Tnpsc General Tamil Previous Question Paper 8
Tnpsc General Tamil Previous Question Paper 8: Tnpsc Aspirants can use this opportunity to check Tnpsc General Tamil Previous Question Papers For Tnpsc Exam Preparation. General Tamil Previous Question Papers For Tnpsc With Answers Pdf Online Test Quiz is now free to download from our winmeen.com site. Now Tamil Eligibility Test is mandatory for all Tnpsc and Tamilnadu government exams. So these Tnpsc Pothu Tamil Previous Questions are very useful for your preparation. It is also useful to Unit 8 – Tamilnadu History Culture Part.
1. பொருளுக்கு ஏற்ற பொருத்தமான உவமையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:
“காத்திருந்து ஏமாந்து போவது”
(அ) மழைமுகம் காணாப் பயிர் போல
(ஆ) இலவு காத்த கிளி போல
(இ) அனலிடைப்பட்ட புழு போல
(ஈ) கிணற்றுத் தவளை போல
விடை மற்றும் விளக்கம்
(ஆ) இலவு காத்த கிளி போல
விளக்கம்:
உவமை பொருள்
“இலவுகாத்த கிளி போல” ஏமாற்றம்
“மழைமுகம் காணாப்பயிர் போல” வாட்டம்
“அனலிடைப்பட்ட புழு போல” வேதனை
“கிணற்றுத் தவளை போல” அறியாமை
2. “தீண்டிற்று” என்ற வினைமுற்றுச் சொல்லின் வேர்ச்சொல்லைத் தேர்க:
(அ) தீண்
(ஆ) தீண்டி
(இ) தீ
(ஈ) தீண்டு
விடை மற்றும் விளக்கம்
(ஈ) தீண்டு
விளக்கம்:
தீண்டு-வேர்ச்சொல்.
தீண்டிய-பெயரரெச்சம்.
தீண்டி- வினையெச்சம்
தீண்டீற்று, தீண்டினான்-வினைமுற்றுகள்
தீண்டியவள்-வினையாலணையும் பெயர்
தீண்டுதல்-தொழிற்பெயர்
3. இரண்டு அடி முதல் பன்னிரண்டு அடி வரை வரும் பா
(அ) வெண்பா
(ஆ) ஆசிரியப்பா
(இ) வஞ்சிபா
(ஈ) கலிப்பா
விடை மற்றும் விளக்கம்
(அ) வெண்பா
விளக்கம்:
வெண்பா – இரண்டடிக்குக் குறையாமல் பன்னிரண்டு அடிகளுக்கு மிகாமல் அமையும்.
ஆசிரியப்பா- மூன்றடிக்குக் குறையாமல் எத்தனை அடிகள் வேண்டுமானாலும் பெற்றுவரும்
வஞ்சிப்பா – மூன்றடி சிறுமை கொண்டு பல அடிகளில் அமையும்.
கலிப்பா – நான்கு சீர் அடியாய் அமையும்.
4. Whats App” என்ற சொல், பார்க்கவும் கேட்கவும் படிக்கவுமான மின்னஞ்சல் குறுஞ்செய்தி வசதியை முனைவர் ம.இராசேந்திரன் ———– என மொழி பெயர்த்துள்ளார்.
(அ) தூதலாவி
(ஆ) கட்செவி அஞ்சல்
(இ) எண்ணா நகலி
(ஈ) தூது செயலி
விடை மற்றும் விளக்கம்
(ஆ) கட்செவி அஞ்சல்
5. ஒற்றளபெடையில் அளபெடுக்கும் மெய் எழுத்துகளின் எண்ணிக்கை
(அ) 8
(ஆ) 10
(இ) 11
(ஈ) 12
விடை மற்றும் விளக்கம்
(இ) 11
விளக்கம்:
ஒற்றளபெடை: செய்யுளில் ஓசை குறையுமிடத்தில் ஒற்றெழுத்துகள் மிக்கு ஒலிப்பதே ஒற்றளபெடையாகும். ஒற்றளபெடையில் மிக்கு ஒலிக்கும் எழுத்துகள் மொத்தம்-11.
அவையாவன: ங,ஞ,ண,ந,ம,ன,வ,ய,ல,ள மற்றும்ஃ
எ.கா: ”மடங்ங் கலந்த மனனே
விடங்ங் கலந்தானை வேண்டு”
“கண்ண கருவிளை கார்முல்லை கூரெயிறு பொன்ன் பொறிகணங்கு போழ்வா யிலவம்பூ”
6. சரியான விடையைத் தேர்வு செய்க.
(அ) இயல், இசை, நாடகம் முதலான முத்தமிழை வளர்த்தல் வேண்டும்
(ஆ) இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழை வளர்த்தல் வேண்டும்
(இ) இயல், இசை, நாடகம் முதலிய முத்தமிழை வளர்த்தல் வேண்டும்.
(ஈ) இயல், இசை, நாடகம் போன்ற முத்தமிழை வளர்த்தல் வேண்டும்
விடை மற்றும் விளக்கம்
(ஆ) இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழை வளர்த்தல் வேண்டும்
விளக்கம்:
ஒரு தொகுப்பில் உள்ளவற்றில் அதனோடு தொடர்புடைய அனைத்தையும் முழுமையாகச் சுட்டும் போது “ஆகிய” என்னும் சொல்லைப் பயன்படுத்த வேண்டும்.
முழுமையாகச் சுட்டாத போது “முதலிய” என்னும் சொல்லைப் பயன்படுத்தவேண்டும்.
7. கோடிட்ட இடத்தில் உரிய விடையைத் தேர்ந்து எழுதுக:
“கூம்பு” என்பது —– பெயர் ஆகும்.
(அ) அளவுப்பண்பு
(ஆ) சுவைப்பண்பு
(இ) வடிவப்பண்பு
(ஈ) நிறப்பண்பு
விடை மற்றும் விளக்கம்
(இ) வடிவப்பண்பு
விளக்கம்:
பண்பை உணர்த்தும் பெயர் பண்புப்பெயர் ஆகும். நிறம், சுவை, அளவு, வடிவம் ஆகியவற்றின் அடிப்படையில் தோன்றும்.
வடிவப் பண்பு – கூம்பு, வட்டம், சதுரம், செவ்வகம், கோளம், முக்கோணம்.
நிறப்பண்பு-வெண்மை, கருமை, செம்மை.
அளவுப்பண்பு-ஒன்று நாழி, உழக்கு, அரை, முக்கால்.
சுவைப்பண்பு-காரம், இனிப்பு, கசப்பு.
8. ஆற்றுவார் – அசை பிரித்துக் காட்டுதலில் சரியான விடையைத் தேர்ந்தெடு.
(அ) ஆற்+று+வார்
(ஆ) ஆற்+றுவார்
(இ) ஆற்று+வார்
(ஈ) ஆ+ற்று+வார்
விடை மற்றும் விளக்கம்
(ஆ) ஆற்+றுவார்
விளக்கம்:
சீர் அசை வாய்ப்பாடு
ஆற்/றுவார் நேர், நிரை கூவிளம்
9. கீழ்க்காணும் சொற்களுள் குற்றியலுகரம் அல்லாத சொல்லைத் தேர்ந்தெடு.
(அ) சுக்கு
(ஆ) சார்பு
(இ) உண்ணு
(ஈ) அரசு
விடை மற்றும் விளக்கம்
(இ) உண்ணு
விளக்கம்:
வல்லின மெய் எழுத்துகள் (க்,ச்,ட்,த்,ப்,ற்) மீது ஊர்ந்து வரும் உகரம் குற்றியலுகரமாகும். சுக்கு—க்+உ;
சார்பு—ப்+உ
அரசு—ச்+உ;
ஆனால் உண்ணு—ண்+உ
“ண்” மெல்லின மெய்யெழுத்தாகும்.
10. பொருள்கோள் வகைகளின் எண்ணிக்கை
(அ) 4
(ஆ) 6
(இ) 8
(ஈ) 10
விடை மற்றும் விளக்கம்
(இ) 8
விளக்கம்:
பொருள்கோள் எட்டு வகைப்படும்.
