Tnpsc Current Affairs in Tamil – 6th & 7th February 2024

1. டார்லிபாலி அனல்மின் நிலையம் அமைந்துள்ள மாநிலம் எது?

அ. ஒடிசா

ஆ. குஜராத்

இ. கர்நாடகா

ஈ. மத்திய பிரதேசம்

2. ‘மின்சாரம் – 2024’ என்ற அறிக்கையை வெளியிட்ட அமைப்பு எது?

அ. பன்னாட்டு எரிசக்தி முகமை

ஆ. பன்னாட்டு மேம்பாட்டு சங்கம்

இ. பொருளாதார வளர்ச்சிக்கான அமைப்பு

ஈ. உலக வங்கி

3. 2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் மதிப்பிடப்பட்ட மொத்த செலவு எவ்வளவு?

அ. ரூ.47.66 இலட்சம் கோடி

ஆ. ரூ.33.56 இலட்சம் கோடி

இ. ரூ.48.20 இலட்சம் கோடி

ஈ. ரூ.45.15 இலட்சம் கோடி

4. அண்மையில், ‘தேசிய ஆரோக்கிய கண்காட்சி’ நடைபெற்ற இடம் எது?

அ. காந்தி நகரம்

ஆ. புது தில்லி

இ. சண்டிகர்

ஈ. ஜெய்ப்பூர்

5. 2024 – உலக ஈரநிலங்கள் நாளுக்கானக் கருப்பொருள் என்ன?

அ. Wetlands and Human Wellbeing

ஆ. Wetlands for a Sustainable Urban Future

இ. Wetlands and Climate Change

ஈ. Wetlands and Water

6. 2024-25 இடைக்கால பட்ஜெட்டில் இடம்பெற்ற, ‘நீலப்பொருளாதாரம்-2.0’ என்ற சொல்லாடலைப் பின்வரும் எது சிறப்பாக விவரிக்கிறது?

அ. பெருங்கடல்கள், கடல்கள் மற்றும் கடற்கரைகள் தொடர்பான நிலையான வளர்ச்சி

ஆ. புதிய வேளாண் நடைமுறை முறைகளை வழங்குதல்

இ. நகர்ப்புற உட்கட்டமைப்பை மேம்படுத்துதல்

ஈ. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்கள்

7. கோதுமை பயிரில் ஏற்படும், ‘கோதுமை எரிபந்த’ நோயானது, பின்வருவனவற்றில் எதனால் ஏற்படுகிறது?

அ. பூஞ்சை

ஆ. பாக்டீரியா

இ. புழுக்கள்

ஈ. தீ நுண்மம்

8. ‘GHAR’ இணையதளத்தின் முதன்மை நோக்கம் என்ன?

அ. வரலாற்று நினைவுச்சின்னங்களின் மறுசீரமைப்பை கண்காணித்தல்

ஆ. வழிதவறிய குழந்தைகளை மீட்டு, அவர்கள் வீட்டில் சேர்ப்பதை டிஜிட்டல் முறையில் கண்காணித்தல்

இ. குழந்தைகளுக்குச் சுகாதார சேவைகளை வழங்குதல்

ஈ. வரவிருக்கும் பேரழிவுகள் பற்றிய நிகழ்நேர அறிவிப்புகளை வழங்குதல்

9. ‘INS சந்தாயக்’ என்பது என்ன வகையான கப்பலாகும்?

அ. ஆய்வுக்கப்பல்

ஆ. போர்க்கப்பல்

இ. தாக்கியழிப்பான்

ஈ. விமானந்தாங்கிக் கப்பல்

10. 2024 – உலக புற்றுநோய் நாளுக்கானக் கருப்பொருள் என்ன?

அ. Close the Care Gap

ஆ. Not Beyond Us

இ. Together let’s do something

ஈ. We can I can

11. சிக்னஸ் X-1 என்றால் என்ன?

அ. சிறுகோள்

ஆ கருந்துளை

இ. AI கருவி

ஈ. நீர்மூழ்கிக்கப்பல்

12. அண்மையில், இந்திய அரசின் முதன்மை நீர்வியலாளர் பொறுப்பை ஏற்றவர் யார்?

அ. ஆதிர் அரோரா

ஆ. கரம்பீர் சிங்

இ. லோச்சன் சிங் பதானியா

ஈ. சுனில் லம்பா

13. ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தின்கீழ், வட இந்தியாவின் முதல் மனித DNA வங்கியை தொடங்கியுள்ள நிறுவனம் எது?

அ. பனாரஸ் இந்து பல்கலைக்கழகம்

ஆ. ஐஐடி கான்பூர்

இ. தில்லி பல்கலைக்கழகம்

ஈ. ஐஐடி டெல்லி

14. 2024 – பாரிஸ் ஒலிம்பிக்கிற்கான ஜோதியை ஏந்தவுள்ளவர் யார்?

