Tnpsc Current Affairs in Tamil – 27th January 2024

1. BCCI விருதுகளில், ‘ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர்’ என்ற விருதை பெறவுள்ள வீரர் யார்?

அ. சுப்மன் கில்

ஆ. ரோகித் சர்மா

இ. விராட் கோலி

ஈ. K L இராகுல்

2. பின்வருவனவற்றில் D K பாசு வழக்குடன் தொடர்புடையது எது?

அ. காவலர் சிறைக்காப்பில் உள்ள தனிநபரின் உரிமைகள் மற்றும் கண்ணியத்தைப் பாதுகாத்தல்

ஆ. சிறுபான்மையினரின் நலன்களைப் பாதுகாத்தல்

இ. குழந்தைத் தொழிலாளர்

ஈ. பாலியல் சுரண்டலுக்கு எதிரான பாதுகாப்பு

3. இந்திய வான்படை நடத்திய, ‘டெசர்ட் நைட்’ பயிற்சியில் பங்கேற்ற இருநாடுகள் எவை?

அ. எகிப்து மற்றும் சூடான்

ஆ. பிரான்ஸ் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம்

இ. பிரான்ஸ் மற்றும் ரஷ்யா

ஈ. ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் எகிப்து

4. 42 நாள் நடைபெறும், ‘மகாமண்டல திருவிழா’ தொடங்கப்பட்ட இடம் எது?

அ. ஹரியானா

ஆ. சத்தீஸ்கர்

இ. உத்தர பிரதேசம்

ஈ. இராஜஸ்தான்

5. முதன்முதலில், ‘தேசிய பெண் குழந்தைகள் நாள்’ கொண்டாடப்பட்ட ஆண்டு எது?

அ. 2006

ஆ. 2007

இ. 2008

ஈ. 2009

6. இந்திய வானிலை ஆய்வுமையத்துடன் இணைந்து, ‘Insat-3DS’ என்ற செயற்கைக்கோளை உருவாக்கியுள்ள அமைப்பு எது?

அ. ISRO

ஆ. DRDO

இ. இந்திய கடலோர காவல்படை

ஈ. HAL

7. ‘ஃபிட் இந்தியா சாம்பியன்ஸ்’ என்ற இணையவழி ஒலிபரப்புத் தொடரைத் தொடங்கிய அமைச்சகம் எது?

அ. இளையோர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்

ஆ. உள்துறை அமைச்சகம்

இ. பாதுகாப்பு அமைச்சகம்

ஈ. நிதி அமைச்சகம்

8. பர்வதமாலா திட்டத்துடன் தொடர்புடைய அமைச்சகம் எது?

அ. சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம்

ஆ. மின்சார அமைச்சகம்

இ. பாதுகாப்பு அமைச்சகம்

ஈ. வேளாண்மை அமைச்சகம்

9. அண்மையில், ‘பாரத இரத்னா’ விருது வழங்கப்பட்ட கர்பூரி தாக்கூர், கீழ்காணும் எந்த மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சராக இருந்தார்?

அ. ஜார்கண்ட்

ஆ. பீகார்

இ. உத்தர பிரதேசம்

ஈ. ஒடிசா

10. 2024 – ஆசிய மராத்தான் சாம்பியன்ஷிப்பில் தங்கப்பதக்கம் வென்ற இரண்டாவது இந்திய வீரர் யார்?

அ. கோபி T

ஆ. மான் சிங்

இ. ஸ்ரீனு புகதா

ஈ. கார்த்திக் குமார்

11. 14ஆவது அனைத்திந்திய இந்திய காவல் அதிரடிப்படை போட்டி நடத்தப்பட்ட இடம் எது?

அ. விசாகப்பட்டினம்

ஆ கர்னூல்

இ. குண்டூர்

ஈ. நெல்லூர்

12. ‘மைமோசா – Mimosa’ என்றால் என்ன?

