Tnpsc Current Affairs in Tamil – 9th November 2023

1. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘HEL1Os’ நிறமாலைமானியுடன் தொடர்புடைய நாடு எது?

அ. இஸ்ரேல்

ஆ. இந்தியா 🗹

இ. அமெரிக்கா

ஈ. ரஷ்யா

2. NASAஇன் கியூரியாசிட்டி தரையூர்தியானது (rover) கீழ்காணும் எந்த வான் பொருளை ஆய்வுசெய்வதற்காக ஏவப்பட்டது?

அ. ஞாயிறு

ஆ. செவ்வாய் 🗹

இ. புதன்

ஈ. வியாழன்

3. அமெரிக்காவின் ஃபேஷன் டிசைனர்ஸ் கவுன்சிலின் ஃபேஷன் ஐகான் விருதை வென்ற முதல் தடகள வீரர் / வீராங்கனை யார்?

அ. மேரி கோம்

ஆ. செரீனா வில்லியம்ஸ் 🗹

இ. சிமோன் பைல்ஸ்

ஈ. விராட் கோலி

4. ஓர் அண்மைய ஆய்வின்படி, எத்தனை சதவீதம் பேர் சமூக ஊடக தளங்கள் வாயிலாக செய்திகளைத் தெரிந்து கொள்கின்றனர்?

அ. 16%

ஆ. 36%

இ. 56% 🗹

ஈ. 76%

5. ‘உலகப் பயணச் சந்தை – 2023’ என்ற நிகழ்வை நடத்தும் நகரம் எது?

அ. லண்டன் 🗹

ஆ. புது தில்லி

இ. பாரிஸ்

ஈ. ரோம்

6. ‘உலக உள்ளூர் உற்பத்தி மன்றத்தை’ நடத்தும் நாடு எது?

அ. நெதர்லாந்து 🗹

ஆ. இந்தியா

இ. இலங்கை

ஈ. இங்கிலாந்து

7. அண்மையில் பறப்புச் சோதனை செய்யப்பட்ட, ‘பிரளய்’ என்றால் என்ன?

அ. உத்திசார்ந்த எறிகணை 🗹

ஆ. கண்டம் விட்டு கண்டம் பாயும் எறிகணை

இ. பீரங்கி எதிர்ப்பு எறிகணை

ஈ. மேற்பரப்பில் இருந்து வானில் உள்ள இலக்கைத் தாக்கும் எறிகணை

8. இந்தியாவிற்கு, ‘ஹெர்ம்ஸ்-900’ என்ற ஆளில்லா விமானங்களை வழங்குகிற நாடு எது?

அ. ரஷ்யா

. இஸ்ரேல் 🗹

இ. பிரான்ஸ்

ஈ. அமெரிக்கா

9. இந்திய வான்படையால் வடகிழக்கு மாநிலங்களில் நடத்தப்பட்ட வான்வழிப் பயிற்சியின் பெயர் என்ன?

அ. பூர்வி ஆகாஷ் 🗹

ஆ. சம்ப்ரிதி

இ. விகாஸ்

ஈ. சுதர்சன்

10. ‘தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு நாள்’ அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ. நவம்பர்.03

ஆ. நவம்பர்.05

இ. நவம்பர்.07 🗹

ஈ. நவம்பர்.09

11. சையத் முஷ்டாக் அலி T20 கோப்பையை வென்ற கிரிக்கெட் அணி எது?

அ. தமிழ்நாடு

ஆ. கேரளா

இ. பஞ்சாப் 🗹

ஈ. மேற்கு வங்காளம்

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. உத்தரகண்ட் உருவான தினம்.

கடந்த 2000ஆம் ஆண்டு உத்தர பிரதேச மாநிலத்திலிருந்து தனியே பிரிக்கப்பட்டு உத்தரகண்ட் மாநிலம் உருவாக்கப்பட்டது. அம்மாநிலம் அதன் 23ஆம் ஆண்டுதினம் 2023 நவ.09 அன்று கொண்டாடியது. உத்தரகண்ட் மாநிலத்தின் தலைநகரம் டேராடூன் ஆகும்.

2. தேசிய விளையாட்டுப் போட்டிகள்: மகாராஷ்டிரம் சாம்பியன்; தமிழ்நாடு 10ஆம் இடம்.

கோவாவில் நிறைவடைந்த 37ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகளில் மகாராஷ்டிரம், ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது. அந்த அணி மொத்தம் 228 பதக்கங்கள் பெற்றது. சர்வீசஸ் அணி 126 பதக்கங்களுடன் இரண்டாம் இடமும், ஹரியாணா 192 பதக்கங்களுடன் மூன்றாம் இடமும் பிடித்தன. போட்டியை நடத்திய கோவாவின் அணி, 92 பதக்கங்களுடன் 9ஆம் இடம்பிடித்தது. தமிழ்நாட்டின் அணி 19 தங்கம், 26 வெள்ளி, 32 வெண்கலம் என 77 பதக்கங்களுடன் 10ஆம் இடம்பிடித்தது.

