Tnpsc Current Affairs in Tamil – 31st October 2023

1. ஓர் அண்மைய ஆய்வின்படி, நாட்டிலேயே அதிக புற்றுநோய் பாதிப்பு விகிதம் உள்ள இந்திய மாநிலம் எது?

அ. ஒடிசா

ஆ. பீகார்

இ. மிசோரம் 🗹

ஈ. குஜராத்

2. Hostile Activity Watch Kernel (HAWK) அமைப்புடன் தொடர்புடைய மாநிலம் எது?

அ. கேரளா

ஆ. கர்நாடகா 🗹

இ. ஆந்திர பிரதேசம்

ஈ. உத்தரகாண்ட்

3. ஐபோன் தயாரிப்பாளரான விஸ்ட்ரான் தனது இந்திய அலகை கீழ்காணும் எந்த இந்திய நிறுவனத்திற்கு விற்க ஒப்புதல் அளித்துள்ளது?

அ. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

ஆ. டாடா எலக்ட்ரானிக்ஸ் 🗹

இ. கோத்ரெஜ் & பாய்ஸ் உற்பத்தி நிறுவனம்

ஈ. வீடியோகான் இண்டஸ்ட்ரீஸ்

4. இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் அடிப்படையிலான கிகாபிட் அகலக்கற்றை இணையை சேவையை அறிமுகப்படுத்திய நிறுவனம் எது?

அ. ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் 🗹

ஆ. பார்தி ஏர்டெல்

இ. வோடபோன் ஐடியா (Vi)

ஈ. BSNL

5. சமீபத்தில் அங்கீகரிக்கப்பட்ட ‘பிரதமர் இ-பஸ் சேவா திட்டம்’, எத்தனை இ-பஸ்களை இயக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது?

அ. 1000

ஆ. 10000 🗹

இ. 1 இலட்சம்

ஈ. 1 மில்லியன்

6. காஷ்மீரில் இந்தியப்படைகள் வெற்றிபெற்றதன் 76ஆவது ஆண்டு நினைவாக எந்த நாள் கொண்டாடப்படுகிறது?

அ. விஜய் திவாஸ்

ஆ. ஷௌர்ய திவாஸ் 🗹

இ. வீர திவாஸ்

ஈ. பாரத் திவாஸ்

7. ‘நாணயவியல்’ என்பது எதுகுறித்த படிப்பாகும்?

அ. எண்கள்

ஆ. நாணயங்கள் 🗹

இ. மண்கள்

ஈ. பறவைகள்

8. 3ஆவது வடகிழக்கு இந்திய விழாவினை நடத்திய நாடு எது?

அ. தாய்லாந்து

. வியத்நாம் 🗹

இ. கம்போடியா

ஈ. லாவோஸ்

9. ‘அமிர்த கலச யாத்திரை ரெயில்கள்’ கீழ்காணும் எந்த இயக்கத்தின்கீழ் தொடங்கப்பட்டன?

அ. ஒரே பாரதம் ஒப்பிலா பாரதம்

ஆ. என் மண் என் தேசம் 🗹

இ. யுவா

ஈ. ஆத்மநிர்பர் பாரத்

10. NASAஇன் ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கியைப் பயன்படுத்தி பிளாட்டினத்தைவிட அரிதான எந்தத் தனிமம் கண்டறியப்பட்டுள்ளது?

அ. டெல்லூரியம் 🗹

ஆ. சீரியம்

இ. யட்ரியம்

ஈ. யூரோபியம்

11. ‘KAZIND-2023’ என்ற கூட்டு இராணுவப் பயிற்சியின் 7ஆவது பதிப்பை நடத்திய நாடு எது?

அ. இந்தியா

ஆ. கஜகஸ்தான் 🗹

இ. இலங்கை

ஈ. ஈரான்

12. நகரப் போக்குவரவு இந்தியா மாநாட்டில், ‘சிறந்த பசுமைப் போக்குவரத்து முன்னெடுப்புடன் கூடிய நகரம்’ என்ற விருதை வென்ற மெட்ரோ ரெயில் நிறுவனம் எது?

