Tnpsc Current Affairs in Tamil – 30th January 2024

1. 2024 – தேசிய சுற்றுலா நாளுக்கானக் கருப்பொருள் என்ன?

அ. Sustainable Journeys, Timeless Memories

ஆ. Tourism and Green Investments

இ. Rural and Community Centric Tourism

ஈ. Tourism for Inclusive Growth

2. 2024 – குடியரசு நாள் விழாவின் தலைமை விருந்தினராகப் பங்கேற்றவர் யார்?

அ. பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன்

ஆ. ருசிய அதிபர் விளாடிமிர் புடின்

இ. பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக்

ஈ. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு

3. “பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களின் நிதி” என்ற அறிக்கையை வெளியிடுகிற நிறுவனம் எது?

அ. RBI

ஆ. SBI

இ. NABARD

ஈ. IDBI

4. தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்தின் 44ஆவது அகில இந்திய குற்றவியல் மாநாடு நடைபெற்ற இடம் எது?

அ. ஜெய்ப்பூர்

ஆ. காந்திநகர்

இ. லக்னோ

ஈ. இந்தூர்

5. இந்தியா, கீழ்காணும் எந்த நாட்டை விஞ்சி உலகளவில் நான்காவது மிகப்பெரிய பங்குச்சந்தையாக மாறியது?

அ. ஹாங்காங்

ஆ. சிங்கப்பூர்

இ. இலங்கை

ஈ. ஆஸ்திரேலியா

6. எந்த அமைச்சகத்தின்கீழ், எல்லைப் பாதுகாப்புப் படை செயல்படுகிறது?

அ. வெளியுறவு அமைச்சகம்

ஆ. பாதுகாப்பு அமைச்சகம்

இ. உள்துறை அமைச்சகம்

ஈ. மின்சார அமைச்சகம்

7. இந்திய தரநிலைகளின் சூழலில், ‘SMART’ எதைக் குறிக்கிறது?

அ. Specific Measurable Achievable Relevant and Time-bound

ஆ. Standards Machine Applicable Readable and Transferable

இ. Standardized Measurement and Reporting Technique

ஈ. Systematic Manageable Analytical Resourceful Timely

8. எந்த அமைச்சகத்தால், விஜய் இராகவன் குழு உருவாக்கப்பட்டது?

அ. வெளியுறவு அமைச்சகம்

ஆ. பாதுகாப்பு அமைச்சகம்

இ. உள்துறை அமைச்சகம்

ஈ. மின்சார அமைச்சகம்

9. 75ஆவது குடியரசு நாளை முன்னிட்டு எத்தனை பத்ம விருதுகளுக்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்தார்?

அ. 132

ஆ. 130

இ. 150

ஈ. 135

10. 2023 – ஜீவன் ரக்ஷா பதக்கங்களை பெற்றவர்களின் எண்ணிக்கை?

அ. 28

ஆ. 29

இ. 30

ஈ. 31

11. ‘காந்தமானி பூம்’ உடன் தொடர்புடைய திட்டம் எது?

அ. சந்திரயான்-3

ஆ ஆதித்யா-L1

இ. ககன்யான்

ஈ. NISAR

12. யாருக்கு, மதிப்புமிக்க ‘Freedom of City of London’ விருது வழங்கப்பட்டுள்ளது?

அ. மதுர் குமார்

ஆ. லோக்நாத் மிஸ்ரா

இ. ஷாருக் T வாடியா

ஈ. அஜித் மிஸ்ரா

13. பழசி நீர்ப்பாசனத் திட்டத்துடன் தொடர்புடைய மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. கேரளா

இ. ஆந்திர பிரதேசம்

ஈ. கர்நாடகா

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. “உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டம்”

தமிழ்நாட்டில், மாவட்ட ஆட்சியர்கள் நாள் முழுவதும் ஒரு வட்டத்தில் தங்கி பொதுமக்களின் குறைகளைக்கேட்டறியும் “உங்களைத்தேடி உங்கள் ஊரில்” திட்டம் மாதந்தோறும் நான்காவது புதன்கிழமை செயல்படுத்தப்படவுள்ளது. “உங்களைத்தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின்படி, முகாம் நடைபெறும் வட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் இதர அதிகாரிகள் என அனைவரும் 24 மணிநேரம் தங்கியிருக்க வேண்டும். அதாவது, முதல் நாள் காலை 9 மணிக்குத் தொடங்கி மறுநாள் காலை 9 மணிவரை அதே வட்டத்தில் இருக்க வேண்டும்.

இத்திட்டத்தைச் செயல்படுத்த `88.80 இலட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு மாவட்ட நிர்வாகமும் ஒரு வட்டத்துக்கு ஒரு மாதத்துக்கு `20,000 செலவிட முடியும். சென்னையைத் தவிர்த்து 37 மாவட்டங்களில் ஓராண்டுக்கு 444 முகாம்கள் நடத்தப்படும்.

$3.7 டிரில்லியன் டாலர் GDPஉடன் உலகின் 5ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா உள்ளது என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

2. மானிய விலையில் பருப்பு வகைகள்: தமிழ்நாட்டில் NCCF அறிமுகம்.

மத்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள், உணவு பொதுவிநியோகத் துறையின் இந்திய தேசிய நுகர்வோர் கூட்டமைப்பு லிட் (NCCF) ஆனது மானிய விலையில் பருப்பு வகைகளை தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது. ‘பாரத் டால்’ என்ற வணிகப்பெயரில் அந்தத் தயாரிப்புகள் தமிழ்நாட்டில் விநியோகம் செய்யப்படவுள்ளன.

3. UNESCO பாரம்பரியப் பட்டியலுக்கு செஞ்சிக்கோட்டை பரிந்துரை.

2024-25ஆம் ஆண்டிற்கான UNESCOஇன் உலக பாரம்பரியப் பட்டியலில் அங்கீகாரம் பெறுவதற்கு தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள செஞ்சிக்கோட்டை உள்ளிட்ட மராத்தா இராணுவ நிலப்பரப்புக் காட்சிகள் பரிந்துரைக்கப்படுவதாக மத்திய கலாசாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மராட்டிய ஆட்சியில் இராணுவ சக்தியின் உத்தியாக பன்னிரண்டு பகுதிகள் இருந்தன. மகாராஷ்டிர மாநிலத்தில் இருக்கும் சல்ஹேர் கோட்டை, ஷிவ்னேரி கோட்டை, லோகாட், கந்தேரி கோட்டை, இராய்காட், இராஜ்காட், பிரதாப்காட், சுவர்ணதுர்க், பன்ஹாலா கோட்டை, விஜய்துர்க், சிந்துதுர்க் போன்றவற்றோடு தமிழ்நாட்டில் உள்ள செஞ்சிக்கோட்டையும் இடம்பெற்றுள்ளது.

Exit mobile version