Tnpsc Current Affairs in Tamil – 4th January 2024

1. ஆண்டுதோறும், ‘உலக பிரெய்லி நாள்’ அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ. ஜனவரி.01

ஆ. ஜனவரி.02

இ. ஜனவரி.04

ஈ. ஜனவரி.06

2. அண்மையில் காலமான வேத பிரகாஷ் நந்தா சார்ந்த துறை எது?

அ. வேளாண்மை

ஆ. சுற்றுச்சூழல் பாதுகாப்பு

இ. பன்னாட்டு சட்டம்

ஈ. மனித உரிமைகள்

3. சிறுதொழில்களுக்கு கடன் வழங்குவதில் முன்னோடியாக விளங்கியதற்காக கடந்த 2006இல் அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்ற முகமது யூனுஸ் சார்ந்த நாடு எது?

அ. இந்தியா

ஆ. பாகிஸ்தான்

இ. வங்காளதேசம்

ஈ. சவூதி அரேபியா

4. இந்தியாவில் தேர்தல் பத்திரங்களை வெளியிடும் அமைப்பு எது?

அ. இந்திய ரிசர்வ் வங்கி

ஆ. SIDBI

இ NABARD

ஈ. பாரத வங்கி (SBI)

5. ஓர் அண்மைய அறிக்கையின்படி, 2023ஆம் ஆண்டில் இந்தியாவின் வேளாண் பொருட்கள் இறக்குமதியில் தாவர எண்ணெய்கள், பருப்பு வகைகள் மற்றும் பழங்களின் சதவீதம் எவ்வளவாக உள்ளது?

அ. 86.4%

ஆ. 62.1%

இ. 57.8%

ஈ. 72.1%

6. பசுமை ஹைட்ரஜன் திட்டத்திற்காக ஜாக்சன் கிரீன் என்ற நிறுவனத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்ட மாநில அரசு எது?

அ. தமிழ்நாடு

ஆ. இராஜஸ்தான்

இ. மத்திய பிரதேசம்

ஈ. மேற்கு வங்காளம்

7. அரிவாள் செல் இரத்தசோகையைக் கண்டறிவதற்காக சுகாதார அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட திட்டத்தின் பெயரென்ன?

அ. National Sickle Cell Anaemia Mission

ஆ. National Sickle Cell Anaemia Elimination Mission

இ. National Sickle Cell Anaemia Eradication Mission

ஈ National Sickle Cell Anaemia Control Mission

8. பூமி சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் புள்ளியின் வானியல் பதம் யாது?

அ. சங்கிராந்தி (Solstice)

ஆ. உத்தராயணம் (Equinox)

இ. சூரிய அண்மை நிலை (Perihelion)

ஈ. சூரிய சேய்மை நிலை (Aphelion)

9. அண்மையில் கிர்கிஸ்தானின் தேசிய சின்னமாக அறிவிக்கப்பட்ட விலங்கு எது?

அ. பனிச்சிறுத்தை

ஆ. யாக்

இ. கழுகு

ஈ. குதிரை

10. அருணாச்சல பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்ட, பட்காய் மலைகளின் பெயரால் அழைக்கப்படும் புதிய தவளை இனத்தின் பெயர் என்ன?

அ. Arunchalops patkaiensis

ஆ. Gracixalus patkaiensis

இ. Rana patkaiensis

ஈ. Kaloula patkaiensis

11. இந்தியன் எண்ணெய் நிறுவனத்தால் (IOCL) அண்மையில் தொடங்கப்பட்ட ஆசனூர் பைப்லைன் முனையம் அமைந்துள்ள மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. ஆந்திர பிரதேசம்

இ. கேரளா

ஈ. கர்நாடகா

12. பிரதம மந்திரி விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை செயல்படுத்தும் முதல் யூனியன் பிரதேசம் எது?

