பாறை மற்றும் மண் 8th Social Science Lesson 5 Questions in Tamil
8th Social Science Lesson 5 Questions in Tamil
5. பாறை மற்றும் மண்
பாறையியல் (Petrology) என்ற சொல் ________ மொழியிலிருந்து பெறப்பட்டது.
A) இலத்தீன்
B) கிரேக்கம்
C) போர்ச்சுக்கீசியம்
D) சமஸ்கிருதம்
(குறிப்பு: பெட்ரஸ் என்பது பாறைகளையும் “பெட்ரஸ்” (Logos) என்பது அதைப் பற்றிய படிப்பு ஆகும். பாறையியல் என்பது ‘புவி மண்ணியலின்’ ஒரு பிரிவு ஆகும்.)
கூற்று 1: புவியின் மேலோடு பாறைகளால் உருவானது.
கூற்று 2: பாறைகள் ஒன்று அல்லது பல கனிமப்பொருட்களால் ஆனவை.
A) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
(குறிப்பு: புவியின் மேலோடு நிலக்கோளம் (Lithosphere) எனப்படும்.)
புவியின் மேற்பரப்பில் _________ வகையிலான கனிம வகைகள் உள்ளன என மதிப்பிடப்பட்டுள்ளது.
A) 1000 B) 1500 C) 2000 D) 2500
(குறிப்பு: இவற்றில் பொதுவாக புவி முழுவதும் 12 அடிப்படை கனிமங்கள் கண்டறியப்பட்டுள்ளன.)
புவிப்பரப்பில் காணப்படும் பாறைகளை, அவை தோன்றும் முறைகளின் அடிப்படையில் _________ வகைகளாகப் பிரிக்கலாம்.
A) 2 B) 3 C) 4 D) 5
(குறிப்பு: மூன்று வகைகள்
தீப்பாறைகள்
படிவுப் பாறைகள்
உருமாறியப் பாறைகள் அல்லது மாற்றுருப் பாறைகள்)
____________முதன்மைப் பாறைகள் அல்லது தாய்ப் பாறைகள் என்று அழைக்கப்படுகின்றன.
A) தீப்பாறைகள்
B) படிவுப்பாறைகள்
C) உருமாறியப் பாறைகள்
D) சுண்ணாம்புப் பாறைகள்
(குறிப்பு: தீப்பாறைகள் புவியின் ஆழமானப் பகுதியிலிருந்து வெளியேறும் உருகிய பாறைக் குழம்பு உறைந்து உருவானதாகும்.)
இக்னியஸ் என்ற சொல் ___________ மொழியிலிருந்து பெறப்பட்டது ஆகும்.
A) இலத்தீன்
B) கிரேக்கம்
C) போர்ச்சுக்கீசியம்
D) சமஸ்கிருதம்
(குறிப்பு: இக்னியஸ் என்றால் தீ என்று பொருள்படும்.)
தீப்பாறைகளின் பண்புகளில் சரியானதை தேர்ந்தெடு.
1. இவை கடினத் தன்மை உடையவை.
2. இவை நீர்புகாத் தன்மைக் கொண்டவை.
3. உயிரினப் படிமப்பொருள்கள் இப்பாறைகளில் இருக்காது.
4. தீப்பாறைகள் எரிமலை செயல்பாடுகளோடு தொடர்புடையவை.
5. இப்பாறைகள் கட்டுமான வேலைகளுக்குப் பயன்படுவதில்லை.
A) அனைத்தும் சரி
B) 1, 2, 5 சரி
C) 2, 3, 4, 5 சரி
D) 1, 2, 3, 4 சரி
(குறிப்பு: தீப்பாறைகள் கட்டுமான வேலைகளுக்குப் பயன்படுகின்றன.)
தீப்பாறைகள் எத்தனை வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன?
A) 2 B) 3 C) 4 D) 5
(குறிப்பு: 1. வெளிப்புறத் தீப்பாறைகள், 2. ஊடுருவிய தீப்பாறைகள்)
புவியின் உட்பகுதியிலிருந்து அதன் மேல் பகுதிக்கு வரும் செந்நிற, உருகிய பாறைக் குழம்பு __________ எனப்படும்.
A) பசால்ட்
B) மாக்மா
C) லாவா
D) செடிமென்டரி
(குறிப்பு: பாறைக் குழம்பு புவியின் மேற்பரப்பிற்கு வந்தவுடன் குளிர்ந்து பாறைகளாக மாறுகிறது.)
