Tnpsc Current Affairs in Tamil – 26th February 2024

1. பின்வரும் நாடுகளில், ‘தோஸ்தி’ என்ற பயிற்சியில் பங்கேற்ற நாடுகள் எவை?

அ. இந்தியா, இலங்கை மற்றும் மாலத்தீவுகள்

ஆ. மியான்மர், இலங்கை மற்றும் நேபாளம்

இ. இந்தியா, வங்காளதேசம் & மியான்மர்

ஈ. பூட்டான், நேபாளம் & மியான்மர்

2. பழங்கால பாதாமி சாளுக்கியர் காலத்திய திருக்கோவில்கள் எந்த ஆற்றின் கரையோரம் உள்ள முடிமாணிக்யம் கிராமத்தில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டன?

அ. கோதாவரியாறு

ஆ. காவேரியாறு

இ. கிருஷ்ணா ஆறு

ஈ. தபியாறு

3. இராணி சென்னம்மாவுடன் தொடர்புடைய நிகழ்வு எது?

அ. மோப்லா கிளர்ச்சி

ஆ. அஹோம் கிளர்ச்சி

இ. கிட்டூரு கலகம்

ஈ. சன்யாசி கலகம்

4. உத்தர பிரதேச மாநில அரசு தனது முதல், ‘ஆமைகள் காப்பகத்தை’ எந்த ஆற்றில் நிறுவவுள்ளது?

அ. சர்ஜு ஆறு

ஆ. சாரதா ஆறு

இ. கோமதியாறு

ஈ. பெலனாறு

5. அண்மையில், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தில் ஊழல் கண்காணிப்பு ஆணையராக நியமனம் செய்யப்பட்டவர் யார்?

அ. சுரேஷ் N படேல்

ஆ. A S இராஜீவ்

இ. பிரவீன் குமார் ஸ்ரீவஸ்தவா

ஈ. அரவிந்த குமார்

6. 2024இல் ஐந்தாவது சர்வதேச கீதை மகோத்சவத்தை நடத்துகிற நாடு எது?

அ. இந்தியா

ஆ. மியான்மர்

இ. இலங்கை

ஈ. நேபாளம்

7. பழங்குடியின மாணவர்களின் நலத்தை மையமாகக்கொண்ட ஒரு முன்னெடுப்பைத் தொடங்குவதற்காக கீழ்காணும் எந்த இரண்டு அமைச்சகங்கள் கூட்டிணைந்துள்ளன?

அ. கல்வி அமைச்சகம் மற்றும் சுகாதார அமைச்சகம்

ஆ. ஆயுஷ் அமைச்சகம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்

இ. பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சகம்

ஈ. ஊரக வளர்ச்சி அமைச்சகம் மற்றும் விவசாய அமைச்சகம்

8. இராஷ்ட்ரிய உத்யமித விகாஸ் பரியோஜனாவின் பயனாளிகள் யார்?

அ. AB PM-JAY பயனாளிகள்

ஆ. PM SVANidhi பயனாளிகள்

இ. PM சுரக்ஷா பீமா யோஜனா பயனாளிகள்

ஈ. PM விஸ்வகர்மா யோஜனா பயனாளிகள்

9. 2024 – 8ஆவது ஆசிய பொருளாதார உரையாடலின் கருப்பொருள் என்ன?

அ. Asia and the Emerging World Order

ஆ. Global Trade and Finance Dynamics

இ. Geo-economic Challenges in an Era of Flux

ஈ. Sustainable Economic Development

10. துர்கா-2 என்ற லேசர் ஆயுதத்தை உருவாக்கவுள்ள அமைப்பு எது?

அ. DRDO

ஆ. ISRO

இ. IIT மெட்ராஸ்

ஈ. NTRO

11. நரம்பு சிலந்தி நோயை ஏற்படுத்தும் நோய்க்காரணி எது?

அ. பாக்டீரியா

ஆ. வைரஸ்

இ. ஒட்டுண்ணி

ஈ. பூஞ்சை

12. 2024-25 சர்க்கரைப் பருவத்திற்கு கரும்புக்கான குறைந்தபட்ச ஆதார விலை (Fair and Remunerative Price) எவ்வளவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது?

அ. குவிண்டால் ஒன்றுக்கு ரூ.340

ஆ. குவிண்டால் ஒன்றுக்கு ரூ.320

இ. குவிண்டால் ஒன்றுக்கு ரூ.310

ஈ. குவிண்டால் ஒன்றுக்கு ரூ.360

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. அழிந்து வரும் உயிரினங்களை பாதுகாக்க நடவடிக்கை: தமிழ்நாடு வனத்துறை.

