பேரண்டம் மற்றும் சூரியக்குடும்பம் 6th Social Science Lesson 5 Questions in Tamil
6th Social Science Lesson 5 Questions in Tamil
5. பேரண்டம் மற்றும் சூரியக்குடும்பம்
1. கூற்று 1: பேரண்டம் என்பது மிகப்பரந்த விண்வெளி ஆகும்.
கூற்று 2: சுமார் 5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பெரு வெடிப்பின் போது பேரண்டம் உருவானதாக பல வானியல் அறிஞர்கள் கருதுகின்றனர்.
A) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
B) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
விடை மற்றும் விளக்கம்
விடை: C) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
(குறிப்பு : சுமார் 15 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பெரு வெடிப்பின் போது பேரண்டம் உருவானதாக பல வானியல் அறிஞர்கள் கருதுகின்றனர்.)
2. ஈர்ப்பு விசையால் ஒன்றாகப் பிணைக்கப்பட்டு இருக்கும் நட்சத்திரங்களின் தொகுப்பு___________.
A) பேரண்டம்
B) சூரியக் குடும்பம்
C) விண்மீன் திரள் மண்டலம்
D) விண்கற்கள்
விடை மற்றும் விளக்கம்
விடை: C) விண்மீன் திரள் மண்டலம்
(குறிப்பு: வான்வெளியில் விண்மீன் திரள் மண்டலங்கள் சிதறியும், குழுவாகவும் காணப்படுகின்றன.)
3. பெருவெடிப்பு நிகழ்வுக்குப் பிறகு சுமார்__________ வருடங்களுக்குப் பின் பால்வெளி விண்மீன் திரள்மண்டலம் உருவானது.
A) 10 பில்லியன்
B) 10 மில்லியன்
C) 5 பில்லியன்
D) 6 மில்லியன்
விடை மற்றும் விளக்கம்
விடை: C) 5 பில்லியன்
(குறிப்பு: நமது சூரியக் குடும்பம் பால்வெளி விண்மீன் திரள் மண்டலத்தில் காணப்படுகிறது.)
4. புவிக்கு அருகில் காணப்படும் விண்மீன் திரள் மண்டலங்கள் எவை?
1. ஆண்ட்ரோமெடா 2. ட்ரைட்டன்
3. மெகல்லனிக் க்ளவுட்ஸ் 4. டீமஸ்
A) 1, 2
B) 2, 3
C) 1, 3
D) 1, 4
விடை மற்றும் விளக்கம்
விடை: C) 1, 3
5. கூற்று 1: ஒளியின் திசைவேகம் வினாடிக்கு 3,00,000 கி.மீ ஆகும்.
கூற்று 2: ஒலியானது வினாடிக்கு 330 மீட்டர் என்ற வேகத்தில் பயணிக்கும்.
A) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
B) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
விடை மற்றும் விளக்கம்
விடை: A) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
(குறிப்பு: ஓர் ஒளியாண்டு என்பது ஒளி ஓர் ஆண்டில் பயணிக்கக்கூடிய தொலைவு ஆகும்.)
6. சூரியக் குடும்பம் சுமார் __________ வருடங்களுக்கு முன்பு உருவானதாக நம்பப்படுகிறது.
A) 8 பில்லியன்
B) 6.7 பில்லியன்
C) 4.5 பில்லியன்
D) 5.6 பில்லியன்
விடை மற்றும் விளக்கம்
விடை: C) 4.5 பில்லியன்
(குறிப்பு: சூரியன், எட்டுக் கோள்கள், குறுளைக் கோள்கள், துணைக்கோள்கள், வால் நட்சத்திரங்கள், சிறுகோள்கள் மற்றும் விண்கற்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது சூரியக் குடும்பம். இஃது ஈர்ப்பு விசையால் பிணைக்கப்பட்டுள்ள ஓர் அமைப்பாகும்.)
7. சூரியன் சூரியக் குடும்பத்தின் மொத்த நிறையில் எத்தனை சதவிகிதம் உள்ளது?
A) 90.9 %
B) 98.0 %
C) 99.5 %
D) 99.8%
விடை மற்றும் விளக்கம்
விடை: D) 99.8%
8. சோலார் என்ற பதமானது ‘சூரியக் கடவுள்’ எனப் பொருள்படும் Sol என்ற ___________ மொழி வார்த்தையிலிருந்து பெறப்பட்டது.
A) பிரெஞ்சு
B) ஆங்கிலம்
C) கிரேக்கம்
D) இலத்தீன்
விடை மற்றும் விளக்கம்
விடை: D) இலத்தீன்
(குறிப்பு: சூரியன் ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் போன்ற வெப்பமான வாயுக்களால் ஆனது.)
9. காஸ்மாஸ் என்பது__________மொழிச் சொல்லாகும்.
A) இலத்தீன்
B) ஆங்கிலம்
C) சமஸ்கிருதம்
D) கிரேக்கம்
விடை மற்றும் விளக்கம்
விடை: D) கிரேக்கம்
(குறிப்பு: அண்டத்தை பற்றிய படிப்பிற்கு அண்டவியல் (Cosmology) என்று பெயர்.)
10. கூற்று 1: சூரியனின் மேற்பரப்பு வெப்பநிலை 6000 °C.
கூற்று 2: சூரியனின் வெப்பநிலை புவியின் மேற்பரப்பை வந்தடைய சுமார் 8.3 நிமிடங்கள் ஆகின்றது.
A) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
B) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
விடை மற்றும் விளக்கம்
விடை: A) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
(குறிப்பு: சூரியன் 1.3 மில்லியன் புவிகளை தனக்குள்ளே அடக்கக்கூடிய வகையில் மிகப் பெரியதாகும்.)
11. சூரியனை கடிகார திசையில் சுற்றி வரும் கோள்கள் எவை?
1. செவ்வாய் 2. வெள்ளி
3. நெப்டியூன் 4. யுரேனஸ்
A) 1, 2
B) 1, 3
C) 2, 4
D) 2, 4
விடை மற்றும் விளக்கம்
விடை: D) 2, 4
(குறிப்பு: வெள்ளி மற்றும் யுரேனஸ் கோள்களைத் தவிர பிற கோள்கள் அனைத்தும் சூரியனை எதிர் கடிகாரச்சுற்றில், அதாவது மேற்கிலிருந்து கிழக்காகச் சுற்றி வருகின்றன. இவ்வாறு கோள்கள் சூரியனைச் சுற்றி வரக்கூடிய பாதை சுற்றுப்பாதை எனப்படுகிறது.)
12. கூற்று 1: கோள் என்றால் சுற்றிவருபவர் என்று பொருள்.
கூற்று 2: கோள்கள் அனைத்தும் தத்தமது பாதையை விட்டு விலகாமல் சூரியனைச் சுற்றி வருவதற்குச் சூரியன் ஈர்ப்பு விசையே காரணமாகும்.
A) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
B) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
விடை மற்றும் விளக்கம்
விடை: A) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
(குறிப்பு: சூரியக் குடும்பத்தில் எட்டுக் கோள்கள் உள்ளன. அவை புதன், வெள்ளி, புவி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகும்.)
13. ‘வாள் நிற விசும்பின் கோள் மீன் சூழ்ந்த இளங்கதிர் ஞாயிறு’ என்ற பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல்
A) பெரும்பாணாற்றுப்படை
B) புறநானூறு
C) சிறுபாணாற்றுப்படை
D) பதிற்றுப்பத்து
விடை மற்றும் விளக்கம்
விடை: C) சிறுபாணாற்றுப்படை
(குறிப்பு: பண்டைத் தமிழர்கள் சூரியன் மற்றும் பிற கோள்களைப் பற்றி அறிந்திருந்தனர் என்பது சங்க இலக்கியங்கள் வாயிலாக நமக்கு புலனாகிறது.)
14. கீழ்க்கண்டவற்றுள் புவிநிகர் கோள்கள் என்று அழைக்கப்படுபவை எவை?
1 வெள்ளி 2. செவ்வாய்
3. புதன் 4. புவி
A) 1, 3, 4
B) 1, 2
C) 1, 2, 3
D) அனைத்தும்
விடை மற்றும் விளக்கம்
விடை: D) அனைத்தும்
(குறிப்பு: புவிநிகர் கோள்கள் ‘உட்புறக் கோள்கள்’ என்றும் அழைக்கப்படுகின்றன.)
15. உட்புறக் கோள்களின் பண்புகளில் தவறானதை தேர்ந்தெடு.
1. பாறைகளால் ஆனவை.
2. அளவில் சிறியவை.
3. மேற்பரப்பில் மலைகள், எரிமலைகள் மற்றும் தரைக் குழிவுப் பள்ளங்கள் காணப்படுகின்றன.
4. வாயுக்களால் நிரம்பிக் காணப்படுவதால் வளிமக்கோள்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.
A) 2, 3 தவறு
B) 2 மட்டும் தவறு
C) 1 மட்டும் தவறு
D) 4 மட்டும் தவறு
விடை மற்றும் விளக்கம்
விடை: D) 4 மட்டும் தவறு
16. கீழ்க்கண்டவற்றுள் வளிமக் கோள்கள் என்று அழைக்கப்படுபவை எவை?
1. சனி 2. யுரேனஸ் 3. வியாழன்
4. நெப்டியூன் 5. புளுட்டோ
A) 1, 3, 5
B) 1, 2, 4, 5
C) 1, 2, 4, 5
D) 1, 2, 3, 4
விடை மற்றும் விளக்கம்
விடை: D) 1, 2, 3, 4
(குறிப்பு: இக்கோள்கள் வாயுக்களால் நிரம்பிக் காணப்படுவதால் ‘வளிமக் கோள்கள் என்று அழைக்கப்படுகின்றன. வளிமக்கோள்கள் ‘வெளிப் புறக்கோள்கள்’ அல்லது ‘வியாழன் நிகர் கோள்கள்’ என்றும் அழைக்கப்படுகின்றன.)
17. சிறு கோள் மண்டலம் எந்தெந்த கோள்களுக்கிடையே காணப்படுகிறது?
A) புதன், வெள்ளி
B) வியாழன், சனி
C) செவ்வாய், வியாழன்
D) சனி, யுரேனஸ்
விடை மற்றும் விளக்கம்
விடை: C) செவ்வாய், வியாழன்
(குறிப்பு: சூரியனைச் சுற்றி வரும் சிறிய திடப்பொருள்களே சிறுகோள்கள் எனப்படும். அவை அளவில் மிகவும் சிறியதாக இருப்பதால் கோள்கள் என அழைக்கப்படுவதில்லை.)
18. புதன் குறித்த கூற்றுகளில் தவறானதை தேர்ந்தெடு.
A) கிரேக்கக் கடவுள்களின் தூதுவரான மெர்குரியின் பெயரால் அழைக்கப்படுகிறது.
