Tnpsc Current Affairs in Tamil – 25th & 26th November 2023

1. முந்திரிக்குப் புவிசார் குறியீடு பெற்றுள்ள மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. கோவா 🗹

இ. கேரளா

ஈ. ஒடிசா

2. கத்தாளை மீனை, ‘மாநில மீன்’ என அறிவித்துள்ள மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. குஜராத் 🗹

இ. மகாராஷ்டிரா

ஈ. மேற்கு வங்காளம்

3. நோவா-டிகிங் (Noa-Dihing) இசைத்தவளை என்பது கீழ்காணும் எந்த மாநிலத்தில் புதிதாகக் கண்டறியப்பட்ட ஓர் உயிரினமாகும்?

அ. அஸ்ஸாம்

ஆ. அருணாச்சல பிரதேசம் 🗹

இ. மணிப்பூர்

ஈ. மேகாலயா

4. ‘SATHEE’ இணையதளத்தை அறிமுகப்படுத்திய மத்திய அமைச்சகம் எது?

அ. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்

ஆ. கல்வி அமைச்சகம் 🗹

இ. MSME அமைச்சகம்

ஈ. நிதி அமைச்சகம்

5. ‘வஜ்ர பிரஹார்’ என்பது இந்தியாவிற்கும் கீழ்காணும் எந்த நாட்டிற்கும் இடையிலான கூட்டுப்பயிற்சியாகும்?

அ. அமெரிக்கா 🗹

ஆ. மியான்மர்

இ. வங்காளதேசம்

ஈ. நேபாளம்

6. கொசு தொடர்பான பிரச்னைகளை சமாளிப்பதற்காக இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட மீன் எது?

அ. கொசு மீன் 🗹

ஆ. வௌவால் மீன்

இ. தோப்பா மீன்

ஈ. கெளுத்தி மீன்

7. உலக சுகாதார அமைப்பின் கருத்துப்படி, ஒரு சுகாதார உட்கட்டமைப்பில் 1000 பேருக்கு எத்தனை படுக்கைகள் இருக்க வேண்டும் எனப் பரிந்துரைக்கப்படுகிறது?

அ. 1

ஆ. 3 🗹

இ. 5

ஈ. 10

8. அதிவிரைவான கண்டுபிடிப்பு மற்றும் துளிர் நிறுவல்கள் விரிவாக்கம் Rapid Innovation and Startup Expansion (RISE) என்ற முடுக்கி திட்டத்துடன் தொடர்புடையது எது?

அ. DIIIT

ஆ. அடல் புத்தாக்க இயக்கம் 🗹

இ. SEBI

ஈ. NASSCOM

9. உள்நாட்டில் உருவாக்கப்பட்ட குறுகிய தூரம் செல்லும் முதல் கடற்படை கப்பல் எதிர்ப்பு எறிகணையுடன் (NASM-SR) தொடர்புடைய அமைப்பு எது?

அ. HAL

ஆ. DRDO 🗹

இ. ISRO

ஈ. L&T

10. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற பங்கஜ் அத்வானியுடன் தொடர்புடைய விளையாட்டு எது?

அ. டேபிள் டென்னிஸ்

ஆ. ஸ்குவாஷ்

இ. பில்லியர்ட்ஸ் 🗹

ஈ. தடகள

11. உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி யார்?

அ. நீதிபதி பாத்திமா பீவி 🗹

ஆ. நீதிபதி சுஜாதா மனோகர்

இ. நீதிபதி ரூமா பால்

ஈ. நீதிபதி கியான் சுதா மிஸ்ரா

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. 25-11-2023: பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம்.

பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, ஆரஞ்சு நிற மின் விளக்குகளால் சென்னை ரிப்பன் மாளிகை மிளிரவைக்கப்பட்டது.

2. விண்ணில் ‘எல்-1’ பகுதியை நெருங்கிய ஆதித்யா விண்கலம்.

சூரியனின் புறவெளியை ஆய்வுசெய்ய ஆதித்யா எல்-1 விண்கலத்தை இஸ்ரோ கடந்த செப்.02 அன்று விண்ணில் வெற்றிகரமாக ஏவியது. அந்த விண்கலம் ‘எல்-1’ பகுதிக்குள் நுழைவது வரும் 2024 ஜனவரி.07ஆம் தேதியன்று நிறைவடையும்.

