General Tamil

10th Tamil Questions – Unit 9

10th Tamil Questions – Unit 9

Here We have Winmeen Tnpsc Self Preparation Course Study Materials. By reading line by line, we have framed these questions for Tnpsc all group exams.

6th to 12th Tamil Unit Wise Questions With Answer Pdf – Once you practice these Questions, you can easily score above 95 out of 100 Questions in General Tamil Section.

First time preparing candidates get idea how to study tamil and how to start tamil, experienced candidates get practice from these questions, so utilize this opportunity.

Also this questions framed with answers and explanation, best practice for all tnpsc aspirants. 10th Tamil Questions – Unit 9 With Answers Uploaded Below.

1. கருத்தாழமும் வாசகச் சுவைப்பும் கலந்து இலக்கியங்கள் படைத்தவர் யார்?

A) ராஜேஷ் குமார்

B) ஜெயகாந்தன்

C) ராஜம் கிருஷ்ணன்

D) சுஜாதா

2. சமகாலக் கருத்துகளையும் நிகழ்வுகளையும் சமகால மொழியில் சமகால உணர்வில் தந்தவர் யார்?

A) ஜெயகாந்தன்

B) ராஜேஷ் குமார்

C) ராஜம் கிருஷ்ணன்

D) சுஜாதா

3. சிறுகதை, புதினம், திரைப்படம், முன்னுரை, பேட்டி என எதைத் தொட்டாலும் தனிமுத்திரை பதித்தவர்; இலக்கியத்திற்கான பெரும் விருதுகளை வென்றவர்; மனிதம் தோய்ந்த எழுத்தாளுமை மிக்கவர் – இந்த கூற்று யாரைப்பற்றியது?

A) சுஜாதா

B) ராஜேஷ் குமார்

C) ராஜம் கிருஷ்ணன்

D) ஜெயகாந்தன்

4. கீழ்க்கண்டவற்றுள், ஜெயகாந்தன் அவர்களின் காலம் எது?

A) 24.04.1934 முதல் 08.04.2015 வரை

B) 24.04 1930 முதல் 08.04.2012 வரை

C) 24.04 1928 முதல் 08.04.2009 வரை

D) 24.04 1925 முதல் 08.04.2005 வரை

5. ஜெயகாந்தன் அவர்கள் பெற்ற விருதுகள் எவை?

I. மேன் புக்கர் பரிசு

II. ஞானபீட விருது, தாமரைத்திரு விருது

III. சோவியத் நாட்டு விருது (இமயத்துக்கு அப்பால்)

IV. சாகித்திய அகாதெமி விருது – சில நேரங்களில் சில மனிதர்கள் (புதினம்)

V. குடியரசுத் தலைவர் விருது (உன்னைப் போல் ஒருவன் – திரைப்படம்)

A) I, II, III மட்டும் சரி

B) II, III, V மட்டும் சரி

C) I, II, III, IV, V அனைத்தும் சரி

D) II, III, IV, V மட்டும் சரி

6. சமூக அமைப்பின் முரண்பாடுகளை எழுத்திலே அப்பட்டமாகக் காட்டியவர். நேர்முக எதிர்முக விளைவுகளைப் பெற்றவர். உள்ளடக்க விரிவால் மனிதாபிமானத்தை வாசக நெஞ்சங்களில் விதைத்தவர். தன்னையறிதல் என்பதிலும் தன்னை உணர்த்துதல் என்பதிலும் முனைப்பாக இருந்தவர் – இந்த கூற்று யாரைப்பற்றியது?

A) ஜெயகாந்தன்

B) ராஜேஷ் குமார்

C) ராஜம் கிருஷ்ணன்

D) சுஜாதா

7. கீழ்க்கண்டவற்றுள், ஜெயகாந்தன் கூறிய கூற்றுகள் எது?

I. நான் எழுதுவதற்கு ஒரு தூண்டுதலும் அதற்குரிய காரணமும் உண்டு, என் எழுத்துக்கு ஒரு இலட்சியமும் உண்டு, நான் எழுதுவது, முழுக்க முழுக்க வாழ்க்கையிலிருந்து நான் பெறும் கல்வியின் விளைவும் எனது தனிமுயற்சியின் பயனுமாகும்.

II. இந்த நாட்டில், வியாசன் முதல் பாரதி வரை எதற்காக எழுதினார்கள்? இவர்களில் யாராவது கலையைத் தாங்கிப் பிடிக்க என்று சொல்லிக் கொண்டதுண்டா? இவர்களைவிட கலையைத் தாங்கியவர்களும், காலம் காலமாய் வாழும், வாழப்போகும் கலா சிருஷ்டிகளைத் தந்தவர்களும் உண்டா?

III. தர்மார்த்தங்களை உபதேசிக்கவே வியாஸர் பாரதத்தை எழுதினார்.

IV. தமிழ் நூல்களில் எனக்கு மிகவும் பிடித்த நூல், குற்றாலக் குறவஞ்சி.

A) I, II, III, IV அனைத்தும் சரி

B) I, II, III மட்டும் சரி

C) I, II மட்டும் சரி

D) I மட்டும் சரி

8. தமிழ் இலக்கணமே நூலினியல்பாவது என்னவென்று சொல்லும் போது, “நூலினியல்பே நுவலின் ஓரிரு பாயிரந்தோற்றி மும்மை யினொன்றாய் நாற்பொருட் பயத்தலொடு எழுமதந் தழுவி” என்று நூலின் பயன் _______________ என்ற நான்கு பயனுக்காக இருத்தல் வேண்டும் என்று சொல்லி அதன் பின்னர்தான் விளக்கங்களைக் கூறிச் செல்கிறது, என்று ஜெயகாந்தன் கூறுகிறார். ‘நாற்பொருட் பயத்தலொடு’ – இதில் குறிப்பிடப்படுவது யாது?

A) கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு

B) அறம், பொருள் இன்பம் வீடு

C) ரிக், யஜுர், சாம, அதர்வணம்

D) மேல், கீழ், பள்ளம், மேடு

9. கீழ்க்கண்டவற்றுள், ஜெயகாந்தன் கூறிய கூற்றுகள் எது?