பாறைக் குழம்பு குளிர்ந்து புவி மேலோட்டின் மேற்பரப்பில் உருவாகும் பாறைகள்
A) ஊடுருவிய தீப்பாறைகள்
B) வெளிப்புறத் தீப்பாறைகள்
C) படிகப் பாறைகள்
D) பெளதீகப் படிவுப் பாறைகள்
(குறிப்பு: வெளிப்புறத் தீப்பாறைகள் விரைவாக குளிர்வதால் மெல்லிழைகள் மற்றும் கண்ணாடி தன்மை கொண்டதாக இருக்கும்.)
கூற்று 1: பாறைக்குழம்பு புவிப்பரப்பிற்கு கீழே பாறை விரிசல்களிலும், பாறைகளிலும் உடுருவிச் சென்று உறைந்து உருவாகும் பாறைகள் ஊடுருவிய தீப்பாறைகள் எனப்படும்.
கூற்று 2: இவை மெதுவாக குளிர்வதால் பேரிழைகளாக உருவாகும்.
A) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
D) கூற்று 1, கூற்று 2 இரண்டு தவறு
ஊடுருவிய தீப்பாறைகள் எத்தனை வகைப்படும்?
A) 2 B) 3 C) 4 D) 5
(குறிப்பு:
அடியாழப் பாறைகள் (அ) பாதாளப் பாறைகள்
இடையாழப் பாறைகள்)
கிரானைட், டயரைட் மற்றும் எறும்புக்கள் ஆகியன ________ வகைப் பாறைகளுக்கு எடுத்துக்காட்டுகளாகும்.
A) இடையாழப் பாறைகள்
B) அடியாழப் பாறைகள்
C) வெளிப்புறத் தீப்பாறைகள்
D) படிவுப் பாறைகள்
(குறிப்பு: புவியின் அதிக ஆழத்தில் உறைந்து உருவாகும் பாறைகள் அடியாழப் பாறைகள் எனப்படும்.)
புவி மேற்பரப்பிலிருந்து கீழே புவியின் குறைந்த ஆழத்தில் பாறைக்குழம்பு உறைவதால் உருவாகும் பாறைகள் ___________ பாறைகள் எனப்படும்.
A) இடையாழப் பாறைகள்
B) அடியாழப் பாறைகள்
C) வெளிப்புறத் தீப்பாறைகள்
D) படிவுப் பாறைகள்
(குறிப்பு: டொலிரைட் இடையாழப் பாறைக்கு சிறந்த உதாரணமாகும்.)
இந்தியாவின் வடமேற்கு தீபகற்ப பகுதிகளில் காணப்படும் கருங்கள் வகை பாறைகள் _________ வகை பாறைகளுக்கு எடுத்துக்காட்டாகும்.
A) ஊடுருவிய தீப்பாறைகள்
B) வெளிப்புறத் தீப்பாறைகள்
C) படிகப் பாறைகள்
D) பெளதீகப் படிவுப் பாறைகள்
ஊடுருவிய தீப்பாறைகள் பெரிய அளவிலான படிகங்களைக் கொண்டிருப்பதால் இவைகள் __________ என்றும் அழைக்கப்படுகிறது.
A) படிவுப் பாறைகள்
B) படிகப் பாறைகள்
C) இரசாயன பாறைகள்
D) உருமாறிய பாறைகள்
கீழ்க்கண்டவற்றுள் செயல்படும் எரிமலைகள் எவை?
1. மவுண்ட் வெசூவியஸ் 2. மவுண்ட் ஸ்ட்ராம்போலி
3. மவுண்ட் எட்னா 4. மவுனாலோவா
5. மெளனாக்கியா
A) அனைத்தும்
B) 1, 2, 3
C) 2, 3, 4
D) 2, 3, 4, 5
(குறிப்பு: இத்தாலி-மவுண்ட் வெசுவியஸ், மவுண்ட் ஸ்ட்ராம்போலி, மவுண்ட் எட்னா, ஹவாய் தீவு-மவுனாலோவா,மெளனாக்கியா)
செடிமென்டரி என்ற சொல் ‘செடிமென்டம்’ என்ற __________ சொல்லிலிருந்து பெறப்பட்டது.
A) இலத்தீன்
B) கிரேக்கம்
C) போர்ச்சுக்கீசியம்
D) சமஸ்கிருதம்
(குறிப்பு: செடிமெண்டம் என்ற சொல் படியவைத்தல் என பொருள்படும்.)
