Tnpsc Current Affairs in Tamil – 25th October 2023

1. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘அனுபவ்’ வலைத்தளத்துடன் தொடர்புடைய மத்திய அமைச்சகம் எது?

அ. பணியாளர்கள், பொதுமக்கள் குறைதீர் & ஓய்வூதியங்கள் அமைச்சகம் 🗹

ஆ. நிதி அமைச்சகம்

இ. MSME அமைச்சகம்

ஈ. திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம்

2. மத்திய ஜவுளி அமைச்சகத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட பருத்தி பிராண்டின் பெயர் என்ன?

அ. கஸ்தூரி பருத்தி பாரதம் 🗹

ஆ. கிரியா பருத்தி பாரதம்

இ. டெக்ஸோ பருத்தி பாரதம்

ஈ. நமோ பருத்தி பாரதம்

3. ‘மகிளா சாரதி’ என்ற திட்டத்தைத் தொடக்கிய மாநிலம்/யூனியன் பிரதேசம் எது?

அ. பீகார்

ஆ. உத்தரப்பிரதேசம் 🗹

இ. கேரளா

ஈ. கர்நாடகா

4. ‘Paintbrush Swift’ என்பது எந்த அரிய உயிரினத்தின் பெயராகும்?

அ. பாம்பு

ஆ. பட்டாம்பூச்சி 🗹

இ. தவளை

ஈ. தட்டான்

5. திட்டம் 15Bஇன் கீழ் தயாரிக்கப்பட்ட மூன்றாவது கப்பலான INS இம்பாலை வழங்கிய கப்பல் கட்டும் நிறுவனம் எது?

அ. மசாகன் கப்பல் கட்டுநர்கள் 🗹

ஆ. கொச்சி கப்பல் கட்டுந்தளம்

இ. கார்டன் ரீச் கப்பல் கட்டுநர்கள் & பொறியாளர்கள்

ஈ. இந்துஸ்தான் கப்பல் கட்டுந்தளம்

6. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘உத்பவ் திட்டத்துடன்’ தொடர்புடைய மத்திய அமைச்சகம் எது?

அ. பாதுகாப்பு அமைச்சகம் 🗹

ஆ. MSME அமைச்சகம்

இ. நிதி அமைச்சகம்

ஈ. எரிசக்தி அமைச்சகம்

7. 2023 அக்டோபரில், இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல் தொடர்பாக ‘அமைதி உச்சிமாநாட்டை’ நடத்திய நாடு எது?

அ. துருக்கி

ஆ. கிரீஸ்

இ. எகிப்து 🗹

ஈ. பிரான்ஸ்

8. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘ரபா எல்லையைக் கடக்கும் பகுதி’ என்பது எவ்விரு இடங்களுக்கு இடையேயான ஒரு பிரத்யேக கடக்கும் இடம் ஆகும்?

அ. இஸ்ரேல் மற்றும் காசா பகுதி

. எகிப்து மற்றும் காசா பகுதி 🗹

இ. இஸ்ரேல் மற்றும் ஜோர்டான்

ஈ. இஸ்ரேல் மற்றும் லெபனான்

9. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற ‘புனித போர்பிரியஸ் தேவாலயம்’ என்பது கீழ்காணும் எந்த நகரத்தில் உள்ள பழமைவாத தேவாலயமாகும்?

அ. காசா 🗹

ஆ. ஏருசலேம்

இ. ரோம்

ஈ. வாடிகன் நகரம்

10. ‘சைலண்ட் ஷார்க்’ என்ற கூட்டு நீர்மூழ்கி எதிர்ப்பு பயிற்சியை நடத்திய நாடுகள் எவை?

அ. ஜப்பான் மற்றும் தென் கொரியா

ஆ. அமெரிக்கா மற்றும் தென் கொரியா 🗹

இ. சீனா மற்றும் ரஷ்யா

ஈ. எகிப்து மற்றும் இஸ்ரேல்

11. ‘சிந்தனை சுதந்திரத்திற்கான ஷகாரொவ் பரிசு’ வழங்குவது எது?

அ. ஐக்கிய நாடுகள் அவை

ஆ. ஐரோப்பிய ஒன்றியம் 🗹

இ. பன்னாட்டு மன்னிப்பு அவை

ஈ. பன்னாட்டு நீதிமன்றம்

அ. விசாகப்பட்டினம்

ஆ. காக்கிநாடா 🗹

இ. பனாஜி

ஈ. காந்திநகர்

13. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற தோர்டோ கிராமம் அமைந்துள்ள மாநிலம் / யூனியன் பிரதேசம் எது?

அ. பீகார்

ஆ. குஜராத் 🗹

இ. அஸ்ஸாம்

ஈ. கோவா

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. ‘மாமன்னர்’ இராஜராஜனின் 1038ஆவது சதய விழா தொடக்கம்.

தஞ்சாவூர் பெரியகோவிலில் ‘மாமன்னர்’ இராஜராஜசோழனின் 1038ஆம் ஆண்டு சதய விழா தொடங்கியது. கடந்த 985ஆம் ஆண்டு முதல் 1014ஆம் ஆண்டு வரை அவர் ஆட்சி புரிந்தார். சிவபாத சேகரன், திருமுறைகண்ட சோழன், ஜெகநாதன் என பல சிறப்புப் பெயர்களுடன் அவர் விளங்கினார். இத்திருக்கோயில் ஆன்மிகத்துக்கு மட்டுமல்லாமல், நமது கட்டடக்கலை, கலாசாரம், பண்பாடு மற்றும் நாகரிகத்தின் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. நிகழாண்டு இந்த விழா அரசு விழாவாக தமிழ்நாடு அரசால் நடத்தப்படுகிறது.