B) இக்கோளில் நீரோ, வாயுக்களோ கிடையாது.
C) இக்கோளில் வளிமண்டலம் இல்லாததால் பகல் பொழுதில் அதிக வெப்பநிலையும், இரவு நேரத்தில் கடுங்குளிரும் காணப்படும்.
D) புதன் கோளுக்கு துணைக்கோள்கள் எதுவுமில்லை.
விடை மற்றும் விளக்கம்
விடை: A) கிரேக்கக் கடவுள்களின் தூதுவரான மெர்குரியின் பெயரால் அழைக்கப்படுகிறது.
(குறிப்பு: ரோமானியக் கடவுள்களின் தூதுவரான மெர்குரியின் பெயரால் அழைக்கப்படுகிறது. அதிகாலைப் பொழுதிலும், அந்திப் பொழுதிலும் புதன் கோளை நாம் வெற்றுக் கண்களால் காணமுடியும்.)
19. வெள்ளி குறித்த கூற்றுகளில் தவறானதை தேர்ந்தெடு.
A) புவியைப் போன்றே ஒத்த அளவுள்ளதால் வெள்ளியும் புவியும் இரட்டைக்கோள்கள் என அழைக்கப்படுகின்றன.
B) தன்னைத் தானே சுற்றிக் கொன்ன 234 நாள்கள் எடுத்துக் கொள்கிறது.
C) அன்பு மற்றும் அழகைக் குறிக்கும் ரோமானிய கடவுளான வீனஸ் என்ற பெயரால் இக்கோள் அழைக்கப்படுகிறது.
D) இதன் சுழலுதல் காலம் மற்ற கோள்களைக் காட்டிலும் அதிகமாக உள்ளது.
விடை மற்றும் விளக்கம்
விடை: B) தன்னைத் தானே சுற்றிக் கொன்ன 234 நாள்கள் எடுத்துக் கொள்கிறது.
(குறிப்பு: தன்னைத் தானே சுற்றிக் கொன்ன 243 நாள்கள் எடுத்துக் கொள்கிறது. வெள்ளி மற்ற கோள்களைக் காட்டிலும் மிகவும் மெதுவாக சுற்றுகிறது.)
20. நிலவிற்கு அடுத்தப்படியாக இரவில் பிரகாசமாகத் தெரியும் விண்பொருள் ________.
A) வால் நட்சத்திரம்
B) புதன்
C) வெள்ளி
D) சனி
விடை மற்றும் விளக்கம்
விடை: C) வெள்ளி
(குறிப்பு: காலையிலும் மாலையிலும் விண்ணில் காணப்படுவதால் இக்கோளை ‘விடிவெள்ளி’ மற்றும் ‘அந்திவெள்ளி’ என்று அழைக்கின்றோம்.)
21. சூரியனிடமிருந்து மூன்றாவதாக அமைந்துள்ள புவி எத்தனையாவது பெரிய கோளாகும்?
A) 3
B) 4
C) 5
D) 6
விடை மற்றும் விளக்கம்
விடை: C) 5
(குறிப்பு: புவியின் மேற்பரப்பானது நான்கில் மூன்று பகுதி நீரால் சூழப்பட்டுள்ளதால் நீலக்கோள் என்றும் நீர்க்கோள் என்றும் அழைக்கப்படுகிறது.)
22. ரோமானிய மற்றும் கிரேக்கக் கடவுள்களின் பெயரால் அழைக்கப்படாத ஒரே கோள் எது?
A) சனி
B) வெள்ளி
C) புவி
D) செவ்வாய்
விடை மற்றும் விளக்கம்
விடை: C) புவி
(குறிப்பு: புவியில் நிலம், நீர் மற்றும் வளிமண்டலம் காணப்படுவதால் உயிரினங்கள் வாழத் தகுதியான சூழல் நிலவுகிறது. புவியின் ஒரே துணைக்கோள் நிலவாகும்.)
23. கூற்று 1: புவியின் துருவ விட்டம் 12, 714 கி.மீ.
கூற்று 2: நிலநடுக்கோட்டுவிட்டம் 12,576 கி.மீ.
A) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
B) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
விடை மற்றும் விளக்கம்
விடை: C) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
(குறிப்பு: நிலநடுக்கோட்டுவிட்டம் 12,756 கி.மீ. ஆகும்.)
24. புவி சூரியனை வினாடிக்கு_________ கிலோ மீட்டர் வேகத்தில் சுற்றி வருகிறது.
A) 20
B) 25
C) 30
D) 35
விடை மற்றும் விளக்கம்
விடை: C) 30
25. சூரியனுக்கும் புவிக்கும் இடையே உள்ள தொலைவு எத்தனை கிலோமீட்டர்?
A) 350 மில்லியன் கி.மீ
B) 350 பில்லியன் கி.மீ
C) 150 மில்லியன் கி.மீ
D) 150 பில்லியன் கி.மீ
விடை மற்றும் விளக்கம்
விடை: C) 150 மில்லியன் கி.மீ
(குறிப்பு: மணிக்கு 800 கி.மீ வேகத்தில் செல்லும் வானூர்தி சூரியனை சென்றடைய 21 வருடங்கள் ஆகும்.)
26. கூற்று 1: செவ்வாய் கோளானது அளவில் புதனுக்கு அடுத்தபடியாக இரண்டாவது சிறிய கோளாகும்.
கூற்று 2: செவ்வாய் கோள் ரோமானியர்களின் முதன்மைக் கடவுள் பெயரால் அழைக்கப்படுகிறது.
A) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
B) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
விடை மற்றும் விளக்கம்
விடை: C) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
(குறிப்பு: செவ்வாய் கோள் ரோமானிய போர்க் கடவுள் ‘மார்ஸ்’ பெயரால் அழைக்கப்படுகிறது.)
27. செவ்வாயின் மேற்பரப்பில்__________ உள்ளதால் செந்நிறமாக தோற்றமளிக்கிறது.
A) மெக்னீசியம் ஆக்சைடு
B) ஃபெர்ரஸ் சல்பைடு
C) அம்மோனியம் ஆக்சைடு
D) இரும்பு ஆக்சைடு
விடை மற்றும் விளக்கம்
விடை: D) இரும்பு ஆக்சைடு
(குறிப்பு: செந்நிறமாக தோற்றமளிப்பதால் செவ்வாய் சிவந்த கோள் என அழைக்கப்படுகிறது.)
28. கூற்று 1: செவ்வாய் கோளின் வளிமண்டலம் மிகவும் மெல்லியதாகும்.
கூற்று 2: செவ்வாயின் துருவப் பகுதிகளில் புவியைப் போன்றே பனியுறைகள் காணப்படுகின்றன.
A) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
B) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
விடை மற்றும் விளக்கம்
விடை: A) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
29. பின்வருவனவற்றுள் செவ்வாயின் துணைக்கோள்கள் எவை?
1. ஃபோபஸ் 2. கனிமீடு
3. கேலிஸ்டோ 4. டீமஸ்
A) 1, 2
B) 2, 3
C) 1 , 3
D) 1, 4
விடை மற்றும் விளக்கம்
விடை: D) 1, 4
(குறிப்பு: செவ்வாய்க் கோளானது ஃபோபஸ்,டீமஸ் என்ற இரு துணைக்கோள்களைக் கொண்டுள்ளது.)
30. ISRO செவ்வாய்க் கோளின் வளிமண்டலம் மற்றும் தரைப் பகுதியை ஆராய்வதற்காக__________ அன்று மங்கள்யான் எனப்படும் விண்கலத்தை அனுப்பியது.
A) 24.06.2012
B) 24.06.2014
C) 24.09.2014
D) 24.09.2012
விடை மற்றும் விளக்கம்
விடை: C) 24.09.2014
(குறிப்பு: இந்தியா செவ்வாய்க் கோளினை ஆராயும் நாடுகளின் பட்டியலில் ரஷ்யா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், நாஸா, ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அடுத்ததாக நான்காம் இடத்தில் உள்ளது.)
31. ரோமானியர்களின் முதன்மைக் கடவுளின் பெயரால் அழைக்கப்படும் கோள்
A) சனி
B) யுரேனஸ்
C) நெப்டியூன்
D) வியாழன்
விடை மற்றும் விளக்கம்
விடை: D) வியாழன்
(குறிப்பு: சூரியக் குடும்பத்தின் மிகப் பெரியக் கோளான வியாழன் சூரியனிடமிருந்து ஐந்தாவதாக அமைந்துள்ளது.)
32. வியாழன் குறித்த கூற்றுகளில் தவறானதை தேர்ந்தெடு.
A) நிலா மற்றும் வெள்ளி கோயிலுக்கு அடுத்ததாக பிரகாசமாக விண்ணில் தெரிவது வியாழன் ஆகும்.
B) தன் அச்சில் மிக வேகமாக சுழலக் கூடிய கோள் வியாழன்
C) சூரியனை போன்றே இதன் வளிமண்டலத்திலும் ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் வாயுக்கள் காணப்படுகின்றன.
D) நான்கு துணைக்கோள்களை மட்டுமே கொண்டுள்ளது.
விடை மற்றும் விளக்கம்
விடை: D) நான்கு துணைக்கோள்களை மட்டுமே கொண்டுள்ளது.
(குறிப்பு: வியாழன் மிக அதிகமான துணைக்கோள்களை கொண்டுள்ளது. துணைக்கோள்களின் எண்ணிக்கை 67)
33. கீழ்க்கண்டவற்றுள் வியாழனன் துணைக்கோள்கள் எவை?
1. யூரோப்பா 2. டைட்டன்
3. டிரைட்டன் 4. கேலிஸ்டோ
A) 1, 2
B) 2, 3
C) 1, 3
D) 1, 4
விடை மற்றும் விளக்கம்
விடை: D) 1, 4
(குறிப்பு: அயோ, யூரோப்பா, கனிமீடு மற்றும் கேலிஸ்டோ ஆகியன சில மிகப் பெரிய துணைக்கோள்கள் உள்ளன.)
34. சூரியக் குடும்பத்தின் இரண்டாவது மிகப்பெரிய கோள்
A) வியாழன்
B) சனி
C) வெள்ளி
D) யுரேனஸ்
விடை மற்றும் விளக்கம்
விடை: B) சனி
(குறிப்பு: சனிக்கோளின் தன் ஈர்ப்புத்திறன் நீரை விடக் குறைவாகும்.)
35. ரோமானிய வேளாண்மை கடவுளின் பெயரால் அழைக்கப்படும் கோள்
A) யுரேனஸ்
B) நெப்டியூன்
C) சனி
D) வியாழன்
விடை மற்றும் விளக்கம்
விடை: C) சனி
(குறிப்பு: பாறைத்துகள்கள், பனித் துகள்கள் மற்றும் தூசுக்களால் ஆன பல பெரிய வளையங்கள் சனிக்கோளை சுற்றி காணப்படுகின்றன.)
