Tnpsc Current Affairs in Tamil – 28th March 2024

1. 2024 – உலக காசநோய் நாளுக்கானக் கருப்பொருள் என்ன?

அ. Invest to End TB. Save lives

. Yes! We Can End TB!

இ. The clock is Ticking

ஈ. Wanted: Leaders for a TB-free World

2. 2024 – பாரிஸ் ஒலிம்பிக்கின் தொடக்க விழாவில் இந்திய மூவர்ணக் கொடியை ஏந்தவுள்ளவர் யார்?

அ. G சத்தியன்

ஆ. சரத் கமல்

இ. அங்கிதா தாஸ்

ஈ. சௌம்யஜித் கோஷ்

3. அண்மையில், பசிபிக் பெருங்கடலில் உள்ள அணுக முடியாத பெருங்கடல் துருவமான நீமோ புள்ளியை அடைந்த முதல் நபர் யார்?

அ. கிறிஸ் பிரவுன்

ஆ. ஹ்ர்வோஜே லுகாடேலா

இ. ஜூல்ஸ் வெர்ன்

ஈ. வில்ஜல்மூர் ஸ்டீபன்சன்

4. இந்தியா அணுசக்திக் கழகமானது சமீபத்தில் அணுசக்தியின் அமைதியான பயன்பாட்டை மேம்படுத்துவதற்காக கீழ்காணும் எதனுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது?

அ. ரெயில்வே பாதுகாப்புப் படை (RPF)

ஆ. தேசிய மாணவர் படை (NCC)

இ. மத்திய தொழிற்துறை பாதுகாப்புப் படை (CISF)

ஈ. அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றம் (CSIR)

5. 2024 – உலக வானிலை நாளுக்கானக் கருப்பொருள் என்ன?

அ. At the frontline of climate action

ஆ. Early Warning and Early Action

இ The Ocean, Our Climate and Weather

ஈ. Climate and Water

6. அண்மையில், 2024 – மின்சார வாகன ஊக்குவிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்திய அமைச்சகம் எது?

அ. வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம்

ஆ. பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம்

இ. மின்துறை அமைச்சகம்

ஈ. கனரக தொழிற்துறை அமைச்சகம்

7. அண்மையில், முதல் ‘உலகளாவிய சமத்துவமின்மை ஆராய்ச்சி விருதுகள் – 2024’ஐ வென்றவர் யார்?

அ. அபர்ணா மெஹ்ரோத்ரா மற்றும் மசூத் கரிமிபூர்

ஆ. சில்வி பெர்ட்ராண்ட் மற்றும் கரின் எஸ்போசிட்டோ

இ. பினா அகர்வால் மற்றும் ஜேம்ஸ் பாய்ஸ்

ஈ. மைக்கேல் மார்ட்டின் மற்றும் கு டோங்யு

8. 2024 – உலகளாவிய மின்னணுக் கழிவு கண்காணிப்பு அறிக்கையை வெளியிடும் அமைப்பு எது?

அ. UNEP

ஆ. UNDP

இ. UNITAR

ஈ. உலக வங்கி

9. அண்மையில், சிறைப்பிடிக்கப்பட்ட யானை (இடமாற்றம் செய்தல்) விதிகள், 2024ஐ அறிவித்துள்ள அமைச்சகம் எது?

அ. சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம்

ஆ. சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம்

இ. வேளாண் அமைச்சகம்

ஈ. பாதுகாப்பு அமைச்சகம்

10. கோக்ரஜார்-கெலேபு ரெயில் வழித்தடமானது பின்வரும் எந்த நாட்டை இந்தியாவுடன் இணைக்கிறது?

அ. நேபாளம்

ஆ. பூடான்

இ. மியான்மர்

ஈ. வங்காளதேசம்

11. அண்மையில் செயற்கை நுண்ணறிவு (AI) மீதான முதல் உலகளாவிய தீர்மானத்தை ஏற்றுக்கொண்ட அமைப்பு எது?

அ. ஐக்கிய நாடுகள் பொதுச் சபை

ஆ. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை

இ. ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டம்

ஈ. உலக சுகாதார அமைப்பு

12. அண்மையில், இந்திய தேர்தல் ஆணையம் 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 40% இயலாமை உள்ள மாற்றுத்திறனாளிகள் எளிதாக வாக்களிக்கும் வகையில் எந்தச் செயலியை அறிமுகப்படுத்தியது?

அ. மதத் செயலி

ஆ. சங்கல்ப் செயலி

இ. சக்ஷம் செயலி

ஈ. கவாச் செயலி

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. 105 கோடி மெட்ரிக் டன் உணவை வீணடித்த உலகம்!

உணவு வீணடிக்கப்படுவது குறித்து ஐநா சுற்றுச்சூழல் திட்டப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2022ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் உற்பத்தி செய்யப்பட்ட சுமார் 105 கோடி மெட்ரிக் டன் உணவு யாருக்கும் பயனின்றி வீணடிக்கப்பட்டுள்ளது. இது, அந்த ஆண்டின் மொத்த உணவு உற்பத்தியில் 19% ஆகும் என்று கூறப்பட்டுள்ளது.

வரும் 2030ஆம் ஆண்டுக்குள் உணவுப்பொருள்கள் வீணாவதை பாதிகாகக் குறைப்பதை இலக்காகக்கொண்டு இந்த அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. வீடுகள், உணவு தொடர்பான சேவை நிறுவனங்கள், சில்லறை விற்பனையாளர்கள் அளிக்கும் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. இந்த ஆய்வின்படி, ஒவ்வொரு நபரும் ஆண்டுதோறும் சுமார் 79 கிலோ உணவை வீணாக்குவது கண்டறியப்பட்டுள்ளது.

2. 100 நாள் வேலைத் திட்டம் ஊதியம் உயர்வு: தமிழ்நாட்டுக்கு `319!

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தின் (MGNREGA) ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு தற்போது நாளொன்றுக்கு `294 வழங்கப்பட்டு வரும் நிலையில், `319ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ஹரியானா மற்றும் சிக்கிம் மாநிலங்களுக்கு நாளொன்றுக்கு `374ஆக ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கோவாவுக்கு `356, நிக்கோபாருக்கு `347, அந்தமானுக்கு `329, புதுச்சேரிக்கு `319, இலட்சத்தீவுக்கு `315 ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version