MCQ Questions

இந்தியாவின் மேம்பாடு அனுபவங்கள் 11th Economics Lesson 3 Questions in Tamil

11th Economics Lesson 3 Questions in Tamil

3 ] இந்தியாவின் மேம்பாடு அனுபவங்கள்

1) பின்வரும் கூற்றுகளில் சரியான விடையை தேர்ந்தெடு.

ⅰ) இந்தியா 1947 ல் சுதந்திரம் அடையும்போது பொருளாதாரத்தில் பின் தங்கிய நிலையிலேயே இருந்தது.

ⅱ) அறிவியல் மற்றும் தொழில் நுட்பங்களில் பின் தங்கிய நிலையில் இருந்ததால் தொழில்மயமாதல் மிகக்குறைவாகவும், உறுதியின்றியும் இருந்தது.

ⅲ) விவசாயத்துறை நிலப்பிரபுக்களின் கையில் இருந்தது.

ⅳ) உற்பத்தி திறன் மிகவும் குறைவாக இருந்தது.

a) ⅰ), ⅱ), ⅲ), ⅳ)

b) ⅰ), ⅱ), ⅲ)

c) ⅲ), ⅳ)

d) ⅱ), ⅲ)

விளக்கம்: இந்தியா 1947 ல் சுதந்திரம் அடையும்போது பொருளாதாரத்தில் பின் தங்கிய நிலையிலேயே இருந்தது. அறிவியல் மற்றும் தொழில் நுட்பங்களில் பின் தங்கிய நிலையில் இருந்ததால் தொழில்மயமாதல் மிகக்குறைவாகவும், உறுதியின்றியும் இருந்தது. விவசாயத்துறை நிலப்பிரபுக்களின் கையில் இருந்தது. எனவே அங்கு உற்பத்தி திறன் மிகவும் குறைவாக இருந்தது.

2) சுதந்திரத்திற்கு பின் நாட்டின் இரண்டு மிகப்பெரிய பிரச்சனை/கள் எது/எவை?

ⅰ) போக்குவரத்து

ⅱ) தகவல் தொடர்பு

ⅲ) வறுமை

ⅳ) வேலையின்மை

a) ⅰ), ⅱ), ⅲ), ⅳ)

b) ⅰ), ⅱ), ⅲ)

c) ⅲ), ⅳ)

d) ⅱ), ⅲ)

விளக்கம்: போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு பின்தங்கிய நிலையிலேயே காணப்பட்டன. கல்வி மற்றும் சுகாதார வசதிகள் போதுமானதாக இல்லை. மேலும் சமூக பாதுகாப்பு நடவடிக்கைகள் கானல் நீராகவே இருந்தன. சுருங்கக்கூறின் வறுமையும், வேலையின்மையும் நாட்டின் இரண்டு மிகப்பெரிய பிரச்சனைகளாக இருந்தன. இதன் காரணமாக மக்களின் வாழ்க்கைத்தரம் பின் தங்கிய நிலையில் இருந்தது.

3) கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?

ⅰ) சுதந்திரத்திற்கு பிந்தைய காலத்தில் 1991 ஆம் ஆண்டு இந்திய பொருளாதாரத்தில் ஒரு திருப்புமுனையாக இருந்தது.

ⅱ) ஒரு பெரிய பொருளாதார நெருக்கடியை இந்தியா சந்தித்தது.

a) ⅰ) மட்டும்

b) ⅱ) மட்டும்

c) ⅰ), ⅱ) சரி

d) இரண்டும் தவறு

விளக்கம்: சுதந்திரத்திற்கு பிந்தைய காலத்தில் 1991 ஆம் ஆண்டு இந்திய பொருளாதாரத்தில் ஒரு திருப்புமுனையாக இருந்தது. ஒரு பெரிய பொருளாதார நெருக்கடியை இந்தியா சந்தித்தது. வெளிநாட்டு வாணிபக் கணக்கில் பேரிழப்பு ஏற்பட்டிருந்தது. எனவே இந்தியா புதிய பொருளாதார கொள்கைகளை கொண்டு வர வேண்டியிருந்தது.

4) கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?

ⅰ) நாட்டின் கட்டமைப்பை மேம்படுத்தும் கொள்கைகளை அறிமுகப்படுத்தியதன் மூலம் பொருளாதார நெருக்கடிகளுக்கு இந்தியா முற்றுப்புள்ளி வைத்தது.

ⅱ) பொருளாதாரத்தின் பல துறைகளின் பலவீனத்தையும், முட்டுக்கட்டையாக இருந்த கடுமையான தடைகளை மாற்றுவதையும் முக்கிய நோக்கமாக கொண்டிருந்தன.

a) ⅰ) மட்டும்

b) ⅱ) மட்டும்

c) ⅰ), ⅱ) சரி

d) இரண்டும் தவறு

விளக்கம்: நாட்டின் கட்டமைப்பை மேம்படுத்தும் கொள்கைகளை அறிமுகப்படுத்தியதன் மூலம் பொருளாதார நெருக்கடிகளுக்கு இந்தியா முற்றுப்புள்ளி வைத்தது. இந்த கொள்கைகள் தொழிற்சாலை, வணிகம், நிதி மற்றும் வேளாண்மை போன்ற பொருளாதாரத்தின் பல துறைகளின் பலவீனத்தையும், முட்டுக்கட்டையாக இருந்த கடுமையான தடைகளை மாற்றுவதையும் முக்கிய நோக்கமாக கொண்டிருந்தன.

5) பின் வருவனவற்றுள் புதிய பொருளாதாரக்கொள்கையின் முக்கிய தூண்களாக இருந்தவை எவை?

ⅰ) தாராளமயம்

ⅱ) தனியார்மயம்

ⅲ) உலகமயமாதல்

ⅳ) நவீனமயமாதல்

a) ⅰ), ⅱ) , ⅲ) , ⅳ)

b) ⅰ), ⅱ) , ⅲ)

c) ⅲ) , ⅳ)

d) ⅱ) , ⅲ)

விளக்கம்: தாராளமயம், தனியார்மயம் மற்றும் உலகமயமாதல் என்பதன் பொருள்: தாராளமயம், தனியார்மயம் மற்றும் உலகமயமாதல் என்ற கருத்துருக்கள் புதிய பொருளாதாரக்கொள்கையின் மூன்று முக்கிய தூண்களாக இருந்தன.

6) பின் வருவனவற்றுள் தாராள மயமாக்கலின் அம்சங்கள் எவை?

ⅰ) உரிமங்கள், கட்டுப்பாடுகள், நெறிப்படுத்துதல் ஆகியவற்றை நீக்குதல்,

ⅱ) சலுகைகள் மற்றும் ஊக்கத்தொகைகள் வழங்குதல்

ⅲ) அரசு முதலீடுகள் குறைப்பு

ⅳ) தொழில்துறைக்கு அரசின் அதிக பங்களிப்பு

a) ⅰ), ⅱ) , ⅲ) , ⅳ)

b) ⅰ), ⅱ) , ⅲ)

c) ⅲ) , ⅳ)

d) ⅰ), ⅱ)

விளக்கம்: தாராளமயமாக்கல்: தொழில்துறை மீது அரசு கட்டுப்பாடுகளை எல்லா நிலைகளிலும் நீக்குவதையோ அல்லது தளர்த்துவதையோ குறிக்கும். உரிமங்கள், கட்டுப்பாடுகள், நெறிப்படுத்துதல் ஆகியவற்றை நீக்குதல், சலுகைகள் மற்றும் ஊக்கத்தொகைகள் வழங்குதல், தொழில்துறைக்கு நிதி நிறுவனங்களின் அதிக பங்களிப்பு போன்றவை தாராள மயமாக்கலின் அம்சங்களாகும்.

7) பின் வருவனவற்றுள் தனியார் மயமாதலின் சாராம்சம் எவை?

ⅰ) சலுகைகள் மற்றும் ஊக்கத்தொகைகள் வழங்குதல்

ⅱ) தொழில்துறைக்கு நிதி நிறுவனங்களின் அதிக பங்களிப்பு

ⅲ) அரசின் நாட்டுடைமையாக்குதலின்மை

ⅳ) பொதுத்துறை நிறுவனங்களை தனியார் துறைக்கு மாற்றியமைத்தல்

a) ⅰ), ⅱ) , ⅲ) , ⅳ)

b) ⅰ), ⅱ) , ⅲ)

c) ⅲ) , ⅳ)

d) ⅱ) , ⅲ)

விளக்கம்: தனியார் மயமாக்குதல்: தனியார் மயமாக்குதல் என்பது பொதுத்துறையின் நிர்வாகம் மற்றும் உரிமையை தனியாருக்கு மாற்றுவதைக்குறிக்கும். அரசின் நாட்டுடைமையாக்குதலின்மை, அரசு முதலீடுகள் குறைப்பு, மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் துறைக்கு மாற்றியமைத்தல் போன்றவையே தனியார் மயமாதலின் சாராம்சம் ஆகும்.

8) பின் வருவனவற்றுள் உலகமயமாக்குதலின் அளவீடுகள் எவை?

ⅰ) சுங்கவரிக்குறைப்பு

ⅱ) சுங்க வரித்தவிர்ப்பு

ⅲ) இறக்குமதியை எளிமைப்படுத்துதல்

ⅳ) அரசு முதலீடுகள் குறைப்பு

a) ⅰ), ⅱ) , ⅲ) , ⅳ)

b) ⅰ), ⅱ) , ⅲ)

c) ⅲ) , ⅳ)

d) ⅱ) , ⅲ)

விளக்கம்: உலகமயமாக்கல்: உள்நாட்டு பொருளாதாரத்தையும் ஏனைய உலக பொருளாதாரத்தையும் இணைப்பது உலகமயமாதல் எனப்படும். சுங்கவரிக்குறைப்பு மற்றும் சுங்க வரித்தவிர்ப்பு போன்ற செயல்பாடுகளின் மூலம் இறக்குமதியை எளிமைப்படுத்துதல், வெளிநாட்டு நேரடி முதலீடு மற்றும் வெளிநாட்டு நேரடி தொகுப்பு முதலீடு களுக்கான கதவுகளை திறந்து வைப்பது போன்ற ஒரு சில நடவடிக்கைகள் உலகமயமாக்குதலின் அளவீடுகள் ஆகும்.

9) பின் வருவனவற்றுள் LPG க்கு ஆதரவான கருத்துக்கள் எவை?

ⅰ) அரசு உரிமைக்கொள்கைகளை சற்றே தளர்த்துவது அவசியமாக இருந்தது.

ⅱ) பொருளாதார வளர்ச்சியில் தனியார் துறைக்கு போதுமான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என்று கருதப்பட்டதால் தனியார் மயமாதல் அவசியமானது.

a) ⅰ) மட்டும்

b) ⅱ) மட்டும்

c) ⅰ), ⅱ) சரி

d) இரண்டும் தவறு

விளக்கம்: LPG க்கு ஆதரவான கருத்துக்கள்:

அ) இந்தியாவில் பொருளாதார நடவடிக்கைகளை எளிதாகத்துவங்க இயலாத அளவுக்கு கட்டுப்பாடுகள் இருந்தன. அரசு உரிமைக்கொள்கைகளை சற்றே தளர்த்துவது அவசியமாக இருந்தது.

ஆ) பொருளாதார வளர்ச்சியில் தனியார் துறைக்கு போதுமான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என்று கருதப்பட்டதால் தனியார் மயமாதல் அவசியமானது.

10) கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?

ⅰ) வளர்ச்சி குன்றிய நாடுகளின் உதவியின்றி வளர்ந்த நாடுகள் மேலும் வளர முடியாது.

ⅱ) வளரும் நாடுகளின் இயற்கை மற்றும் மனித வளங்கள் முழுவதையும் வளர்ந்த நாடுகள் சுரண்டிக்கொள்கின்றன.

ⅲ) வளர்ந்த நாடுகள் தங்களது உற்பத்தி பண்டங்களை சந்தைப்படுத்தும் அங்காடியாக வளரும் பொருளாதார நாடுகளை பயன்படுத்திக்கொள்கின்றன.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅰ), ⅲ)

d) ⅱ), ⅲ)

விளக்கம்: வளர்ச்சி குன்றிய நாடுகளின் உதவியின்றி வளர்ந்த நாடுகள் மேலும் வளர முடியாது. இதற்கு உலகமயமாதல் அவசியமாகிறது. வளரும் நாடுகளின் இயற்கை மற்றும் மனித வளங்கள் முழுவதையும் வளர்ந்த நாடுகள் சுரண்டிக்கொள்கின்றன. வளர்ந்த நாடுகள் தங்களது உற்பத்தி பண்டங்களை சந்தைப்படுத்தும் அங்காடியாக வளரும் பொருளாதார நாடுகளை பயன்படுத்திக்கொள்கின்றன.

11) கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?

ⅰ) வளர்ந்த நாடுகள் தங்களுடைய உபரி முதலீட்டை பின்தங்கிய நாடுகளில் அதிகமாக செய்கின்றன.

ⅱ) பழைய வழக்கொழிந்த தொழில் நுட்பங்களை வளர்ச்சி குன்றிய நாடுகளுக்கு விற்பதன் மூலம் வளர்ந்த நாடுகள் முன்னேறுகின்றன.

ⅲ) பணக்கார நாடுகள் வளரும் நாடுகளின் பொருளாதாரத்தினால் மேலும் வளர்கின்றன.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅰ), ⅲ)

d) ⅱ), ⅲ)

விளக்கம்: வளர்ந்த நாடுகள் தங்களுடைய உபரி முதலீட்டை பின்தங்கிய நாடுகளில் அதிகமாக செய்கின்றன. பழைய வழக்கொழிந்த தொழில் நுட்பங்களை வளர்ச்சி குன்றிய நாடுகளுக்கு விற்பதன் மூலம் வளர்ந்த நாடுகள் முன்னேறுகின்றன. முடிவாக பணக்கார நாடுகள் வளரும் நாடுகளின் பொருளாதாரத்தினால் மேலும் வளர்கின்றன.

12) கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?

ⅰ) தாராளமயமாக்கும் கொள்கை வெளிநாட்டில் உள்ள பெரிய நிறுவனங்களுக்கு வசதியாகிவிட்டது.

ⅱ) வெளிநாட்டு பெரிய நிறுவனங்களை எதிர்க்க இயலாத உள்நாட்டு நிறுவனங்கள் பாதிப்பிற்குள்ளாயின.

a) ⅰ) மட்டும்

b) ⅱ) மட்டும்

c) ⅰ), ⅱ) சரி

d) இரண்டும் தவறு

விளக்கம்: LPG க்கு எதிரான கருத்துக்கள்:

அ) தாராளமயமாக்கும் கொள்கை வெளிநாட்டில் உள்ள பெரிய நிறுவனங்களுக்கு வசதியாகிவிட்டது. வெளிநாட்டு பெரிய நிறுவனங்களை எதிர்க்க இயலாத உள்நாட்டு நிறுவனங்கள் பாதிப்பிற்குள்ளாயின.

13) தனியார் மயமாக்கல் குறித்த கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?

ⅰ) தனியார் மயமாக்குதல் பெரிய நிறுவனங்களின் முற்றுரிமை சக்தியினை வளர்க்கும் என்ற வாதம் உள்ளது.

ⅱ) ஆதிக்கம் நிறைந்த நிறுவனங்கள் மட்டுமே தொழிலில் நீடித்திருக்க முடியும்.

ⅲ) இதில் சமூக நீதியை எதிர்பார்க்கவோ, நிலைநாட்டவோ முடியாது.

ⅳ) மக்களிடையேயும், வட்டார அளவிலும் வேறுபாடுகள் அதிகரித்து வருகின்றன.

a) ⅰ), ⅱ) , ⅲ) , ⅳ)

b) ⅰ), ⅱ) , ⅲ)

c) ⅲ) , ⅳ)

d) ⅱ) , ⅲ)

விளக்கம்: தனியார் மயமாக்குதல் பெரிய நிறுவனங்களின் முற்றுரிமை சக்தியினை வளர்க்கும் என்ற வாதம் உள்ளது. ஆதிக்கம் நிறைந்த நிறுவனங்கள் மட்டுமே தொழிலில் நீடித்திருக்க முடியும். இதில் சமூக நீதியை எதிர்பார்க்கவோ, நிலைநாட்டவோ முடியாது. எனவே மக்களிடையேயும், வட்டார அளவிலும் வேறுபாடுகள் அதிகரித்து வருகின்றன.

14) உலகமயமாதல் குறித்த கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?

ⅰ) உலகமயமாக்கல் அனைத்து நிறுவனங்களையும் ஒன்றிணைத்து ஒரே குடையின் கீழ் கொண்டு வந்தது.

ⅱ) உலகமயமானது பொருளாதார சக்திகளை உலக அளவில் மறுபகிர்வு செய்ய வழிவகை செய்கிறது.

ⅲ) ஏற்கனவே வளர்ந்த நாடுகள் மேலும் வளர்ந்தன.

ⅳ) வளர்ச்சி குறைந்த நாடுகளின் நலன்கள் புறக்கணிக்கப்பட்டன.

a) ⅰ), ⅱ) , ⅲ) , ⅳ)

b) ⅰ), ⅱ) , ⅲ)

c) ⅲ) , ⅳ)

d) ⅱ) , ⅲ)

விளக்கம்: உலகமயமாக்கல் அனைத்து நிறுவனங்களையும் ஒன்றிணைத்து ஒரே குடையின் கீழ் கொண்டு வந்தது. உலகமயமானது பொருளாதார சக்திகளை உலக அளவில் மறுபகிர்வு செய்ய வழிவகை செய்கிறது. ஏற்கனவே வளர்ந்த நாடுகள் மேலும் வளர்ந்தன. வளர்ச்சி குறைந்த நாடுகளின் நலன்கள் புறக்கணிக்கப்பட்டன. வளர்ந்த நாடுகளின் பொருளாதாரச்சிக்கல்கள் வணிகத்தின் வாயிலாக வளரும் நாடுகளுக்கு பரவின.

15) பின்வருவனவற்றுள் 1991க்கு பிறகு இந்தியாவில் ஏற்பட்ட மாற்றங்கள் எவை?

ⅰ) வெளிநாட்டு செலாவணியின் கையிருப்பு அதிகரிக்கத்துவங்கியது.

ⅱ) வளர்ந்த நாடுகளின் பொருளாதாரச்சிக்கல்கள் வணிகத்தின் வாயிலாக வளரும் நாடுகளுக்கு பரவின.

ⅲ) தொழில்மயமாதல் விரைவாக நடைபெற்றது.

ⅳ) நுகர்வுமுறை மேம்படத்துவங்கியுள்ளது.

a)ⅰ), ⅱ) , ⅲ) , ⅳ)

b)ⅰ), ⅱ) , ⅲ)

c) ⅲ) , ⅳ)

d)ⅰ) , ⅲ),ⅳ)

விளக்கம்: 1991க்கு பிறகு இந்தியாவில் ஏற்பட்ட மாற்றங்கள்:

1. வெளிநாட்டு செலாவணியின் கையிருப்பு அதிகரிக்கத்துவங்கியது.

2. தொழில்மயமாதல் விரைவாக நடைபெற்றது.

3. நுகர்வுமுறை மேம்படத்துவங்கியுள்ளது.

4. விரைவு நெடுஞ்சாலைகள் , மெட்ரோ ரயில், மேம்பாலங்கள், விமான நிலையங்கள், போன்ற உள்கட்டமைப்பு வசதிகள், பெருகி வருகின்றன. (இந்த வசதிகள் ஏழைகளுக்கு எட்டவில்லை)

16) கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?

ⅰ) சில துறைகளின் வளர்ச்சிகள் பலன்கள் சமுதாயத்தில் விளிம்பு நிலை மக்களுக்கு சென்றடையவில்லை.

ⅱ) சமூக, பொருளாதார, அரசியல், மக்கட்தொகை மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சனைகள் மற்றும் சவால்களை அவை தோற்றுவிக்கின்றன.

ⅲ) துறைகளின் முன்னேற்றம் நன்மைகளை கொண்டு வருகிறது, ஆனால் அது எந்த பிரிவினரை சென்றடைகிறது என்பது சமூக பொருளாதார நிலையை சார்ந்தது.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅰ), ⅲ)

d) ⅱ), ⅲ)

விளக்கம்: சில துறைகளின் வளர்ச்சிகள் பலன்கள் சமுதாயத்தில் விளிம்பு நிலை மக்களுக்கு சென்றடையவில்லை. தவிர சமூக, பொருளாதார, அரசியல், மக்கட்தொகை மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சனைகள் மற்றும் சவால்களை அவை தோற்றுவிக்கின்றன. துறைகளின் முன்னேற்றம் நன்மைகளை கொண்டு வருகிறது, ஆனால் அது எந்த பிரிவினரை சென்றடைகிறது என்பது சமூக பொருளாதார நிலையை சார்ந்தது.

17) பின்வருவனவற்றுள் இந்திய மக்கள் எதிர்கொள்ளும் அடிப்படைப் பொருளியல் பிரச்சனைகள் எவை?

ⅰ) பேதங்காட்டுதல்

ⅱ) சமுதாய புறக்கணிப்புகள்

ⅲ) வளம் குன்றிய நிலை

ⅳ) பின்தங்கிய பொருளாதாரம்

a) ⅰ), ⅱ) , ⅲ) , ⅳ)

b) ⅰ), ⅱ) , ⅲ)

c) ⅲ) , ⅳ)

d) ⅱ) , ⅲ)

விளக்கம்: இந்தியப்பொருளாதாரத்தில் இத்தகைய அனைத்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும், வறுமை, வேலையின்மை, பேதங்காட்டுதல், சமுதாய புறக்கணிப்புகள், வளம் குன்றிய நிலை, பின்தங்கிய பொருளாதாரம், பணவீக்கம் அதிகரித்தல், வேளாண்மையில் தேக்கம், உணவு பாதுகாப்பின்மை, மற்றும் தொழிலாளர்கள் இடப்பெயர்ச்சி ஆகிய அடிப்படைப் பொருளியல் பிரச்சனைகளை பெருமளவு இந்திய மக்கள் எதிர்கொள்கின்றனர். இவற்றுக்கு அரசின் கொள்கைகளை மட்டுமே குறைகூற கூடாது. தனி நபர்களின் மதிப்பீடுகள், நம்பிக்கைகள், விதிமுறைகள் ஆகியனவும் காரணமென புதிய நிறுவன பொருளியல் அறிஞர்கள் கருதுகின்றனர்.

18) கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?

ⅰ) முதலீட்டு விலக்கல்: முதலீட்டு விலக்கல் என்பது பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை பிற தனியார் நிறுவனங்கள் அல்லது வங்கிகளுக்கு விற்பது.

ⅱ) முதலீட்டு விலக்கம் முழுவதுமாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.

a) ⅰ) மட்டும்

b) ⅱ) மட்டும்

c) ⅰ), ⅱ) சரி

d) இரண்டும் தவறு

விளக்கம்: முதலீட்டு விலக்கல்: முதலீட்டு விலக்கல் என்பது பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை பிற தனியார் நிறுவனங்கள் அல்லது வங்கிகளுக்கு விற்பது. முதலீட்டு விலக்கம் முழுவதுமாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.

19) எந்த அமைப்பின் கணிப்புப்படி 2016 இல் இந்தியாவின் உள்நாட்டு மொத்த உற்பத்தியின் அளவு 2251 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது?

எந்த அமைப்பின் கணிப்புப்படி 2016 இல் இந்தியாவின் உள்நாட்டு மொத்த உற்பத்தியின் அளவு 2251 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது?

a) உலக வங்கி

b) உலக தொழிலாளர் அமைப்பு

c) ஐ.நா அமைப்பு

d) பன்னாட்டு பண நிதியம்

விளக்கம்: விளக்கம்: இந்திய பொருளாதாராத்தின் நிலைமை: பன்னாட்டு பண நிதியத்தின் கணிப்புப்படி 2016 இல் இந்தியாவின் உள்நாட்டு மொத்த உற்பத்தியின் அளவு 2251 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.

20) கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?

ⅰ) நாணய மாற்று வீதத்தின் அடிப்படையில் உலக மொத்த GDP மதிப்பில் இந்தியாவின் பங்கு 5 விழுக்காடு ஆகும்.

ⅱ) இந்தியா உலக மக்கள் தொகையில் சுமார் 10 சதவீதத்தையும், உலக நிலப்பரப்பில் 2.4 சதவீதத்தையும் கொண்டுள்ளது.

a) ⅰ) மட்டும்

b) ⅱ) மட்டும்

c) ⅰ), ⅱ) சரி

d) இரண்டும் தவறு

விளக்கம்: நாணய மாற்று வீதத்தின் அடிப்படையில் உலக மொத்த GDP மதிப்பில் இந்தியாவின் பங்கு 2.99 விழுக்காடு ஆகும். ஆனாலும் இந்தியா உலக மக்கள் தொகையில் சுமார் 17.5 சதவீதத்தையும், உலக நிலப்பரப்பில் 2.4 சதவீதத்தையும் கொண்டுள்ளது.

21) கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?

ⅰ) ஆசிய நாடுகளில், மொத்த உற்பத்தியில் சீனா, இந்தியா ஆகிய நாடுகளுக்கு அடுத்து வங்க தேசம் 3 வது இடத்தில் உள்ளது.

ⅱ) 2016 ல் மொத்த ஆசியாவின் GDP அளவில் 8.50 சதவீதம் இந்தியாவின் பங்காக உள்ளது.

a) ⅰ) மட்டும்

b) ⅱ) மட்டும்

c) ⅰ), ⅱ) சரி

d) இரண்டும் தவறு

விளக்கம்: ஆசிய நாடுகளில், மொத்த உற்பத்தியில் சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு அடுத்து இந்தியா 3 வது இடத்தில் உள்ளது. 2016 ல் மொத்த ஆசியாவின் GDP அளவில் 8.50 சதவீதம் இந்தியாவின் பங்காக உள்ளது.

22) கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?

ⅰ) புதிய தொழிற்கொள்கையை ஜூலை 24, 1990 ல் பாரத பிரதமர் அறிவித்தார்.

ⅱ) புதிய கொள்கை தொழில்துறையில் கணிசமாக கட்டுப்பாடுகளை தளர்த்தியது.

a) ⅰ) மட்டும்

b) ⅱ) மட்டும்

c) ⅰ), ⅱ) சரி

d) இரண்டும் தவறு

விளக்கம்: தொழில் துறை சீர்திருத்தங்கள்: புதிய தொழிற்கொள்கையை ஜூலை 24, 1991 ல் பாரத பிரதமர் அறிவித்தார். புதிய கொள்கை தொழில்துறையில் கணிசமாக கட்டுப்பாடுகளை தளர்த்தியது.

23) கீழ்க்கண்டவற்றுள் தொழிற்கொள்கையின் முதன்மையான நோக்கங்கள் எவை?

ⅰ) அதிகாரத்தின் பிடியில் இருக்கும் பல தொழில்களை முன்னேற்றுவது

ⅱ) வெளிநாட்டு நேரடி முதலீடுகளில் உள்ள கட்டுப்பாடுகளை ஒழிப்பது

ⅲ) MRTP சட்டக்கட்டுப்பாடுகளிலிருந்து உள்நாட்டு நிறுவனங்களை தளர்த்துவது.

ⅳ) உற்பத்தி திறனிலும், வேலை வாய்ப்பிலும் நீடித்த வளர்ச்சியை பராமரிப்பது

a) ⅰ), ⅱ), ⅲ), ⅳ)

b) ⅰ), ⅱ), ⅳ)

c) ⅰ), ⅲ), ⅳ)

d) ⅱ), ⅲ), ⅳ)

விளக்கம்: தொழிற்கொள்கையின் முதன்மையான நோக்கங்கள் அதிகாரத்தின் பிடியில் இருக்கும் பல தொழில்களை முன்னேற்றுவது, வெளிநாட்டு நேரடி முதலீடுகளில் உள்ள கட்டுப்பாடுகளை ஒழிப்பது. MRTP சட்டக்கட்டுப்பாடுகளிலிருந்து உள்நாட்டு நிறுவனங்களை தளர்த்துவது, உற்பத்தி திறனிலும், வேலை வாய்ப்பிலும் நீடித்த வளர்ச்சியை பராமரிப்பது மற்றும் சர்வதேச போட்டிகளை எதிர்கொள்வது ஆகியனவாகும்.

24) கீழ்க்கண்டவற்றுள் தொழிற்கொள்கையில் அரசு எடுத்த முக்கிய முயற்சிகள் எவை?

ⅰ) தொழில் உரிமங்கள் விலக்கம் செய்யப்பட்டன.

ⅱ) தொழில் துறையில் உள்ள ஒதுக்கீட்டை நீக்குதல்

ⅲ) பொதுத்துறைக்கொள்கை (கட்டுப்பாடுகள் நீக்கம் மற்றும் சீர்திருத்தங்கள்) கொண்டு வரப்பட்டது.

ⅳ) MRTP சட்டம் ஒழிப்பு

a) ⅰ), ⅱ), ⅲ), ⅳ)

b) ⅰ), ⅱ), ⅳ)

c) ⅰ), ⅲ), ⅳ)

d) ⅱ), ⅲ), ⅳ)

விளக்கம்: தொழிற்கொள்கையில் அரசு எடுத்த முக்கிய முயற்சிகள்:

தொழிற்கொள்கை பின்வரும் மாற்றங்களை தொழில் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது.

1. தொழில் உரிமங்கள் விலக்கம் செய்யப்பட்டன.

2. தொழில் துறையில் உள்ள ஒதுக்கீட்டை நீக்குதல்

3. பொதுத்துறைக்கொள்கை (கட்டுப்பாடுகள் நீக்கம் மற்றும் சீர்திருத்தங்கள்) கொண்டு வரப்பட்டது.

4. MRTP சட்டம் ஒழிப்பு

5. வெளிநாட்டு முதலீட்டு கொள்கை மற்றும் வெளிநாட்டு தொழில் நுட்ப கொள்கை கொண்டு வரப்பட்டது.

25) கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?

ⅰ) 1991 ன் புதிய தொழிற்கொள்கையின் மிக முக்கிய அம்சம் என்னவெனில் தொழிலுக்கு உரிமம் பெறுவதிலிருந்து விலக்களித்தல் மற்றும் சிவப்பு நாடா முறையை முடிவுக்கு கொண்டு வருதலாகும்.

ⅱ) தொழில் உரிமைக்கொள்கையின் கீழ் தனியார் துறை தொழில் துவங்க உரிமம் பெற வேண்டியிருந்தது.

a) ⅰ) மட்டும்

b) ⅱ) மட்டும்

c) ⅰ), ⅱ) சரி

d) இரண்டும் தவறு

விளக்கம்: தொழில் உரிமை விலக்களித்தல்:

1991 ன் புதிய தொழிற்கொள்கையின் மிக முக்கிய அம்சம் என்னவெனில் தொழிலுக்கு உரிமம் பெறுவதிலிருந்து விலக்களித்தல் மற்றும் சிவப்பு நாடா முறையை முடிவுக்கு கொண்டு வருத்தலாகும். தொழில் உரிமைக்கொள்கையின் கீழ் தனியார் துறை தொழில் துவங்க உரிமம் பெற வேண்டியிருந்தது.

26) கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?

ⅰ) முன்னதாக மூலதன தொழிற்சாலைகளும் பொதுத்துறைக்கென ஒதுக்கப்பட்டன.

ⅱ) தற்போது தொழிற்கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு பெரும்பாலான தொழில்கள் தனியார் துறைக்கு திறந்துவிடப்பட்டன.

ⅲ) புதிய தொழிற்கொள்கையின் கீழ் அணுசக்தி, சுரங்கம், மற்றும் இரயில்வே ஆகிய மூன்று துறைகள் மட்டுமே பொதுத்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன.

ⅳ) இந்த மூன்று துறை தவிர ஏனைய துறைகள் தனியார் துறைக்கு திறந்து விடப்பட்டன.

a) ⅰ), ⅱ), ⅲ), ⅳ)

b) ⅰ), ⅱ), ⅳ)

c) ⅰ), ⅲ), ⅳ)

d) ⅱ), ⅲ), ⅳ)

விளக்கம்: தொழிற்துறையில் உள்ள ஒதுக்கீட்டை நீக்குதல்: முன்னதாக மூலதன தொழிற்சாலைகளும் பொதுத்துறைக்கென ஒதுக்கப்பட்டன. தற்போது தொழிற்கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு பெரும்பாலான தொழில்கள் தனியார் துறைக்கு திறந்துவிடப்பட்டன. புதிய தொழிற்கொள்கையின் கீழ் அணுசக்தி, சுரங்கம், மற்றும் இரயில்வே ஆகிய மூன்று துறைகள் மட்டுமே பொதுத்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன. இந்த மூன்று துறை தவிர ஏனைய துறைகள் தனியார் துறைக்கு திறந்து விடப்பட்டன.

27) பொதுத்துறை தொடர்பான சீர்திருத்தங்கள் குறித்த கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?

ⅰ) பொதுத்துறை சீர்திருத்தங்கள் என்பது திறமையாக இயங்கும் நிறுவனங்களுக்கு தன்னாட்சி வழங்குவதாகும்.

ⅱ) பொதுத்துறையில் எந்தெந்த துறைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதை அரசு அடையாளம் காண்கிறது.

ⅲ) தனது முதலீட்டு குறைப்பு கொள்கை மூலம் பொதுத்துறை நிறுவனங்களை தனியாரிடம் ஒப்படைக்க வழிவகுக்கப்பட்டுள்ளது.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅰ), ⅲ)

d) ⅱ), ⅲ)

விளக்கம்: பொதுத்துறை தொடர்பான சீர்திருத்தங்கள்: பொதுத்துறை சீர்திருத்தங்கள் என்பது திறமையாக இயங்கும் நிறுவனங்களுக்கு தன்னாட்சி வழங்குவதாகும். பொதுத்துறையில் எந்தெந்த துறைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதை அரசு அடையாளம் காண்கிறது. தனது முதலீட்டு குறைப்பு கொள்கை மூலம் பொதுத்துறை நிறுவனங்களை தனியாரிடம் ஒப்படைக்க வழிவகுக்கப்பட்டுள்ளது.

28) கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?

ⅰ) 1991 ம் ஆண்டைய புதிய தொழிற்கொள்கை முற்றுரிமை வாணிப கட்டுப்பாட்டு சட்டத்தை கொண்டு வந்தது.

ⅱ) 2015 ல் போட்டிக்குழு ஏற்படுத்தப்பட்டது.

ⅲ) போட்டிக்குழு பொருளாதார போட்டி நடைமுறைகளை கண்காணிக்கும்.

ⅳ) இக்கொள்கை தனியார் துறையில் போட்டியை ஏற்படுத்தவும் குறித்த எண்ணிக்கையிலான வெளிநாட்டு நிறுவனங்களை ஈர்க்கவும் செய்தது.

a) ⅰ), ⅱ), ⅲ), ⅳ)

b) ⅰ), ⅱ), ⅳ)

c) ⅰ), ⅲ), ⅳ)

d) ⅲ), ⅳ)

விளக்கம்: முற்றுரிமை வாணிப கட்டுப்பாட்டு சட்டத்தை ஒழித்தல்: 1991 ம் ஆண்டைய புதிய தொழிற்கொள்கை முற்றுரிமை வாணிப கட்டுப்பாட்டு சட்டத்தை அகற்றியது. 2010 ல் போட்டிக்குழு ஏற்படுத்தப்பட்டது. இது பொருளாதார போட்டி நடைமுறைகளை கண்காணிக்கும். இக்கொள்கை தனியார் துறையில் போட்டியை ஏற்படுத்தவும் குறித்த எண்ணிக்கையிலான வெளிநாட்டு நிறுவனங்களை ஈர்க்கவும் செய்தது.

29) வெளிநாட்டு முதலீட்டுக்கொள்கை குறித்த கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?

ⅰ) பொருளாதார சீர்திருத்தத்தின் முக்கிய அம்சம் வெளிநாட்டு முதலீட்டிற்கு மற்றும் வெளிநாட்டு தொழில் நுட்பத்திற்கு சிவப்பு கம்பள வரவேற்பு தருவதாகும்.

ⅱ) இந்த நடவடிக்கை நாட்டில் தொழில்துறையில் போட்டியை ஏற்படுத்தி வணிகச்சூழலை மேம்படுத்தியுள்ளது.

ⅲ) வெளிநாட்டு நேரடி முதலீடு மற்றும் வெளிநாட்டு தொகுப்பு முதலீடு போன்றவற்றிற்கு இலகுவான வழி திறந்துவிடப்பட்டது.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅰ), ⅲ)

d) ⅱ), ⅲ)

விளக்கம்: வெளிநாட்டு முதலீட்டுக்கொள்கை: பொருளாதார சீர்திருத்தத்தின் முக்கிய அம்சம் வெளிநாட்டு முதலீட்டிற்கு மற்றும் வெளிநாட்டு தொழில் நுட்பத்திற்கு சிவப்பு கம்பள வரவேற்பு தருவதாகும். இந்த நடவடிக்கை நாட்டில் தொழில்துறையில் போட்டியை ஏற்படுத்தி வணிகச்சூழலை மேம்படுத்தியுள்ளது. வெளிநாட்டு நேரடி முதலீடு மற்றும் வெளிநாட்டு தொகுப்பு முதலீடு போன்றவற்றிற்கு இலகுவான வழி திறந்துவிடப்பட்டது.

30) கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?

ⅰ) 1991 ல் சில உயர் தொழில் நுட்பம் மற்றும் பேரளவு முதலீடு தேவைப்படும் முக்கிய தொழிற்சாலைகளுக்கு அனுமதியளிக்கப்பட்டது.

ⅱ) இதில் 51 சதவீத பங்குகள் வரை வெளிநாட்டு நேரடி முதலீடு செய்ய அனுமதிக்கப்பட்டது.

ⅲ) இதன் அளவு பல நிறுவனங்களுக்கு 74 சதவீதமாகவும், பின்னர் 100 சதவீதமாகவும் மாற்றியமைக்கப்பட்டது.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅰ), ⅲ)

d) ⅱ), ⅲ)

விளக்கம்: 1991 ல் சில உயர் தொழில் நுட்பம் மற்றும் பேரளவு முதலீடு தேவைப்படும் முக்கிய தொழிற்சாலைகளுக்கு அனுமதியளிக்கப்பட்டது. இதில் 51 சதவீத பங்குகள் வரை வெளிநாட்டு நேரடி முதலீடு செய்ய அனுமதிக்கப்பட்டது. இதன் அளவு பல நிறுவனங்களுக்கு 74 சதவீதமாகவும், பின்னர் 100 சதவீதமாகவும் மாற்றியமைக்கப்பட்டது. இதனால் பல் புதிய நிறுவனங்கள் இந்த பட்டியலில் சேர்ந்துள்ளன.

31) வெளிநாட்டு முதலீடு ஊக்குவிப்பு வாரியம் அமைக்கப்பட்டதற்கான கரணம்/கள் எது/எவை?

ⅰ) நேரடி வெளிநாட்டு முதலீடு செய்ய பன்னாட்டு நிறுவனங்களுடன் தொடர்பு கொள்ளல்

ⅱ) வெளிநாட்டு முதலீட்டை ஊக்குவித்தல்

a) ⅰ) மட்டும்

b) ⅱ) மட்டும்

c) ⅰ), ⅱ) சரி

d) இரண்டும் தவறு

விளக்கம்: தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் நேரடி வெளிநாட்டு முதலீடு செய்ய பன்னாட்டு நிறுவனங்களுடன் தொடர்பு கொள்ளவும், வெளிநாட்டு முதலீட்டை ஊக்குவிக்கவும், வெளிநாட்டு முதலீடு ஊக்குவிப்பு வாரியம் அமைக்கப்பட்டது.

32) கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?

ⅰ) பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளின் தொடக்கத்திலிருந்தே இந்தியப் பொருளாதாரம், தொழில்துறை மற்றும் சேவைத்துறைகளில் ஒரு குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்துள்ளது.

ⅱ) இவ்வளர்ச்சி வேளாண் துறை வளர்ச்சியை தடை செய்தது.

ⅲ) 1984 – 85 ல் 3.62 சதவீதமாக இருந்த வளர்ச்சி, 1995 – 96 முதல் 2004 -05 வரை 1.97 சதவீதமாக குறைந்தது.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅰ), ⅲ)

d) ⅱ), ⅲ)

விளக்கம்: வேளாண் துறையில் சீர்திருத்தங்களின் தாக்கம்: பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளின் தொடக்கத்திலிருந்தே இந்தியப் பொருளாதாரம், தொழில்துறை மற்றும் சேவைத்துறைகளில் ஒரு குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்துள்ளது. இருந்தாலும், இவ்வளர்ச்சி வேளாண் துறை வளர்ச்சியை தடை செய்தது. 1984 – 85 ல் 3.62 சதவீதமாக இருந்த வளர்ச்சி, 1995 – 96 முதல் 2004 -05 வரை 1.97 சதவீதமாக குறைந்தது.

33) கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?

ⅰ) வேளாண்துறை விளைச்சல் மற்றும் உற்பத்தி திறனில் ஒரு பெரிய இடைவெளியை பதிவு செய்துள்ளது.

ⅱ) பணப்பயிர் பயிரிடுதலுக்கு விவசாயிகள் இடம்பெயர்ந்தனர்.

ⅲ) கடன் சூழல்களால் பல்வேறு விவசாயக் குடும்பங்கள் வறுமைக்கும், தற்கொலை போன்ற கொடூர முடிவுகளை கையிலெடுக்கும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர்.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅰ), ⅲ)

d) ⅱ), ⅲ)

விளக்கம்: வேளாண்துறையில் விளைச்சல் மற்றும் உற்பத்தி திறனில் ஒரு பெரிய இடைவெளியை பதிவு செய்துள்ளது. இதனால் பணப்பயிர் பயிரிடுதலுக்கு விவசாயிகள் இடம்பெயர்ந்தனர். மேலும் கடன் சூழல்களால் பல்வேறு விவசாயக் குடும்பங்கள் வறுமைக்கும், தற்கொலை போன்ற கொடூர முடிவுகளை கையிலெடுக்கும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர்.

34) கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?

ⅰ) இந்தியாவில் வேளாண் துறை வெள்ளத்தாலும், வறட்சியாலும் அதிகம் பாதிக்கப்படுகிறது.

ⅱ) இயற்கை சீற்றங்களிலிருந்து விவசாயிகளைப்பாதுகாத்து அடுத்த பருவத்திற்கு தயார் செய்வதற்காக மத்திய அரசு பல்வேறு விவசாய திட்டங்களை கொண்டு வந்துள்ளது.

a) ⅰ) மட்டும்

b) ⅱ) மட்டும்

c) ⅰ), ⅱ) சரி

d) இரண்டும் தவறு

விளக்கம்: பயிர் காப்பீடு:இந்தியாவில் வேளாண் துறை வெள்ளத்தாலும், வறட்சியாலும் அதிகம் பாதிக்கப்படுகிறது. இயற்கை சீற்றங்களிலிருந்து விவசாயிகளைப்பாதுகாத்து அடுத்த பருவத்திற்கு தயார் செய்வதற்காக மத்திய அரசு பல்வேறு விவசாய திட்டங்களை கொண்டு வந்துள்ளது.

35) பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது?

a) 18 பிப்ரவரி 2017

b) 18 பிப்ரவரி 2016

c) 18 ஜனவரி 2015

d) 15 பிப்ரவரி 2018

விளக்கம்: 18 பிப்ரவரி 2016 ல், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டம் விவசாயிகள் கோடைகால பயிர்களுக்கு 2% மற்றும் குறுவை சாகுபடி பயிர்களுக்கு 1.5% என்ற ஒரே சீரான சந்தாத்தொகை கட்ட உதவுகிறது. தோட்டப்பயிர்கள் மற்றும் பணப்பயிர்களுக்கு வருடாந்திர சந்தா 5% ஆக இருக்கும்.

36) கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?

ⅰ) பழங்களின் உற்பத்தியில் இந்தியா உலக அளவில், மிகப்பெரிய உற்பத்தியாளராக உள்ளது.

ⅱ) காய்கறிகள் உற்பத்தியில் இரண்டாவது மிகப்பெரிய உற்பத்தியாளராக விளங்குகிறது.

a) ⅰ) மட்டும்

b) ⅱ) மட்டும்

c) ⅰ), ⅱ) சரி

d) இரண்டும் தவறு

விளக்கம்: குளிர்பதன சேமிப்பு கிடங்கு: பழங்களின் உற்பத்தியில் இந்தியா உலக அளவில், மிகப்பெரிய உற்பத்தியாளராகவும், காய்கறிகள் உற்பத்தியில் இரண்டாவது மிகப்பெரிய உற்பத்தியாளராகவும் விளங்குகிறது.

37) கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?

ⅰ) அறுவடைக்கு பின்னால் ஏற்படும் 10% முதல் 50% வரையிலான இழப்புகளினால், தனிநபருக்கு கிடைக்கக்கூடிய பழங்கள் மற்றும் காய்கறிகளின் அளவு மிகக்குறைவாகவே உள்ளது.

ⅱ) நுகர்வோரை அடையும் நேரத்தில் பண்டத்தின் தரம் கணிசமான அளவில் குறைகிறது.

a) ⅰ) மட்டும்

b) ⅱ) மட்டும்

c) ⅰ), ⅱ) சரி

d) இரண்டும் தவறு

விளக்கம்: அறுவடைக்கு பின்னால் ஏற்படும் 2% முதல் 30% வரையிலான இழப்புகளினால், தனிநபருக்கு கிடைக்கக்கூடிய பழங்கள் மற்றும் காய்கறிகளின் அளவு மிகக்குறைவாகவே உள்ளது. அது தவிர நுகர்வோரை அடையும் நேரத்தில் பண்டத்தின் தரம் கணிசமான அளவில் குறைகிறது.

38) விரைவில் அழுகும் தன்மையுடைய பழங்கள் மற்றும் காய்கறிகளை சந்தைப்படுத்துவதில் ஏற்படும் பிரச்சனைகள் எவை?

ⅰ) வியாபாரச்செலவுகள்

ⅱ) சந்தைகளில் தேக்கம்

ⅲ) விலையில் ஏற்றத்தாழ்வுகள்

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅰ), ⅲ)

d) ⅱ), ⅲ)

விளக்கம்: விரைவில் அழுகும் தன்மையுடைய பழங்கள் மற்றும் காய்கறிகளை சந்தைப்படுத்துவதில் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இது அதிக வியாபாரச்செலவுகள், சந்தைகளில் தேக்கம், விலையில் ஏற்றத்தாழ்வுகள், மற்றும் பல பிரச்சனைகளுக்கும் காரணமாக அமைகிறது.

39) கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?

ⅰ) 1955 ஆம் ஆண்டு அத்தியாவசியப்பொருட்கள் சட்டத்தின் மூன்றாவது பிரிவின்படி “குளிர்பதன கிடங்கு ஆணை 1964” (cold storage order) என்பதை ஏற்படுத்தியது.

ⅱ) இருந்த போதிலும் இன்றளவும் குளிர்பதன சேமிப்பு கிடங்கு வசதி போதிய அளவில் இல்லை.

a) ⅰ) மட்டும்

b) ⅱ) மட்டும்

c) ⅰ), ⅱ) சரி

d) இரண்டும் தவறு

விளக்கம்: பிரச்சினையை சமாளிக்க இந்திய அரசு மற்றும் வேளாண் அமைச்சகம், 1955 ஆம் ஆண்டு அத்தியாவசியப்பொருட்கள் சட்டத்தின் மூன்றாவது பிரிவின்படி “குளிர்பதன கிடங்கு ஆணை 1964” (cold storage order) என்பதை ஏற்படுத்தியது. இருந்த போதிலும் இன்றளவும் குளிர்பதன சேமிப்பு கிடங்கு வசதி போதிய அளவில் இல்லை.

40) உழவர் கடன் அட்டைத்திட்டம் குறித்த பின்வருவனவற்றுள் சரியானவற்றை தேர்ந்தெடு.

ⅰ) கிசான் கிரெடிட் கார்ட்(KCC) என்பது கடன் தேவைப்படுகிற ஒரு விவசாயியின் தகுதிக்கேற்ப கடன் மிக எளிதாக மற்றும் சரியான நேரத்தில் வழங்குவதற்கான ஓர் ஏற்பாடாகும்.

ⅱ) 1998 ம் ஆண்டில் இந்திய மைய வங்கி மற்றும் “விவசாய மற்றும் கிராமப்புற மேம்பாட்டிற்கான தேசிய வங்கி” ஆகியவற்றால் தொடங்கப்பட்டது.

ⅲ) விவசாயிகள் கடனுக்காக முறைசாரா வங்கிகளை சார்ந்திருப்பதை குறைப்பதே அதன் நோக்கமாகும்.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅰ), ⅲ)

d) ⅱ), ⅲ)

விளக்கம்: உழவர் கடன் அட்டைத்திட்டம்: உழவர் கடன் அட்டை, கிசான் கிரெடிட் கார்ட்(KCC) என்பது கடன் தேவைப்படுகிற ஒரு விவசாயியின் தகுதிக்கேற்ப கடன் மிக எளிதாக மற்றும் சரியான நேரத்தில் வழங்குவதற்கான ஓர் ஏற்பாடாகும். இது 1998 ம் ஆண்டில் இந்திய மைய வங்கி மற்றும் “விவசாய மற்றும் கிராமப்புற மேம்பாட்டிற்கான தேசிய வங்கி” ஆகியவற்றால் தொடங்கப்பட்டது. விவசாயிகள் கடனுக்காக முறைசாரா வங்கிகளை சார்ந்திருப்பதை குறைப்பதே அதன் நோக்கமாகும்.

