Tnpsc Current Affairs in Tamil – 23rd & 24th March 2024

1. SAKHI என்ற செயலியுடன் தொடர்புடைய திட்டம் எது?

அ. சந்திரயான் – 2 திட்டம்

. ககன்யான் திட்டம்

இ. சந்திரயான் – 3 திட்டம்

ஈ. ஆதித்யா L1 திட்டம்

2. 2024 அக்டோபரில் வியாழனின் நிலவுகளில் ஒன்றான யூரோபாவுக்கு, ‘message in a bottle’ என்ற செய்தியைக் கொண்டுசெல்ல திட்டமிட்டுள்ள விண்வெளி அமைப்பு எது?

அ. NASA

ஆ. ISRO

இ. JAXA

ஈ. ESA

3. அண்மையில், 2024ஆம் ஆண்டுக்கான, ‘நிருத்ய கலாநிதி விருது’ யாருக்கு வழங்கப்பட்டது?

அ. வசந்தலட்சுமி நரசிம்மாச்சாரி

ஆ. ஜெயஸ்ரீ

இ. நீனா பிரசாத்

ஈ. வித் பிராகா பெஸ்ஸல்

4. ஆண்டுதோறும், ‘உலக மகிழ்ச்சி நாள்’ கொண்டாடப்படுகிற தேதி எது?

அ. 18 மார்ச்

ஆ. 19 மார்ச்

இ. 20 மார்ச்

ஈ. 21 மார்ச்

5. அண்மையில், தேசிய பெண்கள் ஆணையமானது ஆட்கடத்தலைக் கட்டுப்படுத்துவதற்காக கீழ்காணும் எந்தப் பாதுகாப்பு படையுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது?

அ. மத்திய ஆயுதமேந்திய காவலர் படை

ஆ. மத்திய சேமக் காவல்படை

இ ரெயில்வே பாதுகாப்புப் படை

ஈ. மத்திய தொழிற்துறை பாதுகாப்புப் படை

6. 2024 – உலக மகிழ்ச்சி அறிக்கையில் இந்தியா அடைந்துள்ள தரநிலை என்ன?

அ. 125ஆவது

ஆ. 126ஆவது

இ. 127ஆவது

ஈ. 128ஆவது

7. உலகளாவிய தட்பவெப்பநிலையின் நிலைகுறித்த அறிக்கையை வெளியிடுகிற அமைப்பு எது?

அ. உலக சுகாதார அமைப்பு

ஆ. உலக வானிலையியல் அமைப்பு

இ. ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம்

ஈ. ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டம்

8. அண்மையில், ரஷ்யாவுக்கான இந்திய தூதராக நியமிக்கப்பட்டவர் யார்?

அ. சௌரவ் குமார்

ஆ. வினய் குமார்

இ. அமல் குமார் கோஸ்வாமி

ஈ. DB வெங்கடேஷ் வர்மா

9. சமீபத்தில், ‘ரௌத்ர சாத்விகம்’ என்ற அவரது பணிக்காக, ‘சரஸ்வதி சம்மன்-2023’ விருதை வென்றவர் யார்?

அ. விஜய் டெண்டுல்கர்

ஆ. வாஸ்தேவ் மோஹி

இ. பிரபா வர்மா

ஈ. பத்மா சச்தேவ்

10. சமீபத்தில், நிலைத்தன்மை மற்றும் சுழற்சிப்பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக பாக்சைட் மீதங்களிலிருந்து மதிப்புமிக்க கூறுகளைப் பிரித்தெடுக்கும் ஒரு முறையை உருவாக்கியுள்ள நிறுவனம் எது?

அ. ஐஐடி மெட்ராஸ்

ஆ. ஐஐடி கான்பூர்

இ. ஐஐடி பம்பாய்

ஈ. ஐஐடி ரூர்க்கி

11. ‘KKL (R) 3’ என்றால் என்ன?

அ. உப்பைத் தாங்கி வளரக்கூடிய நெல் இரகம்

ஆ. புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட தாவர நோய்

இ. சிறுகோள்

ஈ. கருந்துளை

12. ஒவ்வோர் ஆண்டும், ‘உலக குருவிகள் நாள்’ கொண்டாடப்படுகிற தேதி எது?

அ. 20 மார்ச்

ஆ. 21 மார்ச்

இ. 22 மார்ச்

ஈ. 23 மார்ச்

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. வாக்களிக்க வரையறுக்கப்பட்டுள்ள 13 அடையாள ஆவணங்கள் எவை?

வரும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க நிழற்பட வாக்காளர் அடையாள அட்டையுடன் சேர்த்து, மொத்தம் 13 வகையான ஆவணங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன.

  1. வாக்காளர் அடையாள அட்டை.
  2. ஆதார் அட்டை.
  3. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அடையாள அட்டை.
  4. நிழற்படத்துடன் கூடிய வங்கி /அஞ்சலக கணக்குப் புத்தகங்கள்.
  5. தொழிலாளர் நல அமைச்சகத் திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட மருத்துவக் காப்பீட்டு அட்டை.
  6. ஓட்டுநர் உரிமம்.
  7. வருமான வரி நிரந்தர கணக்கு எண் அட்டை.
  8. தேசிய மக்கள்தொகை பதிவேட்டின்கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை.
  9. இந்திய கடவுச்சீட்டு.
  10. நிழற்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்.
  11. மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களின் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட நிழற்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டை.
  12. மக்களவை, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை.
  13. மத்திய அரசின் சமூகநீதி & அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் வழங்கப்பட்ட தனித்துவம் மிக்க அடையாள அட்டை.

ஆகியவற்றின் அசல் ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை எடுத்து வந்து வாக்கினைச் செலுத்தலாம்.

பெயர் இருந்தால்தான் வாக்களிக்கலாம்:

அடையாள அட்டை இருப்பதால் மட்டும் வாக்கைச் செலுத்திவிட முடியாது. வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்க வேண்டும். இருந்தால் மட்டுமே வாக்களிக்க முடியும். மாவட்ட தேர்தல் அலுவலரால் வாக்குப்பதிவு நாளுக்கு ஐந்து நாள்களுக்கு முன்பாக அனைத்து வாக்காளர்களுக்கும் வாக்காளர் தகவல் சீட்டு விநியோகிக்கப்படும்.

2. பூடானில் இந்திய உதவியில் நவீன மருத்துவமனை: இருநாட்டு பிரதமர்கள் திறந்து வைத்தனர்.

பூடானில் இந்திய உதவியில் கட்டப்பட்ட தாய்-சேய் நல மருத்துவமனையை இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, பூடான் பிரதமர் ஷெரிங் டோப்கே ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர். தலைநகர் திம்புவில் திறக்கப்பட்டுள்ள இந்த மருத்துவமனை 150 படுக்கை வசதிகளைக் கொண்டதாகும். பூடானின் 12ஆவது ஐந்தாண்டு திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.

Exit mobile version