேர்ந்த குழுவொன்று, ஹம்பி உலக பாரம்பரியப் பகுதியில் அமைந்துள்ள பம்பை ஏரிக்கருகில் 2,500 ஆண்டுகள் பழமையான பாறை தங்குமிட ஓவியங்களைக் கண்டுபிடித்துள்ளது. ஹம்பி அருகே கர்நாடகாவின் கொப்பல் மாவட்டத்தில் அமைந்துள்ள பம்பை ஏரி, இந்து புராணங்களில் உள்ள 5 புனித ஏரிகளுள் ஒன்றாகும். மலைகள் மற்றும் திருக்கோவில்களால் சூழப்பட்ட இது, இராமாயணம்போன்ற இந்து புராணங்களின் கலாச்சார முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது.

8. ‘Paraparatrechina neela’ என்பது சார்ந்த இனம் எது?

அ. எறும்பு

ஆ. மீன்

இ. சிலந்தி

ஈ. தவளை

  • அருணாச்சல பிரதேச மாநிலத்தின் தொலைதூர சியாங் பள்ளத்தாக்கில் இந்திய ஆராய்ச்சியாளர்கள் அண்மையில் ‘Paraparatrechina neela’ என்ற ஒரு புதிய எறும்பு இனத்தைக் கண்டுபிடித்துள்ளனர். ‘Paraparatrechina’ என்ற அரிய வகையைச் சேர்ந்த இந்த உயிரினம் அதன் உலோக நீலநிறத்தால் தனித்து தெரிகிறது; இதன் காரணமாக ‘நீலா’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இது 121 ஆண்டுகளில் கண்டறியப்பட்ட ஒரு புதிய ‘Paraparatrechina’ இனமாகும்.

9. அண்மையில், சேர்க்கை உற்பத்திமூலம் நிலையான விண்வெளி ஆய்வுக்காக கீழ்க்காணும் எந்நிறுவனத்துடன் ISRO கூட்டிணைந்துள்ளது?

அ. விப்ரோ 3D

ஆ. ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்

இ. கூகுள் 3D

ஈ. IBM

  • விப்ரோ 3D மற்றும் ISRO ஆகியவை PSLVஇன் 4ஆவது நிலைக்கான PS4 ஏவுகல எஞ்சினை வெற்றிகரமாக 3D-பிரிண்ட் செய்துள்ளன. இந்தச் சாதனையை ISROஇன் Dr V நாராயணன் பாராட்டினார். PS4 நிலையின் மேம்பட்ட வழிசெலுத்துதல் மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகள் பல்வேறு செயற்கைக்கோள் திட்டங்களுக்கானத் துல்லியமான சுற்றுப்பாதை இடங்களைச் செயல்படுத்துகின்றன. கூட்டு உற்பத்திக்கான வடிவமைப்பு மற்றும் லேசர் பௌடர் பெட் ஃப்யூஷன் தொழில்நுட்பம், உற்பத்தியை ஒழுங்குபடுத்துதல் மற்றும் கட்டமைப்பு ஒருமைப்பாட்டை மேம்படுத்துதல் ஆகியவற்றை இந்தக் கூட்டிணைவு பயன்படுத்தியுள்ளது.

10. அண்மைய அரசாங்க தரவுகளின்படி, 2023-24 காலக்கட்டத்தில் இந்தியா எந்த நாட்டிலிருந்து அதிகப்படியான அந்நிய நேரடி முதலீட்டைப் பெற்றுள்ளது?

அ. மொரீஷியஸ்

ஆ. சிங்கப்பூர்

இ. வியட்நாம்

ஈ. சீனா

  • 2023-24ஆம் ஆண்டில், சிங்கப்பூரிலிருந்து இந்தியா அதிகப்படியான அந்நிய நேரடி முதலீட்டைப் (FDI) பெற்றுள்ளது. இந்திய அரசாங்க தரவுகளின்படி, இதன் சதவீதத்தில் 31.55% என்ற சரிவு காணப்பட்டபோதிலும் மொத்தமாக $11.77 பில்லியன் முதலீடு பெறப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக, உலகப் பொருளாதாரத்தின் நிச்சயமற்ற தன்மை காரணமாக இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு சுமார் 3.5% குறைந்துள்ளது. இருப்பினும், இந்தக் காலக்கட்டத்தில் இந்தியாவிற்கான அந்நிய நேரடி முதலீட்டில் சிங்கப்பூர் முதலிடம் வகிக்கிறது.

