Tnpsc Current Affairs in Tamil – 30th & 31st March 2024

1. 2024 – உலக கபடி நாளன்று, 128 வீரர்களின் பங்கேற்புடன் கின்னஸ் உலக சாதனை படைத்து வரலாறு படைத்த நாடு எது?

அ. இந்தியா

ஆ. ஜப்பான்

இ. மலேசியா

ஈ. வங்காளதேசம்

2. ICGS சமுத்ரா பஹேர்தார் என்பது என்ன வகையான கப்பல்?

அ. எண்ணெய் ஆய்வுக் கப்பல்

ஆ. மாசுக் கட்டுப்பாட்டுக் கப்பல்

இ. மீன்பிடிக் கப்பல்

ஈ. ஆராய்ச்சிக் கப்பல்

3. தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்புடன் (NOTTO) தொடர்புடைய அமைச்சகம் எது?

அ. நீர்வள அமைச்சகம்

ஆ. நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம்

இ. சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம்

ஈ. மின்சார அமைச்சகம்

4. அண்மையில், இந்திய தொல்லியல் துறை எத்தனை, ‘மத்திய பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்களை’ நீக்க முடிவுசெய்துள்ளது?

அ. 16

ஆ. 17

இ. 18

ஈ. 20

5. அண்மையில் இந்திய மாஸ்டர்ஸ் தேசிய பூப்பந்து சாம்பியன்ஷிப்பில் இரண்டு தங்கப்பதக்கங்களை வென்ற நஹீத் திவேச்சா சார்ந்த மாநிலம் எது?

அ. மகாராஷ்டிரா

ஆ. கர்நாடகா

இ குஜராத்

ஈ. ஆந்திர பிரதேசம்

6. ஒவ்வோர் ஆண்டும், ‘உலக நாடக நாள்’ கொண்டாடப்படுகிற தேதி எது?

அ. 26 மார்ச்

ஆ. 27 மார்ச்

இ. 28 மார்ச்

ஈ. 29 மார்ச்

7. உலகளாவிய வர்த்தகத்தின் தற்போதைய நிலைகுறித்த அறிக்கையை வெளியிடுகிற அமைப்பு எது?

அ. UNCTAD

ஆ. ILO

இ. WHO

ஈ. WTO

8. cVIGIL செயலி அல்லது விஜிலண்ட் சிட்டிசன் செயலியை உருவாக்கிய அமைப்பு எது?

அ. இந்தியாவின் தலைமைக் கட்டுப்பாட்டு மற்றும் தணிக்கையாளரகம்

ஆ. இந்திய தேர்தல் ஆணையம்

இ. நிதி ஆணையம்

ஈ. மத்திய தகவல் ஆணையம்

9. அண்மையில், START – 2024 என்ற விண்வெளித்திட்டத்தைத் தொடங்கிய அமைப்பு எது?

அ. ISRO

ஆ. DRDO

இ. CSIR

ஈ. அறிவியல் & தொழில்நுட்பத் துறை

10. ‘கல்ப சுவர்ணா’ என்பது கீழ்காணும் எந்தத் தோட்டப்பயிரின் புதிய குட்டை வகையாகும்?

அ. தென்னை

ஆ. தேக்கு மரம்

இ. மூங்கில்

ஈ. வாழைமரம்

11. அப்னசி நிகிடின் கடல்மலை அமைந்துள்ள கடல் எது?

அ. பசிபிக் பெருங்கடல்

ஆ. இந்தியப் பெருங்கடல்

இ. அட்லாண்டிக் பெருங்கடல்

ஈ. ஆர்க்டிக் பெருங்கடல்

12. அண்மையில், G20இன் இரண்டாவது வேலைவாய்ப்பு பணிக்குழு கூட்டத்தை நடத்திய நாடு எது?

அ. பிரேஸில்

ஆ. சீனா

இ. தென்னாப்பிரிக்கா

ஈ. இந்தியா

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. முயற்சி திருவினையாக்கும்!

ஐக்கிய நாடுகள் சபை அறிவித்திருக்கும் நீடித்த வளர்ச்சி இலக்குகளில் ஒன்று 2030க்குள் உலகளாவிய அளவில் காசநோய்க்கு முற்றுப்புள்ளி வைப்பது என்பது. ஆனால், கடந்த ஆண்டில் மட்டும் 25.55 இலட்சம் காசநோயாளிகள் இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளார்கள். கடந்த 1962ஆம் ஆண்டில் தேசிய காசநோய் ஒழிப்புத்திட்டம் (NTEP) அறிவிக்கப்பட்டதிலிருந்து இதுவரையில் மிக அதிகமான காசநோய் பாதிப்புக்குள்ளானவர்கள் கடந்த ஆண்டில் கண்டறியப்பட்டிருக்கிறார்கள்.

மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 2015ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2022இல் 16% குறைந்திருப்பதாகக் ‘காசநோய் அறிக்கை – 2024’ தெரிவிக்கிறது. காசநோய் மரண விகிதம் 2015ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 18% குறைந்திருக்கிறது. ஒவ்வொரு நாளும் உலகளாவிய அளவில் 3,500 போ் காச நோயால் உயிரிழக்கிறார்கள்.

“நம்மால் காச நோயை ஒழிக்க முடியும்” என்பது இந்தாண்டு உலக காசநோய் ஒழிப்புக்கான கோஷம். உலகளாவிய நிலையில் 27% காசநோயாளிகள் இந்தியாவில்தான் இருக்கிறார்கள்.

கடந்த 1882இல் மருத்துவர் இராபர்ட் கோச் என்பவர் மைக்ரோ-பாக்டீரியம் டியூபர்குளோஸிஸ் (காசநோய்க்குக் காரணமான பாக்டீரியா) என்கிற பாதிப்பைக் கண்டுபிடித்தார். 1943இல் காசநோயைக் குணப்படுத்த, ‘செப்ட்ரோ மைஸின்’ கண்டுபிடிக்கப்பட்டது. 1950க்குப்பிறகு, ‘நுண்ணுயிர் எதிர்ப்பிகள்’ கண்டுபிடிக்கப்பட்டன. இப்போது அந்த நுண்ணுயிர் எதிர்ப்பிகளுக்குக் காசநோய் பாக்டீரியாக்கள் எதிர்ப்பு சக்தி பெற்றுவிட்ட நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

Exit mobile version