Tnpsc
அடைமொழியால் குறிக்கப் பெறும் சான்றோர்கள் – Tnpsc General Tamil
அடைமொழியால் குறிக்கப் பெறும் சான்றோர்கள்
பெயர் | அடைமொழி |
திருநாவுக்கரசர் | ஆளுடைய அரசு, அப்பர், வாகீசர், மருள்நீக்கியார், திருவாமூரார் |
திருஞானசம்பந்தர் | ஆளுடைய பிள்ளை, திராவிட சிசு |
சுந்தரர் | தம்பிரான் தோழர், ஆளுடையநம்பி, திருநாவலூரார், ஆரூரார், வன்தொண்டன் |
கம்பர் | கல்வியிற் பெரியார், கவிச்சக்கரவர்த்தி, கவிப்பேரரசர் |
ஒட்டக்கூத்தர் | கவிச்சக்கரவர்த்தி, கவிராட்சசன், காளக்கவி, சர்வக்ஞகவி, கௌடப் புலவர் |
பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் | திவ்யகவி, அழகிய மணவாளதாசர் |
மாணிக்கவாசகர் | திருவாதவூரார், அழுது அடியடைந்த அன்பர், தென்னவன் பிரம்மராயன் |
பாரதியார் | தேசியகவி, சிந்துக்குத்தந்தை, விடுதலைக்கவி, மகாகவி, பாட்டுக்கொரு புலவன், சீட்டுக்கவி, கற்பூரச் சொற்கோ, தற்கால தமிழ் இலக்கிய விடிவெள்ளி, ஷெல்லிதாசன், நீடுதுயில் நீக்க பாடி வந்த நிலா, செந்தமிழ்த் தேனீ |
பாரதிதாசன் | பாவேந்தர், புரட்சிக்கவி, புதுவைக் கவிஞர், இயற்கைக் கவிஞர், புதுவைக் குயில், தமிழ்நாட்டின் ரசூல் கம்சதேவ், பூங்காட்டுத் தும்பி |
அண்ணாமலை கவிராயர் | காவடி சிந்துக்குத் தந்தை |
வெ. இராமலிங்கனார் | காந்தியக் கவிஞர், ஆட்சிமொழிக்காவலர், நாமக்கல் கவிஞர் |
ம. பொ. சிவஞானம் | சிலம்பு செல்வர் |
அனுமன் | சொல்லின் செல்வன், சிறிய திருவடி |
திரு. வி. கல்யாணசுந்தரம் | தமிழ்த்தென்றல் |
எச். ஏ. கிருட்டிணப்பிள்ளை | கிறித்துவக் கம்பன் |
காளமேகப்புலவர் | வசைகவி, ஆசுகவி |
நச்சினார்க்கினியர் | உச்சிமேற்கொள் புலவர், தமிழ்மல்லி நாதசூரி |
நம்பியாண்டார் நம்பி | தமிழ் வியாசர் |
கோ. வி. மணிசேகரன் | புதினப் பேரரசு |
தியாகராஜ பாகவதர் | ஏழிசை மன்னர் |
தேவநேயப் பாவாணர் | மொழிஞாயிறு |
அப்துல் ரகுமான் | கவிக்கோ |
கல்கி | தமிழ் வரலாற்று நாவலின் தந்தை |
அகத்தியர் | தமிழ்முனி, குறுமுனி, பொதிகைமுனி |
மே. வி. வேணுகோபால் | இலக்கண தாத்தா |
கி. ஆ. பெ. விஸ்வநாதப்பிள்ளை | முத்தமிழ்க் காவலர் |
சேக்கிழார் | தொண்டர்சீர் பரவுவார், பக்தி சுவை நனி சொட்ட சொட்ட பாடிய கவி, உத்தம சோழ பல்லவராயன், இராமதேவர், அருண்மொழித் தேவர் |
வீரமா முனிவர் | தமிழ் இலக்கிய தோற்றுநர், சிறுகதையின் தந்தை |
புதுமைப்பித்தன் | சிறுகதையின் மன்னன், தமிழ்நாட்டின் மாப்பசான் |
வ. வே. சு. ஐயர் | சிறுகதையின் முன்னேடி |
ஜெயகாந்தன் | சிறுகதையின் முடிசூடரமன்னன், தென்னாட்டு மாப்பசான், சிறுகதையின் சித்தன் |
