Tnpsc Current Affairs in Tamil – 5th January 2024

1. “Why Bharat Matters” என்ற தலைப்பில் அண்மையில் வெளியிடப்பட்ட நூலின் ஆசிரியர் யார்?

அ. அமித் ஷா

ஆ. நிர்மலா சீதாராமன்

இ. S ஜெய்சங்கர்

ஈ. இராஜ்நாத் சிங்

2. மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள குனோ தேசியப்பூங்காவில் சமீபத்தில் மூன்று குட்டிகளை ஈன்றெடுத்த பெண் சிறுத்தையின் பெயரென்ன?

அ. ஆராத்யா

ஆ. ஆத்யா

இ. வேணி

ஈ. ஆஷா

3. அண்மையில் புவிசார் குறியீடு பெற்ற, அருணாச்சல பிரதேச மாநிலத்தைச் சார்ந்த மூன்று பொருட்கள் எவை?

அ. ஆதி கேகிர், வாஞ்சோ கைவினைப்பொருட்கள், சாங்லாங் ஆடைகள்

ஆ. அபதானி அரிசி, ஆதி கேகிர், திபெத்திய கம்பளங்கள்

இ. ஆதி கேகிர், திபெத்திய தரைவிரிப்புகள், வாஞ்சோ மர கைவினைப்பொருட்கள்

ஈ. காம்தி அரிசி, ஆதி கேகிர், சாங்லாங் ஆடைகள்

4. Chip War: The Fight for the World’s Most Critical Technology” என்ற நூலின் ஆசிரியர் யார்?

அ. யுவல் நோவா ஹராரி

ஆ. மால்கம் கிளாட்வெல்

இ. கிறிஸ் மில்லர்

ஈ. வால்டர் ஐசக்சன்

5. எந்த ஆண்டு, சாவித்ரிபாய் புலே, பெண்களுக்கான நாட்டின் முதல் பள்ளியை நிறுவினார்?

அ. 1835

ஆ. 1848

இ. 1855

ஈ. 1860

6. எந்தப் பொதுத்துறை விண்வெளி நிறுவனம் இந்தியாவின் GSAT-20 செயற்கைக்கோளை 2024ஆம் ஆண்டில் SpaceX ஏவுகலம்மூலம் ஏவவுள்ளது?

அ. இந்திய விண்வெளி ஆய்வு மையம் (ISRO)

ஆ. ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிட்

இ. நியூஸ்பேஸ் இந்தியா லிட்

ஈ. ஆன்ட்ரிக்ஸ் கார்ப்பரேஷன் லிட்

7. தேசிய நெடுஞ்சாலைகளுக்கான பசுமைப் பரப்புக் குறியீட்டை உருவாக்குவதற்காக தேசிய தொலைநிலை உணர்திறன் மையத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அண்மையில் கையெழுத்திட்ட அமைப்பு எது?

அ. சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம்

ஆ. இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம்

இ. இந்திய தரநிலைகள் பணியகம்

ஈ பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம்

8. ஐஐடி-மெட்ராசில் (IIT-M) மீத்தட (hyperloop) போக்குவரத்து தொழில்நுட்பத்திற்கான ஆசியாவின் முதல் சோதனை வசதியை அமைக்கவுள்ள பெருநிறுவன குழுமம் எது?

அ. அதானி குழுமம்

ஆ. வேதாந்தா லிட்

இ. ஆர்சிலர் மிட்டல்

ஈ. ஜிண்டால் ஸ்டீல் அண்ட் பவர் லிட்

9. கிளென்மார்க்கால் அண்மையில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட உயிரிமாதிரி நீரிழிவு நோய் எதிர்ப்பு மருந்தின் பெயர் என்ன?

அ. இன்சுஜென்

ஆ. லிராஃபிட்

இ. கிளைசிபேஜ்

ஈ. ஜானுக்லிஃபை

10. CCRASஉடன் இணைந்து ஆயுர்வேதத்தில் மருத்துவ ஆய்வுகளை மேம்படுத்துவதற்காக, ‘SMART 2.0’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்திய அமைப்பு எது?

அ. ஆயுஷ் அமைச்சகம்

ஆ. NITI ஆயோக்

இ. இந்திய மருத்துவ முறைகளுக்கான தேசிய ஆணையம்

ஈ. சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம்

11. இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையத்தின் (I4C) தற்போதைய (2024) தலைமைச் செயலதிகாரி யார்?