I. கலைத்தன்மைக்கு எந்தவிதக் குறையும் வராமல், கலாதேவியின் காதற் கணவனாகவும் சமுதாயத் தாயின் அன்புப் புதல்வனாகவும் இருந்துதான் நான் எழுதுகிறேன்.

II. அர்த்தமே வடிவத்தை வளமாக்குகிறது அல்லவா? வெறும் வடிவம் மரப்பாச்சிதான். ஆகையினால் இவற்றைப் பிரித்துக்கொண்டு அவஸ்தைக்கு உள்ளாகின்றார். நமது அறியாமையால் அவஸ்தைகளுக்குள்ளாகி, பிறரையும் நமது அறியாமையால் அவஸ்தைக்கு உட்படுத்தாமல், சமூகப் பார்வையோடு கலைப்பணி புரியவே நான் எழுதுகிறேன்.

III. கலைப்பணி என்றாலே அதனுள் சமூகப் பார்வை அடக்கம். பிரித்துப் பேசும் போக்கு வந்துவிட்டதால் பிரித்துச் சொல்கிறேன். அது சேர்ந்துதான் இருக்கிறது;

IV. எதற்காக எழுதுகிறேன்? என்று நான் சொன்ன காரணங்களுக்குப் புறம்பாக நடத்தால் நான் கண்டிக்கப்படவும், திருத்தப்படவும் உட்பட்டிருக்கிறேன்.

A) I, II மட்டும் சரி

B) II, III, IV மட்டும் சரி

C) III, IV மட்டும் சரி

D) I, II, III, IV அனைத்தும் சரி

10. “ஜெயகாந்தான், எத்தகைய பாத்திரங்களைப் படைத்தாலும் அந்தப் பாத்திரங்களின் சிறந்த அம்சங்களைக் குறிப்பிடத் தவறுவதில்லை. துவேஷத்தைப் பரப்புவது, அவருடைய இயல்புக்கு சற்றும் ஒவ்வாதது. அவர் அரசியலில் தொடர்ந்து பங்கு பெறாமல் போனதற்கு இதுகூட காரணமாக இருந்திருக்கலாம்” என்று ஜெயகாந்தன் அவர்களைப் பற்றிக் கூறியவர் யார்?

A) அசோகமித்திரன்

B) கா. செல்லப்பன்

C) ந. காமராசன்

D) வாலி

11. கச்சிதமான உருவம், கனமான உள்ளடக்கம், வலுவான நடை, புதுக்கருத்துகள், புதுவிளக்கங்கள், ஆழம், கனம் இந்த அம்சங்களை இவருடைய சிறுகதைகளில் பூரணமாகக் காணலாம். அதுமட்டுமின்றிப் பலதிறப்பட்ட சூழ்நிலைகளையும் வெற்றிகரமாகச் சித்தரிப்பது இவருடைய அரிய சாதனை. என்று ஜெயகாந்தன் அவர்களைப் பற்றிக் கூறிய இதழ் எது?

A) தினமலர் (1972)

B) தினத்தந்தி (1970)

C) வாசகர்களின் கருத்து – தீபம் இதழ் (1967)

D) இந்தியன் டைம்ஸ் (2000)

12. நேர்கொண்ட ஆனால் வித்தியாசமான பார்வை. நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள், திமிர்ந்த ஞானச் செருக்கு, கம்பீரமான குரல், வளமான, புதுமையான வாழ்க்கைச் சித்தரிப்புகள் – இவைகள் தாம் ஜெயகாந்தன் என்ற செம்மாந்த தமிழனின் சிறப்பான அடையாளங்கள். ‘படிக்காத மேதை’ என்று குறிப்பிடப்படும் அவர் முறையாகக் கல்லூரிகளில் படிக்கவில்லையே தவிர, தமிழ், இந்திய இலக்கியங்களை மட்டுமன்றி, சோவியத் பிரெஞ்சு இலக்கியங்களைத் தானே படித்து உணர்ந்தது மட்டுமன்றி, வாழ்க்கையையும் ஆழமாகப் படித்தவர் பிறகு அவற்றை வார்த்தைகளில் அழகுறப் படைத்தவர் – என்று ஜெயகாந்தன் அவர்களைப் பற்றிக் கூறியவர் யார்?

A) அசோகமித்திரன்

B) கா. செல்லப்பன்

C) ந. காமராசன்

D) வாலி

13. ஜெயகாந்தன் அவர்களின் சிறுகதைத் தொகுப்புகளுள், சரியானது எது?

I. அம்புப் படுக்கை, கண்ணாடி, பேசும் பூனை

II. குருபீடம், யுகசந்தி, ஒருபிடி சோறு

III. உண்மை சுடும், இனிப்பும் கரிப்பும்

IV. தேவன் வருவாரா, புதிய வார்ப்புகள்

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) I, III, IV மட்டும் சரி

D) II, III, IV மட்டும் சரி

14. ஜெயகாந்தன் அவர்களின் குறும்புதினங்களுள், சரியானது எது?

I. பிரளயம், கைவிலங்கு, ரிஷிமூலம்

II. பிரம்ம உபதேசம், யாருக்காக அழுதான்?

III. ஆயிரத்தொரு இரவுகள், சாரப்பள்ளம் சாமுண்டி

IV. கருணையினால் அல்ல, சினிமாவுக்குப் போன சித்தாளு

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) I, II, IV மட்டும் சரி

D) II, III, IV மட்டும் சரி

15. ஜெயகாந்தன் அவர்களின் புதினங்களுள், சரியானது எது?

I. பாரீசுக்குப் போ, சுந்தர காண்டம், இன்னும் ஒரு பெண்ணின் கதை

II. பார்த்திபன் கனவு, அலை ஓசை

III. உன்னைப் போல் ஒருவன், கங்கை எங்கே போகிறாள்

IV. ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) I, III, IV மட்டும் சரி

D) II, III, IV மட்டும் சரி

16. ஜெயகாந்தன் அவர்களின் திரைப்படமான படைப்புகளுள், சரியானது எது?

