1. அண்மையில், $500000 டாலர்கள் மதிப்புமிக்க WISE பரிசைப் பெற்ற இந்திய ஆர்வலர் சஃபீனா ஹுசைனுடன் தொடர்புடையது எது?
அ. பெண் கல்வி 🗹
ஆ. சுற்றுச்சூழல்
இ. வறுமை
ஈ. பெண்கள் அதிகாரமளித்தல்
- இந்திய கல்வி ஆர்வலர் சஃபீனா ஹுசைன் கிராமப்புற இந்தியா முழுவதும் பெண் கல்வியை மேம்படுத்தும் அவரது பணிக்காக $500,000 மதிப்புமிக்க WISE பரிசைப்பெற்றுள்ளார். அவரது அரசு சாரா அமைப்பான, ‘எஜுகேட் கேள்ஸ்’ 1.4 மில்லியனுக்கும் அதிகமான பெண்கள் கல்வி கற்க உதவியுள்ளது. அவர்கள் அனைவரும் கல்வி வசதி இல்லாத தொலைதூர கிராமங்களில் சேர்ந்தவர்களாவர்.
2. இந்தியக் கடற்படையின், ‘மிலன்-2024’ என்ற மிகப்பெரிய பலதரப்புப் பயிற்சி நடைபெறும் இடம் எது?
அ. கோவா
ஆ. மும்பை
இ. விசாகப்பட்டினம் 🗹
ஈ. கொச்சின்
- இந்தியக் கடற்படையானது அதன் மிகப்பெரிய பலதரப்புப் பயிற்சியான, ‘மிலன்-2024’ஐ விசாகப்பட்டினத்தில் நடத்த உள்ளது. இந்தப் பயிற்சியின்போது இந்தியக் கடற்படை தனது விமானம் தாங்கிக் கப்பல்களான INS விக்ரமாதித்யா மற்றும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட புதிய INS விக்ராந்த் ஆகிய இரண்டையும் பங்கேற்க வைக்கும். இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் பாதுகாப்பு வழங்குநராக இந்தியா விரிவடைந்து வருவதை வெளிப்படுத்தும் வகையில் இந்த நிகழ்வு விளங்கும். இதில் இந்தியாவின் 50 நட்புநாட்டு கடற்படைகள் பங்கேற்கும்.
3. அதிகமறியப்படாத பழங்குடியின உரிமைக் கட்சியான, ‘பாரத ஆதிவாசி கட்சி’ அண்மையில் எந்த மாநிலத்தில் நடந்த தேர்தலில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது?
அ. சத்தீஸ்கர்
ஆ. மத்திய பிரதேசம் 🗹
இ. மிசோரம்
ஈ. தெலுங்கானா
- அதிகமறியப்படாத பழங்குடியின உரிமைக் கட்சியான, ‘பாரத ஆதிவாசி கட்சி’ மத்திய பிரதேசத்தில் நடந்த தேர்தலில் அதன் முதல் வெற்றியைப் பதிவு செய்தது. இது விளிம்புநிலை ஆதிவாசி சமூகங்களின் அரசியல் ஈடுபாட்டைக் குறிக்கிறது. பாரத ஆதிவாசி கட்சியின் வேட்பாளர், பழங்குடியினருக்கென ஒதுக்கப்பட்ட தொகுதியில் அமைந்துள்ள சைலானா சட்டமன்றத் தொகுதியைக் கைப்பற்றினார். பாரத ஆதிவாசி கட்சியின் நிறுவனர் ராஜ்குமார் ரோட், 2023 இராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தலில் சோராசி தொகுதியில் வென்றார். சுற்றுச்சூழலுக்கு உகந்த முதல் கட்சி என்று அக்கட்சி தன்னை அழைத்துக் கொள்கிறது.
4. கவாச் தொழில்நுட்பத்துடன் தொடர்புடையது எது?
