Tnpsc Current Affairs in Tamil – 2nd & 3rd December 2023

1. மாஹே, மால்வான் மற்றும் மங்ரோல் ஆகியவை அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட எதன் பெயர்களாகும்?

அ. நீர்மூழ்கி எதிர்ப்புப் போர்க்கப்பல்கள் 🗹

ஆ. ஆளில்லா விமானங்கள்

இ. நீர்மூழ்கிக் கப்பல்கள்

ஈ. கண்டம் விட்டு கண்டம் பாயும் எறிகணைகள்

2. 13ஆவது சீனியர் தேசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. பஞ்சாப் 🗹

இ. இராஜஸ்தான்

ஈ. கேரளா

3. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற MICE தொழிற்துறையுடன் தொடர்புடைய எது?

அ. சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள்

ஆ. கூட்டங்கள் மற்றும் மாநாடுகள் 🗹

இ. பால் மற்றும் இறைச்சி

ஈ. மருந்துகள் மற்றும் இரசாயனங்கள்

4. மகளிர் சுய-உதவிக் குழுக்களுக்கு டிரோன்களை வழங்கும் திட்டம் சார்ந்த வகை எது?

அ. மத்திய துறை திட்டம் 🗹

ஆ. முதன்மை திட்டம்

இ. மத்திய நிதியுதவி திட்டம்

ஈ. மாநிலத்திட்டம்

5. விரைவு சிறப்பு நீதிமன்றம் திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு எது?

அ. 2013

ஆ. 2017

இ. 2015

ஈ. 2019 🗹

6. அண்மையில் தொடங்கப்பட்ட, ‘PM JANMAN’ திட்டத்துடன் தொடர்புடைய மக்கள் யாவர்?

அ. MSME உரிமையாளர்கள்

ஆ. குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினர் குழுக்கள் 🗹

இ. உழவர்கள்

ஈ. வெளிநாடு வாழ் இந்தியர்கள்

7. காலமுறை தொழிலாளர் படை கணக்கெடுப்பைத் தொடங்கியுள்ள நிறுவனம் எது?

அ. NITI ஆயோக்

ஆ. ILO

இ. NSSO 🗹

ஈ. DPIIT

8. அரசியலமைப்புப் பிரிவு 280 (1) ஆனது எதனை நிறுவுவதற்கான வழிமுறைகளைக் குறிப்பிடுகிறது?

அ. தேர்தல் ஆணையம்

ஆ. நிதி ஆணையம் 🗹

இ. திட்டக்குழு

ஈ. NITI ஆயோக்

9. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் (BCCI) இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?

அ. இராகுல் டிராவிட் 🗹

ஆ. சச்சின் டெண்டுல்கர்

இ. வாசிம் அக்ரம்

ஈ. முகமது கைஃப்

10. சமீப செய்திகளில் இடம்பெற்ற துஷார் ஷெல்கே & சங்கீதா ஆகியோருடன் தொடர்புடைய விளையாட்டு எது?

அ. செஸ்

ஆ. வில்வித்தை 🗹

இ. டென்னிஸ்

ஈ. கிரிக்கெட்

11. சமீப செய்திகளில் இடம்பெற்ற அங்கத்வீர் சிங் பஜ்வா மற்றும் கணேமத் செகோன் ஆகியோருடன் தொடர்புடைய விளையாட்டு எது?

அ. செஸ்

ஆ. துப்பாக்கிச்சூடு 🗹

இ. டென்னிஸ்

ஈ. கிரிக்கெட்

12. இந்தியாவின் 54ஆவது சர்வதேச திரைப்பட விழாவில் வெள்ளி மயில் விருது பெற்ற திரைப்படம் எது?

அ. ஃபெதர் வெயிட்

ஆ. காந்தாரா 🗹

இ. சார்பட்டா பரம்பரை

ஈ. ஏ தர்ஸ்டே

13. சிறப்பு பிரெஞ்சு விருதுகளை வென்ற லலிதாம்பிகா, எதன் முன்னாள் இயக்குநராக இருந்தார்?

அ. DRDO

ஆ. ISRO 🗹

இ. BARC

ஈ. CVC

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. ‘ககன்யான்’ திட்டத்துக்கு விண்வெளி வீரர்கள் தயார்.

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் 2025இல் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்திற்காக 4 விண்வெளி வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 3 நாட்கள் விண்ணில் பயணம் மேற்கொள்ளும் வீரர்களை பாதுகாப்பாக மீண்டும் பூமிக்கு அழைத்து வருவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

2. போபால் விஷவாயுக் கசிவு: 39ஆவது ஆண்டு நினைவு தினம் கடைப்பிடிப்பு.

