Tnpsc Current Affairs in Tamil – 5th & 6th November 2023

1. ‘உலக உணவு இந்தியா-2023’ என்ற நிகழ்ச்சியை நடத்தும் நகரம் எது?

அ. சென்னை

ஆ. புது தில்லி 🗹

இ. கோயம்புத்தூர்

ஈ. காந்தி நகர்

2. ‘2023 – ஏற்புத்திறன் இடைவெளி அறிக்கையை’ வெளியிட்ட நிறுவனம் எது?

அ. உலக வங்கி 🗹

ஆ. UNEP

இ. IMF

ஈ. WEF

3. ‘காலநிலை சேவைகளின் நிலை’ என்பது கீழ்க்காணும் எந்த நிறுவனத்தால் வெளியிடப்படும் ஓர் ஆண்டு அறிக்கையாகும்?

அ. FAO

ஆ. WMO 🗹

இ. UNEP

ஈ. IEA

4. இந்தியாவில் சிமென்ட் துறை குறித்த சந்தை ஆய்வை தொடங்கியுள்ள நிறுவனம் எது?

அ. NHAI

ஆ. NITI ஆயோக்

இ. இந்திய போட்டி ஆணையம் 🗹

ஈ. RBI

5. 2023இல், ‘நிலையான வர்த்தகம் மற்றும் தரநிலைகளுக்கான சர்வதேச மாநாட்டை’ நடத்திய நாடு எது?

அ. இலங்கை

ஆ. ஜெர்மனி

இ. இந்தியா 🗹

ஈ. ஆஸ்திரேலியா

6. ‘பசிமிகு இடங்கள் குறித்த கண்ணோட்ட அறிக்கையை’ வெளியிட்ட நிறுவனம் எது?

அ. FAO-WFP 🗹

ஆ. UNEP-FAO

இ. FAO-NABARD

ஈ. உலக வங்கி- NABARD

7. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘கெப்லர்-385’ என்பதொரு __________?

அ. சிறுகோள்

ஆ. ஏழு-கோள் அமைப்பு 🗹

இ. செயற்கைக்கோள்

ஈ. விண்மீன்

8. விரிவான சாதி அடிப்படையிலான மக்கள்தொகை கணக்கெடுப்பை மேற்கொள்ள அனுமதி அளித்துள்ள மாநிலம் எது?

அ. ஆந்திர பிரதேசம் 🗹

ஆ. கர்நாடகம்

இ. கேரளா

ஈ. அஸ்ஸாம்

9. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற ஸ்ரீஹரி நடராஜ் என்பாருடன் தொடர்புடைய விளையாட்டு எது?

அ. கிரிக்கெட்

ஆ. நீச்சல் 🗹

இ. செஸ்

ஈ. டென்னிஸ்

10. சமீபத்தில் எந்நாட்டுடனான பெயர்ச்சி & இடம்பெயர்வு கூட்டாண்மை ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டது?

அ. ஓமன்

ஆ. பஹ்ரைன்

இ. இத்தாலி 🗹

ஈ. சவூதி அரேபியா

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. இந்திய தலைமை தகவல் ஆணையராக ஹீராலால் சாமரியா பதவியேற்பு.

இந்திய தலைமை தகவல் ஆணையராக ஹீராலால் சாமரியா பதவியேற்றார். குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு அவருக்குப் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். தலைமை தகவல் ஆணையர் தலைமையில் செயல்படும் CICஇல் அதிகபட்சமாக பத்துத் தகவலாணையர்கள் இருக்கலாம். தலைமை தகவலாணையர் மற்றும் தகவலாணையர்கள் 65 வயது வரை அப்பதவியில் நீடிக்கலாம். கடந்த அக்.3ஆம் தேதி அன்று இந்திய தலைமை தகவலாணையர் YK சின்ஹாவின் பதவிக்காலம் நிறைவடைந்ததையடுத்து அந்தப் பதவி காலியாக இருந்தது. இந்நிலையில், இந்திய தலைமை தகவல் ஆணையராக ஹீராலால் சாமரியா பதவியேற்றார்.

2. ‘பாரத்’ கோதுமை மாவு கிலோ ஒன்று `27.50-க்கு விற்பனை: தில்லியில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தொடங்கிவைப்பு.

சாதாரண நுகர்வோருக்கு கட்டுபடியாகும் விலையில் கோதுமை மாவு கிடைக்க, ‘பாரத்’ முத்திரையுடன் (பிராண்ட்) ஒரு கிலோ கோதுமை மாவு `27.50-க்கு மிகாமல் சில்லறை விற்பனையகங்களில் கிடைக்க மத்திய நுகர்வோர் பாதுகாப்பு உணவு, பொதுவிநியோகத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதை முன்னிட்டு இந்தக் கோதுமை மாவு விற்பனைக்கான 100 நடமாடும் விற்பனை வாகனங்களை மத்திய நுகர்வோர்த் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தில்லி கடமைப் பாதையில் கொடியசைத்து தொடங்கிவைத்தார். மேலும், நுகர்வோருக்கு பருப்பும், ‘பாரத்’ பிராண்டில் `60/கிலோவுக்கு வழங்கப்படுகிறது.

IMPORTANT LINKS

TNPSC Current Affairs

Tnpsc Current Affairs 2024 in Tamil & English Monthly Pdf files Download Quiz Online Test

Winmeen: Install the Winmeen App – Daily Free & Premium Tnpsc Study Materials & Online Test

https://play.google.com/store/apps/details?id=co.robin.jbzwb

Winmeen: Winmeen Tnpsc Test Series – Samacheer lesson Wise Test + Previous Year Model Test for Tnpsc Group 1,2, 4 & VAO

https://wp.me/p7JanY-ag8

Exit mobile version