11. சமீபத்தில், ஆய்வகத்தில் தொற்றாத நிபா வைரஸ்போன்ற துகள்களை உருவாக்கும் முறையை உருவாக்கிய ஆராய்ச்சி நிறுவனம் எது?

அ. மத்திய மருந்து ஆராய்ச்சி நிறுவனம்

ஆ. மரபியல் மற்றும் ஒருங்கிணைந்த உயிரியல் நிறுவனம்

இ. மேம்பட்ட வைராலஜி நிறுவனம்

ஈ. இராமன் ஆராய்ச்சி நிறுவனம்

  • திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள மேம்பட்ட வைராலஜி நிறுவனத்தின் அறிவியலாளர்கள், தொற்றாத நிபா வைரஸ் போன்ற துகள்களை உருவாக்கியுள்ளனர். இந்தத் துகள்கள் வைரஸ்களை போலவே உள்ளன, ஆனால் மரபணு பொருட்கள் அவற்றில் இல்லாததால், அவை தொற்றா. அவை HPV, கல்லீரல் அழற்சி-B மற்றும் மலேரியா போன்ற நோய்களுக்கான தடுப்பூசிகளை திறம்பட உருவாக்கி, அறிகுறிகளை ஏற்படுத்தாமல் நோயெதிர்ப்பு சக்தியைத் தூண்டுகிறது. 20-200 nm அளவுள்ள இத்துகள், நோயெதிர்ப்பு மண்டலத்தை செயல்படுத்த நிணநீர் முனைகளில் நுழைந்து, உண்மையான வைரஸுக்கு எதிராக நோய் எதிர்ப்பு ஆற்றலை வழங்குகின்றன.

12. அண்மையில் தனது ஓய்வை அறிவித்த தினேஷ் கார்த்திக் சார்ந்த விளையாட்டு எது?

அ. கிரிக்கெட்

ஆ. கால்பந்து

இ. கூடைப்பந்து

ஈ. ஹாக்கி

  • மூத்த விக்கெட் கீப்பர்-பேட்டரான தினேஷ் கார்த்திக், IPLஇல் இராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிலிருந்து பிரியாவிடை பெற்றபிறகு தான் அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வுபெறுவதாக அறிவித்தார். அவரது சர்வதேச கிரிக்கெட் வாழ்வு அனைத்து வடிவங்களிலும் சேர்த்து மொத்தம் 180 ஆட்டங்களில் அடங்கும். அவர் ஒரு டெஸ்ட் சதம் மற்றும் 17 அரை சதங்களுடன் 3463 ஓட்டங்களை இதுவரை குவித்துள்ளார். விக்கெட் கீப்பராக 172 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றியுள்ளார்.

13. அண்மையில், எந்த நாட்டின் முதல் பெண் அதிபராக கிளாடியா ஷீன்பாம் தேர்ந்தெடுக்கப்பட்டார்?

அ. மலேசியா

ஆ. தாய்லாந்து

இ. சிங்கப்பூர்

ஈ. மெக்ஸிகோ

  • மெக்ஸிகோவின் முதல் பெண் அதிபராக கிளாடியா ஷீன்பாம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தேர்தல் ஆணையத்தால் அவரது முன்னிலை உறுதிசெய்யப்பட்ட நிலையில், அவர் தனது வழிகாட்டியான அதிபர் ஆண்ட்ரேஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடரிடம் இருந்து வாழ்த்துகளைப் பெற்றார். 20,000-க்கும் மேற்பட்ட அரசியல் பதவிகளுக்காக 2024 ஜூன்.02 அன்று தேர்தல் நடந்தது. கிளாடியா ஷீன்பாம் 2024 அக்டோபர்.01 அன்று பதவியேற்பார்.

14. ‘JADES-GS-z14-0’ என்றால் என்ன?