அன்றைய நாளில் மூவர் அருளிய திருமுறைகளை தமிழ் இலக்கியத்துடனும், பண்பாடுடனும், கலாசாரத்துடனும் வழிநடத்தியவர் இராஜராஜசோழன். சோழநாட்டை சோறுடைத்து எனக்கூறுவர். ‘சோறு’ என்பது அறிவுத்திறன் சார்ந்தது என்கிற பொருளை உள்ளடக்கியதாக இராஜராஜ சோழனின் ஆட்சி அமைந்திருந்தது.

2. பாதுகாப்பான நகரங்கள் பட்டியல்: சென்னை முதலிடம்.

தேசிய அளவில் பொதுமக்களுக்கு பாதுகாப்பான நகரங்கள் பட்டியலில் சென்னை முதலிடத்தைப் பிடித்துள்ளது. செர்பியா நாட்டின் போஸ்னியா-ஹெர்சகோவினாவில் உள்ள பஞ்சா லூகா பல்கலைக்கழகத்தில் மூத்த உதவி பேராசிரியராக பணியாற்றி வருபவர் லேடன் அடமோவிக். இவர் ‘கூகுள்’ நிறுவனத்தில் தொழில்நுட்ப வல்லுநராக உள்ளார். செர்பியா நாட்டை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ‘நம்பியோ’ என்ற தனியார் நிறுவனத்தின் நிறுவனராகவும் உள்ளார். இந்த நிறுவனத்தின்மூலம் அவர், உலகின் முக்கிய நகரங்களில் பாதுகாப்புபற்றி ஆய்வு மேற்கொண்டார். பல செய்தி நிறுவனங்கள் வெளியிட்ட செய்திகளின் அடிப்படையிலும், வேலைக்குச் செல்லும் பெண்களின் பாதுகாப்பான சூழ்நிலை அடிப்படையிலும் ஆய்வுநடத்தப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின் முடிவை அண்மையில் அந்நிறுவனம் வெளியிட்டது. இதில் பாதுகாப்பான மாநகரங்களின் பட்டியலில் இந்திய அளவில் சென்னை முதலிடத்தையும், உலகளவில் 127ஆவது இடத்தையும் பிடித்துள்ளது.

3. பாகிஸ்தான்: ‘கோரி’ ஏவுகணை வெற்றிகர சோதனை.

தனது ‘கோரி’ ஏவுகணை மற்றும் அதனை ஏவும் சாதனங்களை பாகிஸ்தான் இராணுவம் வெற்றிகரமாக ஏவி சோதித்தது. ஒலியைவிட வேகமாகவும் 1,500 கிமீ தொலைவு வரை பாய்ந்து செல்லக்கூடிய குறுகிய தொலைவு ஏவுகணையான ‘கோரி’, அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன்கொண்டது.

4. மருதுபாண்டியர்கள் நினைவுநாள்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் மருதுபாண்டியர்களின் 222ஆம் நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது. ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்து, முதல் போர் பிரகடனம் செய்து, விடுதலைப்போராட்டத்துக்கு வித்திட்ட மருதிருவர்கள் கடந்த 1801ஆம் ஆண்டு, அக்.24ஆம் தேதி ஆங்கிலேயர்களால் திருப்பத்தூரில் தூக்கிலிடப்பட்டனர். அவர்களது நினைவுநாள் அரசு விழாவாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

5. ஆசிய பாரா ஒலிம்பிக்: இந்தியாவுக்கு 4 பதக்கங்கள்; தமிழ்நாட்டின் மாரியப்பனுக்கு வெள்ளி!

ஆசிய பாரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் இந்திய அணி 4 பதக்கங்களை வென்றுள்ளது. இந்தப் போட்டியின் முதல் நாளான இன்று இந்திய அணி ஒரு தங்கம் உள்பட நான்கு பதக்கங்களை வென்றுள்ளது. ஆடவர் உயரம் தாண்டுதலில் கைலேஷ் குமார் தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார். இதே பிரிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு வெள்ளியும், இராம்சிங் வெண்கலமும் வென்று அசத்தியுள்ளனர். மேலும், வட்டு எறிதல் போட்டியில் தமிழ்நாட்டு வீரர் முத்துராஜா வெண்கலம் வென்றுள்ளார்.

6. எட்டயபுரத்தில் தமிழறிஞர் உமறுப்புலவர் பிறந்தநாள் விழா.

சீறாப்புராணம் காப்பியம் இயற்றிய தமிழறிஞர் அமுதகவி உமறுப்புலவரின் 381ஆவது ஆண்டு பிறந்தநாள் விழா தமிழ்நாடு அரசின் சார்பில் எட்டயபுரத்தில் கொண்டாடப்பட்டது.

IMPORTANT LINKS

TNPSC Current Affairs

https://www.winmeen.com/tnpsc-tamil-current-affairs/

Winmeen: Install the Winmeen App – Daily Free & Premium Tnpsc Study Materials & Online Test

https://play.google.com/store/apps/details?id=co.robin.jbzwb

Winmeen: Winmeen Tnpsc Test Series – Samacheer lesson Wise Test + Previous Year Model Test for Tnpsc Group 1,2, 4 & VAO

https://wp.me/p7JanY-ag8

Exit mobile version