I. முள்ளும் மலரும்

II. சில நேரங்களில் சில மனிதர்கள், ஊருக்கு நூறுபேர்

III. உன்னைப்போல் ஒருவன், யாருக்காக அழுதான்

IV. ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) I, III, IV மட்டும் சரி

D) II, III, IV மட்டும் சரி

17. எழுத்தாளர், ஒருவருடைய படைப்பு நோக்கத்தையும் படைப்பு பாங்கையும் வாழ்க்கைச் சிக்கல்கள் குறித்த கண்ணோட்டத்தையும் உணர்த்துவதுதான் முன்னுரை. தன்னுடைய படைப்புகளுக்குத் தானே முன்னுரைகள் எழுதிக்கொள்ளும் _______________, பின்னர் வரவிருக்கும் கேள்விகளுக்குத் தரும் பதில்களாக அவற்றை ஆக்கிவிடுவார்.

A) சி.சு.செல்லப்பா

B) சுஜாதா

C) ராஜம் கிருஷ்ணன்

D) ஜெயகாந்தன்

18.”ஒரு தேசத்தின் ஒரு நாகரிகத்தின் ஒரு காலத்தின் ஒரு வளர்ச்சியன் ஒரு வாழ்க்கையின் உரைகல் இலக்கியம். ஓர் எழுத்தாளன் ஆத்ம சுக்தியோடு எழுதுகிறானே அது கேவலம் பிழைப்போ அல்லது ஒரு தொழிலோ அல்ல. அது ஒரு தவம். நீங்கள் கதை என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களே அது காலத்தின், ஒரு வாழ்க்கையின் சாசனம்” (1966) – இந்த கூற்று எதனுடன் தொடர்புடையது?

A) பாரீசுக்குப்போ … புதினத்தின் முன்னுரை

B) சுந்தர காண்டம் … புதினத்தின் முன்னுரை

C) உன்னைப் போல் ஒருவன் … புதினத்தின் முன்னுரை

D) இன்னும் ஒரு பெண்ணின் கதை … புதினத்தின் முன்னுரை

19. இன்னுமொரு முகம் (கவிதை) – ஜெயகாந்தன் சில கவிதைகளையும் திரைப்பாடல்களையும் படைத்திருக்கிறார். அவரது படைப்பாற்றலின் இன்னொரு பக்கம் அது. _______________ அவர்கள் பற்றிய ஜெயகாந்தன் கவிதை இது. ‘எண்ணமும் எழுத்தும் உயர்ந்திருக்கும் – ஏழை கண்ணீரும் பாடலிலே கலந்திருக்கும் பண்ணொடு சந்தமும் பாய்ந்து வரும் – பழைய மண்ணின் வாடையும் சேர்ந்து வரும்’.

A) அண்ணா

B) கண்ணதாசன்

C) வாலி

D) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

20. ஜெயகாந்தன் அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில். கீழ்க்கண்டவற்றுள் சரியானது எது?

I. சிறுகதைகளைப் படைப்பதில் தங்களுடைய தனித்தன்மை வாய்ந்த திறமையை வாசகர்கள் கொண்டாடுகிறார்களே, இத்துறையில் தாங்கள் கடைப்பிடிக்கும் நுணுக்கங்கள் யாவை? (பேட்டி – திரு. கிருஸ்ணமணி, DEO 1966) நுணுக்கமா? அப்படித் தனியாக தான் எதையும் கையாளுவதாக எண்ணிச் செய்வதில்லை, என் மனத்தால், புத்தியால், உணர்வால் நான் அறிந்து அனுபவப்படாத எதைப் பற்றியும் நான் எழுதினதில்லை. என்னைப் பெரிதும் பாதிப்பவை மனித வாழ்வின் பிரச்சினைகளே. என்னைப் பொறுத்தவரையில் எழுத்தாளனுக்கு அவனுடைய படைப்புகளுக்கு அடிப்படையாக அமைய வேண்டியது மனித வாழ்வின் பிரச்சினைகளே.

II. உங்கள் பார்வையில் சுதந்திர இந்தியாவின் மகத்தான சாதனை எது? மிகப் பெரிய சவால் எது? மகத்தான சாதனை – பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காத்தது. மிகப் பெரிய சவாலும் அதுவே.

III. இந்த வயதில், தேசம் செல்லும் பாதை, எழுத்துலகத்தின் போக்கு இவற்றை எல்லாம் பார்க்கும் போது எப்படி இருக்கிறது? காலந்தோறும் மாற்றங்களை நாம் பார்க்கிறோம். நாமும் மாறிக்கொண்டே இருக்கிறோம்.

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) I, III மட்டும் சரி

D) I, II, III அனைத்தும் சரி

21. கீழ்க்கண்டவர்களுள், ‘சிறுகதை மன்னன்’ என்று அழைக்கப்படுபவர் யார்?

A) கல்கி

B) ஜெயகாந்தன்

C) அநுத்தமா

D) சி.சு.செல்லப்பா

22. ஜெயகாந்தன் அவர்களின் ‘யுகசந்தி’ என்ற தொகுப்பில் இடம்பெற்றுள்ள சிறுகதை தொகுப்பு எது?

A) தர்க்கத்திற்கு அப்பால்

B) சகாராவைத் தாண்டாத ஒட்டகங்கள்

C) சிந்தும் ஒளி

D) நாழிக்கிணறு

23. தான் வாழ்ந்த காலத்தில் சிக்கல்கள் பலவற்றை ஆராய, எடுத்துச்சொல்ல, தன் பார்வைக்கு உட்பட்ட தீர்ப்பைச் சொல்ல அவர் மேற்கொண்ட நடவடிக்கையே படைப்பு. அவருடைய படைப்புகள் உணர்ச்சி சார்ந்த எதிர்வினைகளாக இருக்கின்றன. இதுவே அவருக்குச் ‘சிறுகதை மன்னன்’ என்ற பட்டத்தைத் தேடித்தந்தது. இவர் குறும்புதினங்களையும் புதினங்களையும் கட்டுரைகளையும் கவிதைகளையும் படைத்துள்ளார்; தன் கதைகளைத் திரைப்படமாக இயக்கியிருக்கிறார்; தலைசிறந்த உரத்த சிந்தனைப் பேச்சாளராகவும் திகழ்ந்தார்; சாகித்திய அகாதெமி விருதையும், ஞானபீட விருதையும் பெற்ற இவருடைய கதைகள் பிறமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன – இந்த கூற்று யாரைப்பற்றியது?

