Tnpsc Current Affairs in Tamil – 25th & 26th January 2024

1. பரம்பிக்குளம் புலிகள் காப்பகம் அமைந்துள்ள மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. கேரளா

இ. இராஜஸ்தான்

ஈ. கர்நாடகா

2. Andrographis theniensis’ என்றால் என்ன?

அ. தாவரம்

ஆ. விலங்கு

இ. பாக்டீரியா

ஈ. பூஞ்சை

3. ஆண்டுதோறும், ‘பராக்கிரம நாள்’ அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ. 22 ஜனவரி

ஆ. 21 ஜனவரி

இ. 23 ஜனவரி

ஈ. 25 ஜனவரி

4. அண்மையில், இந்தியாவின் மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உட்கட்டமைப்பு முதலீட்டு அறக்கட்டளையில் (InvIT) முதன்மை முதலீட்டாளராக ஆன நிறுவனம் எது?

அ. ஐரோப்பிய முதலீட்டு வங்கி

ஆ. உலக வங்கி

இ. பன்னாட்டு செலாவணி நிதியம் (IMF)

ஈ. ஆசிய உட்கட்டமைப்பு & முதலீட்டு வங்கி (AIIB)

5. ‘ஹமாரா சம்விதான், ஹமாரா சம்மான்’ என்ற இயக்கத்துடன் தொடர்புடைய அமைச்சகம் எது?

அ. சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்

ஆ. பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகம்

இ. நிதி அமைச்சகம்

ஈ. வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம்

6. நிறுவனங்கள் பிரிவில், 2024ஆம் ஆண்டுகான, ‘சுபாஷ் சந்திரபோஸ் பேரிடர் மேலாண்மை விருது’க்குத் தெரிவான நிறுவனம் எது?

அ. பாராசூட் கள மருத்துவமனை – 60, உத்தர பிரதேசம்

ஆ. பாராசூட் கள மருத்துவமனை – 30, உத்தர பிரதேசம்

இ. KGMU, லக்னோ

ஈ. AIIMS, தில்லி

7. பிராந்திய மொழிகளில் கல்விக்குத் தேவையான உள்ளடக்கங்களை வழங்குவதற்காக அண்மையில் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட AI-அடிப்படையிலான செயலியின் பெயர் என்ன?

அ. அனுவாதினி செயலி

ஆ. பாஷினி செயலி

இ. தீக்ஷா செயலி

ஈ. பாஷா சங்கம் செயலி

8. பிரதம மந்திரி சூர்யோதயா யோஜனாவுடன் தொடர்புடையது எது?

அ. மேற்கூரையில் சூரிய ஆற்றல் உற்பத்தித் தகடுகளை நிறுவுதல்

ஆ. சூரியகாந்தி சாகுபடி

இ. மின்னியற்றிகள்

ஈ. கிராமப்புற சுகாதாரம்

9. ‘சூறாவளி – Cyclone’ என்ற பயிற்சியானது கீழ்காணும் எந்த இரு நாடுகளுக்கு இடையே நடத்தப்படுகிறது?

அ. இந்தியா மற்றும் எகிப்து

ஆ. இந்தியா மற்றும் ஜப்பான்

இ. இந்தியா மற்றும் சூடான்

ஈ. இந்தியா மற்றும் இஸ்ரேல்

10. 2024 – மகளிர் ஒற்றையர் இந்திய ஓபன் பட்டத்தை வென்ற வீராங்கனை யார்?

அ. தை சூ யிங்

ஆ. சென் யூ ஃபெய்

இ. ஜியா மின்

ஈ. கொடை நரௌகா

11. மமானி பாரம்பரிய உணவுத் திருவிழா கொண்டாடப்படுகிற மாநிலம் அல்லது யூனியன் பிரதேசம் எது?

அ. லடாக்

ஆ ஹரியானா

இ. ஹிமாச்சல பிரதேசம்

ஈ. பஞ்சாப்

12. ‘கஞ்சார் – Khanjar’ என்ற பயிற்சியானது கீழ்காணும் எந்த இரு நாடுகளுக்கு இடையே நடத்தப்படுகிறது?

அ. இந்தியா-கிர்கிஸ்தான்

ஆ. இந்தியா-ஆப்கானிஸ்தான்

இ. இந்தியா-தஜிகிஸ்தான்

ஈ. இந்தியா-துர்க்மெனிஸ்தான்

13. ‘Scrub Typhus – உண்ணிக்காய்ச்சல்’ என்பது பின்வருவனவற்றில் எதனால் ஏற்படும் ஒரு தொற்றுநோயாகும்?

அ. பாக்டீரியா

ஆ. பூஞ்சை

இ. வைரஸ்

ஈ. புரோட்டோசோவா

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. 2024 ஜன.25: தேசிய வாக்காளர் நாள்.