அ. லடாக்

ஆ. ஜம்மு & காஷ்மீர்

இ. புதுச்சேரி

ஈ. இலட்சத்தீவுகள்

13. CDSCOஆல் தொடங்கப்பட்ட, ‘தேசிய ஒற்றைச்சாளர அமைப்பின்’ முதன்மை நோக்கம் என்ன?

அ. சுகாதார ஆவணங்களை டிஜிட்டல் முறையில் மேலாண்மை செய்தல்

ஆ. மருத்துவ சாதன இறக்குமதியை சீரமைத்தல்

இ. மருத்துவ ஆராய்ச்சிக்கு நிதியளித்தல்

ஈ. பொது சுகாதாரத்தைக் கண்காணித்தல்

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் தமிழ்நாட்டுப் பெண்!

விருதுநகர் மாவட்டம் ஜோயல்பட்டியைச் சேர்ந்த முத்தமிழ்ச்செல்வி (34) நேபாளத்தில் அமைந்துள்ள உலகின் மிக உயரமான சிகரமான எவரெஸ்ட் சிகரத்தில் (8848.86 மீட்டர்) ஏறிய முதல் தமிழ்நாட்டுப் பெண் ஆவார்.

2. வளர்ச்சியைத் தடுக்கும் கார்பன் வரி.

“கார்பன் எல்லை வரி” எனப்படும் இறக்குமதி வரி வரும் 2026ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் என ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. அண்மையில் துபாயில் நடைபெற்ற காலநிலை மாற்ற மாநாட்டில் (COP 28), பிற நாடுகளிலிருந்து பொருள்களை இறக்குமதி செய்யும்போது கார்பன் கசிவைத்தடுப்பதே கார்பன் எல்லை வரியின் நோக்கமாகும் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்தது.

ஐரோப்பிய ஒன்றியம், மற்ற நாடுகளில் உற்பத்தி செய்யப்படும் பொருள்கள்மீது கார்பன் வரி விதிப்பது, ஐரோப்பாவில் உற்பத்தியாகும் பொருள்களை மலிவான விலைக்கு வளரும் நாடுகள் இறக்குமதி செய்வதைத் தடுக்கும் முயற்சி என்ற பார்வையில் பார்க்கப்படுகிறது. இதனால், இந்தியாவில் இயங்கி வரும் உரம், சிமென்ட், எஃகு, அலுமினியம், மின்சாரம், ஹைட்ரஜன் ஆகிய தொழிற்சாலைகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும்.

இந்நிலையில், இறக்குமதிப்பொருள்களுக்கு, “கார்பன் எல்லை வரி” விதிக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் திட்டம், வளர்ந்துவரும் நாடுகளை பாதிக்கும் என்பதால் இந்தியா இதனைத் தொடர்ந்து எதிர்த்து வருகிறது.

3. 5.33 கோடி கிராமப்புற வீடுகளில் குடிநீர் இணைப்பு இல்லை: மத்திய அரசு

கிராமப்புற பகுதிகளில் சுமார் 5.33 கோடி வீடுகளில் குடிநீர் இணைப்பு வழங்கப்படவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசு சார்பில் மாநிலங்களுடன் இணைந்து, ‘ஒவ்வொரு வீட்டிலும் குடிநீர்’ என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மாநில பட்டியலின்கீழ், குடிநீர் வழங்கல் உள்ளது. குடிநீர் விநியோகம் குறித்த திட்டமிடல், வடிவமைப்பு, ஒப்புதல் மற்றும் அதனை செயல்படுத்தும் திட்டங்கள் மாநிலங்களின் பொறுப்புக்குட்பட்டதாக உள்ளன.

கடந்த டிச.25ஆம் தேதி நிலவரப்படி, நாட்டின் 72.29 சதவீத கிராமங்களில் உள்ள வீடுகளில் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்குவதில் மேற்கு வங்காளம், இராஜஸ்தான் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்கள் மிகவும் பின்தங்கியுள்ளன.