அரிப்புக் காரணிகளால் அரிக்கப்பட்டு படிய வைக்கப்பட்ட படிவுகள் நீண்ட காலமாக அதிக வெப்பம் மற்றும் அழுத்தத்தின் காரணமாக இறுகியதால் ________ பாறைகள் உருவாகின்றன.
A) படிகப் பாறைகள்
B) படிவுப் பாறைகள்
C) அரிப்புப் பாறைகள்
D) தீப்பாறைகள்
(குறிப்பு: இப்பாறைகள் பல அடுக்குகளை உள்ளடக்கியுள்ளன. பல்வேறு காலக்கட்டத்தில் படிய வைக்கப்பட்ட பொருள்கள் பல படிநிலைகளைக் கொண்டிருப்பதால் இவைகள் அடுக்குப்பாறைகள் என அழைக்கப்படுகின்றன.)
_________ பாறைகள் நிலக்கரி, எண்ணெய் மற்றும் இயற்கை வாயு போன்ற இயற்கை வளங்கள் உருவாக முக்கிய ஆதாரமாகும்.
A) படிகப் பாறைகள்
B) படிவுப் பாறைகள்
C) அரிப்புப் பாறைகள்
D) தீப்பாறைகள்
படிவுப் பாறைகளின் பண்புகளில் சரியானதை தேர்ந்தெடு.
1. இப்பாறைகள் பல அடுக்குகளைக் கொண்டது.
2. இப்பாறைகள் படிகங்களற்ற பாறைகளாக உள்ளது.
3. இப்பாறைகளில் உயிரின படிமங்கள் உள்ளன.
4. இப்பாறைகள் மென் தன்மையுடையதால் எளிதில் அரிப்புக்கு இவை உட்படுகின்றன.
A) 1, 2, 4 சரி
B) 2, 3, 4 சரி
C) 1, 3, 4 சரி
D) அனைத்தும் சரி
உலகின் மிகப் பழமையான படிவுப் பாறைகள் _________ல் கண்டுபிடிக்கப்பட்டன.
A) பின்லாந்து
B) ஐஸ்லாந்து
C) கிரீன்லாந்து
D) போலந்து
(குறிப்பு: இவற்றின் வயது 3.9 பில்லியன் ஆண்டுகள் என மதிப்பிடப்பட்டுள்ளது.)
படிவுகளின் தன்மை, படிய வைக்கும் செயல் முறைகள் மற்றும் படிவுகளின் மூலாதாரம் போன்ற அம்சங்களின் அடிப்படையில் படிவுப் பாறைகள் எத்தனை வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன?
A) 2 B) 3 C) 4 D) 5
(குறிப்பு:
உயிரினப் படிவுப் பாறைகள்
பெளதீகப் படிவுப் பாறைகள்
இரசாயன படிவுப் பாறைகள்)
சாக், பட்டுக்கல், டோலமைட் மற்றும் சுண்ணாம்புப் பாறைகள் போன்றவை __________ வகை பாறைகள் ஆகும்.
A) உயிரினப் படிவுப் பாறைகள்
B) பௌதீகப் படிவுப் பாறைகள்
C) இரசாயன படிவுப் பாறைகள்
D) படிகப் பாறைகள்
(குறிப்பு: உயிரினப் படிவுப் பாறைகள் உயிரினங்களும் தாவரங்களும் சிதைக்கப்பட்ட பொருள்கள் படிந்து இறுகிய பின் உருவாகின்றன. இவை உயிரின படிமங்களால் ஆனவை.)
___________ பாறைகள் தீப்பாறைகளும் உருமாறிய பாறைகளும் சிதைந்து உருவாகின்றன.
A) உயிரினப் படிவுப் பாறைகள்
B) பௌதீகப் படிவுப் பாறைகள்
C) இரசாயன படிவுப் பாறைகள்
D) படிகப் பாறைகள்
(குறிப்பு: ஆறு, காற்று, பனியாறு போன்ற இயற்கைக் காரணிகளால் அரிக்கப்பட்டும், கடத்தப்பட்டும் அவை சாதகமான இடங்களில் படியவைக்கப்படுகின்றன. இவை நீண்ட காலத்திற்கு பிறகு இறுகி பாறைகளாக மாறுகின்றன.)
கீழ்க்கண்டவற்றுள் பெளதீகப் படிவுப் பாறைகள் எவை?
1. மணற்பாறைகள் 2. மாக்கல்
3. களிப்பாறை 4. சுண்ணாம்புப் பாறைகள்
A) 1, 2, 3 B) 2, 3, 4 C) 1, 3, 4 D) 1, 2, 4
கீழ்க்கண்டவற்றுள் உப்பு படர் பாறைகள் என்று அழைக்கப்படும் பாறைகள் எவை?
