General Tamil

6th Tamil Unit 2 Questions

71. இயல்பாகவே தோன்றி மறையும் பொருள்கள், அவற்றின் இயக்கம், அவை இயங்கும் இடம், இயங்கும் காலம் அனைத்தும் ஒன்றிணைந்ததே ______________ என்கிறோம்.

A) செயற்கை

B) அழகு

C) இயற்கை

D) இவற்றில் ஏதுமில்லை

72. தொடர்களைப் பிரித்து இரண்டு தொடர்களாக உள்ளது, சரியானவற்றைத் தேர்ந்தெடு.

I. பல நாள்களாக மழை பெய்யாததால் பயிர்கள் வாடின.

விடை: பல நாள்களாக மழை பெய்யவில்லை. பயிர்கள் வாடின.

II. கபிலன் வேலை செய்ததால் களைப்பாக இருக்கிறான்.

விடை: கபிலன் வேலை செய்தான். களைப்பாக இருக்கிறான்.

III. இலக்கியா இனிமையாகப் பாடியதால் பரிசு பெற்றாள்.

விடை: இலக்கியா இனிமையாகப் பாடினாள். பரிசு பெற்றாள்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) III மட்டும் சரி

D) I, II, III அனைத்தும் சரி

73. கலைச் சொல் அறிவோம் – சரியானவற்றைத் தேர்ந்தெடு.

I. கண்டம் - Continent

II. தட்பவெப்பநிலை – Climate

III. வானிலை - Weather

IV. வலசை - Migration

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) III, IV மட்டும் சரி

D) I, II, III, IV அனைத்தும் சரி

74. கலைச் சொல் அறிவோம் – சரியானவற்றைத் தேர்ந்தெடு.

I. கண்டம் - Continent

II. புகலிடம் – Sanctuary

III. புவிஈர்ப்புப்புலம் - Gravitational Field

IV. வலசை - Migration

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) III, IV மட்டும் சரி

D) I, II, III, IV அனைத்தும் சரி

75. அறநூல்களில் ‘உலகப் பொது மறை’ என்று போற்றப்படும் சிறப்புப் பெற்ற நூல் எது?

A) திருக்குறள்

B) நான்மணிக்கடிகை

C) இன்னா நாற்பது

D) திரிகடுகம்

76. ஏழு சொற்களில் மனிதர்களுக்கு அறத்தைக் கற்றுத்தரும் நூல் எது?

A) திருக்குறள்

B) நான்மணிக்கடிகை

C) இன்னா நாற்பது

D) திரிகடுகம்

77. ______________ எழுத்துகளுக்குத் தொடக்கம்.

A) அந்தாதியே

B) அந்தமே

C) ஆதியே

D) அகரமே

78. கீழ்க்கண்டவற்றுள் திருக்குறள் உடன் பொருந்தியது எது?

I. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு – கடவுள் வாழ்த்து

II. விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து உள்நின்று உடற்றும் பசி – வான் சிறப்பு

III. செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கரிய செய்கலா தார் – நீத்தார் பெருமை

IV. தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க்கு எல்லாம் இனிது – மக்கட்பேறு

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) III, IV மட்டும் சரி

D) I, II, III, IV அனைத்தும் சரி

79. கீழ்க்கண்டவற்றுள் திருக்குறள் உடன் பொருந்தியது எது?

I. ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய் – மக்கட்பேறு

II. கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற்று ஆங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை – வான் சிறப்பு

III. அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு – அன்புடைமை

IV. பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு அணியல்ல மற்றுப் பிற – இனியவை கூறல்

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) III, IV மட்டும் சரி

D) I, II, III, IV அனைத்தும் சரி

80. கீழ்க்கண்டவற்றுள் திருக்குறள் உடன் பொருந்தியது எது?

I. ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய் – மக்கட்பேறு

II. கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற்று ஆங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை – வான் சிறப்பு

III. இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந் தற்று – இனியவை கூறல்

IV. அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு – அன்புடைமை

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) III, IV மட்டும் சரி

D) I, II, III, IV அனைத்தும் சரி

Previous page 1 2 3 4 5 6 7 8 9 10Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!