41) பின்வருவனவற்றுள் சரியானவற்றை தேர்ந்தெடு.

ⅰ) முறைசாரா வங்கிகளில் கடன் பெறுவது எளிது, ஆனால் வட்டி வீதம் அதிகம்.

ⅱ) கடன் அட்டையை கிராமப்புற, கூட்டுறவு மற்றும் பொதுத்துறை வங்கிகள் வழங்குகின்றன.

ⅲ) அரசு KCC கடன் அட்டையை மின் தகவல் கடன் அட்டையாக மாற்றி வழங்க அறிவுறுத்தியுள்ளது.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅰ), ⅲ)

d) ⅱ), ⅲ)

விளக்கம்: முறைசாரா வங்கிகளில் கடன் பெறுவது எளிது. ஆனால் வட்டி வீதம் அதிகம். இந்த கடன் அட்டையை கிராமப்புற, கூட்டுறவு மற்றும் பொதுத்துறை வங்கிகள் வழங்குகின்றன. மேலும் அரசு KCC கடன் அட்டையை மின் தகவல் கடன் அட்டையாக மாற்றி வழங்க அறிவுறுத்தியுள்ளது.

42) வேளாண்மையில் அறுவடைக்கு பின் ஓராண்டுக்கான இழப்பீடு, 92651 கொடியாகவுள்ளதாக கணித்துள்ள அமைப்பு எது?

a) பன்னாட்டு நிதியம்

b) உலக வங்கி

c) ஐ.நா. வளர்ச்சி முகமை

d) இந்திய வேளாண் ஆராய்ச்சிக்கழகம்

விளக்கம்: அறுவடைக்கு பின் எடுக்கப்படும் நடவடிக்கைகள்: இந்திய வேளாண் ஆராய்ச்சிக்கழகம் 2012 – 13 ஆம் ஆண்டுக்கான விபரங்களைக்கொண்டு, 2014 ஆம் ஆண்டு மொத்த விற்பனை விலையில், வேளாண்மையில் அறுவடைக்கு பின் ஓராண்டுக்கான இழப்பீடு, 92651 கொடியாகவுள்ளதாக கணித்துள்ளது.

43) விவசாய விளைபொருட்களின் விரயங்களை குறைப்பதற்காகவும் மற்றும் அறுவடைக்கு பின் ஏற்படும் இழப்புகளை குறைப்பதற்கும் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் எவை?

ⅰ) பெரிய உணவுப்பூங்கா

ⅱ) ஒருங்கிணைந்த குளிர் இணைப்பு

ⅲ) மதிப்பு கூட்டி பாதுகாக்கும் கட்டமைப்பு

ⅳ) நவீன இறைச்சி வதைக்கூடங்கள்

a) ⅰ), ⅱ), ⅲ), ⅳ)

b) ⅰ), ⅱ), ⅳ)

c) ⅰ), ⅲ), ⅳ)

d) ⅱ), ⅲ), ⅳ)

விளக்கம்: விவசாய விளைபொருட்களின் விரயங்களை குறைப்பதற்காகவும் மற்றும் அறுவடைக்கு பின் ஏற்படும் இழப்புகளை குறைப்பதற்கும், உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகளின் அமைச்சகம் மத்திய அரசு திட்டங்களின் பல்வேறு அமைப்புகளை நடைமுறைப்படுத்தியுள்ளது. அவற்றில் சில: பெரிய உணவுப்பூங்கா, ஒருங்கிணைந்த குளிர் இணைப்பு(அறுவடை இடத்திலிருந்து பாதுகாப்பு பெட்டகம் வரும் வரை குளிர்பதன வசதி), மதிப்பு கூட்டி பாதுகாக்கும் கட்டமைப்பு, நவீன இறைச்சி வதைக்கூடங்கள், தர உத்திரவாத திட்டம், தரக்குறியீடு (அறிவியல் பூர்வமான தரக்குறியீடு) ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மற்றும் பிற முன்னேற்ற நடவடிக்கைகள்.

44) கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?

ⅰ) விளை நிலங்களிலிருந்து நுகர்வோர் வரையிலான ஒருங்கிணைந்த குளிர்பதன மற்றும் பதப்படுத்தும் கட்டமைப்பு வசதிகளை இந்திய அரசு செய்துள்ளது.

ⅱ) எனினும் பெரிய முன்னேற்றம் எதுவும் தெரியவில்லை.

a) ⅰ) மட்டும்

b) ⅱ) மட்டும்

c) ⅰ), ⅱ) சரி

d) இரண்டும் தவறு

விளக்கம்: மேலும் தோட்டக்கலை மற்றும் தோட்டக்கலை அல்லாத பொருட்களின் அறுவடைக்குப்பின் நேரிடும் இழப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க விளை நிலங்களிலிருந்து நுகர்வோர் வரையிலான ஒருங்கிணைந்த குளிர்பதன மற்றும் பதப்படுத்தும் கட்டமைப்பு வசதிகளை இந்திய அரசு செய்துள்ளது. 2008 – 09 ஆம் ஆண்டு முதல் நடவடிக்கை எடுத்து வருகிறது. எனினும் பெரிய முன்னேற்றம் எதுவும் தெரியவில்லை.

45) வேளாண்மை அல்லது தோட்டப்பயிர்கள் அல்லது கால்நடைப்பொருட்களை வர்த்தகம் செய்வதற்கு மாநில அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட ஒரு சட்டப்பூர்வமான அமைப்பு எது?

a) விவசாயப்பொருட்களுக்கான அங்காடி குழு

b) குளிர்பதன கிடங்கு

c) குறைந்த பட்ச விலை நிர்ணய குழு

d) ஒருங்கிணைந்த குளிர் பதன வசதி

விளக்கம்: விவசாயப்பொருட்களுக்கான அங்காடி குழு: விவசாயப்பொருட்களுக்கான அங்காடி குழு வேளாண்மை அல்லது தோட்டப்பயிர்கள் அல்லது கால்நடைப்பொருட்களை வர்த்தகம் செய்வதற்கு மாநில அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட ஒரு சட்டப்பூர்வமான அமைப்பு ஆகும்.

46) பின்வருவனவற்றுள் APMC ன் பணிகள் எவை?

ⅰ) வேளாண் சந்தைகளில் பொது மற்றும் தனியர்களிடையே கூட்டுறவை வளர்ச்சி பெற செய்தல்.

ⅱ) சந்தை சார்ந்த விரிவாக்க சேவைகளை விவசாயிகளுக்கு வழங்குதல்.

ⅲ) விலை நிர்ணயம் மற்றும் அங்காடி பரிமாற்றங்களில் வெளிப்படைத்தன்மை கொண்டு வருதல்

ⅳ) விவசாய உற்பத்திகளை விற்பனை செய்த அதே நாளில் விவசாயிகளுக்கு பணம் செலுத்துவதை உறுதி செய்தல்.

a) ⅰ), ⅱ), ⅲ), ⅳ)

b) ⅰ), ⅱ), ⅳ)

c) ⅰ), ⅲ), ⅳ)

d) ⅱ), ⅲ), ⅳ)

விளக்கம்: APMC ன் பணிகள் பின்வருமாறு:

1. வேளாண் சந்தைகளில் பொது மற்றும் தனியர்களிடையே கூட்டுறவை வளர்ச்சி பெற செய்தல்.

2. சந்தை சார்ந்த விரிவாக்க சேவைகளை விவசாயிகளுக்கு வழங்குதல்.

3. விலை நிர்ணயம் மற்றும் அங்காடி பரிமாற்றங்களில் வெளிப்படைத்தன்மை கொண்டு வருதல்

4. விவசாய உற்பத்திகளை விற்பனை செய்த அதே நாளில் விவசாயிகளுக்கு பணம் செலுத்துவதை உறுதி செய்தல்.

5. வேளாண் நடவடிக்கைகளை ஊக்குவித்தல்.

6. வேளாண் பொருட்களின் வரவு மற்றும் விலை தொடர்பான புள்ளி விவரங்களை அவ்வப்போது காட்சிப்படுத்துதல்.

47) கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?

ⅰ) விதைகளே விவசாயிகளுக்கான மிகப்பெரிய உள்ளீடு ஆகும்.

ⅱ) தாராளமயமாக்கப்படுவதற்கு முன் நாடு முழுவதும் விவசாயிகள் மத்திய அரசாங்க நிறுவனங்களிலிருந்து விதைகளை பெற்று வந்தனர்.

a) ⅰ) மட்டும்

b) ⅱ) மட்டும்

c) ⅰ), ⅱ) சரி

d) இரண்டும் தவறு

விளக்கம்: சீர்திருத்தங்களுக்கு பிந்தைய விவசாய நெருக்கடிகள்:

இடுபொருட்களின் செலவு உயர்வு: விதைகளே விவசாயிகளுக்கான மிகப்பெரிய உள்ளீடு ஆகும். தாராளமயமாக்கப்படுவதற்கு முன் நாடு முழுவதும் விவசாயிகள் மாநில அரசாங்க நிறுவனங்களிலிருந்து விதைகளை பெற்று வந்தனர். இந்நிறுவனங்கள் விதைகளை தாங்களே உற்பத்தி செய்து தரம் மற்றும் விலை நிர்ணயத்துக்கு முழு பொறுப்பாக இருந்தன.

48) கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?

ⅰ) தாராளமயமாக்கல் மூலம் இந்தியாவின் விதைகள் சந்தை உலகளாவிய வேளாண் தொழிலுக்கு திறந்து வைக்கப்பட்டது.

ⅱ) கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் 2003 ஆம் ஆண்டு பல மாநில அரசு நிறுவனங்கள் மூடப்பட்டன.

ⅲ) விலைகள் உயர்வு மற்றும் போலி விதைகள் உருவாக்கம் போன்ற பிரச்சனைகளை மேலும் பூதாகாரமாக்கியது.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅰ), ⅲ)

d) ⅱ), ⅲ)

விளக்கம்: விளக்கம்: தாராளமயமாக்கல் மூலம் இந்தியாவின் விதைகள் சந்தை உலகளாவிய வேளாண் தொழிலுக்கு திறந்து வைக்கப்பட்டது. மேலும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் 2003 ஆம் ஆண்டு பல மாநில அரசு நிறுவனங்கள் மூடப்பட்டன. இது விவசாயிகளை இரட்டிப்பாக பாதித்தது. விலைகள் உயர்வு மற்றும் போலி விதைகள் உருவாக்கம் போன்ற பிரச்சனைகளை மேலும் பூதாகாரமாக்கியது.

49) பின்வருவனவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு.

ⅰ) ஏற்றுமதி நோக்கத்துடன் மிளகாய், பருத்தி, மற்றும் புகையிலை போன்ற பணப்பயிர்களை பாரம்பரியப் பயிர்களோடு ஊடு பயிராக வளர்ப்பதற்கு விவசாயிகளை ஊக்குவித்தனர்.

ⅱ) தாராளமயமாக்கல் கொள்கைகள், பூச்சிக்கொல்லி மற்றும் உர மானியத்தை குறைத்து விட்டதால் உரங்களின் விலைகள் 300% அதிகரித்தன.

ⅲ) மின் கட்டணங்களும் அதிகரித்துள்ளன.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅰ), ⅲ)

d) ⅱ), ⅲ)

விளக்கம்: வேளாண் மானிய குறைப்பு: ஏற்றுமதி நோக்கத்துடன் மிளகாய், பருத்தி, மற்றும் புகையிலை போன்ற பணப்பயிர்களை பாரம்பரியப் பயிர்களோடு ஊடு பயிராக வளர்ப்பதற்கு விவசாயிகளை ஊக்குவித்தனர். தாராளமயமாக்கல் கொள்கைகள், பூச்சிக்கொல்லி மற்றும் உர மானியத்தை குறைத்து விட்டதால் உரங்களின் விலைகள் 300% அதிகரித்தன. மற்றும் மின் கட்டணங்களும் அதிகரித்துள்ளன. ஆனால் விவசாயப்பொருட்களின் விலை அந்தளவுக்கு உயரவில்லை.