கருப்பொருள்: “Nothing Like Voting, I Vote for Sure”.

2. நிலக்கரி வாயுமயமாக்கல் திட்டத்தை ஊக்குவிக்க `8,500 கோடி: மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

இந்தியாவில் நிலக்கரி வாயுமயமாக்கல் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன்மூலம், இயற்கை எரிவாயு, மெத்தனல், அம்மோனியா உள்ளிட்ட பிற அத்தியாவசிய பொருள்களுக்கு நாடு இறக்குமதியை சார்ந்திருக்கும் நிலை வெகுவாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 2030ஆம் ஆண்டுக்குள் 10 கோடி டன் நிலக்கரியை வாயுமயமாக்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

நிலக்கரியானது கரியமில வாயு, நீராவி ஆகியவற்றின் உதவியுடன் பகுதியாக ஆக்சிஜனேற்றம் செய்யப்பட்டு, திரவ எரிவாயு உற்பத்திசெய்யப்படும். மின்னுற்பத்தி மற்றும் மெத்தனல் தயாரிக்க இந்தத் திரவ எரிவாயு பயன்படுத்தப்படும்.

3. சென்னையில் குற்றங்களை கட்டுப்படுத்த 3 செயலிகள்:

காணமல்போன மற்றும் திருடப்பட்ட வாகனங்களை மீட்கும் அமைப்பு: Integrated Vehicle Monitoring System (IVMS).

பருந்து செயலி: சென்னையில் உள்ள சரித்திர பதிவேடு குற்றவாளிகளைக் கண்காணிக்கும் செயலி

பந்தம் செயலி: சென்னையில் வசிக்கும் எழுபத்தைந்து வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், வீட்டில் தனியாக உள்ள முதியவர் கள், வாரிசில்லாத முதியவர்கள், கைவிடப்பட்ட முதியோர்கள், வெளிநாட்டில் வசிப்பவர்களின் வயதான பெற்றோர்கள் ஆகியோரின் விவரம் சேகரிக்கப்பட்டு காவல்துறையின், ‘பந்தம்’ செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டு, அந்தந்த பகுதி காவலர் கண்காணிப்பில் இருப்பார்கள். முதியோருக்குத் தேவையான மருத்துவ உதவியையும், அவசர உதவியையும் காவலர் செய்வார்கள்.

நிவாரணம் செயலி: சென்னை பெருநகர காவல்துறையில், காவல் நிலையங்கள், காவல் அதிகாரிகள், இணைய தளம்மூலம் பொதுமக்கள் அளிக்கும் புகார்களை ஒருங்கிணைத்து அவற்றை கண்காணிக்கவும், அந்த புகார்களுக்கு எத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, எந்த அதிகாரி அந்தப் புகாரை விசாரணை செய்கிறார் ஆகியவற்றை உடனுக்குடன் தெரிந்துகொள்ளும் வகையில், ‘நிவாரணம்’ செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

4. 31 பேருக்கு 2023ஆம் ஆண்டிற்கான, ‘ஜீவன் ரக்ஷா’ பதக்கங்கள்.

ஒரு நபர் அல்லது பலரது உயிர்களைக்காப்பாற்றும் சிறந்த செயலுக்காக ஜீவன் ரக்ஷா பதக்க விருதுகள் 3 வகையாக வழங்கப்படுகிறது. இதில் 2023ஆம் ஆண்டிற்கு சர்வோத்தம் ஜீவன் ரக்ஷா பதக்கம் 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தம் ஜீவன் ரக்ஷா பதக்கம் 7 பேருக்கு வழங்கப்படுகிறது. இதில் பொதுமக்களும், எல்லை சாலை அமைப்பு, தேசிய பேரிடர் மேலாண் படை, தேசிய புலனாய்வு அமைப்பு போன்றவற்றைச் சேர்ந்தவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

‘ஜீவன் ரக்ஷா’ பதக்கம் 21 பேருக்கும் வழங்கப்படுகிறது. இந்த, ’ஜீவன் ரக்ஷா’ பதக்கம் பெறுவோர் பட்டியலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மீரா மைக்கேல், எஸ். விஜய்குமார் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

5. நீதிபதி பி. பி. வராலே பதவியேற்பு: முழு பலத்தை எட்டியது உச்சநீதிமன்றம்.

கர்நாடக உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த பி பி வராலே, உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார். இவருடைய பதவியேற்பின்மூலம் அனுமதிக்கப்பட்ட முப்பத்து நான்கு நீதிபதிகள் என்ற முழு நீதிபதிகள் பலத்தை இந்திய உச்சநீதிமன்றம் எட்டியுள்ளது.