அ. தீநுண்மம்

ஆ. பூஞ்சை

இ. ஆக்கிரமிப்பு தாவரம்

ஈ. பண்டைய விவசாய நுட்பம்

13. முதலமைச்சர் கிராமின் சோலார் தெரு விளக்குத் திட்டத்துடன் தொடர்புடைய மாநிலம் எது?

அ. பீகார்

ஆ. ஜார்கண்ட்

இ. ஒடிசா

ஈ. மத்திய பிரதேசம்

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. தொடர்ந்து 6ஆவது முறையாக மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து 6ஆவது முறையாக மத்திய பட்ஜெட்டை வரும் பிப்ரவரி.01 அன்று தாக்கல்செய்கிறார். இதன்மூலம் ஐந்தாண்டு ஆட்சிக்காலமும் நாட்டின் நிதியமைச்சராக தொடர்ந்து 6 மத்திய பட்ஜெட் தாக்கல்செய்த முதல் பெண் என்ற பெருமையையும் நிர்மலா சீதாராமன் பெறுகிறார். 6ஆவது முறையாக மத்திய பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் சூழலில், தொடர்ந்து ஐந்து பட்ஜெட்களை தாக்கல்செய்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் நிதியமைச்சர்கள் அருண் ஜேட்லி, ப. சிதம்பரம், யஷ்வந்த் சின்ஹா ஆகியோரின் சாதனையை அவர் முறியடிப்பார். அதேபோல், கடந்த 1959 முதல் 1964ஆம் ஆண்டுவரை தொடந்து 6 மத்திய பட்ஜெட்களை தாக்கல்செய்த முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் சாதனையையும் அவர் சமன் செய்வார்.

2. நாட்டிலேயே உத்தர பிரதேச மாநிலத்தில்தான் அதிக கல்லூரிகள்: ஆய்வறிக்கை தகவல்.

நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான கல்லூரிகள் உத்தர பிரதேச மாநிலத்தில் இருப்பதாகவும், அதையடுத்து மகாராஷ்டிரம், கர்நாடகத்தில் அதிக கல்லூரிகள் இருப்பதாகவும் மத்திய அரசின் அகில இந்திய உயர்கல்வித்துறை ஆய்வில் தெரியவந்துள்ளது.

நாட்டின் 328 பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 45,473 கல்லூரிகள் இந்த ஆய்வின்கீழ் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இதில் 42,825 கல்லூரிகள் கடந்த 2021-22ஆம் கல்வியாண்டுக்கான அகில இந்திய உயர்கல்வித்துறை ஆய்வில் பங்கேற்றன. கல்லூரிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் தமிழ்நாடு (2829) ஐந்தாம் இடத்தில் உள்ளது.

கர்நாடகத்தில் அதிக கல்லூரி அடர்த்தி: மக்கள்தொகை விகிதாசாரப்படி, அதிகமான கல்லூரிகளைக்கொண்ட மாநிலமாக ஒரு இலட்சம் பேருக்கு 66 கல்லூரிகளுடன் கர்நாடகம் முதலிடத்தில் உள்ளது. கர்நாடகம், பெங்களூரு நகர்ப்புற மாவட்டத்தில் மட்டும் அதிகபட்சமாக 1,106 கல்லூரிகள் உள்ளன.

மாணவர் சேர்க்கை – 4.32 கோடி: நாட்டின் மொத்த உயர்கல்வி மாணாக்கர் சேர்க்கை 4 கோடியே, 32 இலட்சத்து, 68 ஆயிரத்து, 181 ஆகும்.

3. சோழர்கால குடவோலை முறைக்குப் பெருமைசேர்த்த தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி!

“வளர்ந்த இந்தியா”, “மக்களாட்சியின் தாய் இந்தியா” ஆகிய 2 கருப்பொருள்களில் இந்தியாவின் 75ஆவது குடியரசு நாள் விழா நடைபெற்றது. இதில் தலைமை விருந்தினராக பிரான்சு அதிபர் இமானுவல் மேக்ரான் பங்கேற்றார்.