அ. சாய்னா நேவால்

ஆ. நீரஜ் சோப்ரா

இ. அபினவ் பிந்த்ரா

ஈ. P V சிந்து

15. ‘டிரைக்கோகுளோசம்’ என்றால் என்ன?

அ. பண்டைய நீர்ப்பாசன அமைப்பு

ஆ. கப்பல் எதிர்ப்பு எறிகணைகள்

இ. ஒரு வகை பூஞ்சை

ஈ. சிறுகோள்

16. காமாக்யா திவ்யலோக் பரியோஜனாவுடன் தொடர்புடைய மாநிலம் எது?

அ. மணிப்பூர்

ஆ. மிசோரம்

இ. அஸ்ஸாம்

ஈ. சிக்கிம்

17. மசாலா மற்றும் சமையல்சார் மூலிகைகள் மீதான CODEX குழுமத்தின் 7ஆவது அமர்வு நடைபெற்ற இடம் எது?

அ. கொச்சி

ஆ. திருவனந்தபுரம்

இ. ஜெய்சால்மர்

ஈ. கட்ச்

18. Gamma Ray Astronomy PeV EnergieS phase-3 (GRAPES-3) திட்டத்தின் முதன்மை நோக்கம் என்ன?

அ. அண்டக்கதிர்களை ஆராய்வது

ஆ. புறக்கோளை ஆராய்வது

இ. இருண்ட பருப்பொருளை ஆராய்வது

ஈ. பூமியின் இயற்கை வளங்களை அளவிடுதல்

19. அண்மையில், பொது சிவில் சட்ட அறிக்கைக்கு ஒப்புதல் அளித்த மாநில அமைச்சரவை எது?

அ. இராஜஸ்தான்

ஆ. உத்தர பிரதேசம்

இ. உத்தரகாண்ட்

ஈ. இமாச்சல பிரதேசம்

20. அண்மையில், ஒருமித்த கொடுக்கல் இணைப்பிடைமுகம் (UPI) என்ற கொடுப்பனவு முறையை ஏற்றுக்கொண்ட முதல் ஐரோப்பிய நாடு எது?

அ. ஜெர்மனி

ஆ. இத்தாலி

இ. பிரான்ஸ்

ஈ. ஸ்பெயின்

21. ‘வாயு சக்தி – 24’ பயிற்சி நடைபெறும் இடம் எது?

அ. ஜோத்பூர்

ஆ. பொக்ரான்

இ. பாலசோர்

ஈ. அஜ்மீர்

ரபேல், மிராஜ்-2000, சுகோய்-30 MKI, ஜாகுவார், ஹாக், C-130J, சின்னூக், அப்பாச்சி, MI-17 ஆகிய விமானங்களும் பங்கேற்கின்றன. துல்லியமாகவும், சரியான நேரத்திலும், பேரழிவு விளைவுடனும் செயல்படும் இந்திய விமானப் படையின் திறனை இந்தப் பயிற்சி எடுத்துக்காட்டுவதாக இருக்கும்.

22. அண்மையில், பார்வையற்றோருக்கான ஆடவர் தேசிய T20 கிரிக்கெட் போட்டியில், ‘நாகேஷ் கோப்பை’யை வென்ற மாநிலம் எது?

அ. மகாராஷ்டிரா

ஆ. கேரளா

இ. கர்நாடகா

ஈ. குஜராத்

23. 2024 – சர்வதேச பெண் பிறப்புறுப்பு சிதைப்பு எதிர்ப்பு நாளுக்கானக் கருப்பொருள் என்ன?

அ. Unleashing Youth Power

ஆ. Achieving the new Global Goals through eliminating FGM

இ. Her Voice, Her Future

ஈ. Unite, Fund and Act

24. உண்ணி முள்ளுச்செடி (Lantana Camara) என்பது பின்வரும் எவ்வினத்தைச் சேர்ந்ததாகும்?

அ. பூக்கும் தாவரம்

ஆ. பட்டாம்பூச்சி

இ. மீன்

ஈ. தவளை

25. உத்தரகாண்ட் மாநில உயர்நீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டவர் யார்?

அ. ரிது பஹ்ரி

ஆ. ஹிமா கோலி

இ. இந்திரா பானர்ஜி

ஈ. ரூமா பால்

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. இந்தியாவின், ‘சக்தி’ இசைக்குழுவுக்கு கிராமி விருது.

