Tnpsc Current Affairs in Tamil – 2nd April 2024

1. அண்மையில், ‘கலாம்-250’ஐ ISROஇன் உந்துவிசைப் பரிசோதனை தளத்தில் வெற்றிகரமாகச் சோதனை செய்த விண்வெளி நிறுவனம் எது?

அ. பெல்லாட்ரிக்ஸ் ஏரோஸ்பேஸ்

ஆ. அக்னிகுல் காஸ்மோஸ்

இ. ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்

ஈ. காவா ஸ்பேஸ்

2. ஐக்கிய நாடுகள் (UN) சபையின் பொதுச்செயலரால், பேரிடர் அபாயத்தைக் குறைப்பதற்கான சிறப்புப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள இந்தியர் யார்?

அ. நிகில் சேத்

ஆ. கமல் கிஷோர்

இ. ஷைலேஷ் தினகர்

ஈ. சத்யா S திரிபாதி

3. குட்டநாடு சதுப்புநில அமைப்பு அமைந்துள்ள மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. கேரளா

இ. கர்நாடகா

ஈ. மகாராஷ்டிரா

4. தீவிர வெப்பம்குறித்த உலகளாவிய உச்சிமாநாட்டை நடத்திய அமைப்புகள் எவை?

அ. USAID மற்றும் செஞ்சிலுவை சங்கம்

ஆ. UNICEF மற்றும் UNDP

இ. UNEP மற்றும் WTO

ஈ. WHO மற்றும் ILO

5. கோரமங்களா-சல்லகட்டா பள்ளத்தாக்கு திட்டத்துடன் தொடர்புடைய மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. கர்நாடகா

இ கேரளா

ஈ. கோவா

6. கௌதா புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பூங்கா அமைந்துள்ள மாநிலம் எது?

அ. குஜராத்

ஆ. இராஜஸ்தான்

இ. ஒடிசா

ஈ. ஹரியானா

7. TATA மோட்டார்ஸ் மற்றும் HPCL ஆகியவை இணைந்து 2024ஆம் ஆண்டு இறுதிக்குள் எத்தனை EV மின்னேற்ற நிலையங்களை அமைக்க திட்டமிட்டுள்ளன?

அ. 5000

ஆ. 3000

இ. 8000

ஈ. 18000

8. கியால்சங் திட்டத்துடன் தொடர்புடைய நாடு எது?

அ. நேபாளம்

ஆ. மியான்மர்

இ. பூடான்

ஈ. இலங்கை

9. ‘MEGHAYAN-24’ என்ற METOC கருத்தரங்கின் கருப்பொருள் என்ன?

அ. At the Frontline of Climate Action

ஆ. The Future of Weather, Climate and Water across Generations

இ. Early Warning and Early Action

ஈ. The Ocean, Our Climate and Weather

10. அண்மையில், யுன்ஹாய்-3 02 என்ற சுற்றுச்சூழல் கண்காணிப்பு செயற்கைக்கோளை ஏவிய நாடு எது?

அ. ரஷ்யா

ஆ. சீனா

இ. ஜப்பான்

ஈ. இந்தியா

11. கம்பம் பள்ளத்தாக்கு அமைந்துள்ள மாவட்டம் எது?

அ. மதுரை

ஆ. தென்காசி

இ. தேனி

ஈ. நீலகிரி

12. அண்மையில் எந்த இடத்தில், இந்திய வான்படையால், ‘ககன் சக்தி – 2024’ என்ற பயிற்சி நடத்தப்பட்டது?

அ. ஜெய்ப்பூர்

ஆ. பொக்ரான்

இ. ஜோத்பூர்

ஈ. அஜ்மீர்

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. கர்ப்பிணிகள் நிதியுதவி திட்டம்: புதிய நடைமுறை அமல்.

டாக்டர் முத்துலட்சுமி அம்மையார் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டில் கர்ப்பிணிகளுக்கு நிதியுதவி வழங்குவதில் புதிய நடைமுறை ஏப்.1 முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, இதுவரை ஐந்து தவணைகளாக வழங்கப்பட்டு வந்த நிதியுதவி இனி மூன்று தவணைகளாக வழங்கப்படவுள்ளது.

தமிழ்நாடு அரசு சார்பில் Dr முத்துலட்சுமி அம்மையார் மகப்பேறு நிதியுதவி திட்டத்தின்கீழ், கர்ப்பிணிகள் கருத்தரித்த 12 வாரத்துக்குள் ஆரம்ப சுகாதார செவிலியர்களிடம் ஆதார் அட்டை, வங்கிக்கணக்கு எண் விவரங்களை தெரிவித்து, பெயரைப் பதிவுசெய்து, ‘பிக்மி’ எண் பெறவேண்டும்.

பிரதமர் மாத்ரு வந்தனா யோஜனா திட்டத்தின் நிதிப்பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தில் தற்போது சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி, இதற்கு முன்பு வரை ஐந்து தவணைகளாக வழங்கப்பட்டு வந்த `14,000 நிதியுதவி இனி மூன்று தவணைகளில் வழங்கப்படவுள்ளது. கர்ப்ப காலத்தின் நான்காவது மாதத்தில் `6 ஆயிரமும், குழந்தை பிறந்த நான்காவது மாதத்தில் `6 ஆயிரமும், குழந்தை பிறந்த 9ஆவது மாதத்தில் `2 ஆயிரமும் வழங்கப்படவுள்ளது. அதேபோன்று பேறுகாலத்தில் மூன்றாவது மற்றும் ஆறாவது மாதங்களில் இருமுறை ஊட்டச் சத்து பெட்டகங்கள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2. சூரியக்கூடார உலர்த்தி அமைக்க மானியம்: வழிமுறைகள் வெளியீடு.

உழவர்களுக்கு மானியத்துடன் சூரியக்கூடார உலர்த்திகள் அமைக்கும் வழிமுறையை தமிழ்நாடு வேளாண்துறை வெளியிட்டுள்ளது. உழவர்கள் சாலைகளில் பயிர்களை உலர்த்துவதை தடுக்கும் வகையிலும், பயிர்களின் தரத்தை உயர்த்தும் வகையிலும் சூரியக்கூடார உலர்த்தி அமைக்க வேளாண்துறை சார்பில் மானியம் வழங்கப்படுகிறது.

சூரியக்கூடார உலர்த்திகள் அமைக்க (400 முதல் 1000 அடி வரை) சிறு, குறு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு 60 சதவீதமும், பிற விவசாயிகளுக்கு 40 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது.

Exit mobile version