50) பின்வருவனவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு.

ⅰ) உலகமயமாக்குதலின் விளைவாக இறக்குமதி மேல் விதிக்கப்பட்ட வரிகள் குறைக்கப்பட்டன.

ⅱ) 2005 இல் 1500க்கும் மேற்பட்ட பொருட்கள் மீதான இறக்குமதிக்கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டன.

ⅲ) இறக்குமதி மலிந்து, பொருட்கள் சந்தையில் குவிந்தன.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅰ), ⅲ)

d) ⅱ), ⅲ)

விளக்கம்: இறக்குமதி சுங்கவரி குறைப்பு: உலகமயமாக்குதலின் விளைவாக இறக்குமதி மேல் விதிக்கப்பட்ட வரிகள் குறைக்கப்பட்டன. அத்துடன் 2001 இல் 1500க்கும் மேற்பட்ட பொருட்கள் மீதான இறக்குமதிக்கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டன. இதன் விளைவாக இறக்குமதி மலிந்து, பொருட்கள் சந்தையில் குவிந்தன. இதனால் பருத்தி மற்றும் மிளகு போன்ற பயிர்களின் விலைகள் சரிந்தன.

51) கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?

ⅰ) 1991 க்கு பின்னர் தேசியமயமாக்கப்பட்ட வங்கி உட்பட வணிக வங்கிகளின் கடனளிப்பு முறையில் ஏற்பட்ட பெரும் மாற்றத்தால் விவசாயத்திற்கு போதுமான கடனுதவி அளிக்க இயலவில்லை.

ⅱ) இது விவசாயிகளை அதிக வட்டி வசூலிக்கக்கூடிய வட்டிக்கடைக்காரர்களை சார்ந்திருக்க கட்டாயப்படுத்தியது.

a) ⅰ) மட்டும்

b) ⅱ) மட்டும்

c) ⅰ), ⅱ) சரி

d) இரண்டும் தவறு

விளக்கம்: கடன் வசதிகளை நிறுத்தி வைத்தல்: 1991 க்கு பின்னர் தேசியமயமாக்கப்பட்ட வங்கி உட்பட வணிக வங்கிகளின் கடனளிப்பு முறையில் ஏற்பட்ட பெரும் மாற்றத்தால் விவசாயத்திற்கு போதுமான கடனுதவி அளிக்க இயலவில்லை. இது விவசாயிகளை அதிக வட்டி வசூலிக்கக்கூடிய வட்டிக்கடைக்காரர்களை சார்ந்திருக்க கட்டாயப்படுத்தியது.

52) கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?

ⅰ) 1991க்கு முன், இந்திய இறக்குமதியானது ஒழுங்குபடுத்தப்பட்டு காணப்பட்டது.

ⅱ) 1994 லிருந்து இறக்குமதியானது வரையறுக்கப்பட்ட எதிர்மறை பட்டியல் மூலம் ஒழுங்குபடுத்தப்படுகிறது.

a) ⅰ) மட்டும்

b) ⅱ) மட்டும்

c) ⅰ), ⅱ) சரி

d) இரண்டும் தவறு

விளக்கம்: வர்த்தக கொள்கை சீர்திருத்தங்கள்: 1991 முதல் செயல்பட்டு வரும் புதிய வர்த்தக கொள்கையின் முக்கிய அம்சங்களாவன.

சுதந்திரமான இறக்குமதி மற்றும் ஏற்றுமதி: 1991க்கு முன், இந்திய இறக்குமதியானது ஒழுங்குபடுத்தப்பட்டு காணப்பட்டது. 1992லிருந்து இறக்குமதியானது வரையறுக்கப்பட்ட எதிர்மறை பட்டியல் மூலம் ஒழுங்குபடுத்தப்படுகிறது.

53) கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?

ⅰ) ஏப்ரல் 1, 1994 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட வர்த்தக கொள்கையின்படி ஏறத்தாழ அனைத்து இடைவினை மற்றும் மூலதன பண்டங்களுக்கான இறக்குமதி சுதந்திரமாக்கப்பட்டது.

ⅱ) 50 பொருட்கள் மட்டுமே தடை செய்யப்பட்ட பட்டியலில் உள்ளன.

a) ⅰ) மட்டும்

b) ⅱ) மட்டும்

c) ⅰ), ⅱ) சரி

d) இரண்டும் தவறு

விளக்கம்: எடுத்துக்காட்டாக ஏப்ரல் 1, 1992 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட வர்த்தக கொள்கையின்படி ஏறத்தாழ அனைத்து இடைவினை மற்றும் மூலதன பண்டங்களுக்கான இறக்குமதி சுதந்திரமாக்கப்பட்டது. 71 பொருட்கள் மட்டுமே தடை செய்யப்பட்ட பட்டியலில் உள்ளன.

54) கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?

ⅰ) ராஜ செல்லையா குழு அறிக்கை இறக்குமதிக்கான தீர்வைகளை பெருமளவு குறைக்க பரிந்துரை செய்துள்ளது.

ⅱ) உச்ச அளவாக 70 சதவிகிதம் குறைக்க பரிந்துரைத்துள்ளது.

ⅲ) இந்தத்தீர்வைகளை படிப்படியாக குறைப்பதன் முதல் முயற்சியாக 1991 -92 ஆம் ஆண்டுக்கான நிதி அறிக்கையில் இறக்குமதி வரி 300 சதவிகிதத்திலிருந்து 150 சதவிகிதமாக குறைக்கப்பட்டது.

ⅳ) அடுத்தடுத்த நிதி அறிக்கைகளில், சுங்க வரியை படிப்படியாக குறைப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

a) ⅰ), ⅱ), ⅲ), ⅳ)

b) ⅰ), ⅱ), ⅳ)

c) ⅰ), ⅲ), ⅳ)

d) ⅱ), ⅲ), ⅳ)

விளக்கம்: சுங்க கட்டண அமைப்பு மற்றும் அளவுக்கட்டுப்பாடுகளை நீக்குதல்: ராஜ செல்லையா குழு அறிக்கை இறக்குமதிக்கான தீர்வைகளை பெருமளவு குறைக்க பரிந்துரை செய்துள்ளது. உச்ச அளவாக 50 சதவிகிதம் குறைக்க பரிந்துரைத்துள்ளது. இந்தத்தீர்வைகளை படிப்படியாக குறைப்பதன் முதல் முயற்சியாக 1991 -92 ஆம் ஆண்டுக்கான நிதி அறிக்கையில் இறக்குமதி வரி 300 சதவிகிதத்திலிருந்து 150 சதவிகிதமாக குறைக்கப்பட்டது. அடுத்தடுத்த நிதி அறிக்கைகளில், சுங்க வரியை படிப்படியாக குறைப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

55) 2015 – 2020 வரையிலான காலத்திற்கான புதிய வெளிநாட்டு வாணிப கொள்கை எப்போது அறிவிக்கப்பட்டது?

a) 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் 15

b) 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் 18

c) 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் 1

d) 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் 1

விளக்கம்: ஏற்றுமதி – இறக்குமதி கொள்கை: இந்திய அரசின் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம், 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 அன்று 2015 – 2020 வரையிலான காலத்திற்கான புதிய வெளிநாட்டு வாணிப கொள்கையை அறிவித்தது.

56) ஏற்றுமதி இறக்குமதி கொள்கையின் முதன்மையான நோக்கம் எது?

ⅰ) ஏற்றுமதி சூழல்களை மேம்படுத்துதல்

ⅱ) உற்பத்தி அதிகரிப்பு

ⅲ) “இந்தியாவில் தயாரிப்பு” மற்றும் “மின்னணு இந்தியா” போன்ற திட்டங்களுக்கு ஆதரவளித்தல்.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅰ), ⅲ)

d) ⅱ), ⅲ)

விளக்கம்: ஏற்றுமதி இறக்குமதி கொள்கை( 2015 – 2020):

ஏற்றுமதி சூழல்களை மேம்படுத்துதல், உற்பத்தி அதிகரிப்பு, மற்றும் “இந்தியாவில் தயாரிப்பு” மற்றும் மின்னணு இந்தியா போன்ற திட்டங்களுக்கு ஆதரவளித்தலே இக்கொள்கையின் முதன்மையான நோக்கமாகும்.

57) கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?

ⅰ) ஏற்றுமதி உதவிகளை 25 சதவீத அளவு குறைக்கவும், இந்தியப்பொருட்களை ஊக்குவிக்கவும் “இந்திய தயாரிப்பு ” என்ற கருத்து உருவாக்கப்பட்டது.

ⅱ) டிஜிட்டல் இந்தியா முறைப்படி, வரித்தாக்கல் முத்திரைத்தாள் கட்டணம் செலுத்துதல், போன்றவற்றிற்கான கைபேசி செயலி மற்றும் பட்டய கணக்காளர், கணக்கு காசாளர் போன்றோரால் மின்னணு முறையில் கையொப்பமிடப்பட்ட ஆவணங்கள் தயாரிக்கப்படுகின்றன.

a) ⅰ) மட்டும்

b) ⅱ) மட்டும்

c) ⅰ), ⅱ) சரி

d) இரண்டும் தவறு

விளக்கம்: சிறப்பம்சங்கள்:

* ஏற்றுமதி உதவிகளை 25 சதவீத அளவு குறைக்கவும், இந்தியப்பொருட்களை ஊக்குவிக்கவும் “இந்திய தயாரிப்பு ” என்ற கருத்து உருவாக்கப்பட்டது.

* டிஜிட்டல் இந்தியா முறைப்படி, வரித்தாக்கல் முத்திரைத்தாள் கட்டணம் செலுத்துதல், போன்றவற்றிற்கான கைபேசி செயலி மற்றும் பட்டய கணக்காளர், கணக்கு காசாளர் போன்றோரால் மின்னணு முறையில் கையொப்பமிடப்பட்ட ஆவணங்கள் தயாரிக்கப்படுகின்றன.

58) கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?

ⅰ) ஏற்றுமதியாளர் / இறக்குமதியாளர் சுய விவர ஆவணங்களின் அசல் நகல்களை மீண்டும் மீண்டும் சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை.

ⅱ) தற்போது உலக வர்த்தகத்தில் 3% மாக இருக்கிற இந்தியாவின் பங்கை 2020க்குள், ஏற்றுமதி இறக்குமதிக்கொள்கை (2015 – 2020) இரு மடங்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ⅲ) பாதுகாப்பு, இராணுவக்கிடங்கு, விண்வெளி மற்றும் அணுசக்தி போன்றவை தொடர்பான ஏற்றுமதி கோரிக்கைகளுக்கு கால அளவு 24 மாதங்களாகும்.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅰ), ⅲ)

d) ⅱ), ⅲ)

விளக்கம்: *ஏற்றுமதியாளர் / இறக்குமதியாளர் சுய விவர ஆவணங்களின் அசல் நகல்களை மீண்டும் மீண்டும் சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை.

* பாதுகாப்பு, இராணுவக்கிடங்கு, விண்வெளி மற்றும் அணுசக்தி போன்றவை தொடர்பான ஏற்றுமதி கோரிக்கைகளுக்கு கால அளவு 24 மாதங்களாகும்.

* தற்போது உலக வர்த்தகத்தில் 3% மாக இருக்கிற இந்தியாவின் பங்கை 2020க்குள், ஏற்றுமதி இறக்குமதிக்கொள்கை (2015 – 2020) இரு மடங்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

59) சிறப்பு பொருளாதார மண்டலக் கொள்கை உருவாக்கப்பட்டதற்கான காரணங்கள் எவை?

ⅰ) அனுமதி வழங்குவதில் பெருகியிருந்த கட்டுப்பாடுகளை சமாளித்தல்

ⅱ) உள்கட்டமைப்பு வசதியின்மை யை சமாளித்தல்

ⅲ) குறைவான நிதி போன்ற குறைபாடுகளை சமாளித்தல்

ⅳ) நேரடி முதலீட்டை ஈர்த்தல்

a) ⅰ), ⅱ), ⅲ), ⅳ)

b) ⅰ), ⅱ), ⅳ)

c) ⅰ), ⅲ), ⅳ)

d) ⅱ), ⅲ), ⅳ)

விளக்கம்: சிறப்பு பொருளாதார மண்டலங்கள்: அனுமதி வழங்குவதில் பெருகியிருந்த கட்டுப்பாடுகள், உள்கட்டமைப்பு வசதியின்மை, குறைவான நிதி போன்ற குறைபாடுகளை சமாளிக்கவும், நேரடி முதலீட்டை ஈர்க்கவும் 2000 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சிறப்பு பொருளாதார மண்டலக் கொள்கை உருவாக்கப்பட்டது. பொருளாதார சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக வணிக மற்றும் தொழில் காரணங்களுக்காக அரசாங்க நிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கை தொடங்கப்பட்டது.

60) கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?

ⅰ) 2005 ஆம் ஆண்டின் சிறப்பு பொருளாதார மண்டலக்கொள்கையின்படி 500 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அறிவிக்கப்பட்டன.

ⅱ) இக்கொள்கையினால் பெரும்பாலான விவசாயிகள் தங்கள் விளைநிலங்களையும் வாழ்வாதாரங்களையும் இழக்க வேண்டிய சூழ்நிலை வந்தது.

ⅲ) உலகமயமாதலோடு கூடிய ஏற்றுமதி முன்னேற்றம் மற்றும் ஏற்றுமதி வளர்ச்சியை அடைவதற்காக பல நாடுகளில் SEZ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅰ), ⅲ)

d) ⅱ), ⅲ)

விளக்கம்: 2005 ஆம் ஆண்டின் சிறப்பு பொருளாதார மண்டலக்கொள்கையின்படி 400 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அறிவிக்கப்பட்டன. இக்கொள்கையினால் பெரும்பாலான விவசாயிகள் தங்கள் விளைநிலங்களையும் வாழ்வாதாரங்களையும் இழக்க வேண்டிய சூழ்நிலை வந்தது. உலகமயமாதலோடு கூடிய ஏற்றுமதி முன்னேற்றம் மற்றும் ஏற்றுமதி வளர்ச்சியை அடைவதற்காக பல நாடுகளில் SEZ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

61) கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?

ⅰ) ஏற்றுமதி செயலாக்க மண்டல மாதிரிகளின் பயன்பாட்டை உணர்ந்த நாடுகளில் முதன்மையானது இந்தியாவாகும்.

ⅱ) 1965 ஆம் ஆண்டில் பாரதீப்பில் முதல் ஏற்றுமதி செயலாக்க மண்டலம் அமைக்கப்பட்டது.

ⅲ) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் பல மண்டலங்களை உள்ளடக்கியுள்ளன.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅰ), ⅲ)

d) ⅱ), ⅲ)

விளக்கம்: ஏற்றுமதி செயலாக்க மண்டல மாதிரிகளின் பயன்பாட்டை உணர்ந்த நாடுகளில் முதன்மையானது இந்தியாவாகும். 1965 ஆம் ஆண்டில் கண்ட்லாவில் முதல் ஏற்றுமதி செயலாக்க மண்டலம் அமைக்கப்பட்டது. சிறப்பு பொருளாதார மண்டலங்கள் பல மண்டலங்களை உள்ளடக்கியுள்ளன. எடுத்துக்காட்டாக சுதந்திர வர்த்தக மண்டலங்கள், ஏற்றுமதி செயலாக்க மண்டலங்கள், தொழில் பூங்காக்கள், பொருளாதார மற்றும் தொழில் நுட்ப முன்னேற்ற மண்டலங்கள், அறிவியல் மற்றும் புதுமை பூங்காக்கள், இலவசத்துறைமுகங்கள், நிறுவன மண்டலங்கள் போல இன்னும் பல.

62) பின்வருவனவற்றுள் SEZ – ன் முக்கிய நோக்கங்கள் எவை?

ⅰ) வெளிநாட்டு முதலீட்டை அதிகரிக்க, முக்கியமாக வெளிநாட்டு நேரடி முதலீட்டை ஈர்த்து, நம் நாட்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP) யை அதிகரித்தல்.

ⅱ) பன்னாட்டு வியாபாரத்தில்/ உலக ஏற்றுமதியில் நமது பங்கினை அதிகரித்தல்.

ⅲ) கூடுதல் பொருளாதார நடவடிக்கைகளை உருவாக்குதல்.

ⅳ) உலக அங்காடி தொழில் நுட்பங்களை பகிர்ந்து கொள்ளுதல்.

a) ⅰ), ⅱ), ⅲ), ⅳ)

b) ⅰ), ⅱ), ⅳ)

c) ⅰ), ⅲ), ⅳ)

d) ⅱ), ⅲ), ⅳ)

விளக்கம்: SEZ – ன் முக்கிய நோக்கங்கள்:

1. வெளிநாட்டு முதலீட்டை அதிகரிக்க, முக்கியமாக வெளிநாட்டு நேரடி முதலீட்டை ஈர்த்து, நம் நாட்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP) யை அதிகரித்தல்.

2. பன்னாட்டு வியாபாரத்தில்/ உலக ஏற்றுமதியில் நமது பங்கினை அதிகரித்தல்.

3. கூடுதல் பொருளாதார நடவடிக்கைகளை உருவாக்குதல்.

4. வேலை வாய்ப்புகளை உருவாக்குதல்.

5. கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல்.

6. உலக அங்காடி தொழில் நுட்பங்களை பகிர்ந்து கொள்ளுதல்.

63) பின்வருவனவற்றுள் SEZ ன் முக்கிய இயல்புகள் எவை?

ⅰ) பாதுகாப்புடன் கூடிய நிலப்பகுதிகள்

ⅱ) கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல்.

ⅲ) தனி அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது

ⅳ) நெறிமுறைப்படுத்தப்பட்ட நடைமுறைகள்

a) ⅰ), ⅱ), ⅲ), ⅳ)

b) ⅰ), ⅱ), ⅳ)

c) ⅰ), ⅲ), ⅳ)

d) ⅱ), ⅲ), ⅳ)

விளக்கம்: SEZ ன் முக்கிய இயல்புகள்:

a. பாதுகாப்புடன் கூடிய நிலப்பகுதிகள்.

b. தனி அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.

c. நெறிமுறைப்படுத்தப்பட்ட நடைமுறைகள்

d. தனிப்பட்ட விருப்ப பகுதியை கொண்டது.

e. தாராளமய பொருளாதார சட்டத்தால் நிர்வகிக்கப்படுகிறது.

f. இதில் அமையப்பெற்ற நிறுவனங்களுக்கு அதிக அளவு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது.

எனவே அரசின் சட்ட திட்டங்களையும், கட்டுப்பாடுகளையும் கடைபிடிக்க வேண்டிய அவசியம் இல்லை.

இதனால் சமூக மற்றும் சுற்றுப்புற சூழல்கள் பாதிக்கப்படுகின்றன.

64) கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?

ⅰ) நிதிப்பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்று சதவீதத்திற்கு மேல் இருக்கக்கூடாது என்ற ஒரு வழிகாட்டுதலை உலக வங்கி கொண்டு வந்தது.

ⅱ) இந்த வழியில் அரசானது வரவு செலவு திட்டத்தில் செலவுகளை இலக்காக கொண்டு வருவாயை பெருக்கும்.

a) ⅰ) மட்டும்

b) ⅱ) மட்டும்

c) ⅰ), ⅱ) சரி

d) இரண்டும் தவறு

விளக்கம்: நிதி சீர்திருத்தங்கள்: நிதி ஒழுங்கு மிக முக்கியம் என்பதில் ஐயம் இல்லை. இந்த நிதிப்பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்று சதவீதத்திற்கு மேல் இருக்கக்கூடாது என்ற ஒரு வழிகாட்டுதலை பன்னாட்டு பண நிதியம் கொண்டு வந்தது. இந்த வழியில் அரசானது வரவு செலவு திட்டத்தில் செலவுகளை இலக்காக கொண்டு வருவாயை பெருக்கும்.

65) பின்வருவனவற்றுள் சரியானவற்றை தேர்ந்தெடு.

ⅰ) நேரடி வரி அளவை மாற்றியமைப்பதால் ஆடம்பர நுகர்வு குறையும்.

ⅱ) பொதுநிதியை கூட்டுவதிலும் பொது செலவை குறைப்பதிலும் அரசாங்கம் மிகக்குறியாக இருந்தது.

ⅲ) செலவைக்குறைக்கும் முகத்தான் உர மானியம் மற்றும் சர்க்கரை மானியங்கள் குறைக்கப்பட்டன.

ⅳ) வருவாயை அதிகப்படுத்த பொதுத்துறை சொத்துக்கள் விற்கப்பட்டன.

a) ⅰ), ⅱ), ⅲ), ⅳ)

b) ⅰ), ⅱ), ⅳ)

c) ⅰ), ⅲ), ⅳ)

d) ⅱ), ⅲ), ⅳ)

விளக்கம்: நேரடி வரி அளவை மாற்றியமைப்பதால் ஆடம்பர நுகர்வு குறையும். எனவே பொதுநிதியை கூட்டுவதிலும் பொது செலவை குறைப்பதிலும் அரசாங்கம் மிகக்குறியாக இருந்தது. செலவைக்குறைக்கும் முகத்தான் உர மானியம் மற்றும் சர்க்கரை மானியங்கள் குறைக்கப்பட்டன. வருவாயை அதிகப்படுத்த பொதுத்துறை சொத்துக்கள் விற்கப்பட்டன. அரசு நலத்திட்டங்களுக்கான நிதியை படிப்படியாக குறைத்தது. தொழில் துறை நிறுவனங்கள் மீதான தாக்கங்களை குறைத்தது. இதனால் ஏழை மக்களின் மீதான தாக்கம் அதிகரித்தது.

66) பின்வருவனவற்றுள் சரியானவற்றை தேர்ந்தெடு.

ⅰ) பண்டங்கள் மற்றும் பணிகள் வரி என்பது நுகர்வோர் நுகரும் பண்டங்கள் மற்றும் பணிகள் மீது விதிக்கப்படும் வரியாகும்.

ⅱ) விரிவான மறைமுக வரியாக, உற்பத்தி, விற்பனை மற்றும் நுகர்வு மீது விதிக்க இது முன்மொழியப்பட்டது.

ⅲ) இது மத்திய மற்றும் மாநில அரசுகள் விதிக்கும் அனைத்து மறைமுக வரிக்கு மாற்றாக கொண்டுவரப்பட்டது.

ⅳ) உற்பத்தி மற்றும் பண்டங்கள் பணிகள் மீதான அடுக்கு வரி பாதக விளைவை நீக்கும்.

a) ⅰ), ⅱ), ⅲ), ⅳ)

b) ⅰ), ⅱ), ⅳ)

c) ⅰ), ⅲ), ⅳ)

d) ⅱ), ⅲ), ⅳ)

விளக்கம்: பண்டங்கள் மற்றும் பணிகள் வரி: பண்டங்கள் மற்றும் பணிகள் வரி என்பது நுகர்வோர் நுகரும் பண்டங்கள் மற்றும் பணிகள் மீது விதிக்கப்படும் வரியாகும். விரிவான மறைமுக வரியாக, உற்பத்தி, விற்பனை மற்றும் நுகர்வு மீது விதிக்க இது முன்மொழியப்பட்டது. இது மத்திய மற்றும் மாநில அரசுகள் விதிக்கும் அனைத்து மறைமுக வரிக்கு மாற்றாக கொண்டுவரப்பட்டது. இது உற்பத்தி மற்றும் பண்டங்கள் பணிகள் மீதான அடுக்கு வரி பாதக விளைவை நீக்கும். இந்த வரி ஒரு முனை வரியாகும்.

67) பண்டங்கள் மற்றும் சேவைகள் மீதான வரிக்கு பாராளுமன்றத்தில் எப்போது ஒப்புதல் வழங்கப்பட்டது?

a) 29.03.2017

b) 17.07.2017

c) 01.07.2017

d) 05.03.2017

விளக்கம்: பண்டங்கள் மற்றும் சேவைகள் மீதான வரி 29.03.2017 அன்று பாராளுமன்றத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டு 2017 ஆம் ஆண்டு ஜூலை திங்கள் முதல் நாளன்று நடைமுறைக்கு வந்தது.

68) பின்வருவனவற்றுள் GST யின் நன்மைகள் எவை?

ⅰ) அடுக்கு வரி விளைவுகளை நீக்கியது

ⅱ) ஒருமுனை வரியாக உள்ளது.

ⅲ) பதிவுக்கான வாசலாக உள்ளது.

ⅳ) சிறிய நிறுவனங்களுக்கான கலவை திட்டங்கள் உள்ளன

a) ⅰ), ⅱ), ⅲ), ⅳ)

b) ⅰ), ⅱ), ⅳ)

c) ⅰ), ⅲ), ⅳ)

d) ⅱ), ⅲ), ⅳ)

விளக்கம்: GST யின் நன்மைகள்:

* அடுக்கு வரி விளைவுகளை நீக்கியது.

