Tnpsc Current Affairs in Tamil – 25th & 26th March 2024

1. அண்மையில், மக்களாட்சிக்கான மூன்றாவது உச்சிமாநாட்டை நடத்திய நாடு எது?

அ. இந்தியா

. தென் கொரியா

இ. வியட்நாம்

ஈ. ஜெர்மனி

2. அண்மையில் சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட, ‘பல்கேரிய ரூயென் கப்பலை’ மீட்ட இந்திய கடற்படைக் கப்பல் எது?

அ. INS கல்வாரி

ஆ. INS கொல்கத்தா

இ. INS கும்பீர்

ஈ. INS கந்தேரி

3. சமீபத்தில், யாருக்கு தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரியின் துணை நிலை ஆளுநர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டது?

அ. தமிழிசை சௌந்தரராஜன்

ஆ. CP இராதாகிருஷ்ணன்

இ. பன்வாரிலால் புரோகித்

ஈ. கல்ராஜ் மிஸ்ரா

4. அண்மையில், மூன்றாவது வடகிழக்கு விளையாட்டுப் போட்டிகள் தொடங்கப்பட்ட இடம் எது?

அ. நாகாலாந்து

ஆ. அஸ்ஸாம்

இ. அருணாச்சல பிரதேசம்

ஈ. மிசோரம்

5. சமீபத்தில், நான்காவது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) புத்தொழில் கருத்துக்களம் ஏற்பாடு செய்யப்பட்ட இடம் எது?

அ. சென்னை

ஆ. புது தில்லி

இ பெங்களூரு

ஈ. ஹைதராபாத்

6. ஒவ்வோர் ஆண்டும், ‘சர்வதேச இனப்பாகுபாடு ஒழிப்பு நாள்’ கடைப்பிடிக்கப்படுகிற தேதி எது?

அ. 20 மார்ச்

ஆ. 21 மார்ச்

இ. 22 மார்ச்

ஈ. 23 மார்ச்

7. ‘Brucethoa isro’ என்றால் என்ன?

அ. தாவர நோய்

ஆ. புதிய வகை சிலந்தி

இ. புதிய வகை ஆழ்கடல் ஏழிணைக்காலி (isopod)

ஈ. சிறுகோள்

8. தனியாரால் உருவாக்கப்பட்ட இந்தியாவின் இரண்டாவது ஏவுகலமான, ‘அக்னிபான் SORTeD’ஐ ஏவுவதற்குத் தயாராகவுள்ள விண்வெளிசார் புத்தொழில் நிறுவனம் எது?

அ. கேலக்ஸை ஸ்பேஸ்

ஆ. அக்னிகுல் காஸ்மோஸ்

இ. பெல்லாட்ரிக்ஸ் ஏரோஸ்பேஸ்

ஈ. துருவா விண்வெளி

9. 2024 – உலக தண்ணீர் நாளுக்கானக் கருப்பொருள் என்ன?

அ. Groundwater: Making the invisible visible

ஆ. Leveraging Water for Peace

இ. Water and Climate Change

ஈ. Leaving No One Behind

10. சமீபத்தில், வான்பயண வார வெற்றியாளர் (Aviation Week Laureates) விருதைப் பெற்ற இந்திய அமைப்பு எது?

அ. ISRO

ஆ. DRDO

இ. ICAR

ஈ. CSIR

11. 2024 – உலக காடுகள் நாளுக்கானக் கருப்பொருள் என்ன?

அ. Forests and innovation: new solutions for a better world

ஆ. Forests restoration: The path to recovery and welfare

இ. Forests and Biodiversity

ஈ. Learn to Love Forests

12. உலக காற்றுத் தர அறிக்கையின்படி, கடந்த 2023இல் எந்த நாடு 3ஆவது மாசுபட்ட நாடாக இருந்தது?

அ. நேபாளம்

ஆ. எகிப்து

இ. இந்தியா

ஈ. பின்லாந்து

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. விஜயநகர ஆட்சிக்கால புலிக்குத்திப்பட்டான் நடுகல் கண்டெடுப்பு.

திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி அருகே கும்மிடிகாம்பட்டி அடுத்த கரகப்பூசாரி வட்டம் பகுதியில் விஜயநகர மன்னர் ஆட்சிக்கால புலிக்குத்திப்பட்டான் நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

முன்னங்கால்களைத் தூக்கியபடி வாயைப் பிளந்த நிலையில் தாக்கவரும் புலியை வீரன் அதன் வாயில் தன் இடது கையால், ‘கட்டாரி’யால் குத்திய நிலையில், வலது கையில் பெரிய வாளினை ஏந்தி, தாக்க முற்படும் நிலையில் இந்த நடுகல் செதுக்கப்பட்டுள்ளது.

‘கட்டாரி’ என்ற ஆயுதம்:

‘கட்டாரி’ என்ற ஆயுதம் இந்திய துணைக்கண்டத்தைப் பூர்வீகமாகக்கொண்ட ஒரு குத்துவாள் ஆயுத வகையாகும். நடுவிரல், ஆள்காட்டி விரலுக்கிடையில் வைத்து பயன்படுத்தும் இந்தக் குத்துவாளின் கைப்பிடியானது, ‘ஏ’ வடிவில் இருக்கும். இது வடமொழியில் கட்டாரா அல்லது கட்டாரி என மருவியது.

2033ஆம் ஆண்டுக்குள் இந்திய விண்வெளி பொருளாதாரத்தின் மதிப்பு $44 பில்லியன் டாலர்களாக (சுமார் `3.67 இலட்சம் கோடி) அதிகரிக்க கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது சர்வதேச விண்வெளி பொருளாதார மதிப்பில் 8 சதவீதமாகும்.

2. வைகை-காவிரி-குண்டாறு இணைப்பு திட்டப்பணிகள் நடைபெறுகின்றன.

வைகை-காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டப்பணிகள் நடைபெற்று வருவதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் உள்ள வைகை-காவிரி-குண்டாறு விவசாயிகளுக்கு மட்டுமன்றி, பொதுமக்களின் முதன்மை குடிநீர் ஆதாரமாகவும் விளங்கி வருகிறது. இந்த 3 ஆறுகளின் இணைப்பானது சுமார் 255 கிமீட்டர் தொலைவு ஆகும். முதல் கட்டமாக, கரூர் மாவட்டம், மாயனூர் ஆற்றிலிருந்து புதுக்கோட்டை வரை தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. 2ஆம் கட்டமாக புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து வைகை ஆற்றுக்கும், மூன்றாம் கட்டமாக வைகை ஆற்றிலிருந்து குண்டாறுக்கும் இணைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

3. இந்தியாவில் 81 சதவீதம் அதிகரித்த மீன் நுகர்வு.

இந்தியாவின் மீன் நுகர்வு கடந்த 2005-2021 காலகட்டத்தில் 81 சதவீதம் அதிகரித்துள்ளது. மீன் உண்பவர்களின் விகிதத்தைப் பொருத்தவரை, 99.35 சதவீதத்தினருடன் திரிபுரா முதலிடம் வகிக்கிறது. வெறும் 20.55 பேர் மட்டுமே மீன் நுகர்வோரைக் கொண்டு இந்தப் பட்டியலில் ஹரியாணா கடைசி இடத்தில் உள்ளது.

Exit mobile version