A) கல்கி

B) அநுத்தமா

C) ஜெயகாந்தன்

D) சி.சு.செல்லப்பா

24. பொற்காலமாக இருந்தாலும் இவள் தலையில் எழுதியதோ கற்காலம்தான் எப்போதும் தொலைந்ததே வாழ்வு என தலையில் கைவைத்து புலம்புவார் பூமியிலே தன் வாழ்வு தொலைக்காமல் தற்காத்து வைப்பதற்காய் தலையில் கைவைப்பாள் இவள். வாழ்வில் தலைக்கனம் பிடித்தவர் உண்டு. தலைக்கனமே வாழ்வாக ஆகிப்போனது இவளுக்கு – இந்தப் பாடல்வரியின் ஆசிரியர் யார்?

A) மு. வரதராசனார்

B) துரை மாணிக்கம் என்ற இயற்பெயர் கொண்ட பெருஞ்சித்திரனார்

C) முகம்மது ரஃபி என்ற இயற்பெயர் கொண்ட நாகூர் ரூமி

D) தாயுமானவர்

25. அடுக்குமாடி அலுவலகம் எதுவாயினும் அடுத்தவர் கனவுக்காக அலுக்காமல் இவள் சுமக்கும் கற்களெல்லாம் அடுத்தவேளை உணவுக்காக செத்தாலும் சிறிதளவே சலனங்கள் ஏற்படுத்தும் சித்தாளின் மனச்சுமைகள் செங்கற்கள் அறியாது – இந்தப் பாடல் வரிகளின் ஆசிரியர் பிறந்த ஊர் எது?

A) தஞ்சை மாவட்டம்

B) விருதுநகர் மாவட்டம்

C) ஈரோடு மாவட்டம்

D) நெல்லை மாவட்டம்

26. சித்தாளு என்னும் கவிதையின் ஆசிரியர் யார்?

A) ந. மு. வேங்கடசாமி நாட்டார்

B) பெருஞ்சித்திரனார்

C) முகம்மது ரஃபி என்ற இயற்பெயர் கொண்ட நாகூர் ரூமி.

D) வாணிதாசன்

27. முகம்மது ரஃபி என்ற இயற்பெயர் கொண்ட நாகூர் ரூமி எண்பதுகளில் ___________________ இதழில் எழுதத் தொடங்கியவர். கவிதை, குறுநாவல், சிறுகதை, மொழிபெயர்ப்பு எனப் பலதளங்களில் இவர் தொடர்ந்து இயங்கி வருபவர். மீட்சி, சுபமங்களா, புதிய பார்வை, குங்குமம், கொல்லிப்பாவை, இலக்கிய வெளிவட்டம், குமுதம் ஆகிய இதழ்களில் இவரது படைப்புகள் வெளியாகியுள்ளன.

A) இந்தியா

B) கணையாழி

C) விகடன்

D) இவற்றில் ஏதுமில்லை

28. முகம்மது ரஃபி என்ற இயற்பெயர் கொண்ட நாகூர்ரூமி அவர்களின் கவிதை மற்றும் நாவல்களில் சரியானது எது?

I. நதியின் கால்கள், ஏழாவது சுவை (கவிதை)

II. சொல்லாத சொல் (கவிதை)

III. ஒரு கிராமத்து நதி (நாவல்)

IV. கப்பலுக்குப் போன மச்சான் (நாவல்)

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) I, III, IV மட்டும் சரி

D) I, II, IV மட்டும் சரி

29. தேம்பாவணி நூலின் ஆசிரியர் யார்?

A) வீரமாமுனிவர்

B) ஜி.யு.போப்

C) கால்டுவெல்

D) சீகன்பால்கு

30. கிறித்துவிற்கு முன் தோன்றியவர் திருமுழுக்கு யோவான். இவரை _______________ என்றும் குறிப்பிடுவர். இவரே கிறித்துவின் வருகையை அறிவித்த முன்னோடி. வீரமாமுனிவர் தன் காப்பியத்தில் இவருக்குக் _______________ என்று பெயரிட்டுள்ளார்.

A) சிந்துவன், யேசன்

B) காளியப்பன், சூரன்

C) தேனப்பன், விஜயன்

D) அருளப்பன், கருணையன்

31. சொல்லும் பொருளும் சரியாகப் பொருந்தியது எது?

I. சேக்கை – படுக்கை

II. யாக்கை – உடல்

III. பிணித்து – கட்டி

IV. வாய்ந்த – பயனுள்ள

A) I, III மட்டும் சரி

B) I, II மட்டும் சரி

C) I, II, III மட்டும் சரி

D) I, II, III, IV அனைத்தும் சரி

32. பூக்கையைக் குவித்துப் பூவே புரிவொடு காக்கென்று அம்பூஞ் சேக்கையைப் பரப்பி இங்கண் திருந்திய அறத்தை யாவும் யாக்கையைப் பிணித்தென்று ஆக இனிதிலுள் அடக்கி வாய்ந்த ஆக்கையை அடக்கிப் பூவோடு அழுங்கணீர் பொழிந்தான் மீதே – இந்த பாடல் வரிகளின் ஆசிரியர் பெயர் என்ன? மற்றும் இந்த பாடலோடு தொடர்புடைய பொருள் எது?

A) சீகன்பால்கு, இயற்கை கொண்ட பரிவு

B) வீரமாமுனிவர், எலிசபெத் அம்மையார் அடக்கம், கருணையன் கண்ணீர்

C) ஜி.யு.போப், கண்ணீர்ப் பந்தல்

D) கால்டுவெல், அமைதியின் சிகரம்

33. வாய்மணி யாகக் கூறும் வாய்மையே மழைநீ ராகித் தாய்மணி யாக மார்பில் தயங்கியுள் குளிர வாழ்ந்தேன் தூய்மணி யாகத் தூவும் துளியிலது இளங்கூழ் வாடிக் காய்மணி யாகு முன்னர்க் காய்ந்தெனக் காய்ந்தேன் அந்தோ – இந்த பாடல்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?

A) தொன்னூல் விளக்கம்

B) சீறாப்புராணம்

C) மணிமேகலை

D) தேம்பாவணி

34. சொல்லும் பொருளும் சரியானது எது?

I. இளங்கூழ் – இளம்பயிர்

II. தயங்கி – அசைந்து

III. காய்ந்தேன் – வருந்தினேன்

A) I மட்டும் சரி

B) I, II, III அனைத்தும் சரி

C) II, III மட்டும் சரி

D) I, III மட்டும் சரி

35. சொல்லும் பொருளும் சரியானவற்றை தேர்ந்தெடுக்க.