அ. விண்மீன் மண்டலம்

ஆ. நீர்மூழ்கிக்கப்பல்

இ. விமானம்

ஈ. ஆக்கிரமிப்பு தாவரம்

  • ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கியானது பெருவெடிப்பு நிகழ்ந்து 290 மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு உருவான, ‘JADES-GS-z14-0’ என்ற விண்மீன் மண்டலத்தைக் கண்டறிந்து புதிய சாதனை படைத்துள்ளது. இது முந்தைய 325 மில்லியன் ஆண்டுகள் சாதனையை முறியடித்தது. விண்மீனின் எதிர்பாராத பிரகாசம் விரைவான விண்மீன் உருவாக்கத்தைக் குறிக்கிறது. ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியால் கணிசமான ஆக்சிஜன் இருப்பு கண்டறியப்பட்டது, அவ்விண்மீனின் மேம்பட்ட முதிர்ச்சியைக் குறிக்கிறது.

15. அண்மையில், 2023-24 நிதியாண்டில் UKஇலிருந்து உள்நாட்டு பெட்டகங்களுக்கு RBI எவ்வளவு தங்கத்தை கொண்டு வந்தது?

அ. 50 மெட்ரிக் டன்

ஆ. 100 மெட்ரிக் டன்

இ. 150 மெட்ரிக் டன்

ஈ. 200 மெட்ரிக் டன்

  • 2023-24 நிதியாண்டில், இந்திய ரிசர்வ் வங்கி இங்கிலாந்திலிருந்து 100 மெட்ரிக் டன் தங்கத்தை மும்பை மற்றும் நாக்பூரில் உள்ள இந்திய பெட்டகங்களுக்கு கொண்டு வந்தது. இந்தியாவின் தங்க இருப்பு 822 மெட்ரிக் டன்களாக உயர்ந்துள்ளது, கிட்டத்தட்ட 50% இப்போது உள்நாட்டில் சேமிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் ரூபாய் நோட்டுகள் தங்கம், அரசுப்பத்திரங்கள் மற்றும் அயல்நாட்டு நாணயச் சொத்துக்கள் போன்ற சொத்துக்களால் RBI சட்டம், 1934இன்கீழ் பாதுகாக்கப்படுகின்றன. அண்மைய புவிசார் அரசியல் பதட்டங்கள் வெளிநாடுகளில் தங்கத்தை சேமிப்பதில் உள்ள அபாயங்களை வலியுறுத்தியது.

16. ‘Tmesipteris oblanceolata’ என்றால் என்ன?

அ. முட்கரண்டி வடிவிலான பரணி

ஆ. மீன்

இ. சிறுகோள்

ஈ. சிலந்தி

  • ஒரு புதிய ஆராய்ச்சி, முட்கரண்டி வடிவிலான பரணி என்ற செடிவகையான, ‘Tmesipteris oblanceolata’, இதுவரை அறியப்பட்ட மிகப்பெரிய மரபணுத் தொகுதியைக் கொண்டுள்ளது. ஒரு மரபணுத்தொகுதி என்பது ஓர் உயிரினத்தின் முழுமையான மரபணுத் தகவலை உள்ளடக்கியதாகும். இந்தப் பரணி 160 பில்லியன் அடிப்படை ஜோடிகளைக் கொண்டுள்ளது; இது மனித மரபணுத் தொகுதியைவிட ஐம்பது மடங்கு அதிகமாகும். தொன்மாக்களுக்கு முந்தைய பழங்கால தாவரக்குழுவைச் சேர்ந்த இது, நியூ கலிடோனியா மற்றும் அருகிலுள்ள பசிபிக் தீவுகளைப் பூர்வீகமாகக் கொண்டவை. மழைக்காடுகளில் இது செழித்து வளர்கிறது.

17. மகாராஷ்டிராவின் எந்தப் புலிகள் காப்பகம் அண்மையில், ‘பெரிய காட்டு ஆந்தை’ பற்றிய முதல் நிழற்படப் பதிவைப் பதிவுசெய்தது?

அ. தடோபா புலிகள் காப்பகம்

ஆ. பெஞ்ச் புலிகள் காப்பகம்

இ. கொய்னா புலிகள் காப்பகம்

ஈ. உம்ரெட் கர்ஹண்ட்லா சரணாலயம்

  • மகாராஷ்டிராவில் உள்ள பெஞ்ச் புலிகள் காப்பகம் அண்மையில் ஒரு பெரிய காட்டு ஆந்தையின் முதல் நிழற்படத்தை ஆவணப்படுத்தியது. ‘Ketupa nipalensis’ என்பது அப்பெரிய காட்டு ஆந்தையின் அறிவியல் பெயராகும். இந்தியா, இலங்கை மற்றும் தென்கிழக்காசியா முழுவதும் காடுகள் மற்றும் புல்வெளிகள்போன்ற பல்வேறு சூழல்களில் இந்தப் பெரிய காட்டு ஆந்தை இனம் வாழ்கிறது. அதன் செழுமையான பழுப்பு நிறம் மற்றும் வெண்ணிற புள்ளிகள்கொண்ட வடிவத்தால் அது அடையாளம் காணப்படுகிறது. பல்வேறு இரைகளை உண்ணும் இப்பறவை பெரும்பாலும் இரவு நேரத்தில் வேட்டையைத் தொடங்கும். இப்பறவையினம் இந்திய வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம், 1972இன்கீழ் பாதுகாக்கப்படுகிறது.