66ஆவது ‘கிராமி’ விருது வழங்கும் விழாவில், ‘சிறந்த இசைத்தொகுப்பு’ என்ற பிரிவின்கீழ், இந்தியாவின், ‘சக்தி’ இசைக்குழுவுக்கு விருது வழங்கப்பட்டது. ‘சக்தி’ குழுவின் ‘திஸ் மொமென்ட்’ என்கிற இசைத்தொகுப்பிற்காக இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஷங்கர் மகாதேவன், இசையமைப்பாளர் செல்வகணேஷ் விநாயக்ராம், கணேஷ் இராஜகோபாலன், உஸ்தாத் ஜாகீர் உசேன் உள்ளிட்டோர், ‘சக்தி’ இசைக்குழுவில் இடம்பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு, ‘RRR’ திரைப்படத்தின், ‘நாட்டு நாட்டு’ பாடலுக்குக் ‘கிராமி’ விருது கிடைத்தது.

2. ‘மக்களைத் தேடி ஆய்வகம் சேவை’ என்ற திட்டம் தொடக்கம்.

தமிழ்நாட்டில் முதல்முறையாக, ‘மக்களைத் தேடி ஆய்வகம் சேவை’ என்ற திட்டத்தை கன்னியாகுமரியில் வைத்து மக்கள் நல்வாழ்வுத் துறை தொடங்கியுள்ளது. மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் இதுவரை 1.72 கோடி மக்கள் பயனடைந்துள்ளனர். ‘இன்னுயிர் காப்போம்’ திட்டத்தின் மூலம் 2.20 இலட்சம் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. ‘வருமுன் காப்போம்’ திட்டத்தின்கீழ், ஆண்டுக்கு 1250 இடங்களில் மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. மேலும், ஆரம்ப சுகாதார நிலையங்களிலேயே பொதுமக்கள் 63 வகையான பரிசோதனைகளை மேற்கொள்ளவியலும் என மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

3. வளரிளம் பெண்கள் 57% பேருக்கு இரத்தசோகை பாதிப்பு.

தமிழ்நாட்டில் வளரிளம் பருவத்திலுள்ள 57% பெண்களுக்கும், 43% ஆண்களுக்கும் இரத்தசோகை பாதிப்பு இருப்பது பொது சுகாதாரத்துறை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

4. நீர்மாசு தடுப்பு சட்டத்திருத்த மசோதா: மாநிலங்களவையில் நிறைவேற்றம்.

நீர்மாசு தடுப்பு சட்டத்திருத்த மசோதா மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்புமூலம் நிறைவேறியது. நீர்மாசில் சிறு குற்றங்களில் ஈடுபடுவர்கள்மீது குற்ற நடவடிக்கை எடுப்பதிலிருந்து விலக்கு அளிக்கவும், மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர்கள் நியமனத்திலும், தொழிற்சாலைகளுக்கு அனுமதியளிப்பது, மறுப்பதுபோன்ற விவகாரங்க -ளில் மத்திய அரசு வழிமுறைகளை வகுக்கவும் இந்த மசோதா வழிவகை செய்கிறது. நீர்மாசுபாடு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு சட்டம்-1974இல் இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

5. உத்தரகண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டம்.

உத்தரகண்ட் மாநிலச் சட்டப்பேரவையில் தாக்கல்செய்யப்பட்ட பொது சிவில் சட்ட (UCC) மசோதா பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவோடு நிறைவேறியது. நாட்டில் முதல் மாநிலமாக உத்தரகண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. பழங்குடி சமூகத்தினருக்கு மட்டும் இதிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது.

உத்தரகண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்ட மசோதா வரைவை உருவாக்க ஓய்வுபெற்ற நீதிபதி இரஞ்சனா தேசாய் தலைமையில் 5 பேர்கொண்ட குழு அமைக்கப்பட்டது. அந்தக்குழு உருவாக்கிய 172 பக்கங்கள் கொண்ட பொது சிவில் சட்ட மசோதா 392 பிரிவுகளைக் கொண்டுள்ளது.

முக்கிய அம்சங்கள்: உத்தரகண்ட் மாநிலப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பொது சிவில் சட்ட மசோதவில் பழங்குடி சமூகத்தினருக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாவில் பலதார திருமணத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், மறுமணம், விவாகரத்துகுறித்த பொது விதிகளை மசோதா கொண்டுள்ளது. அதேபோல், திருமணங்களைப்போன்று, மணம் புரியாமல் சேர்ந்து வாழ்வதற்கு (live-in) விரும்புவோரும் அரசிடம் பதிவு செய்து கொள்வது கட்டாயாமாக்கப்பட்டுள்ளது.

தற்போதைக்கு கோவா மாநிலத்தில் மட்டுமே பொது சிவில் சட்டம் போர்த்துகீசியர் ஆட்சிக் காலத்தில் இருந்து நடைமுறையில் உள்ளது.

6. ஸ்பெயினின் எடிபன் நிறுவனம் தமிழ்நாட்டில் `540 கோடி முதலீடு.

ஸ்பெயினைச் சேர்ந்த எடிபன் நிறுவனம் தமிழ்நாட்டில் `540 கோடி முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Exit mobile version