இந்தியாவில் உருவாக்கப்பட்ட முதல் ஒலி எழுப்பும் ஏவுகணை ஏவப்பட்டதன் 60ஆம் ஆண்டு நினைவு விழா திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

‘எல்-1’ பகுதி: பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கிமீ தொலைவில் உள்ள ‘லாக்ராஞ்சியன் பாயின்ட் ஒன் (எல்-1)’ என்ற பூமிக்கும் சூரியனுக்கும் இடையேயான பகுதியில் ஈர்ப்புவிசை சமமாக இருக்கும். சுமார் 1475 கிலோ எடைகொண்ட ஆதித்யா விண்கலம் 125 நாள்கள் பயணத்துக்கு பின்னர், இந்த எல்-1 பகுதியில் நிலைநிறுத்தப்படும். அங்கிருந்தபடி சூரிய புறவெளியின் வெப்பச்சூழல், கதிர்வீச்சு, காந்தப்புயல் உள்ளிட்டவை குறித்த ஆய்வுகளை விண்கலம் மேற்கொள்ளும். இதற்காக தொலைநோக்கி, பிளாஸ்மா அனலைசர் (பகுப்பாய்வு கருவி), எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோ மீட்டர் (ஊடுகதிர் நிறமாலைமானி) உள்ளிட்ட 7 விதமான ஆய்வுக்கருவிகள் ஆதித்யா விண்கலத்தில் இடம்பெற்றுள்ளன.

3. திட்டக்குடியில் `33 கோடியில் கால்நடை தீவன ஆலை.

கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் நாளொன்றுக்கு 300 மெட்ரிக் டன் (MT) உற்பத்தித் திறனில் கால்நடை தீவனம் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்படவுள்ளது. NABARD திட்டத்தின் கடனுதவியுடன் `33 கோடியில் தீவன ஆலை நிறுவப்படவுள்ளது.

4. “எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி” திட்டம்.

தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் அமைந்துள்ள அரசுப்பள்ளிகளில், “எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி” என்ற முன்னெடுப்பு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தைப் பொருத்தவரை பள்ளிகளில் அனைத்துப் பகுதிகளையும் சுற்றுச்சூழலை பசுமையாக வைப்பதே நோக்கமாகும்.

5. தமிழ்நாட்டில் 7,000 மெகாவாட் (MW) சூரியசக்தி மின்னுற்பத்தி.

தமிழ்நாட்டில் கடந்த அக்டோபர் மாத நிலவரப்படி ஒட்டுமொத்த சூரியசக்தி மூலம் மின்னுற்பத்தித் திறன் 7,000 மெகாவாட்டைத் தாண்டியுள்ளது. நாட்டில் புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து ஆண்டுக்கு 300 நாள்களுக்கு மேலாக மின்சாரம் கிடைக்கும் சூழல் இருந்து வருகிறது.

தமிழ்நாட்டில் அதிக திறனில் அமைக்கப்பட்ட சூரியசக்தி மின் நிலையங்கள்மூலம் உற்பத்தித்திறன் 6,649 மெகாவாட்டாகவும், மேற்கூரைமூலம் மின் உற்பத்தித் திறன் 449 மெகாவாட்டாகவும், விவசாய நிலங்கள்மூலம் 65.86 மெகாவாட் ஆகவும் என ஒட்டுமொத்த சூரியசக்தி மின் உற்பத்தித் திறன் 7,164.59 மெகாவாட்டாக உள்ளது. குறிப்பாக, கடந்த நான்கு மாதங்களில் 263 மெகாவாட் அளவிலான அதிகத் திறன் கொண்ட சூரியமின்சக்தி நிலையங்கள் கூடுதலாக நிறுவப்பட்டுள்ளன. நாட்டிலேயே, புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தித் திறனில் குஜராத் மாநிலம் முதலிடத்திலும், தமிழ்நாடு இரண்டாமிடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

IMPORTANT LINKS

TNPSC Current Affairs

https://www.winmeen.com/tnpsc-tamil-current-affairs/

Winmeen: Install the Winmeen App – Daily Free & Premium Tnpsc Study Materials & Online Test

https://play.google.com/store/apps/details?id=co.robin.jbzwb

Winmeen: Winmeen Tnpsc Test Series – Samacheer lesson Wise Test + Previous Year Model Test for Tnpsc Group 1,2, 4 & VAO

https://wp.me/p7JanY-ag8

Exit mobile version