36. வியாழன் கோளைப் போன்றே அதிக துணைக்கோள்களைக் கொண்ட சனிக்கோளின் மிகப் பெரிய துணைக்கோள்
A) டிரைட்டன்
B) டைட்டன்
C) ஈரிஸ்
D) மேக்மேக்
விடை மற்றும் விளக்கம்
விடை: B) டைட்டன்
(குறிப்பு: சனி 62 துணைக்கோள்களைக் கொண்டுள்ளது. சூரியக் குடும்பத்தில் காணப்படும் துணைக்கோள்களில் நைட்ரஜன் மற்றும் மீத்தேன் ஆகிய வாயுக்களை கொண்ட வளிமண்டலம் மற்றும் மேகங்கள் சூழ்ந்து காணப்படுகின்ற ஒரே துணைக்கோள் டைட்டன் ஆகும்.)
37. யுரேனஸ், வில்லியம் ஹெர்ஷல் என்ற வானியல் அறிஞரால் எந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது?
A) 1769
B) 1778
C) 1781
D) 1789
விடை மற்றும் விளக்கம்
விடை: C) 1781
(குறிப்பு: தொலைநோக்கியால் கண்டுபிடிக்கப்பட்ட முதல் கோள் யுரேனஸ் ஆகும்.)
38. __________ வாயு உள்ளதால் யுரேனஸ் பச்சை நிறமாகத் தோன்றுகிறது.
A) நைட்ரஜன்
B) ஈத்தேன்
C) அம்மோனியா
D) மீத்தேன்
விடை மற்றும் விளக்கம்
விடை: D) மீத்தேன்
(குறிப்பு: இதன் அச்சு மிகவும் சாய்ந்து காணப்படுவதால் தன் சுற்றுப் பாதையில் உருண்டோடுவது போன்று சூரியனை சுற்றி வருகிறது.)
39. கூற்று 1: ‘யுரேனஸ்’ கிரேக்க விண் கடவுளின் பெயரால் அழைக்கப்படுகிறது.
கூற்று 2 : யுரேனஸின் துணைக்கோள்களில் ‘டைட்டானியா’ மிகப் பெரியதாகும்.
A) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
B) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
விடை மற்றும் விளக்கம்
விடை: A) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
(குறிப்பு: யுரேனஸ் 27 துணைக்கோள்களைக் கொண்டுள்ளது.)
40. நெப்டியூன் குறித்த கூற்றுகளில் தவறானதைத் தேர்ந்தெடு.
A) ரோமானியக் கடவுளின் பெயரைக் கொண்டது.
B) இதன் மிகப் பெரிய துணைக்கோள் ‘டிரைட்டன்’.
C) 24 துணைக்கோள்களைக் கொண்டுள்ளது.
D) சூரியக் குடும்பத்தில் மிகத் தொலைவில் உள்ளதால் மிகவும் குளிர்ந்து காணப்படுகிறது.
விடை மற்றும் விளக்கம்
விடை: C) 24 துணைக்கோள்களைக் கொண்டுள்ளது.
(குறிப்பு : 14 துணைக்கோள்களைக் கொண்டுள்ளது. இக்கோளில் பலத்த காற்று வீசும். இக்கோளில் காணப்படும் நீலம் மற்றும் வெள்ளை நிறமானது யுரேனஸ் கோளிலிருந்து இதை வேறுபடுத்துகிறது.)
41. நெப்டியூன் கோளுக்கு அப்பால் தொலைவில் காணப்படும் சிறிய விண்பொருட்கள்___________ ஆகும்.
A) சிறுகோள்கள்
B) குறுங்கோள்கள்
C) விண்கற்கள்
D) விண்வீழ்கற்கள்
விடை மற்றும் விளக்கம்
விடை: B) குறுங்கோள்கள்
(குறிப்பு: குறுங்கோள்கள் மிகவும் குளிர்ந்தும் ஒளியில்லாமலும் காணப்படுகின்றன. கோள வடிவில் காணப்படும் இவை கோள்களைப் போல இல்லாமல் தமது சுற்றுப் பாதையைப் பிற குறுளைக் கோள்களுடன் பகிர்ந்து கொள்ளும்.)
42. கீழ்க்கண்டவற்றுள் குறுங்கோள்கள் எவை?
1. புளுட்டோ 2. செரஸ் 3. ஈரிஸ்
4. மேக்மேக் 5. ஹௌமியா
A) அனைத்தும்
B) 2, 3, 4, 5
C) 2, 3,5
D) 1, 3, 4, 5
விடை மற்றும் விளக்கம்
விடை: A) அனைத்தும்
(குறிப்பு: சூரியக் குடும்பத்தில் ஐந்து குறுங்கோள்கள் காணப்படுகின்றன.)
43. நிலவு புவியைச் சுற்றி வர எடுத்துக் கொள்ளும் காலம்
A) 27 நாள்கள் 2 மணி நேரம்
B) 27 நாள்கள் 4 மணி நேரம்
C) 27 நாள்கள் 6 மணி நேரம்
D) 27 நாள்கள் 7 மணி நேரம்
விடை மற்றும் விளக்கம்
விடை: D) 27 நாள்கள் 7 மணி நேரம்
(குறிப்பு: நிலவு தன்னைத்தானே சுற்றிக் கொள்ள எடுத்துக்கொள்ளும் நேரமும், புவியைச் சுற்றிவர எடுத்துக் கொள்ளும் நேரமும் ஏறக்குறைய ஒன்றாகும்.)