இந்த விழாவின் அணிவகுப்பில் இடம்பெற்ற தமிழநாடின் அலங்கார ஊர்தி, பத்தாம் நூற்றாண்டின் சோழர்கால குடவோலை தேர்தல் முறையை காட்சிப்படுத்தியது. “பழந்தமிழ்நாட்டின் குடவோலை முறை – மக்களாட்சியின் தாய்” என்ற கருப்பொருளின் அடிப்படையில் இந்த ஊர்தி வடிவமைக்கப்பட்டிருந்தது.

கிராம நிர்வாகப் பிரதிநிதிகளைத் தேர்வுசெய்யவும், அந்தப் பகுதியின் விருப்பங்களை பேரரசுக்குத் தெரிவிக்கவும் பின்பற்றப்பட்ட இவ்வழிமுறை தொடர்பான வரலாற்றுச்சான்றுகள், தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்திலுள்ள உத்திரமேரூர் கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ளன. வாக்குச்சீட்டு முறையிலான தேர்தலுக்கு முன்னோடியாக இந்தப் பண்டைய முறை கருதப்படுகிறது. மக்கலாட்சியின் பண்டைய வேர்கள் தமிழ்மண்ணில் உள்ளதை எடுத்துக்காட்டிய தமிழக ஊர்தியில் உத்திரமேரூர் திருவைகுண்டப் பெருமாள் திருக்கோவிலின் மாதிரியும் இடம்பெற்றிருந்தது. குடவோலை குறித்து மருதன் இளநாகனார் எழுதிய, ‘கயிறுபிணிக் குழிசி ஓலை கொண்டார்’ என்ற சங்க இலக்கிய அகநானூற்று பாடலுக்கு அப்போது மகளிர் நடனமாடினர்.

4. அரசுப்பள்ளிக்கு நிலமளித்த ஆயி அம்மாள், 5 பேருக்கு பதக்கங்கள்: முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வழங்கினார்.

முதலமைச்சர் சிறப்பு விருது: அரசுப் பள்ளிக்கு நிலத்தைத் தானமாக வழங்கிய மதுரை மாவட்டம் யா. கொடிக்குளம் கிராமத்தைச் சோர்ந்த ஆயி அம்மாள் என்ற பூரணத்திற்கு முதலமைச்சரின் சிறப்பு விருது வழங்கப்பட்டது. இந்த விருது பதக்கம், பாராட்டுச்சான்றிதழ் அடங்கியது.

வீரதீரச்செயல் விருது: பல்வேறு நிகழ்வுகளின்போது உடனடியாக செயலாற்றி மற்றவர்களின் நலனுக்காக பாடுபடு -வோருக்கு வீரதீரச்செயலுக்கான அண்ணா பதக்கம் வழங்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் சிங்கித் துறையைச் சேர்ந்த யாசர் அராபத், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த தே. டேனியல் செல்வசிங், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த வட்டாட்சியர் சு. சிவக்குமார் ஆகியோர் அண்ணா பதக்கங்கள் பெற்றனர். இந்தப்பதக்கம் தலா `1 லட்சத்துக்கான காசோலை, தங்கமுலாம் பூசிய பதக்கம் மற்றும் சான்றிதழ் அடங்கியதாகும்.

தமிழ்நாட்டில் மதநல்லிணக்கத்தைப் பேண பாடுபடுவோருக்கு, கோட்டை அமீர் பெயரில் பதக்கம் வழங்கப்படுகிறது. அந்த வகையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த முகமது ஜூபேருக்கு, இந்த ஆண்டுக்கான கோட்டை அமீர் மதநல்லிணக்க விருது வழங்கப்பட்டது. இவ்விருது `25 ஆயிரத்துக்கான காசோலை, பதக்கம், சான்றிதழ் அடங்கியது.