I. கொம்பு – 1. வாழும் வழி

II. புழை – 2. துளை

III. கான் – 3. காடு

IV. தேம்ப – 4. வாட

V. அசும்பு – 5. நிலம்

VI. உய்முறை – 6. கிளை

A) I – 6; II – 5; III – 4; IV – 3; V – 2; VI – 1

B) I – 6; II – 5; III – 4; IV – 3; V – 2; VI – 1

C) I – 6; II – 2; III – 3; IV – 4; V – 5; VI – 1

D) I – 3; II – 5; III – 1; IV – 6; V – 2; VI – 4

36. சொல்லும் பொருளும் சரியானவற்றை தேர்ந்தெடுக்க.

I. ஓர்ந்து – 1. வாழும் வழி

II. படலை – 2. மணமலர்

III. உவமணி – 3. மலர்கள்

IV. துணர் – 4. விலக்கி

V. கடிந்து – 5. மாலை

VI. உய்முறை – 6. நினைத்து

A) I – 6; II – 5; III – 4; IV – 3; V – 2; VI – 1

B) I – 6; II – 5; III – 2; IV – 3; V – 4; VI – 1

C) I – 6; II – 2; III – 3; IV – 4; V – 5; VI – 1

D) I – 3; II – 5; III – 1; IV – 6; V – 2; VI – 4

37. விரிந்தன கொம்பில் கொய்த வீயென உள்ளம் வாட எரிந்தன நுதிநச்சு அம்புண்டு இரும்புழைப் புண்போல் நோகப் பிரிந்தன புள்ளின் கானில் பெரிதழுது இரங்கித் தேம்பச் சரிந்தன அசும்பில் செல்லும் தடவிலா தனித்தேன் அந்தோ! – இந்த பாடல்வரிகளுடன் தொடர்புடைய கூற்று எது?

A) இப்பெருங்காப்பியம் 6 காண்டங்களையும் 60 படலைங்களையும் உள்ளடக்கியது

B) இப்பெருங்காப்பியம் 12 காண்டங்களையும் 96 படலைங்களையும் உள்ளடக்கியது

C) இப்பெருங்காப்பியம் 3 காண்டங்களையும் 36 படலைங்களையும் உள்ளடக்கியது

D) இப்பெருங்காப்பியம் 30 காண்டங்களையும் 360 படலைங்களையும் உள்ளடக்கியது

38. உய்முறை அறியேன்; ஓர்ந்த உணர்வினொத்து உறுப்பும் இல்லா மெய்முறை அறியேன்; மெய்தான் விரும்பிய உணவு தேடச் செய்முறை அறியேன்; கானில் செல்வழி அறியேன்; தாய்தன் கைமுறை அறிந்தேன் தாயும் கடிந்தெனைத் தனித்துப் போனாள் – இந்த பாடல்வரிகளுடன் தொடர்புடைய கூற்று எது?

A) இப்பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூலில் 3615 பாடல்களை உள்ளன

B) இப்பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூலில் 6615 பாடல்களை உள்ளன

C) இப்பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூலில் 1615 பாடல்களை உள்ளன

D) இப்பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூலில் 2615 பாடல்களை உள்ளன

39. நவமணி வடக்க யில்போல் நல்லறப் படலைப் பூட்டும் தவமணி மார்பன் சொன்ன தன்னிசைக்கு இசைகள் பாடத் துவமணி மரங்கள் தோறும் துணர்அணிச் சுனைக ள் தோறும் உவமணி கானம்கொல் என்று ஒலித்து அழுவ போன்றே – இந்த பாடல்வரிகள் உள்ள நூலின் காலம்?

A) 15 ஆம் நூற்றாண்டு

B) 16 ஆம் நூற்றாண்டு

C) 17 ஆம் நூற்றாண்டு

D) 18 ஆம் நூற்றாண்டு

40. இலக்கணக் குறிப்பு – சரியானது எது?

I. காக்கென்று – 1. மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை

II. கணீர் – 2. வேற்றுமைத்தொகை

III. மெய்முறை – 3. கண்ணீர் என்பதன் இடைக்குறை

IV. கைமுறை – 4. காக்கவென்று என்பதன் தொகுத்தல் விகாரம்

A) I – 1; II – 4; III – 2; IV – 3

B) I – 2; II – 3; III – 1; IV – 4

C) I – 4; II – 3; III – 2; IV – 1

D) I – 1; II – 2; III – 3; IV – 4

41. காய்மணி, உய்முறை, செய்முறை – இலக்கணக் குறிப்பு தருக?

A) வேற்றுமைத்தொகை

B) உவமைத்தொகை

C) அன்மொழித்தொகை

D) வினைத்தொகை

42. பகுபத உறுப்பிலக்கணம் சரியானது எது?

I. அறியேன் – அறி + ய் + ஆ + ஏன்

II. அறி – பகுதி; ய் – சந்தி

III. ஆ – எதிர்மறை இடைநிலை புணர்ந்து கெட்டது

IV. ஏன் – தன்மை ஒருமை வினைமுற்று விகுதி

A) I, II, III மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) I, III, IV மட்டும் சரி

D) I, II, III, IV அனைத்தும் சரி.

43. பகுபத உறுப்பிலக்கணம் சரியானது எது?

I. ஒலித்து – ஒலி + த் + த் + உ

II. ஒலி – பகுதி;

III. த் – சந்தி; த் – இறந்தகால இடைநிலை

IV. உ – வினையெச்ச விகுதி

A) I, II, III, IV அனைத்தும் சரி

B) II, III மட்டும் சரி

C) I, III, IV மட்டும் சரி

D) I, II, III மட்டும் சரி

44. இஸ்மத் சன்னியாசி என்பது எந்த மொழிச்சொல்? இதன் பொருள் என்ன?

