Tnpsc Current Affairs in Tamil – 7th October 2023

1. ‘தொழில்நுட்பம் மற்றும் பாரதிய பாஷா உச்சிமாநாட்டை’ ஏற்பாடு செய்த மத்திய அமைச்சகம் எது?

அ. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம்

ஆ. கல்வி அமைச்சகம் 🗹

இ. திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்

ஈ. கலாச்சார அமைச்சகம்

2. NABARD, மும்பை பங்குச்சந்தையில், ‘சமூகப் பத்திரங்களை’ பட்டியலிட்டுள்ளது. இதன்மூலம் திரட்டப்படும் நிதி கீழ்காணும் எந்தத் திட்டத்திற்கு மறுநிதியளிப்பு செய்ய பயன்படுத்தப்படும்?

அ. PMAY

ஆ. PM SVANIDHI

இ. ஜல் ஜீவன் இயக்கம் 🗹

ஈ. PMGSY

3. ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், 72 ஆண்டுகளில் இந்தியாவின் முதல் பதக்கத்தை வென்ற கிரண் பலியான் சார்ந்த விளையாட்டு எது?

அ. பளு தூக்குதல்

ஆ. குண்டெறிதல் 🗹

இ. வாள் சண்டை

ஈ. நீச்சல்

4. பசிபிக் ஆசியா டிராவல் அசோசியேஷன் (PATA) டிராவல் மார்ட் 2023-ஐ நடத்தும் நாடு எது?

அ. இலங்கை

ஆ. வங்காளதேசம்

இ. இந்தியா 🗹

ஈ. ஆஸ்திரேலியா

5. செவ்வாய் சுற்றுக்கலன் திட்டத்துக்குப் பிறகு பூமியின் ஆதிக்க கோளத்திலிருந்து வெற்றிகரமாக வெளியேறிய விண்கலம் எது?

அ. ஆதித்யா-எல்1 🗹

ஆ. ஒன் வெப் இந்தியா-2

இ. என்விஎஸ்-01

ஈ. DS-SAR

6. ஜம்மு & காஷ்மீரில் ‘கழிவுகளுக்கு எதிரான போர்’ என்பதன் தூதராக பரிந்துரைக்கப்பட்டவர் யார்?

அ. சச்சின் டெண்டுல்கர்

ஆ. வித்யா பாலன்

இ. கேப்டன் பானா சிங் 🗹

ஈ. விஸ்வநாதன் ஆனந்த்

7. மருத்துவ-ஜவுளிப் பொருட்களுக்கான தரக் கட்டுப்பாட்டு ஆணைகளை அறிமுகப்படுத்திய அமைச்சகம் எது?

அ. வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

ஆ. MSME அமைச்சகம்

இ. ஜவுளி அமைச்சகம் 🗹

ஈ. நிதி அமைச்சகம்

8. ஆன்லைன் கேமிங் நிறுவனங்கள் பந்தயத்தின் முழு மதிப்பின்மீது 28% GST வசூலிக்கும் நடைமுறையானது எந்தத் தேதியிலிருந்து அமலுக்கு வரும்?

அ. அக்டோபர் 1, 2023 🗹

ஆ. ஜனவரி 1, 2024

இ. ஏப்ரல் 1, 2024

ஈ. அக்டோபர் 1, 2024

9. முகமது முய்சு என்பவர் எந்த நாட்டின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்?

அ. மொரிஷியஸ்

ஆ. தென்னாப்பிரிக்கா

இ. மாலத்தீவுகள் 🗹

ஈ. இஸ்ரேல்

10. இந்தியா சமீபத்தில் எந்த நாட்டுடனான ‘சமூக பாதுகாப்பு ஒப்பந்தத்தில்’ கையெழுத்திட்டது?

அ. இலங்கை

ஆ. அர்ஜென்டினா 🗹

இ. ஆஸ்திரேலியா

ஈ. பிரான்ஸ்

11. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற அபய் சிங்குடன் தொடர்புடைய விளையாட்டு எது?

அ. கிரிக்கெட்

ஆ. ஸ்குவாஷ் 🗹

இ. ஹாக்கி

ஈ. சதுரங்கம்

12. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற ருதுஜா போசலேவுடன் தொடர்புடைய விளையாட்டு எது?

