General Tamil

6th Tamil Unit 2 Questions

21. கழுத்தில் சூடுவது _______________.

A) தார்

B) கணையாழி

C) தண்டை

D) மேகலை

22. கதிரவனின் மற்றொரு பெயர் __________________.

A) புதன்

B) ஞாயிறு

C) சந்திரன்

D) செவ்வாய்

23. ‘வெண்குடை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______

A) வெண் + குடை

B) வெண்மை + குடை

C) வெம் + குடை

D) வெம்மை + குடை

24. ’பொற்கோட்டு’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____________.

A) பொன் + கோட்டு

B) பொற் + கோட்டு

C) பொண் + கோட்டு

D) பொற்கோ + இட்டு

25. கொங்கு + அலர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _______________.

A) கொங்குஅலர்

B) கொங்அலர்

C) கொங்கலர்

D) கொங்குலர்

26. அவன் + அளிபோல் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _____________.

A) அவன்அளிபோல்

B) அவனளிபோல்

C) அவன்வளிபோல்

D) அவனாளிபோல்

27. காணி நிலம் வேண்டும் பராசக்தி காணி நிலம் வேண்டும் – அங்குத் தூணில் அழகியதாய் – நன்மாடங்கள் துய்ய நிறத்தினதாய் – இந்த பாடல் வரியின் ஆசிரியர் யார்?

A) பாரதிதாசன்

B) அழ. வள்ளியப்பா

C) வாணிதாசன்

D) பாரதியார்

28. அந்தக் காணி நிலத்திடையே – ஓர் மாளிகை கட்டித் தரவேண்டும் – அங்குக் கேணி அருகினிலே – தென்னைமரம் கீற்றும் இளநீரும் – இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் (தொகுப்பு) எது?

A) பாரதிதாசன் கவிதைகள்

B) அழ. வள்ளியப்பா கவிதைகள்

C) வாணிதாசன் கவிதைகள்

D) பாரதியார் கவிதைகள்

29. பத்துப் பன்னிரண்டு – தென்னைமரம் பக்கத்திலே வேணும் * – நல்ல முத்துச் சுடர் போலே – நிலாவொளி முன்பு வரவேணும் – இந்த பாடல் வரியின் ஆசிரியர் யார்?

A) பாரதிதாசன்

B) அழ. வள்ளியப்பா

C) வாணிதாசன்

D) பாரதியார்

30. அங்குக் கத்துங் குயிலோசை – சற்றே வந்து காதில் படவேணும் – என்றன் சித்தம் மகிழ்ந்திடவே – நன்றாய் இளம் தென்றல் வரவேணும் – இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் (தொகுப்பு) எது?

A) பாரதிதாசன் கவிதைகள்

B) அழ. வள்ளியப்பா கவிதைகள்

C) வாணிதாசன் கவிதைகள்

D) பாரதியார் கவிதைகள்

Previous page 1 2 3 4 5 6 7 8 9 10Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!