1.யாற்றுநீர்ப் பொருள்கோள். 2.மொழிமாற்றுப் பொருள்கோள். 3.நிரல் நிறைப்பொருள்கோள். 4.பூட்டுவிற் பொருள்கோள். 5.தாப்பிசைப் பொருள்கோள். 6.அளைமறிப் பாப்புப் பொருள்கோள். 7.கொண்டுகூட்டுப் பொருள்கோள். 8.அடிமறி மாற்றுப் பொருள்கோள்.
General Tamil Previous Questions Pdf
11. “அன்னபூரணி” எனும் புதின ஆசிரியர்
(அ) ஜெயகாந்தன்
(ஆ) அகிலன்
(இ) வைரமுத்து
(ஈ) க.சச்சிதானந்தன்
விடை மற்றும் விளக்கம்
(ஈ) க.சச்சிதானந்தன்
விளக்கம்:
க.சச்சிதானந்தன்: யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள பருத்தித்துறை இவரது ஊராகும். ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் விரிவுரையாளாராகப் பணியாற்றினார். தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் புலமை பெற்றிருந்தார்.
படைப்புகள்: ஆனந்தத்தேன் (கவிதைத் தொகுதி), அன்னபூரணி (புதினம்), யாழ்ப்பாணக் காவியம்.
ஆசிரியர்: மகாவித்துவான் நவநீதக் கிருட்டிண பாரதியார்..
12. பொருத்துக:
நூல் புலவர்
1. தமிழியக்கம் – 1. பாரதியார்
2. சீட்டுக்கவி – 2. தோலாமொழித்தேவர்
3. சேக்கிழார் பிள்ளைத்தமிழ் – 3. பாரதிதாசன்
4. சூளாமணி – 4. மகா வித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை
அ ஆ இ ஈ
(அ) 1 2 3 4
(ஆ) 2 4 1 3
(இ) 3 1 4 2
(ஈ) 4 3 2 1
விடை மற்றும் விளக்கம்
(இ) 3 1 4 2
13. பொருத்துக:
நூல் புலவர்
1. பெரியபுராணம் – 1. திருத்தக்கத்தேவர்
2. இராமாயணம் – 2. உமறுப்புலவர்
3. சீறாப்புராணம் – 3. சேக்கிழார்
4. சீவகசிந்தாமணி – 4. கம்பர்
அ ஆ இ ஈ
அ. 3 4 2 1
ஆ. 2 4 3 1
இ. 4 2 1 3
ஈ. 3 2 4 1
விடை மற்றும் விளக்கம்
அ. 3 4 2 1
14. பொருத்துக
அ. வீரகாவியம் – 1. நா.காமராசன்
ஆ. இயேசு காவியம் – 2. சிற்பி பாலசுப்ரமணியம்
இ. ஒளிப்பறவை – 3. கண்ணதாசன்
ஈ. சகாராவைத் தாண்டாத ஒட்டகங்கள் – 4. முடியரசன்
அ ஆ இ ஈ
(அ) 4 3 2 1
(ஆ) 3 2 1 4
(இ) 2 1 4 3
(ஈ) 1 2 3 4
விடை மற்றும் விளக்கம்
(அ) 4 3 2 1
15. எச்.ஏ.கிருட்டிணனாருக்கு இலக்கணம் கற்பித்த ஆசிரியர் பெயர்
(அ) மாணிக்கவாசகத் தேவர்
(ஆ) சங்கர நாராயணர்
(இ) பிலவண சோதிடர்
(ஈ) தெய்வநாயகி
விடை மற்றும் விளக்கம்
(அ) மாணிக்கவாசகத் தேவர்
விளக்கம்:
எச்.ஏ.கிருட்டிணனாரின் ஆசிரியர்கள்:
தமிழிலக்கியங்கள்-கிருட்டிணாரின் தந்தை சங்கர நாராயணர்.
இலக்கணங்கள்-மாணிக்கவாசகத் தேவர்.
வடமொழி-பிலவணச் சோதிடர்.
16. சூடாமணி நிகண்டு-ஆசிரியர்
(அ) திவாகர முனிவர்
(ஆ) பிங்கலம்
(இ) வீரமண்டல புருடர்
(ஈ) காங்கேயர்
விடை மற்றும் விளக்கம்
(இ) வீரமண்டல புருடர்
விளக்கம்:
சூடமணி நிகண்டு என்னும் நூல் 16-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வீரமண்டல புருடர் என்னும் சமணரால் இயற்றப்பட்டது. இந்நூல் 12 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, விருத்தப்பாவால் ஆன நூல் ஆகும். இதில் 1197 சூத்திரங்களில் 11,000 சொற்களுக்கு விளக்கம் தரப்பட்டுள்ளது.
17. “மொழிகளின் காட்சிச் சாலை இந்தியா” – இக்கூற்று யாருடையது?
(அ) பேராசிரியர் ச.அகத்தியலிங்கம்.
(ஆ) பேராசிரியர் பெ.சுந்தரம் பிள்ளை
(இ) பேராசிரியர் சாலை.இளந்திரையன்
(ஈ) பேராசிரியர் சாலமன் பாப்பையா
விடை மற்றும் விளக்கம்
(அ) பேராசிரியர் ச.அகத்தியலிங்கம்.
விளக்கம்:
இந்திய நாட்டில் 1300-க்கும் மேற்பட்ட மொழிகளும் அதன் கிளை மொழிகளும் பேசப்பட்டு வருகின்றன. ஆதலால் இந்திய நாட்டை “மொழிகளின் காட்சி சாலை” என்று குறிப்பிட்டுள்ளார். மொழியியல் பேராசிரியர்.ச.அகத்தியலிங்கம்.
18. பொருத்துக
அ. மூதுரை 1.சிவப்பிரகாசர்
ஆ. வெற்றிவேற்கை 2. முனைப்பாடியார்
இ. நன்னெறி 3. அதிவீரராம பாண்டியர்
ஈ.அறநெறிச்சாரம் 4. ஒளவையார்
அ ஆ இ ஈ
(அ) 4 3 1 2
(ஆ) 2 3 1 4
(இ) 3 4 2 1
(ஈ) 4 1 2 3
விடை மற்றும் விளக்கம்
(அ) 4 3 1 2
19. “மத்தவிலாசம்” – என்னும் நாடக நூலை எழுதியவர்
(அ) இராஜஇராஜ சோழன்
(ஆ) இராஜேந்திரன் சோழன்
(இ) நந்தவர்மன்
(ஈ) மகேந்திரவர்மன்
விடை மற்றும் விளக்கம்
(ஈ) மகேந்திரவர்மன்
விளக்கம்:
முதலாம் மகேந்திரவர்மன்
மத்தவிலாச பிரகசனம் என்ற நாடக நூலை பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மன் எழுதினார். மேலும் இவர் இசையில் வல்லவர் என்பதால் “சங்கீர்ணசாதி” என்ற சிறப்புப் பெயரையும், ஓவியத்தில் வல்லவர் என்பதால் “சித்திரகாரப்புலி” என்ற சிறப்புப் பெயரையும் பெற்றுள்ளார்.
“தட்சணசித்திரம்” என்ற ஓவிய நூலுக்கு இம்மன்னன் எரை எழுதியுள்ளார்.
20. பாரதிதாசன் நூல்களில் பொருந்தாத நூல்
(அ) குடும்பவிளக்கு
(ஆ) பாண்டியன் பரிசு
(இ) இருண்ட வீடு
(ஈ) கள்ளோ? காவியமோ?
விடை மற்றும் விளக்கம்
(ஈ) கள்ளோ? காவியமோ?
விளக்கம்:
கள்ளோ? காவியமோ? – மு.வரதராசனார்
21. “ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே”
– எனும் பாடலடிகள் இடம்பெற்ற நூல்
(அ) குறுந்தொகை
(ஆ) புறநானூறு
(இ) பதிற்றுப்பத்து
(ஈ) பத்துப்பாட்டு
விடை மற்றும் விளக்கம்
(ஆ) புறநானூறு
விளக்கம்:
புறநானூறு —312ஆம் பாடல்
“ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே;
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே;
வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே;
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே;
ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கி, களிறு எறிந்து
பெயர்தல் காளைக்குக் கடனே.