அ. இரயில்வே 🗹
ஆ. கிரிப்டோகரன்சி
இ. சுரங்கம்
ஈ. ஆட்டோமொபைல்
- ‘கவாச்’ என்பது உள்நாட்டில் உருவாக்கப்பட்ட தானியங்கி இரயில் பாதுகாப்பு அமைப்பாகும். இது உயர் தொழில் நுட்பத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது மீவுயர் பாதுகாப்புச் சான்றிதழைப் பெற்றுள்ளது. தானியங்கி நிறுத்திகளைப் பயன்படுத்துவதன்மூலம் குறிப்பிட்ட வேக வரம்பிற்குள் இரயிலை இயக்க ஓட்டுநருக்கு, ‘கவாச்’ உதவுகிறது; மேலும், மோசமான வானிலையின்போது இரயிலைப் பாதுகாப்பாக இயக்கவும் இது உதவுகிறது.
- ஓட்டுநர்களால் மனிதத்தவறுகளால் ஏற்படும் விபத்துகளைத் தடுக்க இந்தியாவின் 66,000 கிமீ நீளமுள்ள ரயில்வே வலையமைப்பில், ‘கவாச்’ பயன்படுத்தப்படுகிறது.
5. அண்மையில் அறிவிக்கப்பட்ட செயல்திட்ட வரைபடத்தின்படி, நகர எரிவாயு விநியோகத்தில், எந்த ஆண்டளவில் 5% அழுத்தப்பட்ட உயிரிவாயுவை கட்டாயமாக கலப்பது செயல்படுத்தப்படும்?
அ. 2024
ஆ. 2025
இ. 2027
ஈ. 2029 🗹
- தேசிய உயிரி எரிபொருள் ஒருங்கிணைப்புக் குழுவால் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட செயல்திட்ட வரைபடம், இந்தியா முழுவதுமுள்ள நகர எரிவாயு விநியோக வலையமைப்புகளில் சுருக்கப்பட்ட உயிரிவாயு கலப்பை படிப்படியாக கட்டாயமாக்குவதற்கான ஒரு திட்டத்தை வகுத்துள்ளது. இச்செயல்திட்ட வரைபடத்தின்படி, நகர எரிவாயு விநியோக நிறுவனங்கள் 2025-26 நிதியாண்டிலிருந்து போக்குவரத்துக்காக சுருக்கப்பட்ட இயற்கை எரிவாயு (CNG) மற்றும் குழாய் இயற்கை எரிவாயு (PNG) உடன் சுருக்கப்பட்ட உயிரிவாயுவை கலக்கத் தொடங்கவேண்டும்.
- 2025-26இல் மொத்த சுருக்கப்பட்ட இயற்கை எரிவாயு மற்றும் குழாய் இயற்கை எரிவாயு நுகர்வுகளில் இக்கலப்பு சதவீதம் 1%ஆக இருக்கும், இது 2026-27இல் 3%ஆகவும், 2027-28இல் 4%ஆகவும் படிப்படியாக அதிகரிக்கும். 2028-29 நிதியாண்டு முதல், இந்தக் கலப்புச் சதவீதம் 5%ஆக இருக்கும்.
6. அண்மையில் சர்வதேச கடல்சார் அமைப்புக் குழுமத்திற்கு அதிக எண்ணிக்கையிலான வாக்குடன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடு எது?
அ. இந்தியா 🗹
ஆ. ரஷ்யா
இ. அமெரிக்கா
ஈ. ஜப்பான்
- சர்வதேச கடல்சார் அமைப்பின் அவை 2024-25ஆம் ஆண்டுக்கான அதன் அவைக்கான அதன் குழுமத்தின் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்தது. சர்வதேச கடல்சார் அமைப்பு குழுமத்திற்கு இந்தியா மீண்டும் தேர்ந்தெடுக்கப்ப -ட்டுள்ளது. “சர்வதேச கடல்வழி வர்த்தகத்தில் அதிக ஆர்வம்கொண்ட” 10 நாடுகள் என்ற வகையின்கீழ், பிரேசில், ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து, ஸ்பெயின், சுவீடன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) ஆகிய நாடுகளுடன் இந்தியா தெரிவாகியுள்ளது.
7. சுற்றுச்சூழல் அமைச்சகம் மற்றும் UNDP அறிக்கையின்படி, இந்தியா, ஓசோனை சிதைக்கும் எந்த இரசாயனத்தை படிப்படியாக ஒழித்துள்ளது?