44. கூற்று: விண்கற்களின் தாக்கத்தால் நிலவின் மேற்பகுதியில் அதிகளவில் தரைக்குழிப் பள்ளங்கள் காணப்படுகின்றன.
காரணம்: நிலவிற்கு வளிமண்டலம் கிடையாது.
A) கூற்று சரி காரணம் தவறு.
B) கூற்று தவறு காரணம் சரி
C) கூற்று காரணம் இரண்டும் சரி மற்றும் சரியான விளக்கம்.
D) கூற்று காரணம் இரண்டும் சரி ஆனால் சரியான விளக்கமல்ல.
விடை மற்றும் விளக்கம்
விடை: C) கூற்று காரணம் இரண்டும் சரி மற்றும் சரியான விளக்கம்.
45. நிலவு புவியிலிருந்து ___________ கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
A) 8,34,400
B) 3,94,400
C) 3,34,400
D) 3,84,400
விடை மற்றும் விளக்கம்
விடை: D) 3,84,400
(குறிப்பு: நிலவு புவியில் நான்கில் ஒரு பங்கே அளவுடையது. மனிதன் தரையிறங்கிய ஒரே விண்பொருள் நிலவாகும்.)
46. கூற்று 1: நிலவைப் பற்றி ஆராய்வதற்காக இந்தியாவால் அனுப்பப்பட்ட முதல் விண்கலம் சந்திராயன்-1 ஆகும்.
கூற்று 2: சந்திராயன் 1 2008 ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்டது.
A) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
B) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
விடை மற்றும் விளக்கம்
விடை: A) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
47. தவறானக் கூற்றைத் தேர்ந்தெடு.
A) வால் விண்மீன்களின் திடப் பொருட்களால் ஆன தலைப் பகுதி பனிக்கட்டியால் பிணைக்கப்பட்டுள்ளது.
B) வால் விண்மீன்களின் வால் பகுதி திரவத்தால் ஆனது.
C) ஹேலி வால்விண்மீன் கடைசியாக 1986 ஆம் ஆண்டு வானில் தென்பட்டது.
D) 76 வருடங்களுக்கு ஒரு வரக்கூடிய ஹேலி வால்விண்மீன் 2061 ஆம் ஆண்டு விண்ணில் தோன்றும்.
விடை மற்றும் விளக்கம்
விடை: B) வால் விண்மீன்களின் வால் பகுதி திரவத்தால் ஆனது.
(குறிப்பு: வால் விண்மீன்களின் வால் பகுதி வாயுக்களால் ஆனது.)
48. சூரியக் குடும்பத்தில் காணப்படும் சிறு கற்கள் மற்றும் உலோக பாறைகளால் ஆன விண்பொருட்களை __________ என்று அழைக்கிறோம்.
A) விண்வீழ்கற்கள்
B) விண்கற்கள்
C) எரிநட்சத்திரம்
D) வால்விண்மீன் நட்சத்திரம்
விடை மற்றும் விளக்கம்
விடை: B) விண்கற்கள்
(குறிப்பு: இந்த விண்கற்கள் புவியின் வளிமண்டலத்தை அடையும் போது உராய்வின் காரணமாக எரிந்து ஒளிர்வதால் எரி நட்சத்திரம் என்றும் அழைக்கப்படுகிறது. வளிமண்டலத்தை தாண்டி புவியின் மேற்பரப்பைத் தாக்கும் விண்கற்கள் விண்வீழ்கற்கள் என அழைக்கப்படுகின்றன.)
49. கூற்று 1: புவி தன் அச்சில் 23 ½ ° சாய்ந்து தன்னைத்தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறது.
கூற்று 2 : தன் சுற்றுவட்டப் பாதைக்கு 66 ½ ° கோணத்தை இந்த சாய்வு ஏற்படுத்துகிறது.
A) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
B) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
விடை மற்றும் விளக்கம்
விடை: A) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
(குறிப்பு: புவியின் வட துருவத்திலிருந்து, புவி மையத்தின் வழியாக தென் துருவம் வரை செல்லக் கூடிய ஒரு கற்பனைக்கோடு புவியின் அச்சு எனப்படும்)
50. தவறான கூற்றைத் தேர்ந்தெடு.(புவியின் சுழலும் வேகம்)
1. நிலநடுக்கோட்டுப் பகுதி – 845 கி.மீ / மணி
2. 60° வட அட்ச ரேகை – 1670 கி.மீ / மணி
3. துருவப் பகுதி – சுழி
A) அனைத்தும் சரி
B) 1 மட்டும் தவறு
C) 2, 3 தவறு
D) 1, 2 தவறு
விடை மற்றும் விளக்கம்
விடை: D) 1, 2 தவறு
(குறிப்பு: 1. நிலநடுக்கோட்டுப் பகுதி – 1670 கி.மீ / மணி
2. 60° வட அட்ச ரேகை – 845 கி.மீ / மணி)
51. புவி ஒரு முறை சுழலுவதற்கு எடுத்துக் கொள்ளும் நேரம்
A) 23 மணி நேரம் 54 நிமிடங்கள், 4.09 வினாடிகள்
B) 23 மணி நேரம் 56 நிமிடங்கள், 5.09 வினாடிகள்
C) 23 மணி நேரம் 54 நிமிடங்கள், 5.09 வினாடிகள்
D) 23 மணி நேரம் 56 நிமிடங்கள், 4.09 வினாடிகள்
விடை மற்றும் விளக்கம்
விடை: D) 23 மணி நேரம் 56 நிமிடங்கள், 4.09 வினாடிகள்
(குறிப்பு: புவி மேற்கிலிருந்து கிழக்காக சுழலுகிறது. புவி சுழலுவதன் காரணமாக இரவு, பகல் ஏற்படுகிறது.)