போட்டியிலேயே சிறந்த வீரராக கர்நாடக நீச்சல் வீரர் ஸ்ரீஹரி நட்ராஜ் தேர்வானார். அவா் 8 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலம் என 10 பதக்கங்கள் பெற்றிருந்தார். சிறந்த வீராங்கனையாக ஒடிஸாவின் ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனைகள் சன்யுக்தா பிராசென் காலே, பிரனதி நாயக் ஆகியோர் தேர்வாகினர். இருவருமே தலா 4 தங்கம், 1 வெள்ளி என 5 பதக்கங்கள் கைப்பற்றியிருந்தனர்.

3. அரசுப் பேருந்து புகார்களுக்கு, ‘149’.

அரசுப் பேருந்து தொடர்பான புகார்களை, ‘149’ என்னும் புதிய எண்ணில் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம் என்று தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது. இதற்குமுன் கட்டணமில்லாத 1800 599 1500 என்னும் 11 இலக்க தொலைபேசி எண் நடைமுறையில் இருந்து வந்தது.

4. விண்வெளி, பாதுகாப்புத் துறை உற்பத்தி, அதிநவீன ஆராய்ச்சிக்கு உகந்த மாநிலம் தமிழ்நாடு.

விண்வெளி, பாதுகாப்புத் துறை சார்ந்த உற்பத்தி, அதிநவீன ஆராய்ச்சிப் பணிகளுக்கு தமிழ்நாடு உகந்த மாநிலமாக திகழ்ந்து வருவதாக தமிழ்நாட்டின் தொழிற்துறை தெரிவித்துள்ளது.

எஞ்சின் உற்பத்திக்கான தொகுதியாக ஓசூரு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் – சூலூர், வாரப்பட்டி ஆகியவை விண்வெளி, பாதுகாப்புத் திட்டங்களுக்குச் சிறந்த பகுதிகளாக விளங்குகின்றன. ஆளில்லா விமானங்க -ளுக்காக பிரத்யேக பரிசோதனை நிலையங்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டு வருகின்றன. குலசேகரப்பட்டினத்தில் விண்வெளித்துறை சார்ந்த நிறுவனங்களுக்கு உகந்த சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள இரண்டு பாதுகாப்பு தொழில்துறை தாழ்வாரங்களில் ஒன்றாக தமிழ்நாடு உள்ளது. இதற்கு விண்வெளி, பாதுகாப்புத் துறை கொள்கை – 2022, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கொள்கை – 2022 போன்றவை உறுதியான ஆதரவை அளிக்கவுள்ளன என தமிழ்நாட்டின் தொழிற்துறை தெரிவித்துள்ளது.

5. தமிழ்நாடு அரசின் இணையவழி சூதாட்ட தடைச்சட்டம் செல்லும்.

இணையவழி சூதாட்டங்களுக்கு தடைவிதித்து தமிழ்நாடு அரசு கொண்டுவந்த சட்டம் செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதேவேளையில் திறமைக்கான இணையவிளையாட்டுகளான ரம்மி, போக்கர் ஆகியவற்றை அனுமதிக்கும் வகையில், அவற்றை தடைசெய்த பிரிவுகளை ரத்துசெய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இணையவழி சூதாட்ட தடைச்சட்டம்:

தமிழ்நாடு இணையவழி சூதாட்ட தடை, ஒழுங்குபடுத்துதல் சட்டம் கடந்த 2022ஆம் ஆண்டு அக்.19-ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது. இணையவழி சூதாட்ட தடைச்சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர் என் ரவி கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி ஒப்புதல் அளித்தார். இதையடுத்து ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் உடனடியாக அரசிதழில் வெளியிடப்பட்டு அமலுக்கு வந்தது.

தண்டனை விவரம்:

இச்சட்டத்தின்படி, இணைய விளையாட்டில் ஈடுபடுவோருக்கு 3 மாதங்கள் சிறை அல்லது `5,000 அபராதத்துடன் சிறைத்தண்டனை விதிக்கப்படும். இணையவழி விளையாட்டுக்காக விளம்பரம் செய்வோருக்கு ஓராண்டு சிறை அல்லது `5 இலட்சம் அபராதம் / இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். இதுபோன்ற விளையாட்டுகளை அளிப்பவர்க்கு 3 ஆண்டு சிறை அல்லது `10 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும். இவர்கள் மீண்டும் தவறுசெய்தால், 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை, `20 இலட்சம் அபராதம் விதிக்கப்படும்.

IMPORTANT LINKS

TNPSC Current Affairs

Tnpsc Current Affairs 2024 in Tamil & English Monthly Pdf files Download Quiz Online Test

Winmeen: Install the Winmeen App – Daily Free & Premium Tnpsc Study Materials & Online Test

https://play.google.com/store/apps/details?id=co.robin.jbzwb

Winmeen: Winmeen Tnpsc Test Series – Samacheer lesson Wise Test + Previous Year Model Test for Tnpsc Group 1,2, 4 & VAO

https://wp.me/p7JanY-ag8

Exit mobile version