Tnpsc Current Affairs in Tamil – 30th & 31st December 2023

1. 2024 – கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுக்களில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்படவுள்ள விளையாட்டு எது?

அ. ஸ்குவாஷ்

ஆ. கேனோயிங்

இ. கயாக்கிங்

ஈ. கேனோ ஸ்லாலோம்

2. எந்தச் சீக்கிய குருவின் 4 மகன்களின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர்.26 அன்று வீர பாலர் தினம் அனுசரிக்கப்படுகிறது?

அ. குரு தேக் பகதூர்

ஆ. குரு ராம் தாஸ்

இ. குரு கோவிந்த் சிங்

ஈ. குரு அர்ஜன்

3. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற அம்னியா கோட்டை அமைந்துள்ள பகுதி எது?

அ. சஹாரா

ஆ. கோலன் ஹைட்ஸ்

இ. சைபீரியா

ஈ. அலாஸ்கா

4. இஸ்ரேலுக்குச் சென்ற முதல் இந்திய பிரதமர் யார்?

அ. நரேந்திர மோடி

ஆ. ஜவஹர்லால் நேரு

இ அடல் பிஹாரி வாஜ்பாய்

ஈ. மன்மோகன் சிங்

5. ‘தான்சென் சமரோ’ என்பது ஒவ்வோர் ஆண்டும், டிசம்பரில், கீழ்காணும் எந்த நகரத்தில் கொண்டாடப்படுகிறது?

அ. லக்னோ

ஆ. குவாலியர்

இ. தில்லி

ஈ. அஜ்மீர்

6. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, “6X6X6 உத்தி” என்பதுடன் தொடர்புடையது எது?

அ. பகல் நேரத்தை சிறப்பாக பயன்படுத்துதல்

ஆ. இரத்த சோகையின் பரவலைக் குறைத்தல்

இ. இலவச மற்றும் கட்டாயக் கல்வியை வழங்குதல்

ஈ. மேற்கூறிய எதுவுமில்லை

7. சர்வதேச கொள்ளைநோய்த் தடுப்புத் தயார்நிலை நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ. டிசம்பர் 27

ஆ. டிசம்பர் 28

இ. டிசம்பர் 29

ஈ. டிசம்பர் 30

8. அண்மையில், இலக்கியம் மற்றும் கலைத்துறையில் வழங்கப்படும், ‘கிரேட் அரபு மைண்ட்ஸ்’ என்ற விருதை வென்றவர் யார்?

அ. சுக்ரிதா பால்

ஆ. வசினி லாரெட்ஜ்

இ. பிரதீப் குமார்

ஈ. மிச்செல் ஜராத்தே

9. பல்முனை ஏவல் நுட்பமுடைய ஏவுகணை அமைப்பான, ‘ஃபதா-II’ அண்மையில் அறிமுகப்படுத்திய நாடு எது?

அ. வங்காளதேசம்

ஆ. ஈராக்

இ. ஐக்கிய அரபு அமீரகம்

ஈ. பாகிஸ்தான்

10. ‘பாரத் GPT’ என்ற திட்டத்திற்காக ரிலையன்ஸ் ஜியோவுடன் கூட்டிணைந்துள்ள நிறுவனம் எது?

அ. ஐஐடி தில்லி

ஆ. ஐஐடி மெட்ராஸ்

இ. ஐஐடி மும்பை

ஈ. IISc பெங்களூரு

11. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற நந்தன்கானன் விலங்கியல் பூங்கா அமைந்துள்ள மாநிலம் எது?

அ. உத்தர பிரதேசம்

ஆ. மேற்கு வங்காளம்

இ. ஒடிசா

ஈ. கர்நாடகா

12. பொது விநியோகத் திட்டத்தின்மூலம், எந்தப்பெயரில் 1 கிலோ அரிசியை `25க்கு விற்க மத்திய அரசு சமீபத்தில் முடிவு செய்தது?

அ. நமோ

ஆ. பாரத்

இ. அன்னபூர்ணா

ஈ. சுதேசி

13. அண்மைச் செய்திகளின்படி, எந்த விமான நிலையத்திற்கு, ‘மகரிஷி வால்மீகி’யின் பெயர் சூட்டப்பட்டுள்ளது?

அ. லக்னோ

ஆ. அயோத்தி

இ. ஜோத்பூர்

ஈ. உஜ்ஜயினி

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. ஜன.1-இல் விண்ணில் பாய்கிறது PSLV C-58 ஏவுகணை!

விண்வெளியில் ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக எக்ஸ்போசாட் (X-ரே போலாரிமீட்டர் சாட்டிலைட்) என்ற செயற்கைக்கோளை ISRO வடிவமைத்துள்ளது. மொத்தம் 469 கிகி எடைகொண்ட இந்தச் செயற்கைக்கோள், பூமியில் இருந்து சுமார் 650 கிமீ தொலைவில் நிலைநிறுத்தப்பட்டு ஆய்வுப்பணிகளை முன்னெடுக்கவுள்ளது. இதற்காக போலிக்ஸ் (X-ரே போலாரிமீட்டர்) மற்றும் எக்ஸ்பெக்ட் (X-ரே ஸ்பெக்ட்ரோகிராபி) ஆகிய 2 சாதனங்கள் அதில் பொருத்தப்பட்டுள்ளன. இவை விண்வெளியில் பரவும் ஊடுகதிர்களின் (X-ரே) துருவ அளவு மற்றும் கோணத்தை அளவிடும். அதேபோன்று, நியூட்ரான் நட்சத்திரங்களில் இருந்து வெளிப்படும் கதிரியக்கம், கருந்துளை வாயுக்களின் திரள் (நெபுலா) உள்ளிட்ட அம்சங்களை 5 ஆண்டுகளுக்கு ஆய்வு செய்ய உள்ளது.

