Tnpsc Current Affairs in Tamil – 27th October 2023

1. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற ‘ஆராட்டு விழா’வுடன் தொடர்புடைய மாநிலம் எது?

அ. கேரளா 🗹

ஆ. கர்நாடகா

இ. ஒடிசா

ஈ. பீகார்

2. உலக மேம்பாட்டுத் தகவல் நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?

அ. அக்டோபர் 22

ஆ. அக்டோபர் 24 🗹

இ. அக்டோபர் 27

ஈ. அக்டோபர் 30

3. ‘பன்னாட்டு புலம்பெயர்வு கண்ணோட்ட அறிக்கை – 2023’ஐ வெளியிட்ட அமைப்பு எது?

அ. IMF

ஆ. OECD 🗹

இ. WEF

ஈ. உலக வங்கி

4. நடப்பாண்டில் (2023) வரும் உலக போலியோ நாளுக்கானக் கருப்பொருள் என்ன?

அ. A healthier future for mothers and children 🗹

ஆ. Eradicate poliomyelitis

இ. Polio Free Earth

ஈ. Polio Free Villages

5. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற போர்னியோ தீவு உள்ள கண்டம் எது?

அ. வட அமெரிக்கா

ஆ. ஆசியா 🗹

இ. ஆப்பிரிக்கா

ஈ. ஐரோப்பா

6. விக்ரம்-1 ஏவுகலத்தை உருவாக்கிய இந்திய விண்வெளிசார் துளிர் நிறுவனம் எது?

அ. துருவ் ஏரோஸ்பேஸ்

ஆ. ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் 🗹

இ. பிக்ஸல் ஏரோஸ்பேஸ்

ஈ. பாரத் விண்வெளி

7. இந்தியாவில் பனிச்சிறுத்தை எண்ணிக்கை அதிகம் உள்ள மாநிலம் எது?

அ. அஸ்ஸாம்

ஆ. ஹிமாச்சல பிரதேசம் 🗹

இ. உத்தரகாண்ட்

ஈ. சிக்கிம்

8. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற ‘பதுகம்மா விழா’வுடன் தொடர்புடைய மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

. தெலுங்கானா 🗹

இ. அஸ்ஸாம்

ஈ. குஜராத்

9. இந்தியா உட்பட சில நாடுகளின் குடிமக்களுக்கு இலவச நுழைவு இசைவு வழங்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ள அண்டை நாடு எது?

அ. இலங்கை 🗹

ஆ. வங்காளதேசம்

இ. வியட்நாம்

ஈ. தாய்லாந்து

10. இந்தோ-திபெத்திய எல்லைக் காவல்படை நிறுவப்பட்ட ஆண்டு எது?

அ. 1948

ஆ. 1962 🗹

இ. 1975

ஈ. 1982

11. இந்தியாவின் முதல் நானோ DAP (திரவ) ஆலை திறக்கப்பட்ட மாநிலம் எது?

அ. குஜராத் 🗹

ஆ. பீகார்

இ. மத்திய பிரதேசம்

ஈ. பஞ்சாப்

12. ஜம்ராணி அணை பன்னோக்குத் திட்டத்துடன் தொடர்புடைய மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. அஸ்ஸாம்

இ. உத்தரகாண்ட் 🗹

ஈ. குஜராத்

13. 5T (தன்னிலைமாற்ற முயற்சிகள்) திட்டத்துடன் தொடர்புடைய மாநிலம் எது?

அ. பீகார்

ஆ. ஒடிஸா 🗹

இ. அஸ்ஸாம்

ஈ. மேற்கு வங்காளம்

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. 37ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகள்.

கோவாவில் அக்டோபர்.26 முதல் நவ.9 வரை நடைபெறும் 37ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகளில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 10,000க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்கின்றனர்.

2. கிர்கிஸ்தானில் SCO கூட்டம்: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்பு.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) நாடுகளின் அரசுத் தலைவர்கள் கவுன்சில் கூட்டம் நடைபெறும் நிலையில், அந்தக் கூட்டத்தில் மத்திய வெளியுறவு அமைச்சர் S ஜெய்சங்கர் கலந்துகொள்கிறார். கடந்த 2001ஆம் ஆண்டு சீனாவில் உள்ள ஷாங்காய் நகரில் SCO தொடங்கப்பட்டது. இந்த அமைப்பை சீனா, ரஷியா, கிர்கிஸ்தான் குடியரசு, கஜகஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் அதிபர்கள் இணைந்து தொடங்கினர். இந்த அமைப்பில் கடந்த 2017ஆம் ஆண்டில் இந்தியாவும் பாகிஸ்தானும் நிரந்தர உறுப்பினர்களாகின.

IMPORTANT LINKS

TNPSC Current Affairs

https://www.winmeen.com/tnpsc-tamil-current-affairs/

Winmeen: Install the Winmeen App – Daily Free & Premium Tnpsc Study Materials & Online Test

https://play.google.com/store/apps/details?id=co.robin.jbzwb

Winmeen: Winmeen Tnpsc Test Series – Samacheer lesson Wise Test + Previous Year Model Test for Tnpsc Group 1,2, 4 & VAO

https://wp.me/p7JanY-ag8

Exit mobile version