Tnpsc Current Affairs in Tamil – 28th & 29th December 2023

1. FAME இந்தியா திட்டத்தை நிர்வகிக்கும் அமைச்சகம் எது?

அ. நிதி அமைச்சகம்

ஆ. மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

இ. ஆயுஷ் அமைச்சகம்

ஈ. கனரக தொழிற்துறை அமைச்சகம்

2. அண்மையில், 2023 – சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் பட்டத்தை வென்றவர் யார்?

அ. தொம்மராஜு குகேஷ்

ஆ. இரமேஷ்பாபு பிரக்ஞானந்தா

இ. விதித் சந்தோஷ் குஜராத்தி

ஈ. சந்தீபன் சந்தா

3. இந்தியாவின் முதல் இமாலய வான் பயணம் தொடங்கப்பட்ட மாநிலம் எது?

அ. ஹிமாச்சல பிரதேசம்

ஆ. உத்தரகாண்ட்

இ. லடாக்

ஈ. ஜம்மு & காஷ்மீர்

4. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற இராம்சர் தளமான பாங் அணை, எந்த ஆற்றின்மீது அமைந்துள்ளது?

அ. ராவி

ஆ. பியாஸ்

இ சட்லெஜ்

ஈ. நர்மதா

5. அண்மையில் தொடங்கப்பட்ட, “SUPACE” என்பது கீழ்காணும் எதனுடன் தொடர்புடையது?

அ. இந்திய நாடாளுமன்றம்

ஆ. இந்திய உச்சநீதிமன்றம்

இ. இந்திய வான்படை

ஈ. இந்தியாவின் சுற்றுச்சூழல்

6. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘நிகுஸ்த் 2.0’ என்பது கீழ்காணும் எந்த நோயுடன் தொடர்புடையது?

அ. காசநோய்

ஆ. நீரிழிவு நோய்

இ. புற்றுநோய்

ஈ. தொழுநோய்

7. புதிய இந்திய தொலைத்தொடர்புச் சட்டத்தின்படி, பயனர்களுக்குத் தேவையில்லாமல் செய்தி அனுப்புவதற்கு அதிகபட்சம் விதிக்கப்படும் அபராதம் எவ்வளவு?

அ. ரூ.25,000

ஆ. ரூ.50,000

இ. ரூ.2,00,000

ஈ. ரூ.3,00,000

8. ரூபாய்-திர்ஹாம் வர்த்தக ஒப்பந்தத்தின்கீழ் இந்திய ரூபாய் செலுத்தி, இந்தியா, அண்மையில் எந்த நாட்டிலிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்தது?

அ. சௌதி அரேபியா

ஆ. ஐக்கிய அரபு அமீரகம்

இ. கத்தார்

ஈ. ஓமன்

9. ஆயுர்வேதம் மற்றும் நாட்டுப்புற மருத்துவ ஆராய்ச்சிக்கான வடகிழக்கு நிறுவனம் (NEIAFMR) அமைந்துள்ள மாநிலம் எது?

அ. அஸ்ஸாம்

ஆ. அருணாச்சல பிரதேசம்

இ. சிக்கிம்

ஈ. திரிபுரா

10. 2024 – BRICS உச்சிமாநாட்டை நடத்தும் நகரம் எது?

அ. கசான், ரஷ்யா

ஆ. சாவ் பாலோ, பிரேசில்

இ. ஷாங்காய், சீனா

ஈ. ஜோகன்னஸ்பர்க், தென்னாப்பிரிக்கா

11. பவளப்பாறைகள் கடலடி மட்டத்தில் எத்தனை சதவீதத்தை ஆக்கிரமித்துள்ளன?

அ. 0.1%க்கும் குறைவாக

ஆ. சுமார் 1%

இ. சுமார் 1.5%

ஈ. சுமார் 2.5%

12. வான் பொருட்களில், ‘அபோபிஸ்’ என்பது எதனைக் குறிக்கிறது?

அ. விண்மீன் பேரடை

ஆ. சிறுகோள்

இ. புறக்கோள்

ஈ. நிலா

13. அண்மையில் காலஞ்சென்ற தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தின் (தேமுதிக) நிறுவனர் திரு. விஜயகாந்த், கீழ்க்காணும் எந்தச் சிறப்புப் பெயரில் அன்பாக அழைக்கப்படுகிறார்?

அ. தலைவா

ஆ. தளபதி

இ. கேப்டன்

ஈ. புரட்சி திலகம்

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. திருவள்ளூர் விவசாயிக்குப் பிரதமர் பாராட்டு.

திருவள்ளூர் மாவட்டம் பெருமாள்பட்டு கிராமத்தின் விவசாயி ஹரிகிருஷ்ணனுக்கு, ‘வணக்கம்’ என்று பிரதமர் வாழ்த்து தெரிவித்தார். வேளாண்மையில் நானோ யூரியா அறிமுகம் போன்ற புதுமையான திட்டங்களுக்காகப் பிரதமர் அவரைப் பாராட்டினார். அவர் டிரோன்கள் மற்றும் பிற நவீன நடைமுறைகளைப்பயன்படுத்தி உழவைப் பெருக்கி வருகிறார்.