52. இரு அரைக்கோளங்களிலும் கோடைக்காலத்தில் ஆர்க்டிக் வட்டத்திற்கு வடக்கிலும், அண்டார்டிக் வட்டத்திற்கு தெற்கிலும் 24 மணி நேரமும் சூரியன் தலைக்கு மேல் தெரியும் நிகழ்வு____________ எனப்படும்.
A) ஆர்க்டிக் சூரியன்
B) அண்டார்க்டிக் சூரியன்
C) நள்ளிரவு சூரியன்
D) இரட்டை சூரியன்
விடை மற்றும் விளக்கம்
விடை: C) நள்ளிரவு சூரியன்
53. புவியின் ஒளிபடும் பகுதியையும், ஒளிபடாத பகுதியையும் பிரிக்கும் கோட்டிற்கு _________ என்று பெயர்.
A) அச்சக் கோடு
B) தீர்க்கக் கோடு
C) ஒளிர்வு வட்டம்
D) புவிஅச்சு
விடை மற்றும் விளக்கம்
விடை: C) ஒளிர்வு வட்டம்
(குறிப்பு: புவி கோள வடிவமாக உள்ளதால் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சூரிய வெளிச்சம் புவியின் ஒரு பகுதியில் மட்டுமே படுகிறது. அப்பகுதிக்கு அது பகல்பொழுது ஆகும். புவியின் ஒளிபடாத பகுதி இரவாக இருக்கும்.)
54. கூற்று 1: புவி தன் அச்சில் தன்னைத்தானே சுற்றுவதைச் சுற்றுதல் என்கிறோம்.
கூற்று 2: புவி தன் நீள்வட்டப் பாதையில் சூரியனைச் சுற்றி வரும் நகர்வை சுழலுதல் என்கிறோம்.
A) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
B) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
விடை மற்றும் விளக்கம்
விடை: D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
(குறிப்பு: புவி தன் அச்சில் தன்னைத்தானே சுற்றுவதைச் சுழலுதல் என்கிறோம். புவி தன் நீள்வட்டப் பாதையில் சூரியனைச் சுற்றி வரும் நகர்வை சுற்றுதல் என்கிறோம்.)
55. புவி வினாடிக்கு _________ கிலோமீட்டர் வேகத்தில் சூரியனைச் சுற்றி வருகிறது.
A) 15
B) 17
C) 20
D) 30
விடை மற்றும் விளக்கம்
விடை: D) 30
(குறிப்பு: புவி ஒரு முறை சூரியனைச் சுற்றிவர 365 ¼ நாள்கள் ஆகிறது.)
56. கூற்று 1: மார்ச் 21ம் தேதி முதல் செப்டம்பர் 23ம் தேதி வரை ஆறு மாதங்கள் புவியின் வடஅரைக்கோளம் சூரியனை நோக்கி சாய்ந்து காணப்படும்.
கூற்று 2: செப்டம்பர் 23ம் தேதி முதல் மார்ச் 21ம் தேதி வரை புவியின் தென் அரைக்கோளம் சூரியனை நோக்கி சாய்ந்து காணப்படும்.
A) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
B) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
விடை மற்றும் விளக்கம்
விடை: A) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
(குறிப்பு: புவி தன் சுற்றுப் பாதையில் சூரியனைச் சுற்றி வருவதால் சூரியன் நிலநடுக்கோட்டிற்கு வடக்காகவும், தெற்காகவும் நகர்வதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. புவி சூரியனைச் சுற்றி வருவதால் பருவ காலங்கள் தோன்றுகின்றன.)
57. நிலநடுக்கோட்டுப் பகுதியில் சூரியனின் கதிர்கள் செங்குத்தாக விழும் நாட்கள்
1. மார்ச் 23 2. செப்டம்பர் 21
3. மார்ச் 21 4. செப்டம்பர் 23
A) 1, 2
B) 2 , 3
C) 1, 4
D) 3, 4
விடை மற்றும் விளக்கம்
விடை: D) 3, 4
(குறிப்பு: சூரியனின் கதிர்கள் செங்குத்தாக விழுவதால் புவியின் அனைத்து பகுதிகளிலும் பகல் இரவு பொழுது சமமாகக் காணப்படும். எனவே, இந்நாட்கள் சம்பபகலிரவு நாட்கள் என அழைக்கப்படுகின்றன.)
58. வட அரைக்கோளத்தில் மிக நீண்ட பகல் பொழுதைக் கொண்டிருக்கும் நாள்
A) மே 21
B) ஜுன் 21
C) ஆகஸ்ட் 23
D) செப்டம்பர் 21
விடை மற்றும் விளக்கம்
விடை: B) ஜுன் 21
(குறிப்பு: ஜூன் 21 அன்று கடகரேகை மீது சூரியனின் செங்குத்துக் கதிர்கள் விழுவதால் வடஅரைக்கோளத்தில் அந்நாள் மிக நீண்ட பகல் பொழுதைக் கொண்டிருக்கும். தென் அரைக்கோளம் நீண்ட இரவைக் கொண்டிருக்கும். இந்நிகழ்வு கோடைக் காலக் கதிர் திருப்பம் என்று அழைக்கப்படுகிறது.)
