Tnpsc Current Affairs in Tamil – 8th December 2023

1. எந்நாட்டின் வேளாண் துறையை நவீனமயமாக்குவதற்காக அந்நாட்டிற்கு $250 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கடன் வழங்குவதாக இந்தியா அறிவித்துள்ளது?

அ. கென்யா 🗹

ஆ. தென்னாப்பிரிக்கா

இ. காங்கோ

ஈ. பப்புவா நியூ கினி

2. 2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, 2022ஆம் ஆண்டில் இணையவெளிக் குற்றங்கள் மற்றும் பொருளாதாரக் குற்றங்களின் போக்கு என்ன?

அ. அதிகரித்துள்ளது 🗹

ஆ. குறைந்துள்ளது

இ. மாற்றமில்லை

ஈ. தகவல் இல்லை

3. அண்மையில் தொடங்கப்பட்ட, ‘கிராம் மஞ்சித்ரா’ செயலியுடன் தொடர்புடையது எது?

அ. புவிக்கோளத் தகவல் அமைப்பு 🗹

ஆ. கலாச்சார காப்பகம்

இ. கல்வி வளங்கள்

ஈ. தடுப்பூசி நினைவூட்டல்

4. பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட, ‘PDI’ என்பதன் விரிவாக்கம் என்ன?

அ. Panchayat Development Index 🗹

ஆ. Panchayat Distribution Index

இ. Panchayat Direction Index

ஈ. People Development Index

5. உலகின் மிகப்பெரியதும் மிகவும் மேம்பட்ட அணுக்கரு இணைவு உலையுமான, ‘JT-60SA’ ஆனது ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் எந்த நாட்டிற்கும் இடையேயான கூட்டு முயற்சியாகும்?

அ. இந்தியா

ஆ. ஜப்பான் 🗹

இ. அமெரிக்கா

ஈ. ஆஸ்திரேலியா

6. ‘ஜெமினி’ என்ற புதிய AI மாதிரியை அறிமுகப்படுத்தியுள்ள தொழில்நுட்ப நிறுவனம் எது?

அ. மைக்ரோசாப்ட்

ஆ. கூகுள் 🗹

இ. ஆரக்கிள்

ஈ. ஆப்பிள்

7. தேசிய குற்றப்பதிவு பணியகத்தின் தரவுகளின்படி, 2022இல் அதிக எண்ணிக்கையிலான காவல் மரணங்கள் பதிவான மாநிலம் எது?

அ. குஜராத் 🗹

ஆ. கர்நாடகா

இ. ஆந்திர பிரதேசம்

ஈ. உத்தர பிரதேசம்

8. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘TRIPS ஒப்பந்தம்’ என்பதுடன் தொடர்புடையது எது?

அ. WTO 🗹

ஆ. UNICEF

இ. IMF

ஈ. WEF

9. புதைபடிவ எரிபொருட்களைக் கையாளுவதற்காக மூன்று தெரிவுகளை முன்வைத்துள்ள உலகளாவிய கால நிலை ஒப்பந்தத்தின் வரைவை வெளியிட்ட அமைப்பு எது?

அ. ஐக்கிய நாடுகள் அவை 🗹

ஆ. உலக பொருளாதார மன்றம்

இ. NITI ஆயோக்

ஈ. பன்னாட்டு செலாவணி நிதியம்

10. குப்பையில்லா நகரங்களுக்கான துளிர்நிறுவல் வாயிலை அறிமுகப்படுத்திய மத்திய அமைச்சகம் எது?

அ. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் 🗹

ஆ. MSME அமைச்சகம்

இ. நிதி அமைச்சகம்

ஈ. பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகம்

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. தமிழ்நாடு கேட்டது `5060 கோடி: மத்திய அரசு அறிவித்திருப்பது `450 கோடி

தமிழ்நாட்டில், ‘மிக்ஜம்’ புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்ய `5060 கோடி தேவை என்று தமிழ்நாடு அரசு கோரியிருந்த நிலையில், `450 கோடியை விடுவித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

2. காஸா விவகாரம்: அபூர்வ சட்டப்பிரிவைக் கையிலெடுத்த குட்டெரெஸ்.

காஸாவில் போர்நிறுத்தம் மேற்கொள்ள வேண்டிய அவசியத்தை ஐக்கிய நாடுகளின் (ஐநா) பாதுகாப்பு அவையின் கவனத்துக்குக் கொண்டு வருவதற்காக, மிகவும் அபூர்வமாகப் பயன்படுத்தப்படும் ஐநாஇன் 99ஆவது சட்டப்பிரிவை பொதுச்செயலர் அன்டோனியோ குட்டெரெஸ் கையிலெடுத்துள்ளார்.