18. அண்மையில், பான் சர்வதேச போட்டியில் பட்டம் வென்ற இந்திய வீரர் / வீராங்கனை யார்?

அ. ஆகர்ஷி காஷ்யப்

ஆ. அஷ்மிதா சாலிஹா

இ. P V சிந்து

ஈ. தன்வி சர்மா

  • நம்பிக்கைக்குரிய இந்திய பாட்மிண்டன் வீராங்கனை தன்வி சர்மா, பான் சர்வதேச போட்டியில் சீன தைபேயின் வாங் பெய் யூவை நேர் செட்களில் தோற்கடித்து வெற்றியை உறுதிசெய்தார். அரைமணிநேரத்திற்கும் மேலாக நடந்த இந்தப் போட்டியில் தன்வி 21-19 22-20 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். உலக அளவில் 181ஆம் இடத்தில் உள்ள பஞ்சாபைச் சேர்ந்த தன்வி சர்மா (15) தனது திறமையை இதன்மூலம் வெளிப்படுத்தினார்.

19. அண்மையில், நிலவுக்கான தரப்படுத்தப்பட்ட நேர அமைப்பை உருவாக்குவதற்காக NASA எந்த விண்வெளி நிறுவனத்துடன் கூட்டிணைந்துள்ளது?

அ. ISRO

ஆ. ESA

இ. JAXA

ஈ. CNSA

  • NASA மற்றும் ஐரோப்பிய விண்வெளி முகமை (ESA) ஆகியவை ஆர்ட்டெமிஸ் திட்டத்திற்கான தரப்படுத்தப்பட்ட நிலவு நேர அமைப்பை உருவாக்குவதற்காக கூட்டிணைந்துள்ளன. இந்த முன்முயற்சியானது சர்வதேச மற்றும் தனியார் நிலவு திட்டங்களை ஒருங்கிணைக்க ஓர் ஒருங்கிணைந்த நேரக்கட்டுப்பாட்டின் அவசியத்தை பூர்த்தி செய்கிறது. சீனா, இந்தியா மற்றும் தனியார் நிறுவனங்களின் வரவிருக்கும் நிலவுத் திட்டங்களின் வெற்றிகரமான செயல்பாடு மற்றும் ஒருங்கிணைப்புக்கு ஒரு பொதுவான நிலவு நேர அமைப்பு அவசியமாகும்.

20. அண்மையில், ‘பிரவாஹா’ என்ற கணிப்பிய பாய்ம இயக்கவியல் மென்பொருளை உருவாக்கிய விண்வெளி நிறுவனம் எது?

அ. ISRO

ஆ. JAXA

இ. ESA

ஈ. CNSA

  • இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் கணிப்பிய பாய்ம இயக்கவியல் மென்பொருளான, ‘பிரவாஹா’வை உருவாக்கியுள்ளது. Parallel RANS Solver for Aerospace Vehicle Aero-thermo-dynamic Analysis (PraVaHa) ஆனது ஏவுகலங்களுக்கான காற்றோட்டத்தை உருவகப்படுத்துகிறது; அவற்றின் வடிவம், கட்டமைப்பு மற்றும் வெப்ப பாதுகாப்பு அமைப்புகளை வடிவமைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. இது ககன்யான் திட்டத்தின் ஏவுகலங்களை பகுப்பாய்வு செய்ய பயன்படுத்தப்படுகிறது.

21. உயர்கல்வித்துறையானது அண்மையில் எண்ம நூலக தளமான ‘ராஷ்ட்ரிய இ-புஸ்தகலயா’வை உருவாக்கும் நோக்கத்திற்காக கீழ்க்காணும் எந்த நிறுவனத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது?