2. கிளாம்பாக்கம் பேருந்து முனையம்.

கிளாம்பாக்கத்தில் `400 கோடியில் அமைக்கப்பட்டுள்ள, ‘கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை’ மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் திறந்துவைத்தார். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, மதுரை, இராமநாதபுரம், சிவகங்கை, திருச்சிராப்பள்ளி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு தென் மாவட்டங்களுக்குச் செல்லக்கூடிய மற்றும் சென்னைக்கு வரக்கூடிய பயணிகளின் தேவைகளை பூர்த்திசெய்யும் வகையில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் செயல்படவுள்ளது. இங்கிருந்து தினமும் 2 ஆயிரத்து 310 பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

3. சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்துக்கு, ‘ISO’ தரச்சான்று.

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் சுற்றுச்சூழல், செயல்பாடு மற்றும் பராமரிப்புக்காக ‘ISO’ தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவிலான சுற்றுச்சூழல், செயல்பாடு மற்றும் பராமரிப்புப் பணிகளுக்காக சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் திட்டம் 1-க்கு ‘ISO: 9001’ தரமேலாண்மை மற்றும் ‘ISO: 14001’ சுற்றுச்சூழல் மேலாண்மைச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

4. தலைமைத் தேர்தல் ஆணையர் நியமன மசோதாவுக்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல்.

அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில், ‘தலைமைத்தேர்தல் ஆணையர் மற்றும் இதர தேர்தல் ஆணையர்கள் (நியமனம், பணி நிபந்தனைகள், பணிக்காலம்) மசோதா-2023’ நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, இந்த மசோதாவுக்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

மேலும் மூன்று மசோதாக்களுக்கு ஒப்புதல்:

பத்திரிகை மற்றும் பருவ இதழ்கள் பதிவுக்கான நடைமுறையை எளிமைப்படுத்தும் மசோதா நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்டது. ஆங்கிலேயர் காலத்தில் இயற்றப்பட்ட பத்திரிகை மற்றும் புத்தகங்கள் பதிவுச் சட்டம், 1867-க்கு மாற்றாக இந்த மசோதா கொண்டுவரப்பட்டது. மேலும், மத்திய சரக்கு-சேவை வரி (இரண்டாவது திருத்தம்) மசோதா-2023, தற்காலிக வரி வசூல் மசோதா-2023 ஆகியவற்றுக்கும் குடியரசுத்தலைவர் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

5. செல்வமகள் சேமிப்பு திட்டவட்டி 0.2% உயர்வு: மத்திய அரசு.

செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் வருடாந்திர வட்டி விகிதம் 8 சதவீதத்திலிருந்து 0.2 சதவீதம் அதிகரித்து 8.2 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், மூன்றாண்டு வைப்புத் திட்டத்தின் வருடாந்திர வட்டி விகிதம் 7 சதவீதத்திலிருந்து 0.1 சதவீதம் அதிகரித்து 7.1 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வட்டி விகித மாற்றம்வரும் ஜனவரி முதல் மார்ச் வரையிலான அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் இருந்து அமல்படுத்தப்படும்.

6. காயல்பட்டினத்தில் 950 மிமீ மழை.

தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினத்தில் ஒரே நாளில் 950 மிமீ மழைபெய்துள்ளது. 1992ஆம் ஆண்டு நவ.14ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம், மாஞ்சோலை அருகே உள்ள காக்காச்சியில் ஒரே நாளில் 965 மிமீ மழைபெய்ததே இதுவரை சாதனையாக இருந்து வருகிறது.

7. தமிழ்நாட்டின் முதல் வந்தே பாரத் இரயில் சேவை.

‘வந்தே பாரத்’ என்னும் அதிவேக இரயில் சேவை கடந்த 2018-ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. முற்றிலும் உள்நாட்டுத் தயாரிப்பான ‘வந்தே பாரத்’, சென்னை பெரம்பூரில் உள்ள ICF தொழிற்சாலையில் தயாராகின்றது. தென் மாநிலங்களில் இயக்கப்பட்ட முதல் ‘வந்தே பாரத்’ இரயில் சென்னை-மைசூரு இடையே பயணித்தது. இதையடுத்து தமிழ்நாட்டின் இரண்டாவது, ‘வந்தே பாரத்’ இரயில் சேவையானது சென்னை – கோவை ஆகிய நகரங்களுக்கு இடையே வரவுள்ளது. இது ஏப்ரல்.8 அன்று தொடங்கிவைக்கப்படவுள்ளது. தமிழ்நாட்டிற்குள் இயக்கப்படும் முதல் ‘வந்தே பாரத்’ இரயில் இதுவாகும்.

8. தலைமை ஆசிரியர்களுக்கு தலைமைத்துவ விருது; பள்ளிகளுக்கு தலா `10 இலட்சம் ஊக்கத்தொகை.

தமிழ்நாட்டில் நடப்புக்கல்வியாண்டில் நூறு (100) அரசுப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு, ‘அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது’, அந்தப் பள்ளிகளுக்கு தலா `10 இலட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படவுள்ளது. ஆண்டு தோறும் 100 தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டுச்சான்றிதழும், கேடயமும், பள்ளிக்கு `10 இலட்சம் ஊக்க நிதியும் வழங்கப்படும். தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 50; உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 50 என மொத்தம் 100 தலைமை ஆசிரியர்களுக்கு இந்த விருது வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version