A) படிகப் பாறைகள்
B) பௌதீகப் படிவுப் பாறைகள்
C) இரசாயன படிவுப் பாறைகள்
D) உயிரினப் படிவுப் பாறைகள்
(குறிப்பு: இரசாயன படிவுப் பாறைகள், பாறைகளில் உள்ள கனிமங்கள் நீரில் கரைந்து, இரசாயன கலவையாக மாறுகிறது. இவை ஆவியாதல் மூலமாக உருவாகின்றன.)
மெட்டாமார்பிக் என்ற வார்த்தை _________ சொல்லான மெட்டா மற்றும் மார்பா என்ற வார்த்தையில் இருந்து பெறப்பட்டதாகும்.
A) இலத்தீன்
B) கிரேக்கம்
C) பாரசீகம்
D) சமஸ்கிருதம்
( குறிப்பு: மெட்டா என்பது மாற்றம் என்றும், மார்பா என்பது வடிவம் என்றும் பொருள்படும்.)
உருமாறிய பாறைகள் (Metamorphic rocks) எத்தனை வகைப்படும்?
A) 2 B) 3 C) 4 D) 5
(குறிப்பு:
வெப்ப உருமாற்றம்
இயக்க உருமாற்றம்)
கூற்று 1: பாறைக்குழம்பு பாறைகளில் ஊடுருவி செல்லும்போது அப்பாறைக்குழம்பின் வெப்பம், அங்குள்ள பாறைகளை உருமாற்றம் செய்துவிடுகிறது. இது வெப்ப உருமாற்றம் எனப்படும்.
கூற்று 2: பாறைக்குழம்பு பாறைகளில் ஊடுருவிச் செல்லும்போது அப்பாறைக் குழம்பின் அழுத்தத்தால், அங்குள்ள பாறைகளை உருமாற்றம் செய்துவிடுகிறது. இது இயக்க உருமாற்றம் எனப்படும்.
A) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
D) கூற்று 1, கூற்று 2 இரண்டு தவறு
கூற்று 1: அதிக வெப்ப அழுத்தம் காரணமாக தீப்பாறைகளும் படிவுப்பாறைகளும் மாற்றமடைந்து உருமாறிய பாறைகள் என பெயர் பெறுகிறது.
கூற்று 2: உலக அதிசயங்களில் ஒன்றான இந்தியாவில் உள்ள தாஜ்மஹால் படிவுப் பாறையிலிருந்து உருவான வெள்ளை பளிங்கு கற்களால் கட்டப்பட்டது.
A) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
D) கூற்று 1, கூற்று 2 இரண்டு தவறு
(குறிப்பு: உலக அதிசயங்களில் ஒன்றான இந்தியாவில் உள்ள தாஜ்மஹால் உருமாறிய பாறையிலிருந்து உருவான வெள்ளை பளிங்கு கற்களால் கட்டப்பட்டது.)
இயக்க உருமாற்றத்தினால், கிரானைட் பாறை ____________ பாறையாக உருமாறுகிறது.
A) பலகைப் பாறை
B) நைஸ் பாறை
C) வெண் கற்பாறை
D) படிகப் பாறை
(குறிப்பு: கிரானைட் பாறை தீப்பாறை வகையை சேர்ந்தது.)
வெப்ப உருமாற்றத்தினால் “கருங்கல்” பாறை _________ ஆக உருமாறுகிறது.
A) பலகைப் பாறை
B) நைஸ் பாறை
C) வெண் கற்பாறை
D) படிகப் பாறை
(குறிப்பு:கருங்கல் பாறை (Basalte) தீப்பாறை வகையைச் சார்ந்தது.)
வெப்ப உருமாற்றத்தினால் மணற்பாறைகள் _____________ ஆக மாறுகின்றன.
A) பலகைப் பாறை
B) நைஸ் பாறை
C) வெண் கற்பாறை
D) படிகப் பாறை
(குறிப்பு: மாக்கல், பலகைப் பாறையாக மாறுகின்றன. மணற்பாறைகள், மாக்கல் ஆகியவை படிவுப்பாறை வகையை சேர்ந்தவை.)
உருமாறிய பாறைகளின் பண்புகளில் சரியானதை தேர்ந்தெடு.
1. உருமாறியப் பாறைகள் பெரும்பாலும் படிக தன்மைக் கொண்டவை.