ஆசிரியர்:பொன்முடியார்.
திணை:வாகை.
துறை:மூதின்முல்லை
22. “மேற்கணக்கு நூல்கள்” என்று அழைக்கப்படுபவை
(அ) எட்டுத் தொகையும் பத்துப்பாட்டும்
(ஆ) நீதி இலக்கியம்
(இ) பக்தி இலக்கியம்
(ஈ) இக்கால இலக்கியம்
விடை மற்றும் விளக்கம்
(அ) எட்டுத் தொகையும் பத்துப்பாட்டும்
விளக்கம்:
மேற்கணக்கு நூல்கள்: எட்டுத்தொகை, பத்துப்பாட்டு.
எட்டுத்தொகை – நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், அகநானூறு, புறநானூறு, கலித்தொகை. (பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு புலவர்களால் பாடப்பட்டவை)
பத்துப்பாட்டு:
நூல் ஆசிரியர்
திருமுருகாற்றுப்படை 1.நக்கீரர்
பொருநராற்றுப்படை 2. முடத்தாமக் கண்ணியார்
பெரும்பாணாற்றுப்படை 3. கடியலூர் உருத்திரங்கண்ணனார்
சிறுபாணாற்றுப்படை 4. நல்லூர் நத்தத்தனார்
மலைபடுகடாம் (அ) கூத்தராற்றுப்படை 5. பெருங்கௌசிகனார்
முல்லைப்பாட்டு 6. நப்பூதனார்
குறிஞ்சிப்பாட்டு 7. கபிலர்
பட்டினப்பாலை 8. கடியலூர் உருத்திரங்கண்ணனார்
நெடுநல்வாடை 9. நக்கீரர்
மதுரைக்காஞ்சி 10. மாங்குடி மருதனார்
23. ஐராவதீசுவரர் கோயிலைக் கட்டிய அரசன்
(அ) இரண்டாம் இராசராசன்
(ஆ) இராசேந்திரன்
(இ) குலோத்துங்கன்
(ஈ) கிள்ளி வளவன்
விடை மற்றும் விளக்கம்
(அ) இரண்டாம் இராசராசன்
விளக்கம்:
கும்பகோணத்தின் தென்புறம் பாயும் நதி அரிசிலாறு (அரசலாறு) ஆகும். அரிசிலாற்றின் தென்கரையில் தாரசுரம் உள்ளது. அங்குள்ள ஐராவதீசுவரர் ஆலயத்தை இரண்டாம் இராசராச சோழன் கட்டினார். யுனெஸ்கோ இக்கோயிலை மரபு அடையாளச் சின்னமாக அறிவித்துள்ளது.
24. பறவைகள் இடம்விட்டு இடம் பெயர்வதை ———- என்பர்.
(அ) இடம் பெயர்தல்
(ஆ) புலம் பெயர்தல்
(இ) வலசை போதல்
(ஈ) ஊர்விட்டு ஊர் செல்லல்
விடை மற்றும் விளக்கம்
(இ) வலசை போதல்
விளக்கம்:
பருவநிலை மாற்றத்தால் பறவைகள் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குச் செல்வது “வலசை போதல்” என அழைக்கப்படுகிறது.
25. சிறுபஞ்சமூலத்தில் கடவுள் வாழ்த்துடன் எத்தனை வெண்பாக்கள் உள்ளன?
(அ) தொண்ணூறு
(ஆ) தொண்ணூற்றேழு
(இ) நூறு
(ஈ) ஐம்பது
விடை மற்றும் விளக்கம்
(ஆ) தொண்ணூற்றேழு
விளக்கம்:
சிறுபஞ்சமூலம் என்ற நூலை எழுதியவர் காரியாசான். இவர் சமண சமயத்தைச் சார்ந்தவர். கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சில் ஆகியவற்றின் வேர்கள் சேர்ந்து மருந்தாகி நோய்களைத் தீர்ப்பது போல, இந்நூற் பாடல் ஒவ்வொன்றிலும் அமைந்துள்ள ஐந்தைந்து அரிய கருத்துகள் ஒவ்வொருவரின் கடமைகளைக் கூறுகின்றன. கடவுள் வாழ்த்துடன் சேர்த்து 97 பாடல்கள் உள்ளன.
26.”நவ்வி” எனும் சொல்லின் பொருள்
(அ) மான்
(ஆ) நாய்
(இ) நரி
(ஈ) செந்நாய்
விடை மற்றும் விளக்கம்
(அ) மான்
27. தமிழில் காணும் முதல் சித்தர்
(அ) திருமூலர்
(ஆ) அருணகிரிநாதர்
(இ) தாயுமானவர்
(ஈ) வள்ளலார்
விடை மற்றும் விளக்கம்
(அ) திருமூலர்
28. பொருத்துக:
அ. வண்டு – 1.குனுகும்
ஆ. புறா – 2. அலப்பும்
இ. பூனை – 3. முரலும்
ஈ. குரங்கு – 4. சீறும்
அ ஆ இ ஈ
அ. 3 1 4 2
ஆ. 1 2 4 3
இ. 2 4 3 1
ஈ. 4 3 2 1
விடை மற்றும் விளக்கம்
அ. 3 1 4 2
29. தென்னாப்பிரிக்க நாட்டில் இந்தியரின் நலனுக்காகப் போராடிய வீரத்தமிழ் மங்கை
(அ) ஈ.வெ.ரா.மணியம்மை
(ஆ) கஸ்தூரிபாய்
(இ) வேலுநாச்சியார்
(ஈ) தில்லையாடி வள்ளியம்மை
விடை மற்றும் விளக்கம்
(ஈ) தில்லையாடி வள்ளியம்மை
விளக்கம்:
தில்லையாடி வள்ளியம்மை:
தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்த இந்தியர்கள் காந்தியடிகளின் தலைமையில் தமது வாழ்வுரிமையை மீட்க அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர். அவரது வீரம் செறிந்த உரையால் ஈர்க்கப்பட்டு சிறுமி வள்ளியம்மை தம் இளம் வயதிலேயே அறப்போராட்டத்தில் பங்கேற்று அதன் விளைவாக சிறை சென்றார். சிறையில் அனுபவித்த கொடுமைகளால் உடல்நலம் பாதிக்கப்பட்டு தம் 16-வது அகவையில் (1913, பிப்ரவரி 22) மரணமடைந்தார்.
தென்னாப்பிரிக்க சத்தியாகிரகம் என்ற தமது நூலில் காந்தியடிகள், “தென்னாப்பிரிக்க வரலாற்றில் வள்ளியம்மையின் பெயர் என்றும் நிலைத்து நிற்கும்” என்று கூறியுள்ளார்.
30. மணிமேகலையில் உள்ள காதைகளின் எண்ணிக்கை
(அ) 10
(ஆ) 20
(இ) 30
(ஈ) 40
விடை மற்றும் விளக்கம்
(இ) 30
விளக்கம்:
மணிமேகலை, ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றாகும். கோவலன்-மாதவி ஆகியோரின் மகளாகிய மணிமேலையின் வரலாற்றைக் கூறும் காப்பியமாதலின், இந்நூல் இப்பெயர் பெற்றது. “மணிமேகலை துறவு” என்றும் இது வழங்கப்பெறும். மணிமேகலையும், சிலப்பதிகாரமும் ஒரே கதைத் தொடர்புடையன. எனவே, இவை “இரட்டைக்காப்பியங்கள்” என வழங்கப்பெறும். இது 30 காதைகளை உடையது. இதன் ஆசிரியர் சீத்தலைச் சாத்தனார்
31. பொருந்தாத ஒன்றைக் கண்டுபிடி.
