Tnpsc Current Affairs in Tamil – 29th November 2023

1. மைதை மாயெக் எழுத்து வடிவத்துடன் தொடர்புடைய மாநிலம் எது?

அ. அஸ்ஸாம்

ஆ. மணிப்பூர் 🗹

இ. நாகாலாந்து

ஈ. மிசோரம்

2. ‘விரைவாக நீதி பெறுவதற்கான உரிமை என்பது அடிப்படை உரிமை’ எனக் கூறியுள்ள உயர்நீதிமன்றம் எது?

அ. மத்திய பிரதேச உயர்நீதிமன்றம் 🗹

ஆ. தில்லி உயர்நீதிமன்றம்

இ. மெட்ராஸ் உயர்நீதிமன்றம்

ஈ. பம்பாய் உயர்நீதிமன்றம்

3. கம்பளா பந்தயம் என்னும் பாரம்பரிய நிகழ்வு நடைபெறும் மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. கேரளா

இ. கர்நாடகா 🗹

ஈ. ஒடிசா

4. இந்தியாவிற்கு C295 இரக விமானங்களை வழங்குகிற நாடு எது?

அ. இலங்கை

ஆ. வங்காளதேசம்

இ. அமெரிக்கா

ஈ. ஸ்பெயின் 🗹

5. ஆயுஷ்மான் பாரத்- சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய மையங்களின் புதிய பெயர் என்ன?

அ. ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர் 🗹

ஆ. நமோ ஆயுஷ்மான் மந்திர்

இ. பாரத் ஆரோக்கிய மந்திர்

ஈ. நயா பாரத் மந்திர்

6. 2023ஆம் ஆண்டின் அடிப்படை கால்நடை பராமரிப்பு புள்ளிவிவர அறிக்கையின்படி, 2022-23ஆம் ஆண்டில், கீழ்காணும் எந்தப் பொருளின் உற்பத்தி எதிர்மறையான வளர்ச்சியைக் கண்டுள்ளது?

அ. பால்

ஆ. முட்டை

இ. இறைச்சி

ஈ. கம்பளி 🗹

7. இன்ஜெனியுட்டி என்பது எந்த வான்பொருளில் இயங்கும் ஒரு தனித்தியங்கும் திறன்பெற்ற ஹெலிகாப்டர் ஆகும்?

அ. திங்கள்

ஆ. செவ்வாய் 🗹

இ. வெள்ளி

ஈ. வியாழன்

8. துர்காவதி சரணாலயத்துடன் இணைந்த நௌராதேகி சரணாலயம் அமைந்துள்ள மாநிலம்/யூபி எது?

அ. மகாராஷ்டிரா

ஆ. மத்திய பிரதேசம் 🗹

இ. குஜராத்

ஈ. மேற்கு வங்காளம்

9. பால் உற்பத்தியை நாளொன்றுக்கு 39 இலட்சம் லிட்டராக அதிகரிக்க தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட மாநிலம் எது?

அ. ஜார்கண்ட்

ஆ. ஒடிசா

இ. அஸ்ஸாம் 🗹

ஈ. சிக்கிம்

10. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற இராம்குமார் இராமநாதனுடன் தொடர்புடைய விளையாட்டு எது?

அ. செஸ்

ஆ. டேபிள் டென்னிஸ்

இ. டென்னிஸ் 🗹

ஈ. பூப்பந்து

11. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற அங்கோர் வாட் அமைந்துள்ள நாடு எது?

அ. மியான்மர்

ஆ. பூட்டான்

இ. இலங்கை

ஈ. கம்போடியா 🗹

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. தமிழ்ப்பல்கலைக்கழக கரிகால் சோழன் விருதுக்கு 6 பேர் தேர்வு.

தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் 2021, 2022ஆம் ஆண்டுகளுக்கான கரிகால் சோழன் விருதுக்கு 6 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

2021க்கான விருதாளர்களாக, ‘இளந்தமிழன் சிறுகதைகள்’ என்ற நூலுக்காக இளந்தமிழன் (மலேசியா), ‘அம்பரம்’ புதினத்துக்காக இரமா சுரேஷ் (சிங்கப்பூர்), ‘ஆதுரசாலை’ புதினத்துக்காக சிவ. ஆருரன் (இலங்கை) ஆகியோரும், 2022க்கான விருதாளர்களாக, ‘உள்ளங்கைக் கடவுளும் அஜந்தா பேரழகியும்’ என்ற கவிதை நூலுக்காக எம். கருணாகரன் (மலேசியா), ‘துமாசிக்’ சிறுகதைத் தொகுப்புக்காக பொன். சுந்தரராசு (சிங்கப்பூர்), ‘பண்ணையில் ஒரு மிருகம்’ என்ற புதினத்துக்காக நோயல் நடேசன் (இலங்கை) ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

2. 23 கோடி டன்னாக அதிகரித்த பால் உற்பத்தி.

