General TamilTnpsc

General Tamil Model Question Paper 12

81. “தேசியம் காத்த செம்மல்” – எனத் திரு.வி.க.வால் புகழப்பட்டவர்

(அ) பசும்பொன் முத்துராமலிங்கர்

(ஆ) காந்தியடிகள்

(இ) திருப்பூர் குமரன்

(ஈ) வீரபாண்டிய கட்டபொம்மன்

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) பசும்பொன் முத்துராமலிங்கர்

82. “சின்னச் சீறா” என்ற நூலை எழுதியவர்

(அ) உமறுப் புலவர்

(ஆ) குணங்குடி மஸ்தான்

(இ) பனு அகமது மரைக்காயர்

(ஈ) அப்துல் ரகுமான்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) பனு அகமது மரைக்காயர்

சீறாப்புரணத்தில் நபிகள் நாயகத்தின் வாழ்வு முற்றிலுமாக பாடி நிறைவு செய்யப்படவில்லை. பனு அகமது மரைக்காயர் என்பவர் தாம் பெருமானாரின் தூய வாழ்வு முழுமையும் பாடி முடித்தார். “அந்நூல் சின்னச்சீறா” என அழைக்கப்படுகிறது.

83. காந்தியக் கவிஞர் என அழைக்கப்படுபவர் யார்?

(அ) இராமலிங்கம் பிள்ளை

(ஆ) கவிமணி தேசிய விநாயகம்பிள்ளை

(இ) பாரதியார்

(ஈ) நாமக்கல் கவிஞர் இராமலிங்கனார்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஈ) நாமக்கல் கவிஞர் இராமலிங்கனார்

84. “ஆ” முதன் முதலில் எந்நிலத்திற்குரிய விலங்கு?

(அ) குறிஞ்சி

(ஆ) முல்லை

(இ) நெய்தல்

(ஈ) மருதம்

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) குறிஞ்சி

85. “கடவுள் வல்கை யோடுனை மாய்த்துடல்

புட்கிரை யாக ஒல்செய்வேன்”

– இந்த வீரவரிகள் இவரால் கூறப்பட்டன.

(அ) தாவீது

(ஆ) கோலியாத்து

(இ) சவுல் மன்னன்

(ஈ) சூசை

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) தாவீது

தேம்பாவணி-வளன் செனித்த படலம்-தாவீதின் வீரமொழி

வெல்வை வேல்செயு மிடலதுன் மிடலடா நானோ

எல்வையா தரவியற் றெதிரி லாத்திறக் கடவுள்

வல்கை யோடுனை மாய்த்துடல் புட்கிரையாக

ஓல்செய் வேனெனா வுடைகவண் சுழற்றின னினையோன்

– வீரமாமுனிவர்.

86. இதன் பட்டையை அரைத்துத் தடவினால் முறிந்த எலும்பு விரைவில் கூடும்.

(அ) முருங்கைப்பட்டை

(ஆ) வேப்பம் பட்டை

(இ) புளியம்பட்டை

(ஈ) நாவற்பட்டை

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) முருங்கைப்பட்டை

87. “வீரம் இல்லாத வாழ்வும் விவேகமில்லாத வீரமும் வீணாகும்” – என எடுத்துரைத்தவர்

(அ) சுபாஷ் சந்திரபோஸ்

(ஆ) பசும்பொன் முத்துராமலிங்கர்

(இ) வீரபாண்டிய கட்டபொம்மன்

(ஈ) வேலுத்தம்பி

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) பசும்பொன் முத்துராமலிங்கர்

88. பொருத்துக:

பட்டியல் I – பட்டியல் II

(அ) First Deserve, then desire – 1. அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்

(ஆ) Tit for tat – 2. செய்யும் தொழிலே தெய்வம்

(இ) Work is worship – 3. முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படலாமா?

(ஈ) Little strokes fell great oaks – 4. பழிக்குப் பழி

அ ஆ இ ஈ

(அ) 2 4 3 1

(ஆ) 3 4 2 1

(இ) 1 3 4 2

(ஈ) 4 3 2 1

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) 3 4 2 1

89. பொருத்துக:

சொல் பொருள்

(அ) விசும்பு – 1.தந்தம்

(ஆ) மருப்பு – 2.வானம்

(இ) கனல் – 3.யானை

(ஈ) களிறு – 4.நெருப்பு

அ ஆ இ ஈ

(அ) 2 1 4 3

(ஆ) 3 2 1 4

(இ) 1 3 4 2

(ஈ) 4 3 2 1

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) 2 1 4 3

90. திருக்காவலூர்க் கலம்பகம் இவரால் எழுதப்படவில்லை

(அ) வீரமாமுனிவர்

(ஆ) தைரியநாத சாமி

(இ) கொன்ஸ்டான் ஜோசப் பெஸ்கி

(ஈ) ஜி.யூ.போப்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) ஜி.யூ.போப்

வீரமாமுனிவர் திருக்காவலூர்க் கலம்பகத்தை இயற்றினார். அவரது இயற்பெயர் கொன்ஸ்டான் ஜோசப் பெஸ்கி. முதலில் அவர் தைரியநாத சுவாமி என்று தன் பெயரை மாற்றிக் கொண்டார். அது வடமொழிப் பெயர் என அறிந்த பின் தூய தமிழில் வீரமாமுனிவர் எனப் பெயரை மாற்றிக் கொண்டார்.

ஜி.யூ.போப் தொகுத்த நூலின் பெயர் “தமிழ்செய்யுட் கலம்பகம்” ஆகும்.

Previous page 1 2 3 4 5 6 7 8 9 10Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!