(அ) யசோதர காவியம்
(ஆ) நாககுமார காவியம்
(இ) உதயணகுமார காவியம்
(ஈ) வளையாபதி
விடை மற்றும் விளக்கம்
(ஈ) வளையாபதி
விளக்கம்:
யசோதர காவியம், நாக குமார காவியம், உதயண குமார காவியம், சூளாமணி, நீலகேசி ஆகியவை ஐஞ்சிறு காப்பியங்களாகும்.
வளையாபதி-ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றாகும்.
32. “செல்வத்துப் பயனே ஈதல்” – எனும் தொடர் இடம் பெற்றுள்ள நூல்
(அ) திருக்குறள்
(ஆ) பரிபாடல்
(இ) பதிற்றுப்பத்து
(ஈ) புறநானூறு
விடை மற்றும் விளக்கம்
(ஈ) புறநானூறு
விளக்கம்:
புறநானூறு 189-ஆம் பாடல்
“தென்கடல் வளாகம் பொதுமை இன்றி
வெண்குடை நிழற்றிய ஒருமையோர்க்கும்
நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
கடுமாப் பார்க்கும கல்லா ஒருவற்கும்
உண்பது நாழி; உடுப்பவை இரண்டே;
பிறவும் எல்லாம் ஓர் ஒக்குமே;
செல்வத்துப் பயனே ஈதல்;
துய்ப்போம் எனினே, தப்புரு பலவே”
ஆசிரியர்-மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்.
திணை-பொதுவியல்.
துறை-பொருண்மொழிக்காஞ்சி
33. “தேவார மூவர்” எனப்படுவோர்
(அ) திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், மணிவாசகர்
(ஆ) அப்பர், சுந்தரர், மணிவாசகர்
(இ) நம்பி ஆரூரன், மணிவாசகர், திருநாவுக்கரசர்
(ஈ) சம்பந்தர், அப்பர், சுந்தரர்
விடை மற்றும் விளக்கம்
(ஈ) சம்பந்தர், அப்பர், சுந்தரர்
விளக்கம்:
தேவார மூவர் – அப்பர், சுந்தரர், சம்பந்தர்.
இம்மூவரும் பாடிய பதிகங்கள் அடங்கிய தொகுப்பு “தேவாரம்” எனப்படுகிறது. “அப்பர்” என அழைக்கப்படுகின்ற திருநாவுக்கரசர் பதிகங்கள் 370 என்று திருமுறை கண்ட புராணம் கூறுகிறது. ஆயினும் தற்பொழுது 312 பதிகங்கள் கிடைத்துள்ளன.
திருஞானசம்பந்தர் எழுதிய பதிகங்கள் ஏட்டுச் சுவடிகளின் மூலம் 383 மற்றும் திருவிடைவாய் கல்வெட்டு மூலம் ஒன்று என 384 கிடைத்துள்ளன. சுந்தரர் பதிகங்கள் 100. ஆகவே தற்போது கிடைத்துள்ள மூவர் திருப்பதிகங்களின் தொகை 796 ஆகும். இவற்றின் பாடல்கள் எண்ணிக்கை 8250 ஆகும்.சிறப்புப் பெயர்கள்:
திருநாவுக்கரசர்-ஆளுடைய அரசு.
சுந்தரர்-ஆளுடைய நம்பி.
திருஞான சம்பந்தர்-ஆளுடைய பிள்ளை
34. “ஊக்கம் உடையான் ஒடுக்கம்” எதைப் போன்றது?
(அ) பதுங்கும் புலி
(ஆ) வளைந்து நிற்கும் வில்
(இ) பின்வாங்கி நிற்கும் ஆடு
(ஈ) சீறும் பாம்பு
விடை மற்றும் விளக்கம்
(இ) பின்வாங்கி நிற்கும் ஆடு
விளக்கம்:
“ஊக்கம் முடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து”
திருக்குறள்-49-வது அதிகாரம்(காலம் அறிதல்)
குறள் எண்-486,
பிரிவு – பொருட்பால்.
இயல் – அரசியல்.
பொருள்: மிகுந்த தைரியம் உடையவன், ஒரு காரியத்தைச் செய்யக் காலத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பது, ஆட்டுக்கடா தன் பகையைத் தாக்குவதற்கு பின்வாங்கும் தன்மை போலாகும்.
பொருதகர்-ஆட்டுக்கடா;
பேருந்தகைத்து-பின்வாங்கும் தன்மை.
35. “தமிழ் மாதின் இனிய உயிர்நிலை” எனப்போற்றப்படும் நூல்.
(அ) கம்பராமாயணம்
(ஆ) சிலப்பதிகாரம்
(இ) திருக்குறள்
(ஈ) நாலடியார்
விடை மற்றும் விளக்கம்
(இ) திருக்குறள்
36. ஞாலத்தின் மாணப்பெரிது
(அ) எதிர்பாராமல் செய்யப்படும் உதவி
(ஆ) பயனை எதிர்பார்த்துச் செய்யும் உதவி
(இ) தகுந்த நேரத்தில் செய்யப்படும் உதவி
(ஈ) பயனை எதிர்பாராமல் செய்த உதவி
விடை மற்றும் விளக்கம்
(இ) தகுந்த நேரத்தில் செய்யப்படும் உதவி
விளக்கம்:
“காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது”
திருக்குறள்-11-ஆவது அதிகாரம் (செய்ந்ந்ன்றியறிதல்).
குறள் எண்-102,
பிரிவு-அறத்துப்பால்.
இயல்-இல்லறவியல்.
பொருள்:தகுந்த காலத்தில் செய்த உதவி சிறிதளவாக இருப்பினும் அதன் தன்மை உலகத்தை விடப் பெரியதாகும்.
37. “பரணிக்கோர் சயங்கொண்டான்” என்று கலிங்கத்துப் பரணியை இயற்றிய புலவரைப் புகழ்ந்தவர்
(அ) பலபட்டடைச் சொக்கநாதர்
ஆ) குமரகுருபரர்
(இ) தாயுமானவர்
(ஈ) இராமலிங்கர்
விடை மற்றும் விளக்கம்
(அ) பலபட்டடைச் சொக்கநாதர்
விளக்கம்:
கலிங்கத்துப்பரணியை இயற்றியவர் ஜெயங்கொண்டார் ஆவார். தமிழ் இலக்கியத்தில் முதன் முதலாகப் “பரணி” பாடிய பெருமைக்குரியவர் ஆவார். “பரணி” என்பது 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்றாகும். இவரை “பரணிக்கோர் ஜெயங்கொண்டார்” எனப் பலப்பட்டடைச் சொக்கநாதப் புலவர் பாராட்டியுள்ளார்.
“பலபட்டடைக் கணக்கு” என்னும் பணியினை இவரின் முன்னோர் செய்தமையால் “பலபட்டடை” எனும் அடைமொழி இவர் பெயருடன் இணைந்தது. இவர் எழுதிய நூல்களாவன: அழகர் கிள்ளைவிடு தூது, மும்மணிக் கோவை, யமகவந்தாதி, தேவையுலா, தென்றல் விடு தூது, வளைமடல் போன்றவையாகும்.
38. “உலா” எனும் சிற்றிலக்கியம் பாடப்பெறும் பாவகை
(அ) கலிவெண்பா
(ஆ) ஆசிரியப்பா
(இ) விருத்தப்பா
(ஈ) வஞ்சிப்பா
விடை மற்றும் விளக்கம்
(அ) கலிவெண்பா
விளக்கம்:
“உலா” என்பது 96 வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்றாகும். இறைவனையோ, அரசனையோ, மக்களுள் சிறந்தவரையோ பாட்டுடைத் தலைவானகாகக் கொண்டு அவர்கள வீதியில் உலா வரும்போது ஏழு பருவத்தைச் சேர்ந்த பெண்களும் காதல் கொள்வதாய்க் கலிவெண்பாவால் பாடப்படுவது “உலா” ஆகும்.
39. பிறமொழிச் சொற்களை நீக்கித் தூய தமிழில் உள்ளதை எழுதுக.
