Tnpsc Current Affairs in Tamil – 5th March 2024

1. அண்மையில், மாநில நீர் தகவல் மையத்தை நிறுவ முடிவுசெய்துள்ள மாநில அரசு எது?

அ. பீகார்

. ஒடிஸா

இ. குஜராத்

ஈ. ஜார்கண்ட்

2. சிந்திரி உர ஆலை அமைந்துள்ள மாநிலம் எது?

அ. ஜார்கண்ட்

ஆ. உத்தரபிரதேசம்

இ. இராஜஸ்தான்

ஈ. குஜராத்

3. அண்மையில், AB-PMJAYஇன்கீழ் ஐந்து கோடி ஆயுஷ்மான் அட்டைகளை வழங்கிய முதல் மாநிலம் எது?

அ. குஜராத்

ஆ. மத்திய பிரதேசம்

இ. உத்தர பிரதேசம்

ஈ. மகாராஷ்டிரா

4. அம்ராபாத் புலிகள் காப்பகம் அமைந்துள்ள மாநிலம் எது?

அ. தெலுங்கானா

ஆ. கேரளா

இ. கர்நாடகா

ஈ. ஒடிஸா

5. கட்டமைப்புத் திட்டமிடல் குழுவின் 66ஆவது கூட்டம் நடைபெற்ற இடம் எது?

அ. சென்னை

ஆ. புது தில்லி

இ. பெங்களூரு

ஈ. ஜெய்ப்பூர்

6. ‘VSHORADS’ என்றால் என்ன?

அ. மனிதனால் எளிதாக எடுத்துச் செல்லக்கூடிய வான்பாதுகாப்பு அமைப்பு (MANPAD)

ஆ. இந்தியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையேயான இராணுவ பயிற்சி

இ. ஐரோப்பாவில் நடத்தப்படும் அமைதிகாக்கும் நடவடிக்கைகள்

ஈ. எங்கும் எடுத்துச் செல்லக்கூடிய குறுகிய தூர வான்பாதுகாப்பு அமைப்பு

7. அண்மையில், ‘உலகளாவிய நற்பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்திற்கான கூட்டணி’யை அறிமுகப்படுத்திய மத்திய அமைச்சகம் எது?

அ. பாதுகாப்பு அமைச்சகம்

ஆ. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்

இ. ஊரக வளர்ச்சி அமைச்சகம்

ஈ. உள்துறை அமைச்சகம்

8. பன்னாட்டு பெரும்பூனைகள் கூட்டணிக்கு மத்திய அமைச்சரவை எவ்வளவு நிதியுதவி அளித்துள்ளது?

அ. ரூ.250 கோடி

ஆ. ரூ.150 கோடி

இ. ரூ.100 கோடி

ஈ. ரூ.110 கோடி

9. ISRO உடன் இணைந்து புவனைப் பயன்படுத்தி நகர்ப்புற கட்டமைப்பு ஆய்வுமேற்கொள்வதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்த மத்திய அமைச்சகம் எது?

அ. வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம்

ஆ. சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்

இ. புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம்

ஈ. துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகம்

10. சமுத்திர லட்சமணப் பயிற்சியானது கீழ்காணும் எந்த இரு நாடுகளுக்கு இடையே நடத்தப்படுகிறது?

அ. இந்தியா மற்றும் சிங்கப்பூர்

ஆ. இந்தியா மற்றும் மலேசியா

இ. இந்தியா மற்றும் சீனா

ஈ. இந்தியா மற்றும் ரஷ்யா

11. இந்தியாவின் முதல் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஹைட்ரஜன் எரிபொருள் செல் படகானது உத்தர பிரதேச மாநிலத்தின் எந்த இடத்தில் சேவைக்காகப் பயன்படுத்தப்பட்டது?

அ. லக்னோ

ஆ. கான்பூர்

இ. வாரணாசி

ஈ. அயோத்தி

12. இந்தியாவில் சிறுத்தைகளின் கணக்கெடுப்பு – 2022 என்ற அறிக்கையின்படி, எந்த மாநிலத்தில் சிறுத்தைகள் அதிக அளவில் உள்ளன?

அ. தமிழ்நாடு

ஆ. மத்திய பிரதேசம்

இ. உத்தர பிரதேசம்

ஈ. மகாராஷ்டிரா

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. ‘அதிதி’ திட்டம்.

பாதுகாப்புத் துறையில் புதிய தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதற்கான, ‘அதிதி’ திட்டத்தை பாதுகாப்புத்துறை அமைச்சர் இராஜ்நாத் சிங் தொடக்கி வைத்தார்.

‘அதிதி’ திட்டத்தின்கீழ் பாதுகாப்புத்துறையில் புதிய தொழினுட்பங்களை மேம்படுத்தி ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் புத்தாக்க நிறுவனங்களுக்கு `25 கோடி வரை மானியம் வழங்கப்படுகிறது. `750 கோடி மதிப்பிலான இத்திட்டம் 2024-2026 வரை செயல்படுத்தப்படவுள்ளது. இந்திய ராணுவம், கப்பற்படை, விமானப்படை உள்பட பாதுகாப்புத் துறைகளுக்குத் தேவைப்படுகின்ற கடினமான மற்றும் சவாலான முப்பது தொழில்நுட்பங்களை உருவாக்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்குமாகும்.

2. சுமன் குமாரி – BSFஇன் முதல் பெண் ‘ஸ்னைப்பர்’.