அ. HCFC 141b 🗹
ஆ. CCL3F
இ. ஹாலோன் 1211
ஈ. CFC-112
- சுற்றுச்சூழல் அமைச்சகம் மற்றும் UNDP அறிக்கையின்படி, ஓசோன் அருகலுக்கும் காலநிலை வெப்பமயமாதலுக்கும் காரணமாக HCFC 141b (1,1-Dichloro-1-fluoroethane) ஆகிய வேதிகளை இந்தியா படிப்படியாக குறைக்கும் பணியில் இறங்கியுள்ளது. இதற்குமேல் தயாரிக்கப்படும் புதிய உபகரணத்தில் இதுபோன்றோ அல்லது இவ்வாயுவையோ பயன்படுத்தாமல் இருப்பதற்கான திட்டத்தையும் இந்தியா கொண்டுள்ளது. 35% அளவே கட்டுப்படுத்த வேண்டும் என்ற இலக்குக்கு எதிராக, இந்தியா 44 சதவீத குறைப்பை எட்டியுள்ளது.
8. தனது முதல் எக்ஸ்ரே போலரிமீட்டர் செயற்கைக்கோளை (XPoSat) ஏவுவதற்கான திட்டத்தை அறிவித்துள்ள விண்வெளி அமைப்பு எது?
அ. ISRO 🗹
ஆ. NASA
இ. JAXA
ஈ. ESA
- தீவிர X-கதிர் மூலங்களின் துருவமுனைப்பை ஆராய்வதை நோக்கமாகக் கொண்டு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தனது முதல் X-ray Polarimeter Satellite (XPOSat)ஐ ஏவுவதற்கான திட்டத்தை அறிவித்துள்ளது. எக்ஸ்-ரே மூலங்களிலிருந்து வெளிப்படும் 8-30 keVஇன் ஆற்றல் அலைவரிசையில் எக்ஸ்-ரே துருவமுனைப்பு அளவீடு மற்றும் 0.8-15 keV ஆற்றல் அலைவரிசையில் காஸ்மிக் எக்ஸ்-ரே மூலங்களின் நீண்டகால நிறமாலை மற்றும் தற்காலிக ஆய்வுகள் இந்தத் திட்டத்தின் நோக்கங்களில் அடங்கும். இதன் பணிக்காலம் ஐந்தாண்டுகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
9. 5ஆவது உலகளாவிய ஆயுர்வேத விழா நடைபெற்ற நகரம் எது?
அ. சென்னை
ஆ. மதுரா
இ. திருவனந்தபுரம் 🗹
ஈ. வாரணாசி
- குடியரசுத்துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர் சமீபத்தில் கேரளத்தின் திருவனந்தபுரத்தில் உலகளாவிய ஆயுர்வேத விழாவின் 5ஆம் பதிப்பைத் தொடங்கி வைத்தார். 2023 – உலகளாவிய ஆயுர்வேத விழா, “உடல்நலத்தில் வளர்ந்து வரும் சவால்கள் மற்றும் ஆயுர்வேத மறுமலர்ச்சி” என்ற கருப்பொருளுடன் டிசம்பர் 1 முதல் 5 வரை நடைபெற்றது. இந்த மாநாட்டில் கேரள ஆளுநர், கேரள முதல்வர், மத்திய ஆயுஷ் அமைச்சர், மத்திய கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா, மொரீஷியஸ் குடியரசுத்தலைவர், தீவுநாடு இலங்கையின் சுதேச மருத்துவத்துறை அமைச்சர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
10. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அதிகாரப்பூர்வ காலாண்டு மற்றும் வருடாந்திர மதிப்பீடுகளை வெளியிடும் நிறுவனம் எது?
அ. NSO 🗹
ஆ. NITI ஆயோக்
இ. NASSCOM
ஈ. DPIIT
- தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் (NSO) மதிப்பீடுகளின்படி, 2023 ஜூலை-செப்டம்பர் காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 7.6%ஆக இருந்தது. இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கணித்த 6.5 சதவீதம் உட்பட பெரும்பாலான மதிப்பீடுகளைவிட 7.6 சதவீத GDP வளர்ச்சி சரியாக உள்ளது. ஏப்ரல்-ஜூன் காலாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி 6.2 சதவீதமாக இருந்தது.
செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்
1. சியாச்சினில் முதல் முறையாக இராணுவ பெண் மருத்துவர்!
சியாச்சின் இராணுவத்தின் மருத்துவப் பிரிவில் மருத்துவராக தேர்வானவர் கேப்டன் கீதிகா கௌல். இவர் உலகின் மிகவுயரமான போர்க்களமான சியாச்சின் பனிமலைப்பகுதியில் பணியாற்றும் முதல் பெண் மருத்துவராவார். இவர் இராணுவத்தின் பனிச்சிறுத்தை படைப்பிரிவில் சேர்ந்து சியாச்சினில் பணியாற்றுவதற்கான பிரத்யேக பயிற்சியை சியாச்சின் போர்க்கள பள்ளியில் பெற்றார்.
2. கென்யாவுக்கு இந்தியா `2,084 கோடி கடனுதவி.
கென்யாவில் வேளாண் துறை நவீனமயமாக்கலுக்காக அந்நாட்டுக்கு இந்தியா சார்பில் `2,084 கோடி கடனுதவி வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
ஐந்து ஒப்பந்தங்கள் கையொப்பம்: இந்தியா-கென்யா இடையே பாதுகாப்பு, வர்த்தகம், எரிசக்தி, எண்ம பொது உட்கட்டமைப்பு, சுகாதாரம் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த ஐந்து ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.
3. தெலங்கானா புதிய முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி.
தெலங்கானா மாநிலத்தின் புதிய முதலமைச்சராக அம்மாநில காங்கிரஸ் தலைவர் ஏ. ரேவந்த் ரெட்டியை அக்கட்சி மேலிடம் தேர்வுசெய்தது.
3. ஜூனியர் ஆடவர் ஹாக்கி உலகக்கோப்பை.
ஜூனியருக்கான 13ஆவது ஆடவர் ஹாக்கி உலகக்கோப்பைப் போட்டி கோலாலம்பூரில் தொடங்கியது. 2001 மற்றும் 2016 ஆகிய சீசன்களில் இந்தியா பட்டம் வென்றுள்ளது. இந்திய ஹாக்கி அணியின் அணித் தலைவர் உத்தம் சிங் ஆவார்.
4. ‘சத்ரபதி’ சிவாஜி சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
இந்திய கடற்படை தினத்தையொட்டி (டிசம்பர்.04) மகாராஷ்டிர மாநிலம் சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் மராத்திய அரசர், ‘சத்ரபதி’ சிவாஜியின் உருவச்சிலையை பிரதமர் மோடி திறந்துவைத்தார்.
5. உணவு உற்பத்தியில் நாடு தன்னிறைவு பெறக் காரணமான எம். எஸ். சுவாமிநாதனுக்கு மாநிலங்களவையில் புகழாரம்
கடந்த செப்.28ஆம் தேதி மறைந்த M S சுவாமிநாதன் மாநிலங்களவையில் நியமன உறுப்பினராக ஆறு ஆண்டுகள் (2007-2013) பதவி வகித்தார். 1960களில் நாட்டின் விவசாய மறுமலர்ச்சிக்கு உறுதியான அடித்தளத்தை அமைத்து ‘பசுமைப்புரட்சியின் தந்தை’ என போற்றப்பட்டவர் பேராசிரியர் MS சுவாமிநாதன். உணவு உற்பத்தி அதிகரித்து இந்தியாவை தன்னிறைவு பெற்றதாக 1971இல் அறிவிக்கப்பட்டது.
‘உலக உணவுப்பரிசு’ முதன் முறையாக 1987ஆம் ஆண்டு பேராசிரியர் எம். எஸ். சுவாமிநாதனுக்கு வழங்கப்பட்டது. MS சுவாமிநாதனுக்கு 1966இல் பத்மஸ்ரீ, 1971-இல் ரமோன் மகசேசே விருது, 1972இல் பத்ம பூஷண், 1989இல் பத்ம விபூஷண் போன்ற விருதுகள் வழங்கப்பட்டிருந்ததும் மாநிலங்களவையில் குறிப்பிடப்பட்டது.