Tnpsc Current Affairs in Tamil – 3rd July 2024

1. 2024 – செயற்கை நுண்ணறிவுத் தயார்நிலைக் குறியீட்டில் (AIPI) இந்தியாவின் தரநிலை என்ன?

அ. 65ஆவது

. 72ஆவது

இ. 85ஆவது

ஈ. 62ஆவது

2. இந்திய நாட்டுப்புற மற்றும் பழங்குடியினக் கலைகளை, வசீகரிக்கும் விதத்தில் காட்சிப்படுத்தும், “ஹுனார்” என்ற கண்காட்சியை நடத்திய நகரம் எது?

அ. வாரணாசி

ஆ. காஞ்சிபுரம்

இ. துபாய்

ஈ. பாரிஸ்

3. அண்மையில் தனது மாநில பள்ளிப்பாடத்திட்டத்தில் அவசரநிலை பற்றிய அத்தியாயத்தை சேர்ப்பதாக அறிவித்த மாநில அரசு எது?

அ. தமிழ்நாடு

ஆ. மத்திய பிரதேசம்

இ. கேரளா

ஈ. அருணாச்சல பிரதேசம்

4. அண்மையில், ‘முதலமைச்சர் மஜி லட்கி பகின்’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்திய மாநில அரசு எது?

அ. மகாராஷ்டிரா

ஆ. ஒடிசா

இ. குஜராத்

ஈ. கேரளா

5. அண்மையில், நிதியியல் நடவடிக்கை பணிக்குழு (FATF) கூட்டம் நடைபெற்ற இடம் எது?

அ. சீனா

ஆ. பிரான்ஸ்

இ. இந்தோனேசியா

ஈ. சிங்கப்பூர்

6. GSAT 20 செயற்கைக்கோளின் முதன்மை நோக்கம் என்ன?

அ. பூமி கண்காணிப்பு

ஆ. தகவல் தொடர்பு

இ. வானிலை கண்காணிப்பு

ஈ. வழிசெலுத்தல்

7. அண்மையில், ‘மினி ரத்னா’ அந்தஸ்தைப்பெற்ற மத்திய மின்னணு நிறுவனம் (CEL) சார்ந்த அமைச்சகம் எது?

அ. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம்

ஆ. எரிசக்தி அமைச்சகம்

இ. மின்னணு மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்ப அமைச்சகம்

ஈ. MSME அமைச்சகம்

8. அண்மையில், ரெயில்வே பாதுகாப்புப் படை (RPF) அறிமுகப்படுத்திய சங்யான் செயலியின் முதன்மை நோக்கம் என்ன?

அ. ரெயில் அட்டவணையை வழங்குதல்

ஆ. குற்றவியல் சட்டங்கள்பற்றிய தகவல்களை RPF பணியாளர்களுக்குக் கற்பித்தல்

இ. ரெயில் பயணச்சீட்டு முன்பதிவுகளைக் கண்காணித்தல்

ஈ. RPF பணியாளர்களுக்கு சுகாதார ஆலோசனைகளை வழங்க

9. அனைவருக்கும் ஆரோக்கியத்தை உறுதிசெய்வதற்காக அண்மையில் மெய்நிகர் NQAS மதிப்பீடு மற்றும் தள உணவு உரிம (spot food licence) முயற்சியைத் தொடங்கியுள்ள அமைச்சகம் எது?

அ. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்

ஆ. சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம்

இ. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம்

ஈ. மின்சார அமைச்சகம்

10. அண்மையில், ஈராண்டுக்கு ஒருமுறை நடைபெறும் ரிம் ஆஃப் தி பசிபிக் (RIMPAC) பயிற்சியின் 29ஆவது பதிப்பு நடைபெற்ற இடம் எது?

அ. ஆக்லாந்து, நியூசிலாந்து

ஆ. ஹவாய், அமெரிக்கா

இ. பாரிஸ், பிரான்ஸ்

ஈ. கொல்கத்தா, இந்தியா

11. அண்மையில், இந்தியாவின் எந்த ஏரியில் 10 மெகாவாட் திறன்கொண்ட தனது முதலாவது மிதக்கும் சூரிய ஆற்றல் மின்னுற்பத்தி ஆலையை மத்திய ரெயில்வே நிர்வாகம் திறந்து வைத்தது?

அ. லோனார் ஏரி

ஆ. இகத்புரி ஏரி

இ. பெரியார் ஏரி

ஈ. வெண்ணா ஏரி

12. கேசவர் திருக்கோவில் அமைந்துள்ள மாநிலம் எது?

அ. ஒடிஸா

ஆ. கர்நாடகா

இ. கேரளா

ஈ. மகாராஷ்டிரா

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. பயிர்க்காப்பீட்டுக்கு ஜூலை.31 கடைசி: தமிழ்நாடு அரசு அறிவிப்பு.

நடப்பாண்டில் பிரதமர் பயிர்க்காப்பீட்டுத்திட்டம் `1,775 கோடியில் செயல்படுத்தப்படும் என நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மாநிலத்திலுள்ள 37 மாவட்டங்களில் குறுவை, சம்பா, நவரை ஆகிய மூன்று பருவங்களிலும் பயிர்க்காப்பீட்டுத்திட்டத்தைச் செயல்படுத்த தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

2. கீழடி அகழாய்வில் மீன் உருவிலான பானை ஓடுகள்.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் நடைபெறும் 10ஆம் கட்ட அகழாய்வில் மீன் உருவிலான இரு சிவப்பு வண்ண பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன. இந்த இரு ஓடுகளின் நீளம், அகலம் முறையே 4.5 செமீ., 4.3 செமீ ஆகும்.

3. 91% ரெயில்களை சரியான நேரத்தில் இயக்கி தெற்கு ரெயில்வே சாதனை.

தெற்கு ரெயில்வே நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 91.6 சதவீத ரெயில்களை சரியான நேரத்தில் இயக்கி சாதனை படைத்துள்ளது. மாதத்துக்கு 10,000 ரெயில்களை கையாளும் மண்டலங்களில் தெற்கு ரெயில்வே 91.6% பெற்று முதலிடத்திலும், கிழக்கு மத்திய ரெயில்வே (82.4%), மத்திய ரெயில்வே (78.5%) அடுத்தடுத்த இடத்திலும் உள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4. தமிழ்நாடு-ரைஸ் (TN-RAISE) திட்டம்.

வழிகாட்டும் திட்டம்: தற்போது, நாட்டிலுள்ள மகளிர் தொழில்முனைவோர், தொழில் நிறுவனங்களை நடத்துவோர் சுமார் 13.5% தமிழ்நாட்டில் உள்ளனர். இதுபோன்று தொழில்முனைவோராக விரும்பும் மகளிருக்கு வழிகாட்டவும், நிதி மேலாண்மை வழங்கவும் ‘தமிழ்நாடு ரைஸ்’ ஏற்படுத்தப்பட்டுள்ளது. ‘தமிழ்நாடு ரைஸ்’ திட்டம்மூலம் 126 மகளிர் தொழில்முனைவோருக்கும், 800 மகளிர் தொழில் குழு நிறுவனங்களுக்கும் ஆலோசனை வழங்கப்படும்.

Exit mobile version