மத்திய பிரதேச மாநிலம், போபாலில் விஷவாயு கசிந்து ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்த சம்பவத்தின் 39ஆவது ஆண்டு நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டது.

சம்பவத்தின் பின்னணி: போபாலில் உள்ள டௌ வேதி நிறுவனத்துக்கு சொந்தமான யூனியன் கார்பைட் உரத் தயாரிப்பு தொழிற்சாலையில் கடந்த 1984ஆம் ஆண்டு டிச.02ஆம் தேதி நள்ளிரவில் விஷவாயுக் கசிவு ஏற்பட்டது. இதில், ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். உயிர்தப்பிய பல்லாயிரக்கணக்கானோர் புற்றுநோய், கண் பார்வை இன்மை, மூச்சுத்திணறல் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டவர் அமெரிக்காவைச்சேர்ந்த தொழிலதிபர் வாரன் ஆண்டர்சன் ஆவார்.

3. எய்ட்ஸ் நோய் ஒழிப்பில் தமிழ்நாடு அரசின் பங்கு.

தமிழ்நாட்டில் எய்ட்ஸ் நோயைக் கட்டுப்படுத்த பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. உலக அளவில் 4 கோடி பேரும், இந்தியாவில், 24 இலட்சம் பேரும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் 1.24 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எய்ட்ஸ் பாதித்தவர்களுக்கு உதவிசெய்வதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் ஓர் அறக்கட்டளையை உருவாக்கி அதில் `25 கோடி வைப்புநிதி வைக்கப்பட்டுள்ளது. அதன் வாயிலாக வரும் வட்டியில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டோரு -க்கும், அவர்தம் குழந்தைகளுக்கும் கல்வி மற்றும் ஊட்டச்சத்து உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. அவ்வாறு வட்டியாகப் பெறப்படும் தொகையிலிருந்து ஆண்டுக்கு `1.04 கோடிக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. தாயிடம் இருந்து குழந்தைகளுக்கு HIV தொற்று பரவுவதை தடுக்க 2,962 நம்பிக்கை மையங்கள் செயல்படுகின்றன. தமிழ்நாடு முழுவதும் 34 ஆற்றுப்படுத்துதல் மையங்கள், 55 கூட்டு மருத்துவ சிகிச்சை மையங்கள், 64 சிகிச்சை மையங்கள் இயங்குகின்றன.

4. ‘சிம் அட்டை’ வாங்க புதிய விதிகள் அமல்: KYC கட்டாயம்.

கைப்பேசிகளுக்கான சிம் அட்டைகளை வாங்குவதற்கான புதிய விதிகள் டிச.01 முதல் அமலுக்கு வந்தன. இதன்படி எண்ம முறையில் KYC (வாடிக்கையாளர் விவரப்படிவம்) விவரங்கள் அளிக்கப்படுவது கட்டாயமாகும். ஏற்கெனவே உள்ள சிம் அட்டைக்குப் பதிலாக புதிய அட்டை வாங்கினாலும் இந்நடைமுறை பொருந்தும். மேலும், ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையில் சிம் அட்டைகள் விற்பனை செய்யவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களுக்காக மொத்தமாக சிம் அட்டைகளை வாங்கும்போது, அந்த நிறுவனத்தின் பொறுப்பாளர் உரிய படிவத்தில் ஒப்புதல் கையெழுத்திட வேண்டியது அவசியமாகும்.

வங்கிக்கணக்குகள், கடன் அட்டைகளிலிருந்து பணத்தைப் பறிக்கும் மோசடியாளர்கள் கைப்பேசிகள்மூலம் மோசடிகளில் ஈடுபடுவதால் அவர்களின் கைகளில் சிம் அட்டைகள் செல்லாமல் தடுக்கும் நோக்கில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒருவர் ஓர் அடையாள ஆவணத்தைப் பயன்படுத்தி 9 சிம் அட்டைகள் வரை வாங்கலாம் என்ற நடைமுறையில் மாற்றம் செய்யப்படவில்லை.

5. டிசம்பர்.03: சர்வதேச மாற்றுத் திறனாளிகள் நாள்.

கருப்பொருள்: “United in Action to Rescue and Achieve the SDGs for, with and by Persons with Disabilities”.

IMPORTANT LINKS

TNPSC Current Affairs

https://www.winmeen.com/tnpsc-tamil-current-affairs/

Winmeen: Install the Winmeen App – Daily Free & Premium Tnpsc Study Materials & Online Test

https://play.google.com/store/apps/details?id=co.robin.jbzwb

Winmeen: Winmeen Tnpsc Test Series – Samacheer lesson Wise Test + Previous Year Model Test for Tnpsc Group 1,2, 4 & VAO

https://wp.me/p7JanY-ag8

Exit mobile version