அ. கொல்கத்தா மெட்ரோ

ஆ. கொச்சி மெட்ரோ 🗹

இ. சென்னை மெட்ரோ

ஈ. பெங்களூரு மெட்ரோ

13. தேசிய விளையாட்டுப் போட்டிகளில் கூடைப்பந்து போட்டிக்கானப் பட்டத்தை வென்ற மாநிலம் எது?

அ. பஞ்சாப் 🗹

ஆ. மகாராஷ்டிரா

இ. ஒடிசா

ஈ. மேற்கு வங்காளம்

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. அக்டோபர்.31 – சர்தார் வல்லபாய் படேலின் 149ஆவது பிறந்தநாள்: தேசிய ஒற்றுமை நாள்.

2. 16 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய கொள்கை:

16 ஆண்டுகளுக்குப் பிறகு துறைமுக மேம்பாட்டுக்கான கொள்கை மாற்றியமைக்கப்பட்டு வகுக்கப்பட்டுள்ள புதிய கொள்கைக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் தரப்பட்டுள்ளது.

மாநில துறைமுக மேம்பாட்டுக் கொள்கையானது அமைச்சரவையின் ஒப்புதலுக்கு வைக்கப்பட்டது. மாநிலத்தில் 1,076 கிமீ நீளங்கொண்ட கடற்கரை உள்ளது. 4 பெரிய துறைமுகங்களும், 17 சிறிய துறைமுகங்களும் உள்ளன. தொழில் வளர்ச்சிக்கு மிகச்சிறந்த துறைமுக உட்கட்டமைப்பு தேவையாக இருக்கிறது. இதை கருத்தில்கொண்டு, ‘தமிழ்நாடு மாநில துறைமுக மேம்பாட்டுக் கொள்கை-2023’ வடிவமைக்கப்பட்டுள்ளது.

2007ஆம் ஆண்டு தமிழ்நாடு சிறுதுறைமுகங்கள் மேம்பாட்டுக் கொள்கை உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டது. கப்பல் மறுசுழற்சி, மிதவைக் கலன்கள் கட்டுதல், துறைமுகங்களை மேம்படுத்துதல், துறைமுகங்களை வர்த்தக ரீதியில் சாத்தியமாக்குவது, வியாபாரத்தை எளிதாக்குதல் போன்ற அம்சங்களை உள்ளடக்கி இந்தக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.

3. தமிழ்நாட்டில் மாஞ்சா நூலுக்கு நிரந்தர தடை: அரசாணை வெளியீடு.

நைலான், நெகிழி உள்ளிட்ட செயற்கை பொருள்களால் தயாரிக்கப்படும் மாஞ்சா நூலூக்கு தமிழ்நாடு அரசு அக்.6ஆம் தேதி முழுமையான தடைவிதித்துள்ள நிலையில் அதற்கான அரசாணை அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் தடை உத்தரவை மீறுபவர்களுக்கு சுற்றுச்சூல் (பாதுகாப்பு) சட்டம், 1986இன்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4. சாலை விபத்துகளில் தமிழ்நாடு முதலிடம்!

நாட்டிலேயே அதிக சாலை விபத்துகள் நிகழ்ந்த மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் 64,105 சாலை விபத்துகள் பதிவாகியுள்ளன. உயிரிழப்புகளில் உத்தரபிரதேச மாநிலம் முதலிடத்திலும், அடுத்தபடியாக தமிழ்நாடும் உள்ளன. நாட்டில் 1 மணி நேரத்துக்கு சராசரியாக 53 சாலை விபத்துகள் ஏற்படுகின்றன என மத்திய நெடுஞ்சாலைப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021-ஐ ஒப்பிடுகையில், விபத்துகளின் எண்ணிக்கை 11.9 சதவீதமும், உயிரிழப்பு 9.4 சதவீதமும், காயமடைவது 15.3 சதவீதமும் அதிகரித்துள்ளது.

5. தேர்தல் நன்கொடை ஆதாரத்தை அறிய உரிமையில்லை: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு.