எல்லைப் பாதுகாப்புப் படையில் (BSF) தொலைதூரத்திலிருந்து குறிதவறாது சுடும் முதல் பெண் என்ற பெருமையை சுமன் குமாரி பெற்றுள்ளார். இமாசல பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுமன் குமாரி (28), கடந்த 2021ஆம் ஆண்டில் உதவி ஆய்வாளராக BSFஇல் இணைந்தார்.

3. பாரீஸ் ஒலிம்பிக்கிற்குத் தகுதி: வரலாறு படைத்தது இந்திய டேபிள் டென்னிஸ் அணிகள்.

இந்திய ஆடவர், மகளிர் டேபிள் டென்னிஸ் அணிகள் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்று வரலாறு படைத்தன. ஒலிம்பிக் போட்டியில் 2008ஆம் ஆண்டு முதல் டேபிள் டென்னிஸ் விளையாடப்பட்டு வரும் நிலையில், அணிகள் பிரிவில் இந்தியா அந்தப் போட்டிக்கு தகுதிபெற்றது இதுவே முதல் முறையாகும்.

4. விவ​சா​யி​க​ளுக்​குக் கடன்: ‘இ-கி​சான் உபஜ் நிதி’ அறி​மு​கம்.

விளைபொருள்களை அடகு வைத்து விவசாயிகள் கடன்பெற, ‘இ-கிசான் உபஜ் நிதி’ என்ற எண்ம தளத்தை மத்திய உணவுத்துறை அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது. ‘இ-கிசான் உபஜ் நிதி’ தளம்மூலம், எந்தப் பிணை​யமும் இல்லாமல் 7 சதவீத வட்டி விகிதத்தில் விவசாயிகளால் எளிதில் கடன் பெற முடியும்.

5. கல்பாக்கம் அதிவேக ஈனுலை திட்டம்.

தமிழ்நாட்டின் கல்பாக்கத்தில் உள்ள இந்தியாவின் முதலாவது அதிவிரைவு ஈனுலையில் 500 மெகாவாட் (MW) ‘கோர் லோடிங்’ பணி தொடங்கப்பட்டது. இந்தியாவின் மிக மேம்பட்ட அணு உலை-முன்மாதிரி விரைவு உற்பத்தி உலையை கட்டுவதற்கும், இயக்குவதற்கும் பாரதிய நாபிகியா வித்யுத் நிகாம் லிமிடெட் (BHAVINI) உருவாக்க 2003இல் அரசு ஒப்புதல் அளித்தது. இந்த முன்மாதிரி வகை அதிவிரைவு ஈனுலை முழுமையாக வடிவமைப்பு செய்யப்பட்டு உள்நாட்டிலேயே கட்டப்பட்டுள்ளது. இந்த அதிவிரைவு ஈனுலை செயல்பாட்டுக்கு வந்தால், ரஷ்யாவுக்கு அடுத்தபடியாக வணிக ரீதியில் இயங்கும் விரைவு ஈனுலைகொண்ட இரண்டாவது நாடாக இந்தியா இருக்கும்.

6. 2015ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள்.

சிறந்த திரைப்படம் முதல் பரிசு: தனி ஒருவன்.

சிறந்த திரைப்படம் இரண்டாம் பரிசு: பசங்க 2.

சிறந்த திரைப்படம் மூன்றாம் பரிசு: பிரபா.

சிறந்த திரைப்படம் சிறப்புப்பரிசு: இறுதிச்சுற்று.

பெண்களைப்பற்றி உயர்வாகச் சித்திரிக்கும் படம் (சிறப்புப் பரிசு): 36 வயதினிலே.

சிறந்த நடிகர்: மாதவன் (இறுதிச்சுற்று).

சிறந்த நடிகை: ஜோதிகா (36 வயதினிலே).

சிறந்த வில்லன் நடிகர்: அரவிந்த்சாமி (தனி ஒருவன்).

சிறந்த நகைச்சுவை நடிகர்: சிங்கம்புலி (அஞ்சுக்கு ஒண்ணு).

சிறந்த நகைச்சுவை நடிகை: தேவதர்ஷினி (திருட்டுக்கல்யாணம்/36 வயதினிலே)

சிறந்த இயக்குநர்: சுதா கொங்கரா (இறுதிச்சுற்று).

சிறந்த இசையமைப்பாளர்: ஜிப்ரான் (உத்தம வில்லன் / பாபநாசம்).

சிறந்த பாடலாசிரியர்: விவேக் (36 வயதினிலே).

7. சைபர் குற்றங்களைத் தடுக்க புதிய வசதி.

மத்திய தொலைத்தொடர்புத்துறை சார்பில், தொலைத்தொடர்பு பயனாளிகளின் பாதுகாப்புக்காக செயல்பட்டு வரும் ‘சஞ்சார் ஷாத’ இணையதளத்தில் ‘சாக்ஷு’ என்ற புதிய வசதி மற்றும் இணைய மோசடிகளைத் தடுக்கும் வகையில் ‘எண்ம நுண்ணறிவு தளம்’ ஆகியவை புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

சைபர் குற்றங்கள், நிதிமோசடி, போலியான விளம்பரங்கள், கடன் சலுகை, வங்கி KYC புதுப்பிப்பு, சந்தேகப்படும் வகையிலான குறுஞ்செய்திகள், மோசடி அழைப்புகள் உள்பட தவறான நோக்கங்களுக்காக தொலைத்தொடர்பு சேவையைப் பயன்படுத்துவதுகுறித்து பொதுமக்களுக்கு சந்தேகம் ஏற்படுமாயின் இப்புதிய வசதியை பயன்படுத்தி புகாரளிக்கலாம்.

Exit mobile version