2. உருமாறிய பாறைகளின் பல்வேறு பட்டைகள் ஒரு பகுதி வெளிர் நிற கனிமங்களை கொண்டதாகவும், மற்றொரு பகுதி கருமை நிற கனிமங்களை கொண்டதாகவும் உள்ளன.
A) அனைத்தும் சரி
B) 1 மட்டும் சரி
C) 2 மட்டும் சரி
D) இரண்டும் தவறு
புவியின் மேலோட்டுப் பகுதியில் பல்வேறு இயற்கை சக்திகள் மற்றும் அக, புறக்காரணிகளால் பாறைகள் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு மாறும் தொடர்ச்சியான செயல் __________ எனப்படும்.
A) இயற்கை சுழற்சி
B) பாறை உருவாதல்
C) பாறைச் சுழற்சி
D) இயற்கை மாற்றம்
__________ என்பது புவியில் தோன்றிய முதன்மையான பாறையாகும்.
A) படிவுப் பாறைகள்
B) தீப்பாறைகள்
C) இரசாயன பாறைகள்
D) உருமாறிய பாறைகள்
(குறிப்பு: தீப்பாறைகள் சிதைவடைந்து, அரித்தல், கடத்துதல் மற்றும் படியவைத்தலால் படிவுப் பாறைகளாக உருவாகின்றன.)
சரியான கூற்றைத் தேர்ந்தெடு.
1. குவார்ட்சைட் மற்றும் சலவைக்கற்கள் பொதுவாக கட்டுமானம் மற்றும் சிற்ப வேலைபாடுகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன.
2. சலவைக் கற்கள் பரவலாக அழகான சிலைகள், அலங்கார பொருள்கள் குவளை, சிறிய பரிசு பொருள்கள் தயாரிக்கப் பயன்படுகின்றன.
3. சலவைக்கற்களின் துகள்களிலிருந்து நெகிழி, காகிதம் போன்ற பொருள்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
A) அனைத்தும் சரி
B) 1, 2 சரி
C) 2, 3 சரி
D) 1, 3 சரி
கீழ்க்கண்டவற்றுள் பாறைகளின் பயன்கள் எவை?
1. சிமெண்ட் தயாரித்தல் 2. சுண்ண எழுதுகோல்
3. தீ 4. கட்டடப் பொருள்கள்
5. குளியல்தொட்டி 6. நடை பாதையில் பதிக்கப்படும் கல்
A) அனைத்தும்
B) 1, 3, 5
C) 2, 4, 5, 6
D) 2, 3, 4, 5
(குறிப்பு: பாறைகளின் இதர பயன்கள்
அணிகலன்கள், கூரைப் பொருள்கள், அலங்காரப் பொருள்கள், தங்கம் வைரம் மற்றும் நவரத்தினங்கள் போன்ற மதிப்புமிக்க பொருள்கள்.)
கூற்று 1: மண் என்பது பல்வகை கரிமப் பொருள்கள், கனிமங்கள், வாயுக்கள், திரவப்பொருள்கள் மற்றும் பல உயிரினங்கள் கலந்த கலவையாகும்.
கூற்று 2: மண்ணில் உள்ள கனிமங்கள் மண்ணை உருவாக்கும் ஒரு அடிப்படை காரணியாகும்.
A) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
D) கூற்று 1, கூற்று 2 இரண்டு தவறு
(குறிப்பு: புவிப்பரப்பின் மேல் மண் உருவாவதால் இது “புவியின் தோல்” என்று அழைக்கப்படுகிறது.)
ஒவ்வொரு ஆண்டும் ____________நாள் உலக மண் நாளாக கொண்டாடப்படுகிறது.
A) ஜனவரி 5
B) அக்டோபர் 5
C) டிசம்பர் 5
D) டிசம்பர் 25
(குறிப்பு: பாறைகள், வானிலை சிதைவு மற்றும் அரித்தல் செயல்முறைகளுக்கு உட்படுத்தப்படும்பொழுது மண்ணாக உருவாகிறது.)
பொருத்துக. (மண்ணின் கூட்டுப் பொருள்கள்)
1. கனிமங்கள் i) 25%
2. கரிமப்பொருள்கள் ii) 45%
3. நீர் iii) 5%
4. காற்று iv) 25%
A) ii i iv iii
B) iii iv i ii
C) iv iii i ii
D) ii iii iv i
(குறிப்பு: மண்ணின் கலவையானது இடத்திற்கு இடம், காலத்திற்கு காலம் வேறுபடுகிறது.)