அ. மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்

ஆ. தேசிய புத்தக அறக்கட்டளை

இ. தேசிய நூலக சங்கம்

ஈ. கலாச்சார அமைச்சகம்

  • 24/7 எண்ம நூலக தளமான ‘ராஷ்ட்ரிய இ-புஸ்தகலயா’வை உருவாக்கும் நோக்கத்திற்காக பள்ளிக்கல்வித் துறையும் தேசிய புத்தக அறக்கட்டளையும் புது தில்லியில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. செயலாளர் K சஞ்சை மூர்த்தி, புத்தக அணுகலை மேம்படுத்துவதற்கும், பல மாநிலங்களில் உள்ள நூலக அணுகல் சிக்கலைத் தீர்ப்பதற்கும் இது உதவும் என எடுத்துரைத்தார். இன்னும் 2-3 ஆண்டுகளில் இந்தத் தளத்தில் 100-க்கும் மேற்பட்ட மொழிகளில் 10,000 புத்தகங்கள் இடம்பெறும் என்று அவர் எதிர்பார்க்கிறார்.

22. ‘பினோம் இந்தியா’ திட்டத்தின் முதன்மை நோக்கம் என்ன?

அ. இந்தியாவின் மரபணு பன்முகத்தன்மையை ஆய்வுசெய்தல்

ஆ. கார்டியோ-மெட்டபாலிக் நோய்களுக்கு இந்திய அடிப்படையிலான இடர் முன்கணிப்பு மாதிரிகளை உருவாக்குதல்

இ. பாரம்பரிய இந்திய மருத்துவத்தை ஊக்குவித்தல்

ஈ. புதிய மருந்துகளுக்கான மருத்துவ பரிசோதனைகளை நடத்துதல்

  • அண்மையில், CSIR அதன் ‘பினோம் இந்தியா’ திட்டத்தின் முதல் கட்டத்தை முடித்து, பினோம் இந்தியா அன்பாக்சிங் 1.0 நிகழ்வை நடத்தியது. 2023 டிசம்பர்.07 அன்று தொடங்கப்பட்ட, ‘பீனோம் இந்தியா’ கார்டியோ-மெட்டபாலிக் நோய்களுக்கு இந்திய அடிப்படையிலான (india-specific) இடர் முன்கணிப்பு மாதிரிகளை உருவாக்குவதை தனது நோக்கமாகக் கொண்டுள்ளது. இது பதினேழு மாநிலங்கள் மற்றும் 24 நகரங்களிலிருந்து கிட்டத்தட்ட 10,000 பங்கேற்பாளர்களை உள்ளடக்கி, மருத்துவம், வாழ்க்கை முறை மற்றும் உயிர்வேதியியல் தகவல்கள் உள்ளிட்ட விரிவான சுகாதாரத் தகவல்களைச் சேகரிக்கும் முதல் நீண்ட இந்திய சுகாதார ஆய்வு ஆகும்.

23. அண்மையில், உலக தகவல் சங்கத்தின் (WSIS) உச்சிமாநாடு நடைபெற்ற இடம் எது?

அ. லண்டன்

ஆ. பாரிஸ்

இ. ஜெனிவா

ஈ. புது தில்லி

  • சுவிச்சர்லாந்தில் உள்ள ஜெனீவாவில் சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியத்தின் தகவல் சங்கத்தின் (WSIS) உயர்மட்ட நிகழ்வு 2024-க்கான உலக உச்சிமாநாட்டில் இந்தியா பங்கேற்றது. WSIS+20 கருத்துக்களமானது, 20 ஆண்டுகளுக்கு முன்பு ஜெனீவா (2003) மற்றும் டூனிஸ் (2005) ஆகிய இடங்களில் நடைபெற்ற WSISஇன் கருத்துக்களங்களை நினைவுகூர்ந்தது. ITU, UNESCO, UNDP மற்றும் UNCTAD ஆகியவற்றால் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுதாகும் இம்மாநாடு. மக்கள்சார்ந்த, உள்ளடக்கிய மற்றும் மேம்பாடுசார் தகவல் சமூகத்தை வளர்ப்பதன் மூலம் தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்ப சிக்கல்களைத் தீர்ப்பதே இதன் நோக்கமாகும்.

24. அண்மையில் களைக்கொல்லி-சகிப்புத்தன்மை கொண்ட (Ht) பாசுமதி அரிசி வகைகளை வணிகமயமாக்கிய அமைப்பு எது?

