Tnpsc Current Affairs in Tamil – 30th November 2023

1. ‘FASTER 2.0’ என்ற இணையதளத்துடன் தொடர்புடையது எது?

அ. இந்திய தேர்தல் ஆணையம்

ஆ. இந்திய உச்சநீதிமன்றம் 🗹

இ. DPIIT

ஈ. NITI ஆயோக்

2. 2023 – உலக பருவநிலை நடவடிக்கை உச்சிமாநாட்டை நடத்துகிற நகரம் எது?

அ. புது தில்லி

ஆ. லண்டன்

இ. துபாய் 🗹

ஈ. கொழும்பு

3. சீன மற்றும் இந்திய குடிகளுக்கு 30 நாட்களுக்கு விசா இல்லாத நுழைவை அறிவித்த ஆசிய நாடு எது?

அ. தாய்லாந்து

ஆ. வியட்நாம்

இ. மலேசியா 🗹

ஈ. சிங்கப்பூர்

4. ‘பாலினத்தை உள்ளடக்கிய தகவல்தொடர்பு வழிகாட்டி’யை அறிமுகப்படுத்திய நாடு எது?

அ. இலங்கை

ஆ. வங்காளதேசம்

இ. அமெரிக்கா

ஈ. இந்தியா 🗹

5. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘எலி வளை சுரங்கம்’ அதிகமாக உள்ள மாநிலம் எது?

அ. உத்தரகாண்ட்

ஆ. மேகாலயா 🗹

இ. சிக்கிம்

ஈ. அருணாச்சல பிரதேசம்

6. 2023ஆம் ஆண்டுக்கான, ‘புக்கர்’ பரிசைப் பெற்ற பால் லிஞ்ச் சார்ந்த நாடு எது?

அ. அமெரிக்கா

ஆ. இங்கிலாந்து

இ. அயர்லாந்து 🗹

ஈ. ஆஸ்திரேலியா

7. கிளாசிக் இம்பீரியல் சுற்றுலாக் கப்பலுடன் தொடர்புடைய மாநிலம்/யூனியன் பிரதேசம் எது?

அ. கோவா

ஆ. கேரளா 🗹

இ. புதுச்சேரி

ஈ. அந்தமான் & நிக்கோபார் தீவுகள்

8. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற அல்பட்ராஸ் (Appias albina) சார்ந்த இனம் எது?

அ. கால்நடைகள்

ஆ. வாத்து

இ. பட்டாம்பூச்சி 🗹

ஈ. பாம்பு

9. WHO மதிப்பீட்டின்படி, எத்தனை சதவீத பெண்கள் தன் வாழ்நாளில் உடல்சார் மற்றும் (அல்லது) பாலியல்சார்ந்த வன்முறையை அனுபவிக்கிறார்கள்?

அ. 50%

ஆ. 33.33% 🗹

இ. 12.5%

ஈ. 10%

10. இந்தியாவில் அரசியலமைப்பு நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ. நவம்பர்.25

ஆ. நவம்பர்.26 🗹

இ. நவம்பர்.27

ஈ. நவம்பர்.28

11. இந்தியாவில் தேசிய பால் நாள் அனுசரிக்கப்படுகிற மாதம் எது?

அ. ஜூன்

ஆ. செப்டம்பர்

இ. நவம்பர் 🗹

ஈ. டிசம்பர்

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. அயோத்திதாசப் பண்டிதருக்கு சிலையுடன் மணிமண்டபம்.

‘திராவிடப் பேரொளி’ எனப் போற்றப்படுபவர் அயோத்திதாசப் பண்டிதர். அவர் திராவிட மகாஜன சபையைத் தொடங்கியதுடன், ‘ஒரு பைசாத் தமிழன்’ என்ற பெயரில் இதழையும் தொடங்கினார். அவருக்கு, சென்னை கிண்டியில் சிலையுடன் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. அதனை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் திறந்துவைத்தார்.

2. `5,566 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்.

2024ஆம் ஜனவரி மாதத்தில் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறவுள்ளது. ‘ஸ்டார்ட்-அப்’ தர வரிசையில் இந்திய அளவில் தமிழ்நாடு 3ஆம் இடத்தில் உள்ளது.

சென்னையில் வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு, விண்வெளி மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள், தகவல் தொழில் நுட்ப சாதனங்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் தொடங்குவதற்காக அமைச்சர் தா. மோ. அன்பரசன் முன்னிலையில் `5,566.92 கோடி முதலீட்டிற்கான 293 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

3. பால் உற்பத்தியைப் பெருக்குவோம்.

இந்தியா 2021-22இல் 22.1 கோடி டன் பாலை உற்பத்தி செய்ததாக ஐநா உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு கூறுகிறது. எனினும் இந்தியாவில் பால் விலை அதிகமாக உள்ளது.

தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி, அதன் எகோ-போகஸ் இதழில் (மே 2023) 2021-22ஆம் ஆண்டு 5.3 சதவீதமாக இருந்த பால் உற்பத்தி வளர்ச்சி 2022-23ஆம் ஆண்டு 0.4 சதவீதமாக சரிவடைந்ததால் பால் விலையில் உயர்வு ஏற்பட்டுள்ளதாகக் கூறுகிறது. 2022ஆம் ஆண்டில் நாடு முழுவதும் 32 இலட்சம் கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்திய தோல் வீக்க நோய்த்தொற்று (இன்பெக்ஷியஸ் லம்பி ஸ்கின் டிசீஸ்) இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான கால்நடைகளின் இறப்புக்குக் காரணமாக இருந்ததும், கரோனா பெருந்தொற்றுக்குப் பின்னர், பால் பொருட்களுக்கான தேவை அதிகரித்ததும் பால் மற்றும் பால் பொருட்களின் பற்றாக்குறைக்கான காரணங்கள் என இந்திய அரசின் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை குறிப்பிட்டுள்ளது.

செயற்கை கருவூட்டல் என்பது, எண்ணிக்கையில் குறைந்த கால்நடை இனங்களின் மரபணு முன்னேற்றத்தை விரைவுபடுத்த பயன்படுத்தப்படும் தொழில்நுட்பமாகும். இந்தச் செயற்கை கருவூட்டல் தொழில்நுட்பம் 2019-20ஆம் ஆண்டில் 8 கோடிக்கும் அதிகமான கால்நடை கருவூட்டல்கள் நிகழ்வதற்கு அடிப்படையாக அமைந்தது. இந்தியாவில் செயற்கை கருவூட்டலினால் நிகழும் சராசரி கருத்தரிப்பு விகிதம் 35 சதவீதம் என்ற தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம் கூறுகிறது.

மத்திய அரசு ‘ராஷ்ட்ரிய கோகுல் மிஷன்’ என்ற திட்டத்தின் வாயிலாக செயற்கை கால்நடை கருவூட்டலை தேசிய அளவில் செயல்படுத்தியது. தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அனைத்து இன மாடுகளின் மரபணு மேம்பாட்டை ஊக்குவித்து பால் உற்பத்தியை அதிகரிப்பதே இத்திட்டத்தின் நோக்கம். இத்திட்டத்தின் நான்காவது கட்டம் கடந்த மே மாதம் முடிவடைந்த நிலையில் இதுவரை இத்திட்டத்தின்கீழ் 6.767 கோடி செயற்கை கருவூட்டல்கள் நடத்தப்பட்டுள்ளன.

4. வைக்கம் போராட்டத்தின் கன்னட மொழிபெயர்ப்பு நூல்.

எழுத்தாளர் பழ. அதியமான் எழுதிய வைக்கம் போராட்டத்தின் கன்னட மொழிபெயர்ப்பு நூலை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வெளியிட்டார். இதை திராவிடர் கழகத்தலைவர் கி. வீரமணி பெற்றுக் கொண்டார். வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழா கடந்த ஏப்ரல்.1ஆம் தேதி கேரளத்தில் நடைபெற்றது. அந்த விழாவில், எழுத்தாளர் பழ. அதியமான் எழுதிய வைக்கம் போராட்டம் நூலின் மலையாள மொழிபெயர்ப்பு வெளியிடப்பட்டது. வைக்கம் போராட்டம் கடந்த 1923ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கியது. 1925ஆம் ஆண்டு நவ. 29ஆம் தேதி வைக்கம் போராட்டத்தின் வெற்றிவிழா, வைக்கத்தில் கொண்டாடப்பட்டது. அந்த விழாவுக்கு பெரியார் தலைமையேற்றார். இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க நாளை நினைவுகூரும் வகையில், எழுத்தாளர் பழ. அதியமான் எழுதிய வைக்கம் போராட்டம் நூலின் கன்னட மொழிபெயர்ப்பு நூல் வெளியிடப்பட்டுள்ளது.

IMPORTANT LINKS

TNPSC Current Affairs

https://www.winmeen.com/tnpsc-tamil-current-affairs/

Winmeen: Install the Winmeen App – Daily Free & Premium Tnpsc Study Materials & Online Test

https://play.google.com/store/apps/details?id=co.robin.jbzwb

Winmeen: Winmeen Tnpsc Test Series – Samacheer lesson Wise Test + Previous Year Model Test for Tnpsc Group 1,2, 4 & VAO

https://wp.me/p7JanY-ag8

Exit mobile version