(அ) நீதான் என் அத்யந்த ஸ்நேகிதன் என்று கூறிச் சந்தோஷித்தான்
(ஆ) நீதான் என் நெருங்கிய நண்பன் என்று கூறி மகிழ்ச்சி அடைந்தான்
(இ) நீதான் என் அத்யந்த நண்பன் என்று கூறிச் சந்தோஷம் அடைந்தான்
(ஈ) நீதான் என் அத்யந்த நண்பன் என்று கூறி சந்தோஷப்பட்டான்
விடை மற்றும் விளக்கம்
(ஆ) நீதான் என் நெருங்கிய நண்பன் என்று கூறி மகிழ்ச்சி அடைந்தான்
40. பருப்பு உள்ளதா? – இது எவ்வகை வினா?
(அ) கொளல் வினா
(ஆ) கொடை வினா
(இ) ஐய வினா
(ஈ) ஏவல் வினா
விடை மற்றும் விளக்கம்
(அ) கொளல் வினா
விளக்கம்:
பொருள் வாங்கும் பொருட்டு கேட்பது கொளல் வினாவாகும்.
இல்லாதவர்க்கு கொடுக்கும் பொருட்டு கேட்பது கொடை வினாவாகும்.
ஒரு வேலையை முடிக்கும் பொருட்டு கேட்பது ஏவல் வினாவாகும்.
சந்தேகத்தை தீர்த்துக் கொள்ள கேட்பது ஐயவினாவாகும்.
41. அகர வரிசையில் அமைக்கப்பட்டுள்ளதை எழுதுக.
(அ) பாட்டு, பட்டு, பையன், பௌவம்
(ஆ) பட்டு, பாட்டு, பௌவம், பையன்
(இ) பையன், பௌவம், பட்டு, பாட்டு
(ஈ) பட்டு, பாட்டு, பையன், பௌவம்
விடை மற்றும் விளக்கம்
(ஈ) பட்டு, பாட்டு, பையன், பௌவம்
42. பின்வருவனற்றைப் பொருத்துக.
(அ) வினைப்பயன் விளiயுங்காலை – 1.பத்துவகைக்குற்றங்களின் பயன்
உயிர்கட்கு
(ஆ) மக்கள், தேவர், பிரமர், நரகர், விலங்கு, பேய் – 2.பத்தின் நீங்கித் தானம், சீலம், என்று
தாங்குவது
(இ) தீவினை என்பது – 3.மனப்பேரின்பமும், கவலையும் காட்டும்
(ஈ) நல்வினை என்பது – 4. அலகில பல்லுயிர் அறுவகைத்தாகும்
அ ஆ இ ஈ
(அ) 1 3 2 4
(ஆ) 3 4 1 2
(இ) 2 1 3 4
(ஈ) 3 2 1 4
விடை மற்றும் விளக்கம்
(ஆ) 3 4 1 2
விளக்கம்:
மணிமேகலை-ஆபுத்திரன் நாடு அடைந்த காதை. 18-ஆம் பாடல் (பிறப்பும் வினையும்).
“உலகம் மூன்றிலும் உயிராம் உலகம்
அலகில; பல்லுயிர் அறுவகைத் தாகும்;
மக்களும், தேவரும், பிரமரும், நரகரும்,
தொக்க விலங்கும், பேயும் என்றே,
நல்வினை தீவினை என்றிரு வகையாற்
சொல்லப்பட்ட கருவினுள் தோன்றி
வினைப்பயன் வினையுங் காலை, உயிர்கட்கு
மனப்பே ரின்பமும் கவலையும் காட்டும்”
பொருள்: மூவுலகில் வாழும் எண்ணற்ற உயிர்கள் மக்கள், தேவர், பிரம்மர், நரகர், விலங்குத் தொகுதி பேய் என அறுவகைப்படும். அவை தாம் செய்த நல்வினை, தீவினையால் அறுவகைப்பட்ட உயிர்களுள் ஒன்றாகப் பிறக்கின்றன. அவ்வினைப் பயன்கள் உண்டாகும்போது பேரின்பங்களையும் துன்பங்களையும் அடைகின்றன.
43. “வருவையாகிய சின்னாள் வாழர வாதல்”
– இந்நற்றிணைப் பாடலில் “சின்னாள்” என்பது
(அ) சில நாள்
(ஆ) சிறுநாள்
(இ) சிறிய ஆள்
(ஈ) சின்ன ஆள்
விடை மற்றும் விளக்கம்
(அ) சில நாள்
விளக்கம்:
சின்னாள்-சில+நாள்
அ. “பல சில எனும் இவை தம்முன் பிறவரின் அகரம் விகற்பமாகலும்” என்ற விதிப்படி நிலைமொழி ஈற்றின் அகரம் கெட்டு சில்+நாள் என்றானது.
ஆ. “லள வேற்றுமையில் மெலிமேவின் னணவும்” என்ற விதிப்படி வருமொழி முதலில் மெல்லினம் (நா) வந்ததால் நிலைமொழி ஈற்றெழுத்தான லகரம், னகரமாகி னகரமாகி “சின்+நாள்” என்றானது.
இ. “னல முன் றனவு; ஆகும் தநக்கள்” என்ற விதிப்படி “ன”கர மெய் முன்வந்த “ந”கரம் “ன”கரமாகி “சின்னாள்” எனப் புணர்ந்தது.
44. திணையுடன் உரிப்பொருளைப் பொருத்துக:
(அ) குறிஞ்சி – 1. இருத்தலும் இருத்தல் நிமித்தமும்
(ஆ) முல்லை – 2. இரங்கலும் இரங்கல் நிமித்தமும்
(இ) மருதம் – 3. புணர்தலும் புணர்தல் நிமித்தமும்
(ஈ) நெய்தல் – 4. ஊடலும் ஊடல் நிமித்தமும்
அ ஆ இ ஈ
(அ) 1 3 2 4
(ஆ) 3 1 4 2
(இ) 4 2 1 3
(ஈ) 2 4 3 1
விடை மற்றும் விளக்கம்
(ஆ) 3 1 4 2
45. “ஐ” என்னும் சொல்லின் பொருள்
(அ) அரண்
(ஆ) சோலை
(இ) காவல்
(ஈ) தலைவன்
விடை மற்றும் விளக்கம்
(ஈ) தலைவன்
46. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.
(அ) சீப்பு, சங்கு, சைதை, சொல்
(ஆ) சங்கு, சீப்பு, சைதை, சொல்
(இ) சைதை, சொல், சீப்பு, சங்கு
(ஈ) சொல், சைதை, சங்கு, சீப்பு
விடை மற்றும் விளக்கம்
(ஆ) சங்கு, சீப்பு, சைதை, சொல்
47. காய்கனி – இதில் அமைந்துள்ள தொகைநிலைத் தொடரைக் கண்டறிக:
(அ) வினைத்தொகை
(ஆ) உம்மைத்தொகை
(இ) உவமைத்தொகை
(ஈ) பண்புத்தொகை
விடை மற்றும் விளக்கம்
(ஆ) உம்மைத்தொகை
விளக்கம்:
காய்கனி-உம்மைத்தொகை.
“உம்” என்ற விகுதி மறைந்து வந்தால் அஃது உம்மைத் தொகையாகும். “காயும் கனியும்” என்பதில் “உம்” விகுதி மறைந்து காய் கனி என அமைந்துள்ளது.
“காயும் கனியும்” என்று அமைந்திருந்தால் அஃது எண்ணும்மையாகும்.
48. நாற்கரணம் – சரியாகப் பிரிக்கப்பட்டிருப்பது எது?
(அ) நான்கு+அரணம்
(ஆ) நான்+கரணம்
(இ) நாண்+கரணம்
(ஈ) நான்கு+கரணம்
விடை மற்றும் விளக்கம்
(ஈ) நான்கு+கரணம்
விளக்கம்:
தமிழ் விடு தூது-96 வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்றாகும்.
“நல் ஏரினால் செய்யுள் நாற்கரணத் தேர்பூட்டி” மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்ற நான்கு கரணங்களையும் நல்ல ஏர்களாகக் கொண்டு என்பது பொருளாகும்.
நாற்கரணம்-நான்கு+கரணம்.