A) பெர்சியன், உலகைத் துறந்தவன்

B) உருது, அழிவில்லாதவன்

C) அரபு, ஆற்றல் மிக்கவன்

D) பாரசீகம், தூய துறவி

45. வீரமாமுனிவர் திருச்சியை ஆண்ட _______________ என்னும் மன்னரைச் சந்தித்து உரையாடுவதற்காக இரண்டே மாதங்களில் உருது மொழியைக் கற்றுக்கொண்டார். இவருடைய எளிமையையும், துறவையும் கண்டு வியந்த மன்னன் இஸ்மத் சன்னியாசி என்னும் பட்டத்தை வீரமாமுனிவருக்கு அளித்தார்.

A) இராணி மங்கம்மாள்

B) திப்பு சுல்தான்

C) சந்தாசாகிப்

D) ஹுமாயூன்

46. தேம்பாவணி பற்றிய கூற்றுகளுள் சரியானது எது?

I. தேம்பா + அணி எனப் பிரித்து வாடாதமாலை என்றும், தேன் + பா + அணி எனப் பிரித்து தேன் போன்ற இனிய பாடல்களின் தொகுப்பு என்றும் இந்நூலுக்குப் பொருள் கொள்ளப்படுகின்றது.

II. கிறித்துவின் வளர்ப்புத் தந்தையாகிய சூசையப்பர் என்னும் யோசேப்பினைப் (வளனை) பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்ட நூல் இது.

III. இப்பெருங்காப்பியம் 3 காண்டங்களையும் 36 படலங்களையும் உள்ளடக்கி, 3615 பாடல்களைக் கொண்டுள்ளது.

IV. 17 ஆம் நூற்றாண்டில் படைக்கப்பட்டது தேம்பாவணி. இக்காப்பியத்தை இயற்றியவர் வீரமாமுனிவர். இவரது இயற்பெயர் கான்சுடான்சு சோசப் பெசுகி.

A) I, II மட்டும் சரி

B) I, IV மட்டும் சரி

C) II, III மட்டும் சரி

D) I, II, III, IV அனைத்தும் சரி

47. வீரமாமுனிவர் அவர்களின் நூல்களில் சரியானது எது?

I. தமிழின் முதல் அகராதியான சதுரகராதி, சிற்றிலக்கியங்கள்

II. ஆட்டனத்தி ஆதிமந்தி

III. உரைநடை நூல்கள், மொழிபெயர்ப்பு நூல்கள்

IV. பரமார்த்தக் குருகதைகள், தொன்னூல் விளக்கம் (இலக்கண நூல்)

A) I, II, III மட்டும் சரி

B) II, III, IV மட்டும் சரி

C) I, III, IV மட்டும் சரி

D) I, II, III, IV அனைத்தும் சரி

48. இயேசு காவியம் – நூலின் ஆசிரியர் யார்?

A) வீரமாமுனிவர்

B) கண்ணதாசன்

C) கால்டுவெல்

D) தாயுமானவர்

49. ஆலங்கானத்து அஞ்சுவர இறுத்து அரசு பட அமர் உழக்கி (திருவாரூர் மாவட்டத்தின் ஆலங்கானம்) – இப்பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?

A) பட்டினப்பாலை

B) குறுந்தொகை

C) மதுரைக்காஞ்சி

D) நற்றிணை

50. ஒருவன் இருக்கிறான் கதை _______________ என்ற தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.

A) சி. சு. செல்லப்பா சிறுகதைகள்

B) ந. காமராசன் நூல்கள்

C) கு. அழகிரிசாமி சிறுகதைகள்

D) ராஜம் கிருஷ்ணன் கதைகள்

51. கீழ்க்கண்டவர்களுள், கரிசல் எழுத்தாளர்கள் வரிசையில் மூத்தவர் யார்?

A) கு. அழகிரிசாமி

B) பூமணி

C) தர்மன்

D) காமராசன்

52. இவர், அரசுப்பணியை உதறிவிட்டு முழுதாக எழுத்துப்பணியை மேற்கொண்டவர்; மென்மையான நகைச்சுவையும் சோக இழையும் ததும்பக் கதைகளைப் படைப்பதில் பெயர் பெற்றவர்; கி.ரா.வுக்கு இவர் எழுதிய கடிதங்கள் இலக்கியத்தரம் வாய்ந்தவை. படைப்பின் உயிரை முழுமையாக உணர்ந்திருந்த இவர் பல இதழ்களில் பணியாற்றியவர்; மலேசியாவில் இருந்தபோது அங்குள்ள படைப்பாளர்களுக்குப் படைப்பு தொடர்பான பயிற்சி அளித்தவர். இவர் பதிப்புப் பணி, நாடகம் எனப் பலதுறைகளிலும் முத்திரை பதித்தவர். தமிழ் இலக்கியத்தில் ஆர்வம்கொண்டு திறனாய்வு நூல்களையும் படைத்தவர் – இந்த கூற்று யாரைப்பற்றியது?

A) ராஜம் கிருஷ்னன்

B) சுஜாதா

C) கல்கி

D) கு. அழகிரிசாமி

53. இயல்பாய் நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞன் தன் குறிப்பை ஏற்றிக் கூறுவது _______________ அணி எனப்படும்.

A) உருவக

B) பிறிது மொழிதல்

C) வஞ்சப் புகழ்ச்சி

D) தற்குறிப்பேற்ற

54. ஓர் அறையில், ஓர் இடத்தில் வைக்கப்பட்ட விளக்கானது அவ்வறையில் பல இடங்களிலும் உள்ள பொருள்களுக்கு வெளிச்சம் தந்து விளக்குதல் போல, செய்யுளின் ஓரிடத்தில் நின்ற ஒரு சொல் அச்செய்யுளின் பல இடங்களிலும் உள்ள சொற்களோடு சென்று பொருந்திப் பொருளை விளக்குவதால் இவ்வணி _______________ அணி எனப்பட்டது.

A) தீவக

B) பிறிது மொழிதல்

C) வஞ்சப் புகழ்ச்சி

D) தற்குறிப்பேற்ற

55. சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்தி அவ்வரிசைப்படியே இணைத்துப் பொருள் கொள்வது _______________ எனப்படும்.

A) தீவக அணி

B) நிரல்நிறை அணி

C) வஞ்சப் புகழ்ச்சி அணி

D) தற்குறிப்பேற்ற அணி

56. எவ்வகைப்பட்ட பொருளாக இருந்தாலும் இயற்கையில் அமைந்த அதன் உண்மையான இயல்புத் தன்மையினைக் கேட்பவர்களின் மனம் மகிழுமாறு உரிய சொற்களை அமைத்துப் பாடுவது _______________ அணியாகும்.

