Tnpsc Current Affairs in Tamil – 3rd January 2024

1. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற கர்சவான் படுகொலை, தற்போதைய எந்த மாநிலத்தில் நிகழ்ந்தது?

அ. ஒடிசா

ஆ. ஜார்கண்ட்

இ. பீகார்

ஈ. மத்திய பிரதேசம்

2. அண்மையில், இந்திய கடற்படையின் புதிய துறைக்கலங்கள் தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்?

அ. துணை அட்மிரல் சந்தீப் நைதானி

ஆ. துணை அட்மிரல் கிரண் தேஷ்முக்

இ. துணை அட்மிரல் S R சர்மா

ஈ. துணை அட்மிரல் G S பாபி

3. அண்மையில், இந்திய கடற்படையின் எந்தக் கடலிய ஆய்வுக்கப்பல் ஓமனுக்கு சாகர் மைத்ரி திட்டம்-4க்காக புறப்பட்டுச் சென்றது?

அ. INS மகர்

ஆ. INS சந்தாயக்

இ. INS சாகர்தவானி

ஈ. INS துருவ்

4. அண்மையில், பதினாறாவது நிதி ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்?

அ. விரால் ஆச்சார்யா

ஆ. ஜெகதீஷ் பகவதி

இ அரவிந்த் பனகாரியா

ஈ. அமித் மித்ரா

5. அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் சாட்சிகளின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக இந்திய உச்சநீதிமன்றத்தால் தொடங்கப்பட்டுள்ள திட்டத்தின் பெயர் என்ன?

அ. பாதுகாப்பு உறுதித் திட்டம்

ஆ. சாட்சிப் பாதுகாப்புத் திட்டம்

இ. சாட்சிக் காவல் திட்டம்

ஈ. நீதித்துறை சாட்சிக் காவலர் திட்டம்

6. தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியத்தால் எரி பட்டு நூற்பாலை நிறுவப்படவுள்ள இடம் எது?

அ. கௌகாத்தி, அஸ்ஸாம்

ஆ. முஷல்பூர், அஸ்ஸாம்

இ. ஷில்லாங், மேகாலயா

ஈ. இம்பால், மணிப்பூர்

7. கீழ்காணும் எந்த ஆண்டு முதல், ஜனவரி முதல் வாரத்தின்போது இந்தியாவும் பாகிஸ்தானும் தங்களது அணுமின் நிலையங்கள் மற்றும் நிறுவல்களின் பட்டியலைப் பரிமாறிக்கொள்கின்றன?

அ. 1988

ஆ. 1992

இ. 1995

ஈ. 1998

8. NEDFIஆல் அமைக்கப்பட்ட வடகிழக்குத் துணிகர நிதியத்தின் முதன்மை நோக்கம் யாது?

அ. பேருட்கட்டமைப்புத் திட்டங்களுக்கு மட்டும் நிதியுதவி வழங்குவதற்காக

ஆ. இந்தியா முழுவதும் அசையா சொத்துக்களின் வளர்ச்சியில் முதலீடு செய்வதற்காக

இ. இந்தியாவின் வடகிழக்குப் பிராந்தியத்தில் துளிர்நிறுவல் முயற்சிகளை ஆதரித்து முதலீடு செய்வதற்காக

ஈ. வடகிழக்கு மாநில அரசுகளுக்கு ஆலோசனை சேவைகளை வழங்குவதற்காக

9. காசநோய் (TB) நோயாளிகளின் ஊட்டச்சத்து தேவைகளுக்கு நிதியுதவி வழங்குவதை முதன்மை நோக்கமாகக் கொண்டு செயல்படும் திட்டத்தின் பெயரென்ன?

அ. TB போஷன் யோஜனா

ஆ. நிக்ஷய் போஷன் யோஜனா

இ. TB-DBT

ஈ. அக்ஷய் போஷன்

10. இந்தியாவில் ஒரே நேரத்தில் பல தேர்தல் நடத்துவது குறித்து ஆராய அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் யார்?

அ. லக்ஷ்மிகாந்த் பாஜ்பாய்

ஆ. பாபுராம் நிஷாத்

இ. விஜய்பால் சிங் தோமர்

ஈ. இராம்நாத் கோவிந்த்

11. இந்தியா-UAE கூட்டு இராணுவப் பயிற்சியான, ‘Desert Cyclone – 2024’ நடத்தப்படுகிற மாநிலம் எது?

அ. உத்தர பிரதேசம்

ஆ. மேற்கு வங்காளம்

இ. இராஜஸ்தான்

ஈ. கர்நாடகா

12. அண்மையில், எந்த நகரத்தில் இந்தியாவின் முதல் பெண்கள் இராணுவப்பள்ளி திறக்கப்பட்டது?