49. “அளவில் சனம் உளமனைய குளம் நிறைந்த வளமருவும்” தொடரில் அடிக்கோடிட்ட எழுத்துகள் குறிக்கும் தொடை
(அ) மோனை
(ஆ) முரண்
(இ) இயைபு
(ஈ) எதுகை
விடை மற்றும் விளக்கம்
(ஈ) எதுகை
விளக்கம்:
அடிதோறும் இரண்டாம் எழுத்து ஒன்றவருவது எதுகைத் தொகையாகும்.
50. திருக்குறளை இயற்றியவர் யார்? என ஆசிரியர் மாணவனிடம் கேட்பது
(அ) அறிவினா
(ஆ) ஐய வினா
(இ) அறியா வினா
(ஈ) கொளல் வினா
விடை மற்றும் விளக்கம்
(அ) அறிவினா
விளக்கம்:
தனக்குத் தெரிந்தது பிறருக்குத் தெரியுமா? என்பதை அறிந்து கொள்ள கேட்பது “அறிவினா” ஆகும்.
எ.கா:ஆசிரியர் மாணவனிடம் கேட்பது அறிவினாவாகும்.
தனக்குத் தெரியாததை பிறரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வதற்காக வினவுவது “அறியா வினா” ஆகும்.
எ.கா. மாணவன் ஆசிரியரிடம் கேட்பது
51. “திருச்செந்திற் கலம்பகம்” என்னும் நூலை இயற்றியவர்
(அ) ஞானதேசிகர்
(ஆ) ஈசான தேசிகர்
(இ) தெய்வசிகாமணி
(ஈ) முத்துகுமாரசாமி
விடை மற்றும் விளக்கம்
(ஆ) ஈசான தேசிகர்
விளக்கம்:
“திருச்செந்திற் கலம்பகம்” என்ற நூலை இயற்றியவர் சுவாமிநாத தேசிகர் ஆவார். இவரின் சிறப்புப் பெயர் ஈசான தேசிகர். இவர் ஏறத்தாழ 160 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்
52. பொருத்துக:
(அ) சொல்லின் செல்வர் – 1. திரு.வி.கல்யாண சுந்தரனார்
(ஆ) வசனநடை வல்லாளர் – 2. சாத்தனார்
(இ) தமிழ்த் தென்றல் – 3. ஆறுமுக நாவலர்
(ஈ) தண்டமிழ் ஆசான் – 4. ரா.பி.சேதுப்பிள்ளை
அ ஆ இ ஈ
அ. 3 2 4 1
ஆ. 2 4 1 3
இ. 4 3 1 2
ஈ. 1 2 4 3
விடை மற்றும் விளக்கம்
இ. 4 3 1 2
53. பொருத்துக
அ. தொன்னூல் விளக்கம் – 1. குமரகுருபரர்
ஆ. நாலடியார் – 2. பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்
இ. திருவேங்கடத்து அந்தாதி – 3. வீரமாமுனிவர்
ஈ. மதுரைக்கலம்பகம் – 4. சமண முனிவர்கள்
அ ஆ இ ஈ
அ. 4 2 3 1
ஆ. 3 4 2 1
இ. 2 1 3 4
ஈ. 4 3 1 2
விடை மற்றும் விளக்கம்
ஆ. 3 4 2 1
54. பொருத்துக:
அ. புத்தகச்சாலை – 1. வாணிதாசன்
ஆ. தீக்குச்சிகள் – 2. சுரதா
இ. சிக்கனம் – 3. பாரதிதாசன்
ஈ. காடு – 4. அப்துல் ரகுமான்
அ ஆ இ ஈ
அ. 2 1 3 4
ஆ. 3 2 4 1
இ. 3 4 2 1
ஈ. 2 3 1 4
விடை மற்றும் விளக்கம்
இ. 3 4 2 1
55. கரிகாலனின் முன்னோர் காற்றின் போக்கை அறிந்து கலம் செலுத்தினர் என்பதனைக் கூறும் நூல்
(அ) பதிற்றுப்பத்து
(ஆ) புறநானூறு
(இ) பரிபாடல்
(ஈ) நெடுநல்வாடை
விடை மற்றும் விளக்கம்
(ஆ) புறநானூறு
விளக்கம்:
புறநானூறு 66-வது பாடல்
“நளி இரு முந்நீர் நாவாய் ஓட்டி,
வளி தொழில் ஆண்ட உரவோன் மருக!
களி இயல் யானைக் கரிகால் வளவ!
சென்று, அமர்க் கடந்த நின் ஆற்றல்
தோன்ற
வென்றோய்! நின்னிலும் நல்லன் அன்றே –
கலி கொள் யாணர் வெண்ணிப் பறந்தலை,
மிகப் புகழ் உலகம் எய்தி,
புறப்புண் நாணி, வடக்கிருந்தோனே?”பாடியவர்-வெண்ணிக் குயத்தியார்.
பாடப்பெற்றவர்-கரிகாலச் சோழன்.
திணை-வாகை.
துறை-அரச வாகை.
பொருள்: நீர் செறிந்த பெரிய கடலிடத்தே மரக்கலம் செலுத்தியும். அது அசையாதபோது, காற்றினை ஏவல் கொண்டும் அமைந்த வலிமையை உடையவனின் வழித்தோன்றலே! மதம் பொருந்திய ஆண் யானையை உடைய கரிகால் வளவனே! போர் மேற்சென்று கொன்று நின்னாற்றல் தோன்றுமாறு வென்றாய்; குறைவுபடாது பெருகும் புதுவருவாயை உடைய வெண்ணியில், ஊர்ப்புறத்தின் போர்க்களத்தில் மிகப் புகழமைந்த உலகை விரும்பிப் பொருந்தியவனும், புறப்புண்ணிற்கு நாணி வடக்கிருந்தோனுமான பெருஞ்சேரலாதன் நின்னை விட நல்லன் அல்லனோ?
56. “சீடைக்காகச் சிலேட்டு பணயம்
முறுக்குக்காக மோதிரம் பணயம்
காப்பிக்காகக் கடுக்கன் பணயம்”
– இப்பாடலின் ஆசிரியர் யார்?
(அ) கவிமணி தேசிக விநாயகம்
(ஆ) கவிப்பேரரசு வைரமுத்து
(இ) கவிஞர் மு.மேத்தா
(ஈ) குழந்தைக்கவிஞர் அழ.வள்ளியப்பா
விடை மற்றும் விளக்கம்
(அ) கவிமணி தேசிக விநாயகம்
விளக்கம்:
கவிமணியின் “மருமக்கள் வழி மான்மியம்” என்ற கவிதையில் இப்பாடல் அமைந்துள்ளது
57. திரு.வி.கல்யாண சுந்தரனார் எழுதாத நூல்
(அ) முருகன் அல்லது அழகு
(ஆ) நாயன்மார் வரலாறு
(இ) தமிழ்நாடும் நம்மாழ்வாரும்
(ஈ) சத்தியவேத கீர்த்தனைகள்
விடை மற்றும் விளக்கம்
(ஈ) சத்தியவேத கீர்த்தனைகள்
விளக்கம்:
“சத்தியவேத கீர்த்தனைகள்” என்ற நூலின் ஆசிரியர் ஜான்பால்மர். இவர் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த மயிலாடி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். இவரது காலம் 1812-1833. இவர் எழுதிய 200 கீர்த்தனைகளில் 54 கீர்த்தனைகள் மட்டுமே கிடைத்துள்ளன.
பிற படைப்புகள்: ஞானப்பதக் கீர்த்தனம், கிறிஸ்தாயனம், மேசிய விலாசம், பேரானந்தக் கும்மி, நல்லறிவின் சார்க்கவி.
குறிப்பு: வினாவில் “சத்தியவேத கீர்த்தனைகள்” என்று கொடுக்கப்பட்டுள்ளது. உண்மையான பெயர் “சத்தியவேத சரித்திரம் கீர்த்தனைகள்” ஆகும்.