ஐநா பொதுச்செயலர்கள் இந்தப் பிரிவைப் பயன்படுத்தி ஐநா பாதுகாப்புக் கவுன்சிலின் கவனத்தை ஈர்ப்பது மிகவும் அபூர்வமானதாகும். இதற்கு முன்னர் கடந்த 1971ஆம் ஆண்டில் அப்போதைய ஐநா பொதுச்செயலர் யு. தான்ட்தான் இந்தப் பிரிவைப் பயன்படுத்தினார். அப்போது நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் போர் விவகாரத்தை பாதுகாப்பு கவுன்சிலின் கவனத்துக்குக் கொண்டு வருவதற்காக இந்த சட்டப்பிரிவை அவர் பயன்படுத்தினார். அந்தப் போரில் இந்தியா வெற்றிபெற்று, கிழக்குப் பாகிஸ்தானாக இருந்த பகுதி வங்கதேசமாக உருவெடுத்தது நினைவுகூரத்தக்கது.

3. 2024-இல் மாக்-3, 3 GSLV, 6 PSLV இராக்கெட்டுகளை விண்ணில் ஏவும் ISRO.

“இந்திய விண்வெளி ஆய்வு மையம் (ISRO) அடுத்த ஆண்டில் (2024) ஒரு LVM (மாக்-3) ராக்கெட், 3 GSLV, 6 PSLV ராக்கெட்டுகளை விண்ணில் ஏவவுள்ளது’ என்று மத்திய அரசு தெரிவித்தது.

ISRO 2024ஆம் ஆண்டில் முதல் கட்டமாக புதிய சிறிய இரக செயற்கைக்கோள்களை செலுத்த வடிவமைக்கப்பட்ட SSLV ராக்கெட் மூலமாக தொழில்நுட்ப விளக்க செயற்கைக்கோள் ஒன்றை விண்ணில் செலுத்தவுள்ளது. அதனைத் தொடர்ந்து, மனிதர்களை விண்ணுக்கனுப்பும், ‘ககன்யான்’ திட்டத்தின்கீழ் ஆளில்லா விண்கலத்தை விண்ணுக்கு இரண்டு முறை அனுப்பி பரிசோதிக்க உள்ளது. கூடுதலாக, விண்கலம் விண்ணை நோக்கிப் பயணிக்கும்போது ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், அதிலிருந்து வீரர்கள் பாதுகாப்பாக வெளியேறும் பன்முக சோதனையையும் ISRO மேற்கொள்ளும். மீண்டும் பயன்படுத்தும் வகையிலான ஏவுகலத்தை ஓடுபாதையில் பத்திரமாக தரையிறக்கும் பரிசோதனையை இரண்டு முறை மேற்கொள்ள உள்ளது.

நியோஸ்பேஸ் இந்தியா நிறுவனத்தின் வணிகரீதியிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில் ‘ஜிசாட்20’ தகவல்தொடர்பு செயற்கைக்கோளை புவி சுற்றுப்பாதையில் ISRO நிலைநிறுத்த உள்ளது. இவைதவிர, 6 PSLV ராக்கெட்டுகளை இஸ்ரோ விண்ணில் ஏவவுள்ளது. இந்த ராக்கெட்டுகள்மூலம் விண்வெளி அறிவியல் ஆய்வு செயற்கைக்கோள், புவி கண்காணிப்பு செயற்கைக்கோள், 2 தொழில்நுட்ப விளக்க செயற்கைக்கோள்கள், NSILஇன் 2 வணிக ரீதியிலான திட்டத்தின் கீழான செயற்கைக்கோள்களையும் விண்ணில் ஏவவுள்ளது. மேலும், 3 GSLV ராக்கெட்டுகள் செலுத்தும் திட்டத்தின் மூலம் வானியல் ஆய்வு செயற்கைக்கோள், கண்காணிப்பு செயற்கைக்கோள், NASA-ISRO கூட்டு ரேடார் செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவும் திட்டத்தை ISRO செயல்படுத்தவுள்ளது. அதோடு, NSILஇன் வணிக ரீதியிலான திட்டத்தின்கீழ் LVM3 (மாக்-3) ராக்கெட்மூலம் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும் திட்டத்தையும் ISRO செயல்படுத்தவுள்ளது.

Exit mobile version