கடந்த 2022 ஏப்ரல் மாதம் தொடங்கி, 2023 மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த 2022-23ஆம் ஆண்டில் நாட்டின் பால் உற்பத்தி 23.06 கோடியாக இருந்தது. கடந்த 2022-23ஆம் நிதியாண்டில் அதிக பால் உற்பத்தி செய்த மாநிலம் உத்தர பிரதேசம் இருந்தது. மொத்த பால் உற்பத்தியில் இந்த மாநிலத்தின் பங்கு 15.72 சதவீதமாக உள்ளது. பால் உற்பத்தியில் வருடாந்திர வளர்ச்சி விகிதத்தைப் பொருத்தவரை, கர்நாடகம் 8.76 சதவீதம் என்ற மிகவுயர்ந்த வளர்ச்சி விகிதத்தைப் பதிவு செய்துள்ளது.

2022-23ஆம் நிதியாண்டில் நாட்டின் முட்டை உற்பத்தி சுமார் 13,838 கோடியாக உள்ளது. இந்த எண்ணிக்கை, 2018-19ஆம் நிதியாண்டின் முட்டை உற்பத்தியோடு (10,380 கோடி) ஒப்பிடுகையில் 33.31 சதவீதம் அதிகமாகும். முட்டை உற்பத்தியில் ஆந்திர பிரதேசம் 20.13 சதவீத பங்கைக்கொண்டுள்ளது. அதைத் தொடர்ந்து தமிழ்நாடு 15.58 சதவீதம் பங்கு வகிக்கிறது.

3. ‘இன்னுயிர் காப்போம்’ திட்டத்தின்கீழ் 2 இலட்சம் பேர் பயன்.

தமிழ்நாட்டில், ‘இன்னுயிர் காப்போம்; நம்மைக்காக்கும்-48’ திட்டத்தின்கீழ் பயனாளிகளின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்தை கடந்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில், ‘இன்னுயிர் காப்போம்’ திட்டத்தை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவமனையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் கடந்த 2021 டிச.18ஆம் தேதி தொடக்கி வைத்தார். மாநிலம் முழுவதும் 237 தனியார் மருத்துவமனைகள், 455 அரசு மருத்துவமனைகள் என மொத்தம் 692 மருத்துவமனைகள் இந்தத் திட்டத்தின்கீழ் இணைக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தில் முதல் பயனாளியை மேல்மருவத்தூரிலும், 50 ஆயிரமாவது பயனாளியை சித்தாலப்பாக்கத்திலும் முதலமைச்சர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

4. கடற்படைக்கு உள்நாட்டு தயாரிப்பில் 2ஆவது விமானந்தாங்கி போர்க்கப்பல்: பாதுகாப்பு கொள்முதல் வாரியம் ஒப்புதல்.

இந்திய கடற்படைக்கு `40,000 கோடி மதிப்பில் இரண்டாவது விமானந்தாங்கி போர்க்கப்பலை உள்நாட்டில் கட்டும் முன்மொழிவுக்கு பாதுகாப்பு கொள்முதல் வாரியம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

உள்நாட்டில் கட்டப்பட்ட இந்தியாவின் முதல் விமானந்தாங்கி போர்க்கப்பலான INS விக்ராந்த், கடந்த செப்டம்பரில் பிரதமரால் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. அதிநவீன வான்பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் கப்பல் எதிர்ப்பு ஏவுகணை கட்டமைப்புடன் கூடிய இந்தப் பிரம்மாண்ட போர்க்கப்பல் கொச்சி கப்பல் கட்டும் நிறுவனத்தால் `23,000 கோடி செலவில் கட்டப்பட்டதாகும். இது முப்பது போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் இயங்கக்கூடிய திறன் கொண்டது. 262 மீ நீளம், 62 மீ அகலம், 59 மீ உயரம்கொண்ட இக்கப்பலில் 2,300க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன. இந்தியாவிடம் தற்போது INS விக்ரமாதித்யா (ரஷிய தயாரிப்பு) மற்றும் INS விக்ராந்த் ஆகிய இரண்டு விமானந்தாங்கி போர்க்கப்பல்கள் உள்ளன.

IMPORTANT LINKS

TNPSC Current Affairs

https://www.winmeen.com/tnpsc-tamil-current-affairs/

Winmeen: Install the Winmeen App – Daily Free & Premium Tnpsc Study Materials & Online Test

https://play.google.com/store/apps/details?id=co.robin.jbzwb

Winmeen: Winmeen Tnpsc Test Series – Samacheer lesson Wise Test + Previous Year Model Test for Tnpsc Group 1,2, 4 & VAO

https://wp.me/p7JanY-ag8

Exit mobile version