58. “குறிஞ்சித் திட்டு” எனும் நூலை இயற்றியவர்
(அ) பாரதியார்
(ஆ) பாரதிதாசன்
(இ) சுரதா
(ஈ) கவிமணி
விடை மற்றும் விளக்கம்
(ஆ) பாரதிதாசன்
59. “வீரசோழியம்” என்னும் இலக்கண நூலை இயற்றியவர்
(அ) காரியாசான்
(ஆ) புத்தமித்திரர்
(இ) பவணத்தி முனிவர்
(ஈ) வீரமாமுனிவர்
விடை மற்றும் விளக்கம்
(ஆ) புத்தமித்திரர்
60. நெஞ்சாற்றுப்படை என அழைக்கப்படும் நூல்
(அ) குறிஞ்சிப்பாட்டு
(ஆ) முல்லைப்பாட்டு
(இ) பட்டினப்பாலை
(ஈ) மதுரைக்காஞ்சி
விடை மற்றும் விளக்கம்
(ஆ) முல்லைப்பாட்டு
61. தமிழகத்தை எழுபத்திரண்டு பாளையங்களாகப் பிரித்து ஆண்டவர்கள்
(அ) பாண்டியர்கள்
(ஆ) நாயக்கர்கள்
(இ) சேரர்கள்
(ஈ) சோழர்கள்
விடை மற்றும் விளக்கம்
(ஆ) நாயக்கர்கள்
62. “நோக்கினார் கண்ணிடத்தே தம் தொழில் நிறுத்துவோர்” – என ஓவியருக்கு இலக்கண உரை வகுத்தவர்
(அ) தொல்காப்பியர்
(ஆ) அடியார்க்கு நல்லார்
(இ) நச்சினார்க்கினியர்
(ஈ) அகத்தியர்
விடை மற்றும் விளக்கம்
(இ) நச்சினார்க்கினியர்
63. சரியான விடையைத் தேர்ந்தெடு
கீழ் உள்ளவற்றுள் தமிழ்நாட்டில் பறவைகள் புகலிடங்களுள் ஒன்று
(அ) திருநின்றவூர்
(அ) கரூர்
(இ) வடுவூர்
(ஈ) பேரூர்
விடை மற்றும் விளக்கம்
(இ) வடுவூர்
64. பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனாரின் பட்டப்பெயர்
(அ) புரட்சிக் கவிஞர்
(ஆ) உவமைக் கவிஞர்
(இ) மக்கள் கவிஞர்
(ஈ) இயற்கைக் கவிஞர்
விடை மற்றும் விளக்கம்
(இ) மக்கள் கவிஞர்
65. தோம்பாவணியியல் “வளன்” என்னும் பெயர்ச்சொல்லால் குறிக்கப்படுபவர்
(அ) இயேசு கிறிஸ்து
(ஆ) சூசை மாமுனிவர்
(இ) தாவீது
(ஈ) கோலியாத்து
விடை மற்றும் விளக்கம்
(ஆ) சூசை மாமுனிவர்
66. “நான் தனியாக வாழவில்லை; தமிழோடு வாழ்கிறேன்” எனக் கூறியவர்
(அ) நாமக்கல் வெ.இராமலிங்கம் பிள்ளை
(ஆ) இராமலிங்க அடிகளார்
(இ) திரு.வி.கல்யாண சுந்தரனார்
(ஈ) பேரறிஞர் அண்ணா
விடை மற்றும் விளக்கம்
(இ) திரு.வி.கல்யாண சுந்தரனார்
67. பேராயக் (காங்கிரஸ்) கட்சியிலிருந்து விலகிய பின், தந்தை பெரியார் தம்மை இணைத்துக் கொண்ட இயக்கம்
(அ) நீதிக்கட்சி
(ஆ) சுயராஜ்ஜியக் கட்சி
(இ) திரவிடர் கழகம்
(ஈ) பொதுவுடைமைக் கட்சி
விடை மற்றும் விளக்கம்
(அ) நீதிக்கட்சி
68. கோடகநல்லூர் சுந்தர சுவாமிகள் யாருடைய ஞானாசிரியர்?
(அ) பெ.சுந்தரம் பிள்ளை
(ஆ) தெ.பா.மீனாட்சி சுந்தரம் பிள்ளை
(இ) கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
(ஈ) ரா.பி.சேதுப்பிள்ளை
விடை மற்றும் விளக்கம்
(அ) பெ.சுந்தரம் பிள்ளை
விளக்கம்:
பாண்டிய நாட்டு மன்னாகிய சீவகவழுதியின் மகள் மனோன்மணியின் வரலாற்றைக் கூறும் நாடக நூல் “மனோன்மணீயம்” ஆகும். இந்நூல் ஆங்கிலத்தில் லிட்டன் பிரபு என்பார் இயற்றிய “இரகசிய வழி” என்னும் நூலைத் தழுவி இயற்றப்பபெற்றதாகும். இது செய்யுள் வடிவிலான நாடக நூலாகும். இதன் ஆசிரியர் பெ.சுந்தரம்பிள்னை ஆவார். இவர் நெல்லையில் ஓர் உயர்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியராகப் பணியாற்றிய போது கோடக நல்லூர் சுந்தர முனிவரை ஞானாசிரியராகக் கொண்டு தத்துவ ஆராய்ச்சியில் ஈடுபட்டு அவரின் மாணவரானார்.
69. புத்தபிரானின் பாதத்தில் எத்தனை சக்கர ரேகை உண்டு எனச் சாத்தனார் புகழ்கிறார்?
(அ) 100
(ஆ) 1,000
(இ) 500
(ஈ) 900
விடை மற்றும் விளக்கம்
(ஆ) 1,000
விளக்கம்:
மணிமேகலை காப்பியத்தில் “மணிமேகலா தெய்வம் வந்து தோன்றிய பாதை”யில் 12-வது பாடல் மணிமேகலா தெய்வம் புத்தர் பிரானைப் போற்றி வணங்கியதாக அமைந்துள்ளது.
“ஆயிர வாரத்து ஆழியந் திருந்தடி,
நாவா யிரமிலேன் ஏத்துவது எவனோ?
– சீத்தலைச் சாத்தனார்.
பொருள்: ஆயிரம் ஆரக்கால்களோடு கூடிய சக்கர ரேகையினை உடைய உன் அழகிய திருவடிகளை ஆயிரம் நாவுகள் இல்லாமல் ஒரே நாவினைக் கொண்ட நான் புகழ்ந்து பாராட்டுவது எவ்வாறு?
70. “களையாத துன்பம் இக்காரிகைக்குக் காட்டி வளையாத செங்கோல் வளைந்தது இதுவென் கொல்” – இங்ஙனம் கூறியவர்.
(அ) மதுரை மக்கள்
(ஆ) கவுந்தி அடிகள்
(இ) சீத்தலைச் சாத்தனார்
(ஈ) கண்ணகி
விடை மற்றும் விளக்கம்
(அ) மதுரை மக்கள்
விளக்கம்:
“களையாத துன்பம் இக்காரிகைக்குக் காட்டி
வளையாத செங்கோல் வளைந்தது
இதுவென் கொல்”
சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டத்தின்கண் அமைந்துள்ள ஊர் சூழ்வரியில் மேற்கண்ட பாடலடிகள் அமைந்துள்ளன.
பொருள்: அழுது புலம்புகின்ற கண்ணகியைக் கண்டு கலங்கிய மதுரை நகரத்து மக்கள், “எவராலும் நீக்க முடியாத இத்துன்பத்தினை இக்காரிகைக்குச் செய்து என்றும் வளையாத செங்கோலானது வளைந்தது. இஃது எக்காரணத்தால் நிகழ்ந்ததோ? என்று கூறி புலம்புகின்றனர்
71. “நெடுந்தேர் ஊர்மதி வலவ”
இந்த அகநானூற்று அடியில் உள்ள “வலவ” என்பதன் பொருள்
(அ) தேர்ப்பாகன்
(ஆ) யானைப்பாகன்
(இ) வாயிற்காப்போன்
(ஈ) போர்வீரன்
விடை மற்றும் விளக்கம்
(அ) தேர்ப்பாகன்
72. “தீயினாற் சுட்டபுண் உள்ளாறும்; ஆறாதே
நாவினாற் சுட்ட வடு”
இக்குறட்பாவின் படி கீழ்க்கண்டவற்றுள் எது சரி?