தமிழ்நாட்டில் 78.59%…: தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 75 சதவீதத்துக்கும் அதிகமான கிராமங்களில் உள்ள வீடுகளில் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் அனைத்து வீடுகளிலும் குடிநீர் இணைப்பு: புதுச்சேரி, தெலங்கானா, குஜராத், கோவா, அந்தமான் & நிகோபார், தாத்ரா & நாகர் ஹவேலி, டாமன் & டையூ, ஹரியானா, பஞ்சாப், இமாசல பிரதேசம் ஆகிய 9 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள கிராமங்களில் அனைத்து வீடுகளிலும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது என்று மத்திய குடிநீர் வழங்கல் துறை தெரிவித்துள்ளது.

4. சென்னை புத்தகக் காட்சி தொடக்கம்:

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆண்டுதோறும் சென்னையில் புத்தகக் காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டுக்கான 47ஆவது புத்தகக்காட்சி தொடங்கியது.

5. ‘BRICS’ கூட்டமைப்பில் ஐந்து புதிய உறுப்புநாடுகள்.

‘BRICS’ கூட்டமைப்பில் எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய ஐந்து உறுப்பு நாடுகள் புதிதாக இணைந்துள்ளன. சர்வதேச விவகாரங்களில் மேற்கத்திய நாடுகளின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத் -தும் நடவடிக்கையாக பிரேஸில், ரஷியா, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள், ‘BRIC’ கூட்டமைப்பை கடந்த 2006ஆம் ஆண்டு செப்டம்பரில் நிறுவின. இதைத் தொடர்ந்து, 2010 செப்டம்பரில் தென்னாப்பிரிக்கா உறுப்பினராக ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகு, ‘BRICS’ என மறுபெயரிடப்பட்டது.

6. வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை!

வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவுசெய்துவிட்டு, வேலைவாய்ப்புக்காகக் காத்திருக்கும் இளைஞர்கள், இளம் பெண்கள் பயன்பெறும் வகையில், வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தை கடந்த 2006ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் மு. கருணாநிதி தொடங்கிவைத்தார். வேலைவாய்ப்பு அலுவலகங்க -ளில் பதிவுசெய்து, 5 ஆண்டுகளுக்கும் மேலாகக் காத்திருப்போருக்காக அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ், 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாதோருக்கு மாதந்தோறும் `200, 10ஆம் வகுப்பு தேர்ச்சி அடைந்தவர்களுக்கு `300, 12ஆம் வகுப்பு தேர்ச்சிபெற்றவர்களுக்கு `400, பட்டதாரிகளுக்கு `600 என 3 ஆண்டுகளுக்கு உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. அதே நேரத்தில், பதிவு செய்து ஓராண்டு காத்திருந்த மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரை உதவித் தொகை வழங்கப்படுகிறது. மேலும், உதவித்தொகையின் மதிப்பும் குறைந்தபட்சம் `600 முதல் `1000 வரை என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

7. ‘கலைச்செம்மல்’ விருது: ஓவிய, சிற்பக்கலைஞர்கள் விண்ணப்பிக்கலாம்.

‘கலைச்செம்மல்’ விருதுக்கு, ஓவியம், சிற்பக்கலைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு கூறியுள்ளது. இந்த விருதுக்கு, 50 வயதுக்கு மேற்பட்ட மரபுவழி மற்றும் நவீனபாணி ஓவிய, சிற்பக்கலைஞர்கள் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பிக்கும் படைப்பாளிகள் தங்களது 20 கலைப்படைப்புகளின் வண்ண ஒளிப்படங்களை இணைக்க வேண்டும். மாநில, தேசிய மற்றும் பன்னாட்டளவில் நடத்தப்பட்ட கலைக்காட்சிகளில் படைப்பாளர்களின் கலைப்படைப்புகள் இடம்பெற்றிருக்க வேண்டும்.

Exit mobile version