A) தீவக அணி

B) நிரல்நிறை அணி.

C) தன்மை அணி

D) தற்குறிப்பேற்ற அணி

57. தன்மை அணி – கீழ்க்கண்டவற்றுள் சரியானது எது?

I. இதனைத் தன்மை நவிற்சி அணி என்றும் கூறுவர். இவ்வணி நான்கு வகைப்படும். பொருள் தன்மையணி, குணத் தன்மையணி, சாதித் தன்மையணி, தொழிற் தன்மையணி என்பனவாகும்.

II. (எ.கா.) மெய்யிற் பொடியும் விரித்த கருங்குழலும் கையில் தனிச்சிலம்பும் கண்ணீரும் – வையைக் கோன் கண்டளவே தோற்றான், அக்காரிகைதன் சொற்செவியில் உண்டளவே தோற்றான் உயிர். (சிலம்பு – வழக்குரை காதை வெண்பா)

III. பாடலின் பொருள் – உடம்பு முழுக்கத் தூசியும் விரித்த கருமையான தலைமுடியும் கையில் ஒற்றைச் சிலம்போடு வந்த தோற்றமும் அவளது கண்ணீரும் கண்ட அளவிலேயே வையை நதி பாயும் கூடல் நகரத்து அரசனான பாண்டியன் தோற்றான். அவளது சொல், தன் செவியில் கேட்டவுடன் உயிரை நீத்தான்.

IV. கண்ணகியின் துயர் நிறைந்த தோற்றத்தினை இயல்பாக உரிய சொற்களின் மூலம் கூறியமையால் இது தன்மை நவிற்சியணி எனப்படும்.

A) I, III, IV மட்டும் சரி

B) I, II, IV மட்டும் சரி

C) I, II, III மட்டும் சரி

D) I, II, III, IV அனைத்தும் சரி

58. “எவ்வகைப் பொருளு மெய்வகை விளக்குஞ் சொன்முறை தொடுப்பது தன்மை யாகும்”- இந்தப் பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?

A) தண்டியலங்காரம்

B) தொல்காப்பியம்

C) திருக்குறள்

D) புறநானூறு

59. நிரல்நிறை அணி சரியான கூற்று எது?

I. நிரல் = வரிசை; நிறை = நிறுத்துதல். சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்தி அவ்வரிசைப்படியே இணைத்துப் பொருள் கொள்வது நிரல் நிறை அணி எனப்படும்.

II. (எ.கா.) அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது.

III. பாடலின் பொருள்: இல்வாழ்க்கை அன்பும் அறமும் உடையதாக விளங்குமானால், அந்த வாழ்க்கையின் பண்பும் பயனும் அதுவே ஆகும்.

IV. அணிப்பொருத்தம்: இக்குறளில் அன்பும் அறனும் என்ற சொற்களை வரிசையாக நிறுத்தி, பண்பும் பயனும் என்ற சொற்களை முறைபடக் கூறியுள்ளமையால் இது நிரல் நிறை அணி ஆகும்.

A) I, II, III, IV அனைத்தும் சரி

B) I, II, IV மட்டும் சரி

C) III, IV மட்டும் சரி

D) I, III, IV மட்டும் சரி

60. தீவக அணி சரியான கூற்று எது?

I. தீவகம் என்னும் சொல்லுக்கு ‘விளக்கு’ என்று பொருள். ஓர் அறையில், ஓர் இடத்தில் வைக்கப்பட்ட விளக்கானது அவ்வறையில் பல இடங்களிலும் உள்ள பொருள்களுக்கு வெளிச்சம் தந்து விளக்குதல் போல, செய்யுளின் ஓரிடத்தில் நின்ற ஒரு சொல் அச்செய்யுளின் பல இடங்களிலும் உள்ள சொற்களோடு சென்று பொருந்திப் பொருளை விளக்குவதால் இவ்வணி தீவக அணி எனப்பட்டது.

II. இது முதல்நிலைத் தீவகம், இடைநிலைத் தீவகம், கடைநிலைத் தீவகம் என்னும் மூன்று வகையாக வரும்.

III. (எ.கா.) சேந்தன வேந்தன் திருநெடுங்கண், தெவ்வேந்தர் ஏந்து தடந்தோள், இழிகுருதி – பாய்ந்து திசைஅனைத்தும், வீரச் சிலைபொழிந்த அம்பும், மிசைஅனைத்தும் புள்குலமும் வீழ்ந்து (சேந்தன-சிவந்தன; தெவ்-பகைமை; சிலை-வில்; மிசை-மேலே; புள்-பறவை;)

IV. பாடலின் பொருள்: அரசனுடைய கண்கள் கோபத்தால் சிவந்தன; அவை சிவந்த அளவில் பகை மன்னர்களுடைய பெரிய தோள்கள் சிவந்தன; குருதி பாய்ந்து திசைகள் அனைத்தும் சிவந்தன; வலிய வில்லால் எய்யப்பட்ட அம்புகளும் சிவந்தன; குருதி மேலே வீழ்தலால் பறவைக் கூட்டங்கள் யாவும் சிவந்தன.

A) II, III, IV மட்டும் சரி

B) I, II, IV மட்டும் சரி

C) I, II, III, IV அனைத்தும் சரி

D) I, III, IV மட்டும் சரி

61. அணிப் பொருத்தம்: வேந்தன் கண் சேந்தன தெவ்வேந்தர் தோள் சேந்தன குருதி பாய்ந்து திசை அனைத்தும் சேந்தன அம்பும் சேந்தன புள் குலம் வீழ்ந்து மிசைஅனைத்தும் சேந்தன – இவ்வாறாக முதலில் நிற்கும் ‘சேந்தன’ (சிவந்தன) என்ற சொல் பாடலில் வருகின்ற கண்கள், தோள்கள், திசைகள், அம்புகள், பறவைகள் ஆகிய அனைத்தோடும் பொருந்திப் பொருள் தருகிறது. அதனால் இது _______________ ஆயிற்று.

A) தீவக அணி

B) நிரல்நிறை அணி

C) தன்மை அணி

D) தற்குறிப்பேற்ற அணி

62. தற்குறிப்பேற்ற அணி பற்றிய சரியான கூற்று எது?