மு. வரதராசனார் | தமிழ்நாட்டு பெர்னாட்ஷா |
அண்ணாதுரை | தென்னாட்டு பெர்னாட்ஷா, பேரறிஞர் |
ந. பிச்சமூர்த்தி | புதுக்கவிதையின் முன்னேடி |
உ. வே. சாமிநாதய்யர் | தமிழ்த் தாத்தா |
பம்மல் சம்பந்த முதலியார் | தமிழ் நாடகத் தந்தை |
சங்கரதாஸ் சுவாமிகள் | தமிழ்நாடகத் தலைமையாசிரியர், நாடக உலகின் இமயம் |
ஈ. வெ. ராமசாமி | பகுத்தறிவுப் பகலவன், தெற்காசிய சாக்ரடீஸ், பெரியார் |
வாணிதாசன் | தமிழ்நாட்டின் வேர்ட்ஸ்வர்த், பாவலர்மணி, பாவலர் மன்னன், தமிழ்நாட்டின் தாகூர், கவிஞரேறு, ரமி (புனைப்பெயர்) |
சுத்தானந்த பாரதி | கவியோகி |
ஆறுமுக நாவலர் | தற்கால உரைநடையின் தந்தை, வசனநடை கைவந்த வல்லாளர் |
ஜவஹர்லால் நேரு | ஆசியஜோதி |
தேசிக விநாயகம் பிள்ளை | நாஞ்சில்நாட்டு கவிஞர், கவிமணி, தழுவல் கவிஞர் |
சுஜாதா | தமிழ்நாட்டின் அட்லிசேஸ் |
வெங்கட ரமணி | தென்னாட்டு தாகூர் |
கதிரேச செட்டியார் | பண்டிதமணி |
பெரியாழ்வார் | பிள்ளைத்தமிழ் இலக்கிய முன்னேடி, பட்டர்பிரான் |
ஜேக்கப் கரீம் | நாட்டுப்புறவியலின் தந்தை |
வானமாமலை | தமிழ் நாட்டுப்புறவியலின் தந்தை |
கோவலன் | மண்தோய்ந்த புகழினான் |
வேதநாயகம் பிள்ளை | நீதிநாயகர் |
சோமசுந்தர பாரதியார் | கணக்காயர், நாவலர் |
மூன்றாம் நந்திவர்மன் | தமிழ் நந்தி |
சீத்தலைச்சாத்தனார் | தண்டமிழ் ஆசான், நன்னூற் புலவன், கூலவாணிகன் |
நக்கீரர் | நற்றதமிழ்ப் புலவர், மதுரை தமிழ்ச்சங்கத் தலைவர் |
திருத்தக்க தேவர் | தமிழ் கவிஞருள் அரசர் |
நம்மாழ்வார் | தமிழ்வேதம் செய்த மாறன், குருகைக் காவலன், பராங்குசன், சடகோபன், வகுளாபரணன், காரிமாறன், வைணவத் திராவிட சிசு |
ஆண்டாள் | சூடிக்கொடுத்த சுடர்கோடி, வைணவம் தந்த செல்வி, நாச்சியார் |
அழ. வள்ளியப்பா | குழந்தை கவிஞர் |
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் | பொதுவுடைமைக் கவிஞர், மக்கள் கவிஞர் |
மீனாட்சி சுந்தரம் பிள்ளை | பன்மொழிப்புலவர், நவீன கம்பர் |
கால்டுவெல் | திராவிட ஒப்பிலக்கணத் தந்தை |
நா. காமரசன் | ஆஸ்தானக் கவிஞர் |
வைரமுத்து | கவிப்பேரரசு |
செய்கு தம்பியார் | தசவதானி |
கரிகாலன் | நரைமுடித்துச் சொல்லால் முறை செய்த அரசன் |
ஔவையார் | தமிழ் மூதாட்டி |
முத்துராமலிங்க தேவர் | தேசியம் காத்த செம்மல், பிரணவ கேசரி, வேதாந்த பாஸ்கர் |
நாதமுனிகள் | பெரிய முதலியார் |
திருமழிசையாழ்வார் | சக்கரத்தாழ்வார் |
குலசேகர ஆழ்வார் | கொல்லிக்காவலன் |
திருமங்கையாழ்வார் | கலிநாடன், பரபாலன், குறையலாளி, மங்கையர்கோன், மங்கை வேந்தன், ஆறு அங்கம் கூறிய ஆதிநாடன் |