அ. ஸ்குவாஷ்

ஆ. சதுரங்கம்

இ. பூப்பந்து

ஈ. டென்னிஸ் 🗹

13. ‘யஷஸ்வினி’ என்பது எந்நிறுவனத்தைச் சேர்ந்த பெண் பைக்கர்களின் குழுவாகும்?

அ. இந்திய கடற்படை

ஆ. CRPF 🗹

இ. CISF

ஈ. இந்திய இராணுவம்

14. இந்தியாவில் செப்டம்பர் மாத ஜிஎஸ்டி வசூல் எவ்வளவு?

அ. ரூ.1.627 லட்சம் கோடி 🗹

ஆ. ரூ.1.527 லட்சம் கோடி

இ. ரூ.1.427 லட்சம் கோடி

ஈ. ரூ.1.727 லட்சம் கோடி

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. காற்றாலைமூலம் 10,200 MW மின்சார உற்பத்தியில் நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடம்.

தமிழ்நாட்டில் காற்றாலை மூலம் 10,200 MW மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதாகவும், காற்றாலை உற்பத்தியில் நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாகவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத் தலைவர் இராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.

2. தமிழ்நாட்டில் இஸ்ரோ ஏவுதளம் அமையும் பகுதி தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பு

இஸ்ரோவின் SSLV ஏவுகலம் திட்டத்துக்காக புதிய ஏவுதளம் தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைக்கப்பட உள்ளது. இந்நிலையில், அலுவல் இரகசியங்கள் சட்டம்-1923, பிரிவு 2-இல் உள்ள விதிகளின்படி, இந்தப் பகுதி தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனுமதி பெறாத நபர்கள் இப்பகுதியைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டது என மத்திய அரசு தெரிவித்தது.

3. ககன்யான் திட்டத்தின் மாதிரி கலனை வடிவமைத்த சென்னை நிறுவனம்

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்துக்கான தொழில்நுட்ப உபகரண கட்டமைப்பை வடிவமைத்துள்ள சென்னையைச் சேர்ந்த கேசிபி நிறுவனம், அதை இஸ்ரோவிடம் வழங்கவுள்ளது. புவியின் தாழ்வட்டப் பாதைக்கு விண்கலம்மூலம் மனிதர்களை அனுப்பி 3 நாள்கள் ஆய்வு மேற்கொண்டு அதன்பின்னர் மீண்டும் அவர்களை பாதுகாப்பாக பூமிக்கு கொண்டு வருவது ககன்யான் திட்டத்தின் நோக்கம்.

4. ஈரானிய சமூக செயற்பாட்டாளர் நர்கிஸ் முகம்மதிக்கு அமைதிக்கான நோபல்

ஈரானில் பெண்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராகவும், ஜனநாயகத்தை வலியுறுத்தியும் போராடிவரும் மனித உரிமை ஆர்வலர் நர்கீஸ் முகமதிக்கு (51) நடப்பாண்டு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைதிக்கான நோபல்: 19ஆவது பெண்

அமைதிக்கான நோபல் பரிசு பெறும் 19ஆவது பெண் நர்கீஸ் முகமதி ஆவார். இதேபோல், நோபல் வெல்லும் ஈரான் நாட்டைச் சேர்ந்த 2ஆவது பெண்ணும் ஆவார். கடந்த 2003இல் ஈரானைச் சேர்ந்த மனித உரிமைகள் ஆர்வலர் ஷிரின் எபாடி அமைதிக்கான நோபல் பரிசை வென்றிருந்தார். 122 ஆண்டுகால நோபல் வரலாற்றில் சிறையில் உள்ள ஒருவருக்கு அமைதிக்கான பரிசு அளிக்கப்படுவது இது 5ஆவது முறையாகும்.

IMPORTANT LINKS

TNPSC Current Affairs

Tnpsc Current Affairs 2024 in Tamil & English Monthly Pdf files Download Quiz Online Test

Winmeen: Install the Winmeen App – Daily Free & Premium Tnpsc Study Materials & Online Test

https://play.google.com/store/apps/details?id=co.robin.jbzwb

Winmeen: Winmeen Tnpsc Test Series – Samacheer lesson Wise Test + Previous Year Model Test for Tnpsc Group 1,2, 4 & VAO

https://wp.me/p7JanY-ag8

Exit mobile version