Tnpsc Current Affairs in Tamil – 27th February 2024

1. எந்த ஆற்றின் கரையில், ‘ஒற்றுமை சிலை’ அமைந்துள்ளது?

அ. நர்மதை ஆறு

ஆ. தபி ஆறு

இ. சபர்மதி ஆறு

ஈ. லூனி ஆறு

2. எந்த நிறுவனத்தில், இந்தியாவின் முதல், ‘கதி சக்தி ஆராய்ச்சி இருக்கை’ நிறுவப்பட்டுள்ளது?

அ. IIM அகமதாபாத்

ஆ. IIM ஷில்லாங்

இ. IIT கான்பூர்

ஈ. IIT பம்பாய்

3. 2023 – உலகளாவிய சைபர் கிரைம் அறிக்கையில் இந்தியா அடைந்துள்ள தரநிலை என்ன?

அ. 79ஆவது

ஆ. 80ஆவது

இ. 85ஆவது

ஈ. 84ஆவது

4. இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே 11ஆவது இருதரப்பு தூதரக பேச்சுவார்த்தை நடைபெற்ற இடம் எது?

அ. புது தில்லி

ஆ. கலிபோர்னியா

இ. பெங்களூரு

ஈ. சென்னை

5. 2024 – உலக மொபைல் மாநாடு நடத்தப்பட்ட நாடு எது?

அ. இந்தியா

ஆ. ஸ்பெயின்

இ. இத்தாலி

ஈ. பிரான்ஸ்

6. இந்தியாவில் மத்திய கலால் நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?

அ. பிப்ரவரி 23

ஆ. பிப்ரவரி 24

இ. பிப்ரவரி 25

ஈ. பிப்ரவரி 26

7. பணியிட வன்முறை மற்றும் துன்புறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் ILO தீர்மானத்தை ஏற்றுக்கொண்ட முதல் ஆசிய நாடு எது?

அ. மியான்மர்

ஆ. பிலிப்பைன்ஸ்

இ. இந்தோனேசியா

ஈ. லாவோஸ்

8. ‘Agasthyagama beddomii’ என்றால் என்ன?

அ. ஓநாய் சிலந்தி

ஆ. கங்காருப்பல்லி

இ. தவளை

ஈ. ஆக்கிரமிப்பு களை

9. எந்த ஆற்றின்மீது ஷாபூர் கண்டி அணைத் திட்டம் அமைந்துள்ளது?

அ. ராவி

ஆ. பியாஸ்

இ. தபி

ஈ. கிருஷ்ணா

10. மகா பூஜை விழாவுடன் தொடர்புடையது எது?

அ. வைஷ்ணவம்

ஆ. சமணம்

இ. பௌத்தம்

ஈ. சைவம்

11. எந்த நாட்டின், ‘KAAN’ என்ற முதல் ஐந்தாம் தலைமுறை விமானம் தனது முதல் பறப்புச் சோதனையை நிறைவு செய்தது?

அ. துருக்கி

ஆ. ஈரான்

இ. ஈராக்

ஈ. மலேசியா

12. ஓர் அண்மைய அறிக்கையின்படி, 2023 டிசம்பர் மாதத்தில் இந்தியாவின் கனிம உற்பத்தி எவ்வளவு சதவீதம் அதிகரித்தது?

அ. 5.1%

ஆ. 5.2%

இ. 5.3%

ஈ. 5.4%

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. 554 ரெயில் நிலையங்கள் நவீனமயம்:

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில், ‘அம்ரித் பாரத் ரெயில் நிலையங்கள்’ திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டில் 34 ரயில் நிலையங்கள் உள்பட 554 ரெயில் நிலையங்களை நவீனமயமாக்கும் திட்டத்துக்கு காணொலிமூலம் பிரதமர் நரேந்திர மோதி அடிக்கல் நாட்டினார்.

‘அம்ரித் பாரத் ரெயில் நிலையங்கள்’ திட்டத்தின்கீழ், ஒடிஸாவின் பாலசோர் ரெயில் நிலையமானது புரி ஜெகநாதர் ஆலயத்தின் கருப்பொருளில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சிக்கிம் இரங்க்பூர் ரெயில் நிலையம் உள்ளூர் கட்டடக் கலையைப் பிரதிபலிக்கும். ராஜஸ்தான் மாநிலத்தின் சங்க்னெர் ரெயில் நிலையம் 16ஆம் நூற்றாண்டின் கை அச்சு முறையைப் பிரதிபலிக்கும். தமிழ்நாட்டின் கும்பகோணம் ரெயில் நிலையம் சோழர்களின் ஆட்சியைப் பிரதிபலிக்கும்.

2. பாரத் டெக்ஸ் – 2024.

புது தில்லியில் பிப்.26 அன்று நாட்டின் மிகப்பெரிய உலகளாவிய ஜவுளி நிகழ்வுகளில் ஒன்றான பாரத் டெக்ஸ்-2024ஐ பிரதமர் நரேந்திர மோதி தொடங்கி வைத்தார். பாரத் டெக்ஸ் – 2024 கண்காட்சி பிப்.26 முதல் 29 வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரதமரின் 5F தொலைநோக்குப் பார்வையைக் குறிக்கும் வகையில் Fibre, Fabric, Fashion, Focus ஆகியவற்றின்மூலம் ஒட்டுமொத்த ஜவுளி மதிப்புச் சங்கிலியையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த கட்டமைப்பை உருவாக்குகிறது. இந்திய அரசால் தொடங்கப்பட்ட, ‘கஸ்தூரி பருத்தி’, உலகளவில் இந்தியாவின் வர்த்தக மதிப்பை உருவாக்குவதில் ஒரு பெரிய பங்கை வகிக்கின்றது.

Exit mobile version