அ. லக்னோ

ஆ. பிருந்தாவனம்

இ. குர்கான்

ஈ. பரிதாபாத்

13. சுகோய்-30 MKI போர் விமானங்களுக்காக இந்தியாவால் உருவாக்கப்பட்டு வரும் ரேடாரின் பெயரென்ன?

அ. திரிநேத்ரா

ஆ. விருபாக்ஷா

இ. ரோகினி

ஈ. சுவாதி

14. 108 இடங்களில் ஒரே நேரத்தில் அதிக மக்கள், ‘சூரிய வணக்கம்’ செய்து 2024ஆம் ஆண்டில் கின்னஸ் உலக சாதனை படைத்த மாநிலம் எது?

அ. மகாராஷ்டிரா

ஆ. குஜராத்

இ. கர்நாடகா

ஈ. இராஜஸ்தான்

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. ‘பாலைவன புயல்’ இந்தியா- ஐக்கிய அரபு அமீரகம் கூட்டு இராணுவப் பயிற்சி இராஜஸ்தானில் தொடக்கம்.

‘பாலைவன புயல்’ என்ற இந்திய – ஐக்கிய அரபு கூட்டு இராணுவப் பயிற்சியின் முதல் பதிப்பு 2024 ஜனவரி.02 முதல் 15ஆம் தேதி வரை ராஜஸ்தான் மாநிலம் மகாஜனில் நடைபெறுகிறது. ஐநா அவை அமைதி நடவடிக்கைகளின் 7ஆவது பகுதியின்கீழ் பாலைவனம் / பகுதி பாலைவனங்களில் உள்ள கட்டமைப்பு பகுதிகளில் சண்டையிடுதல் உள்ளிட்ட விரிவாக்கப்பட்ட பயிற்சிகளில் ஈடுபடுவதே இதன் நோக்கமாகும். இந்தப்பயிற்சி இருதரப்புக்குமிடையே சிறந்த நடைமுறைகளை பகிர்ந்துகொள்வதற்கும் ஒருங்கிணைந்த நட்புணர்வை மேம்படுத்துவதற்கும் உதவும்.

2. ‘நலம் 365’: யூ-டியூப் சேனல்.

தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறைக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட, ‘நலம் 365’ யூ-டியூப் சேனல் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. மாநில சுகாதார நலத்திட்டங்கள், மருத்துவக் கல்வி நடவடிக்கைகள், ஊரக மருத்துவ சேவைகள், தொற்றுநோய் விழிப்புணர்வு, தடுப்பூசி திட்டங்கள் உள்ளிட்டவை குறித்த தகவல்கள் அதில் பகிரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3. மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும்: இந்திய உச்சநீதிமன்றம் தீர்ப்பு.

கடந்த 2016ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டுவந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என்று இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஐந்து நீதிபதிகள்கொண்ட அரசியல் சாசன அமர்வில் நான்கு பேர் மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என்றும் ஒரு நீதிபதி மாறுபட்ட தீர்ப்பும் வழங்கியுள்ளார். நீதிபதி நாகரத்னா மட்டும் மாறுபட்டு தீர்ப்பளித்தார். இதனையடுத்து மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிரான 58 வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

4. `1000 கோடி மதிப்பில், ‘பசுமை காலநிலை மாற்ற நிதியம்’ அமைத்து தமிழ்நாடு அரசு ஆணை.

இந்த ஆண்டு (2022-2023) நிதிநிலை அறிக்கையில் அறிவித்தபடி, தமிழ்நாடு அரசு `1000 கோடி நிதி திரட்டும் வகையில் தமிழ்நாடு பசுமை காலநிலை மாற்ற நிதியத்தை அமைத்து ஆணை வெளியிட்டுள்ளது. இத்தகைய நிதி அமைப்பு முயற்சி இந்தியாவிலேயே முதன்முறையாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இக்காலநிலை மாற்ற நிதியானது பல்வேறு, காலநிலை மாற்ற முயற்சிகள், தணிப்பு மற்றும் பசுமையாக்கும் திட்டங்களுக்கு ஆதரவளிக்கும். அரசு மேம்பாட்டு நிதி நிறுவனங்கள், சர்வதேச காலநிலை நிதி போன்றவற்றிலிருந்து தேவையான நிதி ஆதாரங்கள் இந்த நிதியத்துக்குத் திரட்டப்படும். இந்த நிதியானது SEBI மாற்று முதலீட்டு நிதி விதிமுறைகள், 2012இன் கீழ் ஒரு வகை – I (சமூக முயற்சி நிதி) ஆக அமைக்கப்படவுள்ளது.