(அ) தீப்புண், நாப்புண் ஆறாதவை
(ஆ) நாப்புண் ஆறும்; தீப்புண் ஆறாது
(இ) தீப்புண் ஆறும்; நாப்புண் ஆறாது
(ஈ) தீப்புண்ணும், நாப்புண்ணும் ஆறிவிடும்
விடை மற்றும் விளக்கம்
(இ) தீப்புண் ஆறும்; நாப்புண் ஆறாது
73. நேயர் விருப்பம், விலங்குகள் இல்லாத கவிதை ஆகிய நூல்களை இயற்றியவர்
(அ)தாராபாரதி
(ஆ) அப்துல் ரகுமான்
(இ) ஆலந்தூர் கோ.மோகனரங்கன்
(ஈ) மீரா
விடை மற்றும் விளக்கம்
(ஆ) அப்துல் ரகுமான்
விளக்கம்:
அப்துல் ரகுமானின் படைப்புகள்
சுட்டுவிரல், பால்வீதி, நேயர் விருப்பம், பித்தன், சொந்தச் சிறைகள், கரைகளே நதியாவதில்லை, விலங்குகள் இல்லாத கவிதை, ஆலாபனை, “ஆலாபனை” என்ற நூல் நடுவணரசின் “சாகித்ய அகாதெமி” விருதினைப் பெற்றுள்ளது.
74. “பீலிபெய் சாகாடும்” என்பதில் “சாகாடு” என்ற சொல்லின் பொருள்
(இ) சுடுகாடு
(ஆ) வண்டி
(இ) மண்டி
(ஈ) இடுகாடு
விடை மற்றும் விளக்கம்
(ஆ) வண்டி
விளக்கம்:
“பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின்”
திருக்குறள் – 48வது அதிகாரம்(வலியறிதல்)
குறள் எண்: 475.
பிரிவு-பொருட்பால்.
இயல்-அரசியல்.
பொருள்: மென்மையான மயிலிறகை ஏற்றியுள்ள வண்டியும், அப்பண்டத்தை அளவுக்கு மிகுதியாக ஏற்றினால், அச்சு முறிந்து விடும்
75. “தமிழ் நாடகக்கலைக்கு ஒரு பெர்னாட்ஷா” எனப் பாராட்டப் பெற்றவர்
(அ) சங்கரதாஸ் சுவாமிகள்
(ஆ) பம்மல் சம்பந்த முதலியார்
(இ) அறிஞர் அண்ணா
(ஈ) தி.க.சண்முகம்
விடை மற்றும் விளக்கம்
(இ) அறிஞர் அண்ணா
விளக்கம்:
“தமிழக நாடகக் கலைக்கு ஒரு பெர்னாட்ஷா”
– அறிஞர் அண்ணாவை இவ்வாறு பாராட்டியவர் கல்கி ஆவார்.
76. பிரெஞ்சுக் குடியரசுத் தலைவரால் “செவாலியர்” விருது பெற்ற கவிஞர்.
(அ) கண்ணதாசன்
(ஆ) வாணிதாசன்
(இ) முடிரசன்
(ஈ) மு.மேத்தா
விடை மற்றும் விளக்கம்
(ஆ) வாணிதாசன்
விளக்கம்:
வாணிதாசனின் இயற்பெயர் எத்திராசலு என்ற அரங்கசாமி. புதுவையில் பிறந்து வளர்ந்த இவர் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், பிரெஞ்சு ஆசிய மொழிகளில் புலமை மிக்கவராய் இருந்தார். 34 ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றினார்.
நூல்கள்: தமிழச்சி, கொடிமுல்லை, எழிலோவியம், பொங்கற்பரிசு, இன்ப இலக்கியம், தீர்த்த யாத்திரை போன்றவையாகும். ரஷ்ய மற்றும் ஆங்கில மொழிகளில் இவரது பாடல்கள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. “தமிழ்-பிரெஞ்சு” கையரசு முதலியை வெளியிட்டுள்ளார். “கவிஞரேறு” பாவலர்மணி” தமிழகத்தின் வேர்ட்ஸ் வொர்த்” என்பவை இவரது சிறப்புப் பெயர்களாகும். பிரெஞ்சுக் குடியரசுத் தலைவர் இவருக்கு “செவாலியர்” என்ற விருதினை வழங்கியுள்ளார். இவரது காலம் 22.07.1915 முதல் 07.08.1974 வரை ஆகும். சேலியமேட்டில் இவர் பெயரால் அரசு உயர்நிலைப் பள்ளி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
77. “எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே”
– இப்பாடலைப் பாடியவர்
(அ) பாரதியார்
(ஆ) பாரதிதாசன்
(இ) வாணிதாசன்
(ஈ) கம்பதாசன்
விடை மற்றும் விளக்கம்
(ஆ) பாரதிதாசன்
78. பொருந்தாத இணையைக் குறிப்பிடுக:
(அ) சிற்றிலக்கியங்கள்-தொண்ணூற்றாறு
(ஆ) திருக்குறள்-முப்பால்
(இ) மலைபடுகடாம்-கூத்தராற்றுப்படை
(ஈ) பரிபாடல்-பத்துப்பாட்டு
விடை மற்றும் விளக்கம்
(ஈ) பரிபாடல்-பத்துப்பாட்டு
விளக்கம்:
சிற்றிலக்கியங்கள் 96 வகையாகும்.
திருக்குறள் முப்பால்களை (அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால்) உடையது.
பத்துப்பாட்டில் ஒன்றான மலைபடுகடாமின் மற்றொரு பெயர் கூத்தராற்றுப்படையாகும்.
எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று பரிபாடல். அதற்கும் பத்துப்பாட்டிற்கும் தொடர்பேதுமில்லை.
79. வள்ளை என்பது
(அ) ஏற்றுநீர் பாட்டு
(ஆ) நடவுப்பாட்டு
(இ) உலக்கைப் பாட்டு
(ஈ) தாலாட்டு
விடை மற்றும் விளக்கம்
(இ) உலக்கைப் பாட்டு
விளக்கம்:
திருவள்ளுவமாலை – மூன்றாவது பாடல்
“தினையளவு போதாச் சிறுபுல்நீர் நீண்ட
பனையளவு காட்டும் படித்தால் – மனையளகு
வள்ளைக்கு உறங்கும் வளநாட!
வள்ளுவனார்
வெள்ளைக் குறட்பா விரி” – கபிலர்.
பொருள்: உலக்கைப் பாட்டின் இன்னிசையைக் கேட்டு கண்ணுறங்கும் கோழிகளை உடைய வளநாட்டு மன்னனே! சிறுபுல்லின் தலையில் உள்ள தினையளவினும் சிறுபனி நீர், நெடிதுயர்ந்த பனைமரத்தின் உருவத்தைத் தன்னுள் தெளிவாகக் காட்டும். அதுபோல, வள்ளுவரின் குறள் வெண்பாக்கள் அரிய பொருள்களைத் தம்மகத்தே அடக்கி மிகத் தெளிவாகக் காட்டுகின்றன.
வள்ளை-நெல் குத்தும்போது பெண்களால் பாடப்படும் உலக்கைப் பாட்டு.
அளகு-கோழி
80. பொருத்துக:
பட்டியல் I பட்டியல் II
அ. அறுவை வீதி 1. மள்ளர் வாழும் வீதி
ஆ. கூல வீதி 2. பொற்கடை வீதி
இ. பொன்வீதி 3. தானியக் கடை வீதி
ஈ. மள்ளர் வீதி 4. ஆடைகள் விற்கும் கடை வீதி
அ ஆ இ ஈ
அ. 4 3 2 1
ஆ. 3 1 4 2
இ. 2 1 3 4
ஈ. 1 2 4 3
விடை மற்றும் விளக்கம்
அ. 4 3 2 1