வேளாண்துறை சிறப்பு விருது: நெல்லுற்பத்தியில் சாதனை படைக்கும் விவசாயிகளுக்கு, ஆண்டுதோறும் சி நாராயணசாமி நாயுடு நெல்லுற்பத்தித் திறனுக்கான விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், நடப்பாண்டு சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி சி பாலமுருகனுக்கு, நாராயணசாமி நாயுடு விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது, `5 இலட்சம் பரிசுத்தொகை, தங்கமுலாம் பூசப்பட்ட பதக்கம், சான்றிதழ் ஆகியன அடங்கியதாகும்.

சிறந்த காவல் நிலையம்: காவல் நிலையங்களுக்குள் மிகவும் சிறப்பான முறையில் பணிசெய்தல், குற்றங்களைக் குறைத்தல், உடனடியாக நடவடிக்கை எடுத்தல் போன்றவற்றின் அடிப்படையில் சிறந்த காவல்நிலையங்களுக்கு முதலமைச்சரின் விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், நடப்பாண்டு முதலமைச்சரின் விருதுக்கான முதல் பரிசை மதுரை மாநகர SS காலனி காவல்நிலையம் பெற்றது.

5. ஆதிதிராவிடர், பழங்குடியின தொழில்முனைவோருக்கான கண்காட்சி.

தென்னிந்தியாவில் முதன்முறையாக தமிழ்நாட்டின் சென்னையில் ஆதிதிராவிடர், பழங்குடியின தொழில்முனை
-வோருக்கான கண்காட்சி நடைபெறுவதாக இளையோர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

ஆதிதிராவிடர், பழங்குடியினர்கள் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான தொழில்முனைவு திட்டம், சுயவுதவிக்கான பொருளாதார கடனுதவி திட்டம், துரித மின்னிணைப்பு திட்டம், நிலம் வாங்கும் திட்டம், திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள், தூய்மைப் பணியாளர் நலவாரியத்தின் திட்ட உதவிகள், கல்விக் கடன் திட்டம், குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறைமூலம் தொழில்தொடங்குவதற்கான மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஆதிதிராவிடர், பழங்குடியின மக்களை தொழில் முனைவோராக அரசு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. இக்கண்காட்சியில் ஆதிதிராவிடர், பழங்குடியினரால் தயாரிக்கப்பட்ட 8,000க்கும் மேற்பட்ட பொருள்கள் 410 அரங்குகளிலும் காட்சிபடுத்தப்பட்டுள்ளது.

6. பெண் சக்தியை பறைசாற்றிய அணிவகுப்பு!

முதன்முறையாக முப்படை வீராங்கனைகள்:

75ஆவது குடியரசு நாள் விழாவில் முதன்முறையாக முப்படை வீராங்கனைகளின் குழு பங்கேற்றது. கேப்டன் சந்தியா தலைமையில் இந்தக் குழு மிடுக்குடன் அணிவகுத்தது.

இராணுவ வல்லமை: தேசத்தின் இராணுவ வல்லமையை வெளிப்படுத்தும் வகையில், டி-90 பீஷ்மா பீரங்கிகள், NAG ஏவுகணை அமைப்புமுறை, காலாட்படை போர் வாகனங்கள், ஆயுதங்களைக் கண்டறியும், ‘ஸ்வாதி’ ரேடார் அமைப்புமுறை, டிரோன்களை முடக்கும் அமைப்புமுறை, தரையிலிருந்து வானிலுள்ள இலக்குகளை விரைந்து தாக்கும், ‘அஸ்திரா’ ஏவுகணைகள், இலகு இரக போர் விமானமான தேஜஸ், அதிநவீன மின்னணு போர்த் தளவாடங்கள், ‘சக்தி’ இணையவழி பாதுகாப்பு அமைப்புமுறை உள்ளிட்டவை அணிவகுப்பில் காட்சிப்படுத்தப்பட்டன.

Exit mobile version