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியை வாழ்விடமாகக் கொண்ட நீலகிரி மார்டின் என்னும் கரும்வெருகு மற்றும் மூவகை நீர்நாய்கள் (ஆற்று நீர்நாய், சிறிய நகங்கள்கொண்ட ஆசிய நீர்நாய் மற்றும் யூரேசிய நீர்நாய்) வாழ்விட இழப்பு காரணமாக பெரும் அச்சுறுத்தலை எதிர்கொண்டு வருகின்றன. இவையிரண்டும் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தில் (IUCN) அழிந்துவரும் விலங்கினங்களைக் குறிக்கப் பயன்படும் சிவப்புப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. நீர்நாய் மற்றும் நீலகிரி கரும்வெருகு போன்ற அழிவின் விளிம்பில் உள்ள உயிரினங்களைப் பாதுகாக்க, தமிழ்நாடு அழிந்துவரும் உயிரினங்கள் பாதுகாப்பு நிதியத்தை தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ளது.

இந்திய கடலோரக் காவல்படையின் எழுச்சி நாள் ஆண்டுதோறும் பிப்.23ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

2. கிண்டியில் `157 கோடியில் தேசிய முதியோர் நல மருத்துவமனை.

சென்னை கிண்டியில் `157.17 கோடியில் கட்டப்பட்டுள்ள தேசிய முதியோர் நல மருத்துவமனையை பிரதமர் நரேந்திர மோதி காணொலிக்காட்சிமூலம் திறந்து வைத்தார்.

3. இராஜஸ்தானில் இந்தியா, ஜப்பான் கூட்டு இராணுவப் பயிற்சி தொடக்கம்.

இராஜஸ்தான் மாநிலம் பிகானேரில் உள்ள உள்ள மஹாஜன் துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தில் இந்தியா-ஜப்பான் கூட்டு இராணுவப் பயிற்சி தொடங்கியது. ‘தர்ம பாதுகாவலர்’ என்ற பெயரில் நடைபெறும் இந்தப் பயிற்சியில், இந்தியா தரப்பில் இராஜபுதன ரைபிள்ஸ் வீரர்களும், ஜப்பான் தரப்பில் அந்நாட்டின் 34ஆவது காலாட்படைப் பிரிவைச் சேர்ந்த வீரர்களும் பங்கேற்கின்றனர். இருநாடுகளுக்கு இடையிலான ராணுவ ஒத்துழைப்பை வளர்த்தல், இருநாடுகளின் கூட்டு நடவடிக்கைகளை செயல்படுத்த ஒருங்கிணைந்த திறன்களை மேம்படுத்துதல் ஆகியவையே இந்தப் பயிற்சியின் நோக்கம். சிறப்பு ஆயுத திறன்கள் குறித்த அடிப்படைகள், உத்திசார்ந்த கூட்டுப் பயிற்சிகள், கூட்டுத் திட்டமிடல் உள்ளிட்டவைமீது பயிற்சியில் கவனம் செலுத்தப்படும்.

4. பத்து ஆண்டுகளில் மாதாந்திர குடும்ப செலவு இருமடங்கு அதிகரிப்பு: குடும்ப நுகர்வோர் செலவின ஆய்வில் தகவல்.

மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட செயலாக்க அமைச்சகத்தின்கீழ், கடந்த 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் கடந்த 2023ஆம் ஆண்டு ஜூலை வரை குடும்ப நுகர்வோர் செலவின ஆய்வை தேசிய புள்ளியியல் அலுவலகம் (NSO) நடத்தியது. குடும்பத்தின் மாதாந்திர தனிநபர் நுகர்வு செலவினம் மற்றும் நாட்டின் கிராமப்புறம், நகர்ப்புறம் மற்றும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் பல்வேறு சமூக-பொருளாதார குழுக்களின் வாரியாக மதிப்பீடுகளைக் கண்டறிவதை நோக்கமாகக் கொண்டு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

ஆய்வின்படி, தற்போதைய விலையில் சராசரி தனிநபர் மாதாந்திர குடும்ப செலவு நகர்ப்புறங்களில் கடந்த 2011-12ஆம் ஆண்டின் `2,630இலிருந்து கடந்த 2022-23ஆம் ஆண்டில் `6,459ஆக இருமடங்காக அதிகரித்துள்ளது. அதேபோல், கிராமப்புறங்களில் `1,430இலிருந்து `3,773ஆக உயர்ந்துள்ளது. ஆனால், இதேகாலகட்டத்தில் தனிநபர் வருமானம் நகர்ப்புறங்களில் 1.3 மடங்கும், கிராமப்புறங்களில் 1.4 மடங்கும் மட்டுமே அதிகரித்துள்ளது.

ஆய்வின்படி, நாட்டின் விளிம்புநிலை ஏழைகள் கிராமப்புறத்தில் நாளொன்றுக்கு `46 (மாதத்துக்கு `1,371) மற்றும் நகர்ப்புறத்தில் `67 (மாதத்துக்கு `2,001) மட்டுமே செலவழிப்பது தெரியவந்துள்ளது.

தமிழ்நாட்டில் சராசரி மாதாந்திர குடும்பசெலவு:

கிராமப்புறம்: `5310. நகர்ப்புறம்: `7630.

Exit mobile version