General TamilTnpsc

General Tamil Model Question Paper 6

General Tamil Model Question Paper 6

General Tamil Model Question Paper 6: Tnpsc Aspirants can use this opportunity to check General Tamil Model Question Papers For Tnpsc. General Tamil Model Question Papers For Tnpsc With Answers Pdf Online Test Quiz is now free to download from our winmeen.com site. Now Tamil Eligibility Test is mandatory for all Tnpsc and Tamilnadu government exams. So these Tnpsc Pothu Tamil Model Questions are very useful for your preparation. It is also useful to Unit 8 – Tamilnadu History Culture Part.

1. “ஆர்பரவை அணி திகழும் மணிமறுவல் அரும் பரவை” – இப்பாடலடியில் அமைந்துள்ளவாறு பின்வருவனவற்றுள் எது தவறானது?

(அ) சீர்மோனை அமைந்துள்ளது

(ஆ) சீர் முரண் அமைந்துள்ளது

(இ) சீர் இயைபு அமைந்துள்ளது

(ஈ) கீழ்க்கதுவாய் மோனை அமைந்துள்ளது

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) சீர் முரண் அமைந்துள்ளது

ஆ ர்பரவை அ ணிதிகழும் மணிமுறுவல் அ ரும்பரவை–சீர்மோனை 1,2,4-ஆம் சீர்கள் ஒன்றிவருவதால் – கீழ்க்கதுவாய் மோனையாகும். இயைபு என்பது இறுதிச் சீர் ஒன்றி வருவதாகும். இறுதிச்சீரை ஒன்று என எடுத்துக்கொண்டு மற்ற சீர்களை 2,3 என்று கணக்கிட வேண்டும். ஆர்பரவை அணிதிகழும் மணிமுறுவல் அரும்பரவை-இது சீர் இயைபு ஆகும். 1 மற்றும் 4-ஆம் சீர் ஒன்றி வருவதால் சீர் இயைபு வகையில் ஒரூஉ இயைபு என்ற பிரிவாகும்.

2. தனிவாக்கியம் குறித்து கீழ்க்கண்டவற்றுள் சரியானது எது?

(அ) வினாப்பொருள் தரும் வாக்கியம்

(ஆ) ஓர் எழுவாய் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட எழுவாய்கள் ஒரு பயனிலையைக் கொண்டு முடியும்.

(இ) தனி வாக்கியங்கள் பல தொடர்ந்து வரும்

(ஈ) ஒரு முதன்மை வாக்கியம் ஒரு துணை வாக்கியத்துடன் சேர்ந்து வரும்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) ஓர் எழுவாய் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட எழுவாய்கள் ஒரு பயனிலையைக் கொண்டு முடியும்.

3. “திருவள்ளுவர் தோன்றியிராவிட்டால் தமிழன் என்னும் ஓர் இனம் இருப்பதாக உலகத்தார்க்குத் தெரிந்திருக்காது. திருக்குறள் என்னும் ஒரு நூல் தோன்றியிராவிட்டால், தமிழ்மொழி என்னும் ஒரு மொழி இருப்பதாக உலகத்தார்க்குத் தெரிந்திருக்காது” எனக் கூறியவர்.

(அ) கி.வா.ஜ

(ஆ) கி.ஆ.பெ.வி

(இ) திரு.வி.க

(ஈ) உ.வே.சா

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) கி.ஆ.பெ.வி

4. “தெண்டன் இட்டது வள்ளுகிர் திண்டிறல் புலியே” – இத்தொடரில் “திண்டிறல்” என்னும் சொல்லிற்குப் பொருள்

(அ) கொடுமையான

(ஆ) கடுமையான

(இ) எடுப்பான

(ஈ) உறுதியான

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) உறுதியான

“தெண்டன் இட்டது வள்ளுகிர் திண்டிறல் புலியே” மேற்கண்ட பாடல் சீறாப்புரணம் விவாதத்துக் காண்டம் புலி வசனித்த படலத்தில் 8-ஆவது செய்யுளில் வந்துள்ளது. திண்டிறல்-உறுதியான, வலிமையான

5. துரைமாணிக்கம் என்ற இயற்பெயரைக் கொண்டவர்

(அ) மீரா

(ஆ) முடியரசன்

(இ) கண்ணதாசன்

(ஈ) பெருஞ்சித்திரனார்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) பெருஞ்சித்திரனார்

அ. மீரா-மீ.இராசேந்திரன். ஆ.முடியரசன்-துரைராசு. இ.கண்ணதாசன்-முத்தையா. ஈ.பெருஞ்சித்திரனார்-துரை.மாணிக்கம்

6. “தேம்பாவணி” நூலில் உள்ள படலங்களின் எண்ணிக்கை

(அ) 39 படலங்கள்

(ஆ) 30 படலங்கள்

(இ) 32 படலங்கள்

(ஈ) 36 படலங்கள்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) 36 படலங்கள்

தேம்பாவணியில் 3 காண்டங்கள் உள்ளன. ஒவ்வொரு காண்டத்திற்கும்12 படலங்கள் என மொத்தம் 36 படலங்கள் உள்ளன.

7. பொருத்துக:

புலவர் நூற்பெயர்

(அ) முடியரசன் – 1. ஆனந்தத் தேன்

(ஆ) சச்சிதானந்தன் – 2. மாங்கனி

(இ) குமரகுருபரர் – 3. காவியப்பாவை

(ஈ) கண்ணதாசன் – 4. சகலகலா வல்லிமாலை

குறியீடுகள்:

(அ) (ஆ) (இ) (ஈ)

(அ) 2 1 4 3

(ஆ) 3 2 4 1

(இ) 3 1 4 2

(ஈ) 1 3 2 4

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) 3 1 4 2

8. மலரின் பருவத்தைக் குறிக்காத பெயர் எது?

(அ) அகரு

(ஆ) அலர்

(இ) முகை

(ஈ) வீ

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) அகரு

மலரின் பருவத்தைக் குறிக்கும் பொய்கள்: அரும்பு, போது, மலர் (அலர்), வீ, செம்மல்

9. “மருமக்கள் வழி மான்மியம்” என்ற நூலின் ஆசிரியர் யார்?

(அ) திரு.வி.க

(ஆ) கவிமணி

(இ) இரசிகமணி

(ஈ) நாமக்கல் கவிஞர்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) கவிமணி

கவிமணி தேசிக விநாயகர் அவர்கள் எழுதிய “மருமக்கள் வழி மான்மியம்” நகைச்சுவை நூல் ஆகும்.

10. “சோவியத்து அறிஞர் தால்சுதாய் வழிகாட்டுதலால் திருக்குறள் மூலத்தை நேரடியாகப் படிக்க விரும்பியே தமிழ் பயிலத் தொடங்கினேன்” – எனக்கூறியவர்

(அ) பேரறிஞர் அண்ணா

(ஆ) பண்டித ஜவஹர்லால் நேரு

(இ) காந்தியடிகள்

(ஈ) ஜி.யூ.போப்

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) காந்தியடிகள்

General Tamil Study Materials

General Tamil Model Questions Pdf

1 2Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!