* ஒருமுனை வரியாக உள்ளது.

* பதிவுக்கான வாசலாக உள்ளது.

* சிறிய நிறுவனங்களுக்கான கலவை திட்டங்கள் உள்ளன.

* இணைய வழி வசதி மூலம் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது.

* மின்னணு வணிகம் வரையறுக்கப்பட்டுள்ளது.

* தளவாடங்களின் திறன் அதிகப்படுத்தப்பட்டுள்ளது.

* அமைப்பு ரீதியற்ற துறையை ஒழுங்குபடுத்துகிறது.

69) பணம் மற்றும் நிதித்துறை சீர்திருத்தங்கள் குறித்த கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?

ⅰ) பணம் மற்றும் நிதித்துறை சீர்திருத்தங்கள் வங்கி அமைப்பை மிகுந்த திறனுடையதாய் மாற்ற முயற்சித்தன.

ⅱ) வட்டி வீதங்களில் காணப்பட்ட வேறுபாடுகளை களைய ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

a) ⅰ) மட்டும்

b) ⅱ) மட்டும்

c) ⅰ), ⅱ) சரி

d) இரண்டும் தவறு

விளக்கம்: பணம் மற்றும் நிதித்துறை சீர்திருத்தங்கள்: பணம் மற்றும் நிதித்துறை சீர்திருத்தங்கள் வங்கி அமைப்பை மிகுந்த திறனுடையதாய் மாற்ற முயற்சித்தன. வட்டி வீதங்களில் காணப்பட்ட வேறுபாடுகளை களைய ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

70) பின்வருவனவற்றுள் GST யின் நன்மைகள் எவை?

ⅰ) 1994 ஆம் ஆண்டு நரசிம்மம் குழு பரிந்துரைப்படி, சட்ட ரீதியான நீர்மை விகிதம், மற்றும் ரொக்க இருப்பு வீதம், குறைக்கப்பட்டது.

ⅱ) 1995 ஆம் ஆண்டின் மத்தியில் SLR மற்றும் CRR விகிதங்கள் மிக அதிகமாக இருந்தன.

ⅲ) மூன்றாண்டு கால அளவில் SLR விகிதத்தை 38.5% லிருந்து 25% ஆக குறைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

ⅳ) CRR விகிதத்தையும் நான்கு ஆண்டுகளில் 3 முதல் 5% ஆக குறைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

a) ⅰ), ⅱ), ⅲ), ⅳ)

b) ⅰ), ⅱ), ⅳ)

c) ⅰ), ⅲ), ⅳ)

d) ⅲ), ⅳ)

விளக்கம்: அ) ரொக்க இருப்பு வீதம்:

1991 ஆம் ஆண்டு நரசிம்மம் குழு பரிந்துரைப்படி, சட்ட ரீதியான நீர்மை விகிதம், மற்றும் ரொக்க இருப்பு வீதம், குறைக்கப்பட்டது. 1991 ஆம் ஆண்டின் மத்தியில் SLR மற்றும் CRR விகிதங்கள் மிக அதிகமாக இருந்தன. மூன்றாண்டு கால அளவில் SLR விகிதத்தை 38.5% லிருந்து 25% ஆக குறைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதே போன்று CRR விகிதத்தையும் நான்கு ஆண்டுகளில் 3 முதல் 5% ஆக குறைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

71) இந்திய ரிசர்வ் வங்கி கீழ்க்கண்டவற்றுள் எதனை கட்டுப்படுத்தி வந்தது?

ⅰ) வைப்புகளுக்கான வட்டி விகிதம்

ⅱ) வங்கிக்கடன்களுக்கான வட்டி வீதம்

a) ⅰ) மட்டும்

b) ⅱ) மட்டும்

c) ⅰ), ⅱ) சரி

d) இரண்டும் தவறு

விளக்கம்: வட்டி விகித தளர்வு:

முன்னர் 1) வைப்புகளுக்கான வட்டி விகிதம் மற்றும் 2) வங்கிக்கடன்களுக்கான வட்டி வீதம் போன்றவற்றை இந்திய ரிசர்வ் வங்கி கட்டுப்படுத்தி வந்தது. தற்போது தளர்த்தப்பட்டுள்ளன.

72) கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?

ⅰ) பொதுத்துறை, தனியார் துறை மற்றும் அயல்நாட்டு வங்கிகளுக்கிடையேயான அதிகப்படியான போட்டியை சமாளிக்க நிர்வாகத்தில் இருந்த தடைகள் நீக்கப்பட்டன.

ⅱ) செயல்பாட்டிலிருக்கும் வங்கிகளின் வலையமைப்பை பரவலாக்க வங்கிக்கிளைகளுக்கான உரிமம் வழங்குதல் தளர்த்தப்பட்டது.

a) ⅰ) மட்டும்

b) ⅱ) மட்டும்

c) ⅰ), ⅱ) சரி

d) இரண்டும் தவறு

விளக்கம்: இ) பொதுத்துறை, தனியார் துறை மற்றும் அயல்நாட்டு வங்கிகளுக்கிடையேயான அதிகப்படியான போட்டியை சமாளிக்க நிர்வாகத்தில் இருந்த தடைகள் நீக்கப்பட்டன.

ஈ) செயல்பாட்டிலிருக்கும் வங்கிகளின் வலையமைப்பை பரவலாக்க வங்கிக்கிளைகளுக்கான உரிமம் வழங்குதல் தளர்த்தப்பட்டது.

73) கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?

ⅰ) புதிய கிளைகளை கண்டறிய மற்றும் சிறப்பு கிளைகளை திறக்க வங்கிகளுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டது.

ⅱ) புதிய தனியார் துறை வங்கிகள் தொடங்குவதற்காக வழிமுறைகள் வழங்கப்பட்டன.

ⅲ) நரசிம்மம் குழு அறிக்கையின்படி வாராக்கடன் மற்றும் சொத்து மதிப்பினை கணக்கிட புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டன.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅰ), ⅲ)

d) ⅱ), ⅲ)

விளக்கம்: உ) புதிய கிளைகளை கண்டறிய மற்றும் சிறப்பு கிளைகளை திறக்க வங்கிகளுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டது.

ஊ) புதிய தனியார் துறை வங்கிகள் தொடங்குவதற்காக வழிமுறைகள் வழங்கப்பட்டன.

எ) நரசிம்மம் குழு அறிக்கையின்படி வாராக்கடன் மற்றும் சொத்து மதிப்பினை கணக்கிட புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டன.

74) கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?

ⅰ) புதிய பொருளாதார கொள்கை நடைமுறைக்கு பின் இந்திய பொருளாதாரத்தில் வியத்தகு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதில் ஐயமில்லை.

ⅱ) ஒரு நாட்டு பொருளாதாரத்தின் அளவே அந்நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார பலத்தை நிர்ணயிக்கும் எனில் இந்தியா 1991 முதல் உண்மையாக வளர்ந்துள்ளது.

ⅲ) இந்திய GDP 2015 – 16 ஆம் ஆண்டில் 2 டிரில்லியன் டாலரை கடந்துள்ளது.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅰ), ⅲ)

d) ⅱ), ⅲ)

விளக்கம்: புதிய பொருளாதார கொள்கை நடைமுறைக்கு பின் இந்திய பொருளாதாரத்தில் வியத்தகு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதில் ஐயமில்லை. ஒரு நாட்டு பொருளாதாரத்தின் அளவே அந்நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார பலத்தை நிர்ணயிக்கும் எனில் இந்தியா 1991 முதல் உண்மையாக வளர்ந்துள்ளது. இந்திய GDP 2015 – 16 ஆம் ஆண்டில் 2 டிரில்லியன் டாலரை கடந்துள்ளது. GDP யை பொறுத்து நமது நாடு தற்போது ஒன்பதாவது இடத்தில் உள்ளது.

75) கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?

ⅰ) ஒருமுறை Dr. ராஜா செல்லையா அவர்களால் பயன்படுத்தப்பட்ட “இந்து வளர்ச்சி வீதம்” என்பதன் அடிப்படையில் குறைவான பொருளாதார வளர்ச்சியுடைய நாடு என்று வர்ணிக்கப்பட்ட இந்தியா தற்போது உலகில் மிக வேகமாக வளர்ந்து வருகிறது.

ⅱ) வேலையின்மை, வறுமை, உடல்நலக்குறைவு போன்ற அடிப்படை பிரச்சனைகள் தீர்க்கப்படாமலேயே உள்ளன.

ⅲ) அதிகரித்த மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் பொதுமக்களின் துன்பங்களை தணிக்க தவறி விட்டது.

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅰ), ⅲ)

d) ⅱ), ⅲ)

விளக்கம்: ஒருமுறை Dr. இராஜ் கிருஷ்ணா அவர்களால் பயன்படுத்தப்பட்ட “இந்து வளர்ச்சி வீதம்” என்பதன் அடிப்படையில் குறைவான பொருளாதார வளர்ச்சியுடைய நாடு என்று வர்ணிக்கப்பட்ட இந்தியா தற்போது உலகில் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த வளர்ச்சி கணக்கியல் அமைப்பு மாற்றங்கள் காரணமாக உள்ளது. அதனால் தான் அதிகரித்த மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் பொதுமக்களின் துன்பங்களை தணிக்க தவறி விட்டது. சமூக , பொருளாதார மற்றும் சுற்றுப்புற சூழ்நிலைகளில் சமனற்ற நிலை ஏற்பட்டது. வேலையின்மை, வறுமை, உடல்நலக்குறைவு போன்ற அடிப்படை பிரச்சனைகள் தீர்க்கப்படாமலேயே உள்ளன.

76) 1991 க்கு பின் ஏற்பட்ட தொழில்துறை கட்டுப்பாடுகள் எவை?

ⅰ) மது மற்றும் போதைப்பொருட்களுக்கான உரிமத்திற்கு தடை

ⅱ) பாதுகாப்பு, அணு ஆற்றல், இரயில்வே ஆகியவை பொதுத்துறையில் இருக்கும். பெரிய அளவிலான தனியார் மயமாதல், முதலீட்டை திரும்ப பெறுதல் போன்ற நடவடிக்கைகள்

ⅲ) விலையை நிர்ணயிக்க அங்காடிகளுக்கு அனுமதி

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅰ), ⅱ)

c) ⅰ), ⅲ)

d) ⅱ), ⅲ)

விளக்கம்: *மது மற்றும் போதைப்பொருட்களுக்கான உரிமத்திற்கு தடை

*பாதுகாப்பு, அணு ஆற்றல், இரயில்வே ஆகியவை பொதுத்துறையில் இருக்கும். பெரிய அளவிலான தனியார் மயமாதல், முதலீட்டை திரும்ப பெறுதல் போன்ற நடவடிக்கைகள்

*விலையை நிர்ணயிக்க அங்காடிகளுக்கு அனுமதி

77) கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?

ⅰ) EPZ அதிக பொருளாதார மண்டலங்களை ஈர்த்ததன் விளைவாக 2000 இல் இந்திய அரசு புதிய கொள்கையின் மூலம் சிறப்பு பொருளாதார மண்டலம் என்பதை ஏற்படுத்தியது.

ⅱ) காண்ட்லாவில் ஏற்படுத்தப்பட்ட ஏற்றுமதி செயலாக்க மண்டல வெற்றியை அடுத்து 1980 ன் துவக்க காலத்தில் மேலும் 8 EPZ கள் பம்பாய், நொய்டா, சூரத், சென்னை, பால்டா, விசாகப்பட்டினம் போன்ற இடங்களில் துவங்கப்பட்டன.

a) ⅰ) மட்டும்

b) ⅱ) மட்டும்

c) ⅰ), ⅱ) சரி

d) இரண்டும் தவறு

விளக்கம்: EPZ அதிக பொருளாதார மண்டலங்களை ஈர்த்ததன் விளைவாக 2000 இல் இந்திய அரசு புதிய கொள்கையின் மூலம் சிறப்பு பொருளாதார மண்டலம் என்பதை ஏற்படுத்தியது. காண்ட்லாவில் ஏற்படுத்தப்பட்ட ஏற்றுமதி செயலாக்க மண்டல வெற்றியை அடுத்து 1980 ன் துவக்க காலத்தில் மேலும் ஏழு EPZ கள் பம்பாய், நொய்டா, சூரத், சென்னை, பால்டா, விசாகப்பட்டினம் போன்ற இடங்களில் துவங்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!