தவறான இணையைத் தேர்ந்தெடு. (மண்ணின் கூட்டுப் பொருளான கரிமப்பொருட்களில் அடங்கியிருப்பவை)
A) அங்ககப் பொருட்கள் 5% B) உயிரினப் பொருட்கள் 10%
C) இலைமக்கு 80% D) வேர்கள் 20%
புவி மேற்பரப்பிலிருந்து தாய் பாறை வரை உள்ள மண் அடுக்குகளின் குறுக்கு வெட்டுத் தோற்றம் __________ எனப்படும்.
A) மண்ணின் கூட்டுப் பொருள்கள்
B) மண்ணின் குறுக்கமைப்பு
C) மண்ணின் வகைகள்
D) மேற்கண்ட எதுவுமில்லை
மண் உருவாகும் விதத்தில் அவற்றின் நிறம் பெளதீக மற்றும் இரசாயன பண்புகளின் அடிப்படையில் __________ பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகின்றன.
A) 4 B) 5 C) 6 D) 7
(குறிப்பு: மண்ணின் வகைகள்
வண்டல் மண்
கரிசல் மண்
செம்மண்
சரளை மண்
மலை மண்
பாலை மண்)
சரியானக் கூற்றைத் தேர்ந்தெடு. (வண்டல் மண்)
1. வண்டல் மண் ஆற்றுச் சமவெளிகள், வெள்ளச் சமவெளிகள், கடற்கரைச் சமவெளிகளில் காணப்படுகிறது.
2. இவை ஓடும் நீரின் மூலம் கடத்தப்படும் நுண்ணிய துகள்களால் படிய வைக்கப்பட்டு உருவாகிறது.
3. இது மற்ற மண் வகைகளைக் காட்டிலும் வளம்மிக்கது.
A) அனைத்தும் சரி
B) 1, 2 சரி
C) 2, 3 சரி
D) 1, 3 சரி
கீழ்க்கண்டவற்றுள் வண்டல் மண்ணில் விளையும் பயிர்கள் எவை?
1. நெல் 2. கரும்பு 3. சணல் 4. உணவுப் பயிர்கள்
A) அனைத்தும் B) 1, 2, 3 C) 2, 3 D) 1, 2
இலைகள், சருகுகள், கிளைகள், பாசிகள் போன்ற கரிமப் பொருட்களால் உருவான மண் அடுக்கு
A) இலைமக்கு அடுக்கு
B) மேல்மட்ட அடுக்கு
C) உயர்மட்ட அடுக்கு
D) அடி மண்
(குறிப்பு: கரிம மற்றும் கனிமப் பொருட்களால் ஆன அடுக்கு மேல்மட்ட அடுக்கு எனப்படும்.)
உயர்மட்ட அடுக்கில் கீழ்க்கண்ட எந்த தாதுக்கள் காணப்படுகின்றன?
1. இரும்பு 2. களிமண்
3. அலுமினிய ஆக்சைடு 4. கந்தக ஆக்ஸைடு
A) 1, 2, 4 B) 2, 3, 4 C) 1, 2, 3 D) 1, 3, 4
திரள் மண்டலம் என அழைக்கப்படும் மண்ணின் அடுக்கு எது?
A) சிதைவடையாத தாய்ப்பாறை
B) இலை மக்கு அடுக்கு
C) உயர்மட்ட அடுக்கு
D) அடி மண்
(குறிப்பு: அடி மண்ணடுக்கு தாய்பாறையின் இரசாயன, (அ) பெளதீக மாற்றத்திற்கு உட்பட்டவை.)
கூற்று 1: தாய்ப்பாறை அடுக்கில் தாய்ப்பாறைகள் குறைந்த அளவே சிதைக்கப்படுகின்றன.
கூற்று 2: சிதைவடையாத அடிமட்ட பாறைகள் சிதைவடையாத தாய்ப்பாறை அடுக்கில் காணப்படுகின்றன.
A) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
D) கூற்று 1, கூற்று 2 இரண்டு தவறு
சரியான கூற்றைத் தேர்ந்தெடு.
1. கரிசல் மண், தீப்பாறைகள் சிதைவடைவதால் உருவாகின்றன.
2. கரிசல் மண் இயற்கையிலேயே களிமண் தன்மையையும், ஈரப்பதத்தையும் தக்க வைத்துக் கொள்ளும் திறன் கொண்டது.
3. கரிசல் மண்ணில் பருத்தி பயிர் வளர்வதில்லை.