I. இயல்பாய் நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞன் தன் குறிப்பை ஏற்றிக் கூறுவது தற்குறிப்பேற்ற அணி எனப்படும்.

II. (எ.கா.) ‘போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங் கொடி ‘வாரல்’ என்பனபோல் மறித்துக்கை காட்ட’

III. பாடலின் பொருள் – கோட்டை மதில் மேல் இருந்த கொடியானது வரவேண்டாம் எனத் தடுப்பதுபோல, கை காட்டியது என்பது பொருள்.

IV. அணிப்பொருத்தம்: கோவலனும், கண்ணகியும் மதுரை மாநகருக்குள் சென்ற போது மதிலின் மேலிருந்த கொடிகள் காற்றில் இயற்கையாக அசைந்தன. ஆனால் இளங்கோவடிகள், கோவலன் மதுரையில் கொலை செய்யப்படுவான் எனக்கருதி அக்கொடிகள் கையை அசைத்து, ‘இம்மதுரைக்குள் வரவேண்டா’ என்று தெரிவிப்பது போலக் காற்றில் அசைவதாகத் தம் குறிப்பைக் கொடியின் மீது ஏற்றிக் கூறுகிறார். இவ்வாறு இயல்பாக நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞன் தன் குறிப்பை ஏற்றிக் கூறுவது தற்குறிப்பேற்ற அணி எனப்படும்.

A) II, III, IV மட்டும் சரி

B) I, II, IV மட்டும் சரி

C) I, II, III, IV அனைத்தும் சரி

D) I, III, IV மட்டும் சரி

63. “இவள் தலையில் எழுதியதோ கற்காலம்தான் எப்போதும்” – இவ்வடிகளில் கற்காலம் என்பது _______________?

A) தலை விதி

B) பழைய காலம்

C) ஏழ்மை

D) தலையில் கல் சுமப்பது

64. சுதந்திர இந்தியாவின் மகத்தான சாதனையும் சவாலுமாக ஜெயகாந்தன் கருதுவது எது?

A) அரசின் நலத்திட்டங்களைச் செயல்படுத்தல்

B) பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காத்தல்

C) அறிவியல் முன்னேற்றம்

D) வெளிநாட்டு முதலீடுகள்

65. பூக்கையைக் குவித்துப் பூவே புரிவொடு காக்க என்று _______________ வேண்டினார்.

A) கருணையன், எலிசபெத்துக்காக

B) எலிசபெத், தமக்காக

C) கருணையன், பூக்களுக்காக

D) எலிசபெத், பூமிக்காக

66. வாய்மையே மழை நீராகி – இத்தொடரில் வெளிப்படும் அணி யாது?

A) உவமை

B) தற்குறிப்பேற்றம்

C) உருவகம்

D) தீவகம்

67. கலையின் கணவனாகவும் சமுதாயத்தின் புதல்வனாகவும் இருந்து எழுதுகிறேன் – இக்கூற்றிலிருந்து நாம் புரிந்துகொள்வது _______________?

A) தம் வாழ்க்கையில் பெற்ற விளைவுகளைக் கலையாக்கினார்

B) சமூகப் பார்வையோடு கலைப்பணி புரியவே எழுதினார்

C) அறத்தைக் கூறுவதற்காக எழுதினார்

D) அழகியலுடன் இலக்கியம் படைத்தார்

68. கீழ்க்கண்டவற்றுள் சரியாகப் பொருந்தியது எது?

I. Education is what remains after one has forgotten what one has learned in School – Albert Einstein

II. Tomorrow is often the busiest day of the week – Spanish Proverb

III. It is during our darkest moments that we must focus to see the light – Aristotle

IV. Success is not final, failure is not fatal. It is the courage to continue that counts – Winston Churchill

A) II, III, IV மட்டும் சரி

B) I, II, IV மட்டும் சரி

C) I, II, III, IV அனைத்தும் சரி

D) I, III, IV மட்டும் சரி

69. _______________ மன்னர்களின் பட்டப் பெயர்களில் கொல்லி வெற்பன், மலையமான் போன்றவை குறிப்பிடத்தக்கவை. கொல்லி மலையை வென்றவன் கொல்லி வெற்பன், எனவும் பிற மலைப்பகுதிகளை வென்றவர்கள் மலையமான் எனவும் பெயர் சூட்டிக்கொண்டனர். இதற்குச் சங்க இலக்கியத்தில் சான்றுகள் உள்ளன.

A) சேர

B) பாண்டிய

C) சோழ

D) பல்லவ

70. கலைச்சொல் அறிவோம் – சரியாகப் பொருந்தியது எது?

I. Humanism – 1. பண்பாட்டு எல்லை

II. Cultural Boundaries – 2. மனிதநேயம்

III. Cabinet – 3. பண்பாட்டு விழுமியங்கள்

IV. Cultural values – 4. அமைச்சரவை

A) I – 4; II – 3; III – 2; IV – 1

B) I – 2; II – 1; III – 4; IV – 3

C) I – 1; II – 2; III – 3; IV – 4

D) I – 3; II – 2; III – 1; IV – 4

71. நூல்கள் மற்றும் ஆசிரியர்கள் – சரியாகப் பொருந்தியது எது?

I. யானை சவாரி – 1. பாவண்ணன்

II. கல்மரம் – 2. திலகவதி

III. அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில் – 3. ந. முருகேச பாண்டியன்

IV. அக்னி சிறகுகள் – 4. அப்துல் கலாம்

A) I – 4; II – 3; III – 2; IV – 1

B) I – 2; II – 1; III – 4; IV – 3

C) I – 1; II – 2; III – 3; IV – 4

D) I – 3; II – 2; III – 1; IV – 4

72. கருணையன் தன் தாயார் __________ அம்மையாருடன் கானகத்தில் வாழ்ந்து வந்தார். அச்சூழலில் அவருடைய தாய் இறந்துவிட்ட போது கருணையன் அடையும் துன்பத்தில் இயற்கையும் பங்குகொண்டு கலங்கி ஆறுதல் அளிப்பதை இப்பாடல்கள் படம்பிடித்துக் காட்டுகின்றன.

A) சாவிதை

B) நித்யாமேரி

C) எலிசபெத்

D) இவற்றில் ஏதுமில்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!