2. ‘அம்ருத் பாரத்’ விரைவு இரயில்.

வரும் டிசம்பர்.30ஆம் தேதி உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் முதல், ‘அம்ருத் பாரத்’ இரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கிவைக்கவுள்ளார். இந்த ரயில், தர்பங்கா-அயோத்தி-ஆனந்த்விகார் இடையே பயணிக்கும்.

3. தில்லியில் நடைபெறும் தலைமைச் செயலர்கள் தேசிய மாநாடு.

மாநில தலைமைச் செயலர்களின் மூன்றாவது தேசிய மாநாடு தில்லியில் தொடங்கியது. ஒன்றிய, மாநில அரசுகள் இடையே ஒத்துழைப்பை ஏற்படுத்தும் மாநில தலைமைச்செயலர்கள் மாநாடு கடந்த ஆண்டு முதல் நடத்தப்படுகிறது. முதல் மாநாடு 2022 ஜூன் மாதம் தர்மசாலாவிலும், 2ஆவது மாநாடு தில்லியில் கடந்த ஜனவரியிலும் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து 3ஆவது தேசிய மாநாடு தில்லியில் தொடங்கியது. இதில், அனைத்து மாநில, யூனியன் பிரதேச தலைமைச் செயலர்கள், மத்திய அரசின் பிரதிநிதிகள், மூத்த அதிகாரிகள் பங்கேற்கின்றனர். மாநாட்டில், மக்களுக்கு எளிதான வாழ்க்கையை வழங்குவதில் முக்கிய கவனம் செலுத்தப்படும். இவைதவிர, சைபர் பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு, போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் மறுவாழ்வு குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளது.

4. வைக்கம் போராட்ட நூற்றாண்டு சிறப்பு விழா.

சென்னையில் தமிழ்நாடு அரசு சார்பில் வைக்கம் போராட்டம் நூற்றாண்டு சிறப்பு விழா நடத்தப்படவுள்ளது. இந்த விழாவில், கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் கலந்துகொள்ளவுள்ளதாகவும், வைக்கம் போராட்டம் நூற்றாண்டு மலர் மற்றும் “பெரியாரும் வைக்கம் போராட்டமும்” என்ற நூல் வெளியிட உள்ளதாகவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

வைக்கம் போராட்டம்:

கேரள மாநிலம் வைக்கத்தில் மகாதேவர் திருக்கோவிலைச் சுற்றியுள்ள தெருக்களில் தாழ்த்தப்பட்டவர்கள் நடந்து செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது. இதை எதிர்த்து, கடந்த 1924ஆம் ஆண்டு அங்கு மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் தலைவர்கள் அனைவரும் கைதுசெய்யப்பட்ட நிலையில் போராட்டம் தொடர்ந்து நடைபெற முடியாத நிலை ஏற்பட்டது. அப்போது, கேரள போராட்டத் தலைவர்கள் தந்தை பெரியாருக்கு கடிதம் எழுதி, “இந்தப் போராட்டத்துக்கு நீங்கள் வந்துதான் உயிர்கொடுக்கவேண்டும், உடனே புறப்பட்டு வாருங்கள்” என்று கோரினர். கடிதம் கிடைத்ததும், உடனே, பெரியார் தமிழ்நாட்டிலிருந்து புறப்பட்டு வந்து; வைக்கம் போராட்டத்தை தலைமையேற்று நடத்தி மக்களிடையே மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தினார்.

போராட்டம் தீவிரமடைந்தது. மக்கள் திரண்டு போராட்டத்துக்கு ஆதரவளித்தனர். அதனால் பெரியார் இரண்டு முறை கைது செய்யப்பட்டார். முதல்முறை 1 மாதமும், இரண்டாம் முறை ஆறு மாதமும் அவருக்கு தண்டனை அளிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். சிறையில் கால்-கைகளில் சங்கிலியால் கட்டுற்று அவர் பெருங்கொடுமைப்படுத்தப்பட்டார். இடையில் திருவாங்கூர் அரசர் இயற்கை எய்திடவே, ராணியார் அனைவரையும் விடுதலை செய்தார். பெரியாருடன் சமாதானம் நடைபெற்று, வைக்கம் தெருவில் நடக்கக்கூடாது என்ற தடையை இராணி நீக்கினார். இதனால், பெரியாரின் போராட்டம் மகத்தான வெற்றியில் முடிந்து, ‘வைக்கம் வீரர்’ என்று அழைக்கப்பட்டார். இந்தியாவில் சமூக அளவில் சாதி காரணமாக நிலவிய ஏற்றத்தாழ்வுகளை ஒழித்திட நடைபெற்ற முதல் போராட்டம் இந்த வைக்கம் போராட்டம் ஆகும்.

Exit mobile version