A) அனைத்தும் சரி
B) 1, 2 சரி
C) 2, 3 சரி
D) 1, 3 சரி
(குறிப்பு: கரிசல் மண்ணில் பருத்தி பயிர் நன்கு வளரும்.)
உருமாறியப் பாறைகள் மற்றும் படிகப் பாறைகள் ஆகியவை சிதைவடைவதால் _________ மண் உருவாகிறது.
A) சரளை மண்
B) மலை மண்
C) செம்மண்
D) பாலை மண்
(குறிப்பு: செம்மண் வளம் குறைந்த மண்ணாக இருப்பதால் தினைப் பயிர்கள் பயிரிட ஏற்றது.)
செம்மண்ணில் உள்ள __________ன் அளவைப் பொருத்து மண்ணின் நிறம் வேறுபடுகிறது.
A) இரும்பு சல்பைடு
B) சல்பர் டை ஆக்சைடு
C) பெர்ரஸ் டை ஆக்சைடு
D) இரும்பு ஆக்சைடு
(குறிப்பு: இரும்பு ஆக்சைடின் அளவை பொருத்து மண்ணின் நிறம் பழுப்பு முதல் சிகப்பு நிறம் வரை வேறுபடுகிறது.)
சரளை மண் __________ காலநிலையில் உருவாகிறது.
A) வெப்பமண்டல காலநிலை
B) அயன மண்டல காலநிலை
C) துருவ மண்டல காலநிலை
D) கண்ட காலநிலை
(குறிப்பு: சரளை மண் அதிக வெப்பநிலை மற்றும் அதிக மழைப்பொழிவு கொண்ட பகுதிகளில் ஊடுருதலின் செயலாக்கத்தினால் உருவாவதால் இம்மண் வளம் குறைந்து காணப்படுகிறது.)
தேயிலை, காப்பி போன்ற தோட்டப் பயிர்கள் பயிரிட ஏற்ற மண்
A) வண்டல் மண்
B) கரிசல் மண்
C) செம்மண்
D) சரளை மண்
மலை மண் குறித்த கூற்றுகளில் சரியானதை தேர்ந்தெடு.
1. இம்மண் மலைச் சரிவுகளில் காணப்படுகிறது.
2. மலைச்சரிவுப் பகுதிகளில் இம்மண் கார தன்மையுடன் குறைந்த பருமன் கொண்ட அடுக்காக உள்ளது.
3. உயரத்திற்கு ஏற்றவாறு இம்மண்ணின் பண்புகள் இடத்திற்கு இடம் மாறுபடுகின்றன.
A) அனைத்தும் சரி
B) 1, 2 சரி
C) 2, 3 சரி
D) 1, 3 சரி
பாலை மண் குறித்த கூற்றுகளில் சரியானதை தேர்ந்தெடு.
1. பாலை மண் அயன மண்டல பாலைவனப் பிரதேசங்களில் காணப்படுகிறது.
2. இதில் நுண்துளைகள் காணப்படுவதில்லை.
3. வளம் குறைந்த இம்மண்ணில் வேளாண்மையை மேற்கொள்ள இயலாது.
A) அனைத்தும் சரி
B) 1, 3 சரி
C) 2, 3 சரி
D) 1, 2 சரி
(குறிப்பு: பாலை மண் உவர்தன்மை மற்றும் நுண்துளைகளை கொண்டது.)
சரியான கூற்றைத் தேர்ந்தெடு.
1. மண்ணரிப்பு என்பது இயற்கை காரணிகள் மற்றும் மனித செயல்பாடுகளினால் மண்ணின் மேலடுக்கு நீக்கப்படுதல் அல்லது அரிக்கப்படுதல் ஆகும்.
2. மண்ணரிப்பு மண்ணின் வளத்தை குறைத்து வேளாண்மை உற்பத்தியை குறைக்கிறது.
3. ஓடும் நீர் மற்றும் காற்று மண்ணரிப்புக்கு முக்கிய காரணிகளாக உள்ளன.
4. அடுக்கு அரிப்பு, ஓடை அரிப்பு மற்றும் நீர் பள்ள அரிப்பு ஆகியவை மண்ணரிப்பின் முக்கிய வகைகளாகும்.
A) அனைத்தும் சரி
B) 1, 2, 4 சரி
C) 1, 2, 3 சரி
D) 2, 3, 4 சரி
அயன மண்டல ஈரக் காலநிலைப் பகுதிகளில் மண் உருவாக சுமார் __________ வருடங்கள் ஆகும்.