அ. இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் (ICAR)

ஆ. அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில்

இ. விவசாய அமைச்சகம்

ஈ. மேற்குறிப்பிட்ட எதுவுமில்லை

  • களைகளைக் கட்டுப்படுத்துவதற்காக களைக்கொல்லி-சகிப்புத்தன்மை கொண்ட (Ht) பாசுமதி அரிசி வகைகளை ICAR வணிகமயமாக்கியுள்ளது. நேரடி நெல்விதைப்பு முறையானது பாரம்பரிய நடவுக்கு மாற்றாக திறமையான மற்றும் நிலையான சாகுபடியை வழங்குகிறது. ICARஇன் மரபணு மாற்றப்படாத Ht பாசுமதி அரிசி நேரடியாக களைக்கொல்லியைப் பயன்படுத்த அனுமதிக்கிறது. நேரடி நெல்விதைப்பு முறையில் கையால் களையெடுப்பது விளைச்சலை அதிகரிக்கிறது என ஆராய்ச்சி கூறுகிறது. அதிக நெல் விளைச்சலுக்கு சூழல்-நட்பு களையெடுப்பை ICAR பரிந்துரைக்கிறது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. ஆந்திர பிரதேசத்துக்கு இனி தலைநகரம் இல்லை!

ஆந்திர பிரதேசம் மற்றும் தெலங்கானாவின் பொதுத்தலைநகரமாக ஹைதராபாத் செயல்படுவதற்கு வழங்கப்பட்ட 10 ஆண்டுகள் அவகாசம் 02-06-2024ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. ஒருங்கிணைந்த ஆந்திர பிரதேசத்தில் இருந்து பிரிந்து நாட்டின் 29ஆவது மாநிலமாக தெலங்கானா கடந்த 2014 ஜூன்.02ஆம் தேதி உருவானது. அந்த ஆண்டு மார்ச்.01ஆம் தேதி இயற்றப்பட்ட ஆந்திர பிரதேச மறுசீரமைப்புச் சட்டத்தில் தெலங்கானா, ஆந்திர பிரதேசம் ஆகிய இருமாநிலங்களும் பத்து ஆண்டுகளுக்கு மிகாமல் ஹைதராபாதை பொதுத்தலைநகரமாகக்கொண்டு செயல்படுவதற்கு அனுமதியளிக்கப்பட்டது.

2. நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது சீன விண்கலம்.

சீன தேசத்தின் சாங்கே-6 விண்கலம் நிலவின் தொலைதூரப்பகுதியில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இந்த விண்கலத்தில் ஆர்பிட்டர், லேண்டர், அசென்டர் மற்றும் புவிக்குத் திரும்பிவரும் ரிட்டர்னர் கலன் ஆகிய நான்கு பகுதிகள் இருக்கின்றன. பூமியின் பார்வையிலிருந்து மறைந்து காணப்படும் நிலவின் இருள்பகுதியில் விண்கலம் தரையிறங்கியதைத் தொடர்ந்து, நிலவின் தரைப்பகுதியில் அசெண்டர் நகர்ந்துசென்று பாறைகள், துகள்கள் உள்ளிட்டவற்றைச் சேகரித்து ஆர்பிட்டரில் கொண்டுசேர்க்கும். அவற்றை ரிட்டர்னர் கலன் வாயிலாக பூமிக்கு எடுத்துவரத் திட்டமிடப்பட்டுள்ளது.

3. திருவள்ளூர் அருகே பல்முனை சரக்குப் போக்குவரத்துப் பூங்கா.

திருவள்ளூர் அருகே மப்பேடு பகுதியில் `1,200 கோடியில் நடைபெற்று வரும் பல்முனை சரக்குப் போக்குவரத்துப் பூங்கா அமைக்கும் பணியை மத்திய குழு அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வுமேற்கொண்டனர். திருவள்ளூர் அருகே கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம், மப்பேடு ஊராட்சியில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம், நேஷனல் ஹைவே லாஜிஸ்டிக்ஸ் மேலாண்மை நிறுவனம், சென்னை துறைமுகம் ஆகியவை இணைந்து பொது மற்றும் தனியார் பங்களிப்போடு 141 ஏக்கர் பரப்பளவில் `1,200 கோடியில் பல்முனைய சரக்கு வாகனப் போக்குவரத்துப் பூங்கா அமைக்க கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!