அ. சஞ்சய் குண்டு

ஆ. இராஜேஷ் குமார்

இ. இராகேஷ் அஸ்தானா

ஈ. அஜய் பல்லா

12. 2024 ஜனவரி.01 முதல் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களை அரசு அலுவலகங்கள் வாங்குவதை தடை செய்துள்ள மாநில அரசு எது?

அ. இமாச்சல பிரதேசம்

ஆ. அருணாச்சல பிரதேசம்

இ. உத்தர பிரதேசம்

ஈ. மத்திய பிரதேசம்

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. தமிழ் எழுத்துக்களால் உருவான 20 அடி உயர திருவள்ளுவர் சிலை!

கோயம்புத்தூர் மாவட்டம் குறிச்சி குளக்கரையில் தமிழ் எழுத்துக்களால் உருவாக்கப்பட்ட 20 அடி உயரங்கொண்ட திருவள்ளுவர் சிலையை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் காணொலிக்காட்சிமூலம் திறந்து வைத்தார்.

2. நேபாளத்திலிருந்து 10,000 MW மின்சாரம்: இந்தியா ஒப்பந்தம்.

நேபாளத்திலிருந்து அடுத்த பத்து ஆண்டுகளில் 10,000 மெகாவாட் (MW) மின்சாரத்தை வாங்க அந்த நாட்டுடன் இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டது. நேபாளத்திடமிருந்து தற்போது 450 MW மின்சாரத்தை இந்தியா இறக்குமதி செய்துவரும் நிலையில், அடுத்த பத்து ஆண்டுகளில் அதை 10,000 MWஆக அதிகரிக்க இந்த ஒப்பந்தம் வழிவகை செய்யும். இமயமலைத் தொடர்களில் இருந்து உருவாகும் மகா காளி, கர்னாலி, சப்த கந்தகி, சப்த கோசி ஆகிய 4 முக்கிய ஆறுகள், இந்தியாவில் கங்கையாற்றை அடைவதற்குமுன் நேபாள பள்ளத்தாக்குகளில் பாய்ந்து ஓடுகின்றன. இந்த ஆறுகளின் குறுக்கே நீர்மின் நிலையங்களை அமைக்க இந்தியா உதவியுள்ளது. அங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை வாங்கும் இந்த ஒப்பந்தம், இரு நாட்டு நல்லுறவின் அடுத்தகட்டமாக பார்க்கப்படுகிறது.

நேபாளத்தின், ‘முனல்’ என்ற செயற்கைக்கோள் மற்றும் ஜாஜர்கோட் நிலநடுக்கத்துக்குப் பிந்தைய நிவாரண வழங்கலின் 5ஆவது தவணையை விடுவித்தல்போன்ற ஒப்பந்தங்களும் கையொப்பமாகின.

3. ‘BIMSTEC’ பொதுச்செயலராக இந்திர மணி பாண்டே பதவியேற்பு.

‘BIMSTEC’ கூட்டமைப்பின் பொதுச்செயலராக இந்தியாவின் இந்திர மணி பாண்டே பதவியேற்றார். இந்தியர் ஒருவர் BIMSTEC கூட்டமைப்பின் பொதுச்செயலராக நியமிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். BIMSTEC (வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார கூட்டமைப்பு) என்பது இந்தியா, வங்கதேசம், இலங்கை, மியான்மர், தாய்லாந்து, நேபாளம், பூடான் ஆகிய நாடுகளை உள்ளடக்கியது. இந்த அமைப்பின் நான்காவது பொதுச் செயலராக முதல்முறையாக இந்தியாவைச் சேர்ந்த இந்திர மணி பாண்டே பதவியேற்றார்.

4. தமிழ்நாட்டில் முதன்முறையாக கோயம்புத்தூரில் இதயம் காப்போம் திட்டம்.

தமிழ்நாட்டில் முதன்முறையாக கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதயம் காப்போம் திட்டத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சகம் தொடங்கிவைத்தது. இந்தத் திட்டத்தால், கிராமங்களில் யாருக்காவது சிறு அளவிலான இதய பாதிப்பு ஏற்பட்டால், அங்குள்ள துணை சுகாதார நிலையங்களு -க்குச் சென்று, செவிலியரை அணுக வேண்டும். செவிலியர் இருதயச் சிறப்பு மருத்துவர்களை தொடர்புகொண்டு தேவையான சிகிச்சைகளை வழங்கிடத் தொடங்குவார்கள். அதில் முதல்கட்டமாக, செவிலியரிடம் தரப்பட்டுள்ள 14 மாத்திரைகளை உட்கொள்ளச் செய்வதன்மூலம் உடனடியாக உயிரைக் காப்பாற்றிட முடியும்.

Exit mobile version