A) 200 B) 300 C) 400 D) 500
(குறிப்பு: மித வெப்பமண்டல காலநிலைப் பிரதேசங்களில் 1 செ.மீ மண் உருவாக 200 முதல் 400 வருடங்கள் ஆகும்.)
நன்கு வளமான மண் உருவாக ஏறத்தாழ __________ வருடங்கள் ஆகும்.
A) 400 B) 500 C) 2000 D) 3000
(குறிப்பு: காலநிலையைப் பொருத்து மண் உருவாகிறது.)
கீழ்க்கண்டவற்றுள் மண் வளத்தை பாதுகாக்கும் முறைகள் எவை?
1. காடுகள் வளர்த்தல் 2. மேய்ச்சலை கட்டுப்படுத்துதல்
3. அணைகளைக் கட்டுதல் 4. பயிற்சுழற்சி முறை
5. பட்டை முறை வேளாண்மை
A) 1, 2, 4 B) 2, 3, 5 C) 1, 3, 4 D) அனைத்தும்
(குறிப்பு: நிலத்தில் சம உயரத்திற்கு ஏற்ப உழுதல், படிக்கட்டு முறை வேளாண்மை, இடம்பெயர்வு வேளாண்மை தடுத்தல், மரங்கள் வளர்த்து காற்றின் வேகத்தை குறைத்தல் போன்றவை மண் வளத்தை பாதுகாக்கும் இதர முறைகளாகும்.)
கீழ்க்கண்ட மண்ணின் பயன்களில் சரியானதை தேர்ந்தெடு.
1. மண் புவியில் உயிரினங்கள் வாழ்வதற்கும் தாவரங்கள் வளர்வதற்கும் அடிப்படையாக உள்ளது.
2. மண்ணில் உள்ள கனிமங்கள், பயிர்கள் மற்றும் தாவரங்களை ஊட்டமாக வளரச் செய்கின்றன.
3. மண், பீங்கான்கள் மற்றும் மண் பொருள்கள் தயாரிக்க பயன்படுகிறது.
4. மண், இயற்கை முறையில் நீரை வடிகட்டவும் சுத்திகரிக்கவும் பயன்படுகிறது.
5. கைவினைப் பொருள்கள் மற்றும் கட்டுமான வேலைப்பாடுகளுக்கு மண் ஆதாரமாக உள்ளது.
A) அனைத்தும் சரி
B) 1, 3, 5 சரி
C) 2, 3, 4 சரி
D) 1, 3, 4, 5 சரி
பொருத்துக.
1. கிரானைட் i) அடிப்பாறை
2. மண் அடுக்கு ii) அடியாழப் பாறைகள்
3. பாரன் தீவு iii) பட்டைப் பயிரிடல் வேளாண்மை
4. மண் வளப் பாதுகாப்பு iv) செயல்படும் எரிமலை
A) ii i iv iii
B) ii i iii iv
C) iv iii ii i
D) iii iv ii i
பொறுத்துக.
1. பசால்ட் (கருங்கல்) i) ஆந்த்ரசைட்
2. சுண்ணாம்புப் பாறை ii) வெளிப்புற தீப்பாறைகள்
3. நிலக்கரி iii) உருமாறியப் பாறைகள்
4. ஜெனிஸ் (நைஸ்) iv) படிவுப் பாறைகள்
A) iii iv i ii
B) ii iv i iii
C) iii i ii iv
D) iii i iv ii
தவறான கூற்றைத் தேர்ந்தெடு.
A) மண்ணரிப்பு மண் வளத்தை குறைக்கிறது.
B) இயக்க உருமாற்றம் அதிக வெப்பத்தினால் உருவாகிறது.
C) மண் ஒரு புதுப்பிக்கக் கூடிய வளம்.
D) இலை மக்குகள் மேல் மட்ட மண்ணின் ஒரு பகுதியாகும்.
(குறிப்பு: இயக்க உருமாற்றம் அதிக அழுத்தத்தினால் உருவாகிறது.)
தவறான கூற்றைத் தேர்ந்தெடு.
A) தீப்பாறைகள் முதன்மைப் பாறைகள் என்று அழைக்கப்படுகிறது.
B) பாறைகள் வானிலை சிதைவினால் மண்ணாக உறுமாறுகிறது.
C) படிவுப் பாறைகள் கடினமான தன்மை கொண்டவை.
D) தக்காண பீடபூமி பகுதிகள் தீப்பாறைகளால் உருவானவை.
(குறிப்பு: படிவுப்பாறைகள் மென் தன்மை கொண்டவை.)