3 பட்டியலின நீதிபதிகள்: இவருடைய பதவியேற்பின்மூலம், உச்சநீதிமன்றத்தில் முதன்முறையாக பட்டியலினப் பிரிவை (SC) சேர்ந்த நீதிபதிகளின் எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது. ஏற்கெனவே, உச்சநீதிமன்றத்தில் இந்த சமூகத்தைச் சேர்ந்த பி. ஆர். கவாய், சி. டி. இரவிக்குமார் ஆகியோர் நீதிபதிகளாகப் பணியாற்றி வருகின்றனர்.

6. இரு ஆண்டுகளுக்கான இலக்கிய மாமணி விருதுகள் அறிவிப்பு.

இரண்டு ஆண்டுகளுக்கான இலக்கிய மாமணி விருதுகளை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அரங்க. ராமலிங்கம் உள்பட 9 தமிழறிஞர்கள் விருதுகளைப் பெறவுள்ளனர். விருதாளர்கள் ஒவ்வொருவருக்கும் `5 இலட்சத்துக்கான காசோலை, ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை ஆகியன வழங்கப்படும்.

7. பாரம்பரிய கலைகளுக்கு முன்னோடி வள்ளி கும்மி.

கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகேயுள்ள தாசம்பாளையத்தைச் சேர்ந்தவர் பத்ரப்பன் (87), ‘வள்ளி கும்மி’ ஆசிரியர். இவருக்கு, ‘பத்மஸ்ரீ’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ‘வள்ளி கும்மி’ ஆசிரியரான பத்ரப்பனுக்கு தமிழக அரசின் கலைமாமணி விருது கடந்த 2019ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. ஆண்கள் மட்டுமே பங்கேற்று வந்த வள்ளி கும்மி ஆட்டத்தில், தமிழ்நாட்டில் பெண்களுக்கும் பயிற்சியளித்தவர் பத்ரப்பன்.

2024 ஜன.26: 75ஆவது குடியரசு நாள்.

8. 2024ஆம் ஆண்டுக்கான, ‘பத்ம’ விருதுகள்:

முன்னாள் குடியரசுத்துணைத்தலைவர் எம் வெங்கையா நாயுடு (74), பழம்பெரும் நடிகை வைஜெயந்தி மாலா (90), தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி (68), சென்னையைச் சேர்ந்த பரதநாட்டியக் கலைஞர் பத்மா சுப்பிரமணியம் (80), பிகாரைச் சேர்ந்த மறைந்த சமூக ஆர்வலர் பிந்தேஸ்வர் பதக் ஆகியோருக்கு பத்ம விபூஷண் விருதும், மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு பத்ம பூஷண் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த 8 பேருக்கு பத்மவிருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவர்களில் பத்ம விபூஷண் இருவருக்கும், பத்ம பூஷண் ஒருவருக்கும், பத்மஸ்ரீ ஐந்து பேருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிலிருந்து பத்ம விபூஷண் விருது பெற்றவர்கள்:

வைஜெயந்திமாலா – கலை.

பத்மா சுப்ரமணியம் – கலை.

தமிழ்நாட்டிலிருந்து பத்ம பூஷண் விருது பெற்றவர்கள்:

விஜயகாந்த் – கலை.

தமிழ்நாட்டிலிருந்து பத்மஸ்ரீ விருது பெற்றவர்கள்:

பத்ரப்பன் – வள்ளி ஒயில் கும்மி நாட்டுப்புற நடனக்கலைஞர், கோயம்புத்தூர்.

ஜோஷ்னா சின்னப்பா – விளையாட்டு.

ஜோ டி குரூஸ் – இலக்கியம் மற்றும் கல்வி.

ஜி. நாச்சியார் – மருத்துவம்.

சேசம்பட்டி டி சிவலிங்கம் – கலை.

9. தமிழ்நாடு அரசின் நம்மாழ்வார் விருது அறிவிப்பு!

தமிழ்நாடு அரசின் சார்பில் 2023-2024ஆம் ஆண்டிற்கான சிறந்த அங்கக விவசாயிகளுக்கான, ‘நம்மாழ்வார் விருது’க்குத் தேர்வுசெய்யப்பட்டுள்ள 3 விவசாயிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம், மகர்நோன்புச் சாவடியைச் சேர்ந்த கோ. சித்தர் முதல்பரிசாக `2.50 இலட்சம் ரொக்கப்பரிசு, சான்றிதழ் மற்றும் பதக்கமும், திருப்பூர் மாவட்டம், பொங்கலூரைச்சேர்ந்த கே. வெ. பழனிசாமி இரண்டாம் பரிசாக `1.50 இலட்சம் ரொக்கப்பரிசு, சான்றிதழ் மற்றும் பதக்கமும், காஞ்சிபுரம் மாவட்டம், அச்சுக்கட்டு கிராமத்தைச் சேர்ந்த கு. எழிலனுக்கு மூன்றாம் பரிசாக `1 இலட்சம் ரொக்கப்பரிசு, சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்படவுள்ளது.

Exit mobile version