Tnpsc Current Affairs in Tamil – 2nd July 2024

1. அண்மையில், இந்தியாவின் தொழில்முறை கோல்ஃப் சுற்றுப்பயணத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்?

அ. யுவராஜ் சிங்

. கபில் தேவ்

இ. சச்சின் டெண்டுல்கர்

ஈ. நீரஜ் சோப்ரா

2. உத்தர பிரதேச மாநிலத்தின் எந்த மாவட்டம், ‘கத்திகளின் நகரம்’ என்று அழைக்கப்படுகிறது?

அ. இராம்பூர்

ஆ. சஹாரன்பூர்

இ. மிர்சாபூர்

ஈ. ரேபரேலி

3. காண்டாமிருகங்களைப் பாதுகாப்பதற்காக, ‘ரைசோடோப்’ என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ள நாடு எது?

அ. தென்னாப்பிரிக்கா

ஆ. ஜிம்பாப்வே

இ. நியூசிலாந்து

ஈ. இந்தியா

4. அண்மையில், இமயமலைப்பகுதிகளில், ‘அயனமண்டல மின்னலைக்கண்ட (Gigantic Jets)’ அமைப்பு எது?

அ. JAXA

ஆ. ISRO

இ. NASA

ஈ. CNSA

5. பாலூட்டி விலங்கான, ‘பெருநில மலையாட்டின்’ காரணமாக அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற ரைமோனா தேசியப்பூங்கா அமைந்துள்ள மாநிலம் எது?

அ. ஒடிஸா

. அஸ்ஸாம்

இ. மத்திய பிரதேசம்

ஈ. சிக்கிம்

6. அண்மையில், MND ‘விழிப்புணர்வு, கவனிப்பு மற்றும் மேலாண்மை’ பற்றிய 3ஆவது ஆண்டு மாநாடு நடைபெற்ற இடம் எது?

அ. AIIMS, பாட்னா

ஆ. KGMU, லக்னௌ

இ. NIMHANS, பெங்களூரு

ஈ. AIIMS, தில்லி

7. ‘Steriphopus wangala’ என்பது சார்ந்த இனம் எது?

அ. மீன்

ஆ. சிலந்தி

இ. தவளை

ஈ. வண்ணத்துப்பூச்சி

8. NASAஇன் ஜூனோ புரோப் என்ற விண்கலம் கீழ்க்காணும் எந்தக் கோளைச் சுற்றிவந்து ஆய்வுசெய்வதற்காக வடிவமைக்கப்பட்டது?

அ. வியாழன்

ஆ. செவ்வாய்

இ. சனி

ஈ. வெள்ளி

9. அண்மையில், High-Speed Expendable Aerial Target (HEAT) ‘ABHYAS’இன் ஆறு தொடர்ச்சியான மேம்பாட்டு சோதனைகளை வெற்றிகரமாக முடித்த அமைப்பு எது?

அ. JAXA

ஆ. DRDO

இ. ISRO

ஈ. HAL

10. அண்மையில், காமன்வெல்த் ஊராட்சி அரசு மன்றத்தின் (CLGF) வருடாந்திர வாரியக் கூட்டம் நடைபெற்ற இடம் எது?

அ. இந்தியா

ஆ. இலங்கை

இ. பூட்டான்

ஈ. சீனா

11. அண்மையில், மகாராஷ்டிராவின் எந்தப் புலிகள் காப்பகத்தில் காட்டுத்தீயை முன்கூட்டியே கண்டறிவதற்கான மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு (AI) அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டது?

அ. நவேகான் நாஜிரா புலிகள் காப்பகம்

ஆ. பெஞ்ச் புலிகள் காப்பகம்

இ. தடோபா அந்தாரி புலிகள் காப்பகம்

ஈ. ஷயாத்ரி புலிகள் காப்பகம்

12. புவன் பஞ்சாயத்து 4.0 மற்றும் அவசரநிலை மேலாண்மைக்கான தேசிய தரவுத்தளம் ஆகியவற்றுக்கான தேசிய அளவிலான புவிசார் தரவுத்தளங்களை உருவாக்கிய அமைப்பு எது?

அ. JAXA

ஆ. ISRO

இ. NASA

ஈ. CNSA

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. 3, 5, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கூடாது.

தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தில் 3, 5, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தக்கூடாது உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள் மாநில கல்விக்கொள்கை பரிந்துரை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கல்விக்கொள்கையை வடிவமைக்க ஓய்வுபெற்ற நீதிபதி த முருகேசன் தலைமையில் பதினான்கு பேர்கொண்ட குழு 2022ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.

2. 58 இலட்சம் குழந்தைகளுக்கு வைட்டமின்-A மருந்து.

பொதுவாக குழந்தைகளுக்கு பிறந்தவுடன் தாயிடமிருந்து கிடைக்கப்பெறும் வைட்டமின்-A சத்து, அதற்கடுத்த ஆறு மாதங்களில் இருந்து குறையத்தொடங்கும். ஒரு கட்டத்தில் அந்தச் சத்து மிகவும் குறைந்தால், குழந்தைக்கு வளர்ச்சி குறைபாடு, வயிற்றுப்போக்கு, கண்பார்வை குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. அதைக் கருத்தில்கொண்டு மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் ஆண்டுதோறும் ஆறு மாதங்கள் முதல் ஐந்து வயது வரையிலான குழந்தைகளுக்கு, வைட்டமின்-A மருந்து கொடுக்கப்படுகிறது. 11 மாதங்களுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு 1 மிலி மருந்தும், ஒரு வயது முதல் ஐந்து வயது உள்ள குழந்தைகளுக்கு 2 மிலி மருந்தும் கொடுக்கப்படும்.

Exit mobile version