பசுமைத் தமிழ்நாடு இயக்கம், தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் மற்றும் தமிழ்நாடு ஈரநிலங்கள் இயக்கம் ஆகிய மூன்று முக்கிய திட்டங்களை தமிழ்நாடு அரசு அமைத்து செயல்படுத்தி வருகிறது. மேற்படி மூன்று திட்டங்களின் செயல்பாடுகளை கண்காணித்து வழிநடத்த தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனம் (Tamil Nadu Green Climate Company) என்ற சிறப்பு நோக்கு வாகனத்தையும் (Special Purpose Vehicles) தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது.

5. 2023இல் பெண்களுக்கு எதிரான குற்றங்களாக 28,811 புகார்கள் பதிவு.

2023ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக நாடு முழுவதும் 28,811 புகார்கள் தேசிய மகளிர் ஆணையத்தில் பதிவாகியிருப்பது தெரியவந்துள்ளது. இதில் 55% புகார்களுடன் உத்தர பிரதேச மாநிலம் முதலிடம் வகிக்கிறது. இதில் 16,109 புகார்கள் பதிவுடன் உத்தர பிரதேச மாநிலம் முதலிடத்தில் உள்ளது. தலைநகரம் தில்லி 2,411 புகார்களுடன் இரண்டாமிடத்தில் உள்ளது. மகாராஷ்டிரம் (1,343 புகார்கள்) மூன்றாமிடம் வகிக்கிறது. பிகார் (1,312), மத்திய பிரதேசம் (1,165), ஹரியானா (1,115), இராஜஸ்தான் (1,011), தமிழ்நாடு (608), மேற்கு வங்காளம் (569), கர்நாடகம் (501) ஆகிய மாநிலங்கள் பட்டியலில் அடுத்தடுத்த இடங்களை வகிக்கின்றன. இருந்தபோதும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான புகார்களின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. 2022ஆம் ஆண்டில் 30,864 புகார்கள் பதிவு செய்யப்பட்டன.

6. அயலகத் தமிழர்களுக்கான, ‘வேர்களைத் தேடி’ திட்டம் தொடக்கம்.

அயலகத் தமிழ் உறவுகளை ஒன்றிணைக்கும் வகையில் தமிழ்நாடு அரசு அயலகத்தமிழர் தினத்தை ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி.11 மற்றும் 12 ஆகிய நாள்களில் கொண்டாடி வருகிறது. அதோடு, அயலகத் தமிழர்களின் கலாசார உறவுகளை மேம்படுத்துவதின் ஒரு நகர்வாக பல தலைமுறைகளுக்கு முன்பு அயலகம் இடம்பெயர்ந்து அங்கு வாழும் அயலகத்தமிழர்களின் குழந்தைகளுக்காக, ‘வேர்களைத்தேடி’ என்றொரு பண்பாட்டுப் பயணத் திட்டத்தை -யும் முதலமைச்சர் அறிவித்திருந்தார்.

இத்திட்டம்மூலம் அயலகத்தில் வாழும் 18 முதல் 30 வயதுக்குட்பட்ட தமிழ் இளைஞர்களை தமிழ்நாடு அரசு செலவில் தமிழ்நாட்டுக்கு வரவழைத்து அவர்கள் தமிழ் மற்றும் தமிழர்தம் பெருமிதங்களை உணரும்வகையில் தமிழ்நாட்டில் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களுக்கு ஒரு பண்பாட்டு பயணம் ஏற்பாடுசெய்ய ஆணையிட்டிருந்தார். அதனடிப்படை -யில் வேர்களைத்தேடி திட்டத்தின் முதல் பயணம் டிச.27இல் மாமல்லபுரத்தில் உள்ள தமிழ்நாடு ஹோட்டலில் இருந்து பயணம் தொடங்கப்பட்டது.

7. காசநோய் பாதிப்பு 2.65% உயர்வு.

தமிழ்நாட்டில் கடந்த 2023ஆம் ஆண்டில் 96,709 பேர் காசநோயால் (TB) பாதிக்கப்பட்டுள்ளனர். இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 2.65 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

8. டிசம்பரில் GST வசூல் `1.64 இலட்சம் கோடி.

டிசம்பரில் மொத்தமாக `1.64 இலட்சம் கோடி சரக்கு மற்றும் சேவை வரி (GST) வசூலாகியுள்ளதாகவும், தமிழ்நாட்டின் GST வருவாய் `9,888 கோடி என்றும் மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. 2023ஆம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் மொத்த GST வசூல் `14.97 இலட்சம் கோடியை எட்டியுள்ளது. முந்தைய நிதியாண்டின் டிசம்பர் GST வசூலுடன் ஒப்பிடுகையில், கடந்த டிசம்பர் மாத GST வசூல் 10.3% அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டின் வருவாய் 19% அதிகரிப்பு: கடந்த டிசம்பரில் தமிழ்நாட்டின் GST வசூல் `9,888 கோடி. இது அதற்கு முந்தைய டிசம்பரில் வசூலான `8,324 கோடி வசூலுடன் ஒப்பிடுகையில் 19% அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version