Tnpsc Current Affairs in Tamil – 29th May 2024

1. லீனியர் ஆக்சிலரேட்டர் (LINAC) சாதனத்தின் முதன்மைப் பயன்பாடு என்ன?

அ. காசநோயைக் கண்டறிய

. புற்றுநோயாளிகளுக்கு வெளிப்புற கதிர்வீச்சு சிகிச்சைகள் வழங்குவது

இ. வெப்ப அலைகளை அளவிடுவதற்கு

ஈ. மேற்கூறியவை எதுவுமில்லை

2. INS கில்டன் எந்த வகை நீர்மூழ்கிக் கப்பலைச் சேர்ந்தது?

அ. கமோர்டா வகுப்பு

ஆ. கல்வாரி வகுப்பு

இ. வகீர் வகுப்பு

ஈ. கரஞ்ச் வகுப்பு

3. ‘Oedocladium sahyadricum’ என்றால் என்ன?

அ. புரதம்

ஆ. பாசி

இ. வைரஸ்

ஈ. பாக்டீரியா

4. 2024 – உலக பசி நாளுக்கானக் கருப்பொருள் என்ன?

அ. Thriving Mothers, Thriving World

ஆ. Zero Hunger: A World without Hunger

இ. Leave No One Behind

ஈ. Unchain Our Food

5. சமீபத்தில், அணுசக்தி பாதுகாப்பு தொடர்பான சர்வதேச மாநாடு (ICONS-2024) எங்கு நடைபெற்றது?

அ. புது தில்லி

. வியன்னா

இ. வாஷிங்டன்

ஈ. தெஹ்ரான்

6. ராஜாஜி புலிகள் காப்பகம் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?

அ. தமிழ்நாடு

ஆ. கர்நாடகா

இ. கேரளா

ஈ. உத்தரகாண்ட்

7. பூமியின் துருவங்களில் இருந்து இழந்த வெப்பத்தை அளவிடுவதற்கு எந்த விண்வெளி அமைப்பு சமீபத்தில் ஒரு சிறிய செயற்கைக்கோளை ஏவியுள்ளது?

அ. NASA

ஆ. ISRO

இ. JAXA

ஈ. CNSA

8. பிரவா வலைத்தளம் எந்த நிறுவனத்தால் தொடங்கப்பட்டது?

அ. RBI

ஆ. SBI

இ. NABARD

ஈ. SEBI

9. சமீபத்தில், 77ஆவது உலக சுகாதார சபையில் (WHA) குழு A இன் தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்?

அ. ராஜேஷ் பூஷன்

ஆ. அபூர்வ சந்திரா

இ. ஏ கே மிட்டல்

ஈ. அமித் அகர்வால்

10. இந்தியன் எண்ணெய் நிறுவனமானது (IOCL/IOC) சமீபத்தில் ஹைட்ரஜன் மற்றும் எரிபொருள் செல் தொழில் நுட்பத்தை மேம்படுத்துவதற்காக இந்தியாவின் எந்த ஆயுதப்படையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது?

அ. இந்திய ராணுவம்

ஆ. இந்திய கடற்படை

இ. இந்திய விமானப்படை

ஈ. இந்திய கடலோர காவல்படை

11. சமீபத்தில், ‘ஆசிய கைவலு சாம்பியன்ஷிப் – 2024’ எங்கு நடைபெற்றது?

அ. புது தில்லி, இந்தியா

ஆ. அஸ்தானா, கஜகஸ்தான்

இ. தாஷ்கண்ட், உஸ்பெகிஸ்தான்

ஈ. பெய்ஜிங், சீனா

12. சமீபத்தில், எந்த இந்திய அமைதி காக்கும் வீரர், ‘2023ஆம் ஆண்டிற்கான ஐக்கிய நாடுகளின் ராணுவ பாலின ஆதரவாளர்’ விருதைப் பெற்றார்?

அ. லக்ஷ்மி சேகல்

ஆ. ராதிகா சென்

இ. சோபியா குரேஷி

ஈ. பிரியா ஜிங்கம்

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. நிலச்சரிவால் பப்புவா நியூ கினியாவில் 2,000 பேர் பலி! -இந்தியா 10 லட்சம் டாலர் நிதியுதவி.

பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்ததாக அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இயற்கைப்பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள பப்புவா நியூ கினியாவிற்கு உதவும் பொருட்டு, இந்தியா சார்பில் நிவாரண நிதியாக, $1 மில்லியன் டாலர் நிதியுதவி உடனடியாக வழங்கப்படுவதாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடாகவும், இந்திய-பசிபிக் தீவுகள் ஒருங்கிணைப்புக் கூட்டமைப்பின் உறுப்பினராக உள்ள பப்புவா நியூ கினியாவில் கடந்த 2018ஆம் ஆண்டில் ஏற்பட்ட நிலநடுக்கம், அதனைத் தொடர்ந்து, கடந்த 2019, 2023ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பு ஆகிய இயற்கைப் பேரிடர் காலத்தில் அந்நாட்டுக்கு தேவையான உதவிகளை இந்தியா வழங்கியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

2. பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம்.

ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடுகளான ஸ்பெயின், நார்வே, அயர்லாந்து ஆகிய நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அதிகாரபூர்வமாக அங்கீகரித்தன. பாலஸ்தீனத்தை தனி நாடாக கடந்த 1988ஆம் ஆண்டில் அங்கீகரித்த உலகின் முதல் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பது நினைவுகூரத்தக்கது.

3. கோயம்புத்தூரில் இரண்டு நாள் இராணுவ தளவாடக்கண்காட்சி தொடக்கம்.

இந்திய பாதுகாப்புத் துறையுடன் கொடிசியா ராணுவ புத்தாக்கம் மற்றும் அடல் அடைவு மையம், தரைப்படை, வான் படை, கப்பல் படை, NITI ஆயோக், தொழிற்துறை, தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் ஆகியவை இணைந்து, இந்திய ராணுவத்தின் தென்னிந்தியப் பிரிவின்கீழ், இரண்டு நாள் நடைபெறும் இராணுவ தளவாடக்கண்காட்சி கோயம்புத்தூரில் தொடங்கியது.

4. கலைஞரின் கனவு இல்லம்: வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு.

ஒரு வீட்டுக்கு `3.10 லட்சம் என்ற அளவில் தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சம் கான்கீரிட் வீடுகள் கட்டும் திட்டமே, கலைஞரின் கனவு இல்லம் திட்டமாகும். இத்திட்டத்துக்கு `3,100 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கான வழிகாட்டி நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:

கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் நோக்கம்: குடிசைகளில் வசித்து வரும் அனைத்து மக்களுக்கும் புதிதாக சிமெண்ட் கூரைகொண்ட வீடுகள் கட்டித்தருவது.

குடிசைகளில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களே, இந்தத்திட்டத்தில் பயன்பெறத் தகுதியானவர்கள். சொந்தமான நிலம், பட்டா உள்ளவர்கள் மட்டுமே இத்திட்டத்தின்கீழ் அதே இடத்தில் வீடுகட்டத் தகுதி படைத்தவர்கள். புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டுள்ள குடிசைக்குப் பதிலாக இத்திட்டத்தில் வீடு கட்ட இயலாது. அதேசமயம், புறம்போக்கு இடம் ஆட்சேபனை அற்றது என்று வருவாய்த்துறையால் முறைப்படுத்தப்பட்டால் ஏற்றுக்கொள்ளலாம்.

வீடுகள் அனைத்தும் குறைந்தது 360 சதுர அடியுடன் இருக்க வேண்டும். அதில், 300 சதுர அடி RCC கூரையும், 60 சதுர அடி தீப்பிடிக்காத பொருள்களைக் கொண்டும் பயனாளிகளின் விருப்பத்துக்கு ஏற்ப கட்டப்பட வேண்டும். கூரை / ஆஸ்பெடாஸ் சீட் கண்டிப்பாகத் தவிர்க்கப்பட வேண்டும் என்று வழிகாட்டி நெறிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.

Exit mobile version