கி. இராஜநாராயணன் | வட்டார கதைகளின் முன்னோடி, கரிசல் கதைகளின் தந்தை |
கல்கி | தமிழ்நாட்டின் வால்டர் ஸ்காட், தமிழ் சிறுகதை இலக்கியத்தின் ஆசான் |
மௌனி | தமிழ் சிறுகதையின் திருமூலர் |
தஞ்சை வேதநாயக சாஸ்திரியார் | ஞானதீபக் கவிராயர், அண்ணாவியார் |
மனோன்மணீயம் சுந்தரனார் | இராவ் பகதூர், தமிழ் செய்யுள் நாடக இலக்கியத்தின் தந்தை |
சுரதா | உவமைக் கவிஞர், கிவிஞர் திலகம், தன்மானக் கவிஞர், கவிமன்னர் |
கண்ணதாசன் | கவியரசு, காரைமுத்துப் புலவர், வணங்காமுடி, கமகப்பிரியா, பார்வதிநாதன், துப்பாக்கி, ஆரோக்கியசாமி (புனைப்பெயர்கள்) |
மருதகாசி | திரைக்கவித் திலகம் |
சி. சு. செல்லப்பா | புதுக்கதைப் புரவலர் |
அப்துல் ரகுமான் | தமிழ்நாட்டு இக்பால், கவிக்கோ, சூரியக் கவிஞன் |
ஆலந்தூர் மோகனரங்கன் | கவிவேந்தர் |
மறைமலையடிகள் | தனித்தமிழ் மலை, தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை, தனித்தமிழ் இலக்கியத்தின் தந்தை, தன்மான இயக்கத்தின் முன்னோடி, முருகவேள் (புனைப்பெயர்), சாமி வேதாச்சலம் (இயற்பெயர்) |
பரிதிமாற் கலைஞர் | தமிழ்நாடகப் பேராசிரியர், திராவிட சாஸ்திரி, சூரியநாராயண சாஸ்திரி |
பெருஞ்சித்திரனார் | பாவலரேறு, தற்கால நக்கீரர் |
ஜி. யூ. போப் | தமிழ் பாடநூல் முன்னோடி, வேத சாஸ்திரி |
இராமலிங்க அடிகள் | இசைப்பெரும் புலவர், அருட்பிரகாச வள்ளலார், சன்மார்க்க கவிஞர், புதுநெறி கண்ட புலவர், புரட்சித் துறவி, ஓதாது உணர்ந்த அருட்புலவர், பசிப்பிணி மருத்துவர் |
திருமூலர் | முதல் சித்தர், தமிழ் சித்தர்களின் முதல்வர் |
திருவள்ளுவர் | நாயனார், முதற்பாவலர், தெய்வப்புலவர், மாதானுபங்கி, செந்நாப்போதார், பெருநாவலர், பொய்யில் புலவர், நான்முகன் |
சேரன் பெருமான் நாயனார் | பெருமாக்கோதையார், கழற்றறிவார் |
உடுமலை நாராயணகவி | பகுத்தறிவுக் கவிராயர் |
டி. கே. சி | ரசிகமணி |
இராபர்ட் – டி – நொபிலி | தத்துவ போதகர் |
வ. உ. சிதம்பரம் பிள்ளை | செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன் |
வி. முனுசாமி | திருக்குறளார் |
அசலாம்பிகை அம்மையார் | 20 – ஆம் நூற்றாண்டின் ஔவையார் |
இராஜாஜி | மூதறிஞர் |
எம். எஸ். சுப்புலட்சுமி | இசைக்குயில் |
ந. பார்த்தசாரதி | உருவகக் கவிஞர் |
வெங்கடாசலம் பிள்ளை | கரந்தைக் கவிஞர் |
வரத நஞ்சயப்பிள்ளை | புலவரேறு |
தருமு. சிவராமு | படிமக்கவிஞர் |
வீரகவிராயர் | ஆசுகவி |
விக்ரம் சாராபாய் | இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை |
ஏ. பி. ஜே. அப்துல்கலாம் | இந்திய ஏவுகணை நாயகன் |
மயில்சாமி அண்ணாதுரை | இளையகலாம் |