59. குளிர்காலக் கதிர் திருப்பம் நடைபெறும் நாள்
A) ஜுன் 21
B) ஜுன் 23
C) டிசம்பர் 23
D) டிசம்பர் 22
விடை மற்றும் விளக்கம்
விடை: D) டிசம்பர் 22
(குறிப்பு: டிசம்பர் 22ம் தேதி மகர ரேகையின் மீது சூரியனின் செங்குத்துக் கதிர்கள் விழுகின்றன. இச்சமயத்தில் தென் அரைக்கோளத்தில் பகல் பொழுது அதிகமாகக் காணப்படும். வட அரைக்கோளம் நீண்ட இரவைக் கொண்டிருக்கும்.)
60. கூற்று: உயிரினங்கள் வாழத் தகுதியான கோள் புவியாகும்.
காரணம்: பாறைக் கோளம், நீர்க்கோளம் மற்றும் வளிமண்டலம் ஆகிய மூன்று தொகுதிகளுடன் தகுந்த காலநிலையும் நிலவுவதால் உயிரினங்கள் வாழத் தகுதியுள்ள இடமாக புவி மாறியுள்ளது.
A) கூற்று சரி காரணம் தவறு.
B) கூற்று தவறு காரணம் சரி
C) கூற்று காரணம் இரண்டும் சரி மற்றும் சரியான விளக்கம்.
D) கூற்று காரணம் இரண்டும் சரி ஆனால் சரியான விளக்கமல்ல.
விடை மற்றும் விளக்கம்
விடை: C) கூற்று காரணம் இரண்டும் சரி மற்றும் சரியான விளக்கம்.
(குறிப்பு: உயிரினங்கள் வாழக்கூடிய குறுகிய மண்டலம் உயிர்க்கோளம் என அழைக்கப் பாடுகிறது.)
61. பாறை என்ற பொருள்படும் ‘லித்தோஸ்’ என்ற __________மொழிச் சொல்லிலிருந்து பாறைக் கோளம் என்ற சொல் பெறப்பட்டது.
A) இலத்தீன்
B) ஆங்கிலம்
C) கிரேக்கம்
D) சீனம்
விடை மற்றும் விளக்கம்
விடை: C) கிரேக்கம்
(குறிப்பு: புவியின் மேற்பரப்பில் காணப்படும் பாறைகள் மற்றும் மண் அடுக்கைப் பாறைக்கோளம் (Lithosphere) என்று கூறுகிறோம். இதில் உயிரினங்கள் காணப்படுகின்றன.)
62. தவறான கூற்றைத் தேர்ந்தெடு.
1. ஹைட்ரோ என்ற கிரேக்கச் சொல்லிலிருந்து பெறப்பட்ட சொல்லே ஹைட்ரோஸ்பியர் ஆகும்.
2. அட்மோ என்ற கிரேக்கப் பதத்திற்கு வளி அல்லது காற்று என்று பொருள்.
3. பயோ என்ற கிரேக்க சொல்லிற்கு உயிர் என்று பொருள்
A) 1, 2
B) 2 மட்டும்
C) 3 மட்டும்
D) எதுவுமில்லை
விடை மற்றும் விளக்கம்
விடை: D) எதுவுமில்லை
(குறிப்பு: ஹைட்ரோஸ்பியர் என்பதற்கு நீர்க்கோளம் என்று பெயர்.வளிமண்டல வாயுக்களில் நைட்ரஜன் (78%) மற்றும் ஆக்சிஜன் (21%) முதன்மையான வாயுக்களாகும். உயிர்கோளம் பல்வேறு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இம்மண்டலங்கள் சூழல் மண்டலங்கள் என்று அழைக்கப்படுகின்றன.)
63. மன்னார் உயிர்க்கோள் பெட்டகம் இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள பரப்பளவு
A) 9,500 சதுர கி.மீ
B) 8,800 சதுர கி.மீ
C) 10,500 சதுர கி.மீ
D) 11,800 சதுர கி.மீ
விடை மற்றும் விளக்கம்
விடை: C) 10,500 சதுர கி.மீ
64. கூற்று 1: புவி தன் சுற்றுப்பாதையில் சூரியனுக்கு மிக அருகில் வரும் நிகழ்வு சூரிய அண்மை (Perihelion) எனப்படும்.
கூற்று 2: புவி தன் சுற்றுப் பாதையில் சூரியனுக்குத் தொலைவில் காணப்படும் நிகழ்வு சூரியச் சேய்மை (Aphelion) எனப்படும்.
A) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
B) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
விடை மற்றும் விளக்கம்
விடை: A) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
65. தவறான இணையைத் தேர்ந்தெடு (துணைக்கோள்களின் எண்ணிக்கை)
A) யுரேனஸ் – 27
B) சனி – 63
C) செவ்வாய் – 2
D) வெள்ளி, புதன் – 0
விடை மற்றும் விளக்கம்
விடை: B) சனி – 63
(குறிப்பு: சனி-62, நெப்டியூன் -14, வியாழன் – 67, புவி – 1)
66. பொருத்துக.
1. வெப்பமான கோள் – i) செவ்வாய்
2. வளையம் உள்ள கோள் – ii) நெப்டியூன்
3. செந்நிறக் கோள் – iii) வெள்ளி
4. உருளும் கோள் – iv) சனி
5. குளிர்ந்த கோள் – v) யுரேனஸ்
A) ii i iii iv v
B) v iv ii i iii
C) iv v iii ii i
D) iii iv i v ii
விடை மற்றும் விளக்கம்
விடை: D) iii iv i v ii