தேர்தல் நிதியை ரொக்கமாக அளிப்பதற்கு மாற்றாகவும், அரசியல் கட்சிகள் பெறும் நன்கொடைகளில் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்தவும் தேர்தல் நிதிப் பத்திரங்கள் திட்டத்தை மத்திய அரசு 2017 பட்ஜெட்டில் அறிவித்து 2018 ஜனவரி 2ஆம் தேதிமுதல் அமல்படுத்தியது. இந்தியர்கள், இந்திய நிறுவனங்கள் நன்கொடையாக `2,000 முதல் தேர்தல் நிதிப் பத்திரங்களாக பாரத வங்கியில் பெற்று அரசியல் கட்சிகளுக்கு வழங்கலாம். நன்கொடை பத்திரங்கள் மூலம் எவ்வளவு தொகையை வேண்டுமானாலும் அரசியல்கட்சிகள் பெறலாம்; வெளிநாட்டு நன்கொடைகளும் பெறலாம் என இதற்கான சட்டத்தில் திருத்தங்களை விவாதமின்றி நிறைவேற்ற வழிவகுக்கும் பண மசோதாவாக மத்திய அரசு கொண்டுவந்து நிறைவேற்றியது.

அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரிவு 19(1) (ஏ) தகவல் அறியும் உரிமையின்படி, நன்கொடைக்கான ஆதாரம் குறித்து அறிய மக்களுக்கு உரிமையில்லை. சட்டப்பிரிவு 19 (2)-இன்படி, அடிப்படை உரிமைகளுக்கு கட்டுப்பாடு விதிக்க அரசுக்கு உரிமை உள்ளது.

6. தாய்லாந்து செல்ல இந்தியர்களுக்கு விசா தேவையில்லை!

தாய்லாந்துக்கு பயணம் மேற்கொள்ள இந்தியர்களுக்கு நுழைவு இசைவு தேவையில்லை என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. தாய்லாந்துக்குப் பயணம் மேற்கொள்ளும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் பட்டியலில் மலேசியா, சீனா மற்றும் தென் கொரியாவுக்கு அடுத்த இடத்தை இந்தியா பிடித்துள்ளது. இந்தாண்டு மட்டும் 12 லட்சம் இந்தியர்கள் தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.

மேலும், சுற்றுலா வரும் இந்தியர்கள் விசா இல்லாமல் 30 நாள்கள் தங்கிக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இப்புதிய நடைமுறை நவம்பர் மாதம் முதல் அடுத்தாண்டு மே வரை அமலில் இருக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவுடன் தைவான் நாட்டினருக்கும் விசாவில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் சீனர்கள் விசா இல்லாமல் பயணம் மேற்கொள்ள அனுமதித்து தாய்லாந்து அரசு உத்தரவிட்டிருந்தது. முன்னதாக, கடந்த வாரம் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொள்பவர்களுக்கு நுழைவு இசைவு தேவையில்லை என்று அந்நாட்டு அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

7. சாலை மேம்பாட்டுக்கான ‘நம்ம சாலை’ செயலி.

நாட்டிலேயே முதல்முறையாக சாலை உட்கட்டமைப்பு, பாதுகாப்பு மேம்பாட்டுக்கான ‘நம்ம சாலை’ என்ற செயலியை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டின் சாலைப்பாதுகாப்பு, உட்கட்டமைப்பை மேம்படுத்தும் விதமாக ‘நம்ம சாலை’ செயலி நாட்டிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டுள்ளது. இதில், பொதுமக்கள் தகவல் தெரிவித்த 24 மணி நேரத்துக்குள்ளாக மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள பள்ளங்களும், 72 மணி நேரத்துக்குள் மாவட்டத்தின் பிரதான, இதர சாலைகளில் உள்ள பள்ளங்களும் சரிசெய்யப்படும். சாலைகள் சரிசெய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் நிழற்படத்துடன் உடனே செயலியில் பதிவேற்றம் செய்யப்படும்.

IMPORTANT LINKS

TNPSC Current Affairs

https://www.winmeen.com/tnpsc-tamil-current-affairs/

Winmeen: Install the Winmeen App – Daily Free & Premium Tnpsc Study Materials & Online Test

https://play.google.com/store/apps/details?id=co.robin.jbzwb

Winmeen: Winmeen Tnpsc Test Series – Samacheer lesson Wise Test + Previous Year Model Test for Tnpsc Group 1,2, 